Saturday 18 February 2012

ஜெவுக்கு ஒண்ணுமே தெரியாது... எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு!' - நீதிபதி முன் கதறியழுத சசிகலா

- 0 comments
 
 
 
சொத்துக் குவிப்பு வழக்கில் ஆதாரமாகக் காட்டப்படும் எதிலுமே ஜெயலலிதாவுக்கு சம்பந்தமில்லை. எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு என்று சசிகலா கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
இதைச் சொல்லிவிட்டு நீதிபதி முன்பு கதறி அழுதாராம் சசிகலா.
 
முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது நண்பர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு 15 ஆண்டு கால இழுத்தடிப்புக்குப் பின் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. அண்மையில் இந்த வழக்கில் இருமுறை நேரில் ஆஜராகி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு வந்தார் ஜெயலலிதா.
 
இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை நிச்சயம் என்று கூறப்பட்ட நிலையில், அவருடன் 20 ஆண்டுகளுக்கு மேலாக உடன்பிறவா சகோதரி என்ற அந்தஸ்தில் இருந்த சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 15-க்கும் மேற்பட்டோர் போயஸ் கார்டன் மற்றும் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
 
இந்த நிலையில், இப்போது சசிகலாவிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளது பெங்களூர் தனி நீதிமன்றம். தனக்கு தமிழ் தவிர வேறு மொழி தெரியாது என்ற ஒரு காரணத்தைச் சொல்லியே 8 ஆண்டுகளுக்கு மேல் வழக்கை இழுத்தடித்து வந்தவர் சசிகலா. ஆனால் இனியும் வழக்கை இப்படி நீட்டிக்க முடியாது என அத்தனை நீதிமன்றங்களும் சொல்லிவிட்டன.
 
எனவே வேறு வழியின்றி இந்த முறை சசிகலா, இளவரசு, ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் நேரில் விசாரணைக்கு ஆஜராகினர்.
 
கடைசி முயற்சியாக, 'சசிகலாவிடம் தமிழில் கேள்வி கேட்க அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்து இருப்பதால் வழக்கை வருகிற மார்ச் 2-ந் தேதி வரை தள்ளி வைக்க வேண்டும்' என்று சசிகலா தரப்பு வக்கீல் மனு கொடுத்தார். அதை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
 
இதைத் தொடர்ந்து சசிகலாவிடம் விசாரணை தொடங்கியது. நீதிபதியின் கேள்விகளை சசிகலாவுக்கு தமிழில் மொழிப் பெயர்த்துச் சொல்ல ஹரீஸ் என்ற மொழி பெயர்ப்பாளர் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் நீதிபதியின் கேள்விகளை தமிழில் மொழி பெயர்த்துச் சொன்னார்.
 
சசிகலா தந்த பதில்களை ஆங்கிலத்தில் நீதிபதிக்கு மொழிபெயர்த்தார் ஹரீஸ்.
 
கதறி அழுத சசி
 
பல கேள்விகளுக்கு நினைவில்லை என்றும், தெரியாது என்றும் கூறிய சசிகலா, ஜெயலலிதா தொடர்பாக கேட்டபோது கதறி அழுதாராம்.
 
வங்கிக் கணக்கை நான் மட்டுமே இயக்கி வந்தேன். அதில் முதலமைச்சர் ஜெயலலிதாவும் கூட்டாளிதான். ஆனால் அதைப் பற்றிய எந்த விவரமும் அவருக்குத் தெரியாது. அவர் குற்றமற்றவர். தவறுக்கு நானே பொறுப்பு என்று கூறி சசிகலா கண்ணீர் விட்டு அழுதார்.
 
ஜெயா பப்ளிகேஷன்ஸ் விவகாரங்களை கவனித்துக் கொண்டது நான்தான் என்றும், ஜெயலலிதாவுக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
சொத்துக் குவிப்பு வழக்கில் இரண்டாவது குற்றவாளி சசிகலா. முதல் குற்றவாளி ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.
[Continue reading...]

ரசிகர்களிடம் சிக்கிய நடிகை ஹன்சிகா – போலீசார் மீட்டனர்

- 0 comments
 

ஹன்சிகா கோவையில் தனியார் கல்லூரியில் நடந்த கலை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றார். அவருடன் அமலா பால், நவ்யா நாயர் போன்றோரும் சென்று இருந்தனர். நடிகைகளை காண மாணவர்களும், பொது மக்களும் திரளாக கூடி நின்றனர்.

அப்போது கூட்டத்தினர் மத்தியில் ஹன்சிகா திடீரென சிக்கிக்கொண்டார். ரசிகர்கள் சுற்றி வளைத்து கையை பிடித்து இழுத்து ரகளை செய்தனர். இதில் அவருக்கு லேசான சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. போலீசாரும் பாதுகாவலர்களும் விரைந்து வந்து ரசிகர்கள் பிடியில் இருந்து ஹன்சிகாவை மீட்டனர்.
பாதுகாப்பு வளைத்துக்குள் பத்திரமாக அழைத்து சென்று காரில் ஏற்றி விமான நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். ஹன்சிகா இதுகுறித்து கூறும்போது, என்னை நோக்கி வந்த கூட்டத்தினரை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்து விட்டனர் என்றார்.
[Continue reading...]

சம்மந்தமில்லா ரெண்டு செய்திகள்

- 0 comments
 


(1) பெங்களூரு கோர்ட்டில் சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று ஆஜரான சசிகலா வாங்கி கணக்குகளை தானே பார்த்ததாகவும், ஜெயலலிதாவுக்குச்சம்மந்தம் இல்லை என்று சன்னமான குரலில் கூறி அழுதுள்ளார்.
(2) காங்கிரஸ் தயவு (ஆதரவாமாம்!) இருப்பதால்தான் தான் அமைச்சராக இருப்பதாக முக அழகிரி கூறியுள்ளார்.


படம் மட்டும் ஏன் சம்மந்தமா இருக்கணும்? :-)
[Continue reading...]

பிரபு தேவாவின் பெயர் மனதிலிருந்து அழிந்தாலும் நயனின் உடலிலிருந்து மட்டும் அழியவில்லை ! (படங்கள்)

- 0 comments
 

சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. காதல் கண்ணை மறைத்த நேரத்தில் அவர் செய்த ஒரு காரியம் தான் இப்போது உறுத்திக் கொண்டிருக்கிறது மனசையும் உடம்பையும்.

அதற்குள் நீங்கள் வேறு கற்பனைக்கு போனால் நாங்கள் பொறுப்பல்ல. நாம் சொல்ல வருகிற விஷயமே வேறு. பிரபுதேவாதான் தன் உலகம் என்று சுற்றிக் கொண்டிருந்த நேரத்தில் தன் கைகளில் ஆசை காதலரின் பெயரை பச்சை குத்திக் கொண்டிருந்தார் அவர். இப்போது காதல் முறிந்துவிட்டது. அதற்காக ஐயோ பாவம். அந்த கை என்ன செய்யுமாம்?



அப்படியே பளிச்சென்று அதே பெயரை தாங்கியபடி நடமாடிக் கொண்டிருக்கிறது. பார்க்கிற இடத்திலெல்லாம் பல் இளிக்கும் இந்த பெயரை எப்படி அழிப்பது என்பதுதான் நயன்தாராவின் இப்போதைய தலையாய பிரச்சனையாக இருக்கிறதாம்.



தோல்பொருள் துறை வல்லுனர்கள் இதற்கு தனி சொல்யூஷன் கொடுத்திருக்கிறார்களாம். எப்படி?

அந்த இடத்தை அப்படியே ஒரு டிசைனால் மறைத்துவிடுவது. பெயரும் வெளியில் தெரியாது என்பதுதான் அவர்கள் தரும் ஐடியா. மேலும் மேலும் அந்த இடத்தில் அப்பிக் கொள்வதை விட, பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் பழைய நிலைமைக்கே போய் விடலாம் என்று கருதுகிறாராம் நயன்தாரா.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger