Showing posts with label விபச்சாரம். Show all posts
Showing posts with label விபச்சாரம். Show all posts

Tuesday, 27 August 2013

கோவா குத்தாட்ட விடுதியில் விபசாரம்

- 0 comments

கோவா குத்தாட்ட விடுதியில் விபசாரம்: உ.பி. மாநில சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. கைது Samajwadi UP MLA arrested in Goa bar

பனாஜி, ஆக.28-

உல்லாச நகரமான கோவாவில் உள்ள பனாஜியில் குத்தாட்டம் போட்ட உத்தரபிரதேச மாநில சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. மகேந்திர சிங்கை கோவா போலீசார் நேற்று கைது செய்தனர்.

பனாஜி நகரில் உள்ள நடன விடுதி ஒன்றில் குத்தாட்டம், கும்மாளம் மற்றும் விபசாரம் நடப்பதாக கோவா போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, அந்த விடுதிக்கு விரைந்த போலீசார், தன்னிலை மறந்து போதையில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்த சிலரை கைது செய்தனர்.

பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 6 பெண்களையும் அந்த விடுதியில் இருந்து போலீசார் மீட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. மகேந்திர சிங் என்பதை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

உத்தரபிரதேச சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான இவரது மாமனார் அஜய் பிரகாஷ் சிங், முலாயம்சிங் யாதவிற்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.எல்.ஏ. மகேந்திர சிங் குத்தாட்ட விடுதியில் கைது செய்யப்பட்ட தகவலை முறைப்படி உத்தரபிரதேச சபாநாயகருக்கு தெரிவித்து விட்டதாக கோவா போலீசார் தெரிவித்தனர்.

அவர் மீதும் அவருடைய கூட்டாளிகள் இருவர் மீதும் விபசார தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

[Continue reading...]

Monday, 19 August 2013

போதை ஊசி போட்டு விபசாரத்தில் ஈடுபடுத்தும் கும்பலின் பிடியில் மேலும் 2 சிறுமிகள்

- 0 comments

போதை ஊசி போட்டு விபசாரத்தில் ஈடுபடுத்தும் கும்பலின் பிடியில் மேலும் 2 சிறுமிகள்: மீட்கப்பட்ட சிறுமி தகவல் Injection drug gang gain 2 girls recovery child information 

சென்னை வியாசர்பாடி பி.வி.காலனியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அபர்ணா. இவரை அதே பகுதியில் ஆசிரமம் வைத்து குறி சொல்லி வந்த அறவழி சித்தர் (48) என்பவர் போதை மருந்து கொடுத்தும், போதை ஊசி போட்டு பல முறை கற்பழித்து உள்ளார். இதற்கு அபர்ணாவின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார்.

[Continue reading...]

Saturday, 27 July 2013

16 வயது இளம்பெண் விபச்சாரத்தில்

- 0 comments

16 வயது இளம்பெண்ணை விபசாரத்தில்
தள்ளிய 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார்
கைது செய்தனர்.

உத்தரபிரதேசம் மாநிலம், வாரனாசியை சேர்ந்த
16 வயது இளம்பெண் உடல்நலக்
குறைவுக்காக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள
ஆஸ்பத்திரியில்
தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது பிக்கானரில் வசிக்கும் டோலி என்ற
பெண்ணுடன்
நட்பு ஏற்பட்டு அவளது வீட்டுக்கு சென்றார்.

அப்பகுதியை சேர்ந்த விபசார தரகர் ராம்ரத்தன்
என்பவனுக்கு அந்த இளம்பெண்ணை ரூ.20
ஆயிரத்துக்கு பேரம்
பேசி டோலி விற்று விட்டார்.

விலைக்கு வாங்கிய அந்த
பெண்ணை ராம்ரத்தன் அவரது மனைவி மற்றும்
மும்பையை சேர்ந்த இன்னொரு பெண்
ஆகியோர் வற்புறுத்தி விபசாரத்தில்
ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து வந்தனர்.

அவர்களது பிடியில் இருந்து தப்பியோடி வந்த
அந்த பெண் போலீசில் புகார்
அளித்ததை தொடர்ந்து ராம்ரத்தன்,
அவரது மனைவி, மும்பை பெண் ஆகிய 3
பேரை போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவாக இருக்கும்
டோலியை கைது செய்ய தேடுதல்
வேட்டை நடத்தி வருகின்றனர்.

[Continue reading...]

Wednesday, 24 July 2013

வேலை வாங்கி தருவதாக இளம்பெண்கள் விபச்சாரம்

- 0 comments
பெங்களூரில் வேலை வாங்கி தருவதாக
கூறி வெளிமாநில
இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளிய 9 பேர்
கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம்
இருந்து ரொக்க பணம்,
செல்போன்களை போலீசார் பறிமுதல்
செய்தார்கள்.
பெங்களூர் கெங்கேரி உபநகர்
விஸ்வேசுவரய்யா லே-அவுட்டில் உள்ள
வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசார
தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல்
கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீசார்,
வீட்டிற்குள்
புகுந்து அதிரடி சோதனை நடத்தினார்கள்.
மேலும் அங்கிருந்த 4
பேரை பிடித்து விசாரித்தார்கள்.
விசாரணையில் சந்திரசேகர் (வயது 33),
சிவு(25), கணேஷ்(25), மகேஷ்(23) ஆகியோர்
என்பதும், ஆந்திரா, மேற்கு வங்காள
மாநிலத்தை சேர்ந்த
இளம்பெண்களை பெங்களூரில்
வேலை வாங்கி தருவதாக
அழைத்து வந்து விபசாரத்தில் தள்ளியதும்
தெரியவந்தது.
மேலும் ஹைடெக் அளவில் விபசார தொழில்
நடத்தி லட்சக்கணக்கில் பணம்
சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து, சந்திரசேகர் உள்பட 4
பேரையும் போலீசார் கைது செய்தார்கள்.
அவர்களிடம் இருந்து ரூ.10,500 ரொக்கப்
பணம், 4 செல்போன்கள் பறிமுதல்
செய்யப்பட்டன. 4 பேர் மீதும்
கெங்கேரி போலீசார்
வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இதுபோல, இந்திராநகர் 4-வது பிளாக்,
சி.எம்.எச் ரோட்டில் விபசார தொழில்
நடத்தி வந்த ராஜூவ்(22), ராஜேஷ்(23),
சுவாமி(22), கார்த்திக்(30), சாகர்(49) ஆகிய 5
பேரையும் குற்றப்பிரிவு போலீசார்
கைது செய்தார்கள். இந்திராநகர் போலீசார் 5
பேர் மீதும் வழக்கு பதிவு செய்தார்கள்.
கைதானவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம், 8
செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger