Wednesday 28 September 2011

அதிமுகவுக்கு மீண்டும் ஓட்டு போட வேண்டிய அவசியமில்லை- விஜயகாந்த்

- 0 comments
 
 
 
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு மீண்டும் ஓட்டு போட வேண்டும் என்று அவசியமில்லை என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.
 
அதிமுகவால் தூக்கி எறியப்பட்டு விட்ட தேமுதிக, வேறு வழியில்லாமல் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. தற்போது சிபிஎம்முடன் கூட்டணி வைத்துப் போட்டியிடுகிறது. கூட்டணி அரசியலுக்குப் புகுந்த குறுகிய காலத்திலேயே இன்னொரு கூட்டணியில் அந்த கட்சி இணைந்துள்ளது.
 
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி தேமுதிக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், மயிலாப்பூரில் நடந்தது. மேயர் வேட்பாளர் வேல்முருகன் மற்றும் 200 கவுன்சிலர் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி விஜயகாந்த் பேசுகையில்,
 
இந்த கூட்டத்துக்கு வரும்போது, இன்னொரு கம்யூனிஸ்ட் கட்சி தேமுதிகவுக்கு வர இருப்பதாக செய்தி கேள்விபட்டேன். நம்பினோர் கைவிடப்படார் என்று சொல்வார்கள். இன்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஒரு நிருபர், தெய்வத்தோடும் மக்களோடும்தான் கூட்டணி என்றீர்கள், இப்போது கம்யூனிஸ்ட் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளீர்களே என்று கேட்டார்.
இப்போதும் சொல்கிறேன், மக்கள்தான் தெய்வம். அவர்கள் விருப்பபடிதான் கூட்டணி வைத்தேன். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று தான் கூட்டணி சேர்ந்தேன்.
 
இப்போதுள்ள ஆட்சியை 6 மாதம் குறை சொல்ல மாட்டேன். அதன் பிறகுதான் விமர்சிப்பேன்.
போலீசார் சரியாக இருந்தால் நாட்டில் 50 சதவீத பிரச்சனைகள் சரியாகி விடும்.
 
உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சிக்குத்தான் ஓட்டு போட வேண்டுமா? அவர்கள் வந்தால்தான் நல்லது செய்வார்களா? எங்கு பார்த்தாலும் ரோடு சரியில்லை. ஒரு மணி நேர மழைக்கே சென்னை மாநகரம் வெள்ளக்காடாகி விடுகிறது. கொசுக்கடி தாங்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் குப்பை, திருட்டு, கொள்ளை நடக்கிறது. இதையெல்லாம் சரிசெய்ய வேண்டாமா?.
 
உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவுக்கு வாய்ப்பு தாருங்கள். மாற்றத்தை தருவோம்.
சாலை, மருத்துவம், போக்குவரத்து வசதி என்று செய்ய ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் நிதி இருக்கிறது. ஆளும் கட்சிக்கு மீண்டும் ஓட்டு போட வேண்டும் என்று அவசியமில்லை. பிரிச்சு, பிரிச்சு ஆட்சியை கொடுங்கள்.
 
எம்.ஜி.ஆர் ஆட்சியில் அரிசி விலை ஏறவில்லை. என்னிடம் ஆட்சியை கொடுங்கள். மக்களை தங்க தட்டில் வைத்து அழகுபார்ப்பேன்.
 
கூடங்குளம் அணு மின் நிலையம் வேண்டாம் என்று மக்கள் போராடினார்கள். அணுமின் நிலையத்தால் ஆபத்து இல்லை என்று தமிழக முதல்வர் கூறினார். உண்ணாவிரதம் இருக்கும் இடத்துக்கே சென்று நான் ஆதரவு தெரிவித்தேன். பின்னர், அரசாங்கமும் அந்த திட்டம் வேண்டாம் என்றது. நான் எப்போதும் மக்களின் பக்கம்தான் இருப்பேன்.
 
ஜால்ரா அடிப்பது எனக்கு பிடிக்காது. ஏனென்றால் நான் வளர்ந்தது அப்படி. தவறு நடந்தால் கோபப்படுவேன். தட்டிக் கேட்பேன். தேமுதிகவினர் ஐந்து பைசா கூட லஞ்சம் வாங்க மாட்டார்கள் என்றார்.
 
கூட்டத்தில் விஜய்காந்தின் மனைவி பிரேமலதா, இளைஞரணி செயலாளரும் விஜய்காந்தின் மச்சானுமான எல்.கே.சுதீஷ் ஆகியோரும் பேசினர்.
 
அதிமுக வேட்பாளர்கள் தன்னிச்சையாக அறிவிப்பு-பிரசாரத்தில் பேசுவேன்:
 
முன்னதாக நிருபர்களிடம் பேசிய விஜய்காந்த், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை தன்னிச்சையாக அறிவித்தது குறித்து தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசுவேன் என்றார்.
 
தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டி:
 
கேள்வி: உங்கள் கட்சி அலுவலகத்துக்குள் நிருபர்களை நுழைய விடுவதில்லையே?
 
பதில்: அலுவலகத்தில் நிருபர்களை விடவில்லை என்று உங்களுக்கு வருத்தம் இருக்கலாம். நிருபர்களாகிய உங்களுக்கு எவ்வாறு வேலை இருக்கிறதோ, அதே போல் எங்களுடைய கட்சி நிர்வாகிகளுக்கு சில வேலைகளை நான் கொடுத்திருக்கிறேன். அந்த வேலைகள் பாதிக்கப்படும். ஆகவே தான் நிருபர்களை நான் உள்ளே அனுமதிக்கவில்லை. ஆகவே யாரும் தவறுதலாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
 
கேள்வி: உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஏற்பட்டுள்ள கூட்டணி அடுத்த தேர்தலில் நீடிக்குமா?
 
பதில்: இப்போது தான் எங்களுக்குள் கூட்டணி உருவாகி உள்ளது. எங்களுடைய நட்பு போகப்போக ஆலமரம் போல் விரிந்து எல்லா இடத்திலும் பரவும்.
 
கேள்வி: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் உங்கள் கட்சியின் நிலைபாடு என்ன?
 
பதில்: ஒரு வேட்பாளர் பற்றி சிந்திப்பதற்கு எனக்கு தற்போது நேரம் இல்லை. உள்ளாட்சி தேர்தலில் ஒரு லட்சம் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அது பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
 
கேள்வி: இதற்கு முன்பு தெய்வத்துடனும், மக்களுடனும் தான் கூட்டணி என்று கூறியிருந்தீர்கள். ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தீர்கள், இப்போது மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கீறிர்களே?
 
பதில்: இதுபற்றி நீங்கள் தனியாக கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன். உள்ளாட்சி தேர்தலின் போது நான் 20 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் போது நீங்கள் கேட்கக்கூடிய இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூறுவேன். ஒரே நாளில் எல்லா கேள்விகளுக்கும் பதிலை கொட்ட வேண்டிய அவசியமில்லை.
 
கேள்வி: அ.தி.மு.கவுடன் உங்கள் கூட்டணி தொடர்கிறதா? அ.தி.மு.க. எல்லா வேட்பாளர்களையும் தன்னிச்சையாக அறிவித்து இருக்கிறார்கள். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
 
பதில்: உள்ளாட்சி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் இதுபற்றி பேசுவேன். இப்போ இதுக்கு பதில் சொல்ல முடியாது.. நான் குடியாத்தம் கூட்டத்தில் பேசுகிறேன். அங்கு வந்து வேணும்னா கேளுங்க..
 
கேள்வி: தே.மு.தி.க. அலுவலகத்தின் உள்ளே நிருபர்களை அனுமதிப்பதில்லை எதற்காக?
 
பதில்: கேட்டதையே கேட்டுக்கிட்டு இருந்தா என்னத்த சொல்ல.. எனக்கு கட்சி அலுவலகத்தின் உள்ளே வேலை இருந்ததால் நிருபர்களை அனுமதிக்கவில்லை. இந்த விஷயத்தில் நான் உங்களிடம் முதலிலே மன்னிப்பு கேட்டேன். இதையும் மீறி நான் வெளியே நின்றேன் என்று சொன்னால் நான் என்ன செய்ய முடியும்? உங்களின் வீட்டின் உள்ளே கேட்காமல் வந்தால், ஏன் வந்தாய் என்று கேட்பீர்கள் அல்லவா? உரிமை இருப்பதால்தானே நீங்கள் கேட்கின்றீர்கள். சில பிரச்சனைகள் இருக்கிறது. அதை புரிந்து கொள்ளாமல் நீங்கள் இவ்வாறு கேட்கிறீர்கள். நிருபர்களுக்கு எனது அலுவலகத்தில் குளிர்சாதன அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. நீங்கள் வராவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்றார்.




[Continue reading...]

சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா

- 0 comments
 
 
 
தன்னிடம் கடிதம் மூலம் வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்துவிட்டார் சரண் என்றும் இதனால் அவரை மன்னித்துவிட்டதாகவும் நடிகை சோனா தெரிவித்துள்ளார்.
 
மங்காத்தா மதுவிருந்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக எஸ்பிபி சரண் மீது புகார் தெரிவித்தார் சோனா. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதில் எஸ்பிபி சரணுக்கு இருவார கால முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
 
கடந்த இரு வாரங்களாக இந்த விவகாரம் பெரும் பரபரப்புடன் பேசப்பட்டு வந்தது. சோனாவை சமாதானப்படுத்த எஸ்பி பாலசுப்ரமணியம் உள்ளிட்டோரும் நேரில் போய் பேசினர்.
 
சரண் 10 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்டுவிட்டால் வழக்கை வாபஸ் பெறுவதாக முன்பு சோனா கூறினார். ஆனால் சோனாவிடம் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக, சோனாதான் பாலியல் உணர்வை தூண்டும் விதத்தில் நடந்து கொண்டார் என்று கூறினார்.
 
இந்த நிலையில் கடிதம் மூலம் சரண் மன்னிப்பு கேட்டுள்ளதால் அவரை மன்னித்துவிட்டேன் என்று தற்போது சோனா அறிவித்திருக்கிறார். ஆனால் இதுகுறித்து எஸ்பிபி சரண் தரப்பில் எதுவும் கூறப்படவில்லை.
 
இதன் மூலம் சோனா-சரண் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.



[Continue reading...]

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு வித்திட்டது தயாநிதி மாறன் தான்- பிரதமர்

- 0 comments
 
 
 
2ஜி ஸ்பெக்ட்ரத்துக்கு விலையை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட அமைச்சர் குழுவுக்கு, அந்த அதிகாரத்தைத் தர மறுத்து நெருக்கடி தந்த, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனால் தான் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே வித்திடப்பட்டது என்று பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டினார்.
 
அமெரிக்காவிலிருந்து டெல்லி திரும்பும் வழியில் விமானத்தில் நிருபர்களிடம் பேசிய மன்மோகன் சிங், 2ஜி ஸ்பெக்ட்ரத்துக்கு விலையை நிர்ணயிக்க அமைச்சரவைக் குழு அமைக்கப்பட்டது. ஆனால், அந்தத் குழுவுக்கு தயாநிதி மாறன் எதிர்ப்புத் தெரிவித்தார்.
 
ஸ்பெரக்ட்ரம் விலை நிர்ணயம் என்பது தொலைத் தொடர்புத்துறையின் அடிப்படையான உரிமை என்றும், அதில் ஏராளமான தொழில்நுட்ப-பொருளாதார விஷயங்கள் அடங்கியுள்ளதால், அமைச்சரவைக் குழுவால் அதில் முடிவை எடுக்க முடியாது என்றும், அதை தொலைத் தொடர்புத் துறையால் தான் சிறப்பாக கையாள முடியும் என்றும் வாதிட்டார்.
 
ஒரு கட்டத்தில் அவரது வாதத்தை நானும் ஏற்றுக் கொண்டேன். ஸ்பெக்ட்ரம் விற்பனையில் தேவையில்லாத பிரச்சனைகள் வரக் கூடாது என்று நினைத்துத் தான் தயாநிதியின் கருத்தை ஒப்புக் கொண்டேன் என்றார்.
 
ஆனால், அமைச்சரவைக் குழுவின் தலையீடு இல்லாததால் பின்னர் தொலைத் தொடர்புத்துறை நினைத்தபடியெல்லாம் ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கி பெரும் ஊழலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.



[Continue reading...]

பென்சிலும் சிறு��னும்!

- 0 comments


பாட்டி கடிதம் எழுதுவதைப் பேரன் பார்த்துக் கொண்டிருந்தான்.

திடீரெனக் கேட்டான்"பாட்டி!கதை எழுதுகிறாயா.என்னைப் பற்றியா?"

பாட்டி எழுதுவதை நிறுத்திவிட்டுப் பேரனைப் பார்த்தாள்.சொன்னாள் "உன்னைப் பற்றித்தான்.ஆனால் நான் என்ன எழுதுகிறேன் என்பதை விட நான் எதை வைத்து எழுதுகிறேன் என்பது முக்கியம்.நீ வளர்ந்து பெரியவனாகும்போது இந்தப் பென்சில் போல் இருக்க வேண்டும்"

பேரன் பென்சிலைப் பார்த்தான்."என்ன பாட்டி இது சாதாரணப் பென்சில்தானே?விசேடமாக எதுவும் இல்லையே!"

பாட்டி சொன்னாள்--

நீ எப்படிப் பார்க்கிறாய் என்பதைப் பொறுத்தது அது.இதில் ஐந்து முக்கியப் பண்புகள் இருக்கின்றன.அவற்றை நீ ஏற்றுக் கொண்டால் வாழ்க்கை அமைதியாக,சிறப்பாக இருக்கும்.

முதலாவது.உன்னால் செயற்கரிய செயல்கள் செய்ய முடியலாம். ஆனால் உன்னை எப்போதும் ஒரு கை நடத்திச்செல்கிறது என்பதை மறக்காதே. அந்தக் கையைத்தான் கடவுள் என அழைக்கிறோம்.

இரண்டாவது.எழுதும்போது அவ்வப்போது நான் பென்சிலைச் சீவ வேண்டி வருகிறது.இது பென்சிலுக்குத் துன்பம் தரலாம்.ஆனால் சீவிய பின் பென்சில் கூர்மையடைகிறது.அது போல் நீயும் உன் வலிகளையும் ,துயரங்களயும் பொறுத்துக் கொள்ள வேண்டும்;ஏனெனில் அவை உன்னை மேலும் சிறந்தவனாக்கும்.

மூன்றாவது இந்தப் பென்சில் தவறாக எழுதியதை அழிப்பான் வைத்து அழிப்பதற்கு அனுமதிக்கிறது.வாழ்க்கையில் செய்த தவறுகளை மாற்றி அமைப்பது என்பது நல்லதே.அது உன்னை நியாய வழியில் எடுத்துச் செல்லும்.

நான்காவது இதில் முக்கியமானது வெளியே இருக்கும் மரப்பகுதி அல்ல; உள்ளே இருக்கும் எழுதும் பகுதி.அது போல் உன் உள்ளே இருப்பதின் மீது எப்போதும் கவனம் வை!

ஐந்தாவது, பென்சில் எப்போதுமே தன் தடத்தை விட்டுச் செல்கிறது.அது போல் நீ செய்யும் செயல்களெல்லாம் தம் தடத்தைப் பதித்துச் செல்வாய்.எனவே செயல்கலில் கவனம் தேவை!

இவற்றையெல்லாம் நினைவில் கொண்டால்

நீ பெரிய செயல்கள் செய்யலாம் ,கடவுளின் கைபற்றி!

அவ்வப்போது வாழ்க்கையில் நீ கூர்தீட்டப் படுவாய், உன் துன்பங்களால். ஆனால் அது உன்னை வலிமையாக்கும்!

உன் தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியும்!

உன் உள்ளே இருப்பதின் முக்கியத்துவத்தை நீ உணர்வாய்!

என்ன செய்தாலும் உன் முத்திரையைப் பதித்துச் செல்.எந்நேரத்திலும் கடமை தவறாதே!

இதுவே இந்தப் பென்சில் உனக்குக் கற்றுக் கொடுப்பது."

(பாலோ கோல்ஹோ வின் படைப்பிலிருந்து.)



http://tamil-sex-video.blogspot.com



  • http://tamil-sex-video.blogspot.com

  • [Continue reading...]

    தீபாவளிக்கு ஒரு நாள் முன் வெளியாகும் விஜய்யின் வேலாயுதம்!

    - 0 comments
     
     
    விஜய் நடிப்பில், ஜெயம் ராஜா இயக்கியுள்ள வேலாயுதம் படம் வரும் அக்டோபர் 25-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
     
    ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, அய்ங்கரன் நிறுவனம் வெளிநாடுகளில் வெளியிடுகிறது. தமிழகத்தில் ஆஸ்கர் பிலிம்ஸ் வெளியிடுகிறது.
     
    வெளிநாடுகளில் மட்டும் 400 திரையரங்குகள் வரை இந்தப் படத்துக்கு புக் செய்யப்பட்டுள்ளன. இந்த தியேட்டர்கள் விவரங்களையும் அய்ங்கரன் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
     
    ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி ஹீரோயின்களாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு விஜய் ஆன்டனி இசையமைத்துள்ளார்.
     
    ரஜினியின் எந்திரனைப் போல பெரிய ஓபனிங் வேண்டும் என்பதற்காக தீபாவளிக்கு ஒரு நாள் முன்பாகவே இந்தப் படத்தை வெளியிடுகின்றனர். அதேபோல தமிழகத்தில் 1000 அரங்குகள் வரை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்களாம்.



    [Continue reading...]

    நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய பெண்-'பேய்' என மக்கள் பீதி!

    - 0 comments
     
     
     
     
     
     
    சென்னை பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் நள்ளிரவில் இளம்பெண் ஒருவர் பொட்டுத் துணி கூட இல்லாமல் திடீரென நிர்வாணமாக ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேய் என்று கூறி மக்கள் பீதியடைந்தனர்.
     
    நேற்று பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் ஒரு இளம் பெண் உடைகளின்றி, தலைவிரி கோலமாக ஓடி வந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்து அந்தப் பகுதியில் அப்போது ரோந்து வந்து கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் கோவிந்த் உடனடியாக மகளிர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
     
    மகளிர் போலீஸார் போலீஸ் ஜீப்பில் விரைந்து வந்து அந்தப் பெண்ணைப் பிடித்து ஆடைகளை அணிவித்து பல்லாவரம் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றனர்.
     
    அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் கூறுகையில், எனது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், தென்கல்பாக்கம் கிராமம் ஆகும். கடந்த 6 வருடமாக அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரும், நானும் தீவிரமாக காதலித்து வந்தோம்.
     
    10 மாதத்திற்கு முன்பு என்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை ராமச்சந்திரன் திருமணம் செய்து கொண்டார். எனவே செய்யாறு போலீசில் இதுபற்றி அப்போது புகார் செய்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
     
    இதனால் நான் பெரும் மன உளைச்சலில் இருந்து வந்தேன். இதனால் எனது பெற்றோர் மன மாற்றத்துக்காக பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் உள்ள எனது மூத்த சகோதரி வீட்டிற்கு என்னை அனுப்பி வைத்தனர்.
     
    ராமச்சந்திரன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன். வித்தியாசமாக எதையாவது செய்தால் போலீசார் கைது செய்து நம்மை விசாரிப்பார்கள். அப்போது நடந்ததை கூறி ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க செய்யலாம் என்று நினைத்தேன். இதற்காக நள்ளிரவு நிர்வாணமாக பொழிச்சலூரில் இருந்து பல்லாவரம் வரை நடந்து வந்தேன் என்றார் அவர்.
     
    இதற்கிடையே, இந்தப் பெண் வந்த வழியெல்லாம் அவரைப் பார்த்த பொதுமக்கள் பேய் என நினைத்து ஓடி ஒளிந்ததும் தெரிய வந்துள்ளது.
     
    அந்தப் பெண் சொல்வது உண்மையா அல்லது மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.



    [Continue reading...]

    ஸ்பெக்ட்ரம் நஷ்டம் ரூ.2,645 தான்.. இதை ரூ.1.76,000 கோடி என சொன்னது ஏன்?

    - 0 comments
     
     
     
     
     
     
    2007ம் ஆண்டு நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் நாட்டுக்கு ரூ. 1.76,000 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுவதில் உண்மையில்லை என்று தெரிகிறது. இந்த விவகாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் ரூ. 2,645 கோடி மட்டுமே என்று இந்திய தலைமைத் தணிக்கை அதிகாரி அலுவலகத்தைச் (Comptroller and Auditor General -CAG) சேர்ந்த மூத்த ஆடிட்டர் ஒருவர் கணக்கிட்டுள்ளார்.
     
    ஆனால், அதை புறம் தள்ளிவிட்டு, நஷ்டம் ரூ. 1.76,000 கோடி என்று அறிக்கை தந்துள்ளால் தலைமைத் தணிக்கை அதிகாரியான வினோத் ராய்.
     
    இது தொடர்பாக தலைமைத் தணிக்கை அதிகாரி அலுவலகத்திடம் தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆவணங்களில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
     
    2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பாக தணிக்கைத்துறையின் (தபால் மற்றும் தொலைத் தொடர்புப் பிரிவு) ஆடிட்டர் ஜெனரலான ஆர்.பி.சிங் தான் மதிப்பீடு செய்துள்ளார். அவர் தனது மதிப்பீட்டின்படி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் ரூ. 2,645 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அறிக்கை சமர்பித்துள்ளார். கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் இந்த அறிக்கையை சிங் தயாரித்துள்ளார். இதில் நாட்டின் பண வீக்கத்தையும் மனதில் கொண்டு, நஷ்டத்தை மதிப்பீடு செய்தார் சிங்.
     
    ஆனால், அவரது அறிக்கையை நிராகரித்துவிட்டு நாட்டுக்கு ரூ. 1,76,000 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தலைமைத் தணிக்கை அதிகாரியான வினோத் ராய் தானாகவே தகவல் வெளியிட்டுள்ளார்.
     
    இதன்மூலம் ராய், ஸ்பெக்ட்ரம் நஷ்டக் கணக்கை மிகவும் உயர்த்தி தவறான தகவல் தந்த விவரம் இப்போது வெளியாகிவிட்டது. இவர் எந்தக் கணக்கை வைத்து நஷ்டத்தை இவ்வளவு தூரம் அதிகரித்துச் சொன்னார் என்பது தெரியவில்லை என்று ஆர்.பி.சிங் கூறியுள்ளார்.
     
    இது குறித்து தலைமைத் தணிக்கை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் முடிவு செய்துள்ளது.



    [Continue reading...]

    பிரதமர் அனுப்பிய 'அக்னாலட்ஜ்மென்டை' வைத்து அனைவரையும் திசை திருப்பிய ராசா!

    - 0 comments
     
     
     
    2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த அனைத்தும் பிரதமருக்கும், ப.சிதம்பரத்திற்கும் தெரியும் என கோர்ட்டில் ஒவ்வொரு முறையும் கூறி வரும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, பிரதமர் தனக்கு அனுப்பிய ஒரு ஒப்புகைக் கடிதத்தை வைத்து அனைவரையும் திசை திருப்பியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
     
    கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார் ராசா. அதில், பிரணாப் முகர்ஜியை தான் சந்தித்து மொபைல் லைசென்ஸ் குறித்த கொள்கை வகுப்பு குறித்து விவாதித்ததாக தெரிவித்துள்ளார். அப்போது பிரணாப் முகர்ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான முடிவுகளைக் கையாளும் உயர் மட்ட அமைச்சர்கள் குழுவின் தலைவராக இருந்தார்.
     
    பதிலுக்கு 2008ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் பதில் கடிதம் அனுப்பினார். அதில், உங்களது கடிதம் பெற்றேன் என்று கூறியுள்ளார் சிங்.
     
    இதைத் தொடர்ந்து 2008ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி தொலைத் தொடர்புத்துறைக்கு ஒரு கடிதம் எழுதுகிறார் ராசா. அதில், பிரதமரின் 'அக்னாலட்ஜ்மென்ட்' கடிதத்தை மேற்கோள் காட்டி, லைசென்ஸ் தொடர்பான கொள்கை முடிவு எடுக்க பிரதமர் அனுமதித்துவிட்டதைப் போல சொல்லி, முடிவுகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதாவது பிரதமருக்குத் தான் எழுதிய கடிதத்திற்கு பிரதமர் அனுப்பிய 'அக்னாலட்ஜ்மென்ட்' கடிதத்தை பதிலை, பிரதமரின் அனுமதி போல திரித்து தொலைத் தொடர்புத்துறையைத் திசை திருப்பியுள்ளார் ராசா.
     
    மேலும் 122 லைசென்ஸ்களை வினியோகிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் தொலைத் தொடர்புக் கொள்கையையும் திருத்தியுள்ளனர். தொலைத் தொடர்பு ஆணையத்தின் ஒப்புதல் பெறாமலேயே இது நடந்துள்ளது.
     
    இதுகுறித்து விசாரித்த, நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான ஒரு நபர் கமிஷன், எந்தவித ஒப்புதலும் பெறாமல் தொலைத் தொடர்புக் கொள்கை திருத்தப்பட்டதாக தெளிவாகக் கூறியுள்ளது.
     
    முதலில் வருவோருக்கு முதலில் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை வினியோகிப்பது என்றுதான் இருந்தது. ஆனால் இதை மாற்றிவிட்டார் ராசா. முதலில் வருவோருக்கு அல்லது முதலில் விண்ணப்பிப்போருக்கு என்று இல்லாமல், அனைத்து நிபந்தனைகளையும் யார் ஏற்கிறார்களோ அவர்களுக்கு என்று மாற்றி விட்டார் ராசா.
     
    2008ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி, ஸ்பெக்ட்ரம் உரிமம் கோரிய நிறுவனங்களுக்கு சில மணி நேர அவகாசம் மட்டுமே தரப்பட்டு காசோலைகள், விருப்பம் ஆவணம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. ராசாவின் திட்டத்தை முன்கூட்டியே 'அறிந்த' சில நிறுவனங்கள் காசோலைகள் உள்ளிட்டவற்றுடன் தயாராக இருந்துள்ளன. அவற்றுக்கு உடனடியாக லைசென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களைச் சேர்ந்த சிலர்தான் தற்போது ராசாவுடன் சேர்ந்து திஹார் சிறையில் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
     
    உங்களது கடிதம் வந்தது என்ற ஒரு வரி பிரதமரின் பதிலை வைத்து மிகப் பெரிய திசை திருப்புதலை செய்துள்ளார் ராசா என்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



    [Continue reading...]

    சன் குழுமத்திலிருந்து விலகினார் சக்சேனா!!

    - 0 comments
     
     
     
    சன் பிக்சர்ஸ் மற்றும் சன் குழுமத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகிவிட்டதாக தனது வழக்கறிஞர் மூலம் ஹன்ஸ்ராஜ் சக்சேனா அறிவித்துள்ளார்.
     
    சன் குழுமத்தில் மிகவும் பலம் வாய்ந்த மனிதராக உலா வந்தவர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா. சன் குழுமம், தனியாக சன் பிக்சர்ஸ் என்ற திரைப்பட வர்த்தகப் பிரிவை தொடங்கியபோது, அதன் தலைமைப் பொறுப்பேற்றார். சன் பிக்சர்ஸ் தயாரித்த எந்திரன் படத்ன் நிர்வாகத் தயாரிப்பாளராக இருந்தார் சக்சேனா.
     
    ஆனால் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, பல்வேறு மோசடி, மிரட்டல் வழக்குகளில் சக்சேனாவைக் கைது செய்தது அதிமுக அரசு.
     
    கடந்த மூன்று மாத காலமாக ஏராளமான வழக்குகளில் அடுத்தடுத்து கைதாகி, நீதிமன்ற காவல், போலீஸ் காவல் என தொடர் சிறைவாசம் அனுபவித்து வந்தார் சக்சேனா.
     
    இந்த நிலையில், அனைத்து வழக்குகளிலும் நிபந்தனை ஜாமீன் பெற்று இப்போது வெளியில் வந்துள்ளார். இனி அவர் சன் குழுமத்தில் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்தது. மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் நீடித்திருக்குமா என்றும் கேள்வி எழுப்பினர்.
     
    சன் பிக்சர்ஸ் ஏற்கெனவே சக்சேனாவின் இடத்தில் தற்காலிகமாக செம்பியன் என்பவரை சிஇஓவாக நியமித்தது. அதன் பிறகுதான் மங்காத்தா படத்தை வெளியிட்டு வசூலை அள்ளியது. தொடர்ந்து வெடி, நண்பன், ஏழாம் அறிவு என மெகா பட்ஜெட் படங்களை கைவசம் வைத்துள்ளது.
     
    ஆனால் சக்ஸேனாவின் நிலை என்ன என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் சன் குழும தலைவர் கலாநிதி மாறனைத் தொடர்பு கொண்ட சக்சேனா, தன் மீதுள்ள வழக்குகளால் நிறுவனத்துக்கு தேவையற்ற கெட்ட பெயர் வரக்கூடாது என்பதால், சன் குழுமத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொள்வதாக தெரிவித்தார்.
     
    இதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தையும் அவர் கலாநிதி மாறனுக்கு அனுப்பி வைத்தார். அக்கடிதத்தை கலாநிதியும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
     
    இத்தகவல்களை சக்சேனாவின் வழக்கறிஞர் இன்று தெரிவித்தார்.



    [Continue reading...]

    சிதம்பரம் தான் காரணம்-பாஜக: சிதம்பரம் தான் காரணம்- ராம்தேவ்

    - 0 comments
     
     
     
    தெலுங்கானா பிரச்சனைக்கு மத்திய உள்துறை அமைச்சர் . சிதம்பரம் தான் காரணம் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
     
    இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது,
     
    ஆந்திர மாநிலத்தில் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 10 மாவட்டத்தில் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. அங்கு உள்ள சூழ்நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. தெலுங்கானா தனி மாநிலம் கேட்டு போராட்டங்கள் நடந்து வருகிறது. இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் . சிதம்பரம் தான்.
     
    கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி தெலுங்கானாவை தனி மாநிலமாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் தானே அறிவித்தார். அந்த அறிவிப்பால் தான் இவ்வளவு பிரச்சனை.
     
    காலத்தை தாழ்த்த தான் தெலுங்கானா தனி மாநிலமாக்கும் சாத்தியத்தை பற்றி அறிய நீதிபதி பி. ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. தெலுங்கானாபிரச்சனைக்கு காங்கிரஸ் பொறுப்பேற்குமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
     
    2ஜி: சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரும் பாஜக
     
    2ஜி விவகாரம் தொடர்பாக . சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமரை பாஜக வலியுறுத்தியுள்ளது.
     
    இது குறித்து பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாவது,
     
    கடந்த மே மாதம் 22-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் ஊழலை எதிர்த்து போராடப்போவதாக அறிவித்தனர். ஆனால் ஊழல் அமைச்சர்களை காப்பாற்றிக் கொண்டு எப்படி ஊழலை எதிர்த்து போராட முடியும்?
     
    நிதியமைச்சகம் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிய கடித்தத்தில் .சிதம்பரத்திற்கு 2ஜி ஊழலில் தொடர்பு இருக்கிறது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிபிஐ கூட அரசுடன் சேர்ந்து கொண்டு சிதம்பரத்திடம் விசாரணை நடத்தத் தேவையில்லை என்று கூறுகிறது.
     
    பிரதமர் ஊழல் செய்த அமைச்சரை எல்லாம் காப்பாற்றக்கூடாது என்றார்.
     
    எனது ஆதரவாளர் மரணத்திற்கு சிதம்பரம் தான் காரணம்: ராம்தேவ்
     
    டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கச் சென்ற யோகா குரு பாபா ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் படுகாயமடைந்த ஹரியானாவைச் சேர்ந்த ராஜ் பாலா(51) கடந்த 3 மாதங்களாக கோமாவில் இருந்தார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
     
    அவர் இறந்ததற்கு . சிதம்பரம் தான் காரணம் என்றும், அதற்காக அவருக்கு மரண தண்டனை கொடுக்கலாம் என்றும் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
     
    கடந்த 20-ம் தேதி வீரமங்கை ராணி லக்ஷ்மிபாய் பிறந்த ஊரான ஜான்சியில் இருந்து ராம்தேவ் சுயமரியாதை யாத்திரையை துவங்கினார். இதற்கிடையே ராஜ்பாலா மரணச் செய்திகேட்டு அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அவர் ஹரியானா சென்றார்.
     
    2ஜி பற்றி ராம்தேவிடம் கேட்டபோது, நான் வேறு சொல்லவேண்டுமா. அதுதான் 2ஜி ஊழலுக்கு யார் காரணம் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உலகிற்கு காட்டிவிட்டாரே என்றார்.
     
     


    [Continue reading...]

    ப.சி Vs சு.சாமி; மத்திய அரசு Vs சிபிஐ; ராசா Vs எல்லோருமே!

    - 0 comments
     
     
     
    2ஜி விவகாரத்தில் முன்னாள் நிதியமைச்சரான இப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமா என்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்றும் விசாரணை நடைபெறுகிறது.
     
    சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி உச்ச நீதிமன்றத்தி்ல் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
     
    அப்போது, சிதம்பரத்தை விசாரிக்கக் கூடாது என்று முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்தார்.
     
    சிபிஐ பரிசீலிக்கும்-மத்திய அரசின் வழக்கறிஞர்:
     
    ஆனால், இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் பங்கு குறித்து சாமியின் மனுவில் உள்ள விஷயங்கள் குறித்து சிபிஐ பரிசீலிக்கும் என்று மத்திய அரசின் வழக்கறிஞர் கூறினார். மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் வாதாடுகையில்,
     
    நான் தனி நபருக்காக ஆஜராகவில்லை. மத்திய அரசுக்காக ஆஜராகி உள்ளேன். சுப்பிரமணிய சாமி இதேபோன்ற மனுவை சிபிஐ நீதிமன்றத்திலும் தாக்கல் செய்துள்ளார். எனவே, அவரது இந்த மனுவை ஏற்கக்கூடாது. இதன் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை. மேலும், 2ஜி வழக்கில் இரு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுவிட்ட நிலையில், இந்த வழக்கை இனிமேலும் உச்ச நீதிமன்றம் கண்காணிக்க தேவையில்லை. அந்தப் பொறுப்பை சிபிஐ நீதிமன்றத்திடம் விட்டுவிட வேண்டும். அதே நேரத்தில் சாமியின் மனுவில் உள்ள விஷயங்கள் குறித்து சிபிஐ பரிசீலிக்கும் என்றார்.
     
    சிபிஐ பரிசீலிக்காது-சிபிஐ வழக்கறிஞர்:
     
    ஆனால், சிதம்பரத்தை விசாரிக்க முடியாது என்று சிபிஐ கூறியது. சிபிஐ சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் வாதாடுகையில், மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் தொடர்பு குறித்து விசாரணை நடத்த முடியாது. சிபிஐ ஒரு சுயேச்சையான அமைப்பு. எனவே, சிபிஐ சார்பில் அறிவிப்பு வெளியிடவோ, உத்தரவாதம் அளிக்கவோ மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.
     
    மேலும் சிதம்பரம் தொடர்பாக சாமி தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் எந்த புதிய விஷயமும் இல்லை. இதனால் அதை சிபிஐ பரிசீலிக்காது என்றார்.
     
    சிதம்பரத்தை விசாரிக்க ஆரம்பித்தால் என் ஜாமீன் தாமதமாகும்-ராசா:
     
    முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ராசாவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுஷில் குமாரும், ப.சிதம்பரம் மீது விசாரணை நடத்தத் தேவையில்லை என்றார். அவர் வாதாடுகையில், எனது கட்சிக்காரர் ஆ.ராசா மீதான வழக்கு விசாரணை தாமதமாகி வருகிறது. குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படாததால், ஜாமீன் கேட்க முடியவில்லை. இந் நிலையில், ப.சிதம்பரம் பற்றி விசாரணை நடத்தினால், வழக்கு மேலும் காலதாமதமாகி விடும். எனவே, மேற்கொண்டு எந்த விசாரணையும் நடத்தக் கூடாது.
     
    ஸ்பெக்ட்ரம் விசாரணை முடிவடைந்து விட்டதாக சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ கூறியது. ஆனால், இன்னும் விசாரணை நடந்து வருவதாக சுப்ரீம் கோர்ட்டில் கூறுகிறது. எனவே, விசாரணை முடிந்து விட்டதா? இல்லையா? என்பதை முதலில் சிபிஐ தெளிவுபடுத்த வேண்டும்.
     
    குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் முன்பு, ஜாமீன் அளிக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சிபிஐ புதிய குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதால், குற்றச்சாட்டு பதிவு மேலும் தாமதம் ஆகக்கூடும்.
     
    எனவே எங்களுக்கு ஒரு வழி காட்டுங்கள். குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும்வரை ஜாமீன் அளிக்கக்கூடாது என்ற முந்தைய உத்தரவை சுப்ரீம் கோர்ட் திரும்பப் பெற வேண்டும் என்றார்.
     
    இந் நிலையில் இந்த விவகாரத்தில் இன்றும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது.
     
    இடையில் புகும் பிரஷாந்த் பூஷன்:
     
    இந் நிலையில் இன்று பொதுநல வழக்கு மையத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞரும் அன்னா ஹசாரேவின் குழுவைச் சேர்ந்தவருமான பிரஷாந்த் பூஷண் இன்று ஆஜராகி வாதாடுகிறார். 2ஜி விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் தொடர்பு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்குமாறு அவர் வற்புறுத்துவார் என்று தெரிகிறது.
     
    நிதித்துறை செயலாளரிடம் விளக்கம் கேட்கும் நாடாளுமன்ற கூட்டுக்குழு:
     
    இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ப.சிதம்பரத்துக்கு எதிராக மத்திய நிதியமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு எழுதிய குறிப்பை தங்களிடம் ஏன் முதலில் தாக்கல் செய்யவில்லை என்று நிதித்துறை செயலாளர் ஆர்.எஸ்.குஜ்ராலை நேரில் அழைத்து வரும் 13ம் தேதி விளக்கம் கேட்க, இந்த ஊழல் குறித்து விசாரித்து வரும், நாடாளுமன்ற கூட்டுக் குழு முடிவு செய்துள்ளது.
     
    அதே போல முன்னாள் தொலைத் தொடர்புத்துறை செயலாளர்கள் நிர்பேந்திர மிஸ்ரா, பிரிஜேஷ் குமார் ஆகியோரும் 13ம் தேதி ஆஜராகுமாறு நாடாளுமன்ற கூட்டுக் குழு சம்மன் அனுப்பியுள்ளது.
     
    இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையின் தற்போதைய நிலவரம் குறித்து வரும் 14ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் சிபிஐ விளக்கம் அளிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.



    [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger