Wednesday 11 December 2013

ரஜினிகாந்துக்கு 64 வது பிறந்தநாள்: பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து Rajinikanth 64th birthday pon radhakrishnan wishes

- 0 comments

Img ரஜினிகாந்துக்கு 64 வது பிறந்தநாள்: பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து Rajinikanth 64th birthday pon radhakrishnan wishes

சென்னை, டிச.12-

நடிகர் ரஜினிகாந்த் இன்று(வியாழக்கிழமை) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சி தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

64-வது பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடனும், நிரந்தர ஆரோக்கியத்துடனும் எல்லா செல்வங்களும், நலங்களும் வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல அன்னை பராசக்தியை பிரார்த்திக்கின்றேன்.

பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து ஏழைகளின் துயரங்களை உணர்ந்து ஏழைகளோடு வாழ்ந்து இந்தியாவில் ஈடு இணையற்ற நடிகராகவும், மனிதராகவும் உயர்ந்து விட்ட பின்பும் தன் கடந்த காலத்தை என்றும் நினைவில் கொண்டு வாழ்ந்தும், வாழ்வித்தும் வரும் அண்ணன் ரஜினிகாந்த் கடந்த கால பணிகளை விட எதிர்கால பணிகள் அதிகம் இருக்கும் வண்ணம் அன்னை சக்தி அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளார்.
...

[Continue reading...]

சென்னையில் இருந்து டெல்லிக்கு ரூ.11 லட்சம் கள்ள நோட்டுகளை கடத்த முயன்ற வெளிநாட்டு வாலிபர் கைது Youth arrested for smuggling fake currency

- 0 comments

Img சென்னையில் இருந்து டெல்லிக்கு ரூ.11 லட்சம் கள்ள நோட்டுகளை கடத்த முயன்ற வெளிநாட்டு வாலிபர் கைது Youth arrested for smuggling fake currency

சென்னை, டிச. 12-

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்று மாலை டெல்லிக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை விமான நிறுவன பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது மேற்கு ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கெய்னியா நாட்டை சேர்ந்த பிராங்கிளின்(வயது 27) என்பவர் அந்த விமானத்தில் ஏற வந்தார். அவரது சூட்கேசை பாதுகாப்பு அதிகாரிகள் 'ஸ்கேனிங்' கருவியில் வைத்து சோதனை செய்தனர்.

அப்போது துணிகளுக்கு நடுவே கட்டுக்கட்டாக பணம் இருப்பது போன்று தெரியவந்தது. உடனே அந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். அதில் 2 கவர்களில் கட்டுக்கட்டாக ஆயிரம் ரூபாய் தாள்கள் இருந்தன. உடனே இதுபற்றி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது.

வெளிநாட்டு வாலிபர் ரூபாய் நோட்டுகளை கடத்த முயன்றது பற்றி தகவல் அறிந்ததும் மத்திய உளவு படை, கியூபிராஞ்ச் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

அதில் கெய்னியா நாட்டை சேர்ந்த பிராங்கிளின், அவரது நண்பர் ஜான்சன் இருவரும் கடந்த 9–ந் தேதி டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்ததும், பிராங்கிளினிடம் இருந்த ரூ.11 லட்சத்து 29 ஆயிரம் பணம் அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பதும், இவை பாகிஸ்தான் நாட்டில் அச்சடிக்கப்பட்டவை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதுபற்றி பரங்கிமலை துணை கமிஷனர் சரவணன், மீனம்பாக்கம் உதவி கமிஷனர் விஜயகுமார், விமான நிலைய இன்ஸ்பெக்டர் மகிமைவீரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வெளிநாட்டு வாலிபர் பிராங்ளினை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.11 லட்சத்து 29 ஆயிரம் கள்ளநோட்டுகள் மற்றும் பச்சை நிறமை ஆகியவற்றை கைப்பற்றினார்கள்.

கெய்னியா நாட்டை சேர்ந்த இவர்கள் இருவரும் எதற்காக சென்னை வந்தனர். இவர்களிடம் கள்ள நோட்டுகளை தந்தது யார்? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்று தெரியவில்லை.

மேலும் இவர்கள் தீவிரவாத கும்பலுடன் தொடர்பு உடையவர்களா? உடன் வந்த ஜான்சன் என்பவர் எங்கு உள்ளார்?. அவரிடமும் கள்ள நோட்டுகள் இருக்கிறதா?. கடந்த 3 நாட்களாக சென்னைக்கு வந்து யார், யாரிடம் கள்ள நோட்டுகளை தந்து உள்ளார்கள்?. கள்ள நோட்டுகளை தமிழகத்தில் எந்தந்த பகுதிகளில் புழக்கத்தில் விட்டு உள்ளார்கள்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதான பிராங்கிளினுடன் வந்த அவனது கூட்டாளி ஜான்சன் படம் விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது. அதை வைத்து அவன் மீண்டும் விமானம் நிலையம் வரலாம் என கருதி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நேரத்தில் இரவு செல்லும் டெல்லி விமானத்தில் ஏறி நைசாக தப்பி ஓடிவிடாலம் என கருதி ஜான்சன் சென்னை விமான நிலையத்துக்கு நேற்று இரவு 8.30 மணி அளவில் வந்தான். 

போலீசார் கண்ணில் மண்ணை தூவிவிட்டு வேறுவிமானத்தில் ஏறி தப்பிவிடலாம் என நினைத்து வந்த அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீடியோவில் பதிவான அவனது படத்தை ஏற்கனவே பார்த்திருந்த போலீசார் அவனை மடக்கி பிடித்தனர். அவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். மேலும் அவனிடம் இருந்த ரசாயன கலவையையும் போலீசார் கைப்பற்றினார்கள்.

பிடிபட்ட ஜான்சனின் செல்போனை போலீசார் கைப்பற்றி சோதனை போட்டனர். அப்போது அவனது செல்போனில் ஏற்கனவே பிராங்கிளினிடம் கைப்பற்றப்பட்ட ரூ.11 லட்சம் கள்ளநோட்டுகளை யார்–யாருக்கு? எவ்வளவு கொடுக்க வேண்டும் என ரகசிய குறியீடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் பிடிபட்ட ஜான்சனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், 'சென்னையில் அச்சடிக்கும் கள்ள நோட்டுகளை 2 பேரும் வாங்கிக்கொண்டு டெல்லி செல்வோம். அங்கு சென்றதும், அந்த நோட்டுகளை ரசாயன கலவையில் நனைப்போம். அப்போது கள்ளநோட்டுகள் நல்லநோட்டுகள் போன்று மாறிவிடும். பின்னர் இந்த நோட்டுகளை புழக்கத்தில் விடுவோம்' என கூறியதாக தெரிகிறது.

வெளிநாட்டு ஆசாமிகளுக்காக சென்னையில் கள்ளநோட்டு எங்கு அச்சடிக்கப்படுகிறது? அவர்களுக்கு துணை போகிறவர்கள் யார்? என போலீசார் அவனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
...

[Continue reading...]

புதுடெல்லியில் வீட்டில் இருந்து ஓடிய சிறுமி நான்கு பேர் கொண்ட கும்பலால் கற்பழிப்பு New Delhi girl molested 4 people

- 0 comments

Img புதுடெல்லியில் வீட்டில் இருந்து ஓடிய சிறுமி நான்கு பேர் கொண்ட கும்பலால் கற்பழிப்பு New Delhi girl molested 4 people

புதுடெல்லி, டிச. 12-

உத்தரதேச மாநிலம் கோராக்பூரை சேர்ந்த சிறுமி வீட்டு பிரச்சனை காரணமாக பெற்றோர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடியுள்ளார். அவர் ரெயில் மூலம் புதுடெல்லி சென்றுள்ளார். அப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி போலீசாரிடம், நான் ரெயில் இருந்து கீழே இறங்கியதும், நான்கு பேர்கள் கொண்ட கும்பல் என்னை கடத்தி சென்று சிந்தியா ஹவுஸ்க்கு பின்புறம் கொண்டு சென்று கற்பழித்து விட்டனர் என்று கூறியுள்ளார்.

சிறுமி இன்று காலை அங்குள்ள பார்க்கிங் ஒன்றில் மயக்க நிலையில் கிடந்துள்ளார். அவரை பார்த்த சிலர் அங்குள்ள ஆர். எம்.எல். மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமி கற்பழிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

சிறுமி மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவளிடம் இருந்து மேலும், சில தகவல்களை பெற நாங்கள் முயற்சித்து வருகிறோம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
...

[Continue reading...]

நந்தன் நீல்கேணி காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளரா? சோனியா ஷாக் முடிவு Nandan nilekeni Congress Partys prime minister candidate Sonia Shock

- 0 comments

Img நந்தன் நீல்கேணி காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளரா? சோனியா ஷாக் முடிவு Nandan nilekeni Congress Partys prime minister candidate Sonia Shock

புதுடெல்லி, டிச.11-

இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நந்தன் நீல்கேணியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இம்முயற்சியை கடுமையாக விமர்சித்த நாளேடு ஒன்று இது குப்பைத்தனமான முடிவு என விமர்சித்துள்ளது. இது குறித்து சல்மான் குர்ஷித் கூறும்போது, எங்களுக்கென்று தலைவர்கள் உள்ளனர், அவர் எங்களோடு இணைந்து எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி பணியாற்றி வருகிறார் என தெரிவித்துள்ளார்.

நீல்கேணி தெற்கு பெங்களூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளதாக ஊர்ஜிதப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகக் குழு கூட்டத்தில் இம்முடிவை சோனியா காந்தி எடுத்துள்ளதாக தெரிகிறது.

நான்கு மாநில சட்டப்பேரவை முடிவுகளுக்கு பின் சோனியாவை சந்தித்த தலைவர்களான திக் விஜய் சிங்கும், ஜோதிராதித்ய சிந்தியாவும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் கட்சி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்தபோதிலும் இதை ஏற்க ராகுல் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

2009ஆம் ஆண்டு இந்தியா இங்க்-ன் உயர்ந்த பதவியில் இருந்து விலகிய நீல்கேணி தனிச்சிறப்பு அடையாள அட்டை ஆணையத்தின்(ஆதார்) தலைவராக பதவியேற்று, அரசின் உதவிகளை ஏழைகள் நேரடியாக பெற்றிட ஏதுவாக ஆதார் அட்டை திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் முடிவடைந்தால் உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் தகவல் களஞ்சியமாக இருக்கும் என கூறப்படுகிறது.

பிரதமர் வேட்பாளராக நீல்கேணியை அறிவிக்கும் விவகாரம் குறித்து எம்.பி.க்களிடம் கருத்து கேட்டபோது:

இன்று அரசியலில் எதுவும் நடக்க வாய்ப்புள்ளது என்று பா.ஜனதாவின் யஸ்வந்த் சின்ஹா தெரிவித்தார். சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங்கிடம் கேட்டபோது, அது காங்கிரஸ் கட்சியின் உள் விவகாரம் என்றார். எனினும் அக்கட்சி உறுப்பினர் ராம் கோபால் யாதவ், யார் இந்த நீல்கேணி? என்று கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய ஜனதா தள தலைவர் சிவானந்த் திவாரி கூறும்போது, நாட்டில் யாருக்கு அவரை தெரியும்? என்றும் காங்கிரஸ் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்குமானால் அதைப்பற்றி நாம் என்ன கூறமுடியும்? என்றார். ராகுல் தான் சிறந்த தேர்வாக இருக்கமுடியும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
...

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger