Showing posts with label தற்கொலை. Show all posts
Showing posts with label தற்கொலை. Show all posts

Saturday, 17 August 2013

இளவரசன் மரணம் தற்கொலை தான் Illavarasan death was suicide Dharmapuri SP report to HC

- 0 comments
தர்மபுரியில் திவ்யாவை காதல் கலப்பு திருமணம் செய்த இளவரசன் மர்மமாக இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக அவரது தந்தை இளங்கோ மற்றும் உறவினர்களும் கூறினார்கள். ஆனால் அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதற்காக இளவரசன் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி அதற்கான அறிக்கையை சென்னை ஐகோர்ட்டில் தர்மபுரி எஸ்.பி. அஸ்ராகார்க் தாக்கல் செய்தார். தடயவியல் சோதனை முடிவு, ரெயில்வே ஊழியர்களின் வாக்குமூலம் உள்ளிட்ட விவரங்களை அந்த அறிக்கையில் கூறி இருந்தார்.
அந்த அறிக்கை விவரம் வருமாறு:–
இளவரசன் இறந்தது குறித்த புலன் விசாரணையின் போது, இறந்து போனவர் ஒரு தற்கொலை குறிப்பை விட்டுச் சென்றது புழக்கத்தில் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. விசாரித்ததில், அந்த தற்கொலை குறிப்பை எங்களால் கொணற முடிந்தது.
இறந்து போனவரின் பேன்ட் பாக்கெட்டிலிருந்து தற்கொலை குறிப்பை சம்பவ இடத்தில் அப்போதிருந்த ஒருவர் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. நாங்கள் சம்பவ இடம் செல்வதற்கு முன்பே அவர் அதை எடுத்து சென்று விட்டார். அவரை விசாரணை செய்ததில், அவர் அதை ஒப்புக் கொண்டார்.
தனது இறப்பிற்கு ஒருவரும் பொறுப்பு இல்லை என, திவ்யாவிற்கும் அவருடைய சொந்த குடும்பத்திற்கும் இளவரசன் தமிழில் எழுதிய நான்கு பக்க குறிப்பு சொன்னது. அந்த கடிதத்தின் நம்பகத் தன்மையை உறுதி செய்வதற்காக, அந்தக் கடிதத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்ட கையெழுத்துக்களையும் சரிபார்ப்பதற்காக அனுப்புகிறோம்.
அந்த தேதியில் நான் பத்திரிக்கையாளர்களுடன் பேசும் பத்திரிக்கை குறிப்பை சரி பார்த்துக் கொள்ளலாம் (நகல் இணைக்கப்பட்டுள்ளது).
அதன்படி 8–7–2013 அன்று, அந்த தற்கொலை குறிப்பு இறந்து போன இளவரசனின் ஒப்புக் கொள்ளப்பட்ட கையெழுத்துகளுடன் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் மூலமாக சென்னை, தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. 13–7–2013 அன்று கையெழுத்து நிபுணரின் பதில் கிடைக்கப்பெற்றது. கேட்கப்பட்டு உள்ளதும் ஒப்புக் கொள்ளப்பட்ட கையெழுத்துக்களும் ஒரே நபருடையதுதான் என சென்னை, தமிழக அரசு, தடய அறிவியல் துறையின் கையெழுத்து நிபுணர்கள் மூவர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று, 8–7–2013 அன்று வட்டார தடய அறிவியல் ஆய்வகம், சேலத்திற்கு உடல் உள்ளுருப்புகள் அனுப்பப்பட்டு, 12–7–2013 அன்று அதன் அறிக்கை பெறப்பட்டது. உடல் உள்ளுருப்புகளில் வயிறு, குடல், கல்லீரல், சிறு நீரகம், மூளை மற்றும் இரத்தத்தில் சாராயம் உள்ளதாக தடய அறிவியல் நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார். உடல் உள்ளுருப்பில் விஷம் இல்லை என நிபுணர் மேலும் கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, உபயோகப்படும்படியான தகவல்களை கொணருவதற்காக இறந்து போனவரின் உடலிருந்து கைப்பற்றப்பட்ட கைபேசியை சென்னை, தமிழக அரசு, தடய அறிவியல் துறைக்கு 10–7–2013 அன்று அனுப்பப்பட்டு, 13–7–2013 அன்று அறிக்கை பெறப்பட்டது.
இறந்து போன இளவரசன் மற்றும் திவ்யா ஆகியோருக்கிடையேயான உரையாடலின் ஒலிப்பதிவு அந்த கைபேசியில் இருந்தது. தனது இறப்பிற்கு சற்று நேரம் முன்பு தனது உறவினர் அறிவழகனுடனான தனது இரண்டு உரையாடல்களின் ஒலிப்பதிவும் அதில் உள்ளது. இதற்கிடையே, 11–7–2013 அன்று, அவர் இறப்பதற்கு சற்று முன்னர் பேசிய தனது நண்பர்களில் இரண்டு பேர் அதாவது சென்னையைச் சேர்ந்த மனோஜ்குமார் மற்றும் சித்தூரைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோரிடம் 164 குவிசன் கீழ் அரூர் நீதிமன்ற நடுவரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
தடய அறிவியல் ஆய்வகத்தால் கொடுக்கப்பட்ட ஒலிப்பதிவின்படியும் தனது இரண்டு நண்பர்கள் கார்த்திக் மற்றும் மனோஜ் குமார் ஆகியோரின் வாக்கு மூலத்தின்படியும் கீழ் கண்ட உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
1. தன்னுடன் திவ்யா திரும்பி வர மறுத்ததால் தான் மிகவும் கலங்கியிருப்பதாக தனது நண்பர்கள் கார்த்திக் மற்றும் மனோஜ்குமாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
2. தருமபுரி அரசு கலைக் கல்லூரி பின்புறமுள்ள இருப்புப்பாதையில் ஒரு வாழை மரத்தின் அருகில் அவர் மது அருந்தியுள்ளார்.
3. தற்கொலை செய்து கொள்ள அவர் விரும்பியுள்ளார்.
4. தனது இறப்பிற்குப் பிறகு தாஜ்மகாலைப் போன்று ஒரு நினைவாலயத்தை கட்டுமாறு தனது நண்பரிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
5. அந்தச் சமயத்தில் அவர் தனியாக இருந்துள்ளார்.
அதேபோன்று, இறந்து போன இளவரசனுடன் போனில் அவர் இறப்பதற்கு சற்று நேரம் முன்னதாக பேசிய அறிவழகன் (வயது 22), த/பெ சுப்பிரமணி, பாரதிபுரம், தருமபுரியை புலன் விசாரணை அதிகாரி விசாரித்துள்ளார். சித்தூருக்கு தன்னுடன் வர 4-7-2013 அன்று 12.00 மணிக்கு இறந்து போன இளவரசன் தன்னை அழைத்ததாக, காவல் துறை விசாரணையின்போது அறிவழகன் சொல்லியுள்ளார்.
தனது வீட்டிற்கு இறந்து போன இளவரசன் வராததால், 12–30 மணிக்கு அறிவழகன் அவரை அழைத்து அவரது இருப்பிடத்தை பற்றி கேட்டதற்கு, அருகில் இருப்பதாகவும், வருவதாகவும் இறந்து போன இளவரசன் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அவர் இணைப்பை துண்டித்துள்ளார். இருப்பினும், மேற்சொன்ன அழைப்புகள் உள்ள இறந்து போன இளவரசனின் கைபேசியின் ஒலிப்பதிவு எதிராக உள்ளது. தருமபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறமுள்ள இருப்புப்பாதையில் ஒரு வாழை மரத்தின் (உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவ இடம்) அருகில் மது அருந்தி கொண்டிருப்பதாக இறந்து போனவர் அறிவழகனுக்கு தெரிவித்துள்ளதாக ஒலிப்பதிவு காண்பிக்கிறது.
4–6–2013 அன்று திவ்யா இறந்துபோன இளவரசனின் வீட்டிலிருந்து வெளியேறி உள்ளார். தனது தாயாருடன் தற்சமயம் தங்க வேண்டுமென்று திவ்யா உயர்நீதி மன்றத்தில் 6–6–2013 அன்று தெரிவித்துள்ளார். இதனால் வெறுப்படைந்து இறந்துபோன இளவரசன் 7–6–2013 அன்று, சென்னை, தி.நகர், கன்னையா தெரு, ஜெமினி ரெசிடன்சி ஓட்லில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தனது இடது மணிக்கட்டில் ஒரு கூர் மையான பொருளால் அவர் காயமேற் கொண்டுள்ளார். அந்த ஓட்டலில் சந்தோஷ் மெஹ்ரா அறை பையனாக வேலை செய்து வருகிறார். 16–7–2013 அன்று, அரூர் நீதிமன்ற நடுவர் முன்பாக பதிவு செய்யப்பட்ட அவரது 164 குவிச வாக்குமூலம் இதனுடன் ஒத்துபோகிறது.
மேலும், திவ்யா தன்னை விட்டுப் போனதால் ஏற்பட்ட வெறுப்பினால் தனது கையை காயப்படுத்தி தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக இறந்து போன இளவரசனே திவ்யாவிடம் தொலை பேசியில் சொல்லியுள்ளார். திவ்யாவின் வாக்குமூலமும் புலன் விசாரணை அதிகாரியால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்மேலும், இளவரசனின் கைப்பேசியில் இருக்கும் திவ்யா மற்றும் இளவரசனிடையேயான உரையாடலின் ஒலிப்பதிவும், அவர் தற்கொலை எண்ணத்தில் இருந்தார் என தெரிவிக்கிறது.
4–7–2013 அன்று, முருகன் என்பவர் இளவரசனின் இறந்த உடலை எடுப்பதற்காக தருமபுரி இருப்புப் பாதை காவல் துறைக்கு உதவியுள்ளார். இருப்புப் பாதை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, இளவரசனின் இறந்த உடலை சம்பவ இடத்திலிருந்து அகற்றுவதற்காக மேற்சொன்ன முருகன் இருந்தார். அதைப் பார்த்த இறந்து போனவரின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் கொண்ட உணர்வுபூர்வ மிக்க கூட்டத்தினரால் முருகன் தாக்கப்பட்டதில், அவர் காயமடைந்துள்ளார். அந்தச் சமயத்தில், முருகனின் கையுரைகள் அவரது பாக்கெட்டிலிருந்து விழுந்து விட்டது.
இறுதியாக, 13–7–2013 அன்று, புதுதில்லி, அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கல்லூரியின் தடய அறிவியல் மருத்துவம் மற்றும் விஷமுறிவு பிரிவு துறைத் தலைவர் மற்றும் பேராசியர் தலைமையிலான நிபுணர் குழு, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மறு பிரேத பரிசோதனை நடத்தியது. இளவரசனின் உடல் கிடைத்த இடத்திற்கு அந்தச் குழு சென்று பார்வையிட்டு, குறிப்பு எடுத்துக் கொண்டது. ஓடும் தொடர்வண்டியின் பாதிப்பினால் உயிரழப்பு ஏற்படுத்தக்கூடிய காயங்கள் உட்பட குறிப்பிடப்பட்ட காயங்கள் ஏற்பட முடியும் என்று அவர்களின் மறு பிரேத பரிசோதனை மற்றும் சம்பவ இடத்தை பார்வையிட்ட பின்னர், அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இறந்து போனவரின் உடலின் எந்தப் பகுதியிலும், கொடுமை/உடல் ரீதியான வன்மை இருந்ததற்கான தடயம் ஏதும் இல்லை.
மூளை பாதிக்கப்பட்டும், இருப்புப் பாதையின் சுற்றிலும் சிதறிக் கிடந்ததும் தெரிவிக்கப்படுகிறது. புகைப் படங்களில் இதை காண முடியும்.
இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரி, கேள்வித் தொகுப்பை, தருமபுரி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்திய குழுவிற்கு அனுப்பினார். இதுவரை நடந்த புலன் விசாரணையுடன் ஒத்துப்போகும் அந்த கேள்வித் தொகுப்பும், அந்தக் குழுவினர் கொடுத்த விளக்கங்களும் உயர்நீதிமன்ற பரிசீலனைக்காக இணைக்கப்பட்டுள்ளன.
எனவே, இளவரசனின் மரணம் ஒரு கொலை என்பதற்கான ஐயப்பாட்டை உருவாக்கும் சந்தர்ப்ப/ உடல் ரீதியான/ஆவணபூர்வமான எந்த ஒரு தடயமோ, இது வரையில் நடைபெற்ற புலன் விசாரணையில் வெளி வரவில்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.
[Continue reading...]

Tuesday, 23 July 2013

திருமணம் 4 முறை தடை ஏற்பட்டதால் தூக்கில் தொங்கிய வாலிபர்

- 0 comments
4 முறை நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போனதால் மனம் உடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் டெல்லிவாசிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு டெல்லி கஜூரி காஸ் பகுதியை சேர்ந்தவர் அதீக் அகமது (22). வாலிபத்தின் வசந்த காலத்தில் நிற்கும் மகனுக்கு விரைவாக திருமணம் செய்து வைக்க விரும்பிய பெற்றோர் பெண் தேட தொடங்கினர்.

கடந்த ஓராண்டு காலத்தில் 3 முறை பெண் பார்க்கும் படலங்கள் நடந்தது. நிச்சயதார்த்தம் முடிந்தும், 3 தடவையும் கடைசி நேரத்தில் அவரது திருமணம் தடைபட்டு நின்றது.

இந்நிலையில், கடந்த வாரம் அதீக் அகமதுவுக்கு மற்றொரு பெண் பார்த்தனர். இந்த முறையும் திருமண தேதி முடிவாகாமல், புதுமண முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதனால், மனம் உடைந்த அதீக் அகமது நேற்று அதிகாலை தனது படுக்கையறையில் உள்ள மின் விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டு பிணமாக தொங்கினார்.

பிணத்தை கைப்பற்றிய போலீசார், அந்த அறையில் தற்கொலை தொடர்பான கடிதம் ஏதும் கிடைக்காததால் குடும்பத்தாரிடம் விசாரித்து வருகின்றனர்.
[Continue reading...]

Thursday, 18 July 2013

நாகர்கோவில் செல்போன் கோபுரத்தில் ஏறி ஊழியர் தற்கொலை மிரட்டல்

- 0 comments
நாகர்கோவில் வடசேரி, காமராஜர் புரத்தில் டெலிபோன் ஊழியர்களுக்கான பி.எஸ்.என்.எல். குடியிருப்பு உள்ளது. சுமார் 200–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். குடியிருப்பின் மையப்பகுதியில் 150 அடி உயர செல்போன் கோபுரம் உள்ளது.
இன்று அதிகாலை 6 மணியளவில் இங்கு குடியிருக்கும் ஊழியர்கள் சிலர் பால் வாங்கவும், டீ குடிக்கவும் வீட்டை விட்டு வெளியே வந்தனர். குடியிருப்பின் மையப்பகுதி வழியாக சென்ற போது செல்போன் கோபுர உச்சியிலிருந்து ஒருவரின் கூச்சல் சத்தம் கேட்டது.
திடுக்கிட்ட ஊழியர்கள் கோபுரத்தை அண்ணாந்து பார்த்தபோது, அங்கு ஒருவர் ‘மழைக்கோட்டு’, தலையில் ‘ஹெல்மெட்’ அணிந்தபடி கையில் தண்ணீர் பாட்டிலுடன் நிற்பதை கண்டனர்.
[Continue reading...]

Wednesday, 17 July 2013

சென்னை கல்லூரி மாணவி லண்டனில் மர்மமான முறையில் கொலை

- 0 comments
சென்னையை சேர்ந்த மாணவி லண்டனில்
மர்மமான முறையில் இறந்தார்.
அவரது உடலை, தந்தை அனுமதி பெறாமல்
லண்டன் போலீசார் பிரேத
பரிசோதனை நடத்தி முடித்து விட்டனர்.
மேலும் சரியான தகவல் தெரிவிக்க
மறுப்பதாகவும் உறவினர்கள் புகார்
தெரிவித்தனர்.
சென்னை அண்ணாநகர்
மேற்கு பாலாஜி நகரை சேர்ந்தவர் தாம்சன்
(வயது 48). இவர், தற்போது முகப்பேர்
கிழக்கு ஜெ.ஜெ.நகர் போலீஸ் நிலையத்தில்
சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக
பணியாற்றி வருகிறார். இவருடைய
மனைவி சாயிஸ். இவர், கடந்த 1 1/2
ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல்
இறந்து விட்டார்.
இவர்களுக்கு ஜியார்ஜியன்னா(18) என்ற
மகளும், நோர்வெல்(12) என்ற மகனும்
உள்ளனர். இவர்களில் நோர்வெல்,
சென்னை வேப்பேரியில் உள்ள தனியார்
பள்ளிக்கூடத்தில் 7-ம்
வகுப்பு படித்து வருகிறான்.
ஜியார்ஜியன்னா, லண்டனில் உள்ள லிவர்புல்
பல்கலைக்கழகத்தில் ஏரோனாட்டிக்கல்
சயின்ஸ் மற்றும் ஸ்பேஸ் சயின்ஸ் எனப்படும்
விண்வெளி அறிவியல் முதலாம்
ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர்,
பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான
விடுதியில் தங்கி, படித்து வந்தார். அந்த
விடுதியில் ஒவ்வொரு மாணவிகளுக்கும்
தனித்தனி அறை ஒதுக்கப்பட்டு அதில்
தங்கி இருந்தனர்.
இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி லிவர்புல்
பல்கலைக்கழகத்தில்
இருந்து தாம்சனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசிய பல்கலைக்கழக நிர்வாகம்,
உங்கள் மகள் விடுதி அறையில்
தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
என தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தாம்சன், மறுநாள்
14-ந்தேதி லண்டனுக்கு புறப்பட்டு சென்றார்.
உறவினர்கள் சிலரும் அவருடன் சென்றனர்.
ஆனால், அவர் லண்டன் போய் சேர்வதற்குள்
ஜியார்ஜியன்னாவின் உடலை லண்டன்
போலீசார் பிரேத
பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டனர்.
பிரேத பரிசோதனைகள் முடிந்து மகளின்
முகத்தை மட்டும் தாம்சன் பார்க்க முடிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், லண்டன்
போலீசாரிடம், எனது மகளின்
உடலை எனது அனுமதி பெறாமல்
எப்படி பிரேத பரிசோதனை செய்யலாம்.
என்னிடம் கையெழுத்து வாங்காமல் பிரேத
பரிசோதனைக்கு எப்படி அனுப்பலாம்?
என்று கேட்டார்.
அதற்கு லண்டன் போலீசார், அது உங்கள்
நாட்டு சட்டம். ஆனால் எங்கள் நாட்டில்
அது கிடையாது. இன்னும் நிறைய
நடைமுறைகள் உள்ளன. நீங்கள் அடுத்த கட்ட
நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினால்தான்
உங்கள் மகள் உடலை விரைவாக நீங்கள்
இந்தியா கொண்டு செல்ல முடியும்.
இல்லை என்றால் மேலும் கால தாமதம் ஆகும்
என்றனர்.
தாம்சன், தனது மகள் எப்படி இறந்தாள்,
தூக்குப்போட்டு தற்கொலையா? விஷம்
குடித்தாளா? என்று தெரிவிக்கும்படி கேட்டார்.
ஆனால் அதற்கு லண்டன் போலீசாரும்,
பல்கலைக்கழக நிர்வாகமும் எந்த பதிலும்
கூறாமல் அடுத்த கட்ட நடவடிக்கையில்
ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபற்றி லண்டனுக்கு சென்று உள்ள
ஜியார்ஜியன்னாவின் உறவினரிடம்
தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்,
கூறியதாவது:-
ஜியார்ஜியன்னா தற்கொலை செய்து கொண்டதாக
கூறும் விடுதி அறை மிகவும் குறுகலாக
உள்ளது.
தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள
அங்கு எந்த வசதியும் இல்லை. அவர்
உண்மையில் தூக்குப்போட்டு கொண்டாரா?
விஷம் குடித்தாரா?
அல்லது யாராவது அவரை அடித்துக்
கொன்றனரா?
என்று எங்களுக்கு தெரியவில்லை.
இதுபற்றி லண்டன் போலீசார் எங்களிடம் எந்த
தகவலும் தெரிவிக்கவில்லை. அவர்கள்
ஜியார்ஜியன்னா உடலுடன்
எங்களை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதிலேயே குறியாக
உள்ளனர்.
ஜியார்ஜியன்னாவின் சாவில் மர்மம் உள்ளது.
லண்டன் போலீசார் கூறும் பதிலில்
எங்களுக்கு திருப்தி இல்லை.
ஜியார்ஜியன்னா தற்கொலை செய்து கொள்ள
வேண்டிய அவசியமும் இல்லை.
அடிக்கடி எங்களிடம் போனில்
தொடர்பு கொண்டு பேசி வந்தார்.
எங்கள் குடும்பத்தாரிடம் மட்டுமல்லாமல்
லண்டன் பல்கலைக்கழகத்தில் தன்னுடன்
பயிலும் சக மாணவ-மாணவிகளுடனும்
நன்றாகவே பழகி வந்து உள்ளார். இந்தியாவில்
இருந்து சென்றதால்
யாராவது உன்னை கேலி செய்கிறார்களா?
என்று நாங்கள் கேட்ட போது, அப்படி எதுவும்
நடைபெறவில்லை என்றுதான் எங்களிடம்
கூறினார்.
ஜியார்ஜியன்னா திடீர் மரணம்
எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரேத பரிசோதனை முடிந்து விட்டாலும்
இன்னும் சில நடைமுறைகள் உள்ளதால்
ஜியார்ஜியன்னா உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்ல
இன்னும் சில நாட்கள் ஆகும் என தெரிகிறது.
இது எங்களுக்கு கூடுதல்
வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
ஜியார்ஜியன்னாவின்
உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்வதற்கும்,
அவளின் மர்ம சாவு குறித்து லண்டன்
போலீசார் விசாரணை நடத்தவும் மத்திய
அரசு எங்களுக்கு உதவி வழங்க வேண்டும்.
லண்டன் போலீசார் எங்களிடம் எந்த தகவலும்
கொடுக்காமல் கிடுக்கிப்பிடியாக
நடந்து கொள்வதால், தாம்சன் போலீஸ்காரராக
இருந்தும் நாங்கள் ஆதரவின்றி தனியாக
தவித்து வருகிறோம். இதில் மத்திய
அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.
[Continue reading...]

Thursday, 4 July 2013

இளவரசன் எழுதிய காதல் கடிதம்

- 0 comments
பெண்களே உது உங்களுக்கு தேவைதானா ?    

ஆவதும்  பெண்ணாலே மனுஷன் அழிவதும் பெண்ணாலே


 இளவரசனுக்கு இது சரியான தண்டனைதான் - தமிழ்நாட்டில் பெண்களை பெற்ற  பெற்றோர்களின் மனநிலை

இதுவாக இருக்கும் பொது  அவரின் காதல் கடிதம் இதோ உங்களுக்காக ...



இந்த கடிதம் ஒன்றில் இளவரசன் கூறி இருப்பதாவது:-
[Continue reading...]

Monday, 17 June 2013

கள்ளக்காதல் விவகாரம் ரயில் முன் பாய்ந்து 3 பேர் தற்கொலை

- 0 comments
நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள இருக்கன்துறை வேப்பம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் தனபால், தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 30). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

சரஸ்வதிக்கும் அந்த பகுதியை சேர்ந்த கார் டிரைவர் முத்துகுமார்(24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.

இதையறிந்த தனபால் மனைவியை கண்டித்தார். ஆனாலும் அவர் முத்துக்குமாருடனான பழக்கத்தை கைவிடவில்லை. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சரஸ்வதி கைக்குழந்தையுடன் கள்ளக்காதலன் முத்து குமாரோடு ஊரைவிட்டு ஓடினார்.

தனபால் பல இடங்களில் அவர்களை தேடினார். எனினும் அவர்கள் எங்கு சென்றனர் என்று தெரியவில்லை. இந்நிலையில் இன்று காலை நாங்குநேரி வாகைக்குளம் ரெயில்வே கேட் அருகே குழந்தையுடன் 2 பேர் இறந்து கிடப்பதாக நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அங்கு இறந்து கிடந்தது வேப்பம்பாடை சேர்ந்த முத்துகுமார், சரஸ்வதி அவரது குழந்தை என்பது தெரியவந்தது. 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் குழந்தையுடன் முத்துகுமாரும், சரஸ்வதியும் இன்று காலை நாகர்கோவிலில் இருந்து மும்பை நோக்கி சென்ற ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger