Tuesday 3 January 2012

பெண்ணின் பின்பு��த்துக்கு க் காப்பீட்டுத்தொகை 4 மில்லியன் ஸ்டெர்ல��ங்

- 0 comments
This summary is not available. Please click here to view the post.
[Continue reading...]

சொர்க்க வாசல் தி���க்கிறது!

- 0 comments
This summary is not available. Please click here to view the post.
[Continue reading...]

2012 - நம்பிக்கை நட்சத்திரங்கள் (நடிகைகள் மட்டும்) ஹீ...ஹீ...!

- 0 comments
 
 
2011ம் ஆண்டு வெளியான 100க்கும் மேற்பட்ட நேரடி தமிழ் திரைப்படங்களில் 50க்கும் (சரியான கணக்கு 52 எனத்தகவல்) மேற்பட்ட கதாநாயகிகள் அறிமுகமாகி உள்ளனர். இவர்களில் 2012ன் நம்பிக்கை நட்சத்திரங்களாக ஜொலிக்க இருப்பது யார்? என்பது தற்போது வரை புரியாத புதிராகவே இருக்கிறது. காரணம் ஸ்ருதிஹாசன், ரிச்சா கங்கோபாத்யாயா, டாப்ஸி, கார்த்திகா, இனியா, நித்யா மேனன், ப்ரணீதா, பிந்து மாதவி, யாஸ்மின், ஜனனி அய்யர், தீக்ஷா சேத் உள்ளிட்ட ஒரு டஜன் புதுமுக நடிகைகள் தங்களது முதல் படம் மூலமே கவனம் ஈர்த்த கதாநாயகிகளாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் அமலாபால், அஞ்சலி, அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி, சமீரா ரெட்டி, அனன்யா, த்ரிஷா, ஸ்ரேயா உள்ளிட்ட கதாநாயகிகளுடன் மேற்படி ஒரு டஜன் அறிமுக(2011) நாயகிகளும் சபாஷ் சரியான போட்டி! என மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு 2012ல் போட்டி போடுவார்கள் என்பது திண்ணம்!
 
இதுத்தவிர நண்பன் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வர இருக்கும் இலியானா மற்றும் 2012-ல் வெளிவர இருக்கும் இஷ்டம் படத்தில் விமல் ஜோடியாக நடித்து வரும் நிஷா அகர்வால்(காஜல் அகர்வாலின் தங்கை) உள்ளிட்ட 2012 புதுமுக நடிகைகளின் வரவு வேறு. தற்போதைய தமிழ் முன்னணி நடிகைகளுக்கும், 2011ல் அறிமுக நடிகைகளுக்கும் கடும் போட்டியை உண்டாக்கும்! இதையெல்லாம் கூட்டி கழித்துப்பார்த்து 2012-ல் ஜொலிக்க இருக்கும் ஒரு டஜன் நடிகைகளை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம்.
 
அவர்களின் விவரம் வருமாறு : அமலா பால், அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி, அஞ்சலி, ஸ்ருதிஹாசன், ரிச்சா கங்கோபாத்யாயா, தீக்ஷா சேத், காஜல் அகர்வால், இனியா, கார்த்திகா, பிந்து மாதவி, நித்யா மேனன் உள்ளிட்டவர்கள் பழசும், புதுசுமான அந்த ஒரு டஜன் நடிகைகள்!
இதில் காஜல் அகர்வாலுக்கு தான் முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பதர்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தோன்றுகிறது. சூர்யாவுடன் மாற்றான் விஜயுடன் துப்பாக்கி என்று இப்போதே எதிர்பார்ப்புக்குள்ளாகி உள்ளார் .

நடிகைகள் மீது தீராத காதல் ‌கொண்ட தமிழ் சினிமா ரசிகர்களே அப்புறமென்ன? நமது 2012ன் நம்பிக்கை நட்சத்திரங்கள் பட்டியலை, புதிதாக பிறந்திருக்கும் ஆண்டில், தமிழ் சினிமாவில் ஜொலிக்கும் நடிகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து நீங்களே சொல்லுங்கள்...!


[Continue reading...]

வடிவேலுக்கு மீண்டும் வாழ்வு கொடுக்கும் தனுஷ்

- 0 comments
 
 
 
யாரும் ஒதுக்கல, நான்தான் ஒதுங்கியிருக்கேன் என்று அவ்வப்போது வாய் சவடால் விட்டுக் கொண்டிருக்கும் வடிவேலு, தனுஷுக்கு போன் அடித்து தன் நன்றியை சொல்லியிருக்கிறார். எதற்காக...? தன் படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க க்ரீன் சிக்னல் காட்டியிருக்கிறாராம் தனுஷ். அதற்காகதான் இந்த நன்றி.
 
23-ம் புலிகேசி மூலம் வடிவேலுவை ஹீரோவாக்கிய சிம்பு தேவன், தற்போது இயக்கப் போகிற புதிய படத்தில்தான் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். இதில் வடிவேலுவும் இருந்தால் நன்றாக இருக்குமே என்பது சிம்புதேவனின் ஆசை. அதுக்கென்ன, செய்ங்களேன் என்றாராம் தனுஷ்.
 
துளசிப் பூ வெண்மையில, தூறல் வந்து ஸ்பிரே அடிச்ச மாதிரி பளிச்சென்று சிரிக்கிறார்கள் வடிவேலு ஏரியாவில்.

ஹலோ விஜயகாத்... இப்போ என்ன செய்ய போறீங்க... தைரியமா ரஜினி மருமகனை எதிர்க்க போறீங்கள அல்லது பொத்திகிட்டு பேசாம இருக்க போறீங்களா...!!


 


[Continue reading...]

முல்லைப் பெரியாறு அருகே தமிழ் இயக்குனர்கள் 8ம் தேதி உண்ணாவிரதம்: நடிகர்- நடிகைகள் பங்கேற்பார்களா?

- 0 comments
 
 
 
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மலையாள நடிகர், நடிகைகள் கேரள அரசுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மெழுகுவர்த்தி ஏந்தியும் ஊர்வலம் நடத்தினர். இதில் அங்குள்ள இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பங்கேற்றனர். முல்லைப் பெரியாருக்கு பதில் புதிய அணை கட்ட வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். இதற்கு பதிலடியாக தமிழ் திரைப்பட இயக்குனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
சமீபத்தில் மெரீனா கடற்கரையில் நடந்த கூட்டத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். அடுத்த கட்டமாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த உண்ணாவிரதம் வருகிற 8-ந்தேதி முல்லைப் பெரியாறு அணை அருகில் நடக்கிறது.
 
இயக்குனர்கள் அனைவரும் பஸ், வேன்களில் சென்னையில் இருந்து புறப்பட்டுச்செல்கின்றனர். உண்ணாவிரதத்தில் நடிகர்கள், பெப்சி தொழிலாளர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் இயக்குனர் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுத்து கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
 
இதுபற்றி ஆலோசிக்க நடிகர் சங்கத்தின் அவசரக் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு தியாகராயநகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் நடக்கிறது. இதில் இயக்குனர்களுடன் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வதா? அல்லது தனியாக போராட்டம் நடத்துவதா? என்று விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

 


[Continue reading...]

தனுஷின் கொலைவெறிக்கு எதிராக ஒரு கொலைவெறி

- 0 comments
 
 
 
 
 
இந்த பதிவு 'விழியே பேசு' வலைத்தளத்தின் மதிப்பிற்குரிய வாசகர் அண்ணன் மூர்த்தி அவர்களுக்கு சமர்ப்பணம்





[Continue reading...]

வனிதா, ஆகாஷ் மீண்டும் சேர்ந்தனர்

- 0 comments
 
 
 
ராஜ்கிரண் ஜோடியாக "மாணிக்கம்", விஜய்யுடன் "சந்திரலேகா" படங்களில் நடித்தவர் வனிதா. இவர் நடிகர் விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியின் இரண்டாவது மகள். வனிதாவும் டி.வி. நடிகர் ஆகாஷ¨ம் காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
 
திடீரென்று இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார்கள். பின்னர் ஆனந்தராஜ் என்பவரை வனிதா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மகன் விஜய் ஸ்ரீஹரி, தந்தை ஆகாஷ¨டன் வசித்தார். மகனை தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என்று வனிதா வற்புறுத்தினார். ஆகாஷ் மறுத்தார்.
 
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. விஜயகுமார் தாக்கப்பட்டார். ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டார். வனிதா போலீஸ், கோர்ட்டு என்று சென்றார். அனால் மகன் விஜய் ஸ்ரீஹரி வனிதாவுடன் செல்ல மறுத்து விட்டான். இதனால் வனிதாவிடம் மனமாற்றம் ஏற்பட்டது. மகனுக்காக இரண்டாவது கணவரை பிரிந்தார்.
 
ஆகாஷ¨டன் மீண்டும் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். அதன்படி ஆகாஷ¨ம் வனிதாவும் தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். பொதுநிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்கிறார்கள். புத்தாண்டை ஓட்டலில் ஒன்றாக கொண்டாடினார்கள். அப்போது போட்டோவுக்கு சேர்ந்து போஸ் கொடுத்தனர். விஜய் ஸ்ரீஹரிக்கு வனிதா இரண்டாவது கணவருடன் வசிப்பது பிடிக்கவில்லை என்றும் அவனுக்காகவே மீண்டும் முதல் கணவரோடு சேர்ந்தார் என்றும் கூறப்படுகிறது.



[Continue reading...]

நான்கு ஹீரோயின்களுடன் ஜோடி போடும் கார்த்தி...!

- 0 comments
 
 
 
சுராஜ் இயக்கும் புதிய படத்தில் கார்த்திக்குடன் நான்கு ஹீ‌ரோயின்கள் நடிக்க உள்ளனர். சகுனி படத்தை தொடர்ந்து டைரக்டர் சுராஜ் இயக்கத்தில் கார்த்தி ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக்கு ஜோடியாக அனுஷ்கா ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தபடத்தின் சூட்டிங் நடந்து வரும் வேளையில் அனுஷ்காவுடன் சேர்ந்து மேக்னா, சனுஷா மற்றும் நிகிதா ஆகிய 3 ஹீரோயின்கள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
 
இதில் கார்த்திக்கு ஜோடியாக அனுஷ்கா தான் ஜோடியாம். அதேசமயம் மற்ற 3 ஹீரோயின்களின் ரோலும் ரொம்பவே முக்கியத்துவமும், தனித்துவம் வாய்ந்தது என்கிறார் படத்தின் டைரக்டர் சுராஜ்.
 
இதனிடையே ஆரம்பத்தில் நிகிதாவுக்கு பதில் லட்சுமிராயைத்தான் முதலில் தேர்வு செய்திருந்தார் சுராஜ். ஆனால் லட்சுமிராயின் கால்ஷீட் ஒத்துவராததால் நிகிதாவை தேர்வு செய்துவிட்டார்.



[Continue reading...]

தனுஷ் மீது 'கொலவெறி...'யில் சிம்பு!

- 0 comments
 
 
தனுஷ் பாடிய 'ஒய் திஸ் கொலவெறி' பாட்டுக்கு படத்தில் அர்த்தம் இருக்கிறதோ இல்லையோ... அந்த முதல் வரிக்கு அர்த்தம் கொடுத்துவிட்டார் போட்டி நடிகரான சிம்பு. குறிப்பாக கொலவெறி பாட்டு தாறுமாறாக ஹிட்டாகி உலகப் பாடலாகிவிட்டதைக் கண்டு வெந்து வெதும்பிப் போயிருக்கின்றனர்.
 
அதுவும் இந்திய - ஜப்பானிய பிரதமர்களுடன் விருந்து சாப்பிடும் அளவுக்கு தனுஷ் சிகரத்துக்குப் போய்விட்டதை சிம்பு போன்றவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிந்துவிட்டது.
 
அதற்கு போட்டியாக ஒரு பாட்டை உருவாக்கினால்தான் ஆச்சு என்று கூறிக் கொண்டு ஒரு வீடியோவை வெளியிடும் முயற்சியில் உள்ளார் சிம்பு.
 
அவர் கொலவெறி என்று பாடிவிட்டார் அல்லவா... இதோ நான் காதல் பாட்டு பாடுகிறேன் என்று கூறிக்கொண்டு, காதல் என்ற ஒரே வார்த்தையை, பலமொழிகளில் எழுதி பாட்டு என்ற பெயரில் படுத்தியிருக்கிறார்.
 
இந்தப் பாட்டை பிரபலமாக்க அவரும் படாத பாடுபட்டு வருகிறார். ஃபேஸ்புக்கை திறந்தால், ஒரே நாளில் நான்கைந்து முறை இந்தப் பாடலின் லிங்கைப் போட்டு வைத்திருக்கிறார்கள்.
 
யுட்யூபிலோ சோனிமியூசிக் மூலம் காசு கொடுத்து புரமோட் செய்து வருகிறார்கள் (Promoted video).
 
இதுகுறித்து திரையுலகில் இளம் நடிகர்கள் இருவரிடம் கருத்துகேட்டோம். பெயரைச் சொல்ல விரும்பாத அவர்கள் கூறுகையில், "சினிமாவில் போட்டி சகஜம். அதைவிட சகஜம் பொறாமை. அதன் விளைவுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. வெறும் போட்டியாக இருந்தால் ரசிக்கும்படி இருக்கும். முன்பெல்லாம் ரஜினி - கமல், பாக்யராஜ் - ராஜேந்தர் மாதிரி. ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள பொறாமை முயற்சிகள் சகிக்கவில்லை. தனுஷ் தன் படத்துக்காக ஒரு பாட்டை எழுதிப் பாடினார். காட்சியின் சூழலுக்கு தேவைப்பட்ட பாட்டு அது. அந்தப் பாட்டு ஹிட்டானதும் அதை சூப்பர் ஹிட்டாக்கும் முயற்சியில் இறங்கியதால், உலகப் புகழ் பெற்றது. இதை தாங்க முடியாமல், இந்த காதல் பாட்டு உருவாகியுள்ளது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்தப் பாடலுக்கு அவசியமிருக்கிறதா என்பதுதான் கேள்வி!," என்றனர்.
 
முடிஞ்சா இதை நேரிலும் சொல்லுங்கப்பா!



[Continue reading...]

தமிழர்களை பிளவுபடுத்த சதி: கருணா ரகசியமாக கனடா பயணம்

- 0 comments
 
 


விடுதலைப்புலிகள் அமைப்பில் கிழக்கு மாகாண தளபதியாக இருந்தவர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளீதரன். சிங்களர்கள் கொடுத்த பணத்துக்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு இவர் விடுதலைப்புலிகள் அமைப்பை பிளவுபடுத்தி ஈழத்தமிழர்களுக்கு மிகப் பெரிய துரோகத்தை செய்தார். துரோகத்துக்கு பரிசாக இவருக்கு ராஜபக்சே மந்திரி பதவி கொடுத்தார்.

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்த போது, சிங்கள படைகளுக்கு உதவியாக இருந்தார். தற்போது அவரை தங்களது சதி செயல்களுக்கு ராஜபக்சே பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. சர்வதேச அளவில் ஈழத் தமிழர்கள் ஒன்றுப்பட்டு நாடு கடந்த தமிழீழத்தை உருவாக்கியுள்ளனர். அதை உடைக்கும் குள்ளநரி வேலையில் ராஜபக்சே ஈடுபட்டுள்ளார்.இதற்கு அவர் தமிழர்களுக்கு துரோகம் செய்த கருணாவை பயன்படுத்துகிறார்.

ஈழத் தமிழர்கள் மிக அதிக அளவில் கனடாவில் வசித்து வருகிறார்கள். கனடா நாட்டு அரசும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உள்ளது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள ராஜபக்சே, தற்போது கருணாவை கனடாவுக்கு அனுப்பியுள்ளார்.

ராஜபக்சேயின் ஆலோசகருடன் மிக, மிக ரகசியமாக கருணா கனடா சென்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கனடா அரசாங்கத்திடம், வடக்கு-கிழக்கு பகுதியில் உள்ள தமிழர்கள் இணைந்து வாழ்வது சாத்தியம் அல்ல என்பதை வலியுறுத்த கருணா அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

உலக அளவில் ஈழத் தமிழர்களிடம் பெரும் பிளவை உண்டாக்கும் வகையில் கருணாவை முன் நிறுத்தி இந்த சதி நடப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு கருணா பல தடவை அனுமதி கேட்டும், கனடா அவரை தன் நாட்டுக்குள் வர அனுமதிக்கவில்லை. இதனால் ராஜபக்சே சில நாடுகள் துணையுடன் கனடாவுக்கு நெருக்குதல் கொடுத்து கனடாவில் கருணாவுக்கு அனுமதி பெற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது. கருணா மேலும் மேலும் துரோக செயலில் ஈடுபடுவது, சர்வதேச ஈழத் தமிழர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



[Continue reading...]

நார்வே தமிழ்த் திரைப்பட விழா 2012

- 0 comments
 

சர்வதேச அளவில் தமிழ்த் திரைப்படங்களுக்காக நடத்தப்படும் நார்வே தமிழ்த் திரைப்பட விழா, நார்வே தலைநகரான ஆஸ்லோவில் வரும் ஏப்ரல் மாதம் 25-ம் தேதி தொடங்குகிறது.

ஏப்ரல் 25 முதல் 29-ம் தேதி வரை நடைபெறும் இந்த ஐந்து நாள் திரைப்பட விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான திரைப்படங்கள் கலந்துகொள்ளும். அவற்றில் 15 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழர் விருது வழங்கப்படும்.

தமிழ் மொழி, கலை, கலாசாரம் ஆகியவற்றை அடையாளப்படுத்தும் படங்கள், தமிழ்ச் சமூகத்தை நல்வழிப்படுத்தும் கருத்துகளை உள்ளடக்கிய படங்கள், தமிழ் வரலாறு சார்ந்த படங்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

திரைப்படங்களின் கால அளவு மூன்று மணி நேரத்துக்குள்பட்டதாக இருக்க வேண்டும். போட்டியில் கலந்துகொள்ளும் படங்கள் 01.01.2011 முதல் 31.12.2011 தேதிக்கு முன் வெளியிடப்பட்டதாக இருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்கும் அனைத்துப் படங்களும் ஆங்கில சப் டைட்டில்களுடன் இருக்க வேண்டும்.

அதே போல போட்டியில் பங்கேற்க விரும்பும் குறும்படங்கள் 25 நிமிடங்களுக்குள்பட்டதாகவும் இதுவரை வேறு எங்கும் வெளியிடப்படாததாகவும் இருக்க வேண்டும்.

மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்களும் வேற்று மொழியில் இருந்து தழுவி எடுக்கப்பட்ட படங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

போட்டியில் பங்கேற்க விரும்புவோர் தங்களுடைய திரைப்படங்கள் அல்லது குறும்படங்களின் இரண்டு டி.வி.டி.க்களை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்.

படங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 15.02.2012.

அனுப்ப வேண்டிய முகவரி NORWAY TAMIL FILM FESTIVAL, Tante Ulrikkes Vei 11, 0984 Oslo 9, NORWAY. மேலும் தகவல்களுக்கு 00 47 913 70 728 என்ற தொலைபேசி எண்ணையும் www.ntff.no என்ற இணையதளத்தையும் அணுகலாம்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger