Tuesday 14 February 2012

நடிகை அனன்யாவுக்கு அவரின் மாப்பிள்ளை கொடுத்த அதிர்ச்சி

- 0 comments
 


சினிமாவில் கட்டிப் பிடித்து நடிக்கவே கலவரப்படுகிற அனன்யாவுக்கு கட்டிக்கப் போகிறவர் தந்த அதிர்ச்சி இருக்கிறதே… ஆயிரம் வாட்ஸைவிட அதிகம்.

சென்ற வாரம் நடிகை அனன்யாவுக்கும் ஆஞ்சநேயன் என்ற தெழிலதிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பெற்றோர் சொல்லும் மாப்பிள்ளையைதான் கட்டிப்பேன் என்று கட்டுக்கோப்பாக இருந்த அனன்யாவுக்கு அவரது பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை இவர்.

நிச்சயதார்த்தம் முடிந்த பிறகுதான் ஆஞ்நேயன் ஏற்கனவே ஒருவரை திருமதி ஆக்கியவர் என்று தெ‌ரிந்திருக்கிறது. ஏற்கனவே திருமணம் ஆன ஒருவருக்கு இரண்டாவது மனைவியா என்று அனன்யாவும் அவரது குடும்பத்தாரும் அதிர்ந்து போயினர். உடனே தங்களை ஏமாற்றி நிச்சயதார்த்தம் வைத்துக் கொண்டதாக காவல் நிலையத்தில் புகார் தந்தனர். போலீஸார் விசா‌ரித்த போது, முதல் திருமணம் நடந்ததையும், முதல் மனைவியிடம் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போயிருப்பதையும் ஆஞ்சநேயன் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

நாடறிந்த அனன்யாவையே இப்படி ஏமாற்றினார்கள் என்றால் சாமானிய பெண்களின் நிலை? நெஞ்சு முழுக்க சோகத்துடன் இருக்கிறார் அனன்யா.
[Continue reading...]

எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆகிட்டேன்

- 0 comments
 


நமது திரைப்பட கலைஞர்கள், சினிமாவுக்கு வருவதற்கு முன் பலர். பல்வேறு தொழில்களில், பணிகளில் ஈடுப்பட்டிருக்கிறார்கள்.யார் யார் எந்தெந்த தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள்.

ஜெமினி கணேசன்
போட்டோ உதவி பேராசிரியர்

ஸ்ரீகாந்த் (மூத்த நடிகர்)
அமெரிக்க து£தரக அலுவலக அதிகாரி

ஏ.வி.மெய்யப்பன்
சைக்கிள் கடை

வி.எஸ்.ராகவன்
பத்திரிகையாளர்

ராகவன்
சுங்க இலாகா அதிகாரி

ஆனந்தராஜ்
சாராய வியாபாரம்

சிவக்குமார்
ஓவியர்

ரஜினிகாந்த்
பஸ் கண்டக்டர்

ஜெய்கணேஷ்
காய்கறி வியாபாரம்

நாகேஷ்
ரயில்வே குமாஸ்தா

கே.ஆர்.ஜி.
சிட்பண்ட்ஸ்

பாண்டியன்
வளையல் கடை

விஜயகாந்த்
அரிசி கடை

ராஜேஷ்
பள்ளி ஆசிரியர்

ஆர்.சுந்தர் ராஜன்
-பேக்கிரி கடை

பீட்டர் செல்வக்குமார்
ரயில்வே அதிகாரி

பாக்யராஜ்
ஜவுளிக்கடை

அஜீத்
டூ வீலர் மெக்கானிக்

ரகுவரன்
உணவு விடுதி

பூர்ணம் விஸ்வநாதன்
வானொலி அறிவிப்பாளர்

அமோகா
ஹோட்டல் போட்டோசப்ஷனிஸ்ட்

பாரதிராஜா
மலேரியா ஒழிப்பு இன்ஸ்பெக்டர்

டெல்லி கணேஷ்
ராணுவ வீரர்

மேஜர் சுந்தர்ராஜன்
அக்கவுண்டென்ட்

பாலச்சந்தர்
அக்கவுண்டென்ட்

புலவர் புலமைப்பித்தன்
பள்ளி தலைமையாசிரியர்

கே.விஜயன்
ரயில்வே ஒர்க்ஷாப் ஊழியர்

சாருஹாசன்
வக்கீல்

விசு
டி.வி.எஸ்.பணியாளர்

தலைவாசல் விஜய்
ஓட்டல் பணியாளர்

மோகன்
வங்கி ஊழியர்

ராஜீவ்
ஓட்டல் கேட்டரிங்

எஸ்.வி.சேகர்
மேடை நாடக ஒலி அமைப்பாளர்

தியாகராஜன்
இசைத்தட்டு விநியோக பிரதிநிதி

பாண்டியராஜன்
பார்க்காத வேலை,தொழில் இல்லை

ஏ.எஸ்.பிரகாசம்
போட்டோ பேராசிரியர்

பெரியார்தாசன்
போட்டோ பேராசிரியர்

கவிஞர் வைரமுத்து
சட்ட மொழிபெயர்ப்பு துறையில் மொழி பெயர்ப்பாளர்

முக்தா சீனிவாசன்
அலுவலக டைப்பிஸ்ட்

நடிகை காஞ்சனா
ஏர் ஹோஸ்டஸ்

கமலாகாமேஷ்
மெல்லிசை பாடகி

வடிவுக்கரசி
ஹோட்டல் போட்டோசப்னிஸ்ட்

சுஹாசினி
உதவி ஒளிப்பதிவாளர்

சரத்குமார்
பத்திரிகை அலுவலக நிர்வாகம்

இந்து
தொலைக்காட்சி அறிவிப்பாளர்

ஃபாத்திமா பாபு
தொலைக்காட்சி அறிவிப்பாளர்

டைரக்டர் வசந்த்
குமுதம் பத்திரிகை நிருபர்

டைரக்டர் கார்வண்ணன்
ஆட்டோ டிரைவர்

தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்
லேடீஸ் ஹாஸ்டல் வாட்ச்மேன்

டைரக்டர் சேரன்
தொழிலாளி (சிம்சன்)

தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினம்
விஜயசாந்தியின் மேக்கப்மேன்

தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன்
இங்கிலிஸ் எலக்ட்ரிகல் வாட்ச்மேன்

பாடலாசிரியர் பழனிபாரதி
ஆனந்தவிகடன் போட்டோப்போர்ட்டர்
[Continue reading...]

தன் தவறை உணர்ந்த நடிகை நிலா

- 0 comments
 


அன்பே ஆருயிரே', 'லீ', 'மருதமலை', 'ஜகன்மோகினி' உட்பட தமிழ், தெலுங்கில் பல படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர் நிலா. இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினரான இவர், மீரா சோப்ரா என்ற பெயரில் தெலுங்கு படங்களில் நடித்துவருகிறார். இப்போது இந்தியில் அறிமுகமாகிறார். இதுபற்றி நிலா கூறியதாவது: இந்தியில் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். எப்போதோ இந்தியில் அறிமுகமாகியிருக்க வேண்டும். இப்போதுதான் சரியான நேரம் கிடைத்திருக்கிறது.

தென்னிந்திய நடிகைகள் இப்போது அதிகளவில் இந்தியில் அறிமுகமாகிறார்கள். அவர்களுடன் போட்டியிட விரும்பவில்லை. இந்தி சினிமா என்பது கடல் மாதிரி பெரியது. இங்கு அவரவர்களுக்கான இடம் நிச்சயம் இருக்கிறது. கேத்ரினா, கரீனா கபூர் போல் ஒரு பாடலுக்கு ஆட ஆர்வம் காட்டுவீர்களா என்கிறார்கள். ஆரம்பத்தில் அப்படி ஆடுவதை விரும்பாமல் இருந்தேன். இப்போது விரும்புகிறேன். சினிமாவில் நடிக்க ஆரம்பித்தபோது என்னை திமிர் பிடித்தவள் என்றார்கள்.

ஏனென்றால் நான் கார்பரேட் பின்னணியில் இருந்து வந்தவள். சினிமாவில் பணிபுரியும் ஸ்டைல் பற்றி அதிகம் தெரியாமல் இருந்தேன். அதே நேரம் கூச்ச சுபாவம் கொண்டவள் என்பதால் என் பிரச்னைகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமலும் இருந்தேன். இப்போது எனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன்.
[Continue reading...]

மீண்டும் சிம்பு - நயன்தாரா!

- 0 comments
 
 
 
நயனின் முன்னாள் காதலன் சிம்பு, தனது புதிய படத்தில் ஜோடியாக நடிக்க அவருடன் பேச்சு நடத்தி வருகிறார் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
ஏற்கெனவே நயன்தாராவை தனது ஒஸ்தி படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தார் சிம்பு. அப்போது நடிக்க மறுத்துவிட்டார் நயன். ஆனால் இப்போது, பிரபு தேவாவை விட்டு முற்றாக விலகிவிட்ட நிலையில், அனைத்து வித வாய்ப்புகளையும் பரிசீலிக்க ஆரம்பித்துவிட்டார்.
 
இப்போது அஜீத்தின் அடுத்த படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிவிட்ட நயன், அடுத்து சிம்புவின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் ஒரு முக்கிய இயக்குநர்.
 
நயன்-சிம்பு மீண்டும் ஜோடி என்ற செய்தியால் கிளம்பவிருக்கும் பரபரப்பு நல்ல வசூலைக் கொட்டும் என நம்புகிறார்களாம்!



[Continue reading...]

காதலனுடன் தமிழ் பெண் காம உறவு! காணொளியாக இணையத்தில்...!! (அதிர்ச்சிக் காணொளி)

- 0 comments


கடந்த காலங்களில் தமிழ்ப் பெண்களின் வாழ்க்கை நடைமுறை என்பது ஒரு புனிதத் தன்மை கொண்டதாக, உறுதியான, நிலையான, உண்மைத் தன்மை கொண்டதாக இருந்து வந்தது.

ஆனால் தற்போது அத்தனையும் அடியோடு நிராகரிக்கப்பட்டு, மேலத்தேய கலாசாரம் வேரூன்ற ஆரம்பித்த நாள் முதல் இழிவான நிலைக்கு அப் பெண்களின் வாழ்வு தள்ளப்பட்டுள்ளது.

கண்டவுடன் காதல், காலையில் கட்டிலில் சங்கமம் என்ற ஒரு வேகமான, முட்டாள்த்தனமான செயற்பாடாக தங்களது வாழ்க்கையை மாற்றிக் கொண்டனர் தமிழ்ப் பெண்கள்.

இது அத்தனைக்கும் ஒரு வகையில் பெற்றோர்களும் பொறுப்பாக இருந்தாலும் கூட, பெண் பிள்ளைகள் தங்களின் வாழ்க்கை, தங்களின் கலாசாரம் என்பவற்றைக் கட்டிக் காப்பாற்ற வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கையைப் பொறுத்தமட்டில் அதுவும் தமிழர் பகுதிகளில் தற்போது அரங்கேறும் கேவலங்கள் வார்த்தைகளாலோ அல்லது வரிகளாலோ விபரிக்க முடியாததன்று.

கடந்த கால யுத்தம் ஒரு வகையில் காரணமாக அமைந்தாலும் கூட, கற்பு என்று வருகின்றபோது அதனை எக் கஷ்டம் வந்தாலும் கட்டிக்காக்க வேண்டியது தமிழ்ப் பெண்களின் கடமை.

அந்த கட்டிக் காப்பதில்தான் அடங்கியுள்ளது ஒட்டுமொத்தத் தமிழ் மக்களினதும் கலாசாரம்.

ஆனால் தற்போது என்ன நடக்கிறது? காதல் என்ற வலையில் சிக்கி, காமம் என்ற போர்வையில் கட்டிலில் படுப்பது வரை அத்தனை நடவடிக்கைகளும் காணொளிகளாகப் பதியப்படுகின்றது.

தமிழ்ப் பெண்களைக் காதலில் விழ வைத்து கான்போனில் அவளுடன் தான் இருக்கும் அத்தனை உல்லாசத்தையும் படம்பிடித்து இணையத்தளங்களில் காணொளியாகக் காண்பிக்கப்படுகின்றது.

இவ்வாறு தங்களின் நிர்வாணக் காட்சிகள் இணையங்களில் உலா வருகின்றது என்பது பலருக்குத் தெரியாது இருந்தாலும், தெரிந்த பெண்கள் தொடர்ந்தும் தொடர்ந்தும் இதே தவறுகளைச் செய்து இறுதியில் விபச்சாரி என்ற தலைப்புக்குக் கீழ் வருகின்றாள்.

ஒரு கன்னியமான, கற்புக்கரசியை காதல் வலையில் விழுத்தி இறுதியில் விபரச்சாரியாக்குகின்றான் காதலன் என்ற காம வெறியன்.

அத்துடன் தன்னை நிர்வாணமாகப் படம் பிடிப்பவன் தன்னைத் திருமணம் செய்யப் போறவன் தானே என்ற ஒரு தப்பான நினைப்புடன், நம்பிக்கையுடன் நடந்து கொள்ளும் பெண்களின் உடல்கள் இறுதில் இணையங்களில் அனைவரினதும் கண்களுக்கு விருந்தளிக்கின்றது.

இதுதான் தற்போது இலங்கையில் நடந்தேறி வருகின்றது. எனவே இது விடயத்தில் காவல்துறை, நீதித்துறை ஆகியன இணைந்து இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுத்து நிறுத்துவது இன்றியமையாததாகவுள்ளது.

அப்போதுதான் இலங்கையின் நீதிபரிபாலனங்கள் மீது பொதுமக்களுக்கு நல்லதொரு அபிப்பிராயம், நம்பிக்கை வருவதற்கு வழியமைக்கும். அத்துடன் தமிழ்ப் பெண்களின் அவலங்களையும் தடுத்து நிறுத்த முடியும்.

எனவே இதுபோன்ற சம்பவங்கள் தற்போது இலங்கையின் தமிழர் பகுதிகளில் மலிந்து வருகின்றது. பெண்களும் சரி, அவர்களைப் பெற்றவர்களும் சரி ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டியது இன்றைய சூழலில் அதி முக்கியமானதாக அமைகின்றது.

தெளிவின்மை, ஆசை வார்த்தைகளில் மயங்கி தப்பானவர்களை நம்புவது என்பதுதான் இறுதியில் இணையங்களில் ஆபாசப் படமாக மாறுகின்றது.

பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகள் குறித்து ஒரு கண்ணோட்டத்தைச் செலுத்தி, அவர்கள் வித்தியாசமான பாதையில் பயணிப்தைத் தடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் தற்போது இலங்கையில் தமிழர் பகுதிகளில் நடைபெறும் செயற்பாடுகள் நெஞ்சை உருக வைக்கின்றன, பதற வைக்கின்றன.

[Continue reading...]

மசாஜ் கிளப் என்ற பெயரில் விபசாரம்: பெண் உள்பட 4 பேர் கைது: 3 இளம்பெண்கள் மீட்பு

- 0 comments
 

சென்னை திருமங்கலத்தில் மசாஜ் கிளப்' என்ற பெயரில், விபசாரத்தில் ஈடுபட்டதாக ஆந்திர அழகி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னையில் மசாஜ் கிளப்' என்ற பெயரில், விபசாரம் நடப்பதாக போலீசுக்கு நிறைய புகார்கள் வந்தன. இதுதொடர்பாக கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் சங்கர், கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார், உதவி கமிஷனர் கலிதீர்த்தான் ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் கடந்த ஒரு வாரமாக அண்ணாநகர் பகுதியில் அதிரடி சோதனை வேட்டை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

திருமங்கலம் 13வது மெயின் ரோட்டில் உள்ள நேரு நகர் பகுதியில் உள்ள பங்களா வீட்டில் மசாஜ் கிளப்' என்ற பெயரில் கடந்த 10 நாட்களாக விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன் தினம் இரவு அங்கு தனிப்படை போலீசார் திடீர் என்று சோதனை நடத்தினார்கள்.

அந்த சோதனையில் குறிப்பிட்ட பங்களா வீட்டில் 3 இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது கண்டறியப்பட்டது. அந்த இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். அந்த பங்களாவில் ஏ.சி.வசதியுடன் 3 சொகுசு அறைகள் இருந்தன. அங்கு மசாஜ் மட்டும் செய்ய வேண்டுமென்றால் ரூ.1500 கொடுக்க வேண்டும் என்றார்கள்.

அழகிகளுடன் உல்லாசம் அனுபவிக்க ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்ததும் கண்டறியப்பட்டது. அந்த விபசார விடுதியை நடத்தியதாக திரிவேணி (வயது 40) என்ற ஆந்திர அழகி கைது செய்யப்பட்டார்.

இவர் ஏற்கனவே விபசார வழக்கில் ஜெயிலுக்கு போனவர். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்வதாக போலீசாரிடம் தெரிவித்தார். இவரது ஒரே மகள் சென்னையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் திரிவேணிக்கு உதவியாக செயல்பட்ட கார்த்திகேயன் (27), குமார் (26), ஆனந்த் (24) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட திரிவேணி உள்பட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட 3 இளம் பெண்களும் சென்னை மைலாப்பூரில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் அடைக்கப்பட்டனர்.

[Continue reading...]

பெண்ணை கற்பழித்த 2 வாலிபர்கள் கைது

- 0 comments
 

மேட்டுப்பாளையத்தில் பெண்ணை கற்பழித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.மேட்டுப்பாளையம், கரட்டுமேடு பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண்ணை கடந்த 10ந் தேதி இரவு 8 மணிக்கு அதே பகுதியை சேர்ந்த 2 பேர் கற்பழித்து விட்டு தலைமறைவாகி விட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான 2 பேரை தேடி வந்தார்கள். பெரியநாயக்கன்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜி.சக்திவேல் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் கரட்டுமேடு பகுதியில் பதுங்கி இருந்த மனோகரன், மகேந்திரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

கைதான 2 பேரையும் மேட்டுப்பாளையம் ஜுடிசியல் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ரபி, 2 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, 2 பேரும் கோவை கொண்டு செல்லப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

[Continue reading...]

மன்மோகன்சிங் இல்லம் அருகே குண்டு வெடிப்பின் பின்னணியில் ஈரான்!

- 0 comments
 

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் இல்லம் அருகே இஸ்ரேலிய தூதரக கார் குண்டுவெடித்து சிதறியதின் பின்னணியில் ஈரான் இருப்பதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் ஈரான் இதை நிராகரித்துள்ளது.டெல்லியில் நேற்று மாலை 3 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல், உலகிலேயே அதிக அளவில் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்ய கூடிய ஈரானே இக்குண்டுவெடிப்புக்குக் காரணம் என்று சாடியுள்ளது.இதனை நிராகரித்துள்ள ஈரான், யூதர்களை மட்டுமே தனித்துவமாக முன்வைக்கும் ஜியோனிச சித்தாந்தத்தைக் கடைபிடிக்கும் இஸ்ரேல்தான் ஈரானுக்கு எதிராக உளவியல் போரை நிகழ்த்தி வருகிறது என்று பதிலளித்துள்ளது. அண்மைக்காலமாக ஈரானின் அணு விஞ்ஞானிகளை அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல்தான் படுகொலை செய்து வருவதாகவும் ஈரான் கூறியுள்ளது. பின்னணி என்ன?

அமெரிக்காவின் மக்கள்தொகையிலும் ஆட்சி அதிகாரத்திலும் தீர்மானிக்கக் கூடிய சக்திகளாக இருப்பவர்கள் இஸ்ரேலியர்கள் (யூத இனத்தவர்கள்தான்). யூதர்களின் நலனுக்குப் பாதகமான எந்த ஒரு செயல்திட்டத்தையும் கொள்கையையும் அமெரிக்கா கடைபிடிப்பதில்லை.

சர்வதேச விவகாரங்களில் அமெரிக்காவின் மென்மை முகமாக நார்வேயும் கோரமுகமாக இஸ்ரேலும் அறியப்பட்ட ஒன்று. சமாதான பேச்சுகளில் நார்வே களம் இறங்கும் எனில் போர் போன்ற விவகாரங்களில் இஸ்ரேல் இறங்கும்.

அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் கை கோர்த்து ஈரான் மீது சர்வதேச தடை விதித்துள்ள நிலையில் எந்த நேரத்திலும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற நிலையும் உள்ளது.

இதேபோல் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கும் அமெரிக்காவுக்குமான போரில் இஸ்ரேல் பிரிக்க முடியாத கூட்டாளி. இதனால்தான் மும்பையில் 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலிலும் கூட இஸ்ரேலியர்களே குறிவைக்கப்பட்டனர்.

இஸ்ரேலியர்கள் ஒன்றுகூடும் இடத்தை குறிவைத்துதான் தாக்குதல் நடத்தப்பட்டது. இப்போதும் டெல்லியில் தாக்குதல் நடத்தப்பட்டதும் இஸ்ரேலியர்களை குறிவைத்தே.

சர்வதேச அக்கப்போரில் அமெரிக்காவுடன் மறைமுகமாக கை கோர்த்துக் கொண்டு எந்த ஒரு நாட்டுக்கும் நம்பிக்கைக்குரிய நண்பராக இந்தியா இருப்பதில்லை. இதுவே சர்வதேச நாடுகளுக்கு இடையேயான போர்க்களமாக இந்திய நகரங்கள் மாறி வருகின்றன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இதற்கிடையே, இஸ்ரேல் தூதரக அதிகாரியின் காரில் வைக்கப்பட்டது ஸ்டிக்கர் குண்டு என்று கண்டறியப்பட்டுள்ளது. காரின் பின்பகுதியில் இதைப் பொருத்தியுள்ளனர். விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவர் என்று டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger