Monday 20 February 2012

நல்ல வாய்ப்புக்காக காதிருக்கும் மதுஷாலினி

- 0 comments
 


சினிமாவில் நல்ல இடத்துக்காக காத்திருக்கிறேன் என்று நடிகை மதுஷாலினி கூறியுள்ளார். பாலாவின் அவன் இவன் படத்தில் நாயகியாக நடித்தவர் மதுஷாலினி. அதன் பிறகு எந்த தமிழ் படத்திலும் கமிட் ஆகாத மதுஷாலினி, அதற்கு விளக்கமும் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், அவன் இவன் படத்தை தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகள் எனக்கு வந்தது. அவன் இவன் படத்தைப் போல அப்பாவி கேரக்டர் நிறைய. நான் தான் மறுத்து விட்டேன். நல்ல படம் கொடுங்கன்னு யார்க்கிட்டேயும் கேட்க முடியாது. அவன் – இவன் எனக்கு நல்ல விசிட்டிங் கார்டு. அதை வைத்துக் கொண்டு நான் சும்மா வந்து போகிற படத்துல நடிச்சு, இருக்குற பெயரைக் கெடுத்துக்க முடியாது. அப்படி நடிக்கவும் தேவையில்லை. நான் எலக்ட்ரானிக் இன்ஜினீயரிங் படிச்ச பொண்ணு. இப்பவும் வேலைக்கு நிறைய ஆஃபர் இருக்கு. ஆனா சினிமாதான் முக்கியம்ன்னு வந்துட்டேன்.
சினிமா ஆசையை சொன்னதும் வீட்டுல முதலில் பயந்தாங்க. அப்புறம் ஏத்துக்கிட்டாங்க. நீங்க சொல்லுகிற மாதிரி தமிழ் சினிமாவில் எனக்கு நல்ல இடம் கிடைக்கும் அதுக்குதான் காத்துக்கிட்டு இருக்கேன், என்று கூறியுள்ளார்.
[Continue reading...]

சமந்தாவை காதல் தொல்லை செய்யும் சந்தானம்...!

- 0 comments
 
 
 
நடிகை சமந்தாவுக்கு, காமெடி நடிகர் சந்தானம் காதல் தொ‌ல்லை கொடுத்து இம்சை பண்ணுகிறாராம். இது நிஜத்தில் அல்ல, சினிமாவில் தான். தெலுங்கில் மஹதீரா எனும் மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய ராஜ மெளலி, அடுத்து நான் ஈ என்ற படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழியிலும் இயக்கி வருகிறார். இதில் தெலுங்கு நடிகர் நானி, சமந்தா, சந்தானம் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
 
படம்குறித்து டைரக்டர் ராஜ மெளலி கூறுகையில், படத்தின் கதைப்படி ஹீரோயின் சமந்தா, ஏழ்மையான ஹீரோ நானியை லவ் பண்ணுகிறார். அதேப்போல் வில்லன் சுதீப்பும் சமந்தாவை லவ் பண்ண, சமந்தா அவரது காதலை ஏற்க மறுக்கிறார். இதனால் ஆத்திமுற்ற வில்லன் சுதீப், ஹீரோ நானியை கொன்று விடுகிறார். பின்னர் ஹீரோ நானி மறுபிறவியில் ஈ -ஆக பிறவியெடுத்து எதிரியை எப்படி அழிக்கிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறேன். இதில் விஷேசம் என்னவென்றால் தமிழ் சினிமாவில் ஈ-யை வைத்து படம் வருவது இதுதான் முதல்முறை. அதுமட்டுமல்ல இந்தபடத்தில் சந்தானத்தை லவ் பண்ணும் கேரக்டரில் சமந்தா நடிக்கிறார். நானி கொல்லப்பட்டதும், மறுபிறவியில் சந்தானத்தை, ஹீரோ நானியாக நினைத்து லவ் பண்ணுகிறார் சமந்தா. அதேபோல் சந்தானமும், சமந்தாவை துரத்தி, துரத்தி லவ் பண்ணுகிறார். சந்தானம் இதுவரை நடித்த படங்களிலேயே, இந்தபடத்தில் தான் அவருக்கு டயலாக் ரொம்ப கம்மி, அதேசமயம் அவருடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமாக இப்படம் அமையும் என்றார்.




[Continue reading...]

சிங்கிளாய் நின்று ஜெயித்த நாஞ்சில் சிங்கமே வருக !வருக!

- 0 comments
 
மும்பை மாநகராட்சி தேர்தலில் தமிழர்களை காவு வாங்கிய காங்கிரசை தோற்கடித்து தனது நண்பரை மாநகராட்சி கவுன்சிலராக்கி வெற்றியுடன் தமிழகம் வரும் பதிவர் நாஞ்சில் சிங்கம் அண்ணன் நாஞ்சில் மனோ அவர்களை வருக வருகவென வரவேற்கிறேன் .
[Continue reading...]

இறுதிப்போர் குற��றச்சாட்டுக்கள் ���ொடர்பில் பிரிட்டன் நாடாளுமன்றி��் விவாதம்

- 0 comments


இலங்கையின் இறுதிப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான வீரேந்திரா சர்மாவின் கோரிக்கைக்கு அமைய நடத்தப்படவுள்ள இவ் விவாதம் இந்த வாரத்தில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டுமென பிரித்தானிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கெரீ மெக்கர்தி அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் சில கேள்விகள் எழுந்துள்ளதாகவும், அது குறித்து இந்த வாரத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் மெக்கர்தி தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இரண்டு தரப்பினாலும் மேற்கொள்ளப்பட்ட சகல குற்றச்செயல்கள் தொடர்பிலும் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மைக் கேப்ஸ் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந் நிலையிலேயே வீரேந்திரா சர்மாவும் கோரிக்கை விடுத்ததையடுத்து இலங்கை மனித உரிமைகள் தொடர்பில் விவாதம் நடத்த நாடாளுமன்றம் அனுமதியளித்துள்ளது.


http://tamil-cininews.blogspot.com



  • http://tamilfashionshow.blogspot.com

  • [Continue reading...]

    கூடங்குளம் அணும��ன் நிலையம் பாதுகாப்பானது, ஆபத்தி���்லை : தமிழக அரசின் நிபுணர் குழு

    - 0 comments


    கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது, பேரலைகள் தாக்கினாலும், அணு உலைகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என தமிழக அரசின் நிபுணர் குழு அறிவித்துள்ளது.

    கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து, அப்பகுதி மக்கள் கடந்த 6 மாதங்களாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். மத்திய அரசினால் நிபுணர் குழு அமைக்கப்பட்டு, மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் விளக்கமளிக்கப்பட்டு வந்த போதும் போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில் தமிழக அரசு, அணு மின் நிலையத்தை ஆராய்வதற்கு நால்வர் கொண்ட வல்லுனர் குழுவை அமைத்தது.

    அண்ணா பல்கலைக்கழக எரிசக்தி ஆய்வு மைய பேராசிரியர் இனியனை அமைப்பாளராக கொண்டு இந்திய அணு சக்தி கழக முன்னாள் தலைவர் சீனிவாசன், சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் அறிவுஓளி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயராகவன் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

    இக்குழுவினனர் அணு மின் நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தியதுடன், நேற்று காலை நெல்லையில் இந்திய அணு சக்தி கழக அதிகாரிகள், கலெக்டர் செல்வராஜ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் போராட்ட குழுவினருடனும் கலந்தாலோசித்தனர்.

    பின்பு தமிழக அரசின் வல்லுநர் குழு அமைப்பாளர் இனியன் நிருபர்களிடம் கூறியதாவது:

    தமிழக அரசு அணு மின் நிலைய கட்டமைப்பு, பாதுகாப்பு அம்சங்களை பார்த்து வரவும், மக்களின் அச்ச உணர்வுகளை அறிந்து வரவும் எங்களை கேட்டுக் கொண்டது. இதைத் தொடர்ந்து நாங்கள் அணுமின் நிலையத்தை பார்வையிட்டோம். அணு உலைகளை குளிர்விப்பதற்காக கடல் நீர் கொண்டு செல்லும் போது ஒரு மீன் கூட சாகாத வகையில் நேர்த்தியாக உபகரணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    உள்ளே செல்லும் மீன்களும் கடலுக்கு திரும்பி விடும் வகையில் அந்த அமைப்பு உள்ளது. பேரலைகள் வந்தாலும் கூடங்குளம் அணு உலைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 6.5 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டாலும் தாங்கும் வகையில் அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்படியே பூமி அதிர்வு வந்தாலும் அணு உலைகள் உடனே இயக்கத்தை நிறுத்திவிடும்.

    உலகிலேயே முதன் முதலாக அணு உலைகளை குளிரூட்டும் தொழில்நுட்பம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லையென்றாலும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அணு உலைகளை இயற்கையாக குளிரூட்ட முடியும். ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் டர்பைன்கள், கண்டன்சர் யூனிட் ஆகியவற்றையும் வல்லுநர் குழு பார்வையிட்டது.

    அங்கு 6 மெகாவாட் உற்பத்தி செய்யும் டீசல் ஜெனரேட்டர்கள், கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றையும் காண முடிந்தது. அணு உலைகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விஞ்ஞானிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டோம். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 7 விதமான பாதுகாப்பு அம்சங்களை பார்க்க முடிந்தது. இதன் மூலம் எங்களது ஆய்வு திருப்திகரமாக முடிந்தது. போராட்டக் குழுவினருடன் நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. கூடங்குளம் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் வகையில் 9 பேர் கொண்ட குழுவுடன் ஆலோசனை நடத்தினோம். மக்களின் அச்ச உணர்வுகளையும் புரிந்து கொண்டோம்.

    எங்களுக்கு அரசு கொடுத்த பணி முடிந்தது. நாங்கள் சென்னை செல்கிறோம். அணுமின் நிலைய அதிகாரிகள் கொடுத்துள்ள ஆவணங்களை பார்த்து, படித்து கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது. அதன் பின்னர் தமிழக அரசிடம் அறிக்கை அளிப்போம். எப்போது அறிக்கை அளிப்போம் என்பதை குறிப்பிட்டு சொல்ல முடியாது. என தெரிவித்தார்.

    போராட்டம் நடத்திய மக்களை நேரில் சந்திக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து பதில் அளித்த இனியன், அது எங்களது வேலை இல்லை. அந்த பணி எங்களுக்கு வழங்கப்படவில்லை. மக்களை சந்திப்பதற்கு பதில் தான் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்தோம் என்றார்.


    http://tamil-cininews.blogspot.com



  • http://tamilfashionshow.blogspot.com

  • [Continue reading...]

    ஐரோப்பிய ஒன்றிய��்தின் தாளங்களுக���கு ஆடுவதற்கு நா��்கள் தயார் இல்லை!: அரசாங்கம்

    - 0 comments


    ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நெருக்கடிகள் குழு ஆகியன போடுகின்ற தாளங்களுக்கு ஆடுவதற்கு நாங்கள் தயாரில்லை. இவ்வாறு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியுமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

    எமது நாட்டுக்கென ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்கியுள்ளோம். அதன்படி எமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு கால அவகாசம் தேவையாகும். அதற்கு கால அவகாசத்தை வழங்குவதை விடுத்து செயற்பாடுகளை எவரும் குழப்பக்கூடாது.

    ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடருக்கு இலங்கை அரசாங்கம் சிறந்த முறையில் தயாராகியுள்ளது. ஜெனிவாவில் எவ்விதமான நிலைமைக்கும் முகம் கொடுக்க தயாராகியுள்ளோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

    யுத்தக் குற்ற விசாரணையை உடனடியாக நடத்தவேண்டும் என்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பிலும் இலங்கை மீது சுயாதீன விசாரணை நடத்துவது மிகவும் அவசியம் என்று சர்வதேச நெருக்கடிகள் குழு தெரிவித்துள்ளமை குறித்தும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்குகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

    அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நெருக்கடிகள் குழு என்பன போடுகின்ற தாளங்களுக்கு ஆடுவதற்கு நாங்கள் தயாராக இல்லை. எமக்கேற்ற செயற்பாடுகளின் அடிப்படையில் முன்செல்லும் நோக்கில் நாங்கள் செயற்பட்டு வருகின்றோம்.

    தற்போதைய நிலைமையில் யுத்தத்தின் பின்னரான இலங்கையில் அதிகளவு முன்னேற்றங்களை நாங்கள் காட்டியுள்ளோம். அத்துடன் மேலும் முன்னேற்றங்களை காட்டுவதற்கு இலங்கைக்கு கால அவகாசம் தேவைப்படுகின்றது.

    எனவே தொடர்ந்து முன்னேற்றங்களை வெளிப்படுத்துவதற்கு எமக்கு கால அவகாசத்தை வழங்குவதை விடுத்து நிலைமைகளில் குழப்பங்களை ஏற்படுத்துவது முறையல்ல. விமர்சனங்களை முன் வைப்பதை விடுத்து எமக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.

    இதேவேளை ஜெனிவாவில் விரைவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர் விடயத்தில் அரசாங்கம் மிகவும் நம்பிக்கையான முறையில் உள்ளது.

    அதாவது ஜெனிவாவில் எவ்விதமான நிலைமைக்கும் முகம் கொடுக்க தயாராகியுள்ளோம். அதற்கேற்ற வகையில் நாங்கள் ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

    எமது நாட்டுக்கு எதிராக ஜெனிவாவில் எவ்வாறான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டாலும் அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றோம் என்பதனை குறிப்பிடவேண்டும் என்றார்.


    http://tamil-cininews.blogspot.com



  • http://tamilfashionshow.blogspot.com

  • [Continue reading...]

    இது பிரிக்கமுடி��ாத உறவு !? - விவேகன���

    - 0 comments


    எந்தவித அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் சிறீலங்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவில் பாதிப்பு ஏற்படாது என சிறீலங்காவுக்கான ஈரானிய தூதுவர் கலாநிதி நபி ஹசனிபேர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இந்த உறவினை அமெரிக்கா மற்றும் சிறீலங்காவின் எதிர்க்கட்சி உள்ளிட்ட எந்தவொரு தரப்பினராலும் கூட தடுக்க முடியாது என்றும் அவர் அவர் உறுதிபடக் குறிப்பிட்டார்.

    ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டு 33 ஆண்டு நிறைவு மற்றும் தேசிய தினம் ஆகியவற்றினை சனிக்கிழமை ஈரான் கொண்டாடியது. இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றியபோது ஈரானியத் தூதர் மேற்கண்ட கருத்தை வெளியிட்டார்.

    அமெரிக்காவினால் ஈரானிய எண்ணெய் தொடர்பில் தற்போது விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பில் சிறீலங்காவுக்கான ஈரான் தூதுவர் மேலும் கூறுகையில், அமெரிக்காவின் ஒருதலைபட்சமான இந்த தடையின் ஊடாக சிறிய நாடுகளே பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இவ்வாறான பொருளாதாரத் தடைகளினை ஐக்கிய நாடுகள் மாத்திரமே விதிக்க முடியும். அமெரிக்கா போன்ற ஏனைய நாடுகள் இவ்வாறான ஒருதலைபட்சமான தடைகளை விதிப்பது சட்டவிரோதமான செயலாகும் எனவும் ஈரான் தூதுவர் குற்றம்சாட்டினார்.

    'ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளினால் பொருளாதாரத் தடை விதிக்கப்படுவது இன்று நேற்றல்ல. கடந்த 50 வருடங்களாக பொருளாதர தடை விதிப்பு இடம்பெற்று வருகின்றது. ஆனால் குறித்த பொருளாதார தடைகளுக்கு மாற்றீடான வழிகளை ஈரான் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இது போன்றே தற்போது ஈரான் தொடர்பில் உலக நாடுகளுக்கு அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைக்கும் மாற்றுவழி காணப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

    அமெரிக்காவின் இந்தத் தடைகளுக்கு மத்தியில் எரிபொருள் மற்றும் தேயிலை ஆகியன தொடர்ச்சியாக இரு நாடுகளுக்குமிடையில் பறிமாறப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். சுமார் 32 வருட நெருங்கிய உறவினை கொண்ட சிறீலங்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவு தொடர்ந்து நீடிக்கும் எனவும் சிறீலங்காவுக்கான ஈரான் தூதுவர் மேலும் அழுத்தமாகக் தெரிவித்தார்.

    ஆனால், இந்த உறவு எவ்வளவு காலம் நீடிக்க அமெரிக்கா அனுமதிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், இந்தியா தனது மசகு எண்ணெய் தேவையில் 20 சதவீதத்தை ஈரான் மூலம் நிறைவேற்றி வருகின்றது. இதைக் குறைத்துக் கொள்ளும்படி இந்தியாவை அமெரிக்கா தொடர்ந்து நிர்பந்தித்து வருகிறது. எனினும், அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக இதைக்குறைக்க முடியாது என்றும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

    ஆனால் தற்போது ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மசகு எண்ணெய் அளவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்துள்ளார். இது இந்தியாவை அமெரிக்கா ஓரளவுக்கு என்றாலும் அடிபணிய வைத்துவிட்டது என்றே கருதப்படுகின்றது.

    கடந்த வாரம் வாஷிங்டனில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாயிடம் இதுகுறித்து பேசப்பட்டுள்ளது. அமெரிக்கா தனது நட்பு நாடுகளிடம், ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை படிப்படியாகக் குறைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாக ரஞ்சன் மத்தாயிடம் கூறப்பட்டது. கடந்த டிசம்பர் 29ம் திகதி அதிபர் ஒபாமா கையெழுத்திட்ட கடிதம் ஒன்றில், ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி தொடர்பாக மாற்று வழிகளைக் கண்டுபிடிக்குமாறும், மசகு எண்ணெய் இறக்குமதியில் ஈரானைச் சார்ந்திருப்பதை (180 நாட்களுக்குள் அதாவது 6 மாதங்களுக்குள்) குறைத்துக் கொள்ளும்படியும் நட்பு நாடுகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

    ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யாமல் அதைத் தவிர்ப்பது எப்படி? என்பது குறித்து டில்லியுடன் பேச்சு நடத்தப்பட்டதாகவும் நூலண்ட் தெரிவித்திருந்தார். ஒவ்வொரு நாடும் எந்தெந்த பணிகளுக்காக ஈரானை சார்ந்துள்ளது என்று தரம்பிரித்து அதனடிப்படையில் ஈரானை சார்ந்திருப்பதிலிருந்து விலகி இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே ஒவ்வொரு நாடும் அதன் செயல்பாடு அடிப்படையில் தரம் பிரிக்கப்படும் என்றார் நூலண்ட். இந்நிலையில், ஈரான் மீதான தடைகளால் சிறீலங்காவிற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் அதனை நிவர்த்தி செய்வதற்கான தெரிவுகள் தொடர்பாகவும் விபரிப்பதற்காக, பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்தல் மற்றும் நிதி தொடர்பான குற்றச் செயல்களுக்கான அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவிச் செயலாளர் லியூக் பிரௌனின் கடந்த வியாழக்கிழமை கொழும்பு சென்றிருந்தார்.

    ஈரானிடமிருந்து தனது எரிபொருள் தேவையில் 93 சதவீதத்தை சிறீலங்கா இறக்குமதி செய்கிறது. ஒபெக் அமையத்தின் இரண்டாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான ஈரானிலிருந்து பெறப்படும் மசகு எண்ணெய் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் வடிகட்டப்படுகிறது. 50 ஆயிரம் பரல்கள் இந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் தினமும் வடிகட்டப்படுகின்றன. அதேவேளை, ஓமான் மற்றும் சவுதி அரேபியாவுடன் இறக்குமதிகள் தொடர்பாக சிறீலங்கா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறது. ஆனால், ஓமானிய மசகையோ சவுதியின் மசகையோ நேரடியாக சபுகஸ்கந்தவில் சுத்திகரிக்க முடியாது.

    இதனால், குறிப்பிட்டளவு சதவீத மசகே ஈரானிய மசகுடன் சேர்த்து சுத்திரிக்க வேண்டியுள்ளது. அத்துடன் முக்கியமான மற்றொரு விடயமாகக் காணப்படுவது ஈரான் 7 மாத கடனுக்கு அனுமதியளித்திருக்கும் விடயமாகும். இந்தக் கடன்தான் சிறீலங்காவை ஈரானை விட்டுப் பிரியாமல் ஒட்டி உறவாட வைத்துள்ளது. எனவே, சிறீலங்காவை ஈரானிடம் இருந்து பிரித்தெடுக்கவேண்டியது அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியமாகவுள்ளது.

    கொழும்பு சென்றிருந்த அமெரிக்க திறைசேரியின் உதவி செயலாளர் லியூக் பிரௌனின் தலைமையிலான அமெரிக்கத் தூதுக்குழு, இலங்கை பெற்றோலியத் துறை செயலாளர் மற்றும் ஈரானுக்கான சிறீலங்காவின் கொடுப்பனவுகளில் நேரடியாக சம்பந்தப்பட்ட சிரேஷ்ட அதிகாரியை சந்தித்துப் பேசி அவர்களைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் இறங்கியிருந்தனர்.

    ஆனால், இந்த விடயத்தில் அமெரிக்காவிற்கு எதிராகவே சிறீலங்கா செயற்பட முனைந்துள்ளதாக கூறப்படுகின்றது. காரணம், ஈரானின் அணு அபிலாசைகளுக்கு டொலர் நிதியாக பயன்படுத்தப்படுவதாக அமெரிக்கா கருதுகின்றது. டொலர்கள் மூலமான கொடுக்கல் வாங்கல்களை துண்டித்தால் ஈரானின் நடவடிக்கைகளை தடுக்க முடியும் என்று கருதித்தான் ஈரான் மீதான தடை அறிவிப்பை அமெரிக்கா கொண்டுவந்தது.

    ஆனால், எண்ணைய்க்கு டொலரைக் கொடுக்கும் சிறீலங்காவிற்கு இது அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அமெரிக்காவின் நிலைப்பாடு தொடர்பாக மாற்று நடவடிக்கைகளைக் கண்டறியுமாறு கடந்த வாரம் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அதிகாரிகளைப் பணித்திருந்தார். இதனையடுத்து டொலர் மூலமாகச் செலுத்துவதுதான் பிரச்சினை என்றால், வேறு நாணயங்களில் பணத்தைச் செலுத்தி ஈரானைப் பாதுகாக்க சிறீலங்கா முனைந்துள்ளது.

    அதாவது, ஈரானிய மசகு எண்ணெய்த் தேவைகளுக்கான கொடுப்பனவை ரூபாவின் மூலம் மேற்கொள்வது தொடர்பாக இந்தியா பரிசீலித்து வருகிறது. இந்தியாவின் முடிவைப் பின்பற்றி டொலரிலும் பார்க்க ஏனைய நாணயங்களில் மசகு எண்ணெயைக் கொள்வனவு செய்வதன் மூலம் ஈரான் மீதான அமெரிக்காவின் தடைகளினால் ஏற்படும் பாதிப்பை தாங்கள் தவிர்த்துக்கொள்ளவதுடன், ஈரானின் நட்பையும் பாதுகாக்க முடியும் என்று சிறீலங்கா கருதுகின்றது.

    சிறீலங்கா எடுத்துள்ள இந்த முடிவு அமெரிக்காவிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. மசகு எண்ணையின் விலையை டொலரில் இருந்து ஈரோவிற்கு மாற்ற முனைந்தமையாலேயே ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசைன் அழிக்கப்பட்டதாகவும், இதேசிந்தனை கொண்ட வெனிசுவேலா அதிபர் ஹ§கோ சாவேஸ் தற்போது அமெரிக்காவினால் ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில், ஈரானின் எரிபொருளையும் வேறு நாணயங்களுக்கு மாற்ற அமெரிக்கா அனுமதிக்காது என்றே கருதுகின்றார்கள்.

    இந்நிலையில், எரிபொருள் கொடுப்பனவிற்காக சிறீலங்கா வேறு நாணயத்தைப் பயன்படுத்த முனைவது அமெரிக்காவிற்கு எதிரானதாகவே கருதப்படும். இது சிறீலங்காவிற்கு பாரிய ஆபத்தான ஒன்றாகவே இருக்கும் என்றும் கூறுகின்றார்கள். எனவே, சிறீலங்காவின் மீதான அமெரிக்காவின் கோபத்தின் எதிரொலி முதலில் ஜெனீவாவில் ஒலிக்கலாம் என்றும் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். எதனையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பார்ப்போம்.

    ஈழமுரசு


    http://tamil-cininews.blogspot.com



  • http://tamilfashionshow.blogspot.com

  • [Continue reading...]

    கடும் பனிக்குள் ���ாரினுள் அகப்பட்டுக்கொண்ட நபர் இ���ண்டு மாதங்களின் பின் உயிருடன் மீட்பு

    - 0 comments


    ஸ்வீடனில், கடும் பனிக்கு மத்தியில் காரினுள் அகப்பட்டுக்கொண்ட நபர் ஒருவர் இரண்டு மாதங்களின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

    வடக்கு ஸ்வீடனின் நெடுஞ்சாலை பாதையிலிருந்து 1கி.மீ தொலைவில், காட்டுப்பாதை முடிவடையும் இடத்தில், இந்நபர் காருடன் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த பிரதேசத்தில் -30 பாகை செல்ஸியஸ் வரை சமீபத்தில் வெப்பநிலை குறைவடைந்திருந்ததாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

    இந்நபர் காரிலிருந்து மீட்கப்படும் போது, ஒரு சில வார்த்தைகள் மாத்திரம் கூறியுள்ளார். தான் கடந்த டிசம்பர் 19ம் திகதியிலிருந்து இங்கு அகப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். உருகும் பனிக்கட்டிகளை குடித்து அவர் உயிர் வாழ்ந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. அப்பகுதியில் துப்பரவு பணிகளை மேற்கொண்டு வந்த பணியாளர்கள் குறித்த காரை அவதானித்த போது உள்ளே சில அசைவுகளை அவதானித்ததால், இந்நபர் இருப்பதை கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளனர்.

    மீட்கப்பட்ட நபர் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர் கடந்த டிசம்பர் மாதம் முதல் ஆகாரம் எதனையும் உட்கொண்டிருக்கவில்லை என அந்நபர் கூறுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

    'சாதாரணமாக ஒரு நபர் உணவில்லாமல், நீராகரத்தை மாத்திரம் கொண்டு 4 வாரங்கள் உயிரை தக்கவைத்திருக்க முடியும். இவர் ஒருவகை Hibernation (விலங்குகள் போன்று குளிர் காலத்தை தூங்கி கழித்தல் அல்லது செயலற்றிருத்தல்) முறையில் தொடர்ந்து உயிர்வாழ்ந்து வந்திருக்கலாம்' என மருத்துவமனை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


    http://tamil-cininews.blogspot.com



  • http://tamilfashionshow.blogspot.com

  • [Continue reading...]

    இழந்த உரிமையை மீ���்க தமிழர்கள் அய��ாது உழைக்க வேண்டும்!

    - 0 comments


    21ஆம் நூற்றாண்டில் மனித உரிமை பாதுகாப்பும், அது எதிர்கொள்ளும் அறைவல்களும் - இலங்கை குறித்து ஒரு ஆய்வு என்ற தலைப்பிலான சர்வதேச மனித உரிமைகள் மாநாடு நேற்று முன்தினம் கனடா ரோரன்ரோவில் நடைபெற்றது.

    உலகெங்கும் இருந்து வருகைதந்த மனித உரிமை வல்லுனர்கள் பேராளர்கள் கலந்து கருத்துரை வழங்கினர். தமிழர்களின் நீதியான போராட்டத்தை வென்றெடுக்க புலம்பெயர்ந்த தமிழர்கள் அயராது தொடர்ந்தும் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை பலரும் வலியுறுத்தினர்.

    தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் நியாத்தை உலகம் உணரத் தலைப்பட்டுள்ள இன்றைய நிலையில் தமிழர்கள் அயராது தொடர்ந்தும் உழைக்க வேண்டியதன் அவசியம் மேலும் வலியுறுத்தப்பட்டது.

    டேவிட் மெற்றாஸ், டெனிலோ ரெயிஸ், டேயிற்றி மக்கோனல், அலிபெய்டுன், தியடோர் ஓர்லின், உலகத்தமிழர் பேரவைத் தலைவர் இம்மானுவேல் அடிகளார், பேராசிரியர் சிறீ ரஞ்சன் ஆகியோர் பல்வேறு மனித உரிமைகள் தலைப்பில் உரையாற்றினர்.

    இம்மாநாட்டில் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, நோர்வே என புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

    கனடாவின் மூன்று பிரதான கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கவுள்ளமை இம்மாநாட்டின் மேலும் ஒரு சிறப்பம்சமாகும். ஆளும் கன்சவேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், கிச்சினர் மத்தி பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபன் வூல்வெர்த், மிசுசாகா ஸ்ரீர்வெல்த் பாராளுமன்ற உறுப்பினர் பிராட் பட், கனடிய எதிர்கட்சி புதிய சனநாயகக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன், லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜோன் மக்கலம், ஜிம் கரிஜியானிஸ் ஆகியோர் கலந்து கொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

    21ஆம் நூற்றாண்டில் மனித உரிமைகள் எதிர்கொள்ளும் சவாலும், குறிப்பாக சர்வதேச கட்டுமாணங்கள் 21ஆம் நூற்றாண்டில் எவ்வாறு சிறீலங்காவில் பொய்த்து போயின என்பன குறித்து இம்மாநாடு விரவாக ஆராய்தது.

    இம்மாநாடு இம்மாதம் இறுதிப்பகுதியில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடருக்கு வலுச்சேர்க்கும் வகையில் அமையும் என நம்பப்படுகிறது. போரினால் பாதிக்கப்பட்டோருக்கும், மனித் உரிமைகளுக்குமான நடுவத்தின் ஏற்பாட்டில் அனைத்துல தமிழ் அமைப்புகளின் அணுசரனையுடன் இம்மாநாடு நடைபெற்றது. 400 மேற்ப்பட்ட மக்கள் கலந்து கொண்டு மாநாட்டின் வெற்றிக்கு பெரிதும் பங்காற்றினர்.

    மாநாட்டை தொடர்ந்து மாலை கனடியத் தமிழர் தேசிய அவையின் ஏற்பாட்டில் இசைச்சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெறப்பட்ட தொகையில் 25 ஆயிரம் டொலர்கள் உலகத் தமிழர் பேரவைத் தலைவர் இம்மானுவேல் அடிகளாரிடம் சர்வதேச மனித உரிமைகள் வேலைத்திட்டங்களுக்காக வழங்கப்பட்டது.

    அதேவேளை அமெரிக்காவில் சிறீலங்கா சனாதிபதி ராஐபக்ச மற்றும் சிறீலங்கா இராணுவத்தளபதி சுவேந்திர டி சில்வா ஆகியோருக்கு எதிராக அமெரிக்காவில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளுக்காக தலா 5ஆயிரம் டொலர்களும் வழங்கப்பட்டன.


    http://tamil-cininews.blogspot.com



  • http://tamilfashionshow.blogspot.com

  • [Continue reading...]

    தமிழின கருவறுப்��ினை மேற்கொண்ட சிங்கள அரசுக்கு மு���்றுப் புள்ளி வை��்க 15வது நாளாகவும��� தொடர்கின்றது ந��திக்கான நடைப்பய���ம்

    - 0 comments


    காலம் காலமாக தமிழின கருவறுப்பினை மேற்கொண்டுவருகின்ற சிங்கள அரசின் கொடுமைகளுக்கு சர்வதேச சமூகம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் தொடர்கிறது.

    இன்று 37 கிலோமீற்றர் வரை நடந்துசென்ற இவர்களை உற்சாகப்படுத்தும் முகமாக, சுவிஸ் நாட்டில் இருந்து சென்ற 13 தாயக உணர்வாளர்கள் இவர்களோடு இணைந்து 13 கிலோமீற்றவர் வரை நடந்து தமது ஆதரவினையும், ஒத்துழைப்பினையும் நல்கினர்.

    பிரான்ஸ் நாட்டில் தொடர்ந்துகொண்டிருகின்ற பயணத்தினை அங்குள்ள காவல்துறையினர் ஆர்வத்துடன் விசாரித்து நீதி கேட்டு நீங்கள் நடத்தும் இந்தப் போராட்டம் வெற்றிபெற வேண்டும் அதற்கான ஆதரவினையும் வாழ்த்துக்களையும் தாம் தெரிவிப்பதாக கூறி பாதுகாப்பான முறையிலே உரிய இடத்தை அடையுங்கள் என்று அறிவுரையும் கூறினர்.

    புலத்தில் வாழ்கின்ற தமிழ் உறவுகளே எங்கள் தேசத்தின் விடிவிற்காக நடத்தப்படுகின்ற இந்த நடைப்பயணத்தில் நீங்களும் கரம் கோர்த்து எம்மோடு இணைந்து வாருங்கள். ஐக்கிய நாடுகள் சபையிடம் மார்ச் 5ம் திகதி ஒன்றுபட்ட இனம் தமிழினம் என்பதை மீண்டும் ஒருதடவை உலகிற்கு உணர்த்துவோம் எழுச்சிமிக்க உணர்வோடு வாருங்கள்.


    http://tamil-cininews.blogspot.com



  • http://tamilfashionshow.blogspot.com

  • [Continue reading...]

    என்றும் இளமையுடன் ஆண்கள் தங்கள் ஆணழகை பேணும் ரகசியங்கள்.

    - 0 comments
     

    ஆண்களில் சிலரை பார்த்தால், வயது 50 அல்லது 60 ஐ தாண்டினாலும், என்றும் மார்க்கண்டேயனாகவே தோற்றமளிப்பர். . இந்த மார்க்கண்டேய தோற்றத்தை தக்கவைத்துக்கொள்வது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரமோ அல்லது பிரம்ம வித்தையோ அல்ல. . . ! மாறாக கொஞ்சம் மெனக்கிட்டால் வயது ஏறிகொண்டு போனாலும், குறைந்த வயது தோற்றத்துடன் நீண்ட காலம் இருக்க முடியும்.

    நமது வயதை முதலில் வெளிப்படுத்துவது சருமம் தான், அதனை ஒழுங்காக, சீராக பராமரித்தாலே நமது ஆயுட் காலமும் நீடித்து இருக்கும். அப்படி என்றும் இளமையுடன் இருக்க இதோ சில டிப்ஸ். . . ! .
    நாம் அதிகமாக சூரிய வெளிச்சத்தில் பயணிப்பதாலும், எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதாலும், மாசுள்ள காற்றை சுவாசிப்பதாலும் நமது சருமத்தில் முதுமை தோற்றம் தெரிகிறது. இதனை தடுக்க, சிறந்த முதுமை தடுப்பு (ஆன்டி ஏஜிங்) தயாரிப்புகளை பயன்படுத்தவது நல்லது. மேலும் அதிகமான தண்ணீர் பருகுதல் சருமத்தை பாதுகாக்கும்.
    பெண்களின் சருமத்தை காட்டிலும் ஆண்களின் சருமம் 20 விழுக்காடு கூடுதல் கடினத்தன்மையுடன் இருக்கும். ஆயினும் வயது கூடும்போது கொல்லாஜன் எனும் புரதம் குறைவதால் சருமத்தில் சுருக்கம் ஏற்படுகிறது. உடல் கூறுவியலின்படி பெண்களை காட்டிலும் ஆண்களின் முதிர்ச்சி சில காலத்திற்கு பிறகு தான் தோன்றும், ஆனால் ஒரு சில பழக்கவழக்கங்களினால் ஆண்களுக்கு இயல்பான வயதை காட்டிலும் முதுமையான தோற்றம் காணப்படுகிறது.
    தொடர்ந்து ஷேவிங் செய்வதன் காரணமாக முகத்தில் முதிர்ச்சி தோன்றும், அதனால் ஈரப்பதத்துடன் கூடிய ஷேவிங் கிரீமை பயன்படுத்துவது நல்லது. மேலும் ஷேவிங் செய்யும்போது முடிகள் வளர்ந்திருக்கும் திசையில் ஷேவ் செய்து, வெதுவெதுப்பான தண்ணிரால் முகத்தை கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் முகம் வாடாமல் புத்துணர்ச்சியுடன் தோன்றும்.
    ஆண்கள் என்றும் இளமையுடன் இருக்க தொடர்ந்த உடற்பயிற்சியும் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், உடலுக்கு குளிர்ச்சி தரும் இறைச்சிகள் மற்றும் மீன் போன்ற ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல் திசுக்களை புதுப்பிக்கும் திறனுடைய ஆன்டிஆக்ஸிடன்ட் குணம் நிறைந்த பேக் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்வதால், முகம் சுருக்கம் இல்லாமலும் மென்மையாகவும் காணப்படும்.
    மேலும் பசலை கீரை, அவுரிநெல்லிகள், கேரட், தக்காளி, பச்சை தேநீர் போன்றவற்றையும் சேர்த்துகொள்வது மிகவும் நல்லது.
    சருமத்தை இளமையுடன் வைத்திருக்க மது மற்றும் புகைப்பிடித்தலை தவிர்க்கவும். சிகரெட்டுகளில் உள்ள நிக்கோட்டின் உடலின் இரத்த ஓட்டத்தை குறைப்பதால் சருமத்திற்கு தேவையான சத்துகள் சென்று அடைவதில்லை, ஆகையால் சுருக்கங்கள்
    ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
    தூக்கம் கெடுவதால் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்படும் என்பதை அநேகமானோர் அறிவதில்லை. இரவில் குறைந்தது 6-7 மணி நேர ஆழ்ந்த உறக்கம் அவசியம் என்பதும் இதைத் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் மனதில் புத்துணர்ச்சி மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திலும் குறிப்பாக சருமத்திலும் பொலிவு ஏற்படும்.
    இது தவிர, உடல் ஆரோக்கியத்திற்கும், உடலுறவு பழக்க வழக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், அதுகுறித்த விழிப்புணர்வை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
    இவையெல்லாவற்றிற்கும் மேலாக, ஆண்கள் தனது கவலைகளை மறந்து மகிழ்ச்சியுடன் இருந்தாலே, முகத்தில் பொலிவும் இளமையும் கூடிக்கொண்டே போகும். . . !
    [Continue reading...]

    ஆண்களுக்கு மட்டும் – ஒரு பெண் ஆணிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறாள்?

    - 0 comments

    இது நான் சமீபத்தில் படித்தது. ஒரு பெண் ஆணிடம் என்னென்னவெல்லாம் எதிர்பார்க்கிறாள் என்பதை பற்றி. இந்த லிஸ்டை பார்த்தாலே தெரிந்துவிடும் நம் மொத்த வாழ்க்கையில் கணவன் மனைவி உறவுப்பற்றிய ஒரு தெளிவு கிடைத்துவிடும்

    ஒரு இளம்பெண் இளைஞனிடம் எதிர்பார்ப்பது

    1. அழகாக
    2. கம்பீரமாக
    3. நல்ல வசதியுடன்
    4. சொல்வதை பொருமையாக கேட்கணும்
    5. கட்டான உடல் அழகு
    6. நல்ல உடையணிய வேண்டும்
    7. சின்ன சின்ன விஷயங்களை பாராட்ட வேண்டும்
    8. ரொம்ப ரொமாண்டிக்காக இருக்கணும்

    அதே பெண் 35 வயதுக்கு பிறகு என்ன எதிர்பார்ப்பாள்

    1. பார்க்க சுமாரான தோற்றம்
    2. ஓரளவு வசதி
    3. கூட பேசிக்கொண்டு இருக்க வேண்டும்
    4. வீட்டு சமையலை ரசித்து சாப்பிட வேண்டும்
    5. வேலைகளில் கூட உதவி செய்ய வேண்டும்
    6. ரங்கநாதன் தெரு…. எங்கே போனாலும் கூட முகம் சுளிக்காமல் வர வேண்டும்
    7. எப்பவாவது திடீர்னு காலேஜ் பசங்க மாதிரி டிரஸ் போடணும் ( மத்தவங்க சிரிச்சாலும் கண்டுக்கபடாது)
    8. நான் எந்த மொக்க ஜோக் சொன்னாலும் சிரிக்கணும்.

    ஒரு பெண் 40 வயதுக்கு பிறகு ஆணிடம் எதிர்பார்ப்பது

    1. ரொம்ப பார்க்கிறதுக்கு பக்கி மாதிரி இருக்க கூடாது.
    2. நான் பேசினால் என்ன பேசிக்கிட்டு இருக்க என்று கேட்கணும் தூங்க கூடாது
    3. ஒழுங்கா வேலைக்கு போகணும்
    4. தொப்பையை மறைக்கிற மாதிரி சட்டை போடணும் ( ஷார்ட் சட்டையெல்லாம் மறந்து விடணும்)
    5. வாரத்துக்கு ஒரு முறையாவது ஷேவ் செய்யணும்

    50 வயதுக்கு மேல் பெண் எதிர்பார்ப்பது

    1. பொது இடத்தில் எல்லார் முன்னாடியும் கண்ட இடங்களில் சொறிய கூடாது
    2. அடிக்கடி கடன் வாங்க கூடாது
    3. நேரம் கிடைக்கறப்பல்லாம் தூங்க கூடாது
    4. ஒரே மொக்க ஜோக்கையெ பல முறை சொல்லி படுத்தகூடாது
    5. எப்பவாவது ஒரு வாரமாவது ஷேவ் செய்ய வேண்டும்

    60 வயதுக்கு மேல் எதிர்பார்ப்பது

    1. சின்ன குழந்தைகளை பயமுறுத்த கூடாது
    2. பாத்ரூம் எங்க இருக்குன்னு ஞாபகம் வச்சுக்கணும்.
    3. குறட்டை சத்தம் மிக கம்மியாக இருக்கணும்
    4. எப்பவும் வெறும் உடம்போடு இருக்க கூடாது
    5. பல் செட்டு எங்க வைத்தோம் என்று ஞாபகம் இருக்கணும்
    6. ஈசியா ஜீரணமாகிற உணவுதான் பிடிக்கணும்( பிரியாணி ஈசியா ஜீரணம் ஆகிடும்தானே)
    7. கிழமை, தேதி எல்லாம் ஞாபகம் இருக்கணும்.

    70 வயதுக்கு மேல் ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது

    1. நல்ல உயிரோடு இருக்கணும்
    2. டாய்லட், பாத்ரூம் ஒழுங்கா போய்க்கணும்

    80 வயதுக்கு மேல் எதிர்பார்ப்பது

    ________________________________ ( ஒண்ணுமேயி்ல்லங்க அதான்)

    சொன்னது எல்லாத்துக்கும் மேல பெண்ணும் சரி ஆணும் சரி எல்லா வயதிலும் எதிர்பார்ப்பது பரஸ்பர அன்பும் ஆதரவும் ஆதரவும்தான். எனவே கடைசிவரை காதலியுங்கள் (உங்கள் மனைவியை மட்டும்)

    [Continue reading...]

    தேமுதிகவை அழிக்கும் வேலையில் அதிமுக; சுதாகரித்து கொண்ட விஜயகாந்த்

    - 0 comments
     
     
    தே.மு.தி.க., பொதுக் குழு நாளை நடக்கிறது. அதற்குள், யாரும் கட்சி தாவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, தே.மு.தி.க., மாநில நிர்வாகிகளுக்கு, விஜயகாந்த் ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
     
    நூலறுந்த பட்டம்

    சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து, உள்ளாட்சி தேர்தலில் பிரிந்தாலும், அ.தி.மு.க., - தே.மு.தி.க.,வினர் இடையே நட்பு இருந்து வந்தது. சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதாவிற்கும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கும் இடையே நடந்த நேரடி வாக்குவாதம், இந்த நட்புறவை முறித்துள்ளது.தே.மு.தி.க.,வில் இருந்து ஆட்களை இழுக்கும் வேலைகளை, அ.தி.மு.க., பிரதிநிதிகள் துவக்கியுள்ளனர். சமீபத்தில் தே.மு.தி.க., தொழிற்சங்க மாநில நிர்வாகி வேல்முருகன் மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகள், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.இவர்கள் அனைவரும் நிச்சயம் வெளியேறுவர் என, சில மாதங்களுக்கு முன்பே தகவல் கசிந்தும், அதை, தே.மு.தி.க., தலைமை பொருட்படுத்தாமல் இருந்தது. கட்சி பதவியிலேயே அவர்கள் நீடித்ததால், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணையும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது.
     
    ஏமாற்றதே ஏமாறாதே

    அதன் பிறகு, தே.மு.தி.க., தலைமை சுதாரித்துக் கொண்டுள்ளது. இருப்பினும், நாளை (21ம் தேதி) சென்னையில், தே.மு.தி.க., பொதுக்குழு கூடும் நாளில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சிலர், கட்சி தாவ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் யார் என்று கண்டறிந்து, சமரசம் செய்து, "ஒரு இனிய உதயம்' காத்திருக்கிறது, "நம்பினார் கெடுவதில்லை' என அவர்களுக்கு எடுத்துச் சொல்லி, தொடர்ந்து கட்சியிலேயே நீடிக்கச் செய்ய வேண்டும் என, விஜயகாந்த் ரகசிய உத்தரவிட்டுள்ளார்.
     
    மாமன் மச்சான்

    இந்த சமரச பணிகளை தே.மு.தி.க., மாநில நிர்வாகிகள் சுதீஷ், சந்திரக்குமார், பார்த்தசாரதி அடங்கிய குழுவினர், ரகசியமாக செய்து வருகின்றனர். சமரச பேச்சுக்குப் பிறகும் பொதுக்குழு நாளில், கட்சி தாவல் நடக்கும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால்,"காலையும் நீயே மாலையும் நீயே' என, சில முக்கிய நிர்வாகிகள், தே.மு.தி.க., என்ற,"அகல்விளக்கை' அணையாமல் பார்த்துக் கொள்ளும்படி பணிக்கப்பட்டுள்ளனர்.
     
    "பொறுத்தது போதும்' கடலூரில் கிளம்பிட்டாங்க!
     
    தே.மு.தி.க., நிர்வாகிகள் நியமனத்தில் ஏற்பட்ட அதிருப்தியால் கடலூரில் கட்சிக் கொடி அகற்றப்பட்டது.
     
    கடலூர் வடக்கு மாவட்ட தே.மு.தி.க.,விற்கான நிர்வாகிகள் பட்டியலை நேற்று முன்தினம் மாலை கட்சித் தலைமை அறிவித்தது. இது மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.இந்நிலையில், மாநில பொதுக்குழு உறுப்பினராக அறிவிக்கப்பட்ட கடலூர் பாதிரிக்குப்பம் சிவராஜ், கட்சியிலிருந்து விலகப் போவதாக நேற்று காலை அறிவித்தார்.அதனைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் பாதிரிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் திடலில் ஏற்றப்பட்டிருந்த தே.மு.தி.க., கொடியை இறக்கியதோடு, கொடிக் கம்பத்தையும் கழற்றி எடுத்துச் சென்றனர். மேலும், அங்கிருந்த கல்வெட்டில் கறுப்பு பெயிண்டை அடித்து பெயர்களை அழித்தனர்.

    இதுகுறித்து சிவராஜ் கூறியதாவது:

    கடந்த முறை எனக்கு, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அதனால் இந்த முறை, மாநிலச் செயற்குழு உறுப்பினர் அல்லது மாவட்டத் துணைச் செயலர் பதவி கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால், மாவட்டச் செயலரான சிவக்கொழுந்து எம்.எல்.ஏ., பணத்தை வாங்கிக் கொண்டு, சமீபத்தில் கட்சிக்கு வந்தவர்களுக்கு நல்ல பதவியை வாங்கிக் கொடுத்துள்ளார். ரசிகர் மன்றத்திலிருந்து தொடர்ந்து கட்சிக்காக உழைத்து வரும் என்னைப் போன்றவர்கள், ஓரம் கட்டப்பட்டு வருகின்றனர்.இதன் காரணமாகவே நானும், எனது ஆதரவாளர்களும் தே.மு.தி.க.,விலிருந்து விலகுகிறோம். இங்கு அமைக்கப்பட்டிருந்த தே.மு.தி.க., கொடிக் கம்பத்தையும் அகற்றி விட்டேன் . மேலும் பலர் கட்சியிலிருந்து விலக உள்ளனர்.இவ்வாறு சிவராஜ் கூறினார்.




    [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger