Friday 24 February 2012

6 பெண்களை நரபலி கொடுத்து பூஜை செய்த மந்திரவாதிகள்

- 0 comments
 

ஆப்பிரிக்க நாடுகளில் மக்கள் மந்திரவாதிகளை நம்புவது இப்போதும் வழக்கமாக உள்ளது. இதனால் எல்லா ஊர்களிலும் மந்திரவாதிகள் உள்ளனர். நோய் ஏற்பட்டால் மக்கள் ஆஸ்பத்திரிகளுக்கு செல்வதை விட மந்திரவாதிகளை தேடி செல்வதே அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தான்சானியா நாட்டில் உள்ள சான்டசியா என்ற இடத்தில் மந்திரவாதிகள் 6 பெண்களை நரபலி கொடுத்து பூஜை நடத்தி உள்ளனர்.

அந்த பெண்களை துண்டு துண்டாக வெட்டி அவர்களின் உறுப்புகளை எடுத்து சென்று இந்த பூஜைகளை செய்து இருக்கிறார்கள். மனித உறுப்புகளை வைத்து பூஜை செய்தால் பணக்காரர்கள் ஆகலாம் என்ற நம்பிக்கை தான்சானியாவில் பலரிடம் உள்ளது. அவர்கள் மந்திரவாதிகளை அமர்த்தி பெண்களை கொன்று பூஜை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விஷயம் வெளியானதை அடுத்து அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் வன்முறையிலும் இறங்கினார்கள். அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
[Continue reading...]

தகவல் உரிமை சட்டத்தில் வருமானம்-சொத்து விவரங்களை வெளியிட சோனியா மறுப்பு

- 0 comments
 
 
சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வி.கோபால கிருஷ்ணன் டெல்லி வருமான வரி உதவி கமிஷனருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மனு அனுப்பி இருந்தார்.
 
அதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 2000-2001 மற்றும் 2010-2011-ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்த படிவங்களை தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 11-ன் கீழ் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
 
இது பற்றி வருமான வரி உதவிக் கமிஷனர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதி இருந்தார். அதற்கு சோனியா பதில் தெரிவித்துள்ளார். அதில், எனது சொத்து கணக்கு, வருமானவரி செலுத்திய விவரங்கள் தனிப்பட்ட விஷயம். பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள நான் அதை தேவையில்லாத 3-வது நபருக்கு பரிமாறக் கொள்ளக் முடியாது. அது எனது தனிப்பட்ட பாதுகாப்பு விவகாரத்தில் தலையிடுவதாகும்.
 
தனி நபர் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் ரகசியமானவை. பாதுகாக்கப்பட வேண்டியவை. 1961-ம் ஆண்டு வருமான வரிச் சட்டம் 138-வது பிரிவின் கீழ் யாருக்கும் தெரிவிக்க வேண்டியதில்லை என்று சோனியா பதில் அளித்துள்ளார்.
 
சோனியாவின் பதிலை மனுதாரருக்கு வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. சோனியாவின் வருமான வரி கணக்கு விவரங்களை தெரிவிக்க மறுத்து இருப்பது இது 2-வது முறையாகும். ஏற்கனவே இது போல் வருமான வரி கணக்கு தாக்கல் விவரங்களை கேட்டிருந்தார். அதற்கு சோனியாவிடம் பதில் பெறாமல் வருமான வரித்துறையே தர மறுத்து விட்டது.
 
அதன் பிறகு கடந்த மாதம் கோபாலகிருஷ்ணன் மீண்டும் வருமான வரித் துறையிடம் சோனியாவின் வருமான வரி கணக்குகளை கேட்டு கடிதம் அனுப்பினார்.
 
இந்த முறை சோனியாவிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் பதில் பெற்று அதை மனுதாரருக்கு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் 2-வது முறையாகவும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.



[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger