Wednesday 10 July 2013

சிங்கம் 2 வெற்றி எனக்கு தேவைப்பட்ட வெற்றி – சூர்யா

- 0 comments
‘சிங்கம் 2’ படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை படக் குழுவினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
அப்போது சூர்யா பேசியதாவது,
“எனக்கு   இப்போது ஒரு வெற்றி தேவைப்பட்டது.  எனவே இந்த படத்தை நான் பெரிதும் எதிர்பார்த்திருந்தேன்.  நான் நினைத்ததை விடவும் பெரிய வெற்றியை தந்திருக்கிறார்கள். நன்றி.
‘சிங்கம் 2’ என்று தொடங்கியதுமே பலவாறாக பேசினார்கள். சிங்கத்தில் எல்லாம் வந்துவிட்டது. இனிமேல் என்ன இருக்கிறது?  ஒரு படம் வெற்றி பெற்றால் போதாதா இன்னொன்று எதற்கு? சிங்கம் 2 க்கு என்ன கதை இருக்க போகிறது ஏதோ ஒப்பேற்றப் போகிறார்கள் என்றெல்லாம் பேசினார்கள்.
ஒவ்வொரு நாள் படப்பிடிப்புக்கு போகும் போதும் படப்பிடிப்பின் போதும் எனக்கு பயமாக இருக்கும். நம்மை நம்பி ஆயிரம் பேர் திரையரங்கில் வந்து உட்கார்கிரார்கள். அவர்களை படம் திருப்தி செய்யுமா?
[Continue reading...]

வாரணாசியில் நரேந்திர மோடி போட்டி

- 0 comments
குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியை,
இந்துக்களின் புனிதத்தலமான உத்தரப்பிரதேச
வாரணாசியில் நிறுத்துவதற்கு பாரதீய
ஜனதா ஆலோசித்து வருகிறது. இந்நிலையில்,
ராம்பூர் ஜோஹர் பல்கலைக்கழக நிகழ்ச்சியில்
உரையாற்றிய சமாஜ்வாடி கட்சித்தலைவர்
முலாயம் சிங் மோடி பற்றி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
காவிக்கட்சியின் விளம்பரப்பிரியர் நரேந்திர
மோடி உத்தரப்பிரதேசத்தில்
போட்டியிட்டாலும் அவரால் இங்கு பாரதீய
ஜனதா அரசியலில்
அதிர்ஷ்டத்தை கொண்டு வரமுடியாது.
உத்தரப்பிரதேச மக்களிடையே வித்தியாசமான
மனநிலையும், கலச்சாரமும் உள்ளது.
குஜராத் அரசியலை போன்று உத்தரப்பிரதேச
அரசியலை புரிந்துகொள்வது கடினம்.
[Continue reading...]

இளவரசனுடன் கடைசியாக போனில் பேசிய ஆந்திர வாலிபர்

- 0 comments
தர்மபுரியில் காதல் கலப்பு திருமணம் செய்து கொண்ட இளவரசன் கடந்த 4-ந் தேதி ரெயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். போலீசார் அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்றனர். ஆனால் அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொலை செய்ததாக குற்றம் சாட்டினர். மேலும் அவர்கள் கூறும் போது, இளவரசன் ஆந்திர மாநிலம் சித்தூருக்கு செல்வதாக கூறித்தான் காலையில் ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ. 9 ஆயிரம் பணம் எடுத்தார். அதில் ரூ. 7 ஆயிரத்தை தனது தாயிடம் கொடுத்து விட்டு மீதி பணத்தை ஊருக்கு செல்ல வைத்துக் கொண்டார்.

அதோடு இல்லாமல் தன்னுடன் சித்தூர் வரை வரும்படி இளவரசன் தனது உறவினர் ஒருவரை அழைத்ததாகவும் அவர் வரமறுத்த நிலையில் இறந்து விட்டதும் தெரியவந்தது. எனவே தற்கொலை செய்து கொள்ள நினைத்து இருந்தால் அவர் உறவினரை தன்னுடன் எப்படி அழைத்து இருப்பார்?  எனவே இளவரசன் கொலை தான் செய்யப்பட்டார் என்று குற்றம் சாட்டினர்.
[Continue reading...]

கெளதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம் சிப்பாய்

- 1 comments
கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்திற்கு 'சிப்பாய்' என பெயரிடப்பட்டுள்ளது.

கடல் திரைப்படத்தின் .

மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் கௌதம் கார்த்திக்.

தான் அறிமுகமான முதல் படமே தோல்வியை சந்தித்தாலும் கௌதமிற்கு அடுத்தடுத்து இரண்டு புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதில் ஒன்றுதான் சிலம்பாட்டம் இயக்குனர் சரவணனின் படம்.

இந்தப் படத்தில் கௌதமிற்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.
சரவணன்-கௌதம் இணையும் இந்தப் படத்திற்கு 'சிப்பாய்'

என பெயரிட்டுள்ளனர். விரைவில் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை எதிர்பார்க்கலாம்.
[Continue reading...]

திவ்யா மற்றும் அவரது தாயாருக்கு கவுன்சிலிங் - ஐகோர்ட்டு உத்தரவு

- 0 comments
தர்மபுரியில் காதல் கலப்பு திருமணம் செய்த இளவரசன் மரணத்தையடுத்து திவ்யா மற்றும் அவரது தாயாருக்கு கவுன்சிலிங் வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  உத்தரவு
திவ்யா மற்றும் அவரது தாயார், சகோதரருக்கு டாக்டர். ரவிசங்கர் தலைமையில் மருத்துவக் குழு, 10 அமர்வுகளில் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் ஆலோசனை வழங்க வேண்டும். இது குறித்து அறிக்கையை 24–ந்தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.
இளவரசனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதி கேட்டு அவரது நெருங்கிய உறவினர்களும், திவ்யா தரப்பிலும் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கலாம். அங்குள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அந்த ஊர்வலத்தில் எத்தனை பேர் கலந்து கொள்ளவேண்டும்? என்பதை குறிப்பிட்டு தகுந்த முடிவுகளை கலெக்டர் எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு கூறியிருந்தது.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger