Sunday 27 November 2011

தில்லானா மோகனாம்பாள் ஷூட்டிங் ஸ்போட் காணக் கிடைக்காத வீடியோ

- 0 comments
 
 

1968-ல் சென்னைக்கு வந்த வெளிநாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் தமிழ்சினிமாவை பற்றிய ஒரு டாகுமென்ட்டரி எடுத்திருக்கிறார். அதைதான் நமக்கு அனுப்பியிருந்தார் செல்வன். தில்லானா மோகனாம்பாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த விஷுவல் எவ்வளவு பெரிய கலைஞர்களையெல்லாம் நாம் இழந்திருக்கிறோம் என்ற ஏக்கத்தைதான் ஏற்படுத்தியது.


இன்று உருப்படியாக படம் எடுக்கிறார்களோ இல்லையோ? 'மேக்கிங் ஆஃப் ஸோ அண் ஸோ' என்று தனியாக ஒரு படத்தை எடுத்து தமது ஹோம் தியேட்டரிலேயே 100 நாட்கள் ஓடவிட்டு சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் மானிட்டரும் இல்லை. மண்ணாங்கட்டியும் இல்லை. எவ்வளவு அழகாக அந்த கலைஞர்களுக்கு சொல்லித் தருகிறார் பாருங்கள் தயாரிப்பாளரும் டைரக்டருமான ஏ.பி.நாகராஜன்.

இந்த டாகுமென்ட்டரியை எடுத்தவர் மிகவும் குசும்பான ஆள் போலிருக்கிறது. சிவாஜி பத்மினி உள்ளிட்ட நமது கலைஞர்களின் மேக்கப் சென்சை பற்றியெல்லாம் செமத்தியாக கிண்டலடித்திருக்கிறார். யூ ட்யூப்பில் படம் ஓடும் இடத்திற்கு கீழ் புறத்திலேயே cc என்றொரு இடம் இருக்கிறது. அதை க்ளிக் செய்தால் ஆங்கிலத்தில் சப் டைட்டில் வருகிறது. படித்து இன்புறுங்கள் வாசகர்களே...
thillana mokanaampal video , old tamil movie shooting spot video , movies shooting spot videos , youtube video

[Continue reading...]

மயக்கம் என்ன திரை விமர்சனம்

- 0 comments
 
 
படம் : மயக்கம் என்ன

நடிப்பு : பதனுஷ் , ரிச்சா கங்கோபதி, மற்றும்
பலர்

இசை : ஜி .வி பிரகாஸ்

இயக்கம் : செல்வராகவன்

தயாரிப்பு : ஜெமினி பிலிம் சர்கிட்


"காதல் கொண்டேன்", "புதுப்பேட்டை" ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து தனுஷ்வை வைத்து செல்வராகவன் இயக்கும் 3வது படம் "மயக்கம் என்ன". தனுஷ்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ரிச்சா தமிழில் அறிமுகமாகிறார். அடுத்த தலைமுறையினர் பற்றியும், அவர்களின் பிரச்சனையை மையமாக வைத்து உருவாகும் "மயக்கம் என்ன", முழுக்க முழுக்க இளைய தலைமுறையினரை மையப்படுத்தி இருக்கும். படத்தின் கதை மொத்தம், தனுஷ், ரிச்சா இருவரை மையம் கொண்டே எடுக்கப்பட்டுள்ளது.

ஏ.யூ.எம். புரொடக்சன்ஸ் தயாரிக்க, கதை, திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் செல்வராகவன். கூடவே படத்தில் 2பாடல்களையும் எழுதியுள்ளார். செல்வராகவனுடன், தனுஷூம் 2 பாடல்கள் எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோலாபாஸ்கர் படத்தொகுப்பு வேலையை ‌கவனித்துள்ளார்.

மேற்கத்திய இசையையும், கிராமிய இசையையும் கலந்துகட்டி ஒரு காக்டெயிலாக படைத்திருக்கிறார் ஜிவி. நரேஷின் உற்சாகமான குரலுடன் பயணிக்கும் பாடலின் இடையே ஒரே ஒரு வரிக்காக வழி மரிக்கிறது ஒரு பெண்குரல், அந்த இடம் அருமை. பாடியவர் யாரென்று தெரியவில்லை. (சைந்தவி...?) ஆயிரத்தில் ஒருவன் மாலை நேரம் பாடலைப் போல ஆகிவிடக்கூடாது.
mayakkam enna movie review

தனுஷ் நல்ல நடிப்பு தான்..அண்ணன் படம் என்பதால் அடக்கியே வாசிச்சிருக்காரு..

ஹீரோயின் ரிச்சா முதல்ல பார்க்கும்போது சாதாரணமா தெரிஞ்சது..போகப்போக 'நல்ல ஃபிகரா' தெரிய ஆரம்பிச்சுடுச்சு..நல்லா முகத்துல எக்ஸ்பிரசன்ஸ் காட்டுது..அழகான கண்கள்..அகலமான முதுகுன்னு நல்லவொரு அறிமுகம்.


ஜி.வி.பிரகாஷ் அருமையா டியூன் போட்டிருக்கார்..பிண்ணனி இசையும் நல்லா இருந்துச்சு..குறிப்பா 'வெண்ணிலவே' பாட்டுக்கு குடிச்சுட்டு மாக்கான் - ரிச்சா - தனுஷ் ஆடி முடிக்கவும் வந்த பிண்ணனி இசை.

அடுத்து ராம்ஜியின் ஒளிப்பதிவு..படமே ஃபோட்டோகிராஃப்ர் பத்தின படம் என்பதால் கேரளா-கர்நாடகான்னு அழகான லொகேசனா தேடி எடுத்திருக்காங்க.

'இது அடுத்த தலைமுறைக்கான படம்'னு செல்வராகவன் சொன்னாரு..அப்பவே உஷார் ஆகியிருக்கணும்..அம்பது வருசம் கழிச்சு பார்க்கவேண்டிய படத்தை அவசரப்பட்டு, இப்பவே பார்த்துட்டேன்..

கதை - அட அத தாம்பா என்னனு நானும் யோசிச்சிட்டு இருக்கேன்

மயக்கம் என்ன - (மப்பு ஏத்தாமலே )
[Continue reading...]

பிரபாகரன் பிறந்தநாள்... உலகெங்கும் கொண்டாட்டம்!

- 0 comments
 
 
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 57வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

நசுக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்க, இலங்கையில் 30 ஆண்டு காலம் தனி ஈழம் கேட்டுப் போராடியது பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு.


கடந்த 2009ம் ஆண்டு உலக நாடுகளின் துணையுடன் பிரபாகரனின் படைகளை வென்றது இலங்கை ராணுவம். தங்கள் ஆயுதப் போராட்டத்துக்கு உலகம் எதிர்ப்பு காட்டுவதைப் புரிந்துகொண்ட புலிகள் அமைப்பு, ஆயுதங்களை மவுனிப்பதாகக் கூறிவிட்டு, அரசியல் ரீதியான போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.

புலிகளின் வலையமைப்பு இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாக இலங்கை புலம்பிக் கொண்டுள்ளது. அதே நேரம் 'போர்க்குற்றவாளி' மகிந்த ராஜபக்சேவும் அவரது தம்பிகளும் எந்த நாட்டுக்குள்ளும் கால் வைக்க முடியாத அளவுக்கு தமிழர் எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளது.

முள்ளி வாய்க்கால் போரில் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக ராணுவம் அறிவித்தாலும், அவர் இன்னும் இருப்பதாக இன்னொரு தரப்பு கூறுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கமும் இதுவரை அவரது இறப்பை உறுதிப்படுத்தவில்லை. ஆண்டுதோறும் வெளியாகும் மாவீரர் தின அறிக்கையில், தேசியத் தலைவர் வழிகாட்டுதலில் போராட்டம் தொடரும் என்றே கூறி வருகின்றனர்.

இந்த சூழலில் பிரபாகரனின் 57வது பிறந்த தினம் இன்று வந்துள்ளது. பொதுவாக பிரபாகரன் தனது பிறந்த நாளுக்கு அதிக முக்கியத்துவம் தராமல், தன்னுடன் நின்று இலங்கை ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டு மடிந்த போராளிகளின் நினைவு நாளான மாவீரர் தினத்துக்குதான் (நவம்பர் 27) அதிக முக்கியத்துவம் தருவார்.

நாளை நடக்கும் மாவீரர் தினத்துக்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டுள்ளன. இன்று பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு உலகமெங்கும் வாழும் தமிழின உணர்வாளர்கள், அவர்களது இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

தமிழ் அமைப்புகள் அனைத்தும் அவர்களது அலுவலகங்களில் பிரபாகரனின் பிறந்த நாளுக்கு புலிக்கொடி ஏற்றியும் கேக் வெட்டியும் கொண்டாடி வருகின்றன.

நாளை நடக்கும் மாவீரர் தினத்தையொட்டி சேலத்தில் கொளத்தூர் மணி தலைமையில் பல்வேறு கட்சியினர் மாவீரர் தின எழுச்சியில் பங்கேற்கிறார்கள்.

நாமக்கல்லில் சீமான் தலைமையில் மாவீரர் எழுச்சி தினக் கூட்டம் நடக்கிறது. இந்த எழுச்சி கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. ஆனால், தடையை மீறி இக்கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
[Continue reading...]

ரீசார்ஜ் மோசடி: அனில் அம்பானி சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு!

- 0 comments
 
 
 
ரீசார்ஜ் மோசடி வழக்கில் ரிலையன்ஸ் இன்போகாம் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனில் அம்பானியின் சொத்துகளை பறிமுதல் செய்ய ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தான்பாத் மாஜிஸ்திரேட் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
 
பிரதாப் குமார் வர்மா என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
அவருடைய மனைவி, ரிலையன்ஸ் செல்போன் சிம்கார்டு வாங்கி இருந்தார். அதை 'ஈசி ரீசார்ஜ்' செய்தபோது, அந்த குறிப்பிட்ட திட்டத்துக்கென அறிவிக்கப்பட்ட சலுகைகள் கிடைக்கவில்லை.
 
இதனால், ரிலையன்ஸ் நிறுவனம், தனது வாக்குறுதியை காப்பாற்றவில்லை என்று கூறி, கடந்த 2009-ம் ஆண்டு பிரதாப் குமார் வர்மா மோசடி வழக்கு தொடர்ந்தார்.
 
இவ்வழக்கில், கடந்த மே 21-ந் தேதி, அனில் அம்பானிக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், அவரது சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு மாஜிஸ்திரேட் பி.கே.பாண்டே நேற்று உத்தரவிட்டார்.
 
இதைத் தொடர்ந்து, இந்த உத்தரவுக்கு தடை கோரி வழக்குத் தொடர தயாராகி வருகிறார் அனில் அம்பானி.



[Continue reading...]

கோச்சடையான் தொடங்க ரஜினியின் உடல்நலம் காரணமல்ல!! - சௌந்தர்யா

- 0 comments
 
 
ராணாவை நிறுத்திவிட்டு கோச்சடையானை ஆரம்பிக்க, ரஜினியின் உடல்நிலை காரணமல்ல. அவர் நலமுடன் இருக்கிறார். இந்தப் படத்திலும் முழுமையாக அவர்தான் நடிக்கப் போகிறார், என சௌந்தர்யா ரஜினி விளக்கம் அளித்துள்ளார்.
 
கோச்சடையான் என்ற புதிய படத்தை ரஜினி அறிவித்ததிலிருந்து அது தொடர்பாக பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
 
இதற்கு பதிலளிக்கும் வகையில் சௌந்தர்யா கூறுகையில், "தென்கிழக்கு ஆசியாவில் மோஷன் கேப்சரிங் என்ற தொழில்நுட்பத்தில் ஒரு நடிகருக்கு படம் தயாராவது அப்பாவுக்குதான் (ரஜினி). கோச்சடையான் என்பது சிவபெருமானின் பெயர். இந்தப் படம் சுல்தான் அல்ல. இது முற்றிலும் புதிய படம்.
 
அதேநேரம் ராணா படத்தை நிறுத்தவில்லை. தள்ளி வைத்திருக்கிறோம். நிச்சயம் ஆகஸ்ட் 2012-ல் தொடங்கிவிடும்.
 
கோச்சடையான் வெறும் அனிமேஷன் படம் அல்ல. இந்தப் படத்தில் முழுமையாக அப்பா நடிக்கிறார். அவரது காட்சிகள் ஒரு ஸ்டுடியோவுக்குள் படமாக்கப்பட்டு, மோஷன் கேப்சரிங் முறையில் மாற்றப்படும். உடல்ரீதியாக அவர் மிகவும் ஃபிட்டாக இருக்கிறார். கோச்சடையான் தொடங்க அவர் உடல்நலம் காரணமல்ல. இந்தப் படத்தில் நடிக்க அப்பாவே விரும்பி, ஆரம்பிக்கச் சொன்னார்.
 
பிற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும்," என்றார்.



[Continue reading...]

நிர்வாணமாக நடிக்க தயார்- லட்சுமி ராய்!!

- 0 comments
 
 
நடிகர் லாரன்ஸூடன் காஞ்சனா படத்திலும் அஜித்துடன் மங்காத்தா படத்திலும் நடித்த கதாநாயகி லட்சுமி ராய், படத்திற்கு தேவைப்பட்டால் நிர்வாணமாககூட நடிக்க தயார் என கூறியுள்ளார். இச்செய்தி மற்ற கதாநாயகிகள் மத்தியில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் சேலையுடன் என்ட்டர் ஆகும் கதாநாயகிகள், ஓரிரு படங்கள் வெற்றி பெற்றவுடன் கவர்ச்சியாகவும், நிர்வாணமாகவும் நடிக்க தயார் என்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது நிர்வாணமாக நடிக்க என்ட்டர் ஆகி இருப்பவர் கவர்ச்சி கன்னி லட்சுமி ராய். இவருக்கு ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் படத்தில் நடிக்கவேண்டும் என்பது நீண்ட நாளைய கனவாம். ஆங்கிலப் படங்கள் என்றால் நிர்வாண காட்சிகளில் நடிக்க வேண்டுமே என்றால், தான் அதற்கும் தயார் என தயங்காமல் கூறுகிறார் இந்த கவர்ச்சி கன்னி லட்சுமி ராய்.



[Continue reading...]

இணையதளத்தில் ஆபாச போட்டோ, வீடியோ வெளியிட்டால் 5 ஆண்டு சிறை

- 0 comments
 
 
 
இணைய தளங்கள் மூலம் ஆபாச படம் வீடியோக்களை வெளியிட்டால் அவர்கள் சிறையில் 5 ஆண்டுகள் கம்பி எண்ண வேண்டியது தான் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். வெளியூர், மாவட்டம், மாநிலம், நாடு, கண்டம் விட்டு கண்டம் என ஒற்றன், புறா மூலம் தகவல் பரிமாறிய காலம் மாறி விட்டது. தொழில் நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தை எட்டி விட்டது. கடிதம், செல்போன் என தகவல் பரிமாறிய காலம் மாறி தற்போது இணைய தளத்தில் பேஸ்புக், ஆர்குட், டுவிட்டர் போன்ற சமுதாய இணைய தளங்கள் மூலம் தகவல்கள் வெளியிடப் பட்டு வருகின்றன.
 
வாழ்த்து, பாராட்டு, விமர்சனம் என அனைத்தும் சமுதாய இணைய தளங்கள் மூலமே பெரும்பாலும் நடக்கிறது. பிரபல இந்தி நடிகர் அபிஷேக்பச்சன் தனது மகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று இணைய தளம் மூலம் கோரிக்கை விடுக்கிறார். இது ஒருபுறம் இருக்க நடிகர், நடிகைகள் பெயரில் போலி இணைய தளங்களும் வலம் வருகின்றன. அதில், மார்பிங் மூலம் ஆபாச படம் இணைக்கப்படுகிறது. தற்போது, இணைய தளங் கள் மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் பலரும் போலியான தகவல் களை இணைய தளத்தில் பதிவு செய்து வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது.
 
இதன் மூலம் ஆபாச படம், காட்சி களை பகிர்ந்து கொள்ளும் சம்பவங்களும் நடக்கிறது. சிலர் பெயர், ஊர், முகவரி, புகைப்படம் உள்ளிட்டவைகளில் தங்களது இணைய தள முகவரியில் உண்மைக்கு புறம் பான தகவல்களை பதிவு செய்கின்றனர். அதனை நூற்றுக்கும் மேற்பட்டவர் கள் பார்த்து தொடர்பு கொள்கின்றனர். எனவே, இணைய தளம் மூலம் ஏமாறாமல் இளைஞர்களும், பெண் களும் தங்களை காத்துக் கொள்வது நல்லது.
 
இதுகுறித்து, சைபர் கிரைம் போலீஸ் உயர் அதி காரி ஒருவர் கூறுகையில், ''இணைய தளம் மூலம் தகவல் பறிமாறிக்கொள்வது அதிகரித்து விட்டது. இது வளர்ச்சியை காட்டுகிறது. இருப்பினும் சிலர் பொய்யான தகவல்களை பதிவு செய்து பிறரை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். இது சட்டப்படி குற்றம். ஆபாச படங்கள், காட்சி களை பறிமாறிக் கொள்வது வெளிநாடுகளில் சட்ட பூர்வமாக அனுமதிக்கப் பட்டுள்ளது. ஆனால், இங்கு இதுபோன்ற செய லில் ஈடுபட்டால் முதல் முறை 5 ஆண்டுகள், தொ டர்ந்து செய்து வந்தால் 7 ஆண்டுகள் சிறை தண் டனை உண்டு'' என்றார்.
 

 


[Continue reading...]

சபரிமலையில் பரபரப்பு-ஆண் வேடத்தில் 18ம் படி ஏற முயன்ற இளம்பெண்!

- 0 comments
 
 
சபரிமலையில் ஆண் வேடம் அணிந்து நேற்று காலை 18ம் படி ஏற முயன்ற ஒரு இளம்பெண் பிடிபட்டார்.
 
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்களை கண்காணிக்க பம்பையில் ஏராளமான பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் நேற்று காலை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் இருந்து 40 பேர் அடங்கிய ஒரு பக்தர்கள் குழு சபரிமலைக்கு வந்தது. இந்த குழுவில் சிறுவர், சிறுமியர் மற்றும் வயதான பெண்களும் இருந்தனர். இவர்களுடன் சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணும் இருந்துள்ளார். அவர் ஆண் போல கருப்பு வேஷ்டி, சட்டை அணிந்து இருந்தார்.
 
கூட்டமாக சென்றதால் இவரை போலீசார் கவனிக்கவில்லை. இந்த குழுவினர் சரங்குத்தி பகுதியை தாண்டி சன்னிதானத்தை அடைந்தனர். பின்னர் 18ம் படி அருகே தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்து போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரை பிடித்து விசாரித்தனர்.
 
இதில் அவரது பெயர் தேவி என்பதும் தனது கணவர் நாயுடுவுடன் சபரி்மலைக்கு வந்ததாகவும் தெரிவித்தார். அவரை உடனடியாக போலீசார் பம்பைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சபரிமலையில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



[Continue reading...]

இன்று தமிழீழ தேச���ய மாவீரர் நாள்!: ��ி. ருத்ரகுமாரன்

- 0 comments


இன்று தமிழீழ தேசிய மாவீரர் நாள்! தமிழீழ விடுதலை என்ற புனித இலட்சியத்தினை தமது இதயக்கூட்டில் சுமந்தவாறு நமது தேசமெங்கும் களமாடித் தமது குருதியால் தமிழீழத் தேசத்தின் எல்லைகளை வரைந்த நமது தேசத்தின் புதல்வர்களின் நினைவுநாள்!

விடுதலைப்போராட்டம் என்பது நெருப்பாற்றைக் கடப்பது போன்றது என்ற நமது தேசியத்தலைவரின் வார்த்தைகளுக்கு இணங்க தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம்; சந்தித்;த பல நெருப்பாறுகளை தமது அளப்பரிய வீரத்தாலும் ஈகத்தாலும் தாண்டி முன்னகர்ந்த அற்புதமான மனிதர்களை நாம் வணங்கும் நன்நாள்.

மாவீரர்கள் நமது தேசத்தின் இருளகற்ற ஓயாது ஒளிர்ந்த ஒளிவிளக்குகள்.

தமது அற்புதமான வாழ்வினூடாகவும் வீரச்சாவினூடாகவும் இவர்கள் தமிழீழ தேசத்தின் சுதந்திர வேட்கையினை உணர்த்தி நின்றார்கள். உலகப்பந்தில் தமிழீழ தேசத்தின் புள்ளியினைக் கோடிட்டுக் காட்டினார்கள்.

சின்னஞ் சிறிய தமிழீழத் தேசம் தனது விடுதலைக்காக, கௌரவமான, பாதுகாப்பான, சமத்துவமான வாழ்வுக்காக எத்தகயை பெரும் விலைகளையும் கொடுக்கத் தயாராக இருந்தது என்பதனை நமது மாவீரர்கள் உலக வரலாற்றுப் புத்தகத்தில் பதிவு செய்து நின்றார்கள்.

மாவீரர்களுக்குரிய இந் நாள் நமது தேசத்தின் வீர வரலாற்றின் நினைவுநாள். நமது தேசத்தின் அதி உயர்ந்த பெருமைக்குரிய நாள்.

மாவீரர் ஈகத்தினை கனத்த நெஞ்சங்களுடன் நினைவுகூர்ந்து அவர்கள் உள்ளுணர்வுகளை நமக்குள் நாமே ஆழமாக உள்வாங்கிக் கொள்ளும் நாள்.

தமிழீழ விடுதலை என்ற நமது இலட்சியக் கனலை நமக்குள் நாமே எரிய விட்டுக் கொள்ளும் நாள்.

இம் மாவீரர்களை ஈழத்தமிழர் தேசம் மட்டுமல்ல தமிழகம் மற்றும் உலகப் பரப்பெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் இன்றைய மாவீரர் நாளில் வணங்கி நிற்கிறார்கள்.

மாவீரர்கள் நமது சிறிய தேசத்தின் விடுதலை உணர்வின் குறியீடு. அடக்கு முறைக்கு அடிபணிய மறுத்த அளப்பெரும் வீரத்தின் குறியீடு. தன்னலமற்ற ஈகத்தின் குறியீடு. உலகின் பெரும் சக்திகளின் எதிர்ப்புக்கும் மத்தியிலும் தனது சக்தியெல்லாவற்றையும் திரட்டிப் போராடிய நமது தேசத்தின் பெருமையின் குறியீடு.

இந்தக் குறியீடு, இக் குறியீட்டின் ஆன்மீகசக்தி இன்று சிங்களத்தை அச்சுறுத்துகிறது. ஈழத் தமிழர் தேசத்தை சிங்களமயமாக்கும் தமது திட்டத்துக்கு மாவீரர்களின் நினைவுகள் தடையாக அமைந்து விடுமென அஞ்சுகிறது. தமிழீழம் என்ற ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பினை மாவீரர் என்ற குறியீடு உயிர்ப்பாகப் பேணி விடுமோ என்று பதைபதைக்கிறது.

இதனால் மாவீரர்கள் துயில்வதற்காக அமைக்கப்பட்ட துயிலும் இல்லங்களை அழித்துச் சிதைத்தது மட்டுமன்றி மாவீரர் நினைவுகளை மக்கள் மத்தியில் இருந்து அகற்றி விடுதவற்கு சிங்களம் பகீரத முயற்சி எடுக்கிறது.

மாவீரர் நினைவாக ஆலயங்களில் பூசைகள் வழிபாடுகள் நிகழ்ந்து விடுமோ என அந்தரிக்கிறது. மாவீரர்களுக்காக மக்கள் விளக்கு வைத்து வழிபட்டு விடுவார்களோ எனப் பதைபதைத்து மக்களை அச்சுறுத்துகிறது.

மாவீரர் நாளாகிய இன்று நமது தாயக மண்ணில் ஆலயங்களில் ஒலிக்கும் ஒவ்வொரு மணிஒலியிலும் நமது மக்கள் எம் மாவீரர் முகங்களைக் காண்பார்கள். மக்கள் தமது வீடுகளிலும் கோவில்களிலும் ஏற்றும் ஒவ்வொரு தீபத்திலும் நமது மாவீரர்கள் ஒளிர்வார்கள்.

எத்தகைய இராணுவ அச்சுறுத்தல்கள் ஊடாகவும் நமது மக்களின் மனக்கோவில்களில் விரியும் மாவீரர் நினைவுகளை சிங்கள இராணுவத்தால் அகற்றி விடமுடியாது.

மாவீரர் நினைவுகள் நமது மக்களுக்கு, தேசத்துக்கு என்றும் காவலாகவே இருக்கும். அந்நினைவுகள் தான் விடுதலை இலக்கு நோக்கி நமது தேசத்தை வழி நடாத்தும்.

அன்பான மக்களே!

ஈழத் தமிழர் தேசம் இன்று ஒரு முக்கியமான வரலாற்றுக்கட்டத்தில் நிற்கிறது.

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையுடன் ஈழத் தமிழர் தேசத்தின் உரிமைக்குரலை நசுக்கி விடலாம் என்ற சிங்களத்தின் திட்டம் தோல்வியடைந்து வருகிறது.

ஈழத் தமிழர் தாயகத்தில், தமிழர் அடையாள அரசியலை அழித்து சிறிலங்கா அடையாள அரசியலை நடைமுறைப்படுத்தும் சிங்களத்தின் முயற்சி வெற்றி பெறவில்லை.

இராணுவ அச்சுறுத்துல்களுக்கும் அரசின் ஆசைவார்த்தைகளுக்கும் மத்தியிலும் தாயகத் தமிழ் மக்கள் சிங்களத்திடம் அடிபணியவில்லை.

போதிய அரசியல் வெளி இல்லாத காரணத்தால் தமது சுதந்திரவேட்கையினை தமக்குள் புதைத்து வைத்திருந்தாலும் தேசம் என்ற தகைமைக்குரிய மக்களாகவே தாயக மக்கள் தமது அரசியல் முடிவினை எடுத்து வருகிறார்கள்.

புலம் பெயர் தமிழ்மக்கள் தமக்குரிய அரசியல்வெளியினைப் பயன்படுத்தி ஈழத் தமிழர் தேசத்தின் சுதந்திரவேட்கையினை வெளிப்படுத்துவதுடன் இனப்படுகொலை புரிந்த, இன்றும் புரிந்து வருகின்ற சிங்கள ஆட்சியாளர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாயகத்திலும் புலத்திலும் வாழும் ஈழத் தமிழ் மக்களை உள்ளடக்கிய ஈழத் தமிழர் தேசம் தனது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பது எவ்வாறு?

ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பான, நமது மாவீரர்களின் இலட்சியக்கனலான தமிழீழத் தனியரசு குறித்து முன்னேறுவது எப்படி?

இதனைக் களமும் புலமும் இணைந்தபடி சாத்தியப்படுத்துவது எவ்வாறு?

தற்போதய சூழலில் ஈழத் தமிழர் தேசம் அனைத்துலக ஆதரவினைத் தனது பக்கம் வென்றெடுக்கும் நகர்வினை அரசியல்ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் மேற்கொள்ளவேண்டியுள்ளது.

அனைத்துலக அரசுகளை ஈழத் தமிழர் தேசம் தர்மம், நீதி, நியாயம் என்ற தார்மீக மொழிகளில் மட்டும் பேசி வென்றெடுக்கமுடியாது. சுயநலன்கள் என்ற அச்சில் சுழலும் இன்றைய உலக ஒழுங்கு தர்மத்தின் மொழிகளுக்கு கட்டுப்படுவதில்லை.

இதனால், அனைத்துலக சமூகத்தினை நமது பக்கம் வென்றெடுப்பதற்கு பலமிக்க அனைத்துலக அரசுகளின் நலன்களுடனும் நிலைப்பாடுகளுடனும் ஈழத் தமிழர் தேசத்தின் நலன்களையும் நிலைப்பாடுகளையும் பொருந்தச் செய்ய வேண்டியது அவசியமாக அமைகிறது.

அனைத்துலக சமூகத்தின் பார்வையில்;, குறிப்பாக வௌ;வேறு அரசுகளின் பார்வையில் இலங்கைத்தீவில் ஆயுதப் போராட்டம் இல்லாத, அதேவேளை நாடு எவ்வகையிலும் பிரிக்கப்படாத வகையில் ஒரு அரசியல்தீர்வு தமிழர் பிரச்சனைக்குக் காணப்படவேண்டும் என்ற நிலைப்பாடே தற்போதும் உள்ளது.

இங்கு அரசுகள் என்பதனை நான் வலியுறுத்துவதற்குக் காரணம் உண்டு. நீதி தொடர்பாக அரசுகளினதும் அந்தந்த நாட்டு மக்களினதும் நிலைப்பாடுகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

அரசுகள் தமது முடிவுகளை நீதியின் அடிப்படையில் இன்றி நலன்களின் அடிப்படையில் எடுப்பவை. சில சந்தர்ப்பங்களில் நீதியும் பலம் வாய்ந்த அரசுகளது நலன்களும் ஒன்றாகச் சந்திப்பதுமுண்டு.

அரச இயந்திரம் ஆனது ஆடை அணிவதில்லை என்றும் அதனால் அதற்கு வெட்கம் மானம் போன்றவை எதுவும் இருப்பதில்லை என்றும் சிலர் கூறுவார்கள்.

இத்தகைய அரசுகளைத்தான் இன்று ஈழத்தமிழர் தேசம் தனக்குச் சார்பாக வென்றெடுக்க வேண்டியுள்ளது.

2009ஆம் ஆண்டு ஆயுதங்கள் மௌனிக்கப்படுகின்றன என்று விடுதலைப்புலிகள் அமைப்பு எடுத்த நிலையின்பின் ஈழத்தமிழர் மத்தியில் தாயகத்திலும்சரி புலத்திலும்; சரி மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் அனைத்துமே அரசியல் இராஜதந்திரவழிமுறைகளின் பாற்பட்டுத் தான் அமைந்து வருகின்றன.

இதனால் அனைத்துலகச் சமூகத்தினது ஆயுதப்போராட்டம் தொடர்பான நிலைப்பாட்டுக்கும் ஈழத் தமிழர் தேசத்தின் தற்போதய நிலைப்பாட்டுக்கும் இடையே முரண்பாடுகள் எதுவும் இல்லை. இவை ஒரேபுள்ளியில் சந்திக்கின்றன.

ஆனால் தமிழீழத் தனியரசு தொடர்பான விடயத்தில் தமிழீழ மக்களின் அரசியல் பெருவிருப்புக்கும் அனைத்துலக அரசுகளின் நிலைப்பாட்டுக்கும் இடையே முரண்பாடு உள்ளது.
புலத்தில் உள்ள ஜனநாயகவெளியின் காரணத்தால் புலம்பெயர் தமிழ் மக்கள் வாழும் நாடுகள் தமிழீழத் தனியரசுக்கான செயற்பாடுகளைச் சகித்துக் கொள்கின்றன.

ஆனால் அவர்களின் தற்போதய எண்ணமெல்லாம் புலம் பெயர் தமிழ் மக்கள் தமது நிலையினை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதாகத்தான் உள்ளது.

விடுதலைக்காகப் பேராடும் ஒரு தேசிய இனம் என்ற வகையில் நமது இலக்கு நோக்கி அனைத்துலகச் சமூகத்தின் ஆதரவினை வென்றெடுக்க நாம் முயலவேண்டுமேயன்றி அனைத்துலக அரசுகளின் நிலைப்பாடுகளுடன் கண்மூடித்தனமான சமரசங்களைச் செய்ய முடியாது.

இதனால், அனைத்துலக அரசுகளின் விருப்பங்களுக்குப் பின்னால் நமது தேசங்களின் நலன்களையெல்லாம்; துறந்துவிட்டு நாம் ஓட முடியாது. இதேவேளை ஒரு சிறிய தேசமான நாம் பலம் மிக்க அனைத்துலக அரசுகளிடம் இருந்து அந்நியப்படவும் முடியாது.

இதனாலேதான் மிக நுட்பமான முறையில் நாம் களத்திலும் புலத்திலும் உள்ள நிலைமைகளுக்கேற்ப காய்களை நகர்த்தி இச் சிக்கலைக் கையாள வேண்டியுள்ளது.

தமிழீழம் சாத்தியமற்றது என்ற காரணத்தைக்கூறியோ அல்லது பலமுள்ள அரசுகள் அதனை ஏற்றுக் கொள்ளாது என்ற காரணத்தை முன்வைத்தோ தமிழீழ இலக்குக் குறித்து எவரும் தடுமாறக்கூடாது. தடுமாறவும் முடியாது.

ஏனெனில் அனைத்துலக சூழல் என்பது அனைத்துலக அரசுகளின் நிலைப்பாடுகள் என்பன மாற்றத்துக்குள்ளாக முடியாதவை அல்ல. நாம் நமது விடுதலைக்கனலை உயிர்ப்பாக வைத்திருப்பதன் மூலம்தான் மாறிவரக்கூடிய அனைத்துலகச் சூழலை நமது இலக்கு நோக்கிக் கையாள முடியும்.

அதேவேளை தாயகத்தில் இன்றுள்ள அரசியல்வெளி மறுக்கப்பட்ட சூழலின் காரணமாக தமிழீழத் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட அரசியல் தலைவர்கள் தமிழீழ இலட்சியத்தை தமது நிலைப்பாடாகக் கொண்டு செயற்பட முடியாத நிலை இருப்பதனை நாம் புரிந்து கொள்கிறோம்.

இன்றைய காலகட்டத்தில் அனைத்துலக அரசுகளைக் கையாள்வதில் தாயகத் தலைவர்களுக்கு ஒரு முக்கிய பாத்திரம் உண்டு.

தனித் தமிழீழத்தைத் தமது நிலைப்பாடாகக் கொண்டு இவர்கள் செயற்படாத காரணத்தால் அனைத்துலக அரசுகளுடன் உறவுகளை வைத்துச் செயற்படுதல் இவர்களுக்கு ஒப்பீட்டளவில் இலகுவாக இருக்கும். அனைத்துலக அரசுகளும் இதனை விரும்பும்.

இதனை இன்று தாயகத்தில்; தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக் கூடுதலாகச் செய்து வருகிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அனைத்துலக அரச பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடாத்துகிறது.

இவை ஈழத்தமிழர் தேசத்தின் ஒட்டுமொத்த அரசியல் வியூகத்தின் ஒருபடியாக அமையக் கூடியவை.

ஈழத் தமிழர் தேசத்தினது அரசியல் பெருவிருப்பான தமிழீழத்தனியரசுக்கான பயணத்துக்கு இது அவசியமானதும்கூட.

அனைத்துலக அரசுகளின் எதிர்பார்ப்புக்கேற்ற வகையில், அரசியல் தீர்வு காணும் விடயத்தில் சிங்களம் ஒரு போதும் ஈழத் தமிழ் மக்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்புக்களைக்கூட ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

மகிந்த ராஜபக்ச சிங்களத்தின் சார்பில் முன்வைக்கும் ஒரு நாடு - ஒரு மக்கள் என்ற கொள்கையானது தமிழர்களை பௌத்த சிங்கள மக்களின் விருப்பத்துக்கிணங்க – அவர்கள் தீர்மானிப்பதற்கிணங்க வாழப் பழகிக் கொள்ளுங்கள் என்பதுதான்.

ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் தம்மை அடையாளப்படுத்துவதும் இவ்வாறு அடையாளப்படுத்துவதற்குரிய தகைமைகளைக் கொண்டிருப்பதும் சிங்களத்துக்கு சிம்ம சொப்பனமாகவே உள்ளது.

இதனால் தமிழர் தேசத்தைக் கரைத்து சிங்களப் பெரும்பான்மைக்குள் விழுங்கிவிடுதவற்கு சிங்களம் திட்டமிட்டுச் செயலாற்றி வருகிறது.

இத்தகைய பின்னணியில் ஈழத் தமிழ் மக்களின் தேசியப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காணும் திட்டமோ அல்லது விருப்போ சிங்களத்திடம் இல்லை.

மக்கள் ஆணையினைப் பெறுவதற்காக மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினால் 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்ட நிலைப்பாட்டுக்கு அருகில்கூட சிங்கள அரசுடனான பேச்சுவார்த்தைகளில் கூட்டமைப்பால் முன்னேற முடியாது. எனினும் அனைத்துலக சமூகத்தின் ஆதரவினைப் பெறுவதற்காக இவர்கள் தமது முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சிங்கள அரசு தமிழ் மக்களின் அரசியல்; தீர்வாகக் குறைந்தபட்ச ஏற்பாடுகளுக்குக்கூடத் தயாராக இல்லை என்பதனை பச்சையாக அனைத்துலகச் சமூகத்தின் முன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோலுரித்துக் காட்டும்போது தமிழீழ மக்களின் பெருவிருப்பான தமிழீழத் தனியரசினைத் தவிர வேறுவழியில்லை என்ற நிலைப்பாடு வலுப்பெறக்கூடிய நிலை ஏற்படும்.

இது அனைத்துலகச் சமூகத்தின் மத்தியில் தமிழீழத் தனியரசு தொடர்பான நமது நிலைப்பாட்டை வலுப்படுத்தும் வாய்ப்புக்களைத் தரும்.

மேலும், சிங்கள அரசும் அனைத்துலக சமூகமும் தமக்குள் மோதிக்கொள்ளும் நிலையும் சிறிலங்காவில் எதிர்காலத்தில் தோற்றம் பெறும்.

சிறிலங்கா அரசு தற்போது முற்றிப் பழுத்த ஒரு சிங்கள பௌத்த பேரினவாத அரசாக உள்ளது.

சிறிலங்காவின் பாராளுமன்றம், நிர்வாக இயந்திரம், நீதித்துறை, இராணுவக் கட்டமைப்பு, ஊடகங்கள் அனைத்துமே சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நிலையான தூண்களாக உள்ளன. சிங்கள பேரினவாதத்தின் காவல் பூதங்களாக உள்ளன.

ஆதலால் சிங்களத்தின் ஆட்சிபீடத்தில் இருக்கும் எவரும் அல்லது இனிமேல் ஆட்சிபீடம் ஏறும் எவரும் சிங்கள பௌத்தத்தின் உண்மையான சேவகனாகத்தான் இருக்க முடியும்.

முன்னர் இருந்ததைவிட சிங்கள இராணுவம் அரசியல் பலமிக்க அதிகாரக் கட்டமைப்பாக உருப்பெற்றுள்ளது.

இத்தகைய சூழலில் மேற்குலகின் எதிர்பார்ப்புக்கேற்ப ஒரு தாராளவாத அரசாக சிறிலங்கா அரசு மாற்றமடையாது.

சிங்கள அரசினை மேற்குலகின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மாற்றுவதற்கு சிங்களத்தலைவர்கள் எவரும் முயன்றால் இவர்களை சிங்கள பௌத்த தேசியவாதம்; அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும். தேர்தல்களில் இவர்களைத் தோல்வியடையச் செய்யும்.

இதனால் சிறிலங்காவை தான் விரும்புகிற ஒரு தாராளவாத அரசாக மாற்றியெடுக்கும் மேற்குலகத்தின் திட்டமும் வெற்றியடையப்போவதில்லை.

இதனால் மேற்குலகத்துக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே ஒரு முறுகல்நிலை வலுவடையக்கூடிய நிலைமைகள் உள்ளன.

மேலும் புவிசார் அரசியல் தளத்திலும் சிறிலங்காவில் தமது நலன்களை அடைந்து கொள்ளும் போட்டியில் இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையே ஒருவகைப் பதட்டம் இருக்கிறது.

இலங்கைத்தீவில் சீனாவின் கை ஓங்கி விடக்கூடாது என்பது இந்தியாவினதும் அமெரிக்காவினதும் கூடுதல் அக்கறையாக இருக்கிறது.

இந்தப் புவிசார் அரசியல் சார்ந்த முரண்பாடுகள் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் புவிசார் அரசியலை ஒரு வகைக் கொதிநிலையில் வைத்திருக்கவே வழிகோலும்.

இத்தகைய முரண்பாடுகளின் தர்க்கரீதியான வளர்ச்சிப்போக்கில் ஈழவிடுதலைக்கான கதவுகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் கனிந்து வரும் என நாம் திடமாக நம்புகிறோம்.

ஈழத்தமிழர் தேசம் தன்வசமிருந்த வன்வலுவினை (hard power) இழந்து விட்டிருந்தாலும் தனது ஏனைய வளங்களை ஒருங்கு திரட்டி தனக்கான மென் வலுவினை (soft power) சாதுரியமாகப் பயன்படுத்துவதன் மூலம் (exercising the soft power in a smart way) தனது இலக்கு நோக்கி முன்னேறும் ஆற்றலைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

ஈழத் தமிழர் தேசத்தின் புவியியல் அமைவிடம், தென்னாசியாவின் மாறி வரும் புவிசார் அரசியல், 60 மில்லியன் தமிழகத் தமிழர்கள், 1 மில்லியன் புலத்து ஈழத் தமிழர் சமூகம், அந்தந்த நாட்டு அரசியல்களில் சென்றிணையும் இரண்டாம், மூன்றாம் ஈழத் தமிழர் தலைமுறை, சிறிலங்கா அரசின் மீது விழுந்துள்ள சர்வதேசக் குற்றச் சாட்டுக்கள், இராஜதந்திர பாதுகாப்புத் தொடர்பாக மாறிவரும் சர்வதேச சட்ட நிலைப்பாடு, எமது அரசியல் கோரிக்கையின் தார்மீக, சட்ட வலு, சிறிலங்கா அரசின் பேரினவாத நிலைப்பாடு - இவை அனைத்தும் இணைந்த வகையில் ஈழத் தமிழர் தேசத்துக்கு உரிய அரசியல்வலுவைத் தரக்கூடியவை.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதம் தாங்கிய போராட்டமாகப் பரிணாமம் பெற்று வீச்சுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் நமது மாவீரர்களின் அளப்பெரும் வீரத்தாலும் ஈகத்தாலுமே ஈழத் தமிழர் தேசியப் பிரச்சினை அனைத்துலகப் பரிமாணத்தைப் பெற்றுள்ளது.

ஒரு நாட்டின் தேசியப்பிரச்சினை என்பது பொதுவாக அந் நாட்டின் உள்நாட்டுப்பிரச்சினையாக மட்டும் இருப்பதில்லை. இது அனைத்துலகப்பரிமாணம் கொண்ட பிரச்சினையாகவே இருப்பதுண்டு.

இந்த வகையில் ஈழத் தமிழர் தேசத்தின் தேசியப்பிரச்சினை இலங்கைத்தீவினுள் மட்டுமே சுருங்கி விடும் உள்நாட்டுப் பிரச்சினை அல்ல. இது ஒரு அனைத்துலகப் பரிமாணம் கொண்ட பிரச்சினை.

இதனால் அனைத்துலக சமூகத்தைக் கையாள்வதற்குரிய முறையில் ஈழத்தமிழர் தேசம் ஒரு தெளிவான வெளியுறவுக் கொள்கையினைக் கொண்டிருப்பதும் மிகவும் அவசியம். இத்தகைய ஒரு பின்னணியுடன்தான் நாம் தற்போதய காலகட்டத்து விடுதலைப்போராட்டத்தை அணுக வேண்டும்.

இப் போராட்டத்தில் இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு அமைப்புக்கும் ஒரு பாத்திரம் உண்டு. தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, புலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலகத் தமிழர் பேரவை, தேசிய மக்கள் அவைகள் உட்பட ஒவ்வொரு நாட்டிலும் இயங்கும் அரசியல் முனைப்புக் கொண்ட அமைப்புக்கள் - அவை யாவற்றுக்குமே இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு பாத்திரம் உண்டு.

இந்தப் பாத்திரங்களை ஒவ்வொரு அமைப்புக்களும் தமக்கிடையேயான ஒரு புரிதலுடன் ஏற்றுக்கொண்டு அங்கீகரித்தலும் ஒரு பொது மூலோபாயத்தின் அடிப்படையில் பொது உடன்பாட்டுக்கு வருதலும் காலத்தின் தேவையாகும்.

இவ் விடயத்தில் தாயகத்தில் உள்ள அமைப்புக்களும் புலத்தில் இயங்கும் அமைப்புக்களும் ஒரு மூலோபாயத்தின் அடிப்படையில் அமைந்த வெவ்வேறு வேலைத்திட்டங்களைக் கொண்டிருக்கலாம்.

ஆனால் நாம் சென்றடைய வேண்டிய இடம் தொடர்பாக நமக்குள் ஒரு தெளிவு இருக்க வேண்டும். இந்தத் திசையினை நமது மாவீரர்கள் நமக்குள் காட்டி நிற்கிறார்கள்.

மாவீரர்கள் காட்டி நிற்கும் அந்த இலக்கு நோக்கி எமது போராட்டத்தினை இட்டுச் செல்லும் பணிக்கென சென்ற ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாட்களின்போது உருவாக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், புலம்பெயர் தமிழ் உறவுகள் மற்றும் தமிழக உணர்வாளர்கள் எல்லோரது ஆதரவுடனும் எமது அமைச்சுக்களினூடாகவும் வெளியேயும் பல்வேறு முனைகளில் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.

அனைத்துலக அரங்கில் எம்மை நிலை நிறுத்துவதும், அனைத்துலக சமூகத்தை இராஜதந்திர வழிமுறைகளின்படி கையாளுவதும் நாம் கட்டியெழுப்பும் எமக்கான மென்வலுவில் தங்கியுள்ளது.

இப்பணியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தற்போது முதன்மைப் படுத்திச் செயற்பட்டு வருவதோடு இது பற்றிய பரந்த விவாதத்தினை எதிர்வரும் தமது மூன்றாவது அமர்வின் போது மேற்கொள்ளவும் இருக்கிறது.

அன்புக்குரிய மாவீரர் பெற்றோரே! குடும்பத்தினரே!!

நமது தேசம் மாவீரர்கள் தேசம். நமது தேசத்தின் உன்னதமான மனிதர்களான உங்கள் பாசத்துக்குரிய பிள்ளைகளின், உறவுகளின் பிரிவுத்துயரில் தமிழர் தேசமே மூழ்கி நிற்கிறது.

சோகத்தில் துவண்டு விடாமல் தமிழீழ விடுதலை இலக்கு நோக்கிப் பயணிக்கும் உறுதியினையும் மாவீரர் நினைவுகள் நமக்குத் தருகின்றன.

தாயகத்திலே உங்கள் பிள்ளைகளுக்காக, நம் உறவுகள் ஒரு விளக்கு ஏற்றி வைக்கும் உரிமைகூட உங்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது.

தேசத்தின் விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த அனைவரையும் ஒரே நாளில் நினைந்து வணங்கி உறுதிபெறும் ஒரு பண்பாட்டு நிகழ்வாக மாவீரர்நாள் அமைந்து வந்தது.

இந்தப் பண்பாட்டுவெளியினையும் சிங்களம் நம்மிடம் இருந்து பறித்திருக்கிறது.

தங்கள் பிள்ளைகள், உறவுகள் துயில்வதற்கான இல்லங்களும் சின்னாபின்னப் படுத்தப்பட்டுள்ளன.

ஆக்கிரமிப்பாளனின் கால்கள் பட்டு நமது தாயக தேசம் அசிங்கப்பட்டுக் கிடக்கிறது.

உங்கள் பிள்ளைகளுக்காக, உறவுகளுக்காக நமது தேசத்தின் மாவீரர்களுக்காக தாயக மக்கள் நிச்சயம் ஒரு விளக்கினைத் தமது வீடுகளில் ஏற்றுவார்கள். தமிழீழ தேசத்தின்; ஆலயங்களிலும் கோவில்களிலும் ஒலிக்கும் மணி ஒலிகள் நிச்சயம் உங்கள் பிள்ளைகளின் உறவுகளின் பெயர் சொல்லும்.

நீங்களும் நமது தேசத்தின் மதிப்புக்குரியவர்களாக எமது நெஞ்சங்களில் இருப்பீர்கள்.

இன்று சுவிஸ் நாட்டில் கட்டியெழுப்பப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயம் புலத்திலே உங்கள் பிள்ளைகளுக்காக இனிமேல் எடுக்கப்படவிருக்கும் நினைவாலயங்களுக்குக் கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது.

உங்கள் பிள்கைளகளின், உறவுகளின் கனவுகள் நிச்சயம் நனவாகும்.

அன்பான மக்களே!

'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்: ஆனால் மறுபடியும் தர்மம் வெல்லும்' என்பார்கள்.

தற்போது தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியுள்ளது. இது நிரந்தரமானதல்ல. தர்மம் மறுபடியும் நிச்சயம் வெற்றி பெறும்.

தர்மம் வெற்றிவாகை சூடும் போது இன்று நமது மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் ஆக்கிரமிப்பாளர்கள் நமது மண்ணை விட்டு அகன்றிருப்பார்கள்.

நமது தேசம் நிச்சயம் சுதந்திரக்காற்றைச் சுவாசித்து நிற்கும்.

இது நாம் கண்டு நிற்கும் கனவு மட்டுமல்ல. எதிர்காலத்தில் நிதர்சனமாகப் போகும் வரலாற்றின் சாத்தியப்பாடு.

இந்ந நிலையை உருவாக்கி நமது மாவீரர் நினைவுச் சின்னங்களை நமது மண்ணில் நாம் மீளக் கட்டியெழுப்புவோம்.

சிங்களத்தால் சிதைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தையும் மீண்டும் புத்துயிர் பெற வைப்போம்.

தமது கனவுகள் நனவாகி விட்டன என்ற நிறைவுடன் விடுதலையடைந்த ஈழத் தமிழ்ப் பூமியில் நமது மாவீரர்கள் அமைதியாக உறங்குவார்கள்.

உலகின் ஏனைய சுதந்திர மக்கள் போல நமது மக்களும் சுதந்திரமாக கௌரவமாக, பாதுகாப்பாக, சமத்துவத்துவத்துடன் வாழ்வார்கள்.

இந் நிலை உருவாகும் வரை நாம் நமது இலட்சியப்போராட்டத்தினை ஓயாது முன்னெடுப்போம் என நமது மாவீரர்கள் நினைவுடன் உறுதியெடுத்துக் கொள்வோமாக!

விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்


http://actressmasaala.blogspot.com





  • http://girls-stills.blogspot.com



  • [Continue reading...]

    அவர்களுக்கு என்�� சொல்லி வரப்போகின்றோம்!: ச.ச.முத்த���

    - 0 comments


    இதோ மாவீரர்நாளும் வந்துவிட்டது. மிகநீண்ட மாவீரர் பட்டியல் விரிந்து கிடக்கிறது. தெரிந்த தெரியாத பெயர்கள் என்றும். ஆண்கள், பெண்கள் என்ற பெயர்கள். உடல் சிதறும் கணம் தெரிந்தும் நிதானத்துடன் நடந்து இலக்கை நெருங்கி காற்றுடன் கலந்தவர்கள், கடலின் ஆழத்துள் நீள்துயில் கொள்பவர்கள், வானத்தில் வல்லமை நிகழ்த்திடும் பொழுதில் கரைந்தவர்கள்.

    என்று ஐம்பெரும் பூதங்களுக்குள்ளும் கலந்தவர்களாக என்று ஆயிரம் விதமான அர்ப்பணிப்புகளின் பெயர்கள். எங்கள் தேசப் புதல்வர்களின் பெயர்கள். என்ன செய்யப்போகின்றோம் இந்த மாவீரர்நாளிலும்...?இந்த மாவீரர்நாளிலும் போய்நின்று மனம்உருகி பூதூவுவோம்.

    வீழ்வதற்கு தயாராக நிற்கும் கண்ணீர்த்துளிகளுடன் எங்கள் தேசத்துச் செல்வங்களை நினைத்து கைகூப்பி தொழுவோம். நெஞ்சுருகுவோம். மணியடித்து எழுந்துவரும் மாவீரர் பாடல் 'ஒளியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீதும் உறுதி' பாடலுக்கு எல்லோரும் ஒன்றுகூடி தீபம் ஏற்றி நிற்போம்.

    இத்தனையும் நிச்சயமாக செய்தே ஆகவேண்டும்தான். எங்களுக்காக தங்களையே அர்ப்பணித்து மரணித்த எம் மாவீரர்களுக்கான நன்றியாக இத்தனையும் செய்தே ஆகவேண்டும். ஆனால் அதன் பின்னர்.....?இத்தனையும் செய்துவிட்டு வீடு திரும்பி எல்லா நினைவுகளையும் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் இயந்திர வாழ்வினுள் கரைந்துவிடப் போகின்றோமா?

    ஏதோ ஒரு சடங்குக்காக போய் மலர்தூவி வந்துவிட்டால் மட்டுமே போதுமா? போன மாவீரர் நாள் இதோ முந்தாநாள்தான் வந்துபோனது போல கண்ணுக்குள் நிற்கிறது. போன மாவீரர் நாளில் தூவிவிட்டுவந்த கார்த்திகைப் பூவின் வாசம் இன்னும் கைகளுக்குள் மணக்கிறது.

    போன மாவீரர் நாளிலும் போனோம், வந்தோம். ஒரு வருடமாகிப் போகிறது. மாவீரரின் கனவை நனவாக்க என்ன செய்தோம் இந்த ஒரு வருடத்தில்...?எம் நெஞ்சைத்தொட்டு பதில் கேட்டால் வெறுமைதான் பதிலாக எழுகிறது.

    இம்முறையும் அவ்வாறே போய்வந்து பூத்தூவி, பாப்புனைந்து மீண்டும் அடுத்த வருட மாவீரர் நாளில் சந்திப்பதாக சொல்லி வர போகின்றோமா??மாவீரர் நாள்! சொல்லும்போதே நெஞ்சு விம்மவில்லையா. இதயத்துக்குள் சுடர் ஒன்று எரியும் உணர்வு மேலிடவில்லையா.. ஒவ்வாருவராக கண்களுக்குள் மாவீரர் நினைவு வந்து போகவில்லையா...

    எத்தனை உயரிய தியாகங்களின் கூட்டு நினைவு நாள் இது. எத்தனைவிதமான அர்ப்பணங்கள். சுற்றிவர எதிரி சூழ்ந்துநின்ற போதிலும் காயமடைந்த தன்னை சுட்டுவிட்டு ஆயுதத்தை எடுத்துக்கொண்டு தப்பும்படி இறுதி நேரத்து வேண்டுகோள் விடுத்து வீரச்சாவு கண்டவர்கள்,

    அதனையே நிறைவேற்ற தயங்கிய தோழனிடம் தன்னைச் சுட்டுவிட்டு தப்பும்படி உத்தரவிட்டு மரணத்தை ஏற்றுக்கொண்டவர்கள்,

    எதிரிக்கு தனது முகம் தெரிந்துவிட்டால் நடக்க திட்டமிட்டு இருக்கும் செயல்பாடுகள் முடங்கிவிடும் என்பதால் கொழுந்துவிட்டெரியும் தீக்குள் தமது முகம் கருக்கி மரணித்தவர்கள்,

    ஆயுதமும் சயனைட்டும் இல்லாத ஒருபொழுதில் தப்பிக்க இனி சந்தர்ப்பம் ஏதும் இல்லையென்று நிச்சயமாக தெரிந்துகொண்டு மரக்கிளையிலும்,சுவரிலும்,மருத்துவமனைக்கட்டிலிலும் தமது தலைகளை பலம்கொண்டு மோதி மரணத்தை ஏற்ற வேங்கைகள்,

    கடற்பயணங்களின்போது வெடித்த படகுகளில் இருந்து தான்மட்டும் நீந்தி தப்பிக்காமல் நீந்ததெரியாத தோழனையும் காப்பாற்ற இறுதிவரை முயற்சித்து அவனுடனேயே கடலுடன் சங்கமமானவர்கள்,

    வல்லாதிக்க கடற்படை சுற்றிவர நின்று சரணடை என்று எக்காளமிட்டபோது அவன் முன்னாலேயே கப்பலை குண்டுவைத்து தகர்த்து தீயுடன் கருகியவர்கள்,

    சிறியதோ பெரியதோ எதுவாகினும் அது எதிரியின் காவலரண் ஆகின் அதனை மீட்கும் முயற்சியில் வெட்டவெளியில் குண்டுமழைக்குள்ளாக இரத்தக்குளியல் செய்தவர்கள்,

    தப்பி ஓடும் எதிரிகள் அனைவரையும் அழிப்பதற்காக தான் இருக்கும் இடத்தையே குறிவைத்து எறிகணைகளை வீசும்படி கூறிவிட்டு போய்விட்டவர்கள்....

    இப்படி..இப்படியாக வார்த்தைகளாலும் வர்ணிப்புகளாலும் கூறிவிடமுடியாத ஈகங்களை நினைந்து வணங்கி துதிக்கும் நாள் இது. இது வெறுமனே ஒரு திகதி அல்ல. விடுதலைக்காக ஒரு இனம் செய்துவிட்ட அளப்பெரும் தியாகங்களின் மொத்த நினைவு.

    விடுதலைக்காக இந்த இனத்தின் மனிதர்கள் தமது இனிய உயிரையும் அர்ப்பணிக்க எழுந்து நின்றார்கள் என்பதன் ஒரே நிரூபணம் மாவீரர் நாள்.

    பேதங்களும் கூறுகளும் நிறைந்த தமிழர் தாயகத்தின் ஒருமுனையில் இருந்து மறுமுனை வரை ஒரே தலைமையின் கீழ் விடுதலைக்காக உயிரையும் தியாகம் தரத்தயாராக ஆயிரமாயிரமாய் தமிழினம் திரண்டது என்ற வரலாற்றுப் பதிவுதான் மாவீரர் நாள்.

    எப்படியான ஒரு பொழுதில் இம்முறை மாவீரர் நாள் வந்துள்ளது. மிகவும் ஒரு அவலமான ஒரு பொழுது எங்கள் இனத்துக்கு இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

    எங்களின் தாய்மண் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் தனது தேசிய அடையாளத்தை இழந்து குறுகிக்கொண்டிருக்கிறது.

    பாரம்பரிய தமிழர்நிலம் என்ற தேசியக்கூறு மிகவும் கெட்டித்தனமாக சிங்களத்தால் அழிக்கப்பட்டு வருகிறது.

    எமது மக்கள் ஒருவகையான பேரின இராணுவ மேலாண்மைக்குள் முடக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    அப்படியான வாழ்வே அவர்களுக்கு பழக்கமான ஒன்றாக ஆக்கப்பட்டும் வருகின்றது.

    பெருமரத்தை பற்றிப்படர்ந்து சுற்றி வளரும் சிறுகொடிகள் போல எம் இனம் ஆக்கப்பட்டு வருகிறது.

    எல்லாவற்றிலும் மேலாக எங்கும் வறுமையே கோலோச்சுகிறது.

    குழந்தைகளுக்கு வயிறார உணவு கொடுக்கவும் முடியாத ஏக்கத்தில் பெற்றோர் பேதலித்து போயிருக்கிறார்கள்.

    அன்றாட உழைப்புகள் ஏதுமில்லாமல் கையேந்தும் நிலையில் எம் இனம் வீதியில் நிற்கிறது.

    இப்படியான ஒரு கொடும்துயரப் பொழுதில்தான் மாவீரர் நாள் வந்திருக்கிறது.

    இந்த மக்களின் நிம்மதியான சுபீட்சமான வாழ்வுக்காகவே மாவீரர்கள் தங்களையே ஆகுதி ஆக்கினார்கள்.

    மாவீரர்களை வணங்கிவிட்டு அவர்கள் நேசித்த இந்த மக்களை மறந்துவிடப் போகின்றோமா? மாவீரர்கள் எம்மிடம் எதிர்பார்த்தது எது?

    மாவீரன் ஒவ்வொருவனும் வீழும்போதும் அவனது கனவும், அவனது விருப்பமும், அவனது எதிர்பார்ப்பும் ஒன்றே ஒன்றுதான். தாங்கள் நெஞ்சுக்குள் தாங்கி போரிட்ட இலட்சியக்கனவை வென்றெடுக்க நாளை நாம் ஒன்றாக கூடுவோம் என்பதுதான்.

    எதிரியும் எதிரிக்கு முண்டு கொடுத்த சக்திகளும் எம்மை வென்றது ஒன்றும் பெரிதல்ல. ஆனால் இத்தனை அழிவுக்கு பின்னரும் நாம் ஒன்றுபடாமல் சிதறிப்போய் நிற்கிறோமே அதுதான் மோசமானது.

    இந்த மாவீரர் தினத்துடன் அனைவரும் ஒன்றிணையும் சபதம் ஓங்கி ஒலிக்கவேண்டும்.

    நாம் எதிரிக்கு எதிராக ஒன்றானோம் என்ற சேதி தாயகத்தின் காற்றில் கலந்து மாவீரர் காதுகளில் போய் விழவேண்டும்.

    எங்களிடம் இருக்கும் ஒரே அரசியலும் மாவீரர் நாள்தான். இந்த இனத்திடம் எஞ்சி இருக்கும் ஒற்றை ஆயுதமும் மாவீரர் நாள்தான்.

    வெறும் சம்பிரதாயமான நினைவாக நின்று திரும்பாமல் மனங்களுக்குள் உறுதி எடுப்போம்.

    விடுதலைப்போரின் விழுக்காயங்களாக வறுமையுடன் அல்லல்படும் போராளிக் குடும்பங்களையும் சிறையில் வாடும் எம் உறவுகளையும் கைதூக்கி விடுவோம் என்றும், மாவீரர் கண்ட கனவான சுதந்திரவாழ்வை பெற்றுத்தர ஓயாது செயற்படுவோம் என்றும் உறுதிகொள்வோம்.-

    ச.ச.முத்து
    ilamparavai@hotmail.com


    http://actressmasaala.blogspot.com





  • http://girls-stills.blogspot.com



  • [Continue reading...]

    எனது அன்புக்கும�� மதிப்புக்குமுர���ய தமிழீழ மக்களே

    - 0 comments


    நவம்பர் 27
    (மாவீரர் நாள்)


    எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,

    இன்று வணக்கத்துக்குரிய நாள்.

    சுயநல இன்பங்களைத் துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து, அந்தச் சத்திய இலட்சியத்திற்காகச் சாவைத்தழுவிய உத்தமர்களை நாம் நினைவு கூரும் புனித நாள்.

    இன்றைய நன்னாளில், அந்த மகத்தான மனிதப் பிறவிகளின் நினைவாக நாம் ஏற்றும் தீபங்களில், அந்த அக்கினி நாக்குகளின் அபூர்வ நடனத்தில், எமது மாவீரர்களின் சுதந்திரத் தாகம் அணையாத சுடராக ஒளிவிட்டு எரிவதை நாம் எமது நெஞ்சில் நினைவு கொள்வோமாக.

    சத்தியம் மீது கட்டப்பட்ட இலட்சியத்திற்காக மடிபவர்கள் என்றுமே சாவதில்லை. அவர்கள் ஒவ்வொருவருமே தனிமனித சரித்திரங்களாக என்றும் வாழ்வார்கள்.

    (2005)

    மாவீரர்கள் அபூர்வ மனிதர்கள்


    எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இழப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்கு சக்தியாக அமைந்துவிட்டது.

    இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள். சுதந்திரச் சிற்பிகள். எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, கௌரவத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள இந்த மகத்தான தியாகிகள் காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.

    ஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கையை வாழும் ஒரு சாதாரண மனிதப் பிறவி அல்ல. அவன் ஒரு இலட்சியவாதி. ஒரு உயரிய இலட்சியத்திற்காக வாழ்பவன். தனக்காக வாழாமல் மற்றவர்களுக்காக வாழ்பவன். மற்றவர்களின் விடிவுக்காக, விமோசனத்திற்காக வாழ்பவன். சுயநலமற்ற, பற்றற்ற அவனது வாழ்க்கை உன்னதமானது. அர்த்தமானது. சுதந்திரம் என்ற உன்னத இலட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அர்ப்பணிக்கத் துணிகிறான். எனவே, விடுதலை வீரர்கள் அபூர்வமான மனிதப் பிறவிகள். அசாதாரணமான பிறவிகள்.

    ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வு அல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்¬. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சியத் தீ என்றுமே அணைந்து
    விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கிறது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டி எழுப்பி விடுகிறது.

    (1990)

    தமிழன்னையின் கருவூலத்தில் மாவீரர்கள்


    எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறார்கள். உயர்ந்து நிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்.

    தோற்றம், மாற்றம், மறைவு என்ற சூட்சுமச் சுழற்சியிலே காலம் நகர்கிறது. ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலநதியில் காலத்திற்குக்காலம் தோன்றிமறையும் நீர்க்குமிழிகள் போன்று நிலையற்றதாக மனிதவாழ்வு சாவோடு முடிந்துபோகிறது, முற்றுப்பெறுகிறது. ஆனால், எமது மாவீரர்களது வாழ்வும் வரலாறும் அப்படியானவையல்ல. மரணத்தின் பின்னாலும் அவர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்
    கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.

    (2006)

    மாவீரர்கள் வணங்கா மன்னர்கள்


    எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள். எதிரிக்குத் தலைவணங்காத வணங்கா மன்னர்கள். எமது தேசவிடுதலைக்காகக் களமாடி வீழ்ந்த மாவீரர் அனைவரும் மனிதமலைகளாக, மனிதக்கோட்டைகளாகவே எமது மண்ணைக் காத்து நிற்கின்றனர்.

    ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.

    (2007)

    சிங்களத்தின் கனவு நிச்சயம் கலையும்


    எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை. எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.

    இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக, கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவருகிறது. எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளிகொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாளச் சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது. தீராத ஆசை கொண்டு நிற்கிறது. மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன.

    ஆசையின் பிடியிலிருந்து மீட்சிபெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபடமுடியாது. மண்ணாசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டிவந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்.

    (2008)

    அடிபணிவு என்ற பேச்சுக்கு இடமில்லை


    இராணுவ அடக்குமுறை என்ற அணுகுமுறை மூலம் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதை சிங்கள அரசு இன்னும் தெரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. இராணுவ மேலாதிக்கத்தை எட்டிப் பிடிக்க வேண்டும் என்ற ஆதிக்க வெறி இன்னும் சிங்கள ஆளும் வர்க்கத்திடமிருந்து அகன்று போனதாகத் தெரியவில்லை.

    இராணுவ ஆதிக்கத்திற்கும், அழுத்தத்திற்கும் புலிகள் இயக்கம் என்றுமே விட்டுக்கொடுத்ததேயில்லை. கொண்ட கொள்கையில் நாம் என்றுமே வளைந்து கொடுத்ததில்லை. எமது இயக்கத்தின் இந்த உறுதிப்பாட்டை உலகத்தின் மிகப்பெரிய இராணுவமே பரீட்சித்துப் பார்த்து தோல்வி கண்டது. சிங்கள இராணுவமும் இந்த வரலாற்றுத் தவறை சந்திக்கத்தான் நேரிடும்.

    (1991)

    நாம் போர்வெறியர்கள் அல்ல


    இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம். எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சியவல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம்.

    அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களையெல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம். பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களையெல்லாம் தனித்துநின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம்.

    இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.

    சிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமைகொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண். பழந்தமிழர் நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண். வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண். இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழவிரும்புகிறோம். ஆங்கிலேயக் காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடிவருகிறோம்.

    சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டுவந்திருக்கிறது.

    ஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், சனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள். அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்
    முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்கமுனைந்தது. அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்கமுடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது.

    சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு
    செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது. தவிர்க்கமுடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது.

    நாம் சமாதான வழிமுறைகளுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர். அதேநேரம் நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை. சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களிற் பேச்சுக்களிற் பங்குபற்றிவந்திருக்கிறோம். எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்டபோதும் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவவழித் தீர்விலான நம்பிக்கைகளுமே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.

    (2008)

    வல்லரசுகளின் எதிர்மறையான தலையீடு


    எமது பிராந்தியத்திலே உலகப் பெருவல்லரசுகளின் இராணுவ, பொருளாதார, கேந்திர நலன்கள் புதைந்து கிடப்பதை நாம் நன்கு அறிவோம். அந்த நலன்களை முன்னெடுக்க உலக வல்லரசுகள் முனைப்புடன் முயற்சிப்பதையும் நாம் விளங்கிக்கொள்கிறோம்.

    இதற்கு இலங்கைத்தீவில் நெருக்கடிநிலை நீங்கி, சமாதானமும் நிலையான நல்லாட்சியும் தோன்ற அனைத்துலக நாடுகள் ஆர்வமும் அக்கறையும் காட்டுவதையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம். இதேநேரம் பேரினவாதச் சிங்கள அரசு உலகநாடுகளின் நலன்களையும் அவை எமது பிராந்தியத்திற் பதிந்திருப்பதையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயற்சிக்கிறது. போலியான, பொய்யான பரப்புரைகள் வாயிலாக உலக நாடுகளைத் தமது வஞ்சக வலைக்குள் வீழ்த்தி, தமிழரது விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகத் திருப்பிவிடுகின்ற கைங்கரியத்தைச் செய்துவருகிறது.

    சிங்கள அரசின் வஞ்சக வலைக்குள் வீழ்ந்து, உலகநாடுகள் எமது பிரச்சினையில் எதிர்மறையான தலையீடுகளைச் செய்வதுதான் எமக்கும் எமது மக்களுக்கும் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தருகிறது.

    (2007)

    குறிவைக்கப்படும் புலம்பெயர் தமிழர்கள்


    இவற்றுக்கும் மேலாக, புலம்பெயர்ந்து வாழும் எமது மக்கள் தாம் வாழும் நாடுகளிலே பலம்பொருந்திய சக்தியாக நின்று, தமிழீழ விடுதலைப் போருக்கு உதவி வருவதையும் அரசியல் ஆதரவைத் திரட்டிவருவதையும் சிங்களத் தேசத்தாற் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சிங்களப் பேரினவாதத்தின் கோரப்பிடிக்குட்சிக்கி, எம்மக்கள் அழிந்துவருவதையும் அந்தப் பேரழிவைத் தடுக்க, புலம்பெயர்ந்த மக்கள் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானப் பணிகளையும் மேற்கொண்டு வருவதையும் சிங்களப் பேரினவாதத்தாற் சகிக்கமுடியவில்லை.

    எனவேதான், புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் தாயக மக்களுக்கும் இடையிலான உறவுப்பாலத்தை உடைத்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிடச் சிங்களப் பேரினவாதம் தீவிரமாக முயற்சித்துவருகிறது. இந்த அநியாயத்திற்குச் சில உலக நாடுகளும் துணைபோகின்றன. எம்மக்கள் தாம் வாழும் நாடுகளின் அரசியற் சட்டங்களுக்கு அமைவாக, நீதி தவறாது மேற்கொள்ளும் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானச் செயற்பாடுகளையும் படுபாதகமான குற்றவியற் செயல்களாக இந்நாடுகள் காட்டிவருகின்றன.

    தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைதுசெய்து, சிறைகளிலே அடைத்து, அவமானப்படுத்தியிருக்கின்றன. நீதி கேட்டு, நியாயம் கோரி எம்மக்கள் நடாத்திய போராட்டங்களைக் கீழ்த்தரமாகக் கொச்சைப்படுத்தியிருக்கின்றன.

    (2007)

    முடிவில்லாத துன்பியல் நாடகம்


    முடிவில்லாத ஒரு துன்பியல் நாடகமாகத் தமிழரின் இனப் பிரச்சினை தொடர்கிறது. எமது பிரச்சினைக்குத் தீர்வுகாண ஆளும்கட்சி முயற்சிப்பதும் எதிர்க்கட்சி எதிர்ப்பதும் பின்பு எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக மாறி மீண்டும் அதே முயற்சியும் அதே எதிர்ப்புமாக இந்தச் சிங்கள அரசியல் வரலாற்று நாடகம் தொடர்ச்சியாக ஒரே பாணியிற் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக மேடையேறி வருகிறது. இலங்கையில் மாறிமாறி ஆட்சிபீடம் ஏறும் இரு பெரும் சிங்கள அரசியற் கட்சிகளுமே தமிழர்களுக்கு விரோதமான இந்த விபரீத நாடகத்தின் இயக்குனர்கள். இந்த இனவாத நாடகத்தின் கதாநாயகர்கள் காலத்திற்குக்காலம் மாறியபோதும் கதையின் கருப்பொருள் மாறவேயில்லை. தற்போது கொழும்பில் உருவாகியிருக்கும் அரசியல் நெருக்கடியும் இந்த அபத்த நாடகத்தின் அப்பட்டமான வெளிப்பாடுதான்.

    தமிழர்களைப் பகடைக் காய்களாகப் பாவித்து ஆடப்படும் இந்த சதுரங்க விளையாட்டின் எதிர்விளைவாக எத்தனையோ சமரச முயற்சிகள் பாழடிக்கப்பட்டன. எத்தனையோ பேச்சுவார்த்தைகள் முறிந்து போயின. எத்தனையோ உடன்பாடுகள் கிழித்தெறியப்பட்டன. எத்தனையோ ஒப்பந்தங்கள் செயலிழந்து செத்துப் போயின. இதனால் தமிழரின் பிரச்சினை தீர்வின்றித் தொடர்கிறது. காலத்தால் மோசமாகித் தமிழரின் அவல வாழ்க்கை தொடர்கிறது.

    (2003)

    நிறைவேற்றப்படாத மாவீரர்களின் கனவு


    தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சர்வதேச மயப்படுத்தி, உலகத்தின் கவனத்தை எம்மீது திருப்பினோம். எனினும் எமது மாவீரர் கண்ட கனவு இன்னும் நிறைவுபெறவில்லை.

    எமது தாயக மண் இன்னும் முழுமையாக விடுதலைபெறவில்லை. எமது மக்கள் இன்னும் பூரண சுதந்திரம் அடைந்துவிடவில்லை. தமிழீழத்தின் தொன்மைவாய்ந்த, வரலாற்றுப் புகழ்மிக்க நகரங்களும் பட்டினங்களும் அங்கு வாழ்ந்து வரும் எமது மக்களும் இன்னும் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புப் பிடியிலிருந்து விடுபடவில்லை. அவர்கள் திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அடைபட்டு, நசிபட்டு, மிதிபட்டு வாழ்கிறார்கள். தமது சொந்த மண்ணிலிருந்து வேர் அறுபட்டு இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோர், தாம் பிறந்து வாழ்ந்த நிலங்களுக்குத் திரும்ப முடியாது அகதி முகாம்களில் அல்லற்படுகிறார்கள்.

    எமது மக்களின் துயரும் துன்பமும் தொடர்கிறது. தேச விடுதலை என்ற எமது இலட்சியம், எமது மாவீரர்கள் கனவுகண்ட அந்த சத்திய இலட்சியம் இன்னும் நிறைவுபெறவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலேயே என்றுமில்லாதவாறு ஓர் இக்கட்டான, சிக்கலான சூழ்நிலையை நாம் இன்று எதிர்கொண்டு நிற்கின்றோம். போருமின்றி, நிலையான சமாதானமுமின்றி, இயல்பு நிலையுமின்றி, இடைக்காலத் தீர்வுமின்றி, இனப் பிரச்சினைக்கு முடிவுமின்றி, நாம் ஒரு அரசியல் வெறுமைக்குள் வாழ்ந்து வருகின்றோம். இந்த அரசியற் சூனிய நிலை நீடித்தால், அது எமது இலட்சியப் போராட்டத்திற்குப் பெரும் பங்கத்தை ஏற்படுத்திவிடும் என்பது திண்ணம்.

    மூன்று தசாப்தங்களாக முடிவின்றித் தொடர்ந்து ஆயுதப் போருக்கு நாம் ஓய்வுகொடுத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் அமைதிகாத்த இக் கால விரிப்பில், சமாதான வழிமூலமாகத் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண எம்மாலான சகல முயற்சிகளையும், நேர்மையுடனும் உறுதிப்பாட்டுடனும் நாம் மேற்கொண்டோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.


    ...இடைக்காலத் தீர்வுமின்றி, நிரந்தரத் தீர்வுமின்றி, நிலையான அமைதியுமின்றி, நிம்மதியான வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்க முடியாது. சிங்கள தேசமானது தமிழினத்தை அரவணைத்து, இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம், பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டும் கெட்டான் நிலையில் விடிவின்றி, விடுதலையின்றி, எதிர்காலச் சுபீட்சமின்றி சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்தும் வாழமுடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லைக்கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்துவிட்டோம்.

    (2004)

    தமிழீழ தாயகம் அடிப்படையானது


    எந்தவோர் அரசியற் தீர்வுத் திட்டத்திற்கும் தமிழரின் தாயகம் அடிப்படையானது. தமிழரின் நிலமானது தமிழரின் தேசிய வாழ்விற்கும் தேசிய தனித்துவத்திற்கும் ஆதாரமானது. தமிழர்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்துவரும் தாயக நிலத்தை அங்கீகரிக்காத எந்தவொரு திட்டமும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது.

    (1998)

    நாம் எதற்காகப் போராடுகின்றோம்?


    நாம் எதனைக் கேட்கின்றோம்? எதற்காக நாம் போராடி வருகின்றோம்? நாம் எமது மண்ணில், வரலாற்று ரீதியாக எமக்குச் சொந்தமான நிலத்தில், நாம் பிறந்து வாழ்ந்த எமது தாயகப் பூமியில், நாம் நிம்மதியாக, கௌரவமாக, எவரது தலையீடுகளுமின்றிச் சுதந்திரமாக வாழ்வதற்கு விரும்புகின்றோம்.

    நாமும் மனிதர்கள். மனிதர்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கொண்ட ஒரு மனித சமூகம். தனித்துவமான மொழியையும், பண்பாட்டு வாழ்வையும், வரலாற்றையும் கொண்ட ஒரு தனித்துவமான இனத்தைச் சேர்ந்த மனிதர்கள் நாம். எம்மை ஒரு மனித சமூகமாக, தனித்துவப் பண்புகளைக் கொண்ட மக்களாக ஏற்குமாறு கேட்கிறோம். எமது அரசியல் வாழ்வை நாமே தீர்மானித்துக் கொள்ளும் உரிமை எமக்குண்டு. இந்த உரிமையின் அடிப்படையில் நாமே எம்மை ஆளும்வகையில் ஒரு ஆட்சிமுறையை அமைத்து வாழவே நாம் விரும்புகிறோம்.

    (1997)

    மகாவம்ச மனவுலகில் சிங்களம்


    சிங்களத் தேசம் இன்னும் மகாவம்ச மனவுலகில், அந்தப் புராணக் கருத்துலகிற் புதைந்துபோய்க் கிடக்கிறது. இலங்கைத் தீவானது தேரவாத பௌத்தத்தின் தெய்வீகக் கொடையென்றும் சிங்கள இனத்திற்கே உரித்தான சொத்துடைமை என்றும் மகாவம்சம் திரித்துவிட்ட புனைகதையிற் சிங்களமக்கள் இன்னும் சிக்குண்டு கிடக்கிறார்கள். அடிமனதில் ஆழமாக உறைந்து, அசைவற்றதாக இறுகிப்போன இந்தப் புராணக் கருத்து நிலையிலிருந்து சிங்களத் தேசம் விடுபடப் போவதில்லை.

    இந்தக் கருத்தியற் குருட்டுத்தனத்தால் இலங்கைத் தீவின் உண்மை வரலாற்றையும் அங்கு நிலவும் சமுதாய மெய்நிலைகளையும் சிங்கள மக்களாலும் அவர்களது அரசியல், மதத் தலைமைகளாலும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இலங்கைத் தீவின் வடகிழக்கு மாநிலத்தைத் தாயகத் தேசமாகக் கொண்டு, தமிழீழ மக்கள் என்ற வரலாற்றுத் தொன்மைமிக்க ஓர் இனம் இருப்பதையும் அவர்கள் ஒரு தனித்துவத் தேசமாக வாழ்ந்து வருவதையும் அவர்களுக்கு அடிப்படையான அரசியல் உரிமைகள், சுதந்திரங்கள் உள்ளன என்
    பதையும் சிங்களவராற் புரிந்துகொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ முடியவில்லை.

    தமிழரது இருப்பு நிலைபற்றிய உண்மையைக் கிரகித்து, அவர்களது அரசியல் அபிலாசைகளைப் புரிந்துகொள்ளச் சிங்களத்தேசம் மறுத்து வருவதாலேயே தமிழ்மக்களது தேசிய இனப்பிரச்சினை தீர்வின்றி, முடிவின்றிச் சிக்கலடைந்து இழுபட்டு வருகிறது.

    சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள - பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்துபோகவில்லை.

    மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது. தென்னிலங்கை அரசியற் களத்தில் அதன் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. இப்படியான புறநிலையில், தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்குச் சிங்களத் தேசத்திலிருந்து ஒரு நீதியான, நியாயமான தீர்வு கிட்டுமென அன்றும் சரி, இன்றும் சரி, நாம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. எமக்கே உரித்தான எமது அடிப்படை உரிமைகளை நாமாகவே போராடி வென்றெடுக்க வேண்டுமே தவிர, சிங்கள அரசியல்வாதிகளின் காருணியத்தில் பெற்றுக்கொள்ளலாம் என நாம் என்றுமே கருதியதில்லை.

    இதுவே, அன்றும் இன்றும் எமது விடுதலை இயக்கத்தின் உறுதியான இலட்சியமாக இருந்து வருகிறது.

    (2005)

    தமிழீழத் தனியரசே ஒரே தீர்வு


    சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் ஒரு நியாயமான தீர்வை ஒருபோதும் முன்வைக்கப்போவதில்லை என்பது இன்று வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. எத்தனை ஆண்டுகள் கடந்துசென்றாலும் எத்தனை யுகங்கள் ஓடி மறைந்தாலும் சிங்களத் தேசத்தில் மனமாற்றம் நிகழப்போவதில்லை என்பதும் தமிழருக்கு நீதிகிடைக்கப்போவதில்லை என்பதும் இன்று தெட்டத்தெளிவாகியிருக்கிறது.

    எனவே, நடக்கமுடியாத விடயத்தில் நம்பிக்கை வைத்து, தொடர்ந்தும் அதே பழைய பாதையில் நடைபோட இனியும் நாம் தயாரில்லை. எம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளவும் நாம் விரும்பவில்லை. சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தனியரசு என்ற ஒரேயரு பாதையைத்தான் இன்று தமிழீழ மக்களுக்குத் திறந்துவைத்திருக்கிறது.

    எனவே, இந்த விடுதலைப் பாதையிற் சென்று, சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதென இன்றைய நாளில் நாம் தீர்க்கமாக முடிவுசெய்திருக்கிறோம். எமது அரசியற் சுதந்திரத்திற்கான இந்தப் போராட்டத்தை விரைவாக ஏற்று அங்கீகரிக்குமாறு நீதியின் வழிநடக்கும் உலகநாடுகளையும் சர்வதேச சமூகத்தையும் நாம் அன்போடு வேண்டுகிறோம்.

    உலகத் தமிழினத்தின் எழுச்சி

    தமிழினம் விடுதலைப் பாதையில் வீறுகொண்டெழுந்திருக்கின்ற இந்தப் பெருமைமிகுந்த வரலாற்றுக் காலகட்டத்தில் உலகத்தமிழினத்தின் உதவியையும் பேராதரவையும் நாம் வேண்டிநிற்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்திலே எமது புலம்பெயர்ந்த உறவுகள் காலங்காலமாக விடுதலைப் போராட்டத்திற்குச் செய்துவரும் பெரும் பங்களிப்பிற்கும் உதவிகளுக்கும் எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ந்தும், உங்கள் தார்மீகக் கடமையை ஆற்றுமாறு வேண்டுகிறேன். இதேபோன்று எமக்காக உணர்வுபூர்வமாக உரிமைக்குரல் கொடுத்துவரும் தமிழக உறவுகளுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்வதோடு எமது தமிழீழத் தனியரசு நோக்கிய போராட்டத்திற்கு தொடர்ந்தும் நல்லாதரவும் உதவியும் வழங்கி, எமக்குப் பக்கபலமாகச் செயற்படுமாறு அன்போடும் உரிமையோடும் வேண்டுகிறேன்.

    (2006)

    இலட்சியத்தை நிச்சயம் அடைவோம்


    இன்று உலகம் மாறி வருகிறது. உலக ஒழுங்கும் மாறி வருகிறது. உலக நாடுகளின் உறவுகளும் மாறி வருகின்றன. மனித சமுதாயம் முன்னென்றும் காணாத புதிய சவால்களுக்கு முகம் கொடுத்து நிற்கின்றது. இன்றைய உலக நிதர்சனத்தை, அதன் யதார்த்தப் புறநிலைகளை நாம் உதாசீனம் செய்ய முடியாது. இன்றைய காலத்தையும், இக் காலத்தில் கட்டவிழும் சூழலையும் நாம் ஆழமாகப் புரிந்து, காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப, எமது விடுதலைப் பாதையை செப்பனிடுவது அவசியம். இன்றைய காலத்தின் தேவை அது. உலகப் போக்குடன் முரண்படாது, உலக வரலாற்றின் ஓட்டத்திற்கு இசைவாக, நாமும் எமது போராட்ட வரலாற்றை முன்னகர்த்திச் செல்வதே விவேகமானது. இன்றைய வரலாற்றின் கட்டாயமும் அதுவே.

    ...அமைதி வழியில், மென்முறை தழுவி, நேர்மையுடனும் நெஞ்சுறுதியுடனும் நாம் எமது போராட்ட இலட்சியத்தை அடைய முயன்று வருகின்றோம். காலத்திற்கு ஏற்ப, வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய, எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப் போவதில்லை.

    சத்தியத்தின் சாட்சியாக நின்று, எமது மாவீரர்களின் தியாக வரலாறு எமக்கு வழிகாட்டும். அந்த சத்தியத்தின் வழியில் சென்று, நாம் எமது இலட்சியத்தை அடைவோம் என்பது உறுதி.

    (2002)

    "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"



    (தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு)


    http://actressmasaala.blogspot.com





  • http://girls-stills.blogspot.com



  • [Continue reading...]

    எங்களுடைய வாக்க�� வாங்கி ஆட்சி அம��த்து, எங்களையே ம��டக்குவது என்பது எவ்வளவு கொடுமை: சீமான்

    - 0 comments


    19 11 2011 முதல் இனம் காக்க உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களை போற்றும் வகையில் தமிழர் எழுச்சி வார நிகழ்வை ஒரு வாரத்திருக்கு நாம் தமிழர் கட்சி ஏற்பாடு செய்து இருந்தது, இதன் முதற்கட்டமாக 19 11 2011 அன்று வில்லிவாக்கத்தில் நடைபெற இருந்த பொது கூட்ட அனுமதியை திடீரென ரத்து செய்தது தமிழக காவல்துறை.

    அது மட்டுமல்லாமல் டிசம்பர் 6ம் தேதி வரை நாம் தமிழர் நடத்தும் எந்த கூட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை, தடை செய்யப்பட்ட இயக்கத்தை பற்றி பிரச்சாரம் செய்வது சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் என காவல்துறை காரணம் கூறியும் பல்வேறு காரணங்களை கூறியும் நாம் தமிழர் எழுச்சி வார நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் உள்ளரங்கங்களின் அந்நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக 25.11.2011 அன்று சென்னை அம்பத்தூரில் உள்ள 'ஆஸ்ஸி' பள்ளி மைதானத்தில் நடந்த நாம் தமிழர் குடும்ப விழாவில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

    அவர் பேசுகையில்,

    என்ன உங்கள் பிரச்சனை. சீமானை பேசவிட்டால் விடுதலைப்புலிகளை ஆதரிச்சுப் பேசுவான். சீமானை பேசவிட்டால் தடை செய்யப்பட்ட இயக்கத்தை பற்றி பேசுவான். உன்னை யார் தடை செய்ய சொன்னது. தடையை நீக்கு என்கிறோம். நாங்கள் ஆதரித்து பேச வேண்டும் தடையை நீக்கு என்கிறோம். முதலில் அதை புரிந்துகொள்ளுங்கள்.

    ஒரு பொது வாக்கெடுப்பை இந்த நாட்டில் இந்த அரசுகள் செய்யுமா. விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தடை தேவையா இல்லையா. ஒரு வாக்கெடுப்பை நடத்துமா. 100க்கு 99 விழுக்காடு விடுதலைப்புலிகள் மீதான தடை தேவையில்லை என்று மக்கள் வாக்கு செலுத்துவார்கள். நீங்கள் எல்லாவற்றையும் எங்களுக்குள் திணிக்கிறீர்கள்.

    விடுதலைப்புலிகளை பிறந்ததிலிருந்து ஆதரிச்சு பேசுகிறேன். என் ஆத்தா பேசுறாள். என் அப்பன் பேசுறான். என்னுடன் பிறந்தவன் அத்தனைப் பேரும் பேசுறான். என் உயிர் தமிழ்ச் சொந்தங்கள் அத்தனை பேரும் பேசுறான். அனுமதி கொடுக்கவில்லை என்றால் ஆதரிச்சு பேசிட மாட்டேனா. பிரபாகரன் பிறந்த நாளை ரோட்டில் கொண்டாடவில்லை. ஒவ்வொரு தமிழனும் வீட்டில் கொண்டாடிக்கொண்டிருக்கிறான்.

    உங்களுக்கு என்ன தெரியும், பிரபாகரனை யார் என்று தெரியுமா? என்ன தெரியும். மாவீரர் தினம் கொண்டாடிவிடுவார்கள். சுவரொட்டி ஒட்டக் கூடாது. மாவீரர் தினம் கொண்டாட அனுமதியில்லை. ஏன். என் இனத்தின் மானத்தையும், என் இனத்தையும் காப்பாத்த செத்தான்ல்ல அதுக்காக கொண்டாடிவிடக் கூடாது. என் நாடு. என் பூமி. மானத் தமிழர்கள் வாழுகிற பூமி. என் இனத்தின் மானத்தை காக்க செத்தவனுக்கு நான் நன்றி சொல்லக்கூட இந்த மண்ணில் உரிமை இல்லை.

    இத்தனை கூட்டங்கள் நாங்கள் நடத்தியிருக்கிறோம். 21 ஆண்டுகளாக விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்து, பல்வேறு தலைவர்கள், பல்வேறு கட்சிகள் பேசியிருக்கிறார்கள். அதனால் இந்த மண்ணில் நடந்த ஏதாவது ஒரு அசம்பாவிதத்தை நீங்க சொல்லுங்க. பிறகு இந்த கூட்டத்துக்கு தடை போடுங்கள். ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்களுடைய சட்டம், உங்களுடைய செயல்பாடுகளை முடக்கும். என்னுடைய பேச்சை நீங்கள் தடை செய்யலாம். ஆனால் என்னுடைய உணர்வையும், என்னுடைய கனவையும் எந்த சட்டமும் தடை செய்ய முடியாது. அதை நீங்க புரிந்து கொள்ள வேண்டும்.

    நீங்கள் ஒவ்வொரு தடைவையும் இதை செய்துக்கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் ஒவ்வொரு தடைவையும் பணிந்து பணிந்து போவோம் என்று எதிர்பார்த்துக்கிட்டு இருக்கீங்க. இதுவெல்லாôம் சாத்தியமில்ல. குறைந்தபட்சமாவது ஒரு கட்டுப்பாடுகளை போட்டாவது கூட்டம் நடத்த அனுமதிச்சிருக்க வேண்டும்.

    இது உண்மையிலேயே ஜனநாயக நாடா. அமெரிக்காவில் தடை இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் தடை இருக்கிறது. பிரான்சில் தடை இருக்கிறது. கனடாவில் தடை இருக்கிறது. ஜெர்மனில் தடை இருக்கிறது. ஆனால் எல்லா நாடுகளிலும் தலைவர் பிறந்த நாளும், மாவீரர் தினமும் எழுச்சியாக் கொண்டாட அந்த நாடுகள் அனுமதிக்கிறது. ஏன். அந்த நாடுகள் கருத்து சுதந்திரம் உள்ள நாடு. இந்தியா கருத்து சுதந்திரமற்ற ஒரு சர்வாதிகார நாடு.

    இதில் தமிழர்களுக்கென்று ஒரு அரசு இருக்கிறது. எந்த தமிழனும் தமிழராக இருக்கக்கூடாதுன்னு சொல்றத்துக்கு ஒரு அரசு இருக்கிறது. இதைவிட ஒரு கேவலம். இதைவிட ஒரு இழிநிலை எதுவுமே இருக்க முடியாது. இந்த மண்ணின் மகன், ஒரு தமிழன் தன்னை தமிழன் என்று சொல்வதே தேசத் துரோக குற்றம் என்று சொன்னால் இதைவிட கொடுமை எங்கே இருக்கிறது. எங்களுடைய வாக்கை வாங்கி அதில் வலிமையைப் பெற்று ஆட்சியை அமைத்து, அதிகாரங்களை பெற்றுக்கொண்டு, எங்களிடமே அதைக்காட்டி, எங்களை நசுக்குவது, எங்களையே முடக்குவது என்பது எவ்வளவு கொடுமையானது.

    கடலூரில் கூட்டம் நடத்தக் கூடாது. ஏன். அங்க டிரைனேஜ் தோண்டிக்கிட்டு இருக்காங்களாம். கழிவு போவதற்கு கால்வா. அது தடைப்பட்டுவிடுமாம். என்னடா காலக்கொடுமையா இருக்குது. இதெயெல்லாம் முதல்ல நிறுத்திகிருங்க. எங்களை ஒருபோதும் நாங்கள் மாத்திக்கொள்ள முடியாது. அதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். இவ்வாறு பேசினார்.


    http://actressmasaala.blogspot.com





  • http://girls-stills.blogspot.com



  • [Continue reading...]

    மாவீரர்களின் நி��ைவு தாங்கிய நினைவுக்கல் சுவிசில�� திறந்துவைக்கப்���ட்டது (படங்கள்)

    - 0 comments


    மாவீரம் என்பது தமிழீழ விடுதலையின் ஆணிவேர். ஆனால் இன்று எம் ஆணிவேர்களின் துயிலுமில்லங்கள் இனவாத சிங்கள அரசினாலும் அவர்களின் அடிவருடிகளினாலும் சிதைத்துச் சின்னாபின்னமாக்கப்பட்டமை நாம் அனைவரும் அறிந்து உண்மை.

    சிங்கள அரசின் எத்தகைய ஈனச்செயல்களாலும் ஈழத்தமிழினம் அடிபணிந்து அடிமைகளாய் வாழமாட்டோம் என்பதை மீண்டும் ஒருமுறை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினரால் 27.11.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணியளவில் சுவிஸ் நாட்டின் வோ மாநில இவர்டோன் நகரில் தாயக விடுதலைக்காய் உயிர்நீத்த மாவீரர்கள் மாமனிதர்கள் நாட்டுப்பற்றாளர்கள் பொதுமக்கள் என அனைவரினதும் நினைவு தாங்கிய நினைவுக்கல் திறந்துவைக்கப்பட்டது.

    இவ்வைபவமானது நினைவுக்கல்லிற்கான பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி அகவணக்கம் மலரஞ்சலி தீபமேற்றல் என அனைத்து அம்சங்களும் இடம்பெற்று இறுதியாக உறுதிப்பிரமாணம் எடுத்தலுடன் இனிதே நிகழ்ந்து நிறைவெய்தியது.

    இவ்வைபவத்தில் சுவிஸ் வாழ் மாவீரர் குடும்ப உறவுகளுடன் சுவிஸ்கிளைச் செயற்பாட்டாளர்களுமாக ஐம்பதிற்கு மேற்பட்ட உறவுகள் கலந்து தமது அகவணக்கத்தைச் கெலுத்தியிருந்தார்கள.






    http://actressmasaala.blogspot.com





  • http://girls-stills.blogspot.com



  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger