Sunday 1 January 2012

புத்தாண்டு வாழ்��்துகள்!

- 0 comments


பறக்கட்டும் உங்கள் கற்பனைகள் சிறகடித்துப்
பிறக்கட்டும் புத்தம்புது சிந்தனைகள் உயிரெடுத்துத்
திறக்கட்டும் தினம் ஒரு புதிய பாதை தடை தகர்த்துச்
சிறக்கட்டும் உங்கள் பதிவுகள் தகதகத்து!

அனைவருக்கும் சென்னை பித்தனின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!





http://famousstills.blogspot.com



  • http://tamil-video.blogspot.com

  • [Continue reading...]

    இசை விழா--செவிக்கும்,வயிற்றுக்கு��் உணவு!!

    - 0 comments


    இன்றோடு முடிந்தது இசை விழா.

    இரண்டு நாட்களாகத் 'தானே ' புயலினால்   கச்சேரிக்குப் போக இயலவில்லை.

    இன்று சுதா ரகுநாதன், டி.எம்.கிருஷ்ணா-இரு கச்சேரிகள்

    இசை விழாவில்  கேட்டவை

    23-பிரியா சகோதரிகளின் கச்சேரி -குறுந்தகடு

    24.ரஞ்சனி&காயத்ரி-சங்கீத சரவெடி

    25.நித்யஸ்ரீ— உரத்த தாலாட்டு.

    27.சஞ்சய் சுப்பிரமணியம்-  மன நிறைவு.

    31. சுதா ரகுநாதன்- மாருதம்(மலய)

     காண்டீனில் உண்டவை

    ரவா பொங்கல்,அவியல்—நல்ல கூட்டணி.

    ஆப்பம்,காலிஃப்ளவர் குருமா—ம்ம்ம்ம்…

    எலுமிச்சை சேவை சட்னி-திருப்தி

    டையமண்ட் மசாலா கார தோசை—ஓகே.

    டபுள் டெக்கர் தோசை—பெயரோடு சரி

    வெஜ்.வெண்பொங்கல் பாசுமதி—சுவை

    ஆந்திரப் பெசரட்டு,அல்லம் பச்சடி—ஏவ்!

    கச்சேரி எங்காவது  எப்போதாவது கேட்டுக் கொள்ளலாம்!ஆனால் ஞானாம்பிகா காண்டீனுக்காக ஓராண்டு காத்திருக்க வேண்டும்!

    இனி நான் ஃப்ரீ! ஆண்டும் பிறக்கிறது!


    நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்!






    http://famousstills.blogspot.com



  • http://tamil-video.blogspot.com

  • [Continue reading...]

    தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'

    - 0 comments
    தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அல்லது தாங்களாகவே பணம் செலவழித்து ஏக எதிர்ப்பார்ப்பை உருவாக்கி, அதை பூர்த்தி செய்யத் தவறிய படங்களின் வரிசை இது.
     
    1. ஒஸ்தி
     
    கஷ்டப்பட்டு திறமையான இயக்குநர் எனப் பெயரெடுத்த தரணியின் இயக்கத்தில் வெளியாகி சொதப்பல்களின் சிகரம் என்ற 'சிறப்பைப்' பெற்றது இந்தப் படம். ஸ்கூல் பையனுக்கு காக்கி யூனிபார்ம் மாட்டி, மாறுவேஷப் போட்டிக்கு அனுப்பிய மாதிரி இருந்தது என பலரும் நக்கலடிக்கும் அளவுக்கு பொருந்தாத ஹீரோயிஸம், நெல்லைத் தமிழ் என்ற பெயரில் சகிக்க முடியாத உச்சரிப்பு, 10 நிமிடம் கூட தொடர்ந்தார் போல இருக்கையில் உட்காரமுடியாத அளவுக்கு எரிச்சலூட்டும் காட்சிகள் என.... பார்த்த அத்தனை பேரையும் படுத்தி எடுத்த படம் இது.
     
    தமாஷ் என்னவென்றால், படம் வெளியானபோது 'ஒரு முறை பார்க்கலாம்' என்ற ரீதியில் தடவிக் கொடுத்து எழுதிய சிலரே, ஆண்டு கடைசியில் மோசமான படங்களின் லிஸ்டில் ஒஸ்தியை சேர்த்ததுதான்!
     
    2. வேங்கை
     
    'யப்பா... இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவராத் தெரியல..' , என ஸ்க்ரீனில் வந்த தனுஷைப் பார்த்து ரசிகர்களை உரக்கக் கேட்க வைத்த படம் வேங்கை. முதல் இரண்டு காட்சிகளைப் பார்த்ததுமே, 'அட இது ஹரி படமா' என்று சொல்லும் அளவுக்கு சவ சவ காட்சிகள்.
     
    3. வித்தகன்
     
    வித்தகன் - With the Gun என்று தலைப்பில் போட்டதாலோ என்னமோ, படம் முழுக்க துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே இருந்தார் பார்த்திபன். முன்பெல்லாம் பார்த்திபன் படம் என்றால் பெரிய எதிர்ப்பார்ப்பிருக்கும். பச்சக்குதிரையில் அந்த எதிர்ப்பார்ப்பு அடியோடு விழுந்தது. அப்போது விழுந்த குதிரை இன்னும் எழுந்திருக்கவில்லை, ஒரு இயக்குநராக. நல்ல படைப்பாளியான பார்த்திபன் மீண்டு ஃபார்முக்கு வருவாரா... பார்க்கலாம்!
     
    4. ராஜபாட்டை
     
    நல்ல இயக்குநர், அருமையான நடிகர் இருவரும் சேர்ந்திருக்கிறார்கள்... இன்னொரு திரைவிருந்து காத்திருக்கிறது, என ஆசையோடு போன ரசிகனை 'வருவியா வருவியா...' என கேட்டு கேட்டு அறைந்த மாதிரி ஒரு எஃபெக்ட் ராஜபாட்டை படம் முடிந்ததும்!
     
    5. நடுநிசி நாய்கள்
     
    வித்தியாசமான படங்களைத் தருபவர் என்று பெயரெடுத்திருந்தாலும், ஆங்கிலத்தில் உள்ள கெட்ட வார்த்தைகளையெல்லாம் வசனமாக வைப்பவர் என்ற குற்றச்சாட்டு கவுதம் மேனன் மீது உண்டு. இந்த நடுநிசி நாய்கள் மூலம், அந்தக் குற்றச்சாட்டை விலக்கிக் கொள்ள வைத்தார் கவுதம் மேனன். பதிலுக்கு, வக்கிரத்தின் உச்சமான படம் தந்தவர் என்ற மோசமான பழிக்கு ஆளாகியுள்ளார்!!
     
    6. மாப்பிள்ளை
     
    இந்தப் படத்தின் முதல் சில காட்சிகளைப் பார்த்துதுக் கொண்டிருந்தபோதே, திட்டியபடி வெளியேறிய தீவிர ரஜினி ரசிகர்களை திரையரங்குகளில் பார்க்க முடிந்தது. ரஜினியின் பழைய மாப்பிள்ளையில் 1 சதவீதம் கூட இல்லை என்ற விமர்சனம் மட்டும்தான் இந்தப் படம் எடுத்ததால் கண்ட பலன்!
     
    7. வெடி
     
    பிரபுதேவா அடுத்தடுத்த தந்த தோல்விகளில் லேட்டஸ்ட் இது. மார்க்கெட் உள்ள நடிகர்கள் இருந்தும் அவர்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை பிரபுதேவா. போதாக்குறைக்கு மிக பலவீனமான திரைக்கதை, சன் பிக்சர்ஸின் பிரமாண்ட விளம்பரங்களைக் கூட தோற்கடிக்க வைத்தது.
     
    8. 7 ஆம் அறிவு
     
    வசூலுக்கும் தரத்துக்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபித்த படம். இந்தப் படத்துக்கு இருந்த எதிர்ப்பார்ப்பு கொஞ்சமல்ல. அந்த எதிர்ப்பார்ப்புடன் ஒப்பிட்டால், படத்தின் தரம் ஒன்றுமே இல்லை, முதல் அரைமணி நேர அசத்தல் காட்சிகளைத் தவிர.
     
    9. வேலாயுதம்
     
    வேலாயுதம் வசூல் திருப்தியாக இருந்தாலும், விஜய்யின் மற்ற படங்களிலிருந்து இது எந்த வகையிலும் வித்தியாசமாகவோ புதுமையாகவோ இல்லை. இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சமாச்சாரம் மாதிரிதான்... தீபாவளி ரேஸில் இந்தப் படமும் தாக்குப் பிடித்தது. வசூல் நன்றாக இருந்தாலும், தரம் அந்த அளவுக்கு இல்லை என்ற விமர்சனத்தை விஜய் புறக்கணிக்க முடியாது.
     
    10. இளைஞன்
     
    இந்தப்படத்துக்கு செலவழிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட பணத்தில் நான்கு தரமான படங்களை எடுத்திருக்கலாம். கலைஞரின் வசனங்கள் படத்துக்கு பெரும் பலம் என்று சொல்லப்பட்டது போய், அவர் வசனமே மைனஸாகக் கருதப்பட்ட நேரத்தில் வெளியான படம். கிடைத்த வாய்ப்பை முடிந்தவரை வீணடித்திருந்தார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.




    [Continue reading...]

    2011ல் இந்தியா ( முக்கிய நிகழ்வுகள் பாகம் - 2 )

    - 0 comments
     
     
    ஜூலை

    4 - தெலுங்கானா தனி மாநிலம் கோரி காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சிகளைச் சேர்ந்த 87 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர்.

    6 - டெல்லியில் முதல்வர் ஜெயலலிதா, திட்டக் கமிஷன்துணைத் தலைவர் எம்.எஸ்.அலுவாலியா ஆகியோர் இடையிலான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் தமிழகத்திற்கு ரூ 23,535 கோடி திட்ட ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது.

    - ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் சிபிஐ வளையத்தின் கீழ் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது.

    7 - சிபிஐ விசாரணை வளையத்தின் கீழ் இருப்பதாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தயாநிதி மாறன் விலகினார்.

    - திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலின் 6வது ரகசிய அறையைத் திறக்க உச்சநீதி்மன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

    10 - உ.பியில் கல்கா ரயில் தடம்புரண்டதில் 37 பயணிகள் கொல்லப்பட்டனர்.

    12 - மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யபப்பட்டது. புதிய அமைச்சர்களாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன் உள்ளிட்ட 8 பேர் பதவியேற்றனர். தயாநிதி மாறன், எம்.எஸ்.கில், முரளி தியோரா உள்பட 7 பேர் நீக்கப்பட்டனர்.

    13 - மும்பை நகரில் 3 இடங்களில் அடுத்தடுத்து நடந்த வெடிகுண்டு சம்பவங்களில் 22 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

    - ஜெகன்மோகன் ரெட்டியி்ன் சொத்துக்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    14 - மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பிரதீப்குமார் பதவியேற்றார்.

    20 - சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்தது.

    26 - ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சாட்சியாக சேர்க்க வேண்டும் என்று சிபிஐ கோர்ட்டில் முன்னாள் அமைச்சர் ராசா கோரிக்கை விடுத்தார்.

    29 - டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அன்னா ஹஸாரேவுக்கு அனுமதி தர முடியாது என்று டெல்லி காவல்துரை மறுத்தது.

    31 - ஊழல் புகார்களால் பெரும் நெருக்கடிக்குள்ளான கர்நாடக முதல்வர் எதியூரப்பா, கட்சியுடன் நடைபெற்ற கடைசிக்கட்ட மோதலுக்குப் பின்னர் பணிந்து தனது பதவியிலிருந்து விலகினார். ஆதரவாளர்களுடன் ஆளுநர் மாளிகைக்கு ஊர்வலமாகப் போய் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

    ஆகஸ்ட்

    8 - திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் பாதாள அறைகளில் பொற்குவியல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மன்னர் குடும்பத்தின் உத்தரவின் பேரில் தேவ பிரஸ்னம் பார்க்கப்பட்டது. அதில் அபசகுனம் நடந்ததற்கான அறிகுறிகள் தென்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

    16 - காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பதற்காக டெல்லி வந்து அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்த அன்னா ஹஸாரேவை டெல்லி போலீஸார் அதிரடியாக அதிகாலையில் வந்து கைது செய்து திஹார் சிறையில் போய் அடைத்து விட்டனர். இது பெரும் அதிர்ச்சி அலைகளையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதையடுத்து இரவு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

    19 - டெல்லி ராம்லீலா மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அன்னா ஹஸாரே தொடங்கினார்.

    27 -லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது அன்னா ஹஸாரே குழுவினரின் மூன்று பரிந்துரைகள் சேர்க்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து ஹஸாரே தனது உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

    செப்டம்பர்

    1 - கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி செளமித்ரா சென் மீதான இம்பீச்மென்ட் தீர்மானம் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    5 - சுரங்க ஊழலில் ரெட்டி சகோதரர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டி சிபிஐயால் கைது செய்யப்பட்டு ஆந்திர சிறையில் அடைக்கப்பட்டார்.

    6 - நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எம்.பிக்கள் வாக்களிக்க லஞ்சம் கொடுத்த வழக்கில் முன்னாள் சமாஜ்வாடி கட்சி தலைவர் அமர்சிங்கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    7 - டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

    8 - அமெரிக்க சிகிச்சைக்குப் பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லி திரும்பினார்.

    11 - உத்தரகாண்ட் முதல்வர் ரமேஷ் பொக்ரியால் ஊழல் புகார் காரணமாக பதவி விலகினார். புதிய முதல்வராக பி.சி.கந்தூரி பதவியேற்றார்.

    12 - சொத்துக் குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் கோர்ட்டில் ஆஜராகியே தீர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    13 - லண்டனில் நடந்த ஐசிசி விருதுகள் விழாவை, இந்திய கிரிக்கெட் அணியினர் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர்.

    16 - முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் அசாருதீனின் மகன் அயாசுதீன், மோட்டார் சைக்கிளை படு வேகமாக ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.

    - இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். கடைசியாக நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியி்ல அவர் 69 ரன்கள் குவித்தார்.

    17 - சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி 3 நாள் உண்ணாவிரதத்தை அகமதாபாத்தில் தொடங்கினார்.

    18 - டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி இந்தியாவில் 90 பேரும், நேபாளத்தில் 6 பேரும் பலியானார்கள்.

    26 - முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வீட்டில் முறைகேடாக 300க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகள் கொடுக்கப்பட்டது குறித்து விசாரிக்கப்படும் என சிபிஐ தெரிவித்தது.

    அக்டோபர்

    4 - 5 மாநில தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்யப் போவதாக அன்னா ஹஸாரே அறிவித்தார்.

    6 - ரூ. 2276 விலை மதிப்புள்ள இந்தியாவின் விலை மலிவு கம்ப்யூட்டரை மத்திய அமைச்சர் கபில் சிபல் வெளியிட்டார்.

    10 - கசாப்புக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    11 - கருப்புப் பணத்தை ஒழிக்க வலியுறுத்தி பாஜக மூத்த தலைவர் அத்வானி பீகாரில் விழிப்புணர்வு ரத யாத்திரையைத் தொடங்கினார்.

    20 - சொத்துக் குவிப்பு வழக்கில் முதல் முறையாக பெங்களூர் தனி நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆஜராகி நீதிபதியின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். ஜெயலலிதாவுக்காக சிறப்பு கோர்ட் தற்காலிகமாக பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்திற்கு மாற்றியமைக்கப்பட்டது.

    22 - திமுக தலைவர் கருணாநிதி டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசினார். மகள் கனிமொழி குறித்து இவர்களுடன் விவாதித்தார்.

    28 - ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஷியாமளா என்ற பெண் மூணாறில் உள்ள விடுதியில் கொல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவருடன் தங்கியிருந்த அவரது காதல் கணவர், ஷியாமாளவைக் கொலை செய்த பின்னர் ஈரோடு திரும்பி தனது சொந்த ஊரானன கோபிச்செட்டிப்பாளையம் அருகே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தனது மனைவி குறித்து அவர் தெரிவித்த பரபரப்புக் குற்றச்சாட்டுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

    நவம்பர்

    3 - டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கனிமொழியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

    5 - டெல்லி உயர்நீதிமன்றத்தில் கனிமொழியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    7 - தனது குழுவை மாற்றியமைக்கப் போவதாக அன்னா ஹஸாரே தெரிவித்தார்.

    - காஷ்மீர் மற்றும் வட மாநிலங்களில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

    8 - ஹரித்வாரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 16 பக்தர்கள் பலியானார்கள்.

    9 - ஊழலை ஒழிக்க வெறும் வாய்ப்பேச்சு பயன்படாது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அன்னா ஹஸாரே குழுவினரை சாடினார்.

    11 - 2ஜி வழக்கில் சிபிஐ விசாரணை முடிந்ததா என்பதை தெளிவாக்கும் வரை சாட்சிகள் குறுக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்ற முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் கோரிக்கையை சிபிஐ சிறப்பு கோர்ட் நிராகரித்தது.

    - ஓடும் ரயிலிலிருந்து இளம் பெண்ணை கீழே தள்ளி பின்னர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த தமிழக வாலிபர் கோவிந்தசாமிக்கு திருச்சூர் கோர்ட் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    12 - கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எப்படி நிதி வருகிறது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

    13 - முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை அமெரிக்க விமான நிலையத்தில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவமரியாதை செய்த செயலுக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து அமெரிக்க அரசு மன்னிப்பு கேட்டது.

    - இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் தனது பள்ளித் தோழி ப்ரீத்தியை சென்னையில் மணந்து கொண்டார்.

    15- இந்தியாவில் இதுவரை முடிவு எடுக்கப்படாமல் உள்ள தூக்குத் தண்டனைக் கைதிகளின் கருணை மனு விவரங்களை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    - அக்னி-4 ஏவுகணை வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது.

    - உ.பி. மாநிலத்தை நான்காக பிரிக்கும் தீர்மானம் உ.பி. மாநில சட்டசபையில் முதல்வர் மாயாவதியால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    15 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 1.76 லட்சம் கோடிதான் என்று சிஏஜி வினோத் ராய் திட்டவட்டமாக தெரிவித்தார்.

    - உ.பி மாநிலத்தை நான்காக பிரிக்கும் தீர்மானத்தை உ.பி. சட்டசபையில் முதல்வர் மாயாவதி கொண்டு வந்து ஓரிரு விநாடிகளில் அது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

    18 - தொலைத் தொடர்புத்துறை ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராமுக்கு சிபிஐ கோர்ட் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து சுக்ராம் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    22 - சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி கோர்ட்டில் முதல்வர் ஜெயலலிதா ஆஜரானார்.

    - டெல்லியில் மத்திய அமைச்சர் சரத்பவாரை ஹர்வீந்தர் சிங் என்ற இளைஞர் கன்னத்தில் பளார் என்று அறைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

    28 - ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்தது.

    29 - நீக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    30 - சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து நாடு தழுவிய கடையடைப்புப் போராட்டத்தில் வர்த்தர்கள் ஈடுபட்டனர்.

    டிசம்பர்

    1 - முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளளதாக கேரள அரசு பொய்ப் பிரசாரம் செய்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புகார் தெரிவித்தது.

    - இஷ்ரத் ஜகான் போலி எண்கெளன்டர் வழக்கை சிபிஐக்கு மாற்றி குஜராத் உயர் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கில் குஜராத் போலீசாரை நம்ப முடியவில்லை என்றும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

    2 - முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள எம்.பிக்கள் பல நாட்களாக டெல்லியில் பிரச்சினை எழுப்பி வரும் நிலையில், இன்று அதிமுக எம்.பிக்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர்.

    - கேரள முதல்வர் உம்மன் சாண்டி பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தி்த்து முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    - கிழிந்து போன ஷூவுக்குப் பதில் புதிய ஷூ வாங்க போதிய பணம் இல்லாததால், இந்தூர் கிரிக்கெட் ஸ்டேடியத்தை சுத்தம் செய்து ஊதியம் வாங்கி அதில் ஷூ வாங்கி உள்ளூர் கால்பந்து வீரர்கள் என்ற செய்தி வெளியானது.

    3 - முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரியாறு அணைப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட கேரள காங்கிரஸார் தமிழகப் பகுதியின் மதகை இடித்துப் போராட்டம் நடத்த முயன்று ரகளை செய்தனர்.

    - மறைந்த முதல்வர் என்.டி.ராமாராவுக்குச் சொந்தமான வீட்டில் குடியிருந்து வந்த தனது சித்தி லட்சுமி பார்வதியை, என்.டி.ஆரின் மகன் ராமகிருஷ்ணா அதிரடியாக வெளியேற்றினார்.

    4- கர்நாடக மாநிலம் பெல்லாரி சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்ட ரெட்டி சகோதரர்களின் தீவிர ஆதரவாளரான ஸ்ரீராமுலு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார். பாஜக வேட்பாளர் காதிலிங்கப்பா 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு டெபாசிட்டையும் பறி கொடுத்தார்.

    5 - முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்க உடனடியாக மத்திய பாதுகாப்புப் படையை அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு செய்தது.

    - முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட்டால் சோவியத் யூனியன் போல இந்தியாவும் உடையும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்தார்.

    - நிலநடுக்கம் குறித்த கேரளாவின் புகார் உண்மையா என்பதை அறிய முல்லைப் பெரியாறு அணையில் நேரடி ஆய்வு நடத்த உச்சநீதிமன்ற நிபுணர் குழு முடிவு செய்தது.

    - தமிழகம், கேரளா இடையே முல்லைப் பெரியாறு அணை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கும் தொடர்புள்ள பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டப் பாதைகளையும் அணைகளையும் தகர்க்கும் சதித் திட்டத்துடன் ஒரு கும்பல் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்குள் ஊடுறுவியுள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகின.

    - ராஜஸ்தானில் நடந்த ராணுவப் பயிற்சி நிகழ்ச்சியின்போது டி-90 பீரங்கியில் பயணித்து புதிய சாதனை படைத்தார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்.

    6 - முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரளாவிலும், தமிழகத்திலும் எல்லைப் பகுதியில் நிலவி வரும் போராட்டங்கள், போக்குவரத்துத் தடையால் ஐயப்ப பக்தர்கள்தான் கடும் பாதிப்பை சந்தித்தனர். இதனால் பல பக்தர்கள் சபரிமலைக்குப் போக விரும்பாமல் பாதியிலேயே திரும்பத் தொடங்கினர்.

    8 - ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக சாட்சியம் அளிக்கலாம் என்று சுப்பிரமணியம் சாமிக்கு டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட் அனுமதி அளித்தது.

    - சுரங்க முறைகேடு தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மீது கர்நாடக லோக் ஆயுக்தா கோர்ட் வழக்குப் பதிவு செய்தது.

    9- கொல்கத்தாவில் உள்ள அம்ரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 93 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    11 - ஜன் லோக்பால் மசோதாவை வலியுறுத்தி டெல்லியில் அன்னா ஹஸாரே ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். பாஜக, இடதுசாரி தலைவர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.

    12 - ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் 3வது குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது.

    13 - முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

    14 - மேற்கு வங்க மாநிலம் ராம்புர் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து 180 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

    - முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக இடுக்கி மாவட்டத்தில் வசித்து வரும் தமிழர்கள் மீது மலையாளிகள் வெறித்தனமான தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அங்கிருந்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் நடந்தே தமிழகத்திற்கு வந்து சேர்ந்தனர்.

    18 - பெங்களூரில் நேற்று நடந்த தென் மாநில முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட கேரள முதல்வர் உம்மன் சாண்டி, தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து சிறிது நேரம் பேசினார்.

    21 - இந்தியா அணுசக்தி கமிஷனின் முன்னாள் தலைவரும் மிகச்சிறந்த அணு விஞ்ஞானிகளில் ஒருவருமான பி.கே. ஐயங்கார் உடல்நலக்குறைவால் மும்பையில் காலமானார்.

    22 - லோக்சபாவில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

    23 - முல்லைப் பெரியாறு அணையில் நிலநடுக்கம் அபாயம் இருப்பதாக கேரள அரசு கூறி வருவது சரியானதா, இல்லையா என்பதை ஆராய்வதற்காக உச்ச நீதிமன்றம் அமைத்த உயர் அதிகாரி குழுவின் நிபுணர்கள் இரண்டு பேர் இன்று நேரடி ஆய்வை தொடங்கினர்.

    26 - முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நியமித்த அவசர கால குழுவை நிறுத்தி வைத்திருப்பதாக தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியது.

    - கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ். பங்காரப்பா சிறுநீரக செயலிழப்பால் இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.

    27 - முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்டத் தேவையில்லை என்று கூறிய கேரள முல்லைப் பெரியாறு அணை எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர் சி.பி.ராயை அந்தக் குழுவினர் தலைவர் பதவியிலிருந்து நீக்கினர்.

    - மக்களவையில் நாள் முழுவதும் நடந்த சூடான விவாதத்துக்கு பின், நள்ளிரவில் கடும் கூச்சல் குழப்பத்துக்கும், எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கும் இடையே குரல் ஓட்டெடுப்பு மூலம் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது.

    - ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா வேண்டி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று 3 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். ஆனால் கூட்டம் வரவில்லை.இதனால் அன்னா தரபப்ு அதிர்ச்சி அடைந்தது.

    - அன்னா ஹசாரே நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகக் கூறி மகாராஷ்டிராவைச் சேர்ந்த சம்தா தள் என்னும் கட்சி அவருக்கு மும்பையில் கருப்புக் கொடி காட்டியது.

    28 - மக்களவையில் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மசோதா குறித்து கடும் அதிருப்தியைத் தெரிவித்த அன்னா ஹஸாரே, மக்கள் ஆதரவு குறைந்ததாலும், உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாலும் இன்றே தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

    - திருபாய் அம்பானியின் 80-வது பிறந்ததினத்தையொட்டி குஜராத் மாநிலம் சொந்த கிராமமான சோர்வாட் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முகேஷ் மற்றும் அனில் அம்பானிகள் இணைந்து பங்கேற்றனர். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இந்த நிகழ்ச்சியின் மூலம் சந்தித்துக் கொண்டனர்.

    29 - லோக்சபாவில் தப்பிப் பிழைத்த லோக்பால் மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு நாள் முழுவதும் நடத்தப்பட்ட சூடான விவாதத்திற்குப் பின்னர் பல்வேறு குழப்பங்களுடன் நிறைவேற்றப்படாமல் போனது.

    30 - தமிழகத்திற்கும், புதுச்சேரிக்கும் இடையே புதுச்சேரி அருகே தானே புயல் கரையைக் கடந்தது. இந்த புயலில் சிக்கி புதுச்சேரி மாநிலம் உருக்குலைந்தது. கடலூர் மாவட்டத்திலும் பெரும் சேதம் ஏற்பட்டது



    2011ல் இந்தியா ( முக்கிய நிகழ்வுகள் பாகம் - 1 )





    [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger