Monday 13 January 2014

அஜீத் ரசிகர்களை சூடேத்தி விட்ட நஸ்ரியா!!

- 0 comments
அஜீத்துடன் ஒரு படத்திலேனும் டூயட் பாடி விட வேண்டும் என்பதுதான் தற்போதைய பெரும்பாலான நடிகைகளின் கனவாக இருக்கிறது. அந்த வகையில், நய்யாண்டி பட நாயகியான நஸ்ரியாகூட தான் அஜீத்தின் வெறித்தனமான ரசிகை என்று சொல்லிக்கொண்டவர், ஒரு படத்திலாவது அவருடன் நடித்து விட வேண்டும் என்று தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே எனது தீராத ஆசையாகி விட்டது. அதனால், அதற்கான தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், தற்போது, அஜீத்துடன் டூயட் பாட சான்ஸ் கிடைக்கவில்லை என்றாலும், அவர் படத்தில் அவருக்கு தங்கையாகவோ அல்லது மகளோகவோ நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் நடிப்பேன் என்று தனது மனதில் இருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த செய்தி அஜீத் ரசிகர்களை சூடேத்தி விட்டுள்ளாதாம்.

காரணம், தற்போது 42 வயதே ஆகும், அஜீத்துக்கு 6 வயதில் மகள் அனோஷ்கா இருக்கிறார். இந்நிலையில், 20 வயதுடைய நஸ்ரியா எப்படி அவருக்கு மகளாக நடிக்க முடியும். அப்படி இவர் நினைப்பதறகு அஜீத் என்ன அப்பா வயது கொண்ட நடிகரா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதையடுத்து சமூகவளைதளங்களில் அஜீத் ரசிகர்கள் நஸ்ரியாவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதனால், ஏற்கனவே தொப்புள் சர்ச்சையில் சிக்கிய நஸ்ரியா, இப்போது தேவையே இல்லாமல் அஜீத் ரசிகர்களால் மீண்டுமொரு சர்ச்சையில் சிக்கி சிதைந்து கொண்டிருக்கிறார்.
[Continue reading...]

சாதனை புத்தகத்தில் பிளாட்பாரம்

- 0 comments

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் ரயில் நிலைய பிளாட்பாரம் உலகின் மிக நீளமான பிளாட்பாரம் என இடம் பிடித்துள்ளது. கோரக்பூர் சுற்றுலாதலத்திற்கு ஏராளமான வெளிநாட்டு பயணிகள் வருகை தருகின்றனர். இதற்காக அதிக பெட்டிகளை கொண்ட ரயில்கள் இயக்கப்பட வேண்டி இருப்பதால் கடந்த ஆண்டு பிளாட்பாரங்களை நீட்டிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன்படி சீரமைக்கப்பட்ட பிளாட்பாரம் ஆயிரத்து 355.40 மீட்டராகும். இது உலகிலேயே மிக நீளமான பிளாட்பாரமாகும். இந்த பிளாட்பாரம் உலகிலேயே மிக நீளமான பிளாட்பாரம் என லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger