Thursday 9 February 2012

நான் என்ன கிழவனா? அரவிந்தசாமி கோபம்!

- 0 comments
 
 
 
அப்பா வேடத்தில் நடிக்கும் அளவுக்கு நான் என்ன கிழவன் ஆகி விட்டேனா? என்று நடிகர் அரவிந்தசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மணிரத்னம் இயக்கும் கடல் படத்தில் கதாநாயகி சமந்தாவின் அப்பாவாக அரவிந்த்சாமி நடிக்கப் போகிறார் என்று கோடம்பாக்கத்தில் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. மணிரத்னம் தரப்பு இதனை மறுக்காத நிலையில், சம்பந்தப்பட்ட நடிகர் அரவிந்தசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், அப்பா வேடத்தில் நடிக்கும் அளவிற்கு நான் கிழவனாகிவிட்டேனா? இப்படியெல்லாம் குருட்டுத்தனமாக யோசிக்க சிலரால் எப்படி முடிகிறது? நான் எந்த வேடத்திலும் நடிப்பதாக இல்லை. மணிரத்னம் என்னை அணுகவில்லை. ஒருவேளை அவரே கேட்டிருந்தாலும் நடித்திருக்க மாட்டேன். இப்போது நான் தொழிலதிபராக இருக்கிறேன். எனக்கு இனி தொழில்களைக் கவனிப்பதுதான் முதலும் கடைசியுமான வேலை, என்று கூறியிருக்கிறார்.



[Continue reading...]

சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பேன்: விஜய் பேட்டி

- 0 comments
 
 
 
சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பேன் என்று நடிகர் விஜய் கூறினார். நடிகர் விஜய் நடித்துள்ள நண்பன் திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. மதுரையில் நண்பர் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரில் ரசிகர்கள் முன்னிலையில் நடிகர் விஜய் தோன்றினார். அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் மத்தியிலும் பேசினார்.
 
இதையடுத்து மதுரை காளவாசலில் உள்ள ஓட்டலில் நடந்த விழாவில் கே.கே.நகரில் உள்ள "ஷைன்" மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவ-மாணவிகளுடன் நடிகர் விஜய் கலந்துரையாடினார். அப்போது மாணவர் அசோக்தான் வரைந்த ஓவியத்தை நடிகர் விஜய்க்கு வழங்கினார். விழாவில் ஆதரவற்ற பெண்கள் 2 பேருக்கு தொழில் தொடங்க நிதி உதவியை விஜய் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
கே. கடந்த சட்டசபை தேர்தலின்போது ஒரு அரசியல் கட்சியை ஆதரித்தீர்கள். நீங்கள் நேரடியாக அரசியலுக்கு வருவது எப்போது?
ப. அரசியல் சம்பந்தமான கேள்விகள் இப்போது வேண்டாம். தற்போது சினிமா பற்றி மட்டும் பேசலாம்.
 
கே. "நண்பன்" படம் மாதிரி மீண்டும் 2 கதாநாயகர்களுடன் சேர்ந்து நடிப்பீர்களா?
ப. இந்த படத்தின் கதை போல அமைந்தால் நிச்சயம் நடிப்பேன். ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை தான் ஹீரோ. நாங்கள் அதற்கு பின்னணியில் தான் உள்ளோம்.
 
கே. நடிகர் சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா?
ப. படத்திற்கு கதைதான் முக்கியம். அதுபோல ஒரு கதை அமைந்தால் நிச்சயம் இணைந்து நடிப்பேன்.
 
கே. நீங்கள் தற்போது நடிக்கும் படம் எது?
ப. "துப்பாக்கி" என்ற படத்தில் நடித்து வருகிறேன். அதுவும் சிறப்பாக அமையும்.
 
கே. தமிழ் சினிமாவில் புதுமுகங்கள் நடித்து குறைந்த பட்ஜெட்டில் வெளிவரும் படங்கள் வெற்றி பெற்று வருகின்றன. அது குறித்து உங்கள் கருத்து என்ன?
ப. நிச்சயம் அது வரவேற்கத்தக்கது. நானும் ஒரு காலத்தில் புதிய நாயகன்தான். இவ்வாறு அவர் கூறி னார்.
 
விழாவில் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், ரசிகர்மன்ற மாவட்ட தலைவர் எஸ்.ஆர். தங்கப்பாண்டியன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



[Continue reading...]

ஓவர் லிப்-டூ-லிப் முத்தக்காட்சி :அர்ஜூன் படத்திற்கு 14கட்!!

- 0 comments
 
 
 
டினு வர்மா இயக்கத்தில், அர்ஜூன் நடித்து வரும் காட்டுபுலி படத்தில், ஓவர் லிப் - டூ - லிப் காட்சிகள் இருந்ததால் 14 கட் கொடுத்துள்ளனர் சென்சார் போர்டு அதிகாரிகள். பிரபல பாலிவுட் சண்டை இயக்குநர் டினு வர்மா தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இயக்கி வரும் படம் காட்டுபுலி. இப்படத்தில் நாயகனாக அர்ஜூனும், அவருக்கு ஜோடியாக பியங்கா தேசாயும் நடித்துள்ளனர். கூடவே இவர்களுடன் ராஜ் நீஸ் சாயாலி பகத், அமீத்- ஹன்யா, ஜாஹன் ஜெனிபர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
 
சமூகத்தைப் பாதுகாக்கும் முக்கியமான மூன்று துறைகளில் ஒன்றான மருத்துவத்துறையில் நுழையும் புல்லுருவிகளால், சமூகத்திற்கு எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்படுகிறது என்று அலசியிருக்கிறார் இயக்குனர் டினு வர்மா.
 
முழுக்கமுழுக்க நரமாமிசம் உண்பவர்கள், மனிதர்களை வேட்டையாடும் காட்சிகள் போன்றவை திரைப்பட ரசிகர்களுக்கு திகிலுடன் கூடிய புது அனுபவமாக இருக்கும். தனது மனைவி குழந்தையுடன் காட்டுக்குள் சிக்கிக் கொள்ளும் டாக்டர் அர்ஜூனுக்கு உதவி செய்ய வரும் மூன்று ஜோடிகள், அதனைத் தொடர்ந்து ஏற்படும் பரபரப்பான சம்பவங்கள், கொலைகள், அதிலிருந்து எப்படி அனைவரையும் அர்ஜூன் காப்பாற்றுகிறார் என்பதே காட்டுப் புலியின் விறுவிறுப்பான கதை.
 
படத்தில் நிறைய திகில் காட்சிகளை வைத்திருக்கும் டைரக்டர் கூடவே நிறைய கிளுகிளு காட்சிகளையும் அதிகமாக வைத்துள்ளார். அதிலும் குறிப்பாக ஜாஹன் ஜெனிபர் ஜோடிக்களுக்கு இடையே வரும் லிப் டூ லிப் முத்துக்காட்சியை பார்த்த சென்சார் போர்டு 14 ‌கட் கொடுத்திருக்கிறது. அந்தளவிற்கு படத்தில் கிறங்கடிக்கும் காட்சிகள் இருந்திருக்கிறது. சென்சார் போர்ட்டின் இந்த நடவடிக்கை டைரக்டருக்கு ஒருவிதம் வருத்தம் அளித்தாலும், அனைத்து தரப்பினரும் படத்தைப் பார்த்து ரசிக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்.
 
டினு வர்மா தனது, கிபிஷேக் பிலிம்ஸ் சார்பாக தயாரித்து இருக்கும் இப்படம் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது.



[Continue reading...]

விஜய்யை போட்டு தாக்கும் அஜித்

- 0 comments
 
 
தெரிஞ்ச சினிமாவை விட்டுட்டு தெரியாத அரசியலில் எதுக்கு இறங்கணும் என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத்.
 
ரஜினிக்கு அடுத்து, அடிக்கடி அரசியலுக்கு வரப் போகிறார் என கிசுகிசுக்கப்படுபவர்களில் ஒருவர் அஜீத். அதற்கேற்பத்தான் அவரது நடவடிக்கைகளும் கடந்த காலங்களில் இருந்து வந்தன.
 
அதே நேரம் க்யூவில் நின்று ஓட்டுப்போடுவதோடு தன் அரசியலை நிறுத்திக் கொள்வது அவர் வழக்கம்.
 
இந்தநிலையில் எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.
 
அவர் கூறுகையில், "ஏற்கெனவே தமிழ்நாட்டுல எக்கச்சக்க அரசியல் கட்சிகள் இருக்கு. அடிமட்டத் தொண்டனா வாழ்க்கையை ஆரம்பிச்சு, உண்மையா உழைச்சு, இன்னைக்கு நல்ல அந்தஸ்துல இருக்கிற அரசியல் தலைவர்களை நான் மதிக்கி றேன். அரசியல்னா என்னன்னே தெரியாம, முழுசாப் புரிஞ்சுக்காம வெறும் சினிமா பாப்புலாரிட்டியை வெச்சு அரசியல்ல நான் இறங்க மாட்டேன்.
 
எனக்கு சினிமா தெரியும். அரசியல் தெரியாது. தெரிஞ்ச சினிமாவை விட்டுட்டு, தெரியாத அரசியல்ல இறங்கி நானும் குழம்பி, மக்களையும் குழப்ப மாட்டேன். சுருக்கமாச் சொல்லணும்னா, அரசியல்வாதி ஆகிறதுக்கான அருகதை எனக்குக் கொஞ்சமும் கிடையாது!'' என்று கூறியுள்ளார்.




[Continue reading...]

கோச்சடையானுக்காக 'ரேஸ் 2' படத்தை கைவிட்ட தீபிகா: எரிச்சலில் படக்குழு

- 0 comments
 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையானில் நடிப்பதற்காக தான் நடித்துக் கொண்டிருந்த ரேஸ் 2 படத்தில் இருந்து திடீர் என்று ஜகா வாங்கிய பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் செயல் நெறிமுறையற்றது என்று அப்படத்தின் தயாரிப்பாள்ர ரமேஷ் தெரிவித்துள்ளார்.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கோச்சடையான் படத்தின் கதாநாயகியாக தீபிகா படுகோனே அறிவிக்கப்பட்டார். எப்படா ரஜினி கூட நடிப்பது என்று காத்துக் கொண்டிருந்த அவர் இந்த அறிவிப்பு வெளியானதும் தான் நடித்துக் கொண்டிருந்த ரேஸ் 2 படத்தில் இருந்து திடீர் என்று வெளியேறினார். தனது செயலுக்கு வருத்தமும் தெரிவிக்கவில்லை. மேலும் இது குறித்து அவரிடம் பேச வந்த தயாரிப்பாளர் ரமேஷின் வார்த்தைகளைக்கும் அவர் மதிப்பு கொடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
 
இது குறித்து தயாரிப்பாளர் ரமேஷ் கூறியதாவது,
 
நான் 25 ஆண்டுகளாக பாலிவுட்டில் இருக்கிறேன். பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளேன். ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைப், வித்யா பாலன், கரீனா கபூர் போன்ற பிரபல நடிகைகளை வைத்து படம் எடுத்துள்ளேன். ஆனால் இதுபோன்ற ஒரு சூழல் இதுவரை ஏற்பட்டதில்லை. கடந்த நவம்பர் மாதம் படப்பிடிப்பை நடத்தலாம் என்று பார்த்தால் தீபிகா கரண் ஜோஹார் தயாரிக்கும் அயன்முகர்ஜியின் படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் அவருக்கு டேட் பிரச்சனை இருந்தது. இதையடுத்து நான் கரணிடம் பேசி 2 படங்களிலுமே தீபிகா நடிக்க ஏதுவாக நேரம் ஒதுக்க வழிவகை செய்தேன்.
 
தற்போது 6 நாட்கள் ஷூட்டிங் வந்துவிட்டு படத்தில் இருந்து விலகிவிட்டார். இயக்குனர்களும், பிற நடிகர்களும் இதனால் எரிச்சல் அடைந்துள்ளனர். இது குறித்து பேச குர்லாவில் நடந்த தீபிகாவின் ஷூட்டிங் ஸ்பாடுக்கு சென்றேன். நான் பேசியதை அவர் காதில் வாங்கவில்லை. தன் செயலுக்காக வருத்தப்படவும் இல்லை என்றார்.
 
ரஜினியின் ராணா பட நாயகியாக தீபிகா அறிவிக்கப்பட்டார். சூப்பர் ஸ்டாரின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அந்த படம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



[Continue reading...]

''என்று தணியும் இந்த மின்சார தாகம்?'': விஜயகாந்த்

- 0 comments
 
 
தமிழகத்தில் ''என்று தணியும் இந்த மின்சார தாகம்'' என்ற புதிய முழக்கம் எங்கும் ஒலிக்கிறது. ஜெயலலிதா தலைமையிலான அரசு இதை உணருமா? மக்களுக்கு பரிகாரம் விரைவில் கிடைக்குமா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் எப்போது மின்சாரம் வரும், எப்போது போகும் என்ற நிலை தான் உள்ளது. விவசாயத்திற்கு மின்சாரம் கிடைக்கவில்லை. பின்னர், மகசூலை எப்படி அதிகரிக்க முடியும்?.
 
தினசரி 8 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு என்று சொன்னாலும், அது பல மணி நேரம் நீடிக்கிறது என்பதுதான் உண்மை. சிறு, குறுந்தொழில் பாதுகாப்பு நலச்சங்கத் தலைவர் மின்வெட்டால் தினமும் ரூபாய் 400 கோடிக்கு உற்பத்திக்கு இழப்பு என்று அறிக்கை தருகிறார். கடனை வாங்கி விவசாயத்திலோ, தொழிலிலோ முதலீடு செய்து விட்டு மக்கள் தவிக்கின்றனர்.
 
பள்ளிக்கூடப் பிள்ளைகள் படிப்பதில் இருந்து, கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து தொழில்களை துவங்கி விட்டு மின்சாரம் இல்லாமல் அனைத்து தரப்பினரும் திகைக்கின்ற அளவில் பரிதாப நிலைதான் ஏற்பட்டுள்ளது.
 
அண்டை மாநிலங்களில் இருந்தும், அன்னிய நாடுகளில் இருந்தும் தமிழ்நாட்டில் மூலதனம் போட்டு தொழில்களை துவங்குவதற்கு கூட மின்சாரப் பற்றாக்குறையால் தயங்குகின்றனர். ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள தொழில்களை விரிவாக்கம் செய்பவர்கள் கூட வேறு மாநிலங்களுக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் இளைஞர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் நாளும் பெருகி வருகிறது.
 
கடந்த ஆகஸ்ட் முதல் மின்வெட்டே இருக்காது என்று முதல்வர் கூறினார். இப்போது அவர் அடுத்த ஜூன் மாதம் முதல் படிப்படியாக மின்பற்றாக்குறை நீக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
 
மின்சாரமே கிடைக்காத சூழ்நிலையில் மின்சாரக் கட்டணத்தை அபரிமிதமாக உயர்த்துவதற்கு ஜெயலலிதா அரசு பரிந்துரைத்துள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இதுபற்றி பொது மக்களிடம் கருத்து கேட்கிறது.
 
கருத்துக் கேட்பு கூட்டங்களில் பொது மக்கள் ஆவேசப்படுவதும், அதிகாரிகள் பொது மக்களை சந்திக்க பயப்படுவதும், போலீஸ் காவலை வைத்துக் கொண்டுதான் பொது மக்கள் குறை கேட்கும் கூட்டங்களை நடத்த வேண்டி உள்ளது என்பதும் இன்றுள்ள தத்ரூபமான நிலைமை.
 
''என்று தணியும் இந்த மின்சார தாகம்'' என்ற புதிய முழக்கம் எங்கும் ஒலிக்கிறது. ஜெயலலிதா தலைமையிலான அரசு இதை உணருமா? மக்களுக்கு பரிகாரம் விரைவில் கிடைக்குமா?
 
இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.




[Continue reading...]

மளிகை கடையில் திருடிய தே.மு.தி.க நிர்வாகிக்கு கட்டிவைத்து அடி உதை

- 0 comments
 
 
 
சேலம் மாவட்டம், ஆத்தூர் பக்கத்தில் உள்ளது பைத்தூர் என்ற கிராமம். இந்த கிராமத்தை சுற்றிலும் உள்ள வீடுகளின் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்கள், ஆட்டுக்குட்டிகள், கோழி போன்றவைகளும் தோட்டங்களில் இருக்கும் மின் மோட்டார்களும் அடிக்கடி காணமல் போய்க்கொண்டிருந்தன.
 
இந்த திருட்டு கும்பலை பிடிக்க முடிவு செய்த கிராமத்து மக்கள் உள்ளூரில் உள்ள இளைஞர்களை ஓன்று திரட்டி பாதுகாப்பு குழு ஒன்றை அமைத்தனர். இந்த குழுவினர் இரவு நேரங்களில் கிராமத்தின் முக்கியமான இடங்களில் எல்லாம் மறைந்திருந்து கண்காணித்து வந்தனர்.
 
 
கடந்த 7ஆம் தேதி இரவு பைத்தூரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் உள்ள கிருஸ்ன மோகன் என்பவரின் கடையின் கூரையை பிரித்துக்கொண்டு நான்கு பேர் கடைக்குள் இறங்குவதை பாதுகாப்புக்கு மறைந்திருந்த ஒருவர் கவனித்து விட்டார்.
 
 
தனி ஆளாக நின்று திருடர்களுடன் சண்டை போடமுடியாது என்று முடிவு செய்த அந்த பாதுகாப்பு குழுவை சேர்ந்த நபர். அந்த கிராமத்தின் மற்ற பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் தனது சகாக்களுக்கு குறுந்தகவல் மூலம் செய்தி அனுப்பியுள்ளார்.
 
 
பத்து நிமிடங்களில் இருபதுக்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் அந்த இடத்துக்கு வ்ந்து விட்டனர். கடைக்குள் இறங்கிய திருடர்கள் வெளியே வரும் வழியில் காத்திருந்தனர்.
 
 
பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகை மற்றும் உணவுப்பொருட்களை திருடிக்கொண்டு கடையை விட்டு வெளியே வந்த நான்கு போரையும் பிடித்து அடித்து உதைத்து மின்கம்பத்தில் கட்டிப்போட்டனர்.
 
 
இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் அதே பகுதியை சேர்ந்த குமார் (வயது 30) மணிகண்டன் (21) சிவா (18), பன்னீர் (18) என்பது தெரிய வந்தது. இந்த திருட்டு விவகாரங்களில் முக்கிய பக்குகொண்டிருந்த குமார் பைத்தூர் கிளை தே.மு.தி.க பொருளாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
பகலிலேயே பொது மக்களின் சொத்தை கொல்லையடிப்பது தான் அரசியல்வாதிகளின் தொழில் என்பது தே.மு.தி.க.வில் இருக்கும் குமாருக்கு தெரியவில்லை.



[Continue reading...]

கௌரவமா.. போடா போட��யா ?!

- 0 comments


சிம்பு நடிப்பில் நீண்ட மாதங்களாக உருவாகி வரும் படம் ' போடா போடி'. விக்னேஷ் இயக்கி வரும் இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார் வரலெட்சுமி சரத்குமார்.

'போடா போடி' எப்போது திரைக்கு வரும் என்பது தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில் ராதாமோகன் இயக்க இருக்கும் புதுப் படமொன்றில் நாயகியாக நடிக்க இருக்கிறார் வரலெட்சுமி சரத்குமார்.

நாகார்ஜுனாவின் மகன் நாகசைந்தன்யா இப்படத்தில் நாயகனாக நடிக்க
இருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்படம் தயாராக இருக்கிறது.

'பயணம்' படத்தின் மூலம் நாகார்ஜுனா, ராதாமோகன் இடையே உருவான நட்பு அவர்களை மீண்டும் இணைத்து இருக்கிறது. இப்படத்தினை தயாரிக்கும் பொறுப்பை ஏற்று இருக்கிறார் நாகார்ஜுனா.

'கெளரவம்' என இப்படத்திற்கு தலைப்பிட்டு இருக்கிறார்கள். நாயகன், நாயகியை வைத்து ஒரு போட்டோ ஷுட் கூட முடித்து இருக்கிறாராம் ராதாமோகன்.

'போடா போடி' வரலெட்சுமியா அல்லது 'கௌரவம்' வரலெட்சுமியா..? பார்ப்போம் !





  • [Continue reading...]

    ஆஹா ரஜினி ! : நடுரோட்டில் ரசிகர்

    - 0 comments


    ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியின் ஆண்டுவிழா தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்று. இவ்விழாவில் ரஜினி பெயரில் சிறந்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

    இந்த விழாவுக்கு வந்திருந்த
    ரஜினி நிகழ்ச்சி முடிந்ததும் கருப்பு கண்ணாடி ஏற்றப்பட்ட ஒரு காரில் அரங்கில் இருந்து வெளியேறினார். உள்ளே இருப்பது ரஜினிதான் என்பதை அறியாத பலர், அந்த காருக்கு வழிவிடாமல் வழக்கம் போலவே மெல்ல நடை போட்டார்கள். கார் எப்படியோ காமராஜர் அரங்கத்தை விட்டு மெயின் ரோட்டை பிடித்தது.

    அம்முனையில் நின்றிருந்த இரண்டு பத்திரிகையாளர்களை கவனித்த ரஜினி, தனது கார் கண்ணாடியை இறக்கி ஒரு புன்னகைத்து விட்டு, கை கூப்பி வணங்கி விட்டு கிளம்பினார். இந்த நேரத்தில் பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் ரஜினியை கவனித்து விட்டு ரஜினி சென்ற காரை விரட்ட ஆரம்பித்தார்.

    ரஜினியின் கார் சிக்னலில் நின்றது. அவசரத்திலும், ஆர்வத்திலும் தனது பைக்கை அப்படியே நடு ரோட்டில் விட்டு விட்டு ரஜினி இருந்த காரை நோக்கி ஒடினார் இளைஞர்.

    கண்ணாடியை இறக்கிய ரஜினி அந்த இளைஞரை பார்த்து, "ஏம்ப்பா.. இப்படியா வண்டியை விட்டு ஓடி வருவே, தடுக்கி விழுந்தா என்னாகும்? பைக்கை இவ்ளோ வேகமா ஓட்டறது ரொம்ப தப்பு " என்று கூறிவிட்டு கார் கண்ணாடியை ஏற்றி விட்டார்.

    அவர் கண்ணாடியை ஏற்றவும் சிக்னல் விழ சரியாக இருந்தது.

    ரஜினியின் கார் செல்ல, ரஜினி தன்னிடம் பேசியதற்காக சந்தோஷத்தில் அந்த ரசிகர் சிரித்தபடி தன் வண்டியை எடுத்துக் கொண்டு போனார்.





  • [Continue reading...]

    ஆசை நண்பனால் நிற���வேறியது ! : விஜய்

    - 0 comments


    ஷங்கர் இயக்கத்தில் விஜய், சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யன், இலியானா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் நண்பன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஜெமினி பிலிம் சர்க்கியூட் தயாரித்து இருக்கிறது.

    தனது மாஸ் ஹீரோ இமேஜ் விட்டு விஜய் நடித்து இருக்கும் படம் இது. 'நண்பன்' மக்களிடையே வரவேற்பை பெற்று இருப்பது விஜய்யை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

    'நண்பன்' படக்குழுவினருக்கு தனது வீட்டில் விருந்தளித்த விஜய் நேற்று பத்திரிகையாளர்களிடம் தனது
    சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்.

    பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் பேசும்போது " நண்பன் படத்தின் வசூல் நன்றாக இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. வசூலில் என் முந்தைய படங்கள் சாதனையை முறியடித்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.

    எனக்கு வித்தியாசமான பாத்திரங்களில் நடிக்க ஆர்வம் இருந்தது. இந்தியில் '3 இடியட்ஸ்' பார்த்த போது எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அதனால் அதன் அப்பட ரீமேக்கில் நடித்தேன். இது மாதிரி பாத்திரங்களில் நடிக்க கதை, இயக்குனர், தயாரிப்பாளர் என அனைத்தும் நல்லபடியாக அமைய வேண்டும். 'நண்பன்' படத்தில் அது அமைந்தது.

    இதில் ஆக்ஷன், பஞ்ச் வசனங்கள் என எதுவும் கிடையாது. பத்து பேருடன் சண்டை போடுவது ஒரு ஹீரோயிசம் என்றால் 'நண்பன்' படத்தில் எனது பாத்திரம் வேறு விதமான ஹீரோயிசம்.

    என்னை திரையில் வித்தியாசமாக பார்க்க ஆசைப்பட்டேன். அது 'நண்பன்' படத்தின் மூலம் நிறைவேறி இருப்பதில் மகிழ்ச்சி. 'நண்பன்' படத்தில் கதைக்கு தேவைப்பட்டதால் மட்டுமே இலியானாவுடன் முத்த காட்சியில் நடித்தேன். ஸ்ரீகாந்த், ஜீவா பேன்ட் கழற்றும் சீன்கள் தவறாக தெரியவில்லை. கல்லூரி ராகிங்குகளில் நடப்பவை தான். 'நண்பன்' படத்தின் மூலம் ஸ்ரீகாந்த், ஜீவா இருவருமே எனக்கு நெருங்கிய நண்பர்களாகி விட்டனர்.

    தற்கால கல்வி முறையின் தவறுகள் நண்பன் படத்தில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் இருக்கிறதோ அதைப் படிக்க அனுப்ப வேண்டும். எனது அப்பா என்னை டாக்டராக்க ஆசைப்பட்டார். எனக்கு நடிப்பில் ஆர்வம் இருந்ததால் சினிமாவுக்கு வந்து விட்டேன்.

    எனது மகனுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இருக்கிறது.

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'துப்பாக்கி' படத்தில் நடித்து வருகிறேன். 'துப்பாக்கி' படத்தில் எனது ரசிகர்கள் அடுத்து ஒரு வித்தியாசமான விஜய்யை பார்ப்பார்கள்.

    ' நண்பன்' படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்த முதலமைச்சருக்கு படக்குழுவினர் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். " என்று கூறினார்.





  • [Continue reading...]

    துப்பாக்கியில் ��ிஜய்யின் நண்பனா��� நடிக்கிறார் சத��யன் !

    - 0 comments


    விஜய் - சத்யன் இருவரும் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான படம் 'நண்பன்'. சத்யன் நடிப்பு இப்படத்தில் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் விஜய் - சத்யமன் இருவரும் மீண்டும் 'துப்பாக்கி' படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள்.

    'நண்பன்' படப்பிடிப்பில் இவரது நடிப்பை பார்த்தவர்கள் 'துப்பாக்கி' படத்திற்கு இவரை
    முருகதாஸிடன் சிபாரிசு செய்ய, முருகதாஸ் உடனே அவரை 'துப்பாக்கி' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தாராம்.

    'நண்பன்' படத்தில் இவரது நடிப்பை ரசித்த ஏ.ஆர்.முருகதாஸ், சத்யனை பாராட்டியதோடு தன் படத்தில் அவரது கதாபாத்திரத்தை அதிகப்படுத்தியிருக்கிறாராம். இப்படத்தில் விஜய்யின் நண்பனாக நடிக்கிறார் சத்யன்.

    'நண்பன்' படத்தினைப் போலவே 'துப்பாக்கி' படத்திலும் தனது நடிப்பிற்கு வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சத்யன்.





  • [Continue reading...]

    விஜய்க்கும் வில��லன் அஜீத்துக்கு���் எதிரி !

    - 0 comments


    அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் 'பில்லா - 2', விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் 'துப்பாக்கி' இவ்விரண்டு படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார் வித்யூத் ஜாம்வால்.

    ஒரே சமயத்தில் தமிழ் திரையுலகின் இரண்டு பெரும் நாயகர்களுடன் நடித்து வருவதால் சந்தோஷத்தில் இருக்கிறார் வித்யூத். இது குறித்து வித்யூத் கூறியிருப்பது :

    " ஒரே சமயத்தில் விஜய் மற்றும் அஜீத் இருவருடனும் நடித்து வருவது சந்தோஷமாக
    இருக்கிறது.

    'பில்லா 2' படத்திற்காக ஜார்ஜியாவில் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கினோம். ஆங்கில சினிமாவில் தான் அதுமாதிரியான சண்டைக் காட்சிகளைப் பார்க்க முடியும். இந்திய சினிமாவில் முதன் முறையாக அதுபோல் ஒரு சண்டைக்காட்சியை படமாக்கி இருக்கிறோம். இந்த சண்டைக்காட்சியில் நான் நடித்ததில் பெருமைப்படுகிறேன்.

    அஜீத் மிகவும் எளிமையான மனிதர். பல விஷயங்கள் குறித்தும் தெளிவான பார்வை உடையவர். விஜய்யுடன் நடிக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. இவ்வளவு ரசிகர்கள் இருந்தும் இன்னும் தன் தொழிலில் மிகச் சிரத்தையுடன் இருக்கிறார். "





  • [Continue reading...]

    அஜீத், ஆர்யா, அமல��பால் !

    - 0 comments


    அஜீத்தின் அடுத்த பட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் விஷ்ணுவர்தன். இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

    படத்தில் அஜீத்தின் நாயகி யார், மற்றவர்கள் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்து பல்வேறு செய்திகள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன.

    அஜீத்தின் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் நயன்தாரா. சம்பளமாக 1.5 கோடி ஒப்புக்
    கொள்ளப்பட்டிருக்கிறதாம். அஜீத் - நயன்தாரா - விஷ்ணுவர்தன் ஆகிய மூவரும் ஏற்கனவே 'பில்லா' படத்தில் ஒன்றாக பணியாற்றி இருக்கிறார்கள்.

    அஜீத் - நயன்தாரா ஜோடி இல்லாமல் படத்தில் இன்னொரு ஜோடியும் இருக்கிறது. ' வேட்டை' பட ஜோடியான ஆர்யா - அமலாபால் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்களாம்.

    ஆர்யாவை ஒப்பந்தம் செய்துவிட்டு அவருக்கு ஜோடி யார் என்று விஷ்ணுவர்தன் ஆலோசித்து கொண்டிருந்தாராம். அவரிடம் அமலா எனக்கு ஜோடியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆர்யா கூறினாராம்.

    ஆர்யா - விஷ்ணுவர்தன் இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்பதால் நண்பனின் வேண்டுகோளுக்கு பச்சைக்கொடி காட்டி இருக்கிறார் விஷ்ணுவர்தன்.

    இந்தி திரையுலகில் முன்னணி நடிகர்கள் பலர் இணைந்து படங்களில் நடித்து வருகின்றனர். தமிழிலும் இப்போது இப்படி பல நடிகர்கள் இணைந்து நடிக்கும் டிரெண்ட் வலுப்பட்டு வருகிறது.





  • [Continue reading...]

    பெரிய நட்சத்திர��்கள் அனைவரும் படுக்கையைப் பகிர்��்துகொண்டவர்களே ���தனால் நீயும் பட��க்க வா

    - 0 comments


    பொதுவாக பாலிவுட்டில் 'கேஸ்டிங் கவுச்' – casting couch – எனப்படும் பட வாய்ப்புக்காக நடிகைகள் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலருடன் படுக்கையை பகிர்ந்துகொள்ளும் சமாச்சாரம் சர்வசாதாரணம்தான்.

    என்றாலும், பட வாய்ப்பு கேட்டு அலைந்த ஆண் மாடலான கிருஷ்ணா மோனாலா இப்படி ஒரு சமாச்சாரத்தை
    போட்டுடைத்திருப்பதுதான் அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சரியத்தில் பாலிவுட்டில் பலரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.

    20 வயதான ஹைதராபாத் ஆண் மாடலான கிருஷ்ணா மோனாலா, அமெரிக்காவில் வளர்ந்தவர்.மூன்று வருடங்களுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார். .

    மாடலிங் மற்றும் பட வாய்ப்புக்காக 88 கிலோ ஆக இருந்த தனது உடல் எடையை,தினமும் மூன்று மணி நேர கடுமையான உடற்பயிற்சி மூலம் முறைத்து கட்டுமஸ்தான தோற்றமுடையவராக மாற்றினார்.

    எதிர்பார்த்த தோற்ற பொலிவு வந்த நிலையில் மாடலிங் வாய்ப்பு வந்த அதே நேரத்தில், பாலிவுட் தயாரிப்பாளர்களிடமிருந்து படத்தில் நடிக்க அழைப்பு வந்தவுடன் உற்சாகமாக அவர்களை அணுகினார் கிருஷ்ணா.

    ஆனால் அந்த உற்சாகம், தயாரிப்பாளர்களை சந்தித்ததுமே திகிலாக மாறிப்போனதாகவும், பாலிவுட்டின் திரை மறைவு சம்பவத்தைக் கண்டு அதிர்ந்துபோனதாகவும் பேட்டி ஒன்றில் புலம்பியுள்ளார் கிருஷ்ணா!


    அப்படி என்ன நடந்தது?

    அழைத்த தயாரிப்பாளர்கள் அனைவரும் அவர்களுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ளச் சொன்னதாகவும், அதற்கு அவர் மறுக்கவே, பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் அ அது ஞக்கு சம்மதித்தவர்களே என்று தயாரிப்பாளர்கள் சொல்லியதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

    இதெல்லாம் கூட மேட்டரில்லை. 'அது' க்கு அழைத்த பாலிவுட் தயாரிப்பாளர்கள் ஆணா? பெண்ணா? என்ற ரகசியத்தை மட்டும் சொல்லமாட்டேங்றார் கிருஷ்ணா மோனாலா.

    ஆனால் அப்படி அழைத்தவர் ஆண் தயாரிப்பாளர் என்றால் அது நிச்சயம் ஓரின சேர்க்கை சமாசாரம்தான்!

    அதே சமயம் பெண் தயாரிப்பாளர் அழைத்தால் அது நிச்சயம் 'ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல!' என்று சமத்துவமும், சம உரிமையும் (அட கஷ்ட காலமே! போயும்ஸ போயும் இந்த மேட்டரிலா?! ) உலாவும் இடம் பாலிவுட் என்று ஆறுதல்(?!) பட்டுக்கொள்ள வேண்டியதுதான்!





  • [Continue reading...]

    Vikatan Online

    - 0 comments


    அன்பார்ந்த வாசகர்களே! விகடன் Online உங்களை அன்புடன் வரவேற்கிறது. இங்கே நாங்கள் உங்களுடன் பல சுவையான செய்திகளை தமிழில் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம். வாசகர்கள் எங்களுக்கு உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம். மேலும் எண்களின் இந்த வலை பகுதியில் நீங்கள் நண்பர்களாக சேர்த்துக்கொண்டு எங்களுடன் அரட்டை அடிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். நன்றி, இப்படிக்கு உங்கள் விகடன் Online VikatanOnline.blogspot.com





  • [Continue reading...]

    அந்த' மாதிரி பெண்களுக்காக செலவு செய்யும் ப.சி: சு.சாமி'!

    - 0 comments
     
     
     
    கர்நாடக அமைச்சர்கள் 3 பேர் சட்டசபையில் ஆபாச வீடியோ பார்த்த பரபரப்பே அடங்காத நிலையில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு உஸ்பெகிஸ்தான் பெண்களுக்காக அவர் மாதம் எவ்வளவு செலவு செய்கிறார் என்பதை கேட்க வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
     
    இது குறித்து சாமி இன்று காலை 8.58 மணியளவில் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது, ஆபாச படம் பார்த்த விவகாரத்தில் பாஜகவை குறை கூறும் சிபல் போன்ற காங்கிரஸார் உஸ்பெகிஸ்தான் பெண்களுக்காக பி.சி. மாதம் எவ்வளவு பணம் செலவு செய்கிறார் என்பதை கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். (Swamy39: "Those Congis like Sibal who paint BJP with porn should ask how much PC pays per month for Uzbekis").
    அரசியல் வட்டாரங்களும், ஊடகங்களும் ப. சிதம்பரத்தை பி.சி. என்று அழைப்பதுண்டு.
     
    குற்றச்சாட்டு என்ற பெயரில் சாமி எழுதியுள்ள இந்த ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    \


    [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger