Showing posts with label Tamil Nadu. Show all posts
Showing posts with label Tamil Nadu. Show all posts

Sunday, 26 January 2014

மதுரையில் நரேந்திரமோடி பெயரில் பலசரக்கு– டீக்கடைகள்: பா.ஜனதாவினர் நூதன பிரசாரம்

- 0 comments

Img மதுரையில் நரேந்திரமோடி பெயரில் பலசரக்கு– டீக்கடைகள்: பா.ஜனதாவினர் நூதன பிரசாரம்

 மதுரை, ஜன. 26–மோடி பெயரில் டீக்கடை, பலசரக்கு கடைகளை தொடங்கி பாரதீய ஜனதாவினர் நூதன முறையில் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து பாரதீய ஜனதா பிரசாரத்தை தொடங்கி உள்ளது. நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து நரேந்திரமோடியும் ஆதரவு திரட்டி வருகிறார்.இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி மணிசங்கர் அய்யர் பாரதீய ஜனதா குறித்து கூறுகையில், நரேந்திர மோடி டீ வியாபாரி போல் உள்ளதாக கருத்து தெரிவித்தார். அவரது இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.இருப்பிலும் மணிசங்கர் அய்யர் கூறியது அவரது சொந்த கருத்து என்றும், காங்கிரசின் கூற்று அல்ல என்றும் காங்கிரஸ் அறிவித்தது. ஆனால் இந்த விஷயத்தை பாரதீய ஜனதாவினர் தீவிரமாக எடுத்துக் கொண்டு அதையே தங்களது தேர்தல் பிரசார யுக்தியாக கடைபிடிக்க தொடங்கியுள்ளனர்.நரேந்திரமோடி பெயரில் டீக்கடை, பலசரக்குக்கடை, நகைக்கடை என பலவற்றை தொடங்கி நூதன முறையில் பாரதீய ஜனதாவின் சாதனைகளை விளக்கி பிரசாரம் செய்து வருகின்றனர்.மதுரையில் நரேந்திர மோடி பேரவை சார்பில் மோடி பெயரில் டீக்கடை, சிகை அலங்காரக்கடை போன்றவை ஊரக பகுதிகளில் தொடங்கப்படுகின்றன. மதுரை நகர் பகுதிகளிலும் கீரைத்துறை, செல்லூர், பச்சரிக்காரத் தெரு, ஆரப்பாளையம் ஆகிய பகுதிகளில் இந்த கடைகள் திறக்கப்படுகின்றன.இவற்றின் மூலம் பாரதீய ஜனதாவின் கொள்கைகள், குஜராத்தில் நரேந்திரமோடியின் செயல் திட்டங்கள், அதனால் ஏற்பட்டுள்ள வெற்றிகள் போன்றவற்றை துண்டு பிரசுரங்களாக வெளியிட்டு மக்களிடம் ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளனர்.... 

[Continue reading...]

Friday, 24 January 2014

குடிகாரனை எல்லாம் தலைவனாக ஏற்று கொள்ள முடியாது. தி.மு.க. தோற்கும்: மு.க.அழகிரி பேட்டி Today Chennai mk azhagiri interview dmk election failed

- 0 comments

குடிகாரனை எல்லாம் தலைவனாக ஏற்று கொள்ள முடியாது. தி.மு.க.  தோற்கும்: மு.க.அழகிரி பேட்டி Today Chennai mk azhagiri interview dmk election failed

 

 

சென்னை, ஜன. 25–
தி.மு.க.வில் தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்து வந்த மு.க.அழகிரி எம்.பி. கட்சியில் இருந்து நேற்று தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மு.க.அழகிரி எம்.பி. அளித்த பேட்டி விவரம் வருமாறு:–
கட்சியில் இருந்து என்னை ஏன் என்று நீக்கினார்கள் என்றே எனக்கு தெரியவில்லை. நான் ஹாங்காங் சென்றேன். அந்த தகவலை கட்சி தலைமைக்கு தெரிவிக்கவில்லை. அதனால்கூட என்னை நீக்கி இருக்கலாம். தி.மு.க.வில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை.
மதுரையில் சிலர் மீது சாதியை சொல்லி வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவத்திற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். ஒருவர் சாதியை சொல்லி திட்டியது உண்மை என்றால், அவர் புகார் செய்ய வழி இருக்கும்போது புகார்தான் செய்வார். உங்களை திட்டினால் சும்மா இருப்பீர்களா?.
என்னை கட்சியில் இருந்து நீக்கியபின் எனது ஆதரவாளர்கள், தொண்டர்கள் அதிக பலத்துடன் இருக்கிறார்கள். என் நிலைப்பாடு குறித்து வருகிற 30–ந்தேதி மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் நடக்கும் பிறந்தநாள் விழாவில் தெரிவிப்பேன்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதுரை வந்து தொண்டர்களை சந்தித்து பேசுவேன். அதுவரை அமைதியாக இருக்கவும் அறிவுறுத்தி உள்ளேன். தி.மு.க.வில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
எனது ஆதரவாளர்கள் மீது மட்டும்தான் சஸ்பெண்ட் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இது ஏன் என்று எனக்கு புரியவும் இல்லை. தெரியவும் இல்லை.
இதுபற்றி நான் தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினேன். ஆனால் அவர் எனக்கு இது தொடர்பாக எதுவுமே சொல்லவில்லை. ஆனால் நான் பேசி விட்டு சென்ற உடன் என்னை நீக்கி இருக்கிறார்கள்.
மு.க.ஸ்டாலினை நான் தலைவராக ஏற்க மாட்டேன் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன். அவரை ஒரு போதும் தலைவராக ஏற்க மாட்டேன்.
என் மீதும், என் ஆதரவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தப் பிறகு ஸ்டாலின் தலைமையை நாங்கள் ஏன் ஏற்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளால் நாங்கள் துவண்டு விடமாட்டோம். முன்பை விட ஏழை மக்களுக்கு அதிக அளவில் உதவிகள் செய்யப்படும்.
தி.மு.க.வுக்காக உழைத்த தொண்டர்களை எந்த அடிப்படையும் இல்லாமல் நீக்கியுள்ளனர். இது சரியானது தானா என்றுதான் நியாயம் கேட்டேன். நான் நியாயம் கேட்கக் கூடாதா? அதற்காக என்னையும் நீக்கி உள்ளனர்.
தலைவரிடம் பேச எனக்கு உரிமை இல்லையா? நான் உரத்தக் குரலில் பேசவேக் கூடாதா? அப்படியானால் தி.மு.க.வில் ஜனநாயகம் இல்லை என்றுதானே அர்த்தம்.
நான் சொல்வதை கேட்காத தலைவர், ஸ்டாலின் சொல்வதைத்தான் கேட்கிறார். தலைவரும், பொதுச் செயலாளரும் ஸ்டாலின் சொல்வதைத் தான் செய்கிறார்கள்.
எனக்கு தென்மண்டல அமைப்பாளர் பதவியைக் கொடுத்துள்ளனர். ஆனால் என்னிடம் எதுவுமே கேட்பது இல்லை. என்னை கலந்து ஆலோசிக்காமலே தென் மாவட்ட தி.மு.க. பற்றி முடிவு எடுத்தால் என்ன அர்த்தம்?
எனக்கும் ஸ்டாலினுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சினையும் இல்லை. கட்சி ரீதியாகத்தான் பிரச்சினை உள்ளது.
ஸ்டாலின் பதவிக்கு ஆசைப்படுபவர். ஆனால் நான் அப்படி அல்ல. ஒரு போதும் பதவிக்காக கவலைப்பட்டதே இல்லை. மீண்டும் தலைவரை உடனடியாக சந்திக்கும் திட்டம் இல்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. கட்சியில் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தவில்லை.
அப்படி இருக்கும் போது நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? ஒரு போதும் மன்னிப்பு கேட்க மாட்டேன். அதுபோல விளக்கக் கடிதம் எதுவும் தலைமைக்கு அனுப்பமாட்டேன்.
என்னை நீக்கியதால் தி.மு.க. மீதான குடும்ப அரசியல் என்ற பழி துடைக்கப்பட்டுள்ளதாக வீரமணி கூறியுள்ளார். அவர் ஒரு அரசியல் வியாபாரி. எங்கே ஆதாயம் கிடைக்கிறதோ அங்கே போய் சேர்ந்து விடுவார்.
கருணாநிதி முதல்வரானதும் தி.மு.க.வை புகழ்ந்தார். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் சமூக நீதி காத்த வீராங்கனை என்றார். ஆதாயம் கிடைக்கும் இடத்துக்கு ஏற்ப மாறி, மாறி பேசுவார்.
கட்சியில் இருந்து நான் சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பது இது இரண்டாவது முறை. அந்த அளவுக்கு நான் எந்த தவறும் செய்யவில்லை. இதற்காக நான் என் தொண்டர்களை ஒரு போதும் கைவிட்டு விடமாட்டேன்.
ஸ்டாலின் இப்போது தி.மு.க. தலைவர் மாதிரி செயல்பட ஆரம்பித்து விட்டார். அவருக்கு கட்சியில் பொருளாளர் பதவியை கொடுத்திருக்கிறார்கள். அவர் அதை மட்டும்தான் செய்ய வேண்டும்.
ஆனால் மற்ற கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுக்கிறார். இதனால் தி.மு.க.வின் சொத்தை சிலர் அபகரிக்க முயற்சி செய்வது போல எனக்கு தோன்றுகிறது.
தி.மு.க. தலைவரை யாரோ ‘‘பிளாக்மெயில்’’ செய்கிறார்களா? என்று எனக்கு தெரியவில்லை. ஸ்டாலினை பொருத்தவரை அவர் பதவிக்காக எதையும் செய்வார். இப்போதும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.
நான் நியாயத்துக்காக போராடுவேன். 30–ந்தேதி என் ஆதரவாளர்கள் நடத்தும் விழாவில் பங்கேற்பேன். அப்போது நான் எல்லாவற்றையும் சொல்வேன்.
என்னை நீக்கிய பிறகு தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும் என்று சொல்கிறார்கள். அப்படி கூட்டணி ஏற்பட்டால் இரு கட்சிகளுக்குமே லாபம் ஏற்பட போவதில்லை. தே.மு.தி.க.வை நம்பி தி.மு.க. வெற்றி பெற முடியாது.
அ.தி.மு.க.வினர் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று இப்போதே பணிகளை தொடங்கி விட்டனர். இதற்கான எல்லா முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபடுவார்கள்.
என் மீதான நடவடிக்கை எனக்கு இன்னமும் ஆச்சரியமாக உள்ளது. தலைவர் ஒப்புதல் இல்லாமல் கூட இது நடந்து இருக்கலாமோ என்று நினைக்கிறேன். கட்சிக்காக நான் செய்த பங்களிப்பு எல்லோருக்கும் தெரியும். எனக்கு எப்போதுமே கருணாநிதிதான் தலைவர். அவர் இல்லாத தி.மு.க.வை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
இவ்வாறு மு.க.அழகிரி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று மு.க.அழகிரி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தி.மு.க.வில் ஜனநாயகம் செத்து விட்டது. நியாயத்துக்காக போராடியதற்காக தி.மு.க.வில் இருந்து நீக்கி விட்டார்கள். ‘வருங்காலமே’ என்று சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
தி.மு.க.வுக்கு போட்டி வேட்பாளர்கள் தேவை இல்லை. தி.மு.க. தானாகவே தோற்கும். கட்சியில் இருந்த முறை கேடுகளை எடுத்து கூற முற்பட்டது நான் செய்த தவறு.
தி.மு.க.வில் நடந்து இருக்கும் ஊழலுக்கான ஆதாரங்களை மதுரையில் வெளியிடுவேன். மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்.
இவ்வாறு மு.க.அழகிரி கூறினார்.

 

[Continue reading...]

Wednesday, 25 December 2013

இன்று சுனாமி நினைவு தினம்: மாயமான 3 மகள்களை 10 ஆண்டுகளாக தேடும் தாயின் பரிதாபம் Today Memorial Day tsunami missing 3 daughters 10 year old mother of looking searching

- 0 comments

Img இன்று சுனாமி நினைவு தினம்: மாயமான 3 மகள்களை 10 ஆண்டுகளாக தேடும் தாயின் பரிதாபம் Today Memorial Day tsunami missing 3 daughters 10 year old mother of looking searching

ஆலந்தூர்,டிச.26-

கடந்த 2004–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26–ந்தேதி தமிழகத்தில் ஏற்பட்ட சுனாமி பேரலையில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்து, 10–ம் ஆண்டு தொடங்குகிறது.

இந்த சுனாமிக்கு தனது கணவரின் உயிரை பறிகொடுத்து விட்டு அன்று முதல் மாயமான 3 மகள்களையும் கடந்த 10 ஆண்டுகளாக தேடி வரும் ஒரு தாயின் நிலைமையை நினைத்து பார்க்க பரிதாபமாக உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:–

சென்னையை அடுத்த தாம்பரம் பெருங்களத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் செண்பகவள்ளி (வயது 50). இவர், இதற்கு முன்பு ஆவடியை அடுத்த வேப்பம்பட்டில் குடியிருந்து வந்தார். அப்போது அவருடைய கணவர் கோவிந்தசாமி மற்றும் மகள்கள் குமுதா(17), அனுசியா(16), கவிதா(13) ஆகியோர் கடந்த 2004–ம் ஆண்டு சுற்றுலாவாக கன்னியாகுமரிக்கு சென்றனர்.

அங்கிருந்து டிசம்பர் மாதம் 25–ந்தேதி வேளாங்கண்ணிக்கு சென்றனர். அங்கு மறுநாள் (26–ந்தேதி) ஏற்பட்ட சுனாமி பேரலையில் சிக்கினார்கள். இதில் மீட்பு குழுவினர் கோவிந்தசாமியை மட்டும் காயங்களுடன் நாகப்பட்டினத்தில் மீட்டனர். பின்னர் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிந்தசாமிக்கு நினைவு திரும்பியது.

அப்போது அவர், தனது மனைவியிடம், ''நமது மகள்கள் 3 பேரும் சுனாமியில் சிக்கவில்லை. அவர்கள் தப்பிச்சென்றுவிட்டனர். அவர்களை கண்டுபிடி'' என்று கூறி விட்டு பரிதாபமாக இறந்துவிட்டார். தற்போது செண்பகவள்ளி, சுனாமியில் கணவரை இழந்து, மகள்களையும் தொலைத்து விட்டு பெருங்களத்தூரில் தனிமையில் வசித்து வருகிறார்.

வருமானத்துக்கு தாம்பரம் மெப்சில் உள்ள ஒரு கேண்டினில் வேலை பார்த்து வருகிறார். அத்துடன் சுனாமியின் போது மாயமான தனது மகள்களையும் தீவிரமாக தேடி வருகிறார். இதற்காக சுனாமியில் இறந்தவர்கள் மற்றும் அதில் சிக்கி மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்த்து அதில் தனது மகள்கள் இருக்கிறார்களா? என தேடி வருகிறார்.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக தேடியும் இன்னும் அவரது மகள்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களின் நிலை என்ன ஆனது? என்றும் தெரியவில்லை. இதுபற்றி செண்பகவள்ளி, கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறும்போது,

''கடந்த 2004–ம் ஆண்டு சுனாமியில் சிக்கிய எனது கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது என்னிடம் மகள்கள் சாகவில்லை. அவர்களை கண்டுபிடி என்று கூறி விட்டு இறந்து விட்டார்.

நானும் கடந்த 10 ஆண்டுகளாக எனது மகள் 3 பேரையும் தேடி வருகிறேன். அவர்கள் உயிருடன் தான் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் எப்படியும் அவர்களை கண்டுபிடித்துவிடுவேன்'' என உறுதியுடன் தெரிவித்தார்.

''அந்த தாயின் நம்பிக்கை வீண் போகாமல், கணவரை இழந்து தவிக்கும் அவருக்கு ஆறுதலாக அவரின் 3 மகள்களையுமாவது அவருடன் சேர்க்க கடவுள் வழி செய்யட்டும்'' என வேண்டியபடி அந்த பகுதி மக்களும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
...

[Continue reading...]

2013 ம் ஆண்டில் ஒரு நாளைக்கு 254 கோடி சம்பாதித்த சூதாட்ட விடுதி அதிபர் அடெல்சன் Casino magnate Adelson made 254 crore per day in 2013

- 0 comments

Casino magnate Adelson made 254 crore per day in 2013 .

2013 ம் ஆண்டில் ஒரு நாளைக்கு 254 கோடி சம்பாதித்த சூதாட்ட விடுதி அதிபர் அடெல்சன் Casino magnate Adelson made 254 crore per day in 2013

வாஷிங்டன், டிச. 26-

2013-ம் ஆண்டின் அதிகம் சம்பாதித்த நபராக சூதாட்ட விடுதிகள் (கேசினோ) நடத்திவரும் அமெரிக்க தொழிலதிபர் அடெல்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் லாஸ் வேகாஸ், சீனாவின் மக்காவ் மற்றும் சிங்கப்பூரில் விதவிதமான சூதாட்ட மையங்களை தொடங்கியுள்ளார்.

இங்குள்ள சூதாட்ட விளையாட்டுகளில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்கள் அந்த விடுதிகளுக்கு படையெடுக்கின்றனர். இதனால், கேசினோ சூதாட்ட விடுதிகளுக்கு இந்த ஆண்டு கொள்ளை லாபம் கிடைத்துள்ளது.

இதையடுத்து கேசினோ அதிபர் ஷெல்டன் அடெல்சனின் ஒரு நாளைய வருமானம் 254 கோடி ரூபாய் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது. இச்சாதனையின் மூலம் உலகின் முன்னணி கோடீஸ்வரரான வாரன் பப்பெட்டை அடெல்சன் முந்திவிட்டார் என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டில் மட்டும் 41 மில்லியன் டாலர் சம்பாதித்த கேசினோ அதிபரின் சொத்து மதிப்பு 37 பில்லியன் டாலர் ஆகும். பேஸ்புக் வலைதள அதிபர் மார்க் ஸுகெர்பெர்க் இந்த ஆண்டில் ஒரு நாளைக்கு 230 கோடி வீதம் சம்பாதித்து இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மூன்றாவதாக அமேசன் அதிபர் ஜெப் பெஸோஸ் உள்ளார். 
...

[Continue reading...]

மேற்கு வங்காளம்: சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு சாமியார் கைது children harassment priest arrested in West Bangladesh

- 0 comments

Img மேற்கு வங்காளம்: சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு சாமியார் கைது children harassment priest arrested in West Bangladesh

கொல்கத்தா, டிச. 26-

மேற்கு வங்காள மாநிலம் ஷகாபூரில் மடம் நடத்தி வந்த சாமியர் ஒருவர் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட 4 பேர்களில் 3 சிறுவர்கள். அவர் தங்களுக்கு பாலியல் தொந்தரவு தருவதாக சிறுவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

'இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 377–ன் கீழ் ஓரினச் சேர்க்கை கொள்வது கிரிமினல் குற்றம், இந்தக் குற்றத்துக்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்கலாம்' என்று சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பு கூறியது. போலீசார், சாமியார் மீது பிரிவு 377ன் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் சாமியாரை போலீசார் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவர்கள் சாமியாரின் மேற்பார்வையில் ஆசிரமத்தில் படித்து வந்துள்ளனர்.

...

[Continue reading...]

தேவயானி கோப்ரகடே கைது: அமெரிக்க அதிகாரி விசா விவரங்களை தவறாக படித்ததே காரணம் devyani khobragade arrested U.S. official visa information due to wrong lesson

- 0 comments

Img தேவயானி கோப்ரகடே கைது: அமெரிக்க அதிகாரி விசா விவரங்களை தவறாக படித்ததே காரணம் devyani khobragade arrested U.S. official visa information due to wrong lesson

நியுயார்க், டிச.25-

விசா விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட விவரங்களை, அமெரிக்க அதிகாரி மார்க் ஸ்மித் தவறாக புரிந்துகொண்டதே தேவயானி கோப்ரகடே கைதுக்கு காரணம் என அவரது வழக்கறிஞர் டேனியல் அர்ஷாக் தெரிவித்துள்ளார். விசா விண்ணப்பத்தில் படிவம் டி.எஸ்.160 ல் தனது சம்பளம் 4500 டாலர் என்று தேவயானி குறிப்பிட்டதை, சங்கீதா ரிச்சர்டு எதிர்பார்த்த சம்பளமாகவும், ஆனால் தேவயானி சங்கீதாவுக்கு 1560 டாலர் தர சம்மதித்தாகவும் தவறாக புரிந்து கொண்ட மார்க் ஸ்மித், தனது விசாரணையில் தேவயானி குற்றவாளி என துல்லிமாக அறிந்துள்ளதாக கூறி கைது செய்துள்ளார்.

இவ்விவரங்களை இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் பரிசீலிக்கும்போது, தேவயாணி போதுமான சம்பளம் பெறுவதால் சங்கீதாவுக்கு அவர் சம்பளம் தரமுடியும் என்றும், அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் சரியானது என முடிவுக்கு வரமுடியும் எனவும் டேனியல் தெரிவித்துள்ளார்.

ஸ்மித் செய்த சிறிய தவறால் எவ்வளவு பெரிய கொடூரமான விஷயம் நடந்துவிட்டது என டேனியல் மேலும் தெரிவித்துள்ளார்.
...

[Continue reading...]

Tuesday, 24 December 2013

சென்னையில் மயக்க மருந்து கொடுத்து மாணவியை கடத்திய கும்பல் 50 லட்சம் கேட்டு மிரட்டல் Giving anesthesia in Chennai girl gang kidnapped 50 million asking Threat

- 0 comments

Img சென்னையில் மயக்க மருந்து கொடுத்து மாணவியை கடத்திய கும்பல் 50 லட்சம் கேட்டு மிரட்டல் Giving anesthesia in Chennai girl gang kidnapped 50 million asking Threat

சென்னை, டிச. 25–

அடையாறு சாஸ்திரி நகரைச்சேர்ந்த என்ஜினீயரிங் மாணவி ப்ரியா (19). கடத்தப்பட்டு இரவு முழுவதும் வீட்டில் சிறை வைக்கப்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி ப்ரியாவை மயக்க மருந்து கொடுத்து கடத்திய கும்பல் அவரை செக்ஸ் சித்ரவதை செய்ததா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கல்லூரி மாணவிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:–

சாஸ்திரி நகரில் நேற்று முன்தினம் காலையில் ப்ரியா வழக்கம்போல தனது கல்லூரி பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வேகமாக வந்த கார் ஒன்று திடீரென ப்ரியாவின் முன்னால் வந்து நின்றது.

கண் இமைக்கும் நேரத்தில் காரில் இருந்தவர்கள் கீழே இறங்கி குண்டு கட்டாக அவரை காரில் தூக்கிப் போட்டு கடத்திச் சென்றனர். மாலையில் ப்ரியா வீடு திரும் பாததால் பெற்றோர் கலக் கம் அடைந்தனர்.

ப்ரியா எங்கு சென் றாளோ? என்கிற பதட்டத்து டன் உறவினர்கள் வீடுகளி லும், அவரது தோழிகளிடமும் போன் செய்து விசாரித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ப்ரியாவின் தந்தைக்கு மிரட்டல் போன் ஒன்று வந்தது. அதில் பேசிய வாலிபர், உங்கள் மகள் ப்ரியாவை நாங்கள்தான் கடத்தி வைத்துள்ளோம். ரூ. 50 லட்சம் கொடுத்தால் தான் அவரை உயிருடன் விடுவோம். இல்லையென் றால் ப்ரியாவை பிணமாகத் தான் பார்க்க முடியும் என்று கூறி விட்டு போனை துண்டித்து விட்டார்.

இதுபற்றி ப்ரியாவின் தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் தனிப் படை அமைத்து தேடுதல் வேட்டையை முடுக்கி விட் டனர்.

இரவு முழுவதும் தேடிப் பார்த்ததும் ப்ரியாவை கண்டு பிடிக்க முடிய வில்லை. இதனால் பதட்டம் அதிகரித்தது.

இந்நிலையில் நேற்று காலையில் ப்ரியாவின் தந்தை பணத்தை கொண்டு வந்து தருவதாக கடத்தல் கும்பலிடம் தெரிவித்தார். அங்கே வாருங்கள், இங்கே வாருங்கள் என கூறி அவரை அலைக்கழித்த கடத்தல் ஆசாமிகள் கடைசியாக ராமாபுரத்துக்கு வந்து பணத்தை கொடுக்குமாறு கூறினர்.

இதையடுத்து நேற்று காலையில் கடத்தல் கும்பல் பணத்தை வாங்கும்போது போலீஸ் பிடியில் சிக் கியது.

ப்ரியாவை கடத்தியதாக பழனிச்சாமி, லோகநாதன், ராஜாமணி, முருகன், அஜய் ஆகிய 5 பேரை போலீசார் பிடித்தனர்.

இவர்கள் ப்ரியாவை கடத்திச் சென்று பெருங் களத்தூரில் ஒரு வீட்டில் சிறை வைத்தது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்று வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த ப்ரியாவை போலீசார் அதிரடியாக மீட்டனர். அவர் மயங்கிய நிலையில் காணப்பட்டார். எனவே கடத்தல் கும்பல் ப்ரியாவை செக்ஸ் சித்ரவதை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

இது தொடர்பாக 5 பேரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ''காதல் விவ காரம் காரணமாகவே இக்கடத்தல் சம்பவம் நடந் துள்ளது என்று நினைத்தோம். ஆனால் பணம் பறிக்கும் நோக்கத்திலேயே ப்ரியா கடத்தப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. எனவே 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக் கைகளை எடுத்து வரு கிறோம்'' என்றார்.

சென்னையில் கிழக்கு கடற்கரைசாலை கடந்த சில நாட்களாகவே கடத்தல் களமாக மாறி வருகிறது. 2 வாரங்களுக்கு முன்னர் கூட இளம்பெண் ஒருவர் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டார். அப்போது இன்னொரு ஆட்டோ டிரைவர் விரட்டிச் சென்று அப்பெண்ணை மீட்டு போலீசிடம் ஒப்படைத்தார். அச்சம்பவத்தில் சம்பந்தப் பட்ட ஆட்டோ டிரைவர் மீது உரிய நடவடிக்கை எதுவும் எடுக்காமல் சாதாரண சட்டப்பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

எனவே ப்ரியா கடத்தல் சம்பவத்திலும் அதே போன்று நடவடிக்கையை போலீசார் எடுத்து விடுவார் களோ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையில் இதுபோன்று அடிக்கடி நடைபெறும் கடத் தல் சம்பவங்களை தடுக்க ரோந்து பணிகளை தீவிரப் படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

...

[Continue reading...]

கற்பழிக்க முயன்றவரை விடுவித்த பஞ்சாயத்து: மனமுடைந்த இளம்பெண் தற்கொலை முயற்சி Girl attempts suicide after panchayat lets off molester

- 0 comments

Img கற்பழிக்க முயன்றவரை விடுவித்த பஞ்சாயத்து: மனமுடைந்த இளம்பெண் தற்கொலை முயற்சி Girl attempts suicide after panchayat lets off molester

புலந்த்ஷர், டிச. 24-

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டம் சோஹி கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் உள்ள ஒரு வயலுக்கு வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது வயல் உரிமையாளர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதுடன், கற்பழிக்கவும் முயன்றுள்ளார். இதற்கு அந்தப் பெண் உடன்படாததால் அவரை அடித்து உதைத்துள்ளார்.

இதையடுத்து அந்தப் பெண் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி தன் பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் அவர்கள் பஞ்சாயத்தாரிடம் முறையிட்டு நீதி வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால், குற்றம்சாட்டப்பட்ட நபர் உயர்வகுப்பைச் சேர்ந்த பெரிய மனிதர் என்பதால், அவருக்கு சாதாரண தண்டனையாக 5 முறை அறை கொடுக்க வேண்டும் பஞ்சாயத்தார் உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பினால் மனமுடைந்த இளம்பெண், தற்கொலை செய்வதற்காக நேற்று கால்வாயில் விழுந்தார். அப்போது அப்பகுதி வழியாகச் சென்றவர்கள், அந்த பெண்ணை காப்பாற்றினர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

...

[Continue reading...]

தேவயானி கைதுக்காக துடிக்கும் மத்திய அரசு இசைப்பிரியா படுகொலைக்கு வருந்தவில்லையே: கருணாநிதி ஆதங்கம் devyani arrested Central Government pulsate isaipriya arrest murder not regret Karunanidhi anxious

- 0 comments

Img தேவயானி கைதுக்காக துடிக்கும் மத்திய அரசு இசைப்பிரியா படுகொலைக்கு வருந்தவில்லையே: கருணாநிதி ஆதங்கம் devyani arrested Central Government pulsate isaipriya arrest murder not regret Karunanidhi anxious

சென்னை, டிச. 24-

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை வருமாறு:-

கேள்வி :- பால் கொள்முதல் விலையினை லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தி அறிவித்திருக்கிறார்களே?

பதில் :-  2001-2006 வரையான அ.தி.மு.க. ஆட்சியில், ஐந்தாண்டுகளில், பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 1 ரூபாய் 50 காசுகளும், எருமைப் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 1 ரூபாய் 56 காசுகளும் என்ற அளவுக்கு விலை உயர்த்தப்பட்டது. ஆனால் தி.மு.கழக அரசு, 2006ஆம் ஆண்டு பதவியேற்றதற்குப் பிறகு, ஐந்தாண்டுக் காலத்தில் பசும் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு கொள்முதல் விலையை 6 ரூபாய் 60 காசுகள் கூடுதலாகவும், எருமைப் பாலுக்கு 12 ரூபாய் 70 காசுகள் கூடுதலாகவும் உயர்த்தி வழங்கியது. ஆனால் ஒவ்வொரு முறையும் பால் உற்பத்தியாளர் சங்கத்தின் பிரதிநிதிகளை நானே என் அறைக்கு அழைத்துப் பேசி கலந்தாலோசனை செய்த பிறகு தான் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் இப்போது யாரையும் அழைத்துப் பேசாமலேயே பால் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி :- அமெரிக்காவில் பணியாற்றி வந்த இந்தியத் துணைத் தூதர் "தேவயானி கோப்ரகடே" கைது செய்யப்பட்டது பற்றி தாங்கள் எதுவும் கூறவில்லையே?

பதில் :- அந்த ஒரு இந்தியப் பெண்ணுக்காக, அலறித் துடிக்கும் இந்திய அரசும், மத்திய அமைச்சர்களும் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவிற்காகவும், பாலச்சந்திரனுக்காகவும் மற்றும் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காகவும் துடிக்க வில்லையே என்ற ஆதங்கம்தான் எனக்கு அதிகமாக ஏற்படுகிறது.

தேவயானிக்காக வருந்துவதை நான் தவறு என்று கூறவில்லை. அதே நேரத்தில் இசைப்பிரியாவிற்காக ஏன் இந்தப் பாசம் வரவில்லை என்றுதான் வருந்துகிறேன்.

கேள்வி :- "காங்கிரசைப் பிடித்த தீயசக்தி நீங்கிவிட்டது" என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிருக்கிறாரே?

பதில் :- அந்தக் கட்சியிலிருந்து அவர் விலகிவிட்டாரா என்ன?

கேள்வி :- மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், வாகனாவதி, அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் முன்னுக்குப் பின் முரணாகக் கூறியிருக்கிறார் என்று சொல்கிறார்களே?

கலைஞர் :- அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் வெளிச்சத்திற்கு வந்துள்ள பல முரண்பாடுகளில் இதுவும் ஒன்றாகும். சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து அமைச்சரவைக் குழுவின் தலைவர், அன்றைய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில், நிதித் துறை அமைச்சர் பிரணாப், முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, மற்றும் வழக்கறிஞர்  வாகனாவதி ஆகியோரிடையே எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என்றும், ஆனால் அப்படி ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக ஆ. ராசா பிரதமருக்குத் தவறான தகவலை அளித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்தக் குற்றப் பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, பதிவு செய்யப்பட்டதற்குப் பிறகு, பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் இருந்தே, அந்தக் கூட்டம் 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், (அலைக்கற்றை உரிமங்கள் வழங்கப்படுவதற்கு முன்பாக) நடைபெற்றதற்கான ஆதார ஆவணங்களை, இராசா முறைப்படிக் கேட்டுப் பெற்று; தற்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதோடு, சாட்சியம் அளிக்க வந்த அரசு வழக்கறிஞரிடம், அந்தக் கூட்டம் நடைபெற்றது உண்மை தான் என்றும், ஆனால் தான் முன்பு சி.பி.ஐ. இடம் வாக்குமூலம் கொடுத்த போது, அதனை அவர் மறந்து விட்டதாகவும், நீதிமன்றத்தில் இராசா கேள்வி மூலமாகக் கேட்டு அரசு வழக்கறிஞரிடம் உண்மையைப் பெற்றுள்ளார். இதிலிருந்து மத்திய அரசின் வழக்கறிஞர் ஏற்கனவே சி.பி.ஐ.யிடம் தெரிவித்தது உண்மைக்கு மாறான தகவல் என்றும், அந்தத் தகவலைத்தான் சி.பி.ஐ. தனது குற்றப் பத்திரிகையில் சேர்த்துள்ளது என்றும் தெளிவாகியுள்ளது. இதிலிருந்து சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகை உண்மைக்கு மாறான தகவல்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட ஒன்று என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். 
...

[Continue reading...]

பலாத்காரம் செய்ய முயற்சி: பெண்ணின் கராத்தே தாக்குதலில் உதை வாங்கிய வாலிபர் ஓட்டம் Tried to harassment womens karate kick man run

- 0 comments

Img பலாத்காரம் செய்ய முயற்சி: பெண்ணின் கராத்தே தாக்குதலில் உதை வாங்கிய வாலிபர் ஓட்டம் Tried to harassment womens karate kick man run

தெவனகரெ, டிச.24-

மத்திய கர்நாடகாவிலுள்ள தெவனகரெவில் 19 வயது மாணவியை கற்பழிக்க முயன்ற நண்பன், மாணவியின் கராத்தே தாக்குதலில் உதை வாங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தான்.

தெவனகரெவில் உள்ள கல்லூரியில் படித்து வந்த அப்பெண், கல்லூரியின் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு தனது தங்கையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அம்மாணவிக்கு, ஏற்கனவே அறிமுகமான தனியார் கல்லூரியை சேர்ந்த பிரித்வி என்ற மாணவன், இருவரையும் வழிமறித்தான். பின்னர் அந்த மாணவியை வீட்டில் கொண்டுவந்து விடுவதாக அவரது சகோதரியிடம் கூறிய அந்த மாணவன், தனிமையான இடத்திற்கு அழைத்து சென்றான்.

அங்கு அம்மாணவியிடம் அவன் தவறாக நடக்க முயன்றுள்ளான். மாணவி அதற்கு உடன்படவில்லை. பலாத்காரம் செய்ய அவன் முயன்ற போது, மாணவி அவனை, தான் கற்று வைத்திருந்த கராத்தே கலையை அவனிடம் காண்பித்தார். சகட்டு மேனிக்கு உதை வாங்கிய மாணவன் நிலைகுலைந்த சமயத்தில், அங்கிருந்த பெரிய கல்லை கொண்டு அவன் தலையை பலமாக தாக்கினார் அம்மாணவி. மாணவியை அவனும் முகத்தில் கடுமையாக தாக்கினான். அதில் மாணவியின் தாடை எலும்பு கடுமையாக பாதிக்கப்பட்டது. மாணவியின் கடுமையான தாக்குதலில் நிலைகுலைந்த மாணவன் தனது மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பியோடினான்.

பின்னர் வீடு திரும்பிய மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் தெரிவித்தார். உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் மாணவியை சேர்த்த பெற்றோர், காவல்துறையிலும் புகார் அளித்தனர். மாணவி அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், முகத்தில் அறுவை சிகிச்சை செய்த பின்னரே மாணவி தனது பழைய முகத்தை காணமுடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

காவல்துறையினர் சம்மந்தப்பட்ட மாணவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
...

[Continue reading...]

விபரீதத்தில் முடிந்த இனப்பெருக்க முயற்சி: வெறி கொண்ட ஆண் புலி கடித்துக் குதறியதில் ஜோடிப் புலி பரிதாப பலி tigress killed while mating in sandiego zoo

- 0 comments

Img விபரீதத்தில் முடிந்த இனப்பெருக்க முயற்சி: வெறி கொண்ட ஆண் புலி கடித்துக் குதறியதில் ஜோடிப் புலி பரிதாப பலி tigress killed while mating in sandiego zoo

நியூயார்க், டிச.24-

உலகின் அழிந்து வரும் அரிய வகை உயிரினங்களின் பட்டியலில் மலாய் புலிகளும் இடம் பெற்றுள்ளன. இவ்வகை புலிகள் 500 மட்டுமே உயிர் வாழ்வதாக கருதப்படுகிறது.

வட அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்திருக்கும் சன்டியாகோவில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் இவ்வகை புலிகள் பராமரித்து வளர்க்கப்பட்டு வருகின்றன. உரிய பருவத்தை எட்டியதும் இவ்வகை புலிகளை வனவிலங்கு காப்பக ஊழியர்கள் இனப்பெருக்கத்துக்கு தயார் செய்கின்றனர்.

அவ்வகையில், 2 வயதான கொன்னோர் என்ற ஆண் புலியின் கூண்டை டிகா டகுன் என்ற பெண் புலியின் கூண்டின் அருகே கடந்த மாதம் மாற்றி அமைத்தனர். கடந்த சில வாரங்களாக இளம் புலிகள் இரண்டும் தனித்தனி கூண்டில் இருந்தவாறே ஒன்றையொன்று முகர்ந்துப் பார்த்தும், முத்தமிட்டும் கொஞ்சி மகிழ்ந்தன.

இனப்பெருக்கத்துக்கு அவை தயாராகி விட்டதற்கான அறிகுறிகள் தோன்றவே, 2 புலிகளும் சற்று விசாலமான ஒரே கூண்டுக்குள் அடைக்கப்பட்டன.

பெண் புலியை நெருங்கி சற்று நேரம் விளையாடி மகிழ்ந்த ஆண் புலி, தனது இச்சையை தீர்த்துக் கொள்ள ஆவேசமாக டிகா டகுன் மேல் பாய்ந்தது. அதன் வீரியத்தை கண்டு பயந்துப் போன டிகா டகுன், சிணுங்கலுடன் ஒதுங்க ஆரம்பித்தது.

காம வெறி தலைக்கேறிய நிலையில் இருந்த கொன்னோருக்கு தன்னுடன் சேர்க்கைக்கு வராமல் முரண்டு பிடிக்கும் டிகா டகுனின் செயல் ஆத்திரத்தை வரவழைத்தது. சற்றும் எதிர்பாராத வகையில் டிகா டகுனின் மீது பாய்ந்த கொன்னோர், அதன் கழுத்தை வெறியுடன் கடித்துக் குதறி எடுத்தது.

இதை பார்த்து அதிர்ந்துப் போன வனவிலங்கு காப்பக ஊழியர்கள், கூண்டை திறந்து உள்ளே சென்று, டிகா டகுனை காப்பாற்ற முயன்றனர். அதற்குள், சுவாசக் குழாய்க்கு செல்லும் நரம்பு துண்டிக்கப்பட்ட நிலயில் டிகா டகுன் மூச்சுத் திணறி பரிதாபமாக பலியானது.

கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எல்பாசோ வனவிலங்கு காப்பகத்தில் நிகழ்ந்த இதேப் போன்ற சம்பவத்திலும் ஆண் புலியிடம் கடிபட்டு இவ்வகை பெண் மலாய் புலி பலியானது குறிப்பிடத்தக்கது.
...

[Continue reading...]

Monday, 23 December 2013

ஏதாவது செய்து தேவயானியின் பிரச்சினையை தீருங்கள்: அமெரிக்காவிடம் கெஞ்சும் இந்திய வெளியுறவு அதிகாரிகள் Please solve Devayani problem by doing something Indian officials entreat America

- 1 comments

Img ஏதாவது செய்து தேவயானியின் பிரச்சினையை தீருங்கள்: அமெரிக்காவிடம் கெஞ்சும் இந்திய வெளியுறவு அதிகாரிகள் Please solve Devayani problem by doing something Indian officials entreat America

புதுடெல்லி, டிச. 23–

அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயானி விசா மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவரை கடந்த 12–ந்தேதி அமெரிக்க போலீசார் கைது செய்தனர். பிறகு அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

தேவயானி கைது செய்யப்பட்ட போது அவர் கை விலங்கிடப்பட்டதாகவும், ஆடைகளை களைந்து சோதனை நடத்தியதாகவும் கூறப்பட்டது. இதனால் கொந்தளிப்புக்குள்ளான காங்கிரஸ் தலைவர்கள் அமெரிக்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர்.

ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்த அமெரிக்கா, தேவயானி மீதான வழக்கை தொடர்ந்து நடத்தப் போவதாக கூறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு தேவயானியை ஐ.நா.வுக்கான நிரந்தர தூதராக்கி அவரை தப்புவிக்க முயன்றது. ஆனால் அதற்கும் வெற்றி கிடைக்கவில்லை.

அமெரிக்கா இந்த விவகாரத்தில் வருத்தம் தெரிவித்ததைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் இறங்கி வரவில்லை. இதனால் மத்திய அரசு வெளியுறவுத்துறை அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது.

அவர்கள் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம், ஏதாவது செய்து தேவயானியை விடுவியுங்கள் என்று கெஞ்ச தொடங்கியுள்ளனர். வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித்தும் அமெரிக்கா ஏதாவது செய்ய வேண்டும் என்று வெளிப்படையாக கூறி உள்ளார்.

இதற்கிடையே இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர்களுக்கு வழங்கியுள்ள அடையாள அட்டைகளை திரும்ப தர வேண்டும் என்று மத்திய அரசு கூறி இருந்தது. அதற்கான கெடு இன்றுடன் முடிகிறது.

...

[Continue reading...]

Sunday, 22 December 2013

UN India Embassy work appointed devayani special offers receiving problem

- 0 comments

UN India Embassy work appointed devayani special offers receiving problem

ஐ.நா. இந்திய தூதரகத்தில் பணி அமர்த்தப்பட்டாலும் தேவயானிக்கு சிறப்பு சலுகைகள் கிடைப்பதில் சிக்கல்? UN India Embassy work appointed devayani special offers receiving problem

நியூயார்க், டிச.23-

ஐ.நா. இந்திய தூதரகத்தில் பணி அமர்த்தப்பட்டாலும், தேவயானிக்கு சிறப்பு சலுகைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில், நியூயார்க் இந்திய தூதரகத்தில் துணைத்தூதராக பணியாற்றிவந்த தேவயானி கோப்ரகடே, கடந்த 12-ந்தேதி விசா மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின்பேரில் கைது செய்யப்பட்டார். அவர் கைவிலங்கிடப்பட்டு, ஆடை அவிழ்ப்பு சோதனைக்கு ஆளாக்கப்பட்டது இந்தியாவில் பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தால் இந்தியா-அமெரிக்கா இடையே தூதரக அளவில் மோதல் உருவாகி உள்ளது.

'வியன்னா உடன்படிக்கை' யின்படி, தூதரகப்பணியில் உள்ள தேவயானிக்கு விலக்குரிமை உள்ளிட்ட சலுகைகளை தர முடியாது என அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து அவரை ஐ.நா. தூதரகத்தில் கவுன்சலராக (ஆலோசகராக) நியமித்து, இந்தியா கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது. இதன்மூலம் அவருக்கு விலக்குரிமை உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பு உருவானது.

இந்த நிலையில், தேவயானியின் பணி நியமனம் தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனுக்கு இந்தியா முறைப்படி கடிதம் எழுதி உள்ளது. இந்தக் கடிதத்தை இந்தியாவின் சார்பில் ஐ.நா.வுக்கான இந்திய தூதர் அசோக் முகர்ஜி எழுதி உள்ளார். அத்துடன், தேவயானி தொடர்பான ஆவணங்கள், பாஸ்போர்ட்டு விவரங்களையும் அவர் அனுப்பி வைத்தார்.

இது தொடர்பாக அவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளேன். அதில் எங்கள் தூதரகக்குழுவில் ஆலோசகராக தேவயானி கோப்ரகடே நியமனம் செய்யப்பட்டிருப்பது பற்றியும், அவருக்கு தூதரக அதிகாரிக்குரிய அனைத்து சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் எழுதி உள்ளேன். அவரது பெயர், எங்கள் தூதரகக்குழுவில் எந்த இடத்தில் இடம்பெறும் என்பதையும் குறிப்பிட்டுள்ளேன்.

நான் அனுப்பியுள்ள ஆவணங்களை ஐ.நா. சபை, அமெரிக்காவில் வெளியுறவுத் துறையின்கீழ் இயங்கி வருகிற வெளிநாட்டு தூதரகங்களுக்கான அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கும். அங்குதான் மரபுரிமைப்படி அனுமதி அளிக்கப்பட வேண்டும்.

ஐ.நா. துணைப்பொதுச்செயலாளர் ஜன் எலியாசனையும் நேரில் சந்தித்துப் பேசினேன். தேவயானி தொடர்பான பிரச்சினைகளை ஐ.நா. அறியும். எங்கள் தரப்பில் அனைத்து ஆவணங்களையும் அனுப்பியாகிவிட்டது. அந்த ஆவணங்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை பதில் அளிக்க வேண்டும். இனி இந்த விவகாரம் ஐ.நா.வுக்கும், அமெரிக்க வெளியுறவுத் துறைக்கும் இடையேதான் கையாளப்படும்.

தேவயானியைப் பொறுத்தமட்டில், அவர் ஆலோசகர் பதவியுடன் தூதரக அதிகாரியாக இருப்பார். அந்த வகையில் தூதரக அதிகாரிக்கான அடையாள அட்டையை அவருக்கு எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேவயானி ஐ.நா.வில் பணியில் சேர்ந்த பிறகுதான் அவருக்கு விலக்குரிமை உள்ளிட்ட சிறப்புச் சலுகைகள் வந்து சேரும், தேவயானிக்கு சிறப்புச் சலுகைகள் வழங்க வேண்டியது தொடர்பாக ஐ.நா. பங்களிப்பு ஏதும் கிடையாது, இதில் முடிவு எடுக்க வேண்டியது அமெரிக்காதான் என தகவல்கள் கூறுகின்றன.

வெளிநாட்டு தூதரகங்களின் அதிகாரிகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்குவது தொடர்பாக ஐ.நா.வுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே உடன்படிக்கை உள்ளது. தேவயானிக்கு புதிய பதவி காரணமாக கூடுதல் சிறப்புச்சலுகை வந்து சேர முடியும், ஆனால் கிரிமினல் வழக்கிலிருந்து விலக்கு கிடைக்குமா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.

தற்போது விசா மோசடி வழக்கில் சிக்கியுள்ள நிலையில், தேவயானிக்கு சிறப்புச்சலுகைகளை அமெரிக்கா வழங்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ஐ.நா.வில் பணியாற்றுவதற்கான அடையாள அட்டையையே அமெரிக்க வெளியுறவுத்துறை தான் வழங்க வேண்டும் என தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
...
UN India Embassy work appointed devayani special offers receiving problem

[Continue reading...]

இலங்கை மன்னார் பகுதியில் சவக்குழி கண்டுபிடிப்பு: நீதி விசாரணை இன்று தொடக்கம் Sri Lanka to investigate mass grave in former war zone

- 0 comments

Img இலங்கை மன்னார் பகுதியில் சவக்குழி கண்டுபிடிப்பு: நீதி விசாரணை இன்று தொடக்கம் Sri Lanka to investigate mass grave in former war zone

கொழும்பு, டிச. 22-

2009-ம் ஆண்டு நடந்த இறுதிகட்டப்போரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றது என்று ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது. இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையமும் வரும் மார்ச் மாதம் பாதுகாப்பு சபையில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.

உலக நாடுகளும் இலங்கையில் நடந்துள்ள போர் குற்றம் குறித்து நீதிவிசாரணை நடத்தவேண்டும் என்று நெருக்கடிகள் கொடுத்துவருகின்றன. இந்நிலையில், கடந்த வெள்ளியன்று இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் பகுதியில் தேசிய குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் சார்பாக குழாய்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது எலும்புக்கூடுகளுடன் 6 மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து வடக்குப்பகுதியில் மேலும் சவக்குழிகள் இருக்கலாம் என்று மனித உரிமை அமைப்புகள் எச்சரித்தன. நேற்று மேலும் 4 பேரின் மண்டை ஓடுகள் அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டன என்று கூறப்படுகிறது.  

இதையடுத்து இங்கு யாரேனும் சட்டவிரோதமாக கொன்று புதைக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து இன்று நீதி விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை அரசு கூறியுள்ளது. இலங்கையின் மத்தியிலுள்ள மடேலாவிலும் கடந்த ஆண்டு மிகப்பெரிய சவக்குழி கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஜே.வி.பி. கட்சியை சேர்ந்தவர்களை இலங்கை அரசு கொன்று புதைத்தது என்ற குற்றச்சாட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
...

[Continue reading...]

பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக பிரபல தமிழ் தொலைக்காட்சி ஆசிரியர் TV channel Editor arrested on molest harassment charges in Chennai

- 0 comments

TV channel Editor arrested on molest harassment charges in Chennai பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக பிரபல தமிழ் தொலைக்காட்சி ஆசிரியர் சென்னையில் கைது TV channel Editor arrested on molest harassment charges in Chennai

சென்னை, டிச.22-

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றிய பெண் ஊழியருக்கு
பாலியல் தொந்தரவு தந்ததாக அந்த ஊடகத்தின் ஆசிரியரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த தனியார் தொலைக்காட்சியின் ஆசிரியர் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக அதில் பணியாற்றிய ஒரு பெண் ஊழியர் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து, இன்று அதிகாலை 1 மணியளவில் சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் அந்த பெண் ஊழியர் அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக போலீசார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த கைது விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அந்த தமிழ் தொலைக்காட்சி நிர்வாகம், அந்த பெண் அளித்த பொய்யான புகாரின் அடிப்படையில் எங்கள் தொலைக்காட்சியின் ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

எங்கள் தொலைக்காட்சியில் செய்து வந்த வேலையில் இருந்து நிறுத்தப்பட்ட பின்னரே அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் நம்பகத்தன்மையைப் பற்றி ஆராயாமல் போலீசார் அவரை கைது செய்துள்ளனர் என கூறியுள்ளது.
...

[Continue reading...]

Saturday, 21 December 2013

பாராளுமன்ற தேர்தலில் முழு வீச்சில் பாடுபட பொகிறேன் நடிகை குஷ்பு பேச்சு Ensure the success of the parliamentary elections for the full range Actress Khushboo Talk

- 0 comments

Img பாராளுமன்ற தேர்தலில் முழு வீச்சில் பாடுபட்டால் வெற்றி உறுதி: நடிகை குஷ்பு பேச்சு Ensure the success of the parliamentary elections for the full range Actress Khushboo Talk

சேலம், டிச. 22–

தி.மு.க. பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் சேலம் தாதகாப்பட்டியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமை வகித்தார். குகை பகுதி செயலாளர் ச.சுப்பிரமணி வரவேற்றார். கூட்டத்தில் நடிகை குஷ்பு பேசியதாவது:–

ஏற்காடு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியினர் அதிகாரத்தை பயன்படுத்தி பட்டு வேட்டி, பட்டு சேலை, வெள்ளி குத்து விளக்கு, கூடவே பணத்தையும் கொடுத்து வெற்றியை பெற்றுள்ளனர். ஆனால் யாருடைய ஆதரவும் இன்றி சுமார் 64ஆயிரம் வாக்குகள் தி.மு.கவுக்கு கிடைத்தது என்றால் அது தான் உண்மையான வெற்றியாகும்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்ற மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். பாரதீய ஜனதா சார்பில் நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராகவும், காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தப் படலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.

இந்திய அரசியல் வரலாற்றில் வாஜ்பாய், வி.பி.சிங், குஜ்ரால் என அனைவரையும் பிரதமர் நாற்காலியில் அமர வைத்த பெருமை தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உண்டு. இந்திய அரசியலில் கோபாலபுரம் வீட்டில் கதவை தட்டாத நபர்களே இருக்க முடியாது என்று கூறலாம்.

இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாரதீய ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என்று கட்சியின் பொதுக்குழுவில் தி.மு.க.தலைவர் கருணாநிதி கூறி உள்ளார். இருப்பினும் தனித்து போட்டியிடக்கூடிய தைரியம் தி.மு.கவுக்கு உண்டு என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க. தலைவர் கருணாநிதி சுட்டிகாட்டுபவரே பிரதமராக முடியும்.

தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பாடு படக்கூடிய ஒரே தலைவர் நமது தலைவர் கலைஞர் தான். 90 வயதிலும் 16 வயது போல் அவருக்கு மூளை வேலை செய்வதை நம்மால் உணர முடிகிறது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.கவினர் முழுவீச்சில் பாடுபட்டால் வெற்றி உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் வக்கீல் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வீரபாண்டி ராஜா, மாநகர செயலாளர் எஸ்.டி.கலையமுதன் உள்பட பலர் பேசினர்.

...

[Continue reading...]

மாணவர்களைக் கடத்தி கட்டாய செக்ஸ் உறவு வீடியோ Students kidnapped forced relationship video threatened 8 people arrest

- 0 comments

Img மாணவர்களைக் கடத்தி கட்டாய செக்ஸ் உறவு: வீடியோ எடுத்து மிரட்டிய 8 பேர் கைது Students kidnapped forced relationship video threatened 8 people arrest

மங்களூர், டிச. 21-

கர்நாடக மாநிலம் மங்களூரில் மாணவர்களைக் கடத்தி செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட வைத்து வீடியோ எடுத்து மிரட்டிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது:-

22 வயது மருத்துவ மாணவர் தனது நண்பருடன் வியாழக்கிழமை இரவு ஒரு பார்ட்டியில் கலந்துகொண்டுவிட்டு திரும்பியிருக்கின்றனர். மங்களூரில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் நெடுஞ்சாலையில் வந்தபோது, அவர்களின் காரை ஒரு கும்பல் வழிமறித்துள்ளது. பின்னர் அவர்கள், மாணவர்களை ஒதுக்குப்புறமான ஒரு பகுதியில் உள்ள வீட்டுக்கு காரை ஓட்டும்படி மிரட்டியுள்ளனர்.

அந்த வீட்டிற்குச் சென்றதும், நண்பர்கள் இருவரையும் மிரட்டி செக்ஸ் உறவில் ஈடுபட வைத்துள்ளனர். மேலும் அதனை வீடியோ எடுத்த அந்த கும்பல், இன்டர்நெட்டில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் 20 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு போலீசார் கூறினர். 
...

[Continue reading...]

Friday, 20 December 2013

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது Petrol and diesel prices increase

- 0 comments

Img பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது Petrol and diesel prices increase

புதுடெல்லி, டிச.21-

டீலர்களுக்கு கமிஷன் தொகை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தது. பெட்ரோல் விலை, லிட்டருக்கு 49 காசும், டீசல் விலை லிட்டருக்கு 9 காசும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல், டீசல் விற்பனை டீலர்களின் கமிஷன் தொகையை மத்திய அரசு கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உயர்த்தியது.

அதன்படி ஒரு கிலோ லிட்டருக்கு 912 ரூபாயாக இருந்த கமிஷன், ரூ.1089 ஆக உயர்ந்தது. கமிஷன் உயர்த்தப்பட்டு ஒரு ஆண்டு கடந்த நிலையில், மீண்டும் அவர்களின் கமிஷனை உயர்த்த வேண்டும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்து இருந்தன.

ஆனால் டெல்லி, சத்தீஷ்கார் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் டீலர்களின் கமிஷனை உயர்த்த முடியவில்லை. தற்போது தேர்தல் முடிவுற்றதை தொடர்ந்து டீலர்களின் கமிஷனை உயர்த்த மத்திய அரசு நேற்று முடிவு செய்தது.

அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசும், டீசல் விலை லிட்டருக்கு 10 காசும் (இதர வரிகள் சேர்க்கப்படவில்லை) உயர்த்தப்பட்டன. பெட்ரோல் விலையை பொறுத்தவரை, வழக்கமாக மாதந்தோறும் இரு முறை (1 மற்றும் 16-ந்தேதி) சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் அடிப்படையில் மாற்றி அமைக்க உரிமை வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி கடந்த நவம்பர் 1-ந்தேதி லிட்டருக்கு ரூ.1.15 குறைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 21 காசு கமிஷன் உயர்வுடன் சர்வதேச விலை நிலவரத்தின் அடிப்படையில் லிட்டருக்கு 28 காசும் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மொத்தம் 49 காசு உயர்த்தப்பட்டு உள்ளது.

அதன்படி, சென்னையில் ரூ.74.22 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, ரூ.74.71 ஆக உயர்ந்தது. டெல்லியில் ரூ.71.02 ஆக இருந்து வந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71.51 ஆக உயர்ந்தது. கொல்கத்தாவில், 53 காசுகளும், மும்பையில் 52 காசுகளும் விலை உயர்ந்துள்ளது.

டீலர் கமிஷன் தொகை உயர்வான லிட்டருக்கு 9 காசு மட்டுமே டீசல் விலையில் உயர்த்தப்பட்டு உள்ளது. புதிய விலைப்படி சென்னையில், ரூ.57.23 ஆக இருந்த ஒரு லிட்டர் டீசல் விலை, 57.32 ஆக உயர்ந்தது.

டெல்லியில், ரூ.53.67-ல் இருந்து ரூ.53.78 ஆக உயர்த்தப்பட்டது.
கொல்கத்தாவில், 10 காசுகளும், மும்பையில் 10 காசுகளும் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டது.
...

[Continue reading...]

காங்கிரஸ் இல்லாத இந்தியா - நரேந்திர மோடி பேச்சு Congress absence india to create must Narendra Modi speech

- 0 comments

Img காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்: நரேந்திர மோடி பேச்சு Congress absence india to create must Narendra Modi speech

வாரணாசி, டிச.21-

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பா.ஜனதா சார்பில் நேற்று 'விஜய் சங்நாத்' பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியதாவது:-

உத்தரபிரதேசத்தில் உங்கள் மூதாதையர்கள் ராம ராஜ்ஜியத்தை நிறுவினர். ஆனால் தற்போது அதை எங்குமே பார்க்க முடியவில்லை. இதனால் மக்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே மாநிலத்தில் மீண்டும் ராம ராஜ்ஜியத்தை கொண்டுவர வேண்டியது அவசியம்.

இது நீங்கள் நினைத்தால் நிச்சயமாக சாத்தியமாகும். இதற்காக நீங்கள் சரியான அரசை தேர்ந்தெடுத்தால் அதை (ராம ராஜ்ஜியம்) நீங்கள் அடைய முடியும். அதை செயல்படுத்த உங்களால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

சிறந்த களப்பணியாற்றும் அரசை தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் இது. வெறும் வாக்குறுதிகளை கேட்டு மக்களுக்கு போரடித்து விட்டது. மக்களுக்கு நாங்கள் வெற்று வாக்குறுதிகளை அளிக்கவில்லை. மாறாக பல்வேறு திட்டங்களைச் சொல்லியே அவர்களை சந்திக்கிறோம்.

உத்தரபிரதேசத்தில் கங்கை நதி தூய்மைப்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி வெற்று வாக்குறுதிகளை அளித்தது. இத்திட்டத்துக்காக பல்வேறு குழுக்களையும் அமைத்தது. ஆனால் இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்காக ராஜீவ்காந்தி ஆட்சிக்காலத்தில் இருந்து எத்தனை ஆயிரம் கோடிகள் செலவிடப்பட்டது? என்பதை நாட்டு மக்களுக்கு பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும். குஜராத்தில் பாயும் சபர்மதி நதியை பா.ஜனதா அரசு தூய்மைப்படுத்தியது. அதைப்போல கங்கை நதியை ஏன் தூய்மைப்படுத்த முடியவில்லை?

நெருங்கி வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சி மீண்டும் ஏழைகள் கோஷத்தை கையில் எடுத்துள்ளது. ஆனால் உண்மையிலேயே அக்கட்சிக்கு ஏழைகள் மீது அக்கறை எதுவும் இல்லை. நாட்டில் வறுமைக்கு காரணமே ஒரு குடும்பம் தான். எனவே காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்.

டீ விற்பவர் நாட்டின் பிரதமராக முடியாது என சமாஜ்வாடி கட்சியினர் கூறியிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. மக்களின் ஆசீர்வாதம் இருந்தால் டீ விற்பவர் மட்டுமல்ல நெசவாளி, விவசாயி ஏன் செருப்பு தைப்பவர் கூட பிரதமராக முடியும்.

இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.
...

[Continue reading...]

சண்டிகரில் பள்ளி மாணவியை கற்பழித்த போலீஸ்காரர்கள் 5 பேர் கைது 5 policemen arrested for alleged gang molestation of school girl in Chandigarh

- 0 comments

policemen arrested for alleged gang molestation of school girl in Chandigarh சண்டிகரில் பள்ளி மாணவியை கற்பழித்த போலீஸ்காரர்கள் 5 பேர் கைது 5 policemen arrested for alleged gang molestation of school girl in Chandigarh

சண்டிகர், டிச. 20-

சண்டிகர் நகரில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த சில தினங்களுக்கு முன் 17வயது பள்ளி மாணவி ஒருவர் தனது குடும்ப பிரச்சனை பற்றி புகார் அளித்துள்ளார். அவர் பேசிய செல்போன் நம்பரை வைத்து அவரது விலாசத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர் அந்த மாணவியை பின்தொடர்ந்து சென்று போலீஸ் வேனில் கடத்திச் சென்று துப்பாக்கி முனையில் வேனுக்குள் வைத்தே கற்பழித்துள்ளனர். இவ்வாறு பல வாரங்கள் தொடர்ந்து சித்ரவதை அனுபவித்த அந்த மாணவி தற்கொலைக்கு முயன்றபோதுதான், நடந்த சம்பவம் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவியிடம் நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கட்டுப்பாட்டு அறை போலீஸ்காரர்கள் 4 பேர், குற்றப்பிரிவு போலீஸ்காரர் ஒருவர் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்களை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். முன்னதாக 5 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 5 பேரையும் மருத்துவ சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பா.ஜனதா, காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனைக்கு வெளியில் போராட்டம் நடத்தினர். பின்னர் திடீரென அவர்கள் போலீஸ்காரர்களை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

...

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger