Sunday 6 October 2013

இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற 2 போலீசார் டிஸ்மிஸ் 2 Delhi cops dismissed for molesting girl

- 0 comments

இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற 2 போலீசார் டிஸ்மிஸ் 2 Delhi cops dismissed for molesting girl

Tamil NewsYesterday,

புதுடெல்லி, அக்.7-

வழிதவறி தவித்த இளம்பெண்ணை கற்பழித்த 2 போலீசாரை டெல்லி காவல்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது.

சம்பவத்தன்று டெல்லி விகாஸ்புரியில் உள்ள போலீஸ் குடியிருப்பு பகுதி அருகே வழிதவறி வந்த இளம்பெண்ணை பார்த்த போலீஸ்காரர் அமீத் டோமர் என்பவர் அவளிடம் நைசாக பேசி அதே குடியிருப்பில் வசிக்கும் குர்ஜிந்தர் சிங் என்பவரின் வீட்டுக்கு அழைத்து சென்றார்.

அங்கே அமீத் டோமரும், குர்ஜித் சிங்கும் அந்த பெண்ணை கற்பழிக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து விடுபட அவள் போட்ட கூச்சலை கேட்ட அக்கம்பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்கள் மகளிர் அவசர உதவி மையத்துக்கு தகவல் அளித்தனர்.

அவசர உதவி மைய போலீசார் விரைந்து வந்த அந்த பெண்ணை மீட்டு அவளை கற்பழிக்க முயன்ற இருவரையும் கைது செய்தனர்.

இதனையடுத்து, வேலியே பயிரை மேய்ந்த கதையாக இளம்பெண்ணை காவலர் குடியிருப்பில் கற்பழிக்க முயன்ற 2 போலீசாரையும் அதிரடியாக பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்து டெல்லி காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
...
Show commentsOpen link

[Continue reading...]

தமிழ்ப்படத்தில் ‘குத்தாட்டம்’! கிரிக்கெட் வீரர் பிராவோ bravo tamil cinema dance

- 0 comments

தமிழ்ப்படத்தில் 'குத்தாட்டம்'! : பிரஸ்மீட்டில் ரிகர்சல் பார்த்த கிரிக்கெட் வீரர் பிராவோ

by abtamil
Tamil newsToday,

இதுவரை கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கங்ணம் ஸ்டைல் டான்ஸ் மட்டுமே ஆடிக்கொண்டிருந்த பிரபல கிரிக்கெட் வீரர் பிராவோ முதல்முறையாக ஒரு தமிழ்ப்படத்தில் செமத்தியாக குத்தாட்டம் போடுகிறார்.

மேற்கத்திய தீவுகள் அணியைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் தான் பிராவோ. ஆல்ரவுண்டராக கலக்கி வரும் இவர் ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். விளையாடிக் கொண்டிருக்கும் போது கேட்ச் பிடித்தாலோ, விக்கெட் எடுத்தாலோ மைதானத்தில் இவர் ஆடும் கங்ணம் டான்ஸுக்கு ரசிகர்கள் எக்கச்சக்கம் உண்டு.

அப்படி மைதானத்தில் ஆடியதாலோ என்னவோ இப்போது அவர் சினிமாவிலும் டான்ஸ் ஆடப்போகிறார். அதுவும் தமிழ்ப்படத்தில் என்பது தான் கூடுதல் விசேஷம்.

தமிழில் ராஜன் மாதவ் டைரக்ட் செய்யும் 'உலா' என்ற படத்தில் தான் பிராவோ குத்தாட்டம் போடுகிறார். மைதானத்தில் இவரது டான்ஸை பார்த்து பிடித்துப் போய் பிராவோவை டான்ஸ் ஆட கூட்டி வந்தாராம் ராஜன் மாதவ். ராஜன் மாதவ் ஏற்கனவே சேரன், பிரசன்னா இணைந்து நடித்த 'முரண்' என்ற படத்தை டைரக்ட் செய்தவர்.

பாண்டிசெல்வம் என்ற புதுமுக பாடலாசிரியர் எழுதியுள்ள இந்தப்பாடலுக்காக ஏ.வி.எம் ஸ்டூடியோவில் பிரம்மாண்டமாக செட் போடப்பட்டுள்ளது. அங்கு தான் பிராவோ ஆடும் பாடல் காட்சியை படமாக்குகிறார்கள்.

இதுகுறித்து இன்று அந்தப்படத்தின் பிரஸ்மீட்டில் நம்மை சந்தித்த பிராவோ "தமிழ்ப்படத்தில் டான்ஸ் ஆடுவது சந்தோஷமாக உள்ளது" என்றார்.

நான் பாலிவுட் படங்களை நேரம் கிடைக்கும் போது பார்ப்பேன். பாலிவுட்டில் பிரபல நடிகர் ஷாருக்கானை எனக்கு பிடிக்கும். அவர் நடித்த மை நேம் இஸ் கான் படம் எனக்கு பிடித்த படம்.

என்ற பிராவோவிடம் அரசியலுக்கு வரும் ஆசை உண்டா? என்று ஒரு நிருபர் கேட்க, அப்படி ஒரு ஆசை எனக்கு இல்லை. கிரிக்கெட் விளையாடணும், வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கணும் இதுதான் என்னோட ஆசை" என்றும் கூறிய பிராவோ முன்னதாக பிரஸ்மீட் மேடையிலேயே 'உலா' படக்குழுவுடன் சேர்ந்து ஒரு சூப்பரான குத்தாட்டத்தை போட்டு ஆச்சரியப்படுத்தினார்.

இது ட்ரெய்லர் தான் மெயின் பிக்சர் இன்னும் வரல என்று சொல்லும் அளவுக்கு நடனத்தில் பட்டையை கிளப்பினார் பிராவோ.

அடுத்து என்ன ஹீரோதானே..?

Show commentsOpen link

[Continue reading...]

மருமகளை கற்பழித்துக் கொன்ற மாமனார் கைது Man arrested for seduction and murder of daughter in law

- 0 comments

மேற்கு வங்காளத்தில் மருமகளை கற்பழித்துக் கொன்ற மாமனார் கைது Man arrested for seduction and murder of daughter in law

Tamil NewsYesterday,

கொல்கத்தா, அக்.7-

மேற்கு வங்காள மாநிலம், பரதமன் மாவட்டம் சோர்டங்கா கிராமத்தை சேர்ந்த ராக்கி(20) என்பவர் மர்மமான முறையில் நேற்று முன்தினம் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இவரது கணவர் சஞ்ஜீவ் பெங்களூரில் வேலை செய்து வருவதால் தனது மாமனாரின் வீட்டில் ராக்கி வாழ்ந்து வந்தார்.
 
மகளின் அகால மரணம் பற்றிய செய்தி அறிந்த ராக்கியின் தாயார் போலீசாரிடம் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். சில தினங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்ற போலீஸ்காரரான தனது மாமனார், தன்னை கற்பழித்து விட்டதாகவும், இதுபற்றி யாரிடமாவது சொன்னால் தீர்த்துக் கட்டிவிடுவதாகவும் ராக்கி என்னிடம் அழுதபடி போன் செய்து கூறினாள்.

பெங்களூரில் இருக்கும் உன் கணவர் வரும் வரை பொறுத்திரு. அவரிடம் விஷயத்தை சொன்ன பிறகு என்ன செய்கிறார் என்று பார்ப்போம் என்று நான் சமாதானப்படுத்தினேன்.

உண்மையை என்னிடம் ராக்கி சொல்லி விட்டாள் என்பதை அறிந்து மாமனார் அவளை கொன்றுவிட்டு தூக்கு மாட்டிக்கொண்டு ராக்கி தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடுகிறார்.

உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் ராக்கியின் தாயார் அளித்த புகாரையடுத்து ஹர கோவிந்த் பானர்ஜி(62) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
...
Show commentsOpen link

[Continue reading...]

நீலாங்கரையில் டாக்டர் வீட்டை உடைத்து அழகியுடன் உல்லாசமாக இருந்த வாலிபர்கள் doctor house break enjoy with lady youths arrest in Neelankarai

- 0 comments

நீலாங்கரையில் டாக்டர் வீட்டை உடைத்து அழகியுடன் உல்லாசமாக இருந்த வாலிபர்கள் doctor house break enjoy with lady youths arrest in Neelankarai
Tamil NewsToday,

திருவான்மியூர், அக் 6–

நீலாங்கரை 'புளூபீச்' ரோட்டை சேர்ந்தவர் அமிர்தாபிர்லா டாக்டரான இவர் பங்களா வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த வாரம் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றார். நேற்று இரவு திரும்பி வந்தபோது வீட்டு கதவு பூட்டு உடைந்து திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது ஏ.சி. அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. உள்ளே ஆட்கள் நடமாட்டம் காணப்பட்டது. எனவே அவர்கள் கொள்ளையர்களாக இருக்கலாம் என சந்தேகம் அடைந்த அமிர்தபிர்லா நீலாங்கரை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் பங்களா வீட்டை சுற்றி வளைத்து உள்ளே புகுந்தனர். உள் பக்கமாக பூட்டப்பட்ட ஏ.சி. அறையை தட்டி உள்ளே இருந்தவர்களை வெளியே வருமாறு அழைத்தனர்.

போலீசார் வந்திருப்பதை அறிந்ததும் அறையில் இருந்த 2 வாலிபர்களும் ஒரு இளம்பெண்ணும் வெளியே வந்தனர். அறையை போலீசார் சோதனை செய்தபோது கழிவறையில் பதுங்கி இருந்த மற்றொரு வாலிபரை பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் நீலாங்கரையை சேர்ந்த மணிகண்டன், விஜய், ராஜா என்பதும் பிடிபட்ட பெண் கொட்டிவாக்கத்தை சேர்ந்த 17 வயதுடைய இளம் பெண் என்பதும் தெரிந்தது. பூட்டிய பங்களாவை உடைத்து 3 வாலிபர்களும் பெண்ணுடன் ஏ.சி. அறையில் ஒரு வாரம் உல்லாசம் அனுபவித்துள்ளனர்.

மது பாட்டில்களை பிரிட்ஜில் வாங்கி வைத்தபடி டி.வி. பார்த்தபடி ஜாலியாக இருந்தனர். செலவுக்கு பணம் இல்லாததால் பித்தளை 'ஷவர்' குழாய்களை விற்று இருப்பது தெரிந்தது.

லாட்ஜில் போலீஸ் கெடுபிடிக்கு பயந்து பூட்டிய வீட்டை உடைத்து ஜாலியாக இருந்ததாக பிடிபட்ட 4 பேரும் தெரிவித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

பூட்டிய பங்களா வீட்டிற்குள் புகுந்து வாலிபர்கள் இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த சம்பவம் நீலாங்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

...
Show commentsOpen link

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger