Wednesday 22 January 2014

பொன்னேரியில் மயக்க மாத்திரை கொடுத்து காதலியை கற்பழித்த பட்டதாரி வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில் Men arrested for To give the sleeping tablet and raped the girl near ponneri

- 0 comments
திருவள்ளூர். ஜன.23- 
Rape


திருவள்ளூரை அடுத்த பொன்னேரி அண்ணா நகர் சோம்பட்டு பகுதியை சேர்ந்தவர், நாகதாஸ் (வயது 35). எம்.ஏ பட்டதாரியான இவர் தனது மூன்றாவது வீட்டில் வசிக்கும் மீரா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது.) என்ற 25 வயது பெண்ணை காதலித்து வந்தார். கடந்த 4-9-2002 அன்று மீரா தனது வீட்டில் உடல் நலக்குறைவு காரணமாக படுத்து இருந்தார்.

அப்போது அங்கு வந்த நாகதாஸ் அவரிடம் உடல் நலம் பற்றி விசாரித்தார். அப்போது மீராவின் பெற்றோர் வீட்டில் இல்லை. இதனை பயன்படுத்திக்கொண்ட நாகதாஸ், மீராவின் பெற்றோர் கொடுத்ததாக கூறி, ஒரு மாத்திரையை சாப்பிடும்படி கூறி இருக்கிறார். அது மயக்க மாத்திரை என்று அறியாமல் சாப்பிட்ட மீரா சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தார். அப்போது மீராவை நாகதாஸ் கற்பழித்துவிட்டார்.

பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்த மீரா தான் கற்பழிக்கப்பட்டதை அறிந்து நாகதாசிடம் கேட்டார். அதற்கு அவர் மீராவை திருமணம் செய்துகொள்வதாக கூறி சமாளித்துவிட்டார். இந்நிலையில் மீரா கர்ப்பமாகி ஆண் குழந்தை பெற்றெடுத்தார். குழந்தை பிறந்த பின்னரும் தன்னை திருமணம் செய்து கொள்ள நாகதாஸ் மறுத்து விட்டதால் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் மீரா புகார் செய்தார். பூந்தமல்லியில் உள்ள கோர்ட்டில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கு பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனால் மனவேதனையடைந்த மீரா தொடர்ந்து போராடி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை திருவள்ளூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முருகன், நாகதாஸ் மீதான கற்பழிப்பு குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 வருடம் கடுங்காவல் ஜெயில் தண்டணையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து போலீசார் நாகதாசை சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக பி.எஸ்.ஆர்.சவுந்தர்ராஜன் ஆஜராகி வாதாடினார். 

[Continue reading...]

யுவன்சங்கர் ராஜா இசையில் பாடல் எழுதுவது காலத்தின் விருப்பம்: கவிஞர் வைரமுத்து பேட்டி Yuvan Shankar Raja to compose music for the lyrics of the option period Interview with poet Vairamuthu

- 0 comments
டைரக்டர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், சீனுராமசாமி டைரக்டு செய்யும் இடம் பொருள் ஏவல் என்ற படத்தில், முதல்முறையாக கவிஞர் வைரமுத்துவுடன் இணைகிறார், இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா.

இளையராஜாவை பிரிந்து வந்த 28 ஆண்டுகளுக்குப்பின், கவிஞர் வைரமுத்து அவரது மகன் யுவன்சங்கர்ராஜாவுடன் இணைந்து பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. படத்தில் இடம்பெறும் 5 பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதுகிறார்.

இதுபற்றி வைரமுத்து அளித்த பேட்டி விவரம் வருமாறு:

கேள்வி:- யுவன்சங்கர்ராஜாவுடன் நீங்கள் இணைவது காலத்தின் கட்டாயமா?

பதில்: இல்லை. காலத்தின் விருப்பம்.

கேள்வி:தந்தையோடு சேராத நீங்கள் மகனோடு எப்படி சேர்கிறீர்கள்?

பதில்: தந்தை என்று சொல்லிப்பாருங்கள். உதடுகள் சேர்வதில்லை. மகன் என்று சொல்லிப்பாருங்கள். முதல் எழுத்திலேயே உதடுகள் சேரும்.

கேள்வி:திடீரென்று எப்படி இந்த முடிவெடுத்தீர்கள்?

பதில்: வைரம் திடீரென்று பிறப்பதில்லை. அது கரியாக கிடந்து கனிந்த காலம் நம் கண்ணுக்கு தெரிவதில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பே தம்பி யுவன்சங்கர் ராஜா இரு முறை என்னை தொலைபேசியில் அழைத்து, எனக்கு பாட்டு எழுதுங்கள் அங்கிள் என்று பாசத்தோடு கேட்டார். எனக்கு கண்கலங்கி விட்டது.என்னோடு சேர்வதால் உனக்கு ஒரு பாதிப்பும் வந்து விடக்கூடாது. கட்டாயம் சேர்வோம். காலம் கனியட்டும் என்று சொல்லியிருந்தேன். இப்போது அந்த காலம் கனிந்திருக்கிறது. இடம் பொருள் ஏவல் கூடி வந்திருக்கிறது.

கேள்வி: இளைய தலைமுறையோடு சேர்கிற நீங்கள் இளையராஜாவோடு ஏன் சேரக்கூடாது?

பதில்: இந்த கேள்விக்கு நான் இதுவரை சொன்ன பதிலை நீட்டினால், பூமி உருண்டைக்கு அரைஞாண் கயிறு கட்டலாம். அவ்வளவு சொல்லியாகி விட்டது. இனிமேல் கெட்டிப்பட்ட மவுனத்தைப் பார்த்து இந்த கேள்வியை கேளுங்கள்.

கேள்வி: உங்களுக்கு யுவன்சங்கர் ராஜா தேவைப்படுகிறாரா? யுவன்சங்கர் ராஜாவுக்கு நீங்கள் தேவைப்படுகிறீர்களா?

பதில்: பூமிக்கு தண்ணீர் தேவைப்படுகிறதா? தண்ணீருக்கு பூமி தேவைப்படுகிறதா? ஒன்று, இன்னொன்றுக்கு ஆதாரம். மனித உறவுகளே சார்ந்து இயங்குவதுதானே? எனது மூத்த தமிழோடு இளமையான இசை சேரும்போது, புதிய மின்சாரம் உண்டாகும். இளையராஜா இப்போது என்ன செய்ய வேண்டுமென்றால் தனது மூத்த இசையோடு இளைய தமிழை இணைத்துக்கொள்ள வேண்டும். மதன் கார்க்கி, கபிலன் போன்றவர்களோடு அவர் பணியாற்ற வேண்டும்.

கேள்வி:இந்த புதிய கூட்டணி வெற்றி பெறுமா?

பதில்: ஒருவர் வெற்றிக்காக மற்றவர் உழைக்கும் கூட்டணிதான் வெற்றி பெறும். இது, கலைக்கும் பொருந்தும். கட்சிக்கும் பொருந்தும். சக கலைஞர்களை வெற்றி பெற வைத்து, நாங்கள் வெற்றி பெறுவோம்.

கேள்வி:லிங்குசாமி, சீனுராமசாமி இருவரும் இந்த இணைப்புக்கு காரணமா? பதில்: ஆமாம். சந்தர்ப்பங்கள் சாதிக்க முடியாததை சாமிகள் சாதித்து விட்டார்கள்.தமிழுக்கும், இசைக்கும் லிங்சாமி ஆகிவிட்டார், லிங்குசாமி.

இவ்வாறு கவிஞர் வைரமுத்து கூறினார்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger