Sunday 30 June 2013

உலகம் முழுவதும் ஒரு கோடி பேருக்கு எய்ட்ஸ் world all aids Disease effected 1 crore people

- 0 comments
  உலகம் முழுவதும் ஒரு கோடி பேருக்கு எய்ட்ஸ்

எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் கடந்த 32 ஆண்டுகளாக பரவி வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலக அளவில் எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களில் 70 சதவீதம் பேர் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள். என தெரிய வந்துள்ளது.

தற்போதைய கணக்கெடுப்பின்படி 1 கோடி பேரை கடுமையான எய்ட்ஸ் தாக்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்கள் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த தகவலை ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

மேலும் வருகிற 2015-ம் ஆண்டில் 65 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் மரணம் அடைவர். அல்லது பாதிக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. அவற்றை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளதாக ஐ.நா சபை அறிவித்துள்ளது.
[Continue reading...]

Saturday 29 June 2013

தன் குடும்பத்தினர் பதவியில் இருக்க கருணாநிதி எதுவும் செய்ய தயார்

- 0 comments
இலங்கை தமிழர்கள்
பிரச்னையை மையப்படுத்தி, காங்கிரஸ்
கூட்டணியிலிருந்து வெளியேறிய தி.மு.க.,
ராஜ்யசபா எம்.பி.,யாக,
கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
என்பதற்காக, மீண்டும் காங்கிரசுடன்
கூட்டணியை புதுப்பித்துக் கொண்டது,
இலங்கை தமிழர்கள் மத்தியில் கடும்
அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
நீண்ட இழுபறிக்கு பின், 31 எம்.எல்.ஏ.,க்களின்
ஓட்டுக்களை பெற்ற தி.மு.க., வேட்பாளர்
கனிமொழி, மீண்டும் ராஜ்யசபா எம்.பி.,
பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியிடம்
[Continue reading...]

கூடங்குளத்தில் அணுமின் நிலையம் இன்று செயல்படத் தொடங்குகிறது

- 0 comments

கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள
அணுமின் நிலையம் எந்த நேரத்தில்
செயல்படத் தொடங்கும் என அணுசக்தி கழக
ஆலோசகர் சிதம்பரம் தெரிவித்தார்.
கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐ.எஸ்.ஐ.
நிகழ்ச்சியில் இந்திய அணுசக்தி கழக
முதன்மை விஞ்ஞான ஆலோசகர் ஆர்.சிதம்பரம்
கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் அவர்
நிருபர்களிடம் கூறியதாவது:-
கூடங்குளத்தில் ரஷிய நாட்டின் உதவியுடன்
1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட
அணுமின் நிலையத்தின் முதல்நிலையின்
அனைத்து பணிகளும் முடிவடைந்து உள்ளன.
இந்த அணுமின் நிலையம் தொடர்பாக
நடத்தப்பட்ட அனைத்து பரிசோதனைகளும்
இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம்
முழுதிருப்தி அளிக்கும் வகையில்
அமைந்து உள்ளது. இதனால் கூடங்குளத்தில்
அமைக்கப்பட்டு உள்ள அணுமின் நிலையம்
எந்த நேரத்திலும் தனது மின்
உற்பத்தியை தொடங்கும் நிலையில் உள்ளது.
அணுமின் நிலையம்
பாதுகாப்பற்றது என்று பொதுவான
கருத்து உள்ளது. நாம் கடந்த 1974-ம்
ஆண்டு பொக்ரானில்
அணுகுண்டு சோதனை நடத்தி வெற்றி
கண்டோம். இந்த சோதனை மூலம்
அணுசக்தியில் இந்திய முழு பாதுகாப்பான
நிலையை கொண்டு உள்ளது என
உறுதி செய்து உள்ளோம்.
ஆனால் சாதாரண மக்களுக்கு அணுமின்
நிலையத்தின்
பாதுகாப்பு பற்றி அவர்களுக்கு புரியவைப்பதில்
பிரச்சினை உள்ளது. நமது அணுமின்
நிலையங்கள் பாதுகாப்பானது. எந்த வித
பாதிப்பும் இல்லாத வகையில்
அமைந்து உள்ளன. இதனால் தான்
அதற்கு அணுசக்திகழகம்
அனுமதி கொடுத்து உள்ளது.
உலகம் முழுவதும் 66 அணுசக்தி மின்
நிலையங்களின் பணிகள்
தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்தியாவில் 7 அணுமின்சக்தி நிலையங்கள்
செயல்பாட்டுக்கு வர பணிகள்
நடைபெற்று வருகின்றன.
இந்தியா அணுசக்தியில் முழுமையான
பாதுகாப்பு வசதியை கொண்டு உள்ளது
என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இயற்கை பேரிடர்களால் இந்திய
அணுசக்தி நிலையங்கள் பாதிக்கப்படும்
என்பதை திட்டவட்டமாக மறுக்கிறேன்.
இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

[Continue reading...]

திருநங்கைகளுக்கு 9 என்ற குறியீட்டை நீக்க வேண்டும்: கருணாநிதி உண்ணாவிரதம்

- 0 comments

திருநங்கைகளுக்கு 9 என்ற குறியீட்டை நீக்க வேண்டும்: கருணாநிதி உண்ணாவிரதம்

 இந்தியா முழுவதும் ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன. கணக்கெடுப்பில் ஈடுபடும் ஊழியர்கள், சம்பந்தப்பட்ட குடும்பத் தலைவரின் பெயர், தொழில், இருப்பிடம் போன்ற எல்லா விவரங்களையும், அதற்கான விண்ணப்பத்தில் பதிவு செய்வது வழக்கம். இந்நிலையில் அந்தப் படிவத்தில் திருநங்கையர்களுக்கு 9 என்ற குறியீட்டு எண் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக புகார்கள் கூறப்படுகின்றன.

[Continue reading...]

Friday 28 June 2013

குஜராத்தை முதன்மை மாநிலமாக மாற்றிய மோடியால் ஏன் இந்தியாவை முதன்மை நாடாக மாற்ற முடியாது ?

- 0 comments
கட்சியை பார்க்காதீர்கள்  , நாட்டின் நன்மையை பாருங்கள்
ஆறு கோடி மக்களைக் கொண்ட குஜராத்
மாநிலத்தை இந்தியாவின் மாதிரி மாநிலமாக
உலகத் தளத்தில்
நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கும் ஓர்
இந்தியர் உயர்த்தியுள்ளார். அதுவும் வெறும்
10 ஆண்டுகால ஆட்சியில்.
புதுப்புது முயற்சிகள் மூலம்
பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு
அம்மாநிலத்தை எல்லாத் துறைகளிலும்
முன்னணி மாநிலமாக மாற்றியுள்ளார்.
நரேந்திர மோடிதான், அந்த சக இந்தியர்.
மக்களுக்குத் தேவையான முன்னேற்றத்தை,
மக்களைக் கொண்டே அடையச் செய்திருக்கிறார்
இவர்.
[Continue reading...]

உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 3 வயது குழந்தை பெற்றோரை காணாமல் பரிதவிக்கும் சோகம்

- 0 comments
 நண்பர்களே இந்த செய்தியை உங்கள் வலைதளங்கள் அல்லது பேஸ்புக்  தளங்களில் பகிரவும் 

உத்தரகாண்ட் மாநிலத்தை உலுக்கிய இயற்கை பேரழிவின் தாக்கம் மெதுவாக குறைந்து வரும் நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் சோகக் கதைகளும், இழப்புகள் பற்றிய தகவல்களும் தொடர்ந்து வெளியாகி கண்கலங்க வைக்கின்றன.
[Continue reading...]

Thursday 27 June 2013

எனது எம்.பி. பதவியை பயன்படுத்தி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து மீண்டு வருவேன்: கனிமொழி பேட்டி kanimozhi said i will be recovered from spectrum case

- 0 comments
 எனது எம்.பி. பதவியை பயன்படுத்தி

ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து மீண்டு வருவேன்: கனிமொழி பேட்டி kanimozhi said i will be recovered from spectrum case


டெல்லி மேல்சபை தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட கனிமொழி 31 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் 2-வது முறையாக எம்.பி. ஆகி இருக்கிறார். வெற்றிச்சான்றிதழுடன் சி.ஐ.டி. நகரில் உள்ள வீட்டுக்கு திரும்பியதும் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார். அப்போது அவர் அளித்த பதிலும் வருமாறு:-

கேள்வி:- இந்த வெற்றியை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

[Continue reading...]

சச்சினை விட மிகச் சிறந்த வீரர் குக் - பீட்டர்சன் பாராட்டு

- 0 comments
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் அதிக
ரன்கள் குவித்தவர் இந்திய ஜாம்பவான் சச்சின்
தெண்டுல்கர். 40 வயதான இவர் இதுவரை 198
டெஸ்டில் விளையாடி 51 சதம் உள்பட 15,837
ரன்கள் சேர்த்து இருக்கிறார். 28 வயது நிரம்பிய
இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக் 92
டெஸ்டில் விளையாடி 25 சதம் உள்பட 7,524
ரன்கள் எடுத்துள்ளார். அதாவது டெஸ்டில்
அதிக ரன்கள் விளாசியவர்களின் பட்டியலில்
தெண்டுல்கர் முதலிடத்தில் நீடிக்க, குக் இந்த
வகையில் 31-வது இடத்தில் உள்ளார்.
[Continue reading...]

Wednesday 26 June 2013

கவிதாவின் கள்ளகாதல் - Tritchi kavitha

- 0 comments
 கவிதாவின் கள்ளகாதல்

கள்ளக்காதலனை திருமணம் செய்து வைக்க வலியுறுத்தி, அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முன் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த சித்திரைப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கவிதா, 30. இவர்களுக்கு, 12 வயதில் பெண் குழந்தையும், எட்டு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். கவிதாவின் நடத்தை சரியில்லாத காரணத்தால், கணவர் சரவணன் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
அதே காரணத்துக்காக, கவிதாவின், இரு குழந்தைகளையும், அவரது தாயார் அழைத்துச் சென்று வளர்த்து வருகிறார். குழந்தைகளைப் பற்றி கவலைப்படாத கவிதாவுக்கு, திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியைச் சேர்ந்த யோகநாதன், 25, என்ற வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் தாலிகட்டாமல் குடும்பம் நடத்த துவங்கினர். கடந்த, இரண்டு ஆண்டாக துறையூர், கரூர் ஆகிய இடங்களில் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.
[Continue reading...]

ஆர்கஸம் இரண்டு வகை two types of orgasam

- 0 comments
காதலில் ரெண்டு வகை.. சைவம் ஒன்று,
அசைவம் ஒன்று என்று பாடி வைத்தார்
ஒரு கவிஞர்.அதேபோல
பெண்களுக்கு ஏற்படும் ஆர்கஸம் எனப்படும்
உச்சநிலையிலும் கூட
இரண்டே இரண்டு வகைகள்தான்
இருக்கிறதாம். .
ஆர்கஸம்.. அது எக்கச்சக்கம்

 ஆர்கஸம்..
அது எக்கச்சக்கம் ஆர்கஸம் என்ற
உச்சநிலையை பெண்கள் செக்ஸ்
உணர்வின்போது சந்திக்கிறார்கள். இந்த
உணர்வானது சிலருக்கு குறைவாகஇருக்கும்.
சிலருக்கு அதிக அளவில் ஏற்படும். விதம்
விதமாக ஏற்படாதாம்
[Continue reading...]

Monday 24 June 2013

தினசரி செக்ஸ் சாத்தியமா ? Daily sex is possible

- 0 comments
வாரம் இருமுறையோ, மாதம்
இருமுறையோ உறவில் ஈடுபட்டால்தான்
ஆரோக்கியம் என்கின்றனர் நம் முன்னோர்கள்.
ஆனால் தினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால்
ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்
என்று ஆஸ்திரேலியா ஆய்வாளர்கள்
சமீபத்தில் நிரூபித்துள்ளனர். புதிதாக
திருமணமான தம்பதிகளுக்கு செக்ஸ் பற்றிய
ஆர்வமும், அதை அறிந்து கொள்ளவேண்டும்
என்ற வேகமும் அதிகம் இருக்கும்.
இதனால் தினசரி உறவில் ஈடுபடுவார்கள்.
குழந்தை பிறந்த பின்பு இருவருக்கும்
இடையே கொஞ்சம்
இடைவெளி ஏற்பட்டு தாம்பத்ய உறவு கூட
சம்பிரதாயமாக மாறிவிடும்.
இவ்ளோதானா என்ற அலுப்பும், சலிப்பும்
[Continue reading...]

Sunday 23 June 2013

சூப்பர் சாம்பியன் இந்தியா - இளசுகளின் அசத்தல் ஆட்டம்

- 0 comments

பர்மிங்காம்: சாம்பியன்ஸ்
டிராபியை "சூப்பராக' கைப்பற்றியது இந்திய
அணி. கடைசி பந்து வரை பரபரப்பாக இருந்த
பைனலில் இங்கிலாந்தை 5 ரன்கள்
வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இங்கிலாந்தில், 7வது மற்றும்
கடைசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்
(மினி உலக கோப்பை) நடந்தது. பர்மிங்காமில்
உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில்
நேற்று நடந்த பைனலில் இந்தியா,
இங்கிலாந்து அணிகள் மோதின. "டாஸ்'
வென்ற இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக்,
"பீல்டிங்' தேர்வு செய்தார்.
20 ஓவர் போட்டி:
கனமழை மற்றும் மைதானத்தில் தேங்கி இருந்த
தண்ணீர் காரணமாக போட்டி துவங்குவதில்
தாமதம் ஏற்பட்டது. சுமார் 6
மணி நேரத்துக்கு பின், தலா 20 ஓவர்களாக
குறைக்கப்பட்டு போட்டி நடந்தது.
மழை குறுக்கீடு:
இந்திய அணிக்கு ரோகித் சர்மா (9) ஏமாற்றம்
அளித்தார். 5.4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 28
ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட,
போட்டி நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில்
மீண்டும் போட்டி துவங்கியது.
தவான் அசத்தல்:
அபாரமாக ஆடிய ஷிகர் தவான், பிராட்
பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். இந்திய
அணி 6.2 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 38
ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும்
மழை பெய்ய, ஆட்டம் நிறுத்தப்பட்டது. சுமார்
45 நிமிடங்களுக்கு பின், போட்டி துவங்கியது.
தொடர்ந்து அசத்திய தவான், டிரட்வெல்
பந்தில்
அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்தார்.
இவர், 31 ரன்கள் எடுத்த
போது ரவி போபரா பந்தில் வெளியேறினார்.
மந்தமாக ஆடிய தினேஷ் கார்த்திக் (6)
நிலைக்கவில்லை.
ஆட்டத்தின் 13வது ஓவரை வீசிய
போபரா இரட்டை "அடி' கொடுத்தார்.
இவரது பந்துவீச்சில் ரெய்னா (1), கேப்டன்
தோனி (0) வெளியேறினார். இதையடுத்து,
ஒரு விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்திருந்த
இந்திய அணி, திடீரென 5 விக்கெட்டுக்கு 66
ரன்கள் எடுத்து திணறியது.
கோஹ்லி அபாரம்:
பின் இணைந்த கோஹ்லி, ரவிந்திர
ஜடேஜா ஜோடி துணிச்சலாக ஆடியது.
போபரா பந்தில் இரண்டு பவுண்டரி அடித்த
கோஹ்லி, பிராட்
பந்தை சிக்சருக்கு அனுப்பினார்.
இவருக்கு ஒத்துழைப்பு தந்த ஜடேஜா,
ஆண்டர்சன் பந்தில் சிக்சர் அடித்தார்.
ஆறாவது விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்த
போது, கோஹ்லி (43) அவுட்டானார். அஷ்வின்
(1) "ரன்-அவுட்' ஆனார்.
இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 129
ரன்கள் எடுத்தது. ஜடேஜா (33), புவனேஷ்வர்
குமார் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
இங்கிலாந்து சார்பில் போபரா அதிகபட்சமாக 3
விக்கெட் கைப்பற்றினார்.
சவாலான இலக்கை விரட்டிய
இங்கிலாந்து அணிக்கு துவக்கத்திலேயே "ஷாக்'
கொடுத்தார் உமேஷ் யாதவ்.
இவரது "வேகத்தில்' கேப்டன் குக்(2)
அவுட்டானார். அடுத்து வந்த ஜோனாதான்
டிராட், புவனேஷ்வர் ஓவரில்
இரண்டு பவுண்டரி அடித்தார்.
அஷ்வின் ஜாலம்:
இதற்கு பின் அஷ்வின் "சுழல்' ஜாலம்
காட்டினார். இவர் "வைடாக' வீசிய பந்தில்
தோனியின் துடிப்பான "ஸ்டம்பிங்கில்' டிராட்
(20) வெளியேறினார். இவரது அடுத்த ஓவரில்
ஜோ ரூட்(7) சிக்கினார். ஜடேஜா பந்தில் பெல்
(13) சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டானார்.
இதையடுத்து இங்கிலாந்து 8.4 ஓவரில் 4
விக்கெட்டுக்கு 46 ரன்கள்
எடுத்து தத்தளித்தது.
பின் இயான் மார்கன்,
ரவி போபரா சேர்ந்து அசத்தினர். இஷாந்த்,
ஜடேஜா பந்துகளை சிக்சருக்கு அனுப்பினார்
போபரா.
"ஹீரோ' இஷாந்த்:
இந்த நேரத்தில் போட்டியின்
18வது ஓவரை வீசிய இஷாந்த்
சர்மா திருப்புமுனை ஏற்படுத்தினார்.
இரண்டாவது பந்தில் மார்கன் சிக்சர் அடித்தார்.
3வது பந்தில் மார்கன்(33) அவுட்டானார்.
4வது பந்தில் போபரா(30) வெளியேற, இந்திய
வீரர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.
கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 15
ரன்கள் தேவைப்பட்டன. அஷ்வின் அருமையாக
பந்துவீசினார். முதல் பந்தில் ஸ்டூவர்ட் பிராட்
கண்டம் தப்ப, ரன் இல்லை.
இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்தார்.
மூன்றாவது பந்தில் ஒரு ரன். 4வது பந்தில் 2
ரன். 5வது பந்தில் 2 ரன். 6வது பந்தில் ரன்
இல்லை. இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8
விக்கெட்டுக்கு 124 ரன்கள் மட்டும்
எடுத்து தோல்வி அடைந்து, இரண்டாம் இடம்
பெற்றது.
இந்தியா சார்பில் அஷ்வின், ஜடேஜா, இஷாந்த்
தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
"ஆல்-ரவுண்டராக' அசத்திய ரவிந்திர ஜடேஜா,
ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இதுவரை சாம்பியன்
சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில், இந்திய
அணி இரண்டாவது முறையாக
கோப்பை வென்றது. முன்னதாக 2002ல்
இலங்கையுடன்
கோப்பையை பகிர்ந்து கொண்டது.
இதுவரை சாம்பியன்ஸ் டிராபி வென்ற
அணிகள்:
ஆண்டு சாம்பியன் எதிரணி இடம்
1998 தென் ஆப்ரிக்கா வெஸ்ட் இண்டீஸ்
வங்கதேசம்
2000 நியூசிலாந்து இந்தியா கென்யா
2002 இந்தியா+இலங்கை - இலங்கை
2004 வெஸ்ட் இண்டீஸ்
இங்கிலாந்து இங்கிலாந்து
2006 ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ்
இந்தியா
2009 ஆஸ்திரேலியா நியூசிலாந்து தென்
ஆப்ரிக்கா
2013 <இந்தியா இங்கிலாந்து இங்கிலாந்து
* கடந்த 2002ல் மழையால் பைனல்
கைவிடப்பட, இந்தியா+இலங்கை அணிகள்
கோப்பையை பகிர்ந்து கொண்டன.
தவான் "கோல்டன் பேட்'
இம்முறை அதிக ரன்கள் எடுத்த
பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்தியாவின்
ஷிகர் தவான் முதலிடம் பிடித்தார். இவர், 5
போட்டியில் 2 சதம், ஒரு அரைசதம் உட்பட
363 ரன்கள் எடுத்தார். இதற்காக
இவருக்கு "கோல்டன் பேட்' வழங்கப்பட்டது.
இப்பட்டியலில் "டாப்-5' பேட்ஸ்மேன்கள்:
வீரர் போட்டி ரன்கள் 100/50
தவான் (இந்தியா) 5 363 2/1
டிராட் (இங்கிலாந்து) 5 229 0/2
சங்ககரா (இலங்கை) 4 222 1/1
ரோகித் (இந்தியா) 5 177 0/2
கோஹ்லி (இந்தியா) 5 176 0/1
ஜடேஜா "கோல்டன் பால்'
"சுழலில்' அசத்திய இந்தியாவின் ரவிந்திர
ஜடேஜா, இம்முறை அதிக விக்கெட் கைப்பற்றிய
பவுலர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்.
இவர், ஐந்து போட்டியில் 12 விக்கெட்
வீழ்த்தினார். இதற்காக இவருக்கு "கோல்டன்
பால்' வழங்கப்பட்டது.
இவ்வரிசையில் "டாப்-5' பவுலர்கள்:
வீரர் போட்டி விக்கெட்
ஜடேஜா (இந்தியா) 5 12
மெக்லினகன் (நியூசிலாந்து) 3 11
ஆண்டர்சன் (இங்கிலாந்து) 5 11
இஷாந்த் (இந்தியா) 5 10
மெக்லாரன் (தென் ஆப்ரிக்கா) 4 8
அஷ்வின் (இந்தியா) 5 8
ரூ. 12 கோடி பரிசு
நேற்று பட்டம் வென்ற இந்திய
அணிக்கு "ஸ்டெர்லிங் சில்வர்'
கொண்டு தயாரிக்கப்பட்ட, 3.1 கி.கி.,
எடையுள்ள, சாம்பியன்ஸ்
டிராபி கோப்பை வழங்கப்பட்டது. இதன்
மதிப்பு ரூ. 12 லட்சம். தவிர, இந்திய
அணிக்கு ரூ. 12 கோடி பரிசாக
அளிக்கப்பட்டது.
தொடர்ச்சியான அட்டவணை
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய
இந்திய அணி வீரர்கள், வெஸ்ட் இண்டீசில்
நடக்கவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடரில்
(ஜூன் 28 - ஜூலை 11) பங்கேற்க உள்ளனர்.
மூன்றாவது அணியாக
இலங்கை அணி விளையாடுகிறது. அதன்பின்,
ஜிம்பாப்வே செல்லு<ம் இந்திய அணி,
ஐந்து போட்டிகள் (ஜூலை 24 - ஆக., 3)
கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
இதனையடுத்து, இந்திய அணி வீரர்கள், வரும்
ஆகஸ்ட் மாதம் தாயகம் திரும்ப உள்ளனர்.
அதேவேளையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான
ஒருநாள் தொடருக்கு சில சீனியர்
வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனத்
தெரிகிறது. இத்தொடருக்கான இந்திய அணி,
விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
கங்குலியை முந்திய தவான்
இம்முறை 363 ரன்கள் எடுத்த ஷிகர் தவான்,
ஒரு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக
ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில்
முன்னாள் கேப்டன்
கங்குலியை பின்தள்ளி முதலிடம் பிடித்தார்.
கென்யாவில், 2000ல் நடந்த தொடரில்
முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 348 ரன்கள்
எடுத்தார்.
தோனி சாதனை
கடந்த 2007ல் இந்திய அணியின் கேப்டனாக
தோனி நியமிக்கப்பட்டார். முதன்முதலில்
இவர், 2007ல் தென் ஆப்ரிக்காவில் நடந்த
"டுவென்டி-20' உலக
கோப்பை வென்று தந்தார். அதன்பின் 2011ல்
சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை (50
ஓவர்) தொடரில்,
இந்தியாவுக்கு இரண்டாவது முறையாக உலக
கோப்பை (50 ஓவர்) வென்று தந்தார்.
தற்போது, சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக
கோப்பை) தொடரில் 100 சதவீத வெற்றியுடன்
கோப்பை வென்று சாதித்தார். இதன்மூலம்
"டுவென்டி-20' உலக கோப்பை, உலக
கோப்பை (50 ஓவர்) மற்றும் சாம்பியன்ஸ்
டிராபி வென்ற முதல் கேப்டன் என்ற
சாதனை படைத்தார்.
தவிர இவர், டெஸ்ட் மற்றும் ஒருநாள்
போட்டிக்கான ஐ.சி.சி., ரேங்கிங்கில் (தரவரிசை)
இந்திய அணியை "நம்பர்-1'
இடத்துக்கு அழைத்து சென்றார்.
பெல் "அவுட்' சர்ச்சை
நேற்று போட்டியின் 9வது ஓவரை வீசிய
ரவிந்திர ஜடேஜாவின் 4வது பந்தில்
இங்கிலாந்தின் இயான் பெல்லை(13),
தோனி "ஸ்டம்பிங்' செய்தார். இது தொடர்பாக
சந்தேகம் எழ, மூன்றாவது அம்பயரிடம்
கேட்கப்பட்டது. "ரீப்ளே'வில் பெல்,
காலை "கிரீசுக்குள்' வைத்திருந்தது தெளிவாக
தெரிந்தது. ஆனால், மூன்றாவது அம்பயர்
ஆக்சன்போர்டு(ஆஸ்திரேலியா) தவறாக
"அவுட்' கொடுத்து அதிர்ச்சி அளித்தார்.
இதையடுத்து பெல்(13) விரக்தியுடன்
வெளியேறினார்.
விருது அர்ப்பணம்
தொடர் நாயகன் விருதை வென்ற மகிழ்ச்சியில்
மீசையை முறுக்கி விட்ட தவான்
கூறுகையில்,""பந்துகள் எகிறும்
இங்கிலாந்து ஆடுகளங்கள்
எனது பேட்டிங்கிற்கு ஒத்துழைத்தது. இந்த
விருதை உத்தரகாண்ட் வெள்ளத்தில்
பாதிக்கப்பட்ட
மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்,''என்றார்.

[Continue reading...]

பெப்சி உமாவுக்கு செக்ஸ் தொந்தரவு

- 0 comments

பெப்சி உங்கள் சாய்ஸ்
தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம்
பிரபலமானவர் பெப்சி உமா. தற்போது அவர்
ஒரு தனியார் தொலைக்காட்சியில்
நிகழ்ச்சி தொகுப்பாளராக
பணியாற்றி வருகிறார். நடிகர், நடிகைகளுடன்
கலந்துரையாடும் இந்த
தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகியாக
சரவணராஜன் இருந்தார்.
அவர் பெப்சி உமாவுக்கு அடிக்கடி செக்ஸ்
தொந்தரவு செய்துவந்தார்.
தனது ஆசைக்கு இணங்காவிட்டால்
நிகழ்ச்சி தொகுப்பில் இருந்து நீக்கி விடுவதாக
மிரட்டினார். சரவணராஜனின் தொல்லைகள்
அதிகமானதால்
இதுபற்றி பெப்சி உமா கிண்டி அனைத்து மகளிர்
போலீசில் புகார் செய்தார். போலீசார்
தொலைக்
காட்சி தயாரிப்பு நிர்வாகி சரவணராஜனை
நேற்றிரவு கைது செய்து போலீஸ் நிலையம்
கொண்டு வந்தனர். அவர் மீது வன்
கொடுமை சட்டத்தின் கீழ்
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சரவணராஜன்
இன்று சைதாப்பேட்டை கோர்ட்டில்
ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில்
அடைக்கப்பட்டார். கைதான சரவணராஜன்
திருமணம் ஆனவர். ஆதம்
பாக்கத்தை சேர்ந்தவர்.

[Continue reading...]

Saturday 22 June 2013

தமிழகத்தில் பள்ளிகளின் நேரம் மாற்றியமைப்பு school time are changed in tamilnadu

- 0 comments

பள்ளி மாணவர்,
போக்குவரத்து நெரிசலில்
சிக்கி தவிப்பதை தவிர்க்கும் வகையில்,
அரசு பள்ளிகள் துவங்கும் நேரம்
மாற்றப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தற்போது,
அரசு பள்ளிகள் காலை, 9:30
மணிக்கு துவங்குகின்றன. அதே நேரத்தில்,
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த
ஊழியர்களும், அலுவலகங்களுக்கு செல்ல
வேண்டியுள்ளது. இதனால், கடும்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால்,
பள்ளி மாணவர், குறித்த நேரத்தில்,
பள்ளிக்கு செல்வதில் சிக்கல்
இருந்து வருகிறது. இதையடுத்து,
திங்கட்கிழமை முதல், பள்ளிகள், காலை, 9:00
மணிக்கு துவங்கும் என,
பள்ளி கல்வி துறையால் வெளியிடப்பட்டுள்ள,
2013-14ம் கல்வி ஆண்டிற்கான,
நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய அட்டவணையில், காலை, 9:30
மணிக்கு பள்ளிகள் துவங்கும்; மாலை, 4:30
மணிக்கு முடியும். புதிய அட்டவணைபடி,
காலை, 9:00 மணிக்கு பள்ளிகள் துவங்கும்,
மாலை, 4:15க்கு முடியும். இதில், 12:10 -
12:25க்கு, யோகா, 12:25 -
12:40க்கு நீதி கதை, நீதி போதனை, உடல்
நலம் மற்றும் சுகாதாரம், கல்வி, கலை கல்வி,
முதல் உதவி, தற்காப்பு கலை, 1:10 -
1:25க்கு, வாய்ப்பாடு; 1 - 5ம் வகுப்பு வரை,
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்,
இரண்டு சொற்களை எழுத சொல்ல வேண்டும்;
6 - 9 வரை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
வாக்கியம் அமைக்க கற்று தர வேண்டும்; 9ம்
வகுப்பு மாணவர்கள், தமிழ் மற்றும்
ஆங்கிலத்தில், இரண்டு நிமிடம்
பொது அறிவு எழுதுதல், குழு விவாதம்
ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
புதிய அட்டவணையின் படி,
திங்களன்று பொது வழிபாடும், செவ்வாய்
முதல் வெள்ளி வரை, வகுப்பில் மாணவர்களின்
திறமைகளை வெளிப்படுத்தும் விதமான
செயல்திட்டங்களும் இருக்கும். மேலும், புதிய
அட்டவணையில், 9ம்
வகுப்பு மாணவர்களுக்கான நேரம்
மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 10,
11, 12ம் வகுப்பு பற்றி எதுவும்
தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து, தமிழ்நாடு உயர்நிலை மற்றும்
மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க
மாநில பொது செயலர்,
சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது: புதிய
நடைமுறையில், பள்ளிகள்
திறப்பதை அடுத்து, மாணவர்கள் நலன் கருதி,
போக்குவரத்து வசதியை அதிகளவில்
ஏற்படுத்த வேண்டும். மதிய
உணவு இடைவேளைக்கு, 30 நிமிடம்
போதுமானதாக இருக்காது. சத்துணவு மற்றும்
விடுதி உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு,
இந்த நேரம் போதாது.
யோகா கல்வியை அறிமுகப்படுத்தியது
வரவேற்கத்தக்கது.

[Continue reading...]

விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!! Happy Birthday to Vijay ... !!

- 1 comments
நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அவதரித்து, அனைவருக்கும் ரசிகனாகி(ரசிகன்), தனது படங்களை ஒன்ஸ்மோர் கேட்க செய்து, காதலுக்கு மரியாதை கொடுத்து, துள்ளாத மனதையும் துள்ள வைத்து, குஷிப்படுத்தி, யூத்தாய் நின்று, கில்லி விளையாடி, போக்கிரித்தனம் செய்து, அழகிய தமிழ் மகனாய் வலம் வந்து, குருவியாய் பறந்து, காவலனாய் காத்து, நண்பனுக்கு தோள் கொடுத்து, துப்பாக்கியில் போட்டுத்தாக்கி இப்போது தலைவனாக உருவெடுத்து இருப்பவர் விஜய்.

பொதுவாக விஜய் பிறந்தநாள் என்றாலே அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவர் பட சம்பந்தப்பட்ட ஏதாவது ஒன்று ரிலீஸாகும். அந்தவகையில் இன்று(ஜூன் 22ம் தேதி) நடிகர் விஜய்க்கு 38வது பிறந்தநாள். இந்த பிறந்தநாளுக்கு தனது பிறந்தநாள் பரிசாக நேற்று(ஜூன் 21ம் தேதி) தனது தலைவா படத்தின் ஆடியோ மற்றும் டிரைலரை வெளியிட்டுள்ளார்‌ விஜய். இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். தலைவா பட பாட்டும், டிரைலரும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இதற்கிடையே தனது 38வது பிறந்தநாளை எந்த ஆடம்பரமும் இல்லாமல் ரொம்ப எளிமையாக தனது வீட்டில் கொண்டாடினார் விஜய். பின்னர் ஜில்லா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கிளம்பிய விஜய் அங்கு படக்குழுவுடனும் தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார். ஜில்லா படக்குழு விஜய்க்கு பிரத்யேக கேக் வ‌ரவழைத்து இருந்தனர். பின்னர் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்தளித்தார் விஜய், அதை அவரே பரிமாறினார். ஷூட்டிங் முடித்த கையோடு நேராக வீட்டுக்கு கிளம்பினார். இந்த பிறந்தநாளை தனது குடும்பத்துடன் மட்டுமே விஜய் செலவழிக்க முடிவெடுத்துள்ளார். மாலையில் மட்டும் சிலரை சந்திக்கும் விஜய் மற்றபடி தனது குடும்பத்தாருடன் நேரத்தை செலவழிக்கிறார். அதேசமயம் அவரது ரசிகர்கள் சார்பில் பல இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!!
[Continue reading...]

Friday 21 June 2013

செக்ஷுக்காக மட்டுமே சதீஷ் - நடிகை சீதா பரபரப்பு பேட்டி -only for sex with satheesh

- 0 comments
 செக்ஷுக்காக மட்டுமே சதீஷ் - நடிகை சீதா பரபரப்பு  பேட்டி 

நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்த நடிகை சீதா, இப்போது டி.வி., நடிகர் ஒருவரை 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆண்பாவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்

விவாகரத்துக்கு பின் சில காலம் சினிமாவுக்கு முழுக்கு போட்டிருந்த சீதா, சமீப காலமாக சின்னத்திரை சீரியல்களிலும், சினிமாவில் அம்மா வேடத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சீதாவுக்கும், டி.வி., நடிகர் சதீசுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன் - மனைவி போல ஒரே வீட்டில் வசித்து வந்த அவர்கள் முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் சீதா - சதீஷ் திருமணம் ரகசியமாக நடந்துள்ளது.

இதுபற்றி சீதா அளித்துள்ள பேட்டியில்,  எனக்கு ஒரு துணை வேண்டும் என்பதற்காகவே இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். சதீஷ் என் வாழ்க்கையில் வந்தது பற்றி சந்தோஷப்படுகிறேன். அவரையே திருமணம் செய்து கொண்டதை பெருமையாக கருதுகிறேன். வயதான காலத்தில் ஒரு பெண், ஆண் துணை இல்லாமல் வாழ முடியாது. அதற்காகவே சதீசை திருமணம் செய்து கொண்டேன். எனக்கு ஏற்கனவே இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்வதில் உடன்பாடு இல்லை, என்று கூறியுள்ளார்.
அறிமுகமானவர் நடிகை சீதா. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த சீதா, பார்த்திபன் நடித்து இயக்கிய புதிய பாதை படத்தில் நாயகியாக நடித்தார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட காதலைத் தொடர்ந்து இருவரும் 20 ஆண்டுகளுக்கு முன் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி குழந்தைகள் பிறந்த சில ஆண்டுகளிலேயே பார்த்திபன் - சீதா தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர்.
[Continue reading...]

இந்திய அணியில் முண்ணனி வீரர்கள் நீக்கம் ,இளம் வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு young indian cricket team

- 0 comments
இந்திய கிரிக்கெட் அணியின்
ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான
போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி இந்திய அணி ஜூலை 24-
ந்தேதி முதல் ஆகஸ்டு 3-
ந்தேதி வரை ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம்
செய்து 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில்
விளையாடுகிறது.
ஜூலை 24-ந்தேதி, ஜூலை 26, ஜூலை 28,
ஜூலை 31 மற்றும் ஆகஸ்டு 3-ந்தேதி ஆகிய
நாட்களில் ஒரு நாள் போட்டிகள் நடக்கின்றன.
இதில் முதல் 3 ஆட்டங்கள் ஹராரே நகரிலும்,
கடைசி இரு ஆட்டங்கள் புலவாயோவிலும்
நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கு,
முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு 2-
ம் தர அணியை அனுப்ப இந்திய கிரிக்கெட்
வாரியம் திட்டமிட்டுள்ளது. 2010-ம்
ஆண்டு அங்கு நடந்த முத்தரப்பு தொடரில்
இந்திய அணி சுரேஷ் ரெய்னா தலைமையில்
பங்கேற்றது நினைவு கூரத்தக்கது.
[Continue reading...]

Thursday 20 June 2013

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி யில் மீண்டும் சூர்யா ,. போட்டியாளராக again surya in nvok

- 0 comments
விஜய் டிவியில் பிரகாஷ்ராஜ் நடத்தி வரும்
‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’
நிகழ்ச்சி அனைவரது ஆதரவுடன்
வெற்றிகரமாக நடந்து வருகிறது.
இந்நிகழ்ச்சியில்
அடிக்கடி சினிமா பிரபலங்களும்
கலந்து கொண்டு நிகழ்ச்சியை மேலும்
கலகலப்பாக்கி வருகின்றனர்.
இப்போது இந்த நிகழ்ச்சியை இதற்கு முன்
நடத்திய சூர்யாவே , ஒரு போட்டியாளராக
கலந்து கொண்டு பிரகாஷ்ராஜின்
கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார்.
இந்நிகழ்ச்சி வரும் வெள்ளியன்று ஜுன் 21ம்
தேதி இரவு 8 மணிக்கும், ஜுன் 24ம்
தேதி இரவு 8 மணிக்கும் விஜய் டிவியில்
ஒளிபரப்பாகவிருக்கிறது.


[Continue reading...]

இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டிக்கு தகுதி

- 0 comments

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் 2-
வது அரைஇறுதிப்போட்டி இன்று கார்டிபில்
நடைபெற்றது. இதில் இந்தியா -
இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற
இந்தியா முதலில்
பந்து வீச்சை தேர்வு செய்தது.
இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக
பெரெரா மற்றும் டில்சன் களமிறங்கினார்கள்.
இதில் பெரெரா 4 ரன்னில் அவுட் ஆனார்.
பின்னர் வந்த வீரர்கள் இந்திய அணியின்
பந்து வீச்சை சமாளிக்க முடியாமல்
இலங்கை வீரர்கள் சொற்ப ரன்களில்
வெளியேறினார்கள்.
இறுதியில் இலங்கை அணி 50 ஓவர் முடிவில்
8 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள்
மட்டுமே எடுத்தது. அணியின் கேப்டன்
மேத்யூஸ் அதிகபட்சமாக 51 ரன்கள்
எடுத்து அவுட் ஆனார்.
இந்தியா தரப்பில் இசாந்த் சர்மா மற்றும்
அஸ்வின் தலா 3
விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
182 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன்
இந்தியா களமிறங்கியது. தொடக்க வீரர்களாக
தவான் மற்றும் சர்மா களமிறங்கினார்கள்.
இருவரும் நிதானமாக விளையாடி அணியின்
ஸ்கோரை உயர்த்தினர். இவர்கள் ஜோடியில்
இந்திய அணி 77 ரன்கள் பெற்றது.
சர்மா 33 ரன்னிலும், சிறப்பாக
விளையாடி அரைசதம் அடித்த தவான் 68
ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
பின்னர் வந்த கோலி மற்றும்
ரெய்னா ஜோடி சேர்ந்து அதிரடியாக
விளையாடியதால், இந்திய அணி ( 35 ஓவர்,
182/2) 2
விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலங்கையை
எளிதாக வென்றது.
கோலி 58 ரன்னிலும், ரெய்னா 7 ரன்னிலும்
கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சிறப்பாக பந்து வீசிய இசாந்த் சர்மா ஆட்ட
நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிபோட்டியில்
இங்கிலாந்து - இந்தியா வரும

[Continue reading...]

Wednesday 19 June 2013

பெண்களை கற்பழிக்கும் ‘நிர்வாண மனிதர்கள்’ naked men panic

- 0 comments
அசாம் தேஜ்பூர் பகுதியில் ஆடையில்லா மனிதர்கள் பெண்களை கற்பழிக்கும் நோக்கில் அலைந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அந்த வதந்தி பக்கத்து மாவட்டங்களுக்கும் பரவத்தொடங்கியது. இதனால் கிராம மக்கள் தங்களது பெண்களை காப்பாற்ற பயங்கர ஆயுதங்களுடன் இரவில் ரோந்து சுற்றி வருகின்றனர்.  

இந்நிலையில் சோனித்பூர் மாவட்டம் பலிஷிஹா கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், பயங்கர ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு நேற்று இரவு முழுவதும் கண்காணித்து வந்தனர். அப்போது அதிகாலையில் 3 பேர் ஒரு வாகனத்தில் வந்துள்ளனர். உடனே அவர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள் விசாரித்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில்களை தெரிவித்ததால், பெண்களை கெடுக்க வந்த ஆடையில்லா மனிதர்கள் என நினைத்து கையில் இருந்த ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதன்பிறகுதான், கொலை செய்யப்பட்ட மூவரும், கார்கள் மற்றும் காரிலிருந்து எண்ணெய் திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. எனவே, வதந்திகளை நம்பவேண்டாமென பொதுமக்களை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். 
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger