Friday 12 July 2013

மீண்டும் முதலிடத்தில் இந்தியா

- 0 comments

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான
ஆண்டு தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி.
இன்று வெளியிட்டது. இதில் இந்தியா மீண்டும்
முதலிடத்தைப் பிடித்தது.
உலக சாம்பியனான இந்தியா, இங்கிலாந்தில்
நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி மற்றும்
வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற
முத்தரப்பு தொடரில் அபார
வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியதால்,
122 புள்ளிகளுடன்
இந்தியா முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
114 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 2-
வது இடத்திலும், 112 புள்ளிகள் பெற்றுள்ள
இங்கிலாந்து 3-வது இடத்திலும் உள்ளன.
ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான
தரவரிசையில் இந்தியாவின் விராட் கோலி 3-
வது இடத்திலும், டோனி 6-வது இடத்திலும்
உள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ்
முதலிடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர் வரிசையில் வெஸ்ட் இண்டீஸ்
வீரர் சுனில் நரைன் முதலிடத்திலும்,
பாகிஸ்தான் வீரர் அஜ்மல் 2-ம் இடத்திலும்,
இங்கிலாந்தின் ஸ்டீவன் பின் 3-
வது இடத்திலும் உள்ளனர்.
டாப்-10 வரிசையில் இந்திய வீரர்களில் ஆல்
ரவுண்டர் ஜடேஜா ஓரிரு இடங்கள்
சரிந்தபோதிலும் தற்போது 5-வது இடத்தில்
இருக்கிறார். முத்தரப்பு தொடரில் 10
விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்
புவனேஸ்குமார் 29 இடங்கள்
முன்னேறி டாப்-20 வரிசையில் இடம்பிடித்தார்.
தற்போது அவர் 20-வது இடத்தில் இருக்கிறார்.

[Continue reading...]

பா.ம.க. வக்கீல் பாலு கார் கண்ணாடி உடைப்பு

- 0 comments
தர்மபுரி காதல் ஜோடியான இளவரசன்–திவ்யா விவகாரத்தில் திவ்யாவுக்கு ஆதரவாக கோர்ட்டில் ஆஜராகி வருபவர் வக்கீல் பாலு. பா.ம.க.வை சேர்ந்த இவர் அக்கட்சியின் சமூக நிதி பேரவை தலைவராகவும் இருக்கிறார். காடு
வெட்டிகுரு மீதான வழக்கு உள்ளிட்ட பா.ம.க. தொடர்பான அனைத்து வழக்குகளிலும் ஆஜராகி வருகிறார். அண்ணா நகர் டி.பிளாக்கில் ஈஸ்வரி அடுக்குமாடி குடியிருப்பில் இவர் வசித்து வருகிறார்.
இவர் நேற்று இரவு தனது வீட்டு அருகில் ‘மாருதி ஸ்விப்ட்’ காரை நிறுத்தி இருந்தார். இன்று காலை எழுந்து பார்த்த போது காரின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger