Saturday 13 August 2011

ஊழிக்கூத்து!

- 0 comments


இது எனக்குப் பிடித்த எனது பதிவுகளில் ஒன்று!ஒரு நாள் குளிக்கும்போது மனதில் வெடித்துச் சிதறிய வார்த்தைகள்!இன்று ஒரு மீள் பதிவாக்க மனம் விழைகிறது-----
---------------------
பிரம்மாண்டப் பிரபஞ்ச மௌனத்தின் பேரொலி

அண்ட பேரண்ட ஆதாரப் பெருஞ்சூட்டின் நடுக்கும் குளிர்

விரிந்து நிற்கும் மயானப் பிண வாடையின் சுகந்தம்

எல்லையற்ற ஆகாசக் கும்மிருட்டின் கூசும் ஒளி

நடக்கட்டும் நாடகம்

அடிக்கட்டும் தாரை தப்பட்டை

வெடிக்கட்டும் தரை பிளந்து

துடிக்கட்டும் பிறவா உயிர்

தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!

அமைதி!அமைதி!அமைதி!


ஒற்றைக் குருசைக் கையில் ஏந்திவா!

நெற்றி நிறையத் திருநீறு பூசி வா!

திருக் கபால மேட்டிலே திருமண் இட்டு வா!

தொப்பி அணிந்து திசை நோக்கித் தொழுது வா!

மனித நேயம் தொலை!

மதம் பிடித்து அலை!

துணிந்து செய் கொலை!

இதுவே இன்றுன் நிலை!

தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!

அமைதி!அமைதி!அமைதி!



நாடகமே உலகம்

நாமெல்லாம் நடிகர்கள்

எழுதியவன் யார்?

இயக்குபவன் யார்?

யாருக்கும் விடை தெரியாக் கேள்விகள்

நாடகமே கொஞ்ச நேரம்

வேடம் கலைத்த பின் போகுமிடம் ஒன்றன்றோ

பிரிவினையின் உஷ்ணத்தில்

குளிர் காய எண்ணும் குறுமதியாளர்கள்

இல்லாமல் போகட்டும்.


தொடங்கட்டும் ஊழிக் கூத்து!

தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!

http://sex-story7.blogspot.com




  • http://sex-story7.blogspot.com


  • [Continue reading...]

    நேதாஜியும் பத்ம���ாப ஸ்வாமியும்!

    - 0 comments


    நேதாஜி அவர்கள் சிறிது காலம் திருவனந்தபுரம் பத்மனாபஸ்வாமி கோவிலில் மறைந்திருந்தாராம்!இப்படியொரு சந்தேகம் அக்கால ஆங்கிலேய அரசுக்கு எற்பட்டது!

    1941 இல் ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு திரட்ட வெளிநாடு சென்ற நேதாஜி,ரகசியமாகத் திரும்பி வந்து மாறு வேடத்தில் பத்மனாபஸ்வாமி கோவிலில் இருப்பதாக ஒரு அநாமதேயக் கடிதம் அப்போதைய மதராஸ் ராஜதானியின் ஆங்கிலேய நிர்வாகிக்குக் கிடைக்கவும்,லெஃப்ட்.கர்னல் ஜி.பி.மர்ஃபி என்ற அதிகாரி,திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவானான சர்.சி.பி.ராமசாமி ஐயரவர்களுக்குக் கடிதம் எழுதிக் கோவிலையும் அதன் சுற்றுப்புரத்தையும் கண்காணிக்கச் சொன்னாராம்.--(அங்கேயும் சிபியா??!!)அவ்வாறே செய்யப்பட்டதாகவும்,ஆனால் தடயமேதும் கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது.

    இத்தனை ஆண்டுகளாக மிகப் பெரிய புதையலைக் காப்பாற்றி வந்த பத்மனாபஸ்வாமி, சில நாட்கள் நேதாஜியைக் காப்பாற்றியிருக்க மாட்டாரா என்ன?!

    புர்ஜ் காலிஃபாவில் ரமலான் நோன்பு
    ---------------------------------

    ஒரே கட்டிடத்தில் குடியிருப்பவர்களுக்கு நோன்பு நேரம் வெவ்வேறாக அமைய முடியுமா?துபாய் புர்ஜ் கலிஃபாவில் உள்ளவர்களுக்கு அவ்வாறு நேர்ந்திருக்கிறது!160 ஆவது தளத்தில் வசிப்பவர்களுக்கு சூரியோதயம் முன்பாகவும்,மறைவு சிறிது நேரம் கழித்தும் தெரிவதால் அவர்களுக்கு நோன்பு நேரங்கள் மாற்றப் பட்டிருக்கின்றன.80-150 தளங்களில் வசிப்பவர்கள் தங்கள் மாலை இஃப்தார் உணவை இரண்டு நிமிடம் கழித்தும்,151-160 தளங்களில் வசிப்பவர்கள் ,மூன்று நிமிடம் கழித்தும் உண்ணுமாறுநேர்ந்திருக்கிறது!

    (நன்றி:இந்தியாவின் நேரங்கள்;8-8-2011)


    http://sex-story7.blogspot.com




  • http://sex-story7.blogspot.com


  • [Continue reading...]

    ஆபீசருக்கு சல்ய��ட்!

    - 0 comments


    சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு குளிர்பானக் கடை அதிபருக்கு, கலப்பட பனிப்பாகு விற்றதற்காக ஆறுமாத சிறை தண்டனையும் 5000 ருபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது நீதி மன்றம்.(பனிப்பாகு-icecream)

    இரு மாதங்களுக்கு முன் உணவு ஆய்வாளர் ஒருவர்(நம்ம ஆபீசரின் பாணியில்) திடீர் சோதன நடத்தி இக்கலப்படத்தைக் கண்டு பிடித்தார்.சட்டப்படி,பனிப்பாகில்,பால் கொழுப்பு 10%க்குக் குறையாமலும்,பால் புரதம்3.5%க்குக் குறையாமலும் இருக்க வேண்டும்.அக்கடையில் விற்கப்பட்ட பனிப்பாகில் பால் கொழுப்பு 4%க்கும் குறைவாக இருந்தது.ஒரு வியாபாரி கலப்படத்துக்காகத் தண்டனை பெறுவது இது நான்காவது முறையாம்!

    மக்கள்நல்வாழ்வுத்துறை இயக்குனர் அவர்கள் கலப்படம் பற்றிக் கூறுகையில்"நகரில் விற்பனை செய்யப்படும் பால் மற்றும் பால்பொருட்களில் குறைந்த பட்சம் 80% கலப்படம் செய்யப்பட்டவையாகவே இருக்கலாம்.மக்களுக்கு அதிகம் விழிப்புணர்வு தேவை.சந்தேகம் ஏற்படும்போது உணவு ஆய்வாளர்களிடம் சோதனை நடத்தச்சொல்லலாம்.தாங்களே கூட மாதிரியை அரசு சோதனைச் சாலைக்கு அனுப்பிச் சோதனை செய்யச் சொல்லலாம்."என்று சொல்லியிருக்கிறார்.

    நம்ம ஆபீசர் வழியில்,நடவடிக்கைகள் வேகம் பிடித்து விட்டன.

    வாங்க!பதிவர்கள் அனைவரும் சேர்ந்து செய்வோம் நம்ம 'உணவு உலகம்'ஆபீசருக்கு

    சல்யூட்!



    http://sex-story7.blogspot.com




  • http://sex-story7.blogspot.com


  • [Continue reading...]

    என்னதான் சொன்னா���்?!

    - 0 comments


    குப்பு என்கிற குப்புசாமிக்கும்,சுப்பு என்கிற சுப்புலக்ஷ்மிக்கும் வயது 12.
    இருவரும் நண்பர்கள் என்பதையும் தாண்டிக் காதலர்கள் என உணர்ந்தார்கள்!
    (எல்லாம் சினிமாவும் டி.வி.யும் செய்கின்ற கோலம்)

    குப்பு, சுப்புவின் அப்பாவிடம் சென்றான்.சொன்னான் –
    "மாமா!நானும் சுப்புவும் காதலிக்கிறோம்.கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறோம்.எஙளுக்குக் கல்யாணம் செய்து வையுங்கள்!"

    அவருக்குச் சிரிப்பு வந்தது.கேட்டார்"உங்கள் இருவருக்கும் வயது 12தான் ஆகிறது.எங்கு வசிப்பீர்கள்?"

    "உங்கள் வீடுதான் பெரியது,மாமா.இதுதான் சுப்புவுக்கு சௌகர்யம்.எனவே இங்குதான் வசிப்போம்".

    அவர் சிரித்துக் கொண்டே கேட்டார்"அது சரி.செலவுக்கு என்ன செய்வீர்கள்?வேலைக்குப் போகும் வயதாகவில்லையே?"

    குப்பு சொன்னான்"எனக்குப் பாக்கெட் பணம் அப்பா தருகிறார் .ஜென்னிக்கு நீங்கள் தருகிறீர்கள்.இங்கேயே சாப்பிட்டுக் கொள்வோம்.இது போதாதா?"

    அவன் பதில்களைக் கேட்டு ஆச்சரியமடைந்த அவர் கேட்டார்."எல்லாவற்றையும் யோசித்து விட்டீர்கள்.உங்களுக்குக் குழந்தைகள் பிறந்தால் என்ன செய்வீர்கள்?"

    அவன் பதில் சொன்னான் ………

    .......................

    அதைக்கேட்ட அவர் அதிர்ந்து போனார்!

    அந்தப் பதிலை அடிக்க என் கணினி மறுத்து விட்டது.

    மடிக்கணினி இல்லைதான்.ஆனாலும் மடியான கணினி!

    சரி வேறு முடிவு சொல்லலாம் என யோசித்தேன் ...
    ...........................


    அதையும் ஏற்றுக் கொள்ளக் கணினி மறுத்துவிட்டது.

    என் செய்வேன்?!
    மன்னியுங்கள்!
    நீங்களே உங்களுக்குத் தோன்றிய முடிவை எடுத்துக் கொள்ளுங்கள்!
    அதை தயவு செய்து பின்னூட்டத்தில் சொல்லாதீர்கள்!!
    சென்சார் செய்து விடுவேன்!!!

    http://sex-story7.blogspot.com




  • http://sex-story7.blogspot.com


  • [Continue reading...]

    நான் பேச நினைப்ப���ெல்லாம்

    - 0 comments


    (எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )

    http://sex-story7.blogspot.com




  • http://sex-story7.blogspot.com



  • [Continue reading...]

    மருத்துவர்கள் உ��்களை எப்படியெல்���ாம் சுரண்டுகிறார்கள்?

    - 0 comments



    மருத்துவர்களுக்குநம்மிடையே எப்போதும் தனி மதிப்பு உண்டு.உயிர் காக்கும் கடவுள் அவர்கள்.பேராசையும்சுயநலமும் பெருகி விட்ட இன்றைய சூழலில் அவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? பணம்சம்பாதிக்க என்னென்ன வித்தைகளை கையாளுகிறார்கள்? பத்ம பூஷண் விருது பெற்ற  பேராசிரியபுகழ்பெற்றர் பி.எம்.ஹெக்டேவின் பகிர்வை நண்பர் ஒருவர் இ-மெயிலில் அனுப்பியுள்ளார்.மருத்துவர்கள்,மருத்துவமனைகளுடன்சாட் செய்து தான் அறிந்து கொண்ட்தை தருகிறார்.

    1.      பரிசோதனைகளில்40-60 சதவீத கமிஷன்.
                                        உடல்நிலைசரியில்லாமல் சென்றவுடன் ரத்தம்,சிறுநீர் பரிசோதனை,ஸ்கேன் செய்ய வைப்பதில் மட்டும்மேற்கண்ட தொகை.500 ரூபாய் பரிசோதனைக்கு கொடுத்தால் பாதி மருத்துவருக்குசென்றுவிடும்.இதில் அவசியமானதும் உண்டு,சில நேரங்களில் கமிஷனுக்காக தேவையில்லாதடெஸ்டுகளும் இருக்கும்.

    2.      பரிந்துரைசெய்வதில் 30-40 சதவீதம்.
                                   சில நேரங்களில்சிறப்பு மருத்துவர்களுக்கு பரிந்துரை செய்வார்கள்.உதாரணமாக தைராய்டு தொடர்பானநோயென்றால் அதற்கான மருத்துவருக்கு பரிந்துரைத்தால் ஸ்பெஷலிஸ்ட்டிடம் நீங்கள்செலவு செய்யும் பணத்தில் அனுப்பி வைக்கும் மருத்துவருக்கு 30-40 சதவீதம் வந்துசேர்ந்துவிடும்.

    3.      மருத்துவமனைகட்டணத்தில் 30-40 சதவீதம்.

                                         மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும்போது உங்களிடம் வசூல் செய்யும்கட்டணங்களில் மேற்கண்ட தொகை குறிப்பிட்ட மருத்துவருக்கு கிடைக்கும்.

    4.      நெஞ்சுவலிஎன்று போனால்,

                                          சாதாரணவலியாக இருக்கும்.அனைத்து பரிசோதனை,சிறப்பு மருத்துவர்கள் அழைப்பது என்று பணம் பிடுங்குவது.நான்குநாட்களுக்கு அட்மிட் செய்து கறந்து விடுவார்கள்.

    மேலும் அவசரசிகிச்சை பிரிவில் அட்மிட் செய்து விடுவார்கள்.ஆனால் சுத்தமில்லாத ,விஷயம் தெரியாதபத்தாம் வகுப்பு படித்தவன் நர்சிங் வேலை செய்வார்கள்.குறைந்த சம்பள்த்திற்குபணியாட்கள் வைத்துக்கொள்வதில் லாபம்.தேவையில்லாமல் சிசேரியன் ஆபரேஷன் செய்வது,சினிமாவில் வருவது போல பிணத்திற்கு மருத்துவம் பார்ப்பது ,விளம்பரம் கொடுத்துகாஸ்மெடிக் சர்ஜரி செய்வது,பணத்திற்காக பெரிய மருத்துவமனைகளுக்கு பரிந்துரைப்பதுபோன்றவை மற்ற வழிகள்.

                                     மருந்துகடை கமிஷனை விட்டுவிட்டார் போலதோன்றுகிறது. சேவை மனப்பான்மையுள்ள நல்ல மருத்துவர்களும் இருக்கத்தான்செய்கிறார்கள்.இப்போது படித்து முடித்து வந்தவுடன் நிறைய கடன்வாங்கி நர்சிங்ஹோம்கட்டி விடுகிறார்கள்.கடனை அடைக்க அப்பாவிகள் கிடைத்து விடுகிறார்கள்.ஊழலில்எத்தனையோ வகை இருக்கிறது .அதில் இது ஒரு வகை.

                                      இருபதுரூபாய்க்கு,முப்பது ரூபாய்க்கு கிராமங்களில் சென்று மருத்துவம் செய்யும் எளியமருத்துவர்களும் இருக்கிறார்கள்.நல்ல டாக்டர்கள் கிடைத்துவிட்டால் நீங்கள்அதிர்ஷ்டசாலி!



    http://tamil-sex-video.blogspot.com




  • http://tamil-sex-video.blogspot.com


  • [Continue reading...]

    சமச்சீர் கல்விய��ம் சமச்சீரற்ற மக்களும்

    - 0 comments


                                      ஈரோடுஆட்சியராக இருந்த டாக்டர் ஆனந்தகுமார் I A S  தனது மகளை அரசுப் பள்ளியில் சேர்த்த போதுநண்பன் கூறியது,"இதுதான் உண்மையான சமச்சீர் கல்வி.வசதிபடைத்தவர்களும்,அதிகாரிகளும் தமது குழந்தைகளை அரசுப்பள்ளியில் படிக்க வைக்கும்அளவுக்கு பள்ளிகளின் தரம் இருக்க வேண்டும்."

                                      உச்ச நீதிமன்றதீர்ப்பின் மூலம் பாட்த்திட்டங்களில் பிரச்சினை தீர்ந்து விட்ட்து.முதுகு வளைந்துபுத்தகம் சுமக்கும் குழந்தைகள் இனி இருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது.அது ஒருசந்தோஷம்.இப்போது மெட்ரிகுலேஷன் பள்ளிகள்தான் விதவிதமான யோசனையில்இருக்கின்றன.வியாபாரம் படுத்துவிடுமோ என்ற கவலை அவர்களை தொற்றிக்கொண்டிருக்கிறது.

                                      ஊருக்கு ஊர் மெட்ரிகுலேஷன் பள்ளிகள்புற்றீசல் போல முளைக்க நமது பெற்றோர்களே காரணமாக இருந்தார்கள்.பலரும் சுய தொழிலாகஎங்கே பார்த்தாலும் ஒரு கொட்டகை போட்டு பள்ளிகளை திறந்தார்கள்.கிராமப்புற மக்கள்அவர்களுக்கு பெரும் வரவேற்பு அளித்தார்கள்.ஆங்கிலத்தில் படித்தால் தனது மகன் பெரியஆளாக வந்துவிடுவான் என்ற எண்ணம்.

                                       இருபதுவருடங்களுக்கு மேலாக எனது நண்பர் ஒருவர் மெட்ர்குலேஷன் பள்ளி நட்த்திவருகிறார்.ஆரம்பத்தில் பள்ளி வீட்டில் நடைபெற்று வந்த்து.கிட்ட்த்தட்டகிராம்ம்.பெற்றோர்கள் ரொம்ப கஷ்டப்பட்டு ஆங்கிலப்பள்ளீக்கு அனுப்பினார்கள்.கட்டணம்கட்டுவதற்கு பலருக்கு வசதியில்லை.கூலித்தொழிலாளர்கள்.பல குழந்தைகளுக்கு கட்டண பாக்கிஇருக்கும்.நண்பர் வீடுவீடாக் சென்று வசூல் செய்வார்.நூறு ரூபாய்இருக்கிறது.மிச்சத்தை அடுத்த மாதம் தருகிறேன் என்பார்கள்.

                                        மெட்ரிகுலேஷன் பள்ளியில் பாடங்களும் பல வகையாக இருந்தன.மிக்க் குறைந்தகட்டணம் வாங்கும் கிராமப்புற பள்ளிகளுக்கு சில பதிப்பகங்கள்,நகர்ப்புறபள்ளிகளுக்கு சில பதிப்பகங்கள் என்று பலவிதம்.ஒவ்வொரு பள்ளீயிலும் வேறுவேறுபுத்தகங்கள்.பாட்த்திட்டங்கள்.பணம் கொழிக்கும்வியாபாரம்.

                                          சமச்சீர்கல்வி பற்றிய அவசியத்தை தூண்டியது மெட்ரிகுலேஷன் பள்ளிகள்தான்.ஓரியண்டல்,ஆங்கிலோஇந்தியன் பள்ளிகள் வழக்கம்போல இருந்தன.ஆனால் இந்த பள்ளிகள் வளர காரணமாக இருந்த்துமக்களின் மனோபாவம்தான்.முன்பே சொன்னது போல தனது மகன் அல்லது மகள் பெரிய படிப்புபடிப்பதாக அவர்களது எண்ணம்.சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்குமூன்று வயது குழந்தையை பஸ் ஏற்றி அனுப்பினார்கள்.

                                         அரசுப் பள்ளியில் படித்து,வசதிஇல்லாத வீட்டு குழந்தைகளும் மருத்துவர் ஆகத்தான் செய்தார்கள்.இருந்தும் பல்வேறுமனித உரிமை மீறல்களை செய்து கொண்டிருக்கும் பள்ளிகளில் லட்சக்கணக்கில் செலவுசெய்து படிக்க வைக்கிறார்கள்.பெற்றோர்கள் குழந்தைகள் மன நிலையையோ,மகிழ்ச்சியையோபொருட்படுத்துவதே இல்லை.

                                        கல்வியில்கொண்டுவர வேண்டிய மாற்றங்கள் சமச்சீர் கல்வியோடு முடிவுக்கு வந்து விடாது.இதுதுவக்கம்தான்.வேலை பெறுவதற்காக மட்டுமே கல்வி என்ற நிலை மாறி தனிமனிதனையும்,தேசத்தையும் வலுப்படுத்த,வளரச்செய்ய கல்வி என்ற நிலைக்கு வரவேண்டும்.இன்னும்கடக்க வேண்டிய தூரம் அதிகம்.
    படிக்காதவர்களுக்காகமுந்தைய பதிவு.



    http://tamil-sex-video.blogspot.com




  • http://tamil-sex-video.blogspot.com


  • [Continue reading...]

    தாய்மார்களே நிய��யமா?

    - 0 comments


    தாய்க்கு நிகராகஒருவர் உலகில் இருக்க முடியுமென்றால் தாய்ப்பாலுக்கு நிகராக ஓர் உணவும்இருக்க்க்கூடும்.உயிர் ஜனிக்கும் முன்பே தேவையான உணவுக்கு இயற்கை ஏற்பாடு செய்துவிடுகிறது.இயற்கைக்கு இணையாக வேறொன்றை கற்பனை செய்வதும் சாத்தியமல்ல.

                                       ரொம்பவும்மனசை சங்கடப்படுத்தும் விஷயம் இது.தாய்ப்பால் கொடுக்காத காரணத்தால் உயிரிழக்கும்குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.வேலைக்கு போக வேண்டி இருப்பது ஒருகாரணம் என்றாலும் அழகு குறைந்து விடும் என்று தாய்ப்பால் கொடுக்காத தாய்களும்இருக்கிறார்கள் என்பது ஜீரணிக்க முடியாத அசிங்கம்.

                                       ஆறு மாதம்வரை குழந்தைக்கு தாய்ப்பால் தவிர வேறு எந்த உணவும் தேவையில்லை.மிகவும் எளிதில்செரிக்க்க்கூடியது.போதுமான நீரும்,அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிரம்பியுள்ளது.மூளைவளர்ச்சிக்கு ஏற்ற கொழுப்பு அமிலங்களும்,உயர்தர புரதமும்,இரும்புச்சத்தும்தாய்ப்பாலில் இருக்கிறது.

                                        சிலர்புட்டிப்பாலும் தாய்ப்பாலும் மாற்றி மாற்றி கொடுக்கிறார்கள்.இது தவறானபழக்கம்.உடலில் பிரச்சினை ஏற்படுத்தி வயிற்றுப்போக்கு போன்றவற்றுக்கு வழி வகுத்துவிடும்.உலகில் வயிற்றுப்போக்கால் இறக்கும் குழந்தைகள் அதிகம்.இரண்டு வயது வரைகுழந்தையை நோயிலிருந்து காக்க தாய்ப்பால் போதும்.

                                        எவ்வளவு சுகாதாரமாக புட்டிப்பால்கொடுத்தாலும் தாய்ப்பால் குடிக்காத குழந்தைக்கு சுவாச நோய்கள்,நிமோனியாபோன்றவைகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.இரண்டு வருடம் வரை தாய்ப்பால் கொடுக்கும்தாய்க்கு சில வகை புற்று நோய்களும் வருவதில்லை.இயற்கையான கர்ப்பத்தடையும் கூட.தவிரஉணர்வுப்பூர்வமான பிணைப்பு குழந்தைக்கும் தாய்க்கும் இடையில் இருக்கும்.போதுமானதாய்ப்பால் இல்லாத குழந்தைகள் புகைப்பிடிப்பது போன்ற பழக்கவழக்கங்களுக்கும்ஆளாகிறார்கள் என்கிறது உளவியல்.

                                        ஒரு நாளில்எட்டிலிருந்து பத்து முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.சத்துணவும் அதிகம்எடுத்துக்கொள்ளவேண்டும்.இரண்டு வயது வரை கொடுப்பது அவசியம்.உடல் நலம் இல்லாதபோது,மார்பில் புண் போன்ற பிரச்சினைகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவேண்டும்.இதெல்லாம் சொல்ல வேண்டிய நிலை வந்து விட்ட்தே என்பது சங்கடமான விஷயம்.

                                          சில நேரங்களில் தனதுஉறவினர்களோ,பக்கத்து வீட்டில் இருப்பவர்களோ குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதுண்டு.இதைதவ்ர்ப்பதே நல்லது.தாய்ப்பாலில் ஒரேஒரு பிரச்சினை உண்டு.எச்.அய்.வி. தாய்க்குஇருந்தால் குழந்தைக்கு பரவும் வாய்ப்புண்டு.யார் எப்படி என்று நமக்கு தெரியாது.பெற்றோர்கள்,எதிர்காலத்தில்பெற்றோர்கள் ஆகப்போகிறவர்கள் கொஞ்சம் மனதில் வையுங்கள்.


    http://tamil-sex-video.blogspot.com




  • http://tamil-sex-video.blogspot.com


  • [Continue reading...]

    பசித்தால் உணவா? மணியடித்தால் உணவ��?

    - 0 comments


                                       நன்றாகபசித்தாலே உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்று பொருள்.உண்ண வேண்டிய தேவையை உணர்வதேபசி.பெரும்பாலும் மூன்று வேளை உணவே நமது வழக்கம்.இப்போது பலரும் பசியை உணர்வதேஇல்லை என்கிறது ஓர் ஆய்வு.மன நலத்தில் குறைபாடு உள்ள சில தருணங்களிலும்,சில உடல்நோய்களிலும் பசி இருக்காது.அவ்வப்போது எதையாவது திணித்துக்கொண்டிருந்தாலும் பசிஉணர வாய்ப்பில்லை.

         அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
         துய்க்க துவரப் பசித்த

    என்கிறார்திருவள்ளுவர்.உண்ட்து செரித்த்தா என்பதை உணர்ந்து,நன்கு பசி எடுத்த பின்னால்உங்கள் உடலுக்கு ஒத்துக்கொள்ளக்கூடிய உணவை உண்ண வேண்டும் என்பதே இதன் பொருள்.சரியாகசாப்பிட்டு நான்கு மணி நேரத்துக்கு முன்பு பசி உணர வாய்ப்பில்லை.சிலருக்கு சிலஉணவுகள் ஒத்துக்கொள்ளாது.அதை தவிர்ப்பதே நல்லது.

                                    பசி எடுத்தபின்னர்தான சாப்பிடவேண்டும்.ஆனால் ஒரு மணி ஆகி விட்ட்து என்பதற்காகவும்,மற்றவர்கள்சாப்பிடுவதை பார்த்து நாமும் ஆரம்பித்து விடுகிறோம்.குழந்தைகள் பசியின்மை காரணமாகசரியாக சாப்பிட மாட்டார்கள்.டென்ஷன்,மன அழுத்தம்,பதட்டம் போன்ற நேரங்களிலும் பசிஇருக்காது.

                                    பசியின்மையால்சரியாக சாப்பிட முடியாமல் போவதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல்போகும்.குழந்தைகள் போரடிக்கும் உணவுகளாலும் சரியாக சாப்பிடமாட்டார்கள்.உணவுமுறைகளில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் இதை சமாளிக்கலாம்.

    • ·        உங்களுக்கு,குழந்தைகளுக்குபிடித்தமான உணவை தயார் செய்து உண்ணலாம்.பிடித்த ஒன்றை அதிகம் சாப்பிடுவீர்கள்.
    • ·        பால்,தண்ணீர்,காய்கறிசூப்புகள்,பழரசங்கள் அதிகம் எடுக்கவும்.இவற்றை உணவுக்கு பின்னும்,இடையிலும்சாப்பிடலாம்.உணவுக்கு முன்பு கூடாது.
    • ·        சுவையையும்,மணத்தையும்கூட்டுங்கள்.எலுமிச்சை சேர்க்கலாம்.ஏலக்காய் போன்ற வாசனைப்பொருட்கள் உதவும்.
    • ·        கார்பனேட்ட்ட்குளிர்பான்ங்களை தவிர்க்கவும்.
    • ·        முட்டைக்கோஸ்,காலிஃபிளவர்,பீன்ஸ்போன்றவை வாயுவை உற்பத்தி செய்து வயிறு நிரம்பிய உணர்வைத்தரும்,தவிர்க்கவும்.
    • ·        உணவுக்குமுன்பு வாயை கொப்பளித்து சுத்தம் செய்தால் உணவின் சுவை கூடுதலாக இருக்கும்.
    • ·        உண்ணும்அறை காற்றோட்டமாகவும்,வெளிச்சம் நிரம்பியும்,விரும்பத்தகாத வாசனை இல்லாத இடமாகவும்இருந்தால் நலம்.
    • ·        நண்பர்களுடனும்,குடும்பத்தினருடனும்உண்ணுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.படுக்கையில் வைத்து உண்ண வேண்டாம்.
                                   
                                        பசிஇல்லாதவர்கள்தான் என்றில்லாமல் அனைவரும் கடைபிடிக்க்க் கூடிய விஷயங்கள்தான்இவை.முயற்சி செய்யுங்கள்.வித்தியாசம் தெரியும்.



    http://tamil-sex-video.blogspot.com




  • http://tamil-sex-video.blogspot.com


  • [Continue reading...]

    counsel for any

    - 0 comments


    கவலையற்றிருத்தலே வீடு ;களியே அமிழ்தம்-மகாகவி பாரதி

    http://tamil-sex-video.blogspot.com




  • http://tamil-sex-video.blogspot.com



  • [Continue reading...]

    தமிழ் தேசியக் கூ���்டமைப்பிற்கு கடைசி வாய்ப்பு!

    - 0 comments


    சொல்பேச்சுக் கேட்காமல் இருட்டுக்குள் இறங்கிவிட்டு சிங்களவர் ஏமாற்றி விட்டார்கள் என்று கூட்டமைப்பு இனியும் கூறக்கூடாது...

    தேர்வுக்குழு அமைத்து ஆறு மாதங்களில் தமிழர்களுக்கு தீர்வை தந்துவிடுவோம் என்று பசில் ராஜபக்ஷ கூறியிருக்கிறார். இந்தத் தடவை கண்டிப்பாக ஏமாற்றமாட்டோம் என்றும் கூறியிருக்கிறார்.

    அறுபது ஆண்டுகளாக ஏமாற்றும் ஓர் இனவாத அரசு ஆறு மாதங்கள் அவகாசம் கேட்டிருக்கிறதென்றால் அந்த ஆறு மாதங்களை அகல்வித்துப் பார்க்க வேண்டியது கூட்டமைப்பின் கடமை.

    தற்போது சனல் 4 காணொளி ஏற்படுத்தி வரும் தாக்கம், அமெரிக்கா உட்பட மேலை நாடுகள் கொடுக்கும் அழுத்தம் யாவும் பலம் குன்றி சுரத்து கெட்டுப்போக இந்த ஆறுமாதங்கள் போதும் என்பதை கூட்டமைப்பு கருத்தில் எடுக்க வேண்டும்.

    தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்பது தேவையில்லை இப்போது இருக்கும் உரிமைகளே போதுமானது என்று கோத்தபாய கூறியுள்ளார். ஆக பசில் ராஜபக்ஷவுக்கும் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இடையில் அடிதலையான முரண்பாடுகள் காணப்படுகின்றன.

    இன்னொரு புறம் கெகலிய ரம்புக்கவெல அமெரிக்காவின் அழுத்தத்தை நாம் அசட்டை செய்யவில்லை என்று கூறிவருகிறார். அதேவேகத்தில் மகிந்த ராஜபக்ஷ சீனாவின் காலடியில் விழுந்து, சர்வதேச அழுத்தத்தில் இருந்து தம்மை காப்பாற்றும்படி கேட்டுள்ளார். இதில் நான்கு விடயங்கள் உள்ளன :

    01. தமிழ் மக்களுக்காக பசில் ராஜபக்ஷ பேசியுள்ளார்.
    02. சிங்கள கடும்போக்காளருக்காக கோத்தபாய பேசியுள்ளார்.
    03. அமெரிக்க தரப்பை தணிக்கும் முயற்சியில் கெகலிய ரம்புக்கவெல இறங்கியுள்ளார்.
    04. சீனாவை துணைக்கிழுத்து தம்மை காப்பாற்ற மகிந்த முயன்றுள்ளார்.

    மேற்கண்ட நான்கு விடயங்களில் ஓர் ஒழுங்கு காணப்படவில்லை. சிங்கள அரசு தமிழ் மக்கள் பிரச்சனையை நேர்மையாக அணுகியிருந்தால் அதனுடைய நடவடிக்கைகள் ஒரு நேர் கோட்டில் இருந்திருக்கும். ஆனால் நான்கு தலை நாகம் ஆடுவதுபோல பல தலைகளில் அது ஆடுகிறது. ஏதாவது ஒரு தலை போக வழி கிடைத்தாலே போதும் தப்பி ஓடிவிடலாம் என்பதே அதன் நோக்கமாக இருக்கிறது.

    கூட்டமைப்பு இதை ஆழமாகச் சிந்திக்க வேண்டும். வன்னிப்போரை மட்டும் இரண்டு ஆண்டுகள் தாமதித்திருந்தால் சிங்கள இனவாதத்தின் மீது நேட்டோ படைகள் குண்டு வீசும் நிலை உருவாக்கியிருக்கும். இப்போது லிபிய சர்வாதிகாரி மீது விழும் குண்டுகள் இரண்டு ஆண்டுகள் தாமதித்திருந்தால் சிங்கள இராணுவத்தின் மீதும் விழுந்திருக்கும்.

    மேலும் ஆறு மாதங்கள் தாமதிக்கவும், அரசின் குழு அமைத்தலுக்கும் உடன்பட்டு கூட்டமைப்பு வளைந்து கொடுக்கத் தயாரானால்..

    21 ம் நூற்றாண்டு மாற்றங்களை விரைவாக செய்யும் உலக அரங்கின் பார்வையில் இருந்து ஈழத் தமிழினத்தை வெகு தூரம் கொண்டு சென்ற தவறை கூட்டமைப்பே செய்து முடிக்க நேரலாம்.

    தூரப்பார்வையுள்ள, நன்கு கற்ற, சர்வதேச அறிஞர்களை கூட்டமைப்பு தொடர்பு கொண்டு ஆலோசனை செய்ய வேண்டும். அவர்கள் தமிழர்களாகவும், இந்தியர்களாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை.

    சொல்பேச்சுக் கேட்காமல் இருட்டுக்குள் இறங்கிவிட்டு சிங்களவர் ஏமாற்றி விட்டார்கள் மேலை நாடுகளில் உள்ள தமிழர்களே ஊர்வலம் போங்கள் என்று கூட்டமைப்பு கேட்கக்கூடாது.

    இந்த வாரம் கூட்டமைப்பின் தெளிவான பதில் வெளிவர வேண்டும்.

    ஆளையாள் கட்டிப்பிடித்துக் கொண்டு கூட்டாக இருப்பவர்கள் ஒருவர் முகத்தை மற்றவரே பார்க்க முடியும், தூரப்பார்க்க முடியாது. தூரப்பார்வை இல்லாமல் முன்னைய கூட்டணி விட்ட தவறை இன்றைய கூட்டமைப்பும் விடக்கூடாது.

    இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்காலத்தில் டெல்லியில் உலாவிய குரங்கு மனிதன், தமிழகத்தில் உலாவிய வண்டலூர் செக்ஸ் புலி போன்றவற்றை யார் ஏவினார்கள் ஏன் ஏவினார்கள் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். சிறீலங்கா கிறீஸ் மனிதன் கதை சனல் 4 ஐ மூடி மறைக்கவந்த இன்னொரு வண்டலுர் செக்ஸ் புலியா என்றும் ஏன் எண்ணக்கூடாது..

    கூட்டமைப்பு தனது எண்ணங்களை மேலும் அகல்விக்க வேண்டும்.

    இளவாலை க.புவனசுந்தரம் 12.08.2011

    http://snipshot.blogspot.com




  • http://snipshot.blogspot.com


  • [Continue reading...]

    ராஜீவ் கொலைக்கு��்றவாளிகளின் கரு���ை மனு நிராகரிப்��ை வரவேற்கிறேன்: ��ங்கபாலு

    - 0 comments


    ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார்.

    இதற்கு பல்வேறு கட்சித்தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கருணை மனு நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்தார்.

    அவர், ''முருகன், பேரறிவாளன், சாந்தன் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்கிறது. இவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை நியாயமானதே.

    முன்னால் பிரதமர் தலைவர் ராஜீவ்காந்தியின் படுகொலை மிக கொடுமையானது. அதை எப்படி மன்னிக்க முடியும். அந்த கொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தப்பக்கூடாது; தப்ப விடக்கூடாது'' என்று தெரிவித்தார்.

    http://snipshot.blogspot.com




  • http://snipshot.blogspot.com


  • [Continue reading...]

    தமிழகத்திலிருந்து ஈழத் தமிழர்கள��� தொடர்பான ஒரு தெ���ிவான குரல் மீண்��ும் கேட்கின்றது!

    - 0 comments


    தமிழகத்திற்கும் ஈழத்தமிழகத்திற்கும் "தொப்புள்கொடி உறவு" உள்ளதாக நாம் அடிக்கடி பெருமையுடன் பேசிக்கொள்வோம். அந்த மண்ணிலிருந்து நமக்கு பல நன்மைகள் ஏற்படும் என்றும் எமக்கு ஆபத்துக்கள் ஏற்படும் காலங்களில் எல்லாம் தமிழக அரசிடமிருந்தும் மக்களிடமிருந்தும் அவர்கள் கரங்கள் நீளும் என்றெல்லாம் பல தடவைகள் காத்திருந்தோம்.

    ஆனால் நமக்கு கடந்த காலங்களில் கிடைத்தது எல்லாம் கபடமும் பொய்மையும் காட்டிக் கொடுப்புக்களும் தான்.

    இந்திரா காந்தியும் மக்கள் திலகம் எம்ஜிஆரும் கவனமெடுத்து வளர்த்த நம் விடுதலை வேட்கையின் ஆணிவேரை வெட்டியெறிய மத்திய அரசிற்கு மந்திரம் சொல்லிக் கொடுத்த "மகத்தான" முதலமைச்சர் கருணாநிதி நமது மண்ணை செருப்புக் கால்களாலும் மிதித்தார். இறுதியில் அவர் செய்த அதர்மக் காரியங்களுக்கு தமிழகத்தின் மக்கள் தகுந்த "செருப்படி" கொடுத்தார்கள்.

    ஆனாலும் தற்போது தமிழக மக்களுக்கு வழிகாட்டும் பொறுப்பை ஏற்றுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா ஈழத்தமிழ் மக்களையும் ஒரு கையால் அணைத்துக் கொள்ளும் தாயைப் போல தோன்றுகின்றார்

    தான் முதலமைச்சர் பதவி ஏற்ற நாள் தொடக்கம் அவர் எமது மக்களின் துன்பங்களை கவனிக்கும் தாயாகவே தெரிகின்றார். எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் தலைவியாகவும் தெரிகின்றார். மேலும் எம்மீது ஏறி நின்று மிதக்க எண்ணும் கொடியவர்களுக்கு கண்டனக் குரல் எழுப்பும் ஒரு போராளியாகவும் அவர் கைகொடுக்கின்றார்.

    ஆமாம் அன்பர்களே! தமிழகத்திலிருந்து எமது ஈழத்தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு தெளிவான அரசியல் தலைவராகவே அவர் காட்சியளிக்கின்றார்.

    நேற்று வியாழக்கிழமை தனது சட்டசபையில் அவர் நமது மக்கள் தொடர்பாக ஆற்றிய உரை நமக்கு இனிப்பாகவும் இலங்கை அரசின் தலைவர் மகிந்தாவிற்கும் அவரது சகோதரர்களுக்கும் கசக்கும் மருந்தாகவும் இருக்கும் என்பதே உண்மை.

    நமது மக்களுக்கு ஆதரவாக தமிழக சட்ட சபையில் "சனல் நான்கு" வீடியோ பிரதி தொடர்பாக நிறைவேற்றிய தீர்மானத்தை அவமதிக்கும் வகையில் மகிந்தாவின் சகோதரர் கோத்தபாயா ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் முகமாகவும் அவரை எச்சரிக்கும் முகமாகவும் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் நேற்று ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் மிக்க உரை தொடர்பாகவே நாம் இந்த விடயத்தை எழுதுகின்றோம்.

    நேற்று தமிழக சட்டசபையில் தான் கொண்டுவந்த சிறப்புக் கவனயீர்;ப்பு தீர்மானத்தை முன்வைத்து முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரை இன்றைய நாளில் உலக முக்கியத்துவம் பெறுகின்றது.

    ஏற்கனவே தமிழக அரசின் தீர்மானத்தை அவமதிக்கும் வகையில் திரு கோதபாயா ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகவே மேற்படி சிறப்புக் கவனயீர்ப்பு தீர்மானம் தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்டது என்பதை நாம் காணுகின்றபோது எமக்காக தமிழத்திலிருந்து நம்பிக்கை நட்சத்திரம் ஒன்று தோன்றியுள்ளது என்றே கருதக்கூடியதாக உள்ளது.

    முதல்வர் ஜெயலலிதா அங்கு உரையாற்றும்போது திட்டவட்டமாக ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். அது என்னவென்றால் " இலங்கையில் சிங்களவர்களுக்கு இணையான அந்தஸ்து இலங்கைத் தமிழர்களுக்கு கிடைக்கும் வரை எனது அரசு ஓயாது" என்ற போர்க்குணமுள்ள கருத்துக்களை அவர் அள்ளி வீசியுள்ளார்.

    அத்துடன் தமிழக அரசின் உத்தியோகபூர்வமான தீர்மானம் ஒன்றுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக இந்தியாவின் மத்திய அரசு இலங்கை அரசிற்கு கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்" என்ற கருத்தை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

    "போர்க்குற்றங்கள் தொடர்பாக தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு ஏற்றதான விளக்கங்களை அளிக்காமல் தேவையற்ற வகையில் பேட்டிகளை இலங்கை அரசு வழங்கிவருவது குறித்தும் ஜெயலலிதா தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

    இவற்றையெல்லாம் நாம் கவனிக்கும் போது ஈழத்தமிழர்கள் தொடர்பாக தமிழகத்திலிருந்து தெளிவாகக் குரல்கொடுக்கும் முக்கிய அரசியல் தலைவியாக முதல்வர் ஜெயலலிதா தொடரந்து இருப்பார் என்ற நம்பிக்கையைத் தருகின்றது அல்லவா?

    கனடா உதயன்
    uthayannews@yahoo.com

    http://snipshot.blogspot.com




  • http://snipshot.blogspot.com


  • [Continue reading...]

    அவுஸ்திரேலியாவின் நாடுகடந்த தமி���ீழ அரச தேர்தல் ப���ியகம் அறிவிப்பு!

    - 0 comments


    அவுஸ்திரேலியாவின் நாடுகடந்த தமிழீழ அரச தேர்தல் பணியகம் அறிவிப்பு! தடைகளை கடந்து செல்ல உதவுமாறு தமிழீழ மக்களிடம் கோரிக்கை!!

    நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநிலத்தில் இரு அங்கத்தவர்களும், விக்டோரியா (VIC) மாநிலத்தில் ஒரு அங்கத்தவரும் தெரிவு செய்வதற்கான உபதேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான தேர்தல் பணியகத்தை நாடு கடந்த தமிழீழ அரசின் தேர்தல் பணியகம் அறிவித்துள்ளது.

    சுதந்திரத்தின் சகல அம்சங்களையும் முற்றாக இழந்து சர்வ தேசத்தின் கூட்டு முயற்சியால் அழிக்கப்பட்டுச் செயலற்று நின்ற ஈழத்தமிழரின் இன்றைய காலத்தின் தேவையாக உருவாக்கப்பட்டதே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (நா. க. த. அ) என்பது எல்லோரும் அறிந்த விடயம். இந்தச் சிறு குழந்தை பிரசவித்து எழுந்து நடப்பதற்கு முன்னதாகவே அதனை அழித்து விடுவதற்கான முயற்சி பெருமளவில் எடுக்கப்பட்டு வருவதை நாம் யாவரும் அறிவோம். நாடு கடந்த தமிழீழ அரசை உருக்குலைக்க உள்ளிருந்தும் புறமிருந்தும் பலவிதமான சக்திகளாலும் எடுக்கப்படும் பலவகையான முயற்சிகளுக்கும் முகம் கொடுப்பதிலேயே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சக்தி விரயமாக்கப்படுவதே யதார்த்தம்.

    நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட வெற்றிடங்களை இட்டு நிரப்புவதற்கான உபதேர்தலை நடத்துவதற்கான பொறுப்பு நாடு கடந்த அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தைச் சார்ந்தது. இப் பொறுப்பினைச் சரிவரச் செய்து, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தான் மேற்கொண்ட குறிக்கோளை முன் எடுத்துச் செல்வதற்குத் தமிழ் மக்கள் அனைவரும் தம் உதவிக்; கரம் நீட்டித் தமது வரலாற்றுக் கடமையைச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ் உபதேர்தல் வரிசையில், அவுஸ்திரேலிய நாட்டில் நியூ சவுத் வேல்ஸ் (Nளுறு) மாநிலத்தில் இரு அங்கத்தவர்களும், விக்டோரியா மாநிலத்தில் ஒரு அங்கத்தவருமாக மூவரைத் தெரிவு செய்வதற்கான உபதேர்தலை நடாத்தும் முயற்சியில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆணையம் ஈடுபட்டிருக்கிறது.

    இத் தேர்தலைச் சிறந்த முறையில் நடாத்தக் கீழ்க் காணும், அறிவும் அனுபவமும் ஆர்வமும் மிக்க பிரமுகர்கள், தேர்தற் குழுவில் பணியாற்ற முன் வந்திருக்கிறார்கள். இவர்கள் இத் தேர்தலை நேர்மையாகவும் நடுநிலை தவறாமலும் நடாத்தி வைப்பார்கள் என்று தேர்தல் ஆணையம் நம்புகிறது. அவர்களுக்கு உறுதுணையாக மக்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

    தமிழீழத்தைக் கட்டி எழுப்பும் முயற்சியில் தமது பங்கனைப் பாராளுமன்ற அங்கத்துவம் மூலம் நிறைவேற்ற விரும்பும் வேட்பாளர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி, முகவரி ஆகிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

    வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்படும் இறுதி நாள், ஆகஸ்ட்டு 28, 2011, பிற்பகல் 6.00 மணியாகும்.


    TGTE BY-ELECTION IN VICTORIA AND NEW SOUTH WALES:

    Eelam Tamils having lost all elements of freedom as a result of joint international effort
    the Transnational Government of Tamil Eelam (TGTE) has been conceived to address the
    Eelam Tamil National question from without. That efforts are afoot to disrupt the TGTE's
    agenda even before it embarks on its baby steps is common knowledge in informed
    sections of the Tamil Diaspora. There is considerable dissipation of energy and effort at
    the TGTE in trying to contain the multi-faceted efforts at disruption attempted, both from
    within and without.

    Taking action to fill the current vacancies in the TGTE Parliament through By-Elections
    is the responsibility of the TGTE Election Commission. The TGTE Elections
    Commission counts on the Tamil population in Australia, particularly in Victoria and
    New South Wales, volunteering support for smooth conduct of these By- Elections.

    The TGTE Election Commission is taking steps to conduct by-Elections to fill two
    vacancies in NSW and one vacancy in Victoria. To organize and conduct these
    Elections in Australia the following competent, experienced and committed individuals
    have come forward to serve in the Election Committee being set up by the TGTE
    Election Commission. The TGTE Election Commission believes that they will ensure a
    just and fair Election while also expecting the Tamil population in Australia to render the
    necessary support and cooperation to have these Elections conducted efficiently and in a
    fair manner.

    Prospective Candidates desirous of contributing to the initiatives of the TGTE by serving as
    Representatives at the TGTE for their Electoral Districts are hereby requested to send in their
    Nominations before 6pm on 28 August 2011 (Sunday). Contact information of election officials
    is given below:



    http://snipshot.blogspot.com




  • http://snipshot.blogspot.com


  • [Continue reading...]

    3-வது டெஸ்ட்: இந்த���யா படுதோல்வி- இன���னிங்ஸ் மற்றும் 242 ரன்னில் இங்கிலாந்து அபார வெற்றி

    - 0 comments



    இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 3- வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் இந்தியா முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல்- அவுட் ஆனது.

    பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி நேற்று 3-வது நாள் ஆட்டத்தின் போது 7 விக்கெட் இழப்பிற்கு 710 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.  அதிகபட்சமாக குக் சிறப்பாக விளையாடி 294 ரன்கள் எடுத்தார். இதில் 33 பவுண்டரிகள் அடங்கும். மோர்கன் 104 ரன்கள் எடுத்தார். பிரிஸ்னன் 53 ரன்கள் எடுத்து அவுட்டாக வில்லை. இந்திய அணி தரப்பில் மிஸ்ரா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

    486 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் சேவாக் தான் சந்தித்த முதல் பந்திலே அவுட்டாகி வெளியேறினார். இதற்கு அவர் இங்கிலாந்து செல்லாமலேயே இருந்து இருக்கலாம். முதல் 2 டெஸ்டில் விளையாடாத அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கி விட்டார். இவரது விக்கெட்டை ஆண்டர்சன் கைப்பற்றினார்.

    இந்திய அணி நேற்று 3-வது நாள் ஆட்ட நேர முடிவின் போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்தது. காம்பீர் 14 ரன்களுடனும், டிராவிட் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4 நாள் ஆட்டம் தொடங்கியது இருவரும்  விளையாடினர். காம்பீர் 14 ரன் எடுத்திருந்த போது அண்டரசன் பந்தில் கேட்ச் ஆனார். பின்னர் களம் இறங்கிய லட்சுமண் நிதானமாக விளாயாடினார். மறுமுனையில் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்ட  விளையாடி வந்த டிராவிட் 18 ரன் அடித்திருந்த போது அண்டரசன் பந்தில் கேட்ச் ஆனார். அப்பொழுது ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 40 ரன்னாக இருந்தது.

    லட்சுமனுடன் சச்சின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியாவது நிலைத்து நின்று விளையாடும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இந்த ஜோடியும் நிலைத்து நிற்க வில்லை அண்டரசன் வீசிய பந்தில் லட்சுமணன் 2 ரன் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ரெய்னா 10 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார்.

    அதை தொடர்ந்து களம் வந்த கேப்டன் டோனி சச்சினுடன் ஜோடி சேர்ந்தார். ஸ்வான் வீசிய 33-வது ஓவரில் டோனி அடித்த பந்தை ஸ்வான் கைவீரலில் பட்டு ஸ்டெம்பில் பட்டது  சச்சின் கிரிஸ் வெளியே இருந்ததால் ரன் அவுட் ஆனர். அவர் அதிக பட்சமாக 40 ரன்கள் எடுத்தார்.

    அதை தொடர்ந்து களம் வந்த மிஸ்ரா டோனியுடன் ஜோடி சேர்ந்து விளையாடி வந்தார். உணவு இடைவேளை வரை இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 116 ரன் எடுத்திருந்தது. டோனி 9 ரன்னுடனும் மிஸ்ரா 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.


    தேனீர் இடைவேளைக்குப்பிற்கு ஆட்டம் தொடங்கியது. மிஸ்ரா 22 ரன்னில் அவுட் ஆனார். அதன்பின் வந்த பிரவீன்குமார் அதிரடியாக விளையாடி 40 ரன் சேர்த்தார். அதன்பின் வந்த இசாந்த் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும், ஸ்ரீசாந்த் 5 ரன்னிலும் அவுட் ஆனார். இதனால் இந்தியா 244 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    டோனி மட்டும் கடைசி வரை அவுட்டாகாமல் 74 ரன் எடுத்தார். இதனால் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 242 ரன் வித்திசாயத்தில் அபார வெற்றி பெற்றது. தொடரையும் 3-0 கணக்கில் வென்று டெஸ்ட் அணி வரிசையில் முதல் இடத்தையும் பெற்றது.






    http://photo-actress-hot.blogspot.com




  • http://photo-actress-hot.blogspot.com


  • [Continue reading...]

    ஒரு மாதம் பொறுங்���, நானே வந்து பார்க்கிறேன்! - விவிஐ��ிகளுக்கு ரஜினி பதில்

    - 0 comments


    சிங்கப்பூரிலிருந்து ரஜினி சென்னை திரும்பி இன்றோடு 1 மாதம் ஆகிறது. இதுவரை வீட்டிலிருந்து வெளியே வரவில்லை அவர்.

    இந்த ஒரு மாத காலத்தில் அவரைப் பார்க்க நெருங்கிய உறவினர்கள் கூட போயஸ் கார்டன் வரவில்லை. அவர்கள் வர ஆரம்பித்தால் தொடர்ந்து பல்வேறு முக்கியப் பிரமுகர்களும் வரத் தொடங்கிவிடுவார்கள். இது ரஜினி உடலிநிலையில் மீண்டும் ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்திவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான் காரணமாம்.

    அதற்கேற்ப, ரஜினியைப் பார்க்க ஏராளமான விவிஐபிக்கள் ஆர்வம் காட்டி, தினமும் அவருக்கு போன் செய்து வருகிறார்களாம். டெல்லித் தலைவர்கள், சென்னை பிரமுகர்கள் நேரில் வந்து பார்க்கலாமா என்று அன்புடன் கேட்க, ரஜினியோ என்ன சொல்வதென்று தெரியாமல் தவிக்கிறாராம்.

    ஒருவருக்கு ஓகே சொல்லி, அடுத்தவரை சங்கடத்தில் ஆழ்த்த விரும்பாத ரஜினி, அனைவருக்குமே சொல்லும் பதில், "ஒரு மாதம் பொறுங்க, நானே அனைவரையும் வந்து சந்திக்கிறேன்," என்பதுதான்.

    பேசும் வாய்ப்பாவது கிடைத்ததே என்ற திருப்தியில், பார்க்கும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொள்கிறார்களாம் ரஜினி அன்பர்கள்!







    http://photo-actress-hot.blogspot.com




  • http://photo-actress-hot.blogspot.com


  • [Continue reading...]

    லிப் டு லிப் காட்சியில் நடிச்சா வ���ட்ல சேர்க்க மாட��டாங்க! - அஜ்மல்

    - 0 comments


    பொதுவாக காதல் காட்சிகளில் உதட்டோடு உதடு பதித்து முத்தம் தரும் காட்சி வைத்தால் அதில் நடிக்க ஹீரோயின்கள்தான் தயங்குவார்கள்.

    ஆனால் முதல்முறையாகத ஒரு ஹீரோ வேண்டாம் என்று மறுத்த, பிடிவாதமாக அந்தக் காட்சியை மாற்றச் சொல்லியுள்ளார்.

    அவர் அஜ்மல். படம் கருப்பம்பட்டி.

    இந்தப் படத்தில் அஜ்மல் ஜோடியாக அபர்ணா பாஜ்பாய் நடிக்கிறார். பிரபுராஜ சோழன் இயக்குகிறார்.

    பழனியின் இறுதிக் கட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட போது, ஒரு கட்டத்தில், அஜ்மல் தன் காதலை அபர்ணாவிடம் சொல்கிறார். அந்தக் காதலை அபர்ணா ஏற்க, அப்படியே கட்டிப் பிடித்து உதட்டோடு உதடு பதித்து முத்தமிடுவது போல் நடிக்க வேண்டும்.

    இந்தக் காட்சிக்கு நாயகி ஒப்புக் கொண்டார். ஆனால் நாயகன் அஜ்மல் மறுத்துவிட்டாராம். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் நடிக்க மறுத்துவிட்டாராம் அஜ்மல். பின்னர் உதட்டுக்கு பதில் கன்னத்தில் முத்தமிடுவதாக மாற்றி எடுத்திருக்கிறார்கள். இதனால் 2 மணிநேரம் ஷூட்டிங் வேறு பாதிக்கப்பட்டுள்ளது.

    உதட்டோடு உதடு முத்தக் காட்சியில் நடிக்க மறுத்தது குறித்து அஜ்மல் கூறுகையில், "நான் சினிமா நடிகர் ஆவதை என் பெற்றோர்கள் விரும்பவில்லை. சில நிபந்தனைகளோடுதான் நடிக்க வந்தன். அதன்படி "நடிகைகளுக்கு முத்தம் கொடுத்து நடிக்க மாட்டேன், விரசமான காட்சிகளில் நடிக்க மாட்டேன், இரட்டை அர்த்த வசனம் பேச மாட்டேன்," என்றெல்லாம் அவர்களுக்கு உறுதி அளித்துள்ளேன்.

    அதில் இன்று வரை உறுதியுடன் இருந்து வருகிறேன். நான் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுத்து நடித்தால், வீட்டில் சேர்க்க மாட்டார்கள்,'' என்றார் அப்பாவியாக!







    http://photo-actress-hot.blogspot.com




  • http://photo-actress-hot.blogspot.com


  • [Continue reading...]

    ஆட்டம் காணும் பொ���ுளாதார நிலை:உலக ���ங்கி தலைவர் எச்��ரிக்கை

    - 0 comments


     "உலக பொருளாதாரத்தில் காணப்படும் ஸ்திரத்தன்மையற்ற போக்கால், பல ஆபத்தான கட்டங்களை எதிர்நோக்கும் அபாயம் இருக்கிறது," என்று உலக வங்கி தலைவர் ராபர்ட் ஸோயலிக் எச்சரித்துள்ளார்.

    அமெரிக்காவின் பொருளாதாரத்தின் ரேட்டிங்கை, கடந்த வாரம் ஸ்டான்டர்டு அன்ட் புவர் நிறுவனம் குறைத்து அறிவி்த்தது. இதன் எதிரொலியால் சர்வதேச பங்கு சந்தைகளில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது.

    போதாக்குறைக்கு ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பொருளாதார நிலையிலும் சரிவு ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதனால், அடுத்த பொருளாதார சரிவை உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ளன.

    இந்த நிலையில், உலக வங்கியின் தலைவர் ராபர்ட் ஸோயலிக் ஆஸ்திரேலியாவின் பிரபல செய்தித்தாள் வீக்ண்டுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    "தற்போது நாம் புதிய பொருளாதார சரிவின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம். ஆனால், இது கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார சரிவு போன்று இருக்காது.

    கடந்த சில வாரங்களாக ஆஸ்திரேலியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் பொருளாதாரம் ஓரளவுக்கு வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளன. ஆனால், வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம் தொடர்ந்து ஆபத்தான கட்டத்தை எதிர்நோக்கியுள்ளன.

    வளர்ந்த நாடுகள் பொருளாதார கொள்கைகளை சீர்படுத்தினால், மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்ப முடியும்," என்று கூறினார்.







    http://photo-actress-hot.blogspot.com




  • http://photo-actress-hot.blogspot.com


  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger