Sunday 15 September 2013

வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய ஏ அணி வெற்றி India A team beat West Indies A team

- 0 comments

வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்
இந்திய ஏ அணி வெற்றி India A team beat
West Indies A team

15 Sep 13 08:45:37 PM by Tamil | Tags : தினசரி செய்திகள் , Daily News | 23 views | 0 comments
பெங்களூர், செப்.16-

கீரன் பவெல் தலைமையிலான வெஸ்ட்
இண்டீஸ் ஏ கிரிக்கெட் அணி,
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3
ஒருநாள், ஒரு 20 ஓவர் மற்றும் 3 டெஸ்ட்
போட்டி தொடரில்
விளையாடுகிறது.
இந்தியா ஏ -வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகள்
இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட
ஒருநாள் போட்டி தொடரில்
முதலாவது ஒருநாள் கிரிக்கெட்
போட்டி பெங்களூர்
சின்னசாமி ஸ்டேடியத்தில்
நேற்று நடந்தது.
முந்தைய நாளில் பெய்த மழையால்
அவுட் பீல்டு ஈரப்பதமாக இருந்ததால்
ஆட்டம் 1 மணி 45 நிமிடம் தாமதமாக
தொடங்கியது. இதனால் போட்டி 42
ஓவர்களாக குறைக்கப்பட்டது.
வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி டாஸ்
ஜெயித்து, இந்திய ஏ
அணியை முதலில் பேட்டிங் செய்ய
பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக
ராபின் உத்தப்பா, உன்முக்த் சந்த்
ஆகியோர் களம் இறங்கினார்கள். உன்முக்த்
சந்த் 10 பந்துகளில் ஒரு ரன்னுடனும்,
ராபின் உத்தப்பா 37 பந்துகளில் 2
பவுண்டரியுடன் 23 ரன்னுடனும் ஆட்டம்
இழந்தனர்.
இதனை அடுத்து கேப்டன் யுவராஜ்சிங்,
மன்தீப்சிங்குடன் இணைந்தார்.
ஜனவரி மாதத்துக்கு பின்னர் முதல்
முதல் முறையாக களம் காணும்
யுவராஜ்சிங் முதலில் அடித்து ஆட
சற்று தடுமாறினார். யுவராஜ்சிங் 39-
வது பந்தில் தான் முதல்
பவுண்டரியை விரட்டினார். அதன்
பின்னர் அவரது ஆட்டத்தில் அனல் பறந்தது.
61 பந்துகளில் அரை சதத்தை எட்டினார்.
இதற்கிடையில் மன்தீப்சிங் 78 பந்துகளில்
7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 67 ரன்
எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதைத்தொடர்ந்து யூசுப்பதான் களம்
கண்டார்.
அரை சதத்துக்கு பின்னர் அடுத்த 16
பந்துகளில்
அதிரடி காட்டி யுவராஜ்சிங்
சதத்தை தொட்டார். இது லிஸ்ட் ஏ
போட்டியில் அவர் அடித்த 18-
வது சதமாகும். யுவராஜ்சிங் 35-
வது ஓவரில் நிகிதா மில்லர்
பந்து வீச்சில் 3 சிக்சர்,
ஒரு பவுண்டரி உள்பட 23 ரன்னும், 38-
வது ஓவரில் 2 சிக்சர், 3 பவுண்டரியுடன்
24 ரன்னும் சேர்த்தார்.
இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க
தனக்கு கிடைத்த 2-வது கட்ட
வாய்ப்பை அதிரடி ஆட்டக்காரர் யூசுப்
பதான் சரியாக பயன்படுத்தினார். அவர்
யுவராஜ்சிங்குக்கு நிகராக
அதிரடியில் வெளுத்து கட்டினார்.
யூசுப்பதான் 37-வது ஓவரில்
ஆஷ்லே நுர்ஸ் பந்து வீச்சில் 3 சிக்சர், 2
பவுண்டரி உள்பட 29 ரன் சேர்த்தார்.
அணியின் ஸ்கோர் 39.2 ஓவர்களில் 272
எட்டிய போது யுவராஜ்சிங்,
நிக்ருமாக் பொன்னர் பந்து வீச்சில்
ரோன்ஸ்போர்ட் பீடோனிடம் கேட்ச்
கொடுத்து ஆட்டம் இழந்தார். யுவராஜ் 89
பந்துகளில் 8 பவுண்டரி, 7 சிக்சருடன் 123
ரன் குவித்தார். அடுத்து நமன் ஓஜா களம்
இறங்கினார்.
கடைசி ஓவரில் பொன்னர் பந்து வீச்சில்
யூசுப் பதான் 3 சிக்சர்கள் தூக்கினார்.
நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் இந்திய ஏ
அணி 4 விக்கெட் இழப்புக்கு 312 ரன்
குவித்தது. யூசுப் பதான் 32
பந்துகளில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 70
ரன்னும், நமன் ஓஜா 8 பந்துகளில்
ஒரு பவுண்டரியுடன் 10 ரன்னும்
எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
பின்னர் 313 ரன் எடுத்தால் வெற்றி என்ற
இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ஏ
அணி, இந்திய ஏ அணி வீரர்களின்
சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க
முடியாமல் 39.1 ஓவர்களில் 235 ரன்னில்
ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்திய ஏ
அணி 77 ரன் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் ஏ
அணியில் அதிகபட்சமாக டியோநரைன்
57 ரன்னும், ஆஷ்லே நுர்ஸ் 57 ரன்னும்
எடுத்தனர். இந்திய ஏ அணி தரப்பில்
சுமித் நர்வால், வினய்குமார், ரோகித்
ஷர்மா, யூசுப் பதான் தலா 2
விக்கெட்டும், உனட்கட்
ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இந்தியா ஏ -வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகள்
இடையேயான 2-வது ஒருநாள்
போட்டி பெங்களூர்
சின்னசாமி ஸ்டேடியத்தில்
நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

[Continue reading...]

அஜித்தை கல்யாணம் செய்ய ஆசைப்பட்ட நடிகை actress want martiage ajith

- 0 comments

அஜித்தை கல்யாணம் செய்ய ஆசைப்பட்ட நடிகை

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsYesterday,

தான் வளர்ந்து பெரியவளானதும் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அஜித்திடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறியுள்ளாராம் சரண்யா நாக்.
காதல் படத்தில் சந்தியாவுக்கு தோழியாக வந்தவர் சரண்யா நாக்.

அதன் பிறகு சந்தியா சில படங்களில் கதாநாயகியாக நடித்துவிட்டு தற்போது சந்தானத்திற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

லேட்டானாலும் சரண்யா நாக் பொறுமையாக இருந்து கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அவர் தற்போது 4 படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அவருக்கு முன் மாதிரி யார் என்றால் அது தனுஷ் தானாம். பெரிதாக லுக் இல்லாவிட்டாலும் அவரின் அபாரமான வளர்ச்சி சரண்யாவை இம்பிரஸ் செய்துவிட்டதாம்.

சரண்யாவுக்கு அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளதாம்.

இவர் அஜித், பார்த்திபன், தேவயானி நடித்த நீ வருவாய் என படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

அப்போது அஜித்தை பார்த்து நான் வளர்ந்து பெரியவள் ஆனதும் என்னை தான் கட்டிக்கணும் என்று விளையாட்டுத் தனமாக கூறியுள்ளாராம் சரண்யா நாக்.

Show commentsOpen link

[Continue reading...]

ரஜினியை அரசியலுக்கு இழுக்கும் பா.ஜ.க.வின் முயற்சி பலிக்குமா? modi prime minister candidate actor rajini political did joint

- 0 comments

''நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா... வரவேண்டிய நேரத்தில் கண்டிப்பாக வருவேன்..''

மோடி பிரதமர் வேட்பாளரானதால் ரஜினியை அரசியலுக்கு இழுக்கும் பா.ஜ.க.வின் முயற்சி பலிக்குமா? modi prime minister candidate actor rajini political did joint

Tamil NewsToday,

சென்னை, செப்.15–இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்து வரும் ரஜினி, தமிழக அரசியல் களத்தில் ஒவ்வொரு கால கட்டத்திலும் பரபரப்பாக பேசப்படுபவராகவே இருந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் கொடுத்த வாய்ஸ் தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ரஜினி நேரடியாகவே அரசியல் களத்தில் குதிப்பார் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தனர். அவரது படங்களிலும் அரசியல் 'பஞ்ச்' டயலாக்குகளும் இடம் பெற்றன.''நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா... வரவேண்டிய நேரத்தில் கண்டிப்பாக வருவேன்..'' என்ற வசனம் அதில் முக்கியமானது.இதற்கேற்றார்போல ரஜினி ரசிகர்களின் செயல் பாடுகளும் இருந்தன. ''தலைவா இன்னும் ஏன் தாமதம், தலைமை தாங்க வா, காத்திருக்கிறோம்...'' என்பது போன்ற போஸ்டர்களையும் அவர்கள் ஒட்டி வந்தனர். ''ரஜினியின் அரசியல் ஆசை'' பற்றி பலமுறை நிருபர்கள் நேரடியாக அவரிடம் கேள்வி கேட்டுள்ளனர். அப்போ தெல்லாம் அவர் ''எல்லாம் ஆண்டவன்கையில்'' என்பது போன்ற பதில் அளித்து வந்துள்ளார்.இந்நிலையில் பாராளு மன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நேரத்தில் அக்கட்சியின் தமிழக தலைவரான பொன்.ராதா கிருஷ்ணன் நேரடியாக ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாட்டின் நலன்கருதி ரஜினிகாந்தை போன்ற நல்லவர்கள் பாரதீய ஜனதாவை ஆதரிக்க முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார். இதன்மூலம் நீண்ட நாட்களுக்கு பின்னர் தமிழக அரசியலில் ரஜினியின் பெயர் மீண்டும் அடிபட தொடங்கியுள்ளது.பாரதீய ஜனதாவின் அழைப்பை ஏற்று ரஜினி அரசியலில் குதிப்பாரா? பிரதமர் வேட்பாளரான மோடிக்கு ஆதரவு அளிப்பாரா? பாரதீய ஜனதாவின் முயற்சி பலிக்குமா? என்பது போன்ற கேள்விகளுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். ...

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger