Sunday 19 October 2014

அதிவேக 20–வது சதம்: தெண்டுல்கரை முந்திய கோலி High speed 20th century Tendulkar before the Kohli

- 0 comments

தர்மசாலாவில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் வீராட் கோலி சதம் அடித்தார். இது அவருக்கு 20வது சதமாகும். ஒட்டுமொத்தமாக 20வது சதம் அடித்த 8வது வீரர் ஆவார்.

கோலி 133 இன்னிங்சில் விளையாடி 20வது சதத்தை அடித்துள்ளார். கிரிக்கெட் சகாப்தமான சச்சின் தெண்டுல்கர் தனது 20வது சதத்தை 197வது இன்னிங்சில் தான் அடித்தார். இந்த வகையில் வீராட் கோலி தெண்டுல்கரை முந்தியுள்ளார்.

[Continue reading...]

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் காஷ்யப் தோல்வி Kashyap loses in Denmark Open semifinals

- 0 comments

டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டென்மார்க்கின் ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் காஷ்யப், சீன வீரரை சந்தித்தார்.

இதில் இந்திய வீரர் காஷ்யப் 1621, 1521 என்ற நேர் செட்டில் தோல்வி கண்டு வெளியேறினார். இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

[Continue reading...]

வெஸ்ட்இண்டீசிடம் ரூ. 400 கோடி நஷ்டஈடு கேட்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு west indies pay compensation of 400 crore ask india cricket board decision

- 0 comments

மும்பை, அக். 19

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்திய சுற்றுப்பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு நாடு திரும்பியது. சம்பள பிரச்சினை தொடர்பாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட மோதலால் 4வது ஒருநாள் போட்டியோடு அந்த அணி வீரர்கள் தங்களது பயணத்தை முடித்துக் கொண்டனர்.

அந்த அணி 5 ஒருநாள் போட்டி, ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டம் மற்றும் 3 டெஸ்டில் இந்தியாவுடன் விளையாட திட்டமிட்டு இருந்தது.

தர்மசாலாவில் நடந்த 4வது ஒருநாள் போட்டியோடு அந்த அணி வீரர்கள் நாடு திரும்பினர். போட்டியை பாதியில் ரத்து செய்ததற்காக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கேட்டு இருந்தது.

வெஸ்ட்இண்டீஸ் வீரர்களின் இந்த செயலால் இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் அதிருப்தி அடைந்து உள்ளது. வெஸ்ட்இண்டீஸ் பயணம் பாதியில் ரத்து செய்யப்பட்டதால் தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் தெரிவித்து இருந்தார்.

ரூ.400 கோடி வரை வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திடம் நஷ்டஈடு கேட்கும் என்று தெரிகிறது. வருகிற 21ந்தேதி ஐதராபாத்தில் நடைபெறும் கிரிக்கெட் வாரிய அவசர செயற்குழுவில் இதுபற்றி முடிவு செய்யப்படும்.

மேலும் வெஸ்ட்இண்டீஸ் அணியுடனான நேரடி போட்டித் தொடரை 5 ஆண்டு நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வாரியத்தின் உறுப்பினர்கள் விரும்புகிறார்கள். இதுபற்றியும் அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

[Continue reading...]

இருமாநில தேர்தலில் காங். வீழ்ந்தது: பாஜகவை மக்கள் அங்கீகரித்து விட்டனர் தமிழிசை பேட்டி two state elections congress The fall of the BJP in tamilisai with people recognizing

- 0 comments

சென்னை, அக்.19

மராட்டியம், அரியானா சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதை தமிழக பா.ஜனதா அலுவலகத்தில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். மாநில தலைவர் டாக்டர் தமிழிசை தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

இதில் தேசிய செயலாளர் எச்.ராஜா, மாவட்ட தலைவர்கள் ஜெய்சங்கர், காளிதாஸ், மற்றும் ஜி.கே.எஸ். உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் டாக்டர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:

மராட்டியம், அரியானா ஆகிய இரு மாநிலங்களிலுமே பா.ஜனதாவை தனிப்பெரும் கட்சியாக மக்கள் அங்கீகரித்து விட்டனர்.

மராட்டியத்தில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் இருந்தாலும் மத்தியில் ஆளும் எங்கள் கூட்டணிதான் வெற்றி பெற்றுள்ளது.

தேர்தல் அறிவித்து கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட பிரிவால் மக்கள் தடுமாற்றம் அடைந்துள்ளனர். அவ்வளவுதான்.

தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பிரசாரம் செய்ய சென்றோம். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. தமிழரான தமிழ்செல்வன் வெற்றி முகத்தில் இருக்கிறார்.

தேர்தல் நடைபெற்ற இருமாநிலங்களிலும் காங்கிரஸ் வீழ்த்தப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் மோடி ஆட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை தமிழகத்திலும் எதிரொலிக்கும். இந்த வெற்றிகள் தொடரும்.

தீபாவளி பரிசாக மக்கள் இந்த வெற்றியை மோடி அரசுக்கு வழங்கி இருக்கிறார்கள். மோடி அரசும் 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் டீசல் லிட்டர் ரூ.3.50 குறைத்து பொருளாதார சீர்திருத்தத்தை தொடங்கி மக்களுக்கு தீபாவளி பரிசை வழங்கி இருக்கிறது.

சென்னை நகரம் ஒருநாள் மழையிலேயே தடுமாறுகிறது. தேங்கி கிடக்கும் தண்ணீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

[Continue reading...]

டீசல் விலைக்குறைப்பு வரவேற்கத்தக்கது: ராமதாஸ் அறிக்கை Diesel cost welcome ramadoss statement

- 0 comments

சென்னை, அக். 19

பா... நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக் குறைந்திருப்பதையடுத்து டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.65 குறைக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் இனி வரும் காலங்களில் டீசல் விலையை விருப்பம் போல நிர்ணயித்துக் கொள்ளும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பது வருத்த மளிக்கிறது.

மத்தியில் எந்தக் கட்சியின் ஆட்சி நடந்தாலும் எரிபொருள் மானியத்தை முழுமையாக ஒழித்துவிட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. ஏற்கனவே பெட்ரோல் மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்கியதன் மூலம் அதற்கு அளிக்கப்பட்டு வந்த மானியத்தை முந்தைய காங்கிரஸ் அரசு ரத்து செய்தது. தொடர்ந்து டீசல் மானியத்தையும் ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், 2009 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கி இரு மாதங்களுக்கு முன்பு வரை மொத்தம் 31 முறை ரூ. 30.10 அளவுக்கு டீசல் விலை உயர்த்தப்பட்டது. இதனாலும், கடந்த சில மாதங்களாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்ததாலும் டீசல் விற்பனையில் ஏற்பட்ட இழப்பு நீங்கி லாபம் கொட்டத் தொடங்கியது. அதன்பயனாகத்தான் டீசல் விலையை 70 மாதங்களில் முதன்முறையாக மத்திய அரசு குறைத்துள்ளது.

அதேவேளையில், டீசலுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தையும் மத்திய அரசு படிப்படியாக குறைத்து விட்டது. 2011ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.18 மானியம் வழங்கப்பட்டுவந்தது. இந்த மானியம் இப்போது முழுமையாக ரத்து செய்யப்பட்டு விட்டது.

இனியும் டீசலுக்கு மானியம் வழங்கக்கூடாது என்று நினைத்ததால் தான் டீசல் மீதான விலைக் கட்டுப்பாட்டை தளர்த்திய மத்திய அரசு, விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடமே ஒப்படைத்திருக்கிறது. இதன் மூலம் டீசல் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான பொறுப்பை தட்டிக் கழித்திருக்கிறது.

டீசல் விலை உச்சத்தில் இருக்கும்போது விலைக் கட்டுப்பாட்டைத் தளர்த்தினால் மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழும் என்பதால், சரியான நேரத்திற்கு காத்திருந்து உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள நேரத்தில் இத்தகைய நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருக்கிறது. இது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கலாம்; ஆனால், நிச்சயமாக மக்கள் நலனுக்கு உகந்த முடிவல்ல.

டீசல் மீதான விலைக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதால் உடனடியாக பாதிப்பு ஏற்படாமல் போகலாம். ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் பட்சத்தில் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும். உதாரணமாக 2008 ஆம் ஆண்டில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிக அதிகபட்சமாக ஒரு பீப்பாய் 147 டாலர் என்ற அளவை எட்டியது. இப்போது மீண்டும் கச்சா எண்ணெய் விலை அந்த அளவுக்கு உயர்ந்தால், இந்தியாவில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.26 வரை அதிகரிக்கும். அவ்வாறு உயர்ந்தால் பாசனத் தேவைக்காக டீசலை நம்பியிருக்கும் விவசாயிகளும், விசைப்படகுகளுக்காக டீசலை நம்பியுள்ள மீனவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரிக்கும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிக மோசமாக பாதிக்கும்.

எனவே, டீசல் விலையை சந்தை நிலவரத்திற்கு ஏற்ற வகையில் உயர்த்திக் கொள்வதற்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இந்த அதிகாரத்தை மத்திய அரசு அதன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டும். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், மக்கள் நலன் கருதி உள்நாட்டில் டீசல் விலையை உயர்த்தாமல் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

[Continue reading...]

வேலூரில் நகை தொழிலாளி வீட்டில் 20 பவுன் கொள்ளை jewelry worker home jewelry robbery

- 0 comments

வேலூர், அக்.19

வேலூர் சைதாப்பேட்டை ஆஸ்பிட்டல் வெங்கடாஜல முதலியார் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார்(55). நகை செய்யும் தொழிலாளி. இவரது வீட்டில் இன்று அதிகாலை 2 மணியளவில மர்ம நபர்கள் புகுந்துள்ளனர்.

பின்னர் பீரோவை உடைத்து அதிலிருந்த 20 பவுன் நகை, 30 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து ஜெயக்குமார் வடக்கு போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து டிஎஸ்பி பன்னீர்செல்வம், இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப்இன்ஸ்பெக்டர் ரீனா ஆகியோர் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

[Continue reading...]

திட்டக்குடி அருகே லாரி மீது கார் மோதல்: பெண் உள்பட 3 பேர் காயம் Thittakudi near accident 3 people injured

- 0 comments

திட்டக்குடி, அக்.19

கன்னியாகுமரி மாவட்டம் ஆனந்தமேடு பகுதியை சேர்ந்தவர் உமாநாத் (வயது38). நேற்று இவரும் இவரது உறவினர் சந்தோஷ் என்பவரின் மனைவி தேவஸ்ரீ (34) மற்றும் இவரது வயது பெண் குழந்தை ஸ்ரீதிகா ஆகிய 3 பேரும் ஒரு காரில் சென்னை புறப்பட்டு வந்தனர். காரை உமாநாத் ஓட்டி வந்தார்.

திட்டக்குடியை அடுத்த ராமநத்தம் அருகே எழுத்தூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இதில் காரை ஓட்டி சென்ற உமாநாத் மற்றும் காரில் பயணம் செய்த தேவஸ்ரீ, ஸ்ரீதிகா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

[Continue reading...]

நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு முகாம்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் voter list name added apply nilgiris district

- 0 comments

ஊட்டி, அக். 19

நீலகிரி மாவட்ட தனி வட்டாட்சியர் (தேர்தல்கள்) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு அனைத்து வாக்குச் சாவடிகள் மற்றும் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் சங்கரால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வாக்காளர் பட்டியல் 2 நகல்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்த்தல், நீக்குதல், ஏற்கனவே பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்கள் விவரத்தில் தவறுகள் இருப்பின் திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு 15.10.2014 முதல் 10.11.2014 தேதி வரை தொடர்புடைய அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் வரும் 30.10.2014 அன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் சமயம் வாக்காளர் பட்டியலிலுள்ள பெயர்கள் வாசிக்கப்படும். அத்துடன் வரும் 26ந் தேதி மற்றும் 2ந் தேதி ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள் நன்கு பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6ல் விண்ணப்பிக்க வேண்டும். வரும் 2015ம் வருடம் ஜனவரி 1ந் தேதி 18 வயது பூர்த்தி அடையும், அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

பெயர் விடுபட்டவர்கள், வேறு சட்டசபை தொகுதிக்கு மாறியவர்களும் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 25 வயது உடையவர்கள், விண்ணப்பத்துடன், பிறந்த தேதிக்கான சான்று இருப்பிடச் சான்று உள்ளிட்டவற்றை இணைக்க வேண்டும். 25 வயதுக்கு மேற்பட்டவர்கள், இருப்பிடச் சான்றுடன், இதற்கு முன் குடியிருந்த முகவரி, ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, திருத்தங்கள் செய்ய படிவம் 8, முகவரி மாற்ற படிவம் 8 ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.

விண்ணப்பத்தில் வாக்காளர்கள் செல்போன் எண், மெயில் உள்ளிட்ட வற்றை குறிப்பிடு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நேரில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் ஷ்ஷ்ஷ்.மீறீமீநீtவீஷீஸீs.tஸீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் தற்போது செயல்பட்டுவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம். அனைத்து விண்ணப் பங்களும் பரிசீலிக்கப்பட்டு 2015 ஜனவரி 5ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

மேற்கண்டவாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

[Continue reading...]

இஸ்ரேல் பிரதமரை கடத்த சதாம் உசேன் திட்டமிட்டார்: புதிய தகவல்கள் new information Saddam Hussein was plotting to kidnap Israeli prime minister

- 0 comments

ஜெருசலேம், அக். 19

ஈராக் முன்னாள் அதிபராகவும் சர்வாதிகாரியாகவும் இருந்தவர் சதாம்உசேன். இவர் அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். இவர் அதிபராக இருந்தபோது கடந்த 1981ம் ஆண்டில் ஈராக் அணு உலை மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசி அழித்தது.

அதற்கு பழி வாங்க சதாம் உசேன் திட்டமிட்டார். இச்சம்பவத்தின் போது இஸ்ரேல் பிரதமராக மெனாசெம் பிகின் பதவி வகித்தார்.

இவரை கடத்தி பாக்தாத் கொண்டு வர சதாம்உசேன் திட்டமிட்டார். மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த ஒரு தலைவர் வற்புறுத்தலை தொடர்ந்து அந்த திட்டம் கைவிடப்பட்டது.

இந்த தகவலை சதாம் உசேனின் வக்கீல் பாடீ ஆரிப்தான் எழுதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளார். அப்புத்தகம் விரைவில் வெளியாக உள்ளது.


[Continue reading...]

பாகிஸ்தானில் அரசியலில் நுழைந்த பெனாசிர் மகனுக்கு மக்கள் ஆதரவு Benazir son entered politics to support the people of Pakistan

- 0 comments

கராச்சி, அக். 19

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் மற்றும் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தம்பதியின் மகன் பிலாவல் பூட்டோ. பெனாசிர் கொலை செய்யப்பட்ட பிறகு பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரானார்.

பாகிஸ்தான் அரசியல் சட்டப்படி 25 வயது நிரம்பியவர்கள்தான் தேர்தலில் போட்டியிட முடியும். எனவே அவர் அதிகார பூர்வமாக அரசியலில் ஈடுபடாமல் இருந்தார்.

இதற்கிடையே தனது 26வது வயது தொடங்கியதும் தீவிர அரசியலில் குதித்தார். அதை தொடர்ந்து முதன் முறையாக கராச்சியில் தனது தலைமையில் பொதுக் கூட்டத்தை நேற்று நடத்தினார்.

அதில் 50 ஆயிரம் பொது மக்கள் திரண்டு பிலாவலுக்கு ஆதரவு தெரிவித்தனர். இவரது பொதுக்கூட்டம் நடைபெற்றதை தொடர்ந்து கராச்சி நகருக்கு சிந்து மாகாண அரசு பொது விடுமுறை அறிவித்து இருந்தது.

பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பொதுக்கூட்டத்தில் பங்கேற்க குறிப்பிட்ட நேரத்தில் ஹெலிகாப்டர் மூலம் பிலாவல் வந்து சேர்ந்தார். அவரது தந்தை ஆசிப்அலி சர்தாரியும் சிறிது நேரத்தில் வந்தார்.

தனது அரசியல் பயணம் குறித்து டுவிட்டரில் பிலாவல் பூட்டோ குறிப்பிட்டுள்ளார். அதில், ''எனது மக்களுக்காகவும், கட்சி தியாகிகளுக்காகவும் எனது தாயாருக்காகவும் அரசியலில் இறங்கியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


[Continue reading...]

மராட்டிய முன்னாள் முதல்–மந்திரி நாராயண ரானே தோல்வி assembly election maharashtra ex chief minister narayan rane failure

- 0 comments

மும்பை, அக். 19

மராட்டிய முன்னாள் முதல்மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான நாராயண ரானே குடால் தொகுதியில் போட்டியிட்டார். இதில் நாராயண ரானே அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார். சிவசேனா வேட்பாளர் வைபவ் நாயக் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரானேயை தோற்கடித்தார்.

மாநிலத்தில் உள்ள பெரும்பாலான காங்கிரஸ் மந்திரிகள் பின்தங்கி உள்ளனர். முன்னாள் உள்துறை மந்திரி ஆர்.ஆர்.பாட்டில் பின்தங்கி உள்ளார்.

இதே போல அரியானாவில் இந்திய தேசிய லோக்தளம் கட்சி தலைவரும், முன்னாள் முதல்மந்திரி ஒம்பிரகாஷ் சவுதாலாவின் பேரனுமான துஷ்யந்த் சவுதாலா பின்தங்கி இருக்கிறார்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger