Friday 11 May 2012

மந்திரபொம்மை! பாப்பாமலர்!

- 0 comments


மந்திரபொம்மை!

சோலைவனம் என்ற அழகிய கிராமத்தில் ரவி என்னும் இளைஞன் ஒருவன் வசித்து வந்தான். சிறுவயதிலேயே தாய் தந்தையரை இழந்த அவன் மிகுந்த உழைப்பாளி. அருகில் உள்ள வயல்களில் வேலை செய்து அந்த வருமானத்தைக் கொண்டு வாழ்ந்து வந்தான். அதில் சிறிது தொகையை தானமும் செய்து வந்தான்.
  ஊரில் உள்ளோர் நீ என்னப்பா ஒண்டிக் கட்டை அதான் தாராளமா தர்மம் பண்றே எங்களாலே முடியுமா? என்று அவனை குத்திக் காட்டுவர். எனினும் அவன் தன் தர்மங்களை விடவில்லை. அவனது தருமச் செயல்களை கேள்விப்பட்ட துறவி ஒருவர் அவனுக்கு உதவ நினைத்தார்.
   அந்த துறவிக்கு மந்திரவித்தைகள் தெரியும் அவ ரிடம் ஒரு மந்திர பொம்மையும் இருந்தது. அந்த துறவி சோலைவனம் வந்தடைந்தார்.அங்கிருந்த ஒரு மரத்தடியில் தங்கினார். ஊர் மக்கள் அனைவரும் அவரிடம் சென்று ஆசி பெற்று வந்தனர். ஆனால் ரவி மட்டும் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்தான். என்னடா இது இவனை பெரிய தர்மவான் என்று கூறுகிறார்கள் ஆனால் அவன் என்னை சிறிதும் மதிக்கவில்லையே? ஊரே திரண்டு வந்து என்னை பார்த்துச் செல்கிறது அவ ன் வரவில்லையே என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்து கொண்டிருந்தார் துறவி.
    அப்போது அங்கு ரவி வந்தான். துறவியை வணங்கி, துறவியாரே தாங்கள் காலையிலிருந்துஇந்த மரத்தடியில் தங்கியிருப்பதாக அறிகிறேன்.காலை முதல் வேலை செய்து கொண்டிருந்ததால் தங்களை தரிசிக்க வர முடியவில்லை. வேலையை விட்டு விட்டு வர என் மனம் ஒப்பவில்லை.எனவே வேலையை முடித்துக் கொண்டு வந்து தங்களை தரிசித்தேன். தாங்கள் என் வீட்டில் இன்று உணவருந்த வேண்டும் என்று பணிவுடன் கேட்டான்.

   துறவி அவனது செயலை பாராட்டி அப்பனே உன் செயல் நியாயமானதுதான்! வேலைதான் முக்கியம்! நான் சாதாரணமானவன் தான்! என்னை எப்போதும் சந்தித்துக் கொள்ளலாம்! உன் கடமையை மெச்சுகிறேன், உன் வீட்டில் உணவருந்துவதில் மகிழ்கிறேன் என்றுஅவனுடன் உணவருந்த புறப்பட்டார்.
& nbsp; ரவியின் வீட்டில் உணவருந்திய துறவி அப்பனே ரவி! என்னிடம் ஒரு மந்திரபொம்மை உள்ளது. இதனிடம் தினமும் ஒரு முறை வணங்கி கையில் மண்ணாங்கட்டிகளை வைத்துக் கொண்டுமந்திர பொம்மையே மண்ணை பொன்னாக்கு என்று கூறினால் கையில் உள்ள மண்ணாங்கட்டிகளில் மூன்று பொற்காசுகளாக மாறும். இதை உண் உழைப்பிற்கு பரிசாக தருகிறேன் பெற்றுக் கொள் என்று கூறி பொம்மையை தந்து சென்று விட்டார்.
   மறுநாள் ரவி துறவி சொன்னதை பரிட்சித்து பார்க்க முடிவு செய்து கையில் சில மண்ணாங்கட்டிகளை வைத்துக்கொண்டு மந்திரபொம்மையே மண்ணை பொன்னாக்கு என்று வணங்கினான். உடனே அவன் கையில் மூன்று பொற்காசுகள் வந்தன. அவன் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தான்.
அந ்த மூன்று பொற்காசுகளை வைத்துக் கொண்டு ஆடம்பரமாக செலவு செய்ய ஆரம்பித்தான். காசு தீர்ந்ததும் மீண்டும் பொம்மையை வணங்கி காசு வரவைத்துக் கொண்டான்.
   அந்த பொம்மையை பாதுகாப்பாக வைப்பதிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்தான். மிகவும் பாதுகாப்பான இரும்பு பெட்டி ஒன்றை வாங்கி அதனுள் பொம்மையைப் பூட்டி வைத்தா� �். அதன் அருகிலேயே இருந்து வந்தான். உழைப்பின் இலக்கணமான அவன் உழைப்பையே மறந்துவிட்டான். யார் வேலைக்கு அழைத்தாலும் வேலைக்கு வர மறுத்துவிட்டான்.
     என்னடா இது! என்ன காரணம் வேலைக்கு வராமலே இவனிடம் எப்படி பணம் நடமாடுகிறது என்று மக்கள் ஏதேதோ கதை கட்ட ஆரம்பித்தனர். வேலை செய்யாமல் தின்று கொழுத்த ரவ ிக்கு உடல்நலம் பாதித்தது. மிகவும் சிரமப்பட்டான். அதே சமயம் அவன் வேலைக்கு வராமைக்கு காரணம் மந்திர பொம்மைதான் என்பதை அவனது நண்பன் அறிந்து கொண்டான். அந்த பொம்மையை எடுத்து காசு வரவழைப்பதை ஒளிந்திருந்து கண்டு பிடித்த அவன் ரவி நன்கு உறங்கும் சமயம் அவனது மடியில் இருந்து சாவியை எடுத்து பொம்மையை எடுத்துக் கொண்டுஅதே மாதிரி வெறொரு பொம்மையை வைத்துவிட்டான்.
    மறுநாள் காலை ரவி எழுந்து பொம்மையை வணங்கி மந்திர பொம்மை மண்ணை பொன்னாக்கிடு என்று வேண்டினான். ஆனால் மண்ணாங்கட்டிகள் பொன் ஆனால் தானே பலமுறை கூறிப் பார்த்த ரவி சரி இன்று மந்திரம் வேலை செய்யவில்லை! நாளை பார்க்கலாம் என்றிருந்தான். மறுநாளும் மந்திரம் பலிக்க வில்லை! ஒரு வாரம் ஒருமாதம் ஆகியும் மந்திர பொம்மை மந்த� ��ரம் வேலை செய்யாது போகவே ரவி மனம் உடைந்தான்.
   உணவுக்கே வழி இல்லாமல் மீண்டும் வேலைக்கு போக ஆரம்பித்தான். உடல் ஒத்துழைக்க மறுத்தது. மிகவும் கடினப்பட்டான். ஆனால் சிலவாரங்களில்  அவனது நோய்விட்டது. பழையபடி உற்சாகமாக வேலை செய்ய ஆரம்பித்தான்.
  அப்போது அவனது நண்பன் மந்திர பொம்மையுடன் வந்தான். நண்பா என்னை மன்னித்துவிடு! உழைக்காமல் உடல் வேதனைப் படும் உன்னை திருத்தவே இந்த பொம்மையை எடுத்து சென்றேன். உழைக்காமல் வரும் பொருள் நிலைக்காது இதை உணர்ந்து கொள் உழைத்து உண்டால் நோயின்றி வாழலாம். இதோ உன் மந்திர பொம்மை  என்று ரவியிடம் மந்திர பொம்மையை கொடுத்தான்.
  ரவியும் ஆம் நண்பா! பொம்மை மூலம் பணம் கிடைக்கவே உழைப்பை மறந்து விட்டு தறிகெட்டுப் போனேன். தக்க சமயத்தில் என்னை திருத்தினாய். இனி இந்த பொம்மை நமக்கு தேவை இல்லை! இதை துறவியிடமே திருப்பி தந்து விடலாம் உழைப்பே உயர்வாகும் இதை உணர்ந்து கொண்டேன் என்றான்.
     அந� �த சமயத்தில் அங்கு வந்த துறவி உழைப்பாளியான உன்னை இந்த பொம்மை சோம்பேறியாக்கிவிட்டதே! எனினும் திருந்திய உன்னை பாராட்டுகிறேன் என்று அந்த பொம்மை வாங்கி சென்றுவிட்டார். அது முதல் ரவி உழைத்து சிறப்பாக வாழ்ந்து வந்தான்.

உங்களுக்குத் தெரியுமா?

சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் தொடங்கி 140 வருடங்கள் ஆகிறது.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்யலாமே!


http://sex-story7.blogspot.com<>


<><><><><><><><><><><>
[Continue reading...]

விவசாயம் பார்க்கும் ஐ.பி.எல் வீரர்! அதிர்ச்சி தகவல்!

- 0 comments


ஜாமீன் கேட்கும் ராஜா!

2ஜி ஊழல் வழக்கில் சிக்கி ஓராண்டுக்கும் மேலாக திகார் சிறையில் இருக்கும் ராஜா இது வரை ஜாமீன் மனு தாக்கல் செய்யாமல் இருந்தார் தற்போது முதன் முறையாக தனக்கு ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த அதிரடி முடிவிற்கு காரணம் அவர் அமைச்சராக இருந்த போது துறை செயலராக இருந்த பெகுராவிற்கு நேற்று ஜாமின் கிடைத்ததே காரணம் என்று கூ� ��ப்படுகிறது இவரது மனு நாளை விசாரணைக்கு வருகிறது! ராஜா ராஜாவாட்டம் வருவாரா என்பது போகப் போகத் தெரியும்.


விவசாயம் பார்க்கும் கிரிக்கெட் வீரர்!

ஐபிஎல் போட்டிகளை பார்க்கும் எல்லோரும் கம்ரான் கானை மறந்திருக்க மாட்டீர்கள் ஐபிஎல் சீசன் இரண்டில் எதிரணிகளுக்கு தன் வேகப் பந்து மூலம் சிம்ம சொப்பனமாக இருந்தார் ராஜஸ்தானின் கம்ரான் கான்! இவரதுபந்து வீச்சில் அம்பயர்கள் குறை கூறியதால் சில போட� �டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டார். உ.பி மாநிலம் அசாம்கர் என்ற கிராமத்தை சேர்ந்த ஏழை விவசாயி இவர். இவரின் திறமை கண்டு தன்னுடைய அணியில் சேர்த்துக் கொண்டு வாய்ப்பு வழங்கினார் ஷேன் வார்னே! இவருக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து அப்பீல் செய்ய யாரும் உதவிட வில்லை! இப்போது புனே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட இவரை புனே நிர்வாகம் பத்துலட்ச ரூபாய் கொடுத்து திருப்பி அனுப்ப� � விட்டது. எனவே இவர் தன் சொந்த ஊரில் விவசாயம் பார்த்து வருகிறார். இது குறித்து வார்ன் வருத்தம் தெரிவித்து உள்ளார். இந்த லட்சணத்துல ஐபிஎல் இளம் இந்திய வீரர்களை ஊக்குவிக்கிறது என்று பீத்திக்கறாங்க! என்ன கொடுமைடா சாமி!

ஓணான்களுடன் விமானத்தில் பயணம்!

ஜெர்மனியை சேர்ந்த 28வயது நபர் மூனிச் சென்று திரும்பும் சமயம் விமான நிலையத்தில் சோதனையிட்ட போது 49 பல்லி மற்றும் ஓனான்களை வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.  இவைகளை சமைத்து உண்பதற்காக கொண்டு வந்ததாக கூறீய அவர் ஒரு ஓணானை கடித்து காண்பித்தார். விமானத்தில் இது போன்ற உயிரினங்களை கொண்டுவரக்கூடா� �ு என அவருக்கு 70ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

சிங்கமகனாகிய தம்மு!

ஜூனியர் என்.டி. ஆர் நடித்த  தம்மு என்ற படம் ஆந்திராவில் செம ஹிட் அடித்திருக்கிறது. கதை என்ன தெரியுமா? பகை பாராட்டும் கிராமத்து சொந்தங்களை திருத்தவரும் இளைஞன் இறுதியில் அவனே கத்தியை எடுப்பது தான்! எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? சினிமாவுல இதெல்லாம் சகஜம் தானே தேவர்மகனின் லேட்டஸ்ட் ரீமேக் தான் இந்த தம்மு. இதை தமிழில் சிங்க மகன் என்று மொழி ம ாற்றி வெளியிட்டும் விட்டார்கள். ஹீரோயின்கள் யார் தெரியுமா? த்ரிஷா, கார்த்திகா! ஒரு வாட்டி பார்த்துட வேண்டியது தானே

குஜராத்தில் விஜய்கரோடி- சீமா கரேசியா ஜோடிதான் இப்போதைய ஹாட் டாபிக்! ஆடம்பர திருமணங்களை நடத்தும் இந்திய மரபில் இந்த ஜோடிகள் தங்களுடைய திருமணத்தை முப்பத்த� ��ந்து ஜோடிகளுக்கான திருமணத்தில் மிக எளிமையாக முடித்துக் கொண்டது. இவர்கள் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள்! சீமா கரெசியா ஓர் பள்ளி ஆசிரியை! விஜய் கரோடி ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பதுதான் இதில் ஹைலைட்டான விசயம்.

தமிழகத்தை சேர்ந்த ரஞ்சித் பெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில் முதல் இடத்தை பிடித்ததுடன் லண்டன் ஒலிம்பிக்கில்  நேரடியாக கலந்து கொள்ளும் தகுதியை பெற்று வந்திருக்கிறார். டிரிபிள் ஜம்ப் வீரர் ஆன இவரது பெடரேஷன் கோப்பை தாண்டல் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி தாண்டல் என்பதால் நேரடி வா� ��்ப்பை பெற்றுள்ளார் வென்று வா தமிழா!


இந்தியாவில் சாமியார்களுக்கு மவுசு குறைவதே இல்லை! ஒவ்வொருவரும் ஒரு சாமியாரை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கின்றனர். இப்போது ஒரு பாபா அவதரித்து விட்டார் இந்தியாவில்! பாபா ராம் தேவை பின்னுக்கு தள்ளி முன்� �ுக்கு வந்திருக்கும் இவரது பெயர் நிர்மல் பாபா! இவர் தரும் பிரசாதம் பானி பூரி! என் கைபட்டால் பானி பூரி மருந்தாகி விடுகிறது என்னும் இவரை மொய்க்கிறார்கள் பக்தர்கள்! அதை விட அதிகமாக பானி பூரி ஸ்டால்கள் இவரது ஆசிரம வாயிலில் முளைத்துள்ளன!
இந்த மனுசனுங்க திருந்தவே மாட்டானுங்களா?

மகேஷுக்கு அண்ணியா? நோ!நோ!

மகேஷ்பாபுவின் அண்ணனாக வெங்கடேஷ் நடிக்க தமிழ் தெலுங்க� �ல் என இரு மொழிகளில் வெளிவர உள்ள படத்தில் வெங்கடேஷிற்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவை நாடினார்களாம்! வெங்கடேஷிற்கு ஜோடி என்பது ஓகேதான் ஆனால் மகேஷ்பாபுவிற்கு அண்ணியாகவா? முடியவே முடியாது என்று மறுத்துவிட்டாராம் இப்போது வாய்ப்பு கலகல அஞ்சலியிடம் போயுள்ளது!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!




http://sex-story7.blogspot.com<>


<><><><><><><><><><><><><><><><><><><><><><><>
[Continue reading...]

கண்ணிருந்தும்குருடர்களாய்.....

- 0 comments


கண்ணிருந்தும்குருடர்களாய்.....

நான் அவளை பலமுறை இதே பே� ��ுந்தில் பார்த்திருக்கின்றேன்.அவள் அப்படியொரு அழகு.இருபதுமுதல் எழுபது வரை அவளை ஒருமுறையேனும் திரும்பிப்பார்க்கவைக்கும் அழகு.
     அவள் எப்போதும் பஸ்ஸின் முதல் இருக்கையில் அமர்ந்து கொண்டுவருவாள் அது மாற்றுத் திறனாளிகளுக்கான இருக்கை. எத்தனயோ இருக்கை காலியாக இருக்க அவள் ஏன் அதில் அமர வேண்டும� �� பார்த்தால் படித்தவள் போலத் தெரிகிறது. அதுவும் அலங்காரத்திற்கு குறைவில்லை. மடிப்பு கலையாத புடவையும் பொருத்தமான ப்ளவுஸும் அணிந்து "பை"பின்னல் போட்டு "பர்ப்யும்"மின் தூக்கலான வாசனை கண்களுக்கு கூட கூலிங் கிளாஸ் ,டம்பப்பை,சகிதமாக சர்வலங்கார பூஷிதையாக செல்லும் இவள் நிச்சயம் படிக்காதவளாக இருக்கமாட்டாள்.
       பின் ஏன் ஊனமுற்றோர் இருக்கையில் அமரவேண்டும்?அழகிருக்கும் இடத்தில் அறிவு இருக்காது என்பார்களேஅது சரியாகத்தான் உள்ளது.
      அன்று பேருந்தில் வழக்கதைவிட கூடுதலான நெரிசல்,நான் நிற்க இடமில்லாமல் தவிக்க வழக்கம்போல் அவள் முதலிருக்கையில் கூலிங்கிளாஸோடு அமர்த்தலான பார்வையில் அமர்ந்திருக்க அவள் அருகிலேயே கால் ஊனமுற்ற ஒரு பெண் நிற்கமுடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்தாள்.அதைப்பார்த்து எனக்கு எரிச்சலாக வந்தது. அவளுடய இருக்கையை பறித்துகொண்டு வேடிக்கைப்பார்க்கிறாளோ? இந்த நடத்துனரும் சும்மா இருக்கிறாரே? அவர் வேண்டுமானால் சும்மாஇருக்கட்டும் என்னால் இருக்க முடியாது.நான் அவளை நோக்கி பேச ஆரம்பித்தேன்.
     ஏம்மா நீ படிச்ச பொண்ணுதானே இது மாற்றுத் திறனாளிகள் இருக்கை.படிக்கலியா? இல்ல கண்ணு தெரியிலயா?உன்பக்கத்துல ஒரு காலில்லா பொண்ணு நிக்க முடியாம தவிக்குது அது உன் பார்வையில படவே இல்லியா? கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாம உக்கார்ந்து இருக்கியே? என்று விளாசினேன்.
   ஐ ய ாம் சாரி சார் நான் நீங்க சொன்னமாதிரியே குருடு தான் அதான் என்க்குத் தெரியாம போச்சு. என்றபடி தனது வாக்கிங் ஸ்டிக்கை தடவி எடுத்தபடி எழுந்திருக்க திடுக்கிட்டு சாரிம்மா சாரி... நீ உக்காரும்மா என்றேன்.
இல்ல சார் எனக்கு கண்தான் இல்ல ஆனா அந்த பெண்ணுக்கு காலில்லை. கண் இல்லாதவள் நிற்கலாம் காலில்லாதவங்க நிற்க � �ுடியாதில்லையா? நீ உக்காரும்மா என்று இடம் விட்டாள்.
     அழகை கொடுத்த ஆண்டவன் அதை ரசிக்க அவளுக்கு கண்ணைக் கொடுக்க வில்லையே கண்ணிருந்தும் குருடனாய் மாறி விட்டேனே? அவசர பட்டு கொட்டிய வார்த்தைகளைஅள்ள முடியாது தலை கவிழ்ந்தேன்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குற� ��த்த கருத்துக்களை பகிரலாமே!

குறிப்பு : இக்கதை ஒரு மீள்பதிவு!



http://sex-story7.blogspot.com<>


<><><><><><><><><><><><>
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger