Monday 28 October 2013

கிரிஷ் 3 படத்தில் வில்லனாக நடிக்க விரும்பினேன்: ஹ்ரிதிக் ரோஷன் தகவல் hrithik roshan wished to play villain role in krish 3

- 0 comments

கிரிஷ் 3 படத்தில் வில்லனாக நடிக்க விரும்பினேன்: ஹ்ரிதிக் ரோஷன் தகவல் hrithik roshan wished to play villain role in krish 3

மும்பை, அக். 29-

பாலிவுட் நடிகர் ஹ்ரிதிக் ரோஷன் நடிப்பில் வெளியான கிரிஷ் மற்றும் கிரிஷ் 2 ஆகிய படங்கள் வசூலில் சாதனை படைத்து வெற்றியடைந்தன.

இதனையடுத்து, ஏராளமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட கிரிஷ் 3 வரும் நவம்பர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவே நான் விரும்பினேன் என்று கதாநாயகனாக நடித்துள்ள ஹ்ரிதிக் ரோஷன் கூறினார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று நடைபெற்ற இப்படத்தின் அறிமுக விழாவில் அவர் கூறியதாவது:-

கிரிஷ் 3 படத்தில் வரும் வில்லன் கால் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க நான் விரும்பினேன். இந்த கதாபாத்தித்திற்கு எனது நடிப்பின் வாயிலாக வலிமை சேர்க்க முடியும் என நான் நம்பினேன்.

ஆனால், எனது விருப்பத்திற்கு தடை போட்ட எனது தந்தையும் இப்படத்தின் இயக்குனருமான ராகேஷ் ரோஷன், கால் கதாபாத்திரத்தை நடிகர் விவேக் ஓபராவை மனதில் வைத்து உருவாக்கியதாக கூறி விட்டார்.

எனது தந்தையின் முடிவு மிகவும் சரியானது தான் என்பதை தனது நடிப்பின் மூலம் விவேக் ஓபராய் நிரூபித்து விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

...

shared via

[Continue reading...]

அஜித்திற்கு பேனர் வைத்த விஜய் ரசிகர்கள் ajith and vijay fans

- 0 comments

அஜித்திற்கு பேனர் வைத்த விஜய் ரசிகர்கள்

அஜித்தின் ஆரம்பம் பட வெற்றி பெற வாழ்த்தி விஜய் ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர்.

அஜித்தின் ஆரம்பம் தீபாவளி சரவெடியில் வெடிக்க தயாராகி விட்டது.

இந்நிலையில் ஆரம்பம் படம் வெற்றி பெற வாழ்த்தி மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர்.

இந்த பேனர் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த பேனரில் அஜித்துக்கு விஜய் வாட்ச் கட்டிவிடுவது போன்ற புகைப்படம் உள்ளது.

இணையதளத்தில் இந்த பேனர் போடப்பட்டவுடன் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் அதை சமூக வலைதளங்களில் தீயா பரப்பி வருகின்றனர்.

மேலும் விஜய் ரசிகர்கள் ஆரம்பம் படத்தை ஆதரித்து வைத்துள்ள பேனரை பார்த்த அஜித் ரசிகர் மன்றத்தினர் உருகிவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

shared via

[Continue reading...]

ஆந்திராவில் பலத்த மழை: 4200 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது heavy rain andhra 4200 village flooded afloat

- 0 comments

ஆந்திராவில் பலத்த மழை: 4200 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது heavy rain andhra 4200 village flooded afloat

ஐதராபாத், அக். 28–

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் ஏற்பட்ட உடைப்பால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

மழை வெள்ளத்தால் ஆந்திராவில் 16 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. விசாகப்பட்டினம், விஜயநகரம், மேற்கு கோதாவரி, ஸ்ரீகாகுளம், மெடக், கரிம்நகர், கம்மம், பிரகாசம் உள்பட 14 மாவட்டங்களில் விவசாய பயிர்கள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கி அழிந்தது.

மேற்கு கோதாவரியில் 1150 வீடுகள் இடிந்து தரை மட்டமானது. 2½ லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் மூழ்கியது. விசாகப்பட்டினத்தில் 20 கிராமங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கி உள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல், கரும்பு பயிர்கள் அழிந்தது.

இதே போல், மெடக், கரிம்நகர், கம்மம் மாவட்டத்தில் நெல், பருத்தி, மிளகாய், மக்காச்சோளம் தண்ணீரில் மூழ்கி அழுகியது.

மழையால் மாநிலத்தில் ரூ.1727 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக வருவாய்துறை மந்திரி ரகுவீராரெட்டி கூறினார். நேற்று அவர் வெள்ளம் பாதித்த நல்கொண்டா மாவட்டத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு கூறியதாவது:–

மாநிலத்தில் 14 மாவட்டங்களில் உள்ள 521 மண்டலத்தில் 4200 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. 22 ஆயிரம் வீடுகள் இடிந்து சேதம் அடைந்து உள்ளது. 42 பேர் உயிர் இழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணப் பணிக்காக ரூ.1600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விஜயநகரம் மற்றும் விஜயவாடா பகுதியில் பல்வேறு இடங்களில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது.

இதனால் கோரப்பள்ளி எக்ஸ்பிரஸ், திருப்பதி எக்ஸ்பிரஸ், புவனேஸ்வரம் எக்ஸ்பிரஸ் உள்பட 7 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மற்ற ரெயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுகிறது. மாநிலம் முழுக்க 85 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதே போல் ஒடிசாவில் பெய்து வரும் மழையால் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். சுமார் 2½ லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

...

shared via

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger