Sunday 21 August 2011

வைட்டமின்கள் மீ��ு ஏனிந்த மோகம்?

- 0 comments


சீரான உடல்வளர்ச்சிக்கும்,சில நோய்களைத் தடுக்கவும் அவசியமானது வைட்டமின்கள்.பள்ளி பாடப்புத்தகங்களில் படித்திருப்பார்கள்.அதை வைத்தே இது உடலுக்கு ரொம்ப நல்லது என்றுநினைப்பார்கள் போல் தெரிகிறது.தேவையில்லாமல் இம்மாத்திரைகளை கடைகளில் வாங்கிவிழுங்கும் மோகம் அதிகரித்து வருகிறது.
                                   உயிர்ச்சத்துமாத்திரைகள் அதன் தேவையை தாண்டி அதிக அளவில் விற்பனையாகிறது.மல்டி விட்டமின்பற்றிய  கம்பெனிகளின் விளம்பரமும் ஒருகாரணம்.வைட்டமின் இ பாலுணர்வை அதிகரிக்கும் என்ற மனோபாவம் பெரும்பாலானஇளைஞர்களிடம் இருப்பதாக விற்பனை பிரதிநிதிகள் கூறுகிறார்கள்.இளமையை தக்கவைக்கும்என்ற எண்ணமும் இருக்கிறது.இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

                                   அன்றாடம்நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் வைட்டமின்கள் போதுமானது என்பதே சரி.சிலநாள்பட்ட வியாதிகளுக்கு (நீரிழிவு,இரத்த அழுத்தம் போன்றவை) மருத்துவர்களால்பரிந்துரைக்கப்படுகிறது.கிராமப்புற மருத்துவமனைகளில் இந்த மாத்திரைகள் அதிகம்பரிந்துரைக்கப்படுவதுண்டு.ஏழைகளுக்கு சத்துக்குறைவு சகஜம்.ஆனால் நகர்ப்புறத்தில்கடைகளில் கேட்டு வாங்கி உண்பவர்கள் வசதியானவர்கள்.

                                   அளவுக்குஅதிகமான உயிர்ச்சத்து மாத்திரைகள் பெரிய அளவு உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.அதிக அளவு ஏ உயிர்ச்சத்து கல்லீரலை பாதிப்படையச்செய்கிறது.இது போன்ற சத்துக்கள்தோலில் சேமிக்கப்படுகின்றன.பல உயிர்ச்சத்துக்களின் அதிக அளவு உடலில் சேரும்போதுதோல் புற்று நோய்க்கான வாய்ப்புகள் அதிகம் என்கின்றன ஆய்வுகள்.

                                  வைட்டமின்களில் நீரில் கரைபவை,கொழுப்பில் கரைபவை என்று உண்டு.பி,சி போன்றவைநீரில் கரையும்.இவை அதிகமானால் சிறுநீர் மூலம் வெளியேறிவிடும்.இம்மாத்திரைசாப்பிட்ட பின் மஞ்சளாக வெளியேறுவது அதனால்தான்.கொழுப்பில் கரையும்வைட்டமின்கள்(ஏ,டி,இ,கே)அதிகமானால்தான் பிரச்சினை.நீரில் கரைபவற்றால் இல்லை என்று சொல்லி வந்தார்கள்.

                                   நீரில்கரையும் உயிர்ச்சத்துக்களும் சிறுநீரக்க் கல்லை உருவாக்கும் என்கிறார்கள்.எனக்குஒரு முறை தோலில் ஏற்பட்ட ஒரு பிரச்சினைக்கு 500 மிகி வைட்டமின் சி மாத்திரைதரப்பட்ட்து.இப்போது கிடைப்பதில்லை.தடை செய்யப்பட்டுவிட்ட்து.ஒரு நாளைக்கு இந்தஅளவு மிக அதிகம்.இதன் அதிக அளவு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொந்தரவுகளைஉருவாக்கும்.ஒரு நாளுக்கு 45 மிகி போதுமானது.

                                  விளம்பரங்களைநம்பி நாமாக முடிவெடுப்பது தவறான போக்கு.இயற்கைக்கு மிஞ்சியது எதுவுமில்லை என்பதைஉணரவேண்டும்.நமது உணவில் போதுமான அளவு பச்சைக்காய்கறிகள்,பழங்களை சேர்த்தாலேதேவையானது கிடைத்துவிடும்.



http://blackinspire.blogspot.com




  • http://blackinspire.blogspot.com


  • [Continue reading...]

    டொரண்டோ பறக்கிற��ு அழகர்சாமியின் குதிரை.

    - 0 comments


    சர்வதேச திரைப்படவிழா அடுத்த மாதம் டொரண்டோவில் நடக்கிறது.சர்வதேச அளவில் முக்கியமான திரைப்படங்கள்இவ்விழாவில் பங்கேற்க இருக்கின்றன.இத்திரைப்பட விழாவில் பங்கேற்க அழகர்சாமியின்குதிரை திரைப்படம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.தென்னிந்தியாவில் இருந்து தேர்வுசெய்யப்பட்டுள்ள ஒரே திரைப்படம் இது.

                                    பாஸ்கர்சக்தியின் கதை திரைப்படமாக்கப்பட்டிருந்த்து.சுசீந்திரன் இயக்கத்தில்அப்புகுட்டியும் சரண்யா மோகனும் வாழ்ந்து காட்டியிருந்தார்கள்.சமீபத்தில் இளையராஜாஇசை அமைத்த படமும் கூட! இப்படம் வெண்ணிலா கபடிக்குழு அளவுக்கு இல்லை என்று கருத்துசொல்லப்பட்ட்தும் உண்டு. 

                                    உலகத்தின்முக்கியமான சினிமா கலைஞர்கள் அழகர்சாமியின் குதிரையை பார்க்கப் போகிறார்கள்.அப்புக்குட்டிநிச்சயம் அவர்களை கவர்ந்து விடுவார் என்பதே நிஜம்.ஒரு நிஜ குதிரைக்காரனை நேரில்பார்க்கப் போகிறார்கள்.பெரிய நடிகர்கள்,நாலு பைட்,ஒரு கவர்ச்சி டான்ஸ் என்ற தமிழ்சினிமாவின் விதியை மீறிய படம் இது.

                                     பெருவெற்றிபெற்ற படங்கள் இருக்கிறது.அதிகம் சிலாகிக்கப்பட்ட சினிமாக்கள் உண்டு.ஆனால் பத்தோடுபதினொன்றாக இல்லாமல் தனித்துவம் பெற்ற சினிமா இது.அப்புகுட்டியை மட்டும் வைத்துதிரைப்படம் செய்ய அதிக தைரியம் வேண்டும்.எப்போதும் சினிமா என்பதுசூதாட்டம்தான்.வெற்றி,தோல்வியை கணிப்பது சாத்தியமே இல்லை.

                                       பட்த்தில்உள்ள மூட நம்பிக்கை,மக்கள் இதையெல்லாம் பார்த்தால் உலகம் என்ன நினைக்கும்? ஒன்றும்நினைக்காது.இந்தியாவைப்பற்றி உலகத்துக்கு தெரியும்.தவிர மூட நம்பிக்கைகள் உலகம்முழுக்க இருக்கும் விஷயம்தான்.ஒவ்வொரு இட்த்திலும் வேறுபடும்.வித்தியாசமானமுயற்சிகள்தான் முக்கியம்.

                                      பரபரப்போ,விறுவிறுப்போ உலக சினிமா கலைஞர்களுக்கு காட்டவேண்டியிருப்பதில்லை.அழகர்சாமியின் குதிரை போன்ற முயற்சிகள் சர்வதேச அளவில் கொண்டுசெல்லப்படவேண்டிய ஒன்றுதான்.குறைகள் இருப்பது பொதுவானது.அது முக்கியமும்அல்ல.சர்வதேச அளவில் எப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பதும் கவனிக்கப்படும்.

                                        தமிழுக்குகிடைத்திருக்கும் கௌவரம் இது.உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளைச் சார்ந்தகலைஞர்களும் நம்முடைய முயற்சியை அறிந்து கொள்ளும் வாய்ப்பு.அப்படி ஒரு அரங்கில்நம்ம ஊர் குதிரை பங்கேற்பது நமக்கு பெருமையான ஒன்று.அழகர்சாமி குதிரை குழுவைவாழ்த்தி அனுப்பி வைப்போம்.


    http://blackinspire.blogspot.com




  • http://blackinspire.blogspot.com


  • [Continue reading...]

    தூக்கு தண்டனையை ���த்து செய்யக்கோரி அமெரிக்க தமிழர���கள் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

    - 0 comments


    அமெரிக்காவில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்து செய்வதற்காக கையெழுத்து பிரச்சாரம் நடைப்பெற்றது பெரும் கவனத்தை ஈர்த்தது.

    சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி தமிழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியர்வர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி பிரிமாண்ட நகரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சான் ஒசே, சன்னிவேல் உட்பட அருகில் இருந்த பல நநரங்களில் இருந்து தமிழர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்ததை காண முடிந்தது.

    பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியர்வர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரிய கோரிக்கை மனுவில் கையொப்பங்களை சேகரித்தனர்.

    இந்திய தூதரகத்தின் மூலம் இந்த கோரிக்கை மனு இந்திய அரசிற்கும் தமிழக முதல்வருக்கும் அனுப்பி வைக்க இருப்பதாக தெரிவித்தனர்.

    மரண தண்டனைக்கான எதிரான பதாகைகளை ஏந்தி பிரிமாண்ட சென்ட்ரல் பூங்காவை சுற்றி ஊர்வலம் சென்றனர். பல இன மக்களுக்கும் போராட்டத்திற்கான காரணத்தை ஆர்வமாக கேட்டறிந்து தமிழர்களின் இப்போராட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்ததை கேட்க முடிந்தது.

    இந்த ஆர்பாட்டத்தை ஒருகினைத்த தமிழ் உணர்வாளர்கள் தமிழக முதலமைச்சர் தலையிட்டு ஆளுநர் மூலம் மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.









    http://devadiyal.blogspot.com




  • http://devadiyal.blogspot.com


  • [Continue reading...]

    3 பேரின் உயிரைக் ��ாப்பாற்றுங்கள்! ஜெயலலிதாவுக்கு ��.த.அ வேண்டுகோள்!

    - 0 comments


    மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது உயிரை காப்பாற்றுங்கள் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு உலகத் தமிழ் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதுகுறித்து உலகத் தமிழ் அமைப்பின் தலைவர் செல்வன் பச்சமுத்து, முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

    ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது கருணை மனுக்கள் இந்திய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். காலவெள்ளத்தின் பின்னோக்கிச் சென்று பார்ப்பின், உலகின் பல்வேறு நாடுகளின் சட்டங்கள் பெருந்தன்மையுடன் தங்களது தீர்ப்புகளை திருத்தி எழுதியிருக்கின்றன.

    ஆனால் சட்டமே நினைத்தாலும் திருத்தி எழுதி இயலாத தீர்ப்பு மரண தண்டனையே. இதை மனதில் கொண்டே உலகிலுள்ள 130க்கும் மேற்பட்ட நாடுகள் சட்டத்தின் மூலமாகவோ, நடைமுறையின் மூலமாகவோ மரண தண்டனையை ஒழித்து விட்டன.

    மரண தண்டனை என்பது சட்டத்தின் பெயரால் செய்யப்படும் திட்டமிட்ட படுகொலை என்றார் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர். மேலும் ஒரு கொலைக்கு இன்னொரு கொலை தீர்வாகாது. ராஜீவ் கொலையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு மரண தண்டனை அறிவிப்பு உலகத் தமிழர்களையும், உலகில் மனிதாபிமானம் பேணுவோரையும் பேரதிர்ச்சியும், பெருங்கவலையும் கொள்ளச் செய்துள்ளது.

    தண்டனைக்குள்ளானவர்களின், குற்றத்தன்மையினையும் கடந்த 21 ஆண்டுகளாக தனிமைச் சிறையில் வாடும் அவர்களின் நிலையினை கருத்தில் கொண்டும் அவர்கள் மூவருக்கும் தாங்கள் தண்டனை குறைப்பு செய்ய ஆவணச் செய்ய வேண்டும் என தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

    உலக நாடுகள் முன் தமிழர்களை தலை நிமிரச் செய்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்த தாங்கள் தாயுள்ளத்தோடு இவ்வேண்டுகோளையும் செயல்படுத்தினால் மனித நேயம் போற்றும் மாபெரும் தலைவராக மக்கள் மனதில் நீங்கா இடம் கொள்வீர்கள் என்பது உறுதி. இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

    http://devadiyal.blogspot.com




  • http://devadiyal.blogspot.com


  • [Continue reading...]

    நாகை மீனவர்களை த���க்கியது டக்ளஸ் ��ேவானந்தாவின் அட���யாட்கள்: சீமான்

    - 0 comments


    நடுக்கடலில் 30 படகுகளில் வந்து நாகை மீனவர்களை தாக்கியது டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள் தான் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    நாகை மாவட்டம் அக்கரைப்பட்டு கிராமத்தில் இருந்து இயந்திரப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 15 மீனவர்கள், கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். பல படகுகளில் வந்த சுமார் 30 பேர் கட்டைகளால் அடித்தும், கத்தியால் குத்தியும் தாக்கியுள்ளனர். மீனவர்கள் வைத்திருந்த திசை, தூரம் காட்டும் ஜி.பி.எஸ். கருவிகளையும் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.

    இந்த தாக்குதலை நடத்தியது இலங்கை மீனவர்கள் என்று செய்திகள் கூறுகின்றன. உண்மை அதுவல்ல. இலங்கைத் தமிழ் மீனவர்கள் ஒரு போதும் தமது சகோதர மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதில்லை.

    அவர்களுடைய ஒரே கோரிக்கை, இழுவைப்படகைக் கொண்டும், தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டும் மன்னார் கடலில் மீன் பிடிக்க வேண்டாம் என்பதே. இதைத் தவிர இரு நாட்டு மீனவர்களுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.

    இந்த தாக்குதல், இலங்கையில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தத்தின் தூண்டுதலின் பேரிலேயே நடத்தப்பட்டுள்ளது என்கிற தகவல் கிடைத்துள்ளது.

    கெய்ட்ஸ் தீவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா, தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி வந்து மீன் பிடிப்பது இலங்கைத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக உள்ளது என்ற இலங்கை அரசின் சூழ்ச்சித் திட்டத்திற்கு உதவ, தனது ஆட்களை அனுப்பி தமிழக மீனவர்களைத் தாக்கியுள்ளார் என்பதே உண்மை.

    இலங்கை தமிழர் பிரச்சினைகளில் தமிழக முதல்வர், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை கடுமையாக விமர்சித்த இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபயா ராஜபக்சே, தமிழக மீனவர்கள் தான் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றனர். அவர்களை ஜெயலலிதா முதலில் தடுத்து நிறுத்தட்டும் என்று கூறினார்.

    அதனை மெய்ப்பிக்கவே இப்படியொரு தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. எனவே தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு, அந்த குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்த தமிழக முதல்வர் முன்வர வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

    http://devadiyal.blogspot.com




  • http://devadiyal.blogspot.com


  • [Continue reading...]

    உண்மைக் குற்றவா��ிகள் காங்கிரஸ்க���ரரே என்கிறார் - முன்னாள் சி.பி.ஐ அ��ிகாரி மோகன்ராஜ்

    - 0 comments


    இந்தியாவை மிரட்டும் இலங்கை அரசின் துருப்புச்சீட்டு குமரன் பத்மநாதன் என ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மத்திய குற்றப்புலனாய்வு துறை ஆய்வாளராக செயற்பட்ட முன்னாள் அதிகாரி மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.

    குமுதம் இணையத்தளத் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த நேர்காணலில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மத்திய குற்றப்புலனாய்வுத்துறையின் செயற்பாட்டினையும் அவ்விசாரணையின் தலைவராக இருந்த அதிகாரி கார்த்திகேயனின் நடவடிக்கை குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

    சுவாரஸ்யமான இந்தப் பேட்டி இங்கே…



    http://devadiyal.blogspot.com




  • http://devadiyal.blogspot.com


  • [Continue reading...]

    பெண் எம்எல்ஏ பேச���ய மைக்கை பிடுங்��ி பொதுக்கூட்ட மேடையில் மோதிய காங���கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

    - 0 comments



    பொதுக்கூட்ட மேடையிலேயே ஒரு எம்.எல்.ஏ. பேசிக்கொண்டிருந்த போதே ஒரு பிரிவினர் மைக்கை பிடுங்கி வெளியேறி பிரச்சனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    மார்த்தாண்டத்தில் ராஜீவ் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் குளச்சல் பிரின்ஸ், கிள்ளியூர் ஜாண்ஜேக்கப், விளவங்கோடு விஜயதரணி மூன்று எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். அதில் பேசிய விஜயதரணி நான் வெற்றி பெற்ற பிறகுதான் விளவங்கோடு தொகுதி பற்றி வெளி மக்களுக்கு தெரிகிறது என்று பேசினார்.


    இதற்கு மேடையில் இருந்து நிர்வாகிகளில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து மைக்கை பிடுங்கினர். பின்னர் மேடையை விட்டு வெளியேறினர்.

    இதனால் விஜயதரணியும் பேச்சை நிறுத்தி விட்டு காரில் புறப்பட்டு சென்றார். பின்னர் வெளியேறியவர்கள் மீண்டும் திரும்பி வந்து பொதுக்கூட்டத்தை நடத்தினர்.

    பின்னர் பேசிய எம்.எல்.ஏ.க்கள் ஜாண் ஜேக்கப், பிரின்ஸ் ஆகியோர் நேசமணி, பொன்னப்பநாடார், சுந்தரதாஸ் போன்றவர்கள் வெற்றி பெற்ற தொகுதியை பற்றி விஜயதரணி இப்படி பேசுவதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறினர். இதனால் பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


    கடந்த தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் மொத்தம் ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் மூன்று வெற்றி கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கிடைத்தது. இதில் குளச்சல் பிரின்ஸ், கிள்ளியூர் ஜாண்ஜேக்கப் ஆகியோர் ஒரு கோஷ்டியாகவும், விளவங்கோடு விஜயதரணி தனியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.


    குமரி மாவட்ட கட்சி செயல்பாட்டில் தொடர்பே இல்லாமல் இருந்த விஜயதரணி, மேலிட கனிவுடன் சீட் வாங்கி வந்தார். இவரது வெற்றி வாய்ப்பை தடுக்க காங்கிரசிலேயே ஒரு கோஷ்டி கடுமையாக முயற்சித்தும், இந்த தேர்தலில் குமரி மாவட்டத்தில் வீசிய "காங்கிரஸ் அலை' இவரை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது. எனினும் கோஷ்டி கானத்தால் இவரை ஓரம் கட்டும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலிட தயவு உள்ளதால் அதை விஜயதரணி சாதுரியமாக சமாளித்து வருகிறார்.





    http://tamil-sex-video.blogspot.com




  • http://tamil-sex-video.blogspot.com


  • [Continue reading...]

    பிரகாஷ்ராஜ் இயக��கத்தில் தோனி

    - 0 comments



    சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமா தயாரிப்பில் முதலீடு செய்து வந்தார் பிரகாஷ்ராஜ். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளிலும் நடிப்பதால் எப்போதும் அவரது  கால்ஷீட் டைரி எப்போது நிறைந்து இருக்கும்.

    தமிழில் 'மொழி', 'வெள்ளித்திரை', 'அபியும் நானும்' போன்ற படங்களை தயாரித்தவர், முதன் முதலாக கன்னடத்தில் 'அபியும் நானும்' படத்தை 'நானு நானா கனசு' என்னும் பெயரில் இயக்கினார்.

    இயக்குனராக  வரவேற்பை பெற்றவர் தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரு படத்தை இயக்கி, தயாரித்து நடிக்கவும் இருக்கிறார்.

    படத்திற்கு 'தோனி' என பெயரிட்டுள்ளார். இளையராஜா இசையமைக்க, நா.முத்துக்குமார் பாடல்களை எழுத இருக்கிறார்.

    இது குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டிவிட்டர் இணையத்தில் " தோனி என்னும் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்க இருக்கிறேன். எனது அடுத்த பயணம் துவங்கி விட்டது" என்று தெரிவித்துள்ளார்.





    http://tamil-sex-video.blogspot.com




  • http://tamil-sex-video.blogspot.com


  • [Continue reading...]

    அன்னா ஹசாரே போரா���்டம்´ அமிதாப்-ஷாருக்கான்,

    - 0 comments


    ஊழலுக்கு எதிராக பலமான லோக்பால் மசோதா கொண்டு வர வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா ஹசாரேவிற்கு இந்தி நடிகர், நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா அதிகார வரம்புக்குள் பிரதமர் மற்றும் உயர் நீதிபதிகளையும் கொண்டு வர வேண்டும் என்று கோரி, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே டெல்லியில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    இவரது உண்ணாவிரதத்துக்கு நாடு முழுவதும் மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆங்காங்கே உண்ணாவிரதப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அன்னா ஹசாரேவிற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி கொண்டே வருகிறது.

    அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு இந்தி நட்சத்திரங்களும் ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர். ஊழலுக்கு எதிராக கடுமையான கருத்துக்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

    நடிகர் ஷாருக்கான் கூறுகையில், ஒரு நாட்டுக்கு மோசமான களங்கம் என்று ஒன்று இருக்குமானால், அது ஊழல்தான். நமது நாட்டில் ஊழல் பெரிய அளவில் வளர்ந்து விட்டது. எனவே, தான் ஊழலுக்கு எதிரான இயக்கங்களுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். இதில் பல்வேறு அம்சங்கள் அடங்கி இருக்கின்றன. அரசியல் சட்ட அம்சங்களும் இதில் சம்பந்தப்பட்டு இருக்கின்றன.

    இப்போது, வீதிகளில், தெருக்களில் நடந்து வரும் போராட்டம், அரசியல் சட்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது உறுதி.இந்த போராட்டத்துக்கு தோல்வியோ மரணமோ கிடையாது என்றார்.

    அமிதாப்பச்சன் வெளியிட்டுள்ள கருத்து வருமாறு:- சமூகத்திலும், அரசு நிர்வாகத்திலும் ஊழல் நிலவுவதை யாரும் விரும்பமாட்டார்கள். நமக்கு அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை காக்க அமைதி வழியில் போராடுகிறோம். சட்டத்தின் ஆட்சி நிலை நிறுத்தப்பட வேண்டும். ஊழலுக்கு எதிராக அனைவரும் கைகோர்க்க வேண்டும். இப்போது ஏற்பட்டுள்ள எழுச்சி வரவேற்கத்தக்கது ஆகும். இவ்வாறு அமிதாப்பச்சன் கூறினார்.

    ஊழலுக்கு எதிரான போராட்டம் மிகவும் கடினமானது, நீண்ட பயணத்தை கொண்டது. இப்போது நடைபெறும் போராட்டம் ஒரு தொடக்கம்தான். இப்போது நடந்து வரும் போராட்டம் மூலம் ஊழலுக்கு ஒரு விடுதலை கிடைக்கவில்லை எனில், இந்தியாவுக்கு மற்றொரு வாய்ப்பு கிடையவே கிடையாது என்று சேகர்கபூர் கூறினார்.

    நடிகை பிபாசா பாசு கூறுகையில், அன்னாதான் இந்தியா, இந்தியாதான் அன்னா. ஊழலை கொல்லக்கூடிய நம்பர் 101. அமைதியையே நாம் அனைவரும் விரும்புகிறோம் என்றார்.
    பிரீத்தி ஜிந்தா வெளியிட்டுள்ள கருத்தில், ஒவ்வொரு இந்தியனும் அன்னா ஹசாரேவிற்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும். நமது நாட்டில் நிலவும் ஊழலுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

    குணால் கோஹ்லி கூறுகையில், நமது நாட்டின் வரலாறு போற்றத்தக்கது. தியாகங்களை கொண்டது. இதுதான் நம்மை பெருமைப்படுத்துகிறது. அந்த தியாக வழியை நாம் அனைவரும் பின்பற்றி நடக்கவேண்டும். அன்றாட வாழ்க்கையில் ஊழலுக்கு இடமே இருக்கக் கூடாது என்றார்



    http://tamil-sex-video.blogspot.com




  • http://tamil-sex-video.blogspot.com


  • [Continue reading...]

    நவ்யா நாயர் நடுவ���ாக பணியாற்றப் ப��கிறார்

    - 0 comments


    திருமணமாகி, குழந்தையும் பெற்று விட்ட நவ்யா நாயர் புதிய அவதாரம் எடுக்கிறார். டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக அவர் பணியாற்றப் போகிறார்.

    திருமணத்திற்குப் பின்னர் நவ்யா நடிக்கவில்லை. இப்போது குழந்தையும் பெற்று தாயாகி விட்டார். இந்த நிலையில் சின்னத்திரைக்கு ஷிப்ட் ஆகியுள்ளார் நவ்யா. மன்ச் டான்ஸ் டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக அவர் பணியாற்றவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இன்னொரு நடுவராக நடிகரும், நடனக் கலைஞருமான அரவிந்த் பணியாற்றவுள்ளார். மலையாளத்து ஆசியாநெட் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பவுள்ளது.

    இந்த நடன நிகழ்ச்சி சிறார்களுக்கானது. 10 பேர் இதில் போட்டியாளர்களாக பங்கேற்கின்றனர். வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு இது ஒளிபரப்பாகும்.

    இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா சமீபத்தில் நடந்தது. நடிகர் குஞ்சாக்கோ போபன் மற்றும் நடிகை தன்யா மேரி வர்கீஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



    http://tamil-sex-video.blogspot.com




  • http://tamil-sex-video.blogspot.com


  • [Continue reading...]

    தூக்கணாங் குருவ��க்கூடு!

    - 0 comments


    பிரமிக்க வைக்கும் கட்டுமானம்!



    http://mobilesexpicture.blogspot.com




  • http://mobilesexpicture.blogspot.com


  • [Continue reading...]

    Dhanusu

    - 0 comments


    தனுசு :

    சனிபகவான், வரும் 26ம் தேதி சனிக்கிழமை மதியம் 3.27 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இவர் 2011 நவம்பர் 21 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.
    மூலம், பூராடம், மேலும்படிக்க

    http://dinasarinews.blogspot.com




  • http://dinasarinews.blogspot.com


  • [Continue reading...]

    Makaram

    - 0 comments


    மகரம் :

    சனிபகவான், வரும் 26ம் தேதி சனிக்கிழமை மதியம் 3.27 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இவர் 2011 நவம்பர் 21 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.
    உத்திராடம் 2, மேலும்படிக்க

    http://dinasarinews.blogspot.com




  • http://dinasarinews.blogspot.com


  • [Continue reading...]

    Kumbam

    - 0 comments


    கும்பம் :

    சனிபகவான், வரும் 26ம் தேதி சனிக்கிழமை மதியம் 3.27 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இவர் 2011 நவம்பர் 21 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.
    அவிட்டம் 3, மேலும்படிக்க

    http://dinasarinews.blogspot.com




  • http://dinasarinews.blogspot.com


  • [Continue reading...]

    Meenam

    - 0 comments


    மீனம் :

    சனிபகவான், வரும் 26ம் தேதி சனிக்கிழமை மதியம் 3.27 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இவர் 2011 நவம்பர் 21 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.
    பூரட்டாதி 4, மேலும்படிக்க

    http://dinasarinews.blogspot.com




  • http://dinasarinews.blogspot.com


  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger