Monday 29 April 2013

நண்பனின் மனைவி - Friend Wife

- 0 comments
நண்பனின் மனைவியை உஷார் பண்ணி எல்லாவற்றையும் ‘முடித்த’ நண்பன்!

தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வரதராஜன் பேட்டையை சேர்ந்தவர் ஜெரால்டு வில்லியம்.
அங்கு உள்ள பள்ளியில் ஆசிரியராக உள்ளார். அவரது மனைவி விண்ணரசி (வயது 28).
வரதராஜன் பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார்.
தேவமங்கலத்தை சேர்ந்தவர் மணிகண்டன். அவரது மனைவி பிருந்தா. (29).
இவரும் விண்ணரசி பணிபுரியும் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார். இதனால் இவர்கள் 2 பேரும் குடும்ப நண்பர்களாக பழகினர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெரால்டு வில்லியம், மணிகண்டன் ஆகிய 2 பேரும் சேர்ந்த கூட்டாக மருந்து கடை தொடங்கினர்.
தொழில் விசயமாக மணிகண்டன் அடிக்கடி வில்லியம் ஜெரால்டு வீட்டுக்கு வருவது உண்டு.
அப்போது மணிகண்டனுக்கும், விண்ணரசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்கள் காதல் வயப்பட்டனர்.
அவர்கள் ரகசியமாக சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்த விவகாரம் ஜெரால்டு வில்லியமுக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் வீட்டில் அடிக்கடி பிரச்சினை எழுந்தது.
இந்த விவரத்தை விண்ணரசி தனது கள்ளக்காதலன் மணிகண்டனிடம் தெரிவித்தார்.
அவர் உனது கணவரை கொன்று விட்டால் நமக்கு இடையூறு இருக்காது என்றார். இதற்கு விண்ணரசி சம்மதித்தார்.
அதன்படி சம்பவத்தன்று விண்ணரசி தனது கணவர் ஜெரால்டு வில்லியமுக்கு குளிர்பானத்தில் அதிக தூக்க மாத்திரை கலந்து குடிக்க கொடுத்தார். இதனை குடித்த ஜெரால்டு வில்லியம் சிறிது நேரத்தில் அயர்ந்து தூங்கினார்.
அதன்பின்னர் விண்ணரசியும், மணி கண்டனும் இன்னொரு அறையில் உல்லாசமாக இருந்தனர்.
நள்ளிரவு சமயம் ஜெரால்டு வில்லியமுக்கு தாகம் எடுத்தது. உடனே அவர் தட்டு தடுமாறி எழுந்து சென்றார்.
அப்போது விண்ணரசி மணிகண்டனுடன் உல்லாசம் அனுபவிப்பதை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்ததோடு கண்டித்தார்.
இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.
ஊர் மக்கள் வருவதை அறிந்த விண்ணரசி திடீர் என வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்த மணிகண்டன் அங்கிருந்து ஓடி விட்டனர். உயிருக்கு போராடிய விண்ணரசியை அக்கம் பக்கம் உள்ளவர்கள் தூக்கி கொண்டு ஆண்டிமடத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கள்ளக்காதலன் கைது இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குபதிவு செய்து கள்ளக்காதலன் மணிகண்டனை கைது செய்தனர்.
கைதான அவர் ஜெயங்கொண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தின் போது காயம் அடைந்த ஜெரால்டு வில்லியம் சிதம்பரம் அண்ணாமலை மருத்துவ கல்லூரியில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger