Monday 4 November 2013

தோல் பிரச்னையால் அவதிப்படும் நயன்தாரா! Nayanthara suffered by skin problem

- 0 comments

தோல் பிரச்னையால் அவதிப்படும் நயன்தாரா!
Nayanthara skin problem

இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக தொடங்கிய நயன்தாரா தோல் சம்மந்தமான பிரச்னையால் அவதிப்பட்டு வருகிறார்.
பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு, இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளார் நயன்தாரா.

விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து குவிந்தாலும், தனக்கு ஏற்றவாறு தெரிவு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

நடிப்பு ஒரு பக்கம் இருக்க அவர் பற்றி காதல் கிசுகிசுக்கள் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளன, இந்நிலையில் நயன் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, தோல் சம்பந்தமான பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறாராம், இதற்கு காரணம் ஓவராக மேக்கப் போடுவது தானாம்.

குறிப்பாக அசைவ உணவு சாப்பிட்டால் நயனின் தோல் அலர்ஜி பிரச்சனை அதிகரித்து விடுகிறதாம். இந்த பிரச்சனைக்கு அவர் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறாராம்.

இதேபோன்று அவதிப்பட்டு வந்த சமந்தாவும் 3 மாதங்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தோல் பிரச்னையால் அவதிப்படும் நயன்தாரா! appeared first on Pirapalam.Com.

shared via

[Continue reading...]

உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் விளையாட இந்தியா தகுதி India qualify for Hockey World Cup

- 0 comments

உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் விளையாட இந்தியா தகுதி India qualify for Hockey World Cup

புதுடெல்லி, நவ. 4-

இந்திய ஆடவர் ஹாக்கி அணி அடுத்த ஆண்டு நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் நடைபெற உள்ள உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ள அணிகள் பட்டியலில் இணைந்துள்ளது.

நெதர்லாந்தில் அடுத்த ஆண்டு உலக கோப்பை ஹாக்கி தொடர் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த ஜூன் மாதம் நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் உலக ஹாக்கி லீக் தொடருக்கான அரையிறுதியில் இந்திய அணி 6-வது இடம் பிடித்தது. அதேசமயம் ஆசிய கோப்பை போட்டியில் தோல்வியடைந்ததால் உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற முடியவில்லை.

இந்நிலையில், நியூசிலாந்தில் நடைபெற்ற ஓசியானியா கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலிய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் கோப்பையை கைப்பற்றின.

இந்த அணிகள் ஏற்கனவே உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றிருந்தன. இதனால் இந்திய அணி உலகக் கோப்பையில் பங்கேற்பது உறுதியானது. இதனை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு அதிகாரப் பூர்வமாக அறிவித்தது. 

...

shared via

[Continue reading...]

காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை: சென்னை குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு வானிலை அறிவிப்பு heavy rain Chennai lakes water flow increase water

- 0 comments

காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை: சென்னை குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு heavy rain Chennai lakes water flow increase water

சென்னை, நவ. 4–

வங்க கடலில் இலங்கை அருகே உருவான புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து கன்னியாகுமரி அருகே நிலை கொண்டுள்ளதால் கடலோர மாவட்டங்களில் இன்றும் மழை பெய்கிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் நேற்றிரவும், இன்று காலையிலும் விட்டு விட்டு மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியிருந்தது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியில் 7 மி.மீட்டர் மழையும், சோழவரம் ஏரியில் 8 மி.மீட்டர், செம்பரம்பாக்கம் ஏரியில் 12 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.

இதனால் குடிநீர் ஏரிகளுக்கு மழைநீர் வரத்து அதிகரித்துள்ளது.

பூண்டி ஏரிக்கு மழை நீருடன் சேர்ந்து கிருஷ்ணா கால்வாயில் 115 கனஅடி தண்ணீர் வருகிறது. புழல் ஏரிக்கு 156 கனஅடி தண்ணீரும், சோழவரம் ஏரிக்கு 58 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 154 கனஅடியும் மழைநீர் வந்து கொண்டிருக்கிறது.

மழை இன்றும் நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

...

shared via

[Continue reading...]

இசைப்பிரியா படுகொலை: இலங்கை மந்திரி டக்லஸ் தேவானந்தா கண்டனம் isaipriya killed sri lanka minister douglas devananda condemn

- 0 comments

இசைப்பிரியா படுகொலை: இலங்கை மந்திரி டக்லஸ் தேவானந்தா கண்டனம் isaipriya killed sri lanka minister douglas devananda condemn

கொழும்பு, நவ. 4–

இசைப்பிரியா படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என இலங்கை மந்திரி டக்லஸ் தேவானந்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெண் விடுதலைப்புலி இசைப்பிரியா. இலங்கையில் உள்ள தமிழ் தொலைக் காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்தார். வன்னியில் நடந்த இறுதி கட்ட போரில் அவர் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.

ஆனால், அவரை கைது செய்த இலங்கை சிங்கள ராணுவம் நிர்வாணப்படுத்தி கற்பழித்து கொலை செய்ததை வீடியோ காட்சி மூலம் சேனல் 4 தொலைக் காட்சி சமீபத்தில் அம்பலப்படுத்தியது. இது உலக நாடுகளையும், தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த கொடூர ஈவு இரக்கமற்ற கொலைக்கு தமிழ் மக்கள் தங்கள் கண்டனத்தையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் மந்திரி டக்லஸ் தேவானந்தாவும் இசைப்பிரியா கொலைக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவரான இவர் பி.பி.சி. தமிழோசைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–

''காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு வர உள்ளனர். இந்த வேளையில் சேனல் 4 தொலைக்காட்சி போர்க்குற்றம் தொடர்பாக வெளியிட்டிருக்கும் இசைப் பிரியா படுகொலை தொடர்பான வீடியோ காட்சிகள் உலக நாடுகளை மட்டுமின்றி உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சேனல் 4 தொைக்காட்சி இசைப்பிரியாவை உயிருடன் ராணுவத்தினர் கைது செய்த காட்சியை ஒளிபரப்பி இருப்பது தமிழ் மக்களை எரிச்சலடைய செய்துள்ளது. நம்பிக்கைகளை தகர்த்துள்ளது. மனித நேயமுள்ளவர்களை உலுக்கியுள்ளது.

தற்போது வெளியாகி இருக்கும் இசைப்பிரியா படுகொலை செய்தி தொடர்பாக முழுமையான நீதி விசாரணை நடத்த வேண்டும். அதன் மூலம் உண்மையை தெளிவு படுத்த வேண்டும். இது குறித்த கடிதத்தை ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி.) ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவுக்கு அனுப்பியுள்ளது.

முழுமையான நீதி விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளை கண்டு பிடித்து நீதியின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும். அதுவே இறுதிகட்ட போர் தொடர்பாக தமிழ் மக்களிடம் எழுந்திருக்கும் படுகொலைகள் தொடர்பான அச்சங்களுக்கும், சந்தேகங்களுக்கும் விடை காண்பதாக அமையும்.

தமிழ் மக்களிடையே இருக்கும் சந்தேகங்களுக்கும், அச்சங்களுக்கும் நியாயமும், பரிகாரங்களும் காணப்பட வேண்டும். எனவே, எனது கோரிக்கைக்கு ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் உண்மையை உலகுக்கு தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கிறோம்'' என அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மந்திரி டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

...

shared via

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger