Saturday 17 January 2015

எல்லைப்பாதுகாப்பு படை வீர்ர்களின் சபதம்

- 0 comments

இது எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களிடமிருந்து வரும் சிறிய கருத்து ஆகும்.தயவு செய்து இதனை சமூக வலை தளங்களில் பகிரவும்.படிப்பறிவில்லாத மக்களுக்கும் எடுத்து செல்லவும்.

 

ஊரெல்லாம் பொங்கல் பொங்கும் இத்தருணத்தில் நாடோரம் காவல் காக்கும் எல்லைப்பாதுகாப்பு படையில் இருந்து ஒரு வேண்டுதல் என் தமிழக மக்களுக்கு ..

 

நாட்டின் எல்லை பகுதியை காவல் காக்க அனுப்பி வைத்த நீங்கள் நாட்டையும் அதன் மண்ணையும் விற்றுக்கொல்வது (எழுத்துப் பிழை அல்ல) வேதனையை தருகிறது.

நமது உயிராதாரமான மண்ணை நிலத்தை தெரிந்தோ தெரியாமலோ நாமும் ,தெரிந்தே ஆளும் அரசாங்கங்களும் அழித்து வருகிறோம்.

 

மீத்தேன்,அணு உலை என்று அனைத்து ஆபத்துகளையும் பாகுபாடில்லாமால் தேசிய கட்சிகள் தமிழகத்தில் சேர்த்து கொண்டிருக்க நாமும் நமது பங்கிற்கு ரியல் எஸ்டேட் பேராசையில் நமது விளை நிலங்களை விற்று தவறு செய்கின்றோம்.

 

நாளைய நாட்களில் நமது வீடுகளில் சமைத்த அரிசியை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துதான் சாப்பிட வேண்டியதாக இருக்கும்.அந்த நிலையில் அவர்களை மீறி தெற்காசியாவின் மாபெரும் நாடான இந்தியா ஒரு துரும்பை கூட கிள்ள இயலாது.

 

ஆயிரம் சாப்ட்வேர் இஞ்சினியர்களை உருவாக்குவது எளிது.ஆனால் ஓரடி விளை நிலத்தை உருவாக்குவது அத்தனை எளிதல்ல.நாம நமது அவசியத்துக்கு மீறி வாங்கி குவிக்கும் ஒவ்வொரு விளை நிலமும் நமது குழந்தைகளுக்கான சுடுகாடு என்பதை உணர்வோமா?

 

பன்னாட்டு கம்பெனிகளுக்கு உள் நாட்டில் நிலம் கொடுத்து ஆள வைக்கும் அரசுகள் ,கட்சிகள், மக்கள் அனைவருக்கும் எங்களின் சிறிய கேள்வி என்னவென்றால் அப்புறம் எதற்காக மண்ணை காப்பாற்ற எங்களை எல்லையில் நிற்க வைத்துள்ளீர்கள்?

 

இந்த பொங்கல் திரு நாளில் ஒரு சபதம் எடுப்போம் .....விளை நிலங்களை விற்க மாட்டோம் எனவும் வாங்க மாட்டோம் எனவும். நன்றி .வணக்கம்.

 

விற்பதற்க்கும் தொலைப்பதற்க்கும் விளை நிலங்கள் வெறும் பணமல்ல ...அது நமது வாழ்வாகும் . தயவு செய்து பகிர மறக்காதீர்கள் .விவாதியுங்கள்.விதையுங்கள்.

 

[Continue reading...]

பெற்றோர்கள் கவனத்திற்கு Parenting Tips!

- 0 comments

பள்ளியில் சேர்த்த பிறகு , உங்கள் குழந்தை , அது ஆணோ , பெண்ணோ , எந்தக் குழந்தையாக இருப்பினும் , பள்ளியிலிருந்து வந்த சிறிது நேரத்தில் , மெதுவாக , அன்று காலையிலிருந்து , நடந்த விஷயங்கள் அனைத்தையும் , விளையாட்டு போல கேட்டு அறிந்து கொள்ளுங்கள் .

 

நீங்கள் வேலைக்குச் செல்பவராக இருந்தாலும் , வந்த பிறகு , ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி , இதைக் கண்டிப்பாக கேட்டு அறியவும் .

 

ஒவ்வொரு நாளும் , குழந்தையிடம் , "இன்னிக்கு போலவே , தினமும் , நடந்தது எல்லாத்தையும் , நீ என்கிட்டே சொல்லிடணும்...சரியா , எதுக்கும் பயமே வேண்டாம் " என்று சொல்லிக்கொண்டு இருந்தால் தான் , அவர்கள் எதையும் தைரியமாகச் சொல்வார்கள்

[Continue reading...]

குழந்தைக்கு கொடுக்க வேண்டியவைகள்....!! Childrens Tips

- 0 comments

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக்

கொடுக்க வேண்டியவைகள்....!!

1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும்

அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க

வேண்டும்.

 

2. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள்

முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத்

தவிர்க்க வேண்டும்.

 

3. குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய

கணவன் என்றோ,

மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில்

பதிய வைப்பதோ தவறு.

 

4. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள்

பார்வை அவர்கள்

மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும்

அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும்

கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால்

குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல்

துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.

 

5. உங்கள் குழந்தையால் சரியாக

பொருந்தியிருக்க முடியாத

நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள்

அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள்.

 

6. சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய

ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும்போது

பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக்

கேட்டு அவர்களின்

பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.

 

7. வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும்

அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள்.

இல்லையென்றால், சமுதாயம்

அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக்

கற்றுக் கொடுத்துவிடும்.

 

8.குழந்தைகளுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு முன்பாக

நாம் அறிந்து கொண்டு அவர்கள்

கேட்பதற்கு முன்பாக நாமே வாங்கிக்

கொடுத்துவிட வேண்டும்.

 

9. தொலைக்காட்சி சேனல்கள் மற்றும்

இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற

சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம்

செயலிழக்கச்

செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக்

கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள்

அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும்

இதை செய்து வைக்க

அறிவுருத்துவது நல்லது.

 

10. 3 மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள்

உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய

கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப்

பகுதிகளை பிறர் யாரும்

தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என

எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும்

அந்த வேலையை செய்யக் கூடாது. ஏனென்றால்,

அவசியமற்ற உதவிகளை செய்யும்

போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது

 

11. குழந்தையை அச்சுறுத்தக் கூடிய

அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக்

கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில்

இசை, படங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களும்

அடங்கும்.

 

12. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது உங்கள்

குழந்தையின் தனித்துவத்துத்தை அல்லது தனித்

திறமையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள்.

 

13. குழந்தை ஒருவரைப்

பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே,

அதை கவனிக்கத் தொடங்குங்கள்.

கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம்.

நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள்

என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.

மேலே சொன்னது யாவும் ஞாபகம் இருக்கட்டும்;

அது நாம் பெற்றோராக இருந்தாலும்

சரி அல்லது பெற்றோராகப் போகிறவராக

இருந்தாலும் சரி!

 

நண்பர்கள் இதை விரும்பினால் ஷேர் செய்யுங்கள்.

 

****************************************

 

[Continue reading...]

உடல் எடையை குறைக்கும் முறை - How to reduce body weight ?

- 0 comments

உடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:

 

உடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை:

 

5 நிமிடங்களில் தயாராகும் இந்தச் சாறு 7 பவுண்டுகள் (மூன்றரை கிலோ) வரை குறைக்கும். உடல் எடையைக் குறைக்க பட்டினியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

 

தேவை:

 

1 கைப்பிடி பார்ஸ்லி அல்லது மல்லி இலை

1 எலுமிச்சைப்பழம்

1 கப் தண்ணீர்

 

செய்முறை:

 

மல்லி இலை அல்லது பார்ஸ்லி இலையை நன்றாக கழுவி தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறுடன் மிக்ஸியில் அடித்து சலித்து குடிக்கவும்.

 

சாப்பிடும் முறை:

 

இந்தச் சாற்று காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும். இடைவிடாமல் 5 நாட்கள் குடித்த பிறகு 10 நாட்கள் இடைவெளி விடவும். இந்தச் சாறு உடலில் உள்ள கொழுப்பை எரித்து உடலுக்கு வைட்டமின்களையும், மினரல்களையும் அள்ளித்தரும்.

 

மல்லி அல்லது பார்ஸ்லி இலைகள் ஜீரணத்தை மேம்படுத்தி உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றுகிறது. 5 நாட்களில் 6 பவுண்டுகள் வரை எடை குறையும். உங்களுக்கு இந்தச் சாற்றை குடிக்க சலிப்பு ஏற்படும்போது தண்ணீருக்கு பதிலாக மோரை உபயோகப்படுத்தி சிறிது இந்துப்புவை சேர்த்து கொள்ளலாம். மோரும் ஜீரணத்திற்க்கு ஒரு நல்ல மருந்து.

 

அதிகமாக சாப்பாடு சாப்பிட்டால் பலன் கிடைக்காது. எனவே குறைந்த அளவில் சத்தான உணவுகளை சாப்பிட்டு பலன் பெறுங்கள். இந்த முறையில் உடல் எடைக்குறைப்பில் நல்ல முன்னேற்றம் காணலாம்

[Continue reading...]

உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா? Simcard Mobile number find method

- 0 comments

உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா?

 

"உங்கள் மொபைல் எண் திரையில் தோன்ற அழுத்துங்கள்"

 

Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

 

Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#

 

Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#

 

Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

 

Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#

 

Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

 

Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

 

Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#

 

Tata DoComo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580#

 

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger