Showing posts with label கள்ளக் காதல். Show all posts
Showing posts with label கள்ளக் காதல். Show all posts

Tuesday, 6 August 2013

கள்ளக் காதலியின் 2 மாத குழந்தையை ஆன்லைனில் 100 டாலருக்கு விற்க முயன்றவன் கைது

- 0 comments
அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த பால் மார்குவெஸ்(23) என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் ஆன் லைன் மூலம் ஓர் இளம் பெண்ணுக்கு அறிமுகம் ஆனார்.

கணவரை இழந்து தனிமையில் வாழ்ந்த அந்த பெண்ணுடன் பால் மார்குவெஸ் கள்ளத் தொடர்பு வைத்துக்கொண்டு ஒரே வீட்டில் சந்தோஷமாக வசித்து வந்தார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் கள்ளக் காதலிக்கு பழைய கணவன் மூலம் கருத்தரித்த குழந்தை பிறந்தது.
[Continue reading...]

Saturday, 3 August 2013

டயானா வின் காதலர்கள்

- 0 comments

இங்கிலாந்து இளவரசர் சார்லசை திருமணம்
செய்து கொண்ட டயானா, 31-8-1997ம் ஆண்ட
காதலர் டோடி ஃபயீத்துடன் பாரீஸ் நகர கார்
விபத்தில் பலியானார்.

சார்லசுடன் வாழ்ந்த
போதே இன்னொரு நபரை காதலிப்பதாக
டயானா அளித்த பேட்டி இங்கிலாந்து ராஜ
குடும்பத்தை பெரும் அதிர்ச்சியில்
ஆழ்த்தியது. இதனையடுத்து,
டயானாவை விவாகரத்து செய்து விடும்படி சார்லசை ராணி எலிசபத்
வற்புறுத்தினார்.

வில்லியம், ஹாரி என்ற
இரு மகன்களை சார்லசுடன் பெற்ற
டயானா விவாகரத்து பெற்று தனித்து வாழ்ந்தார்.
அப்போது பல்வேறு சமூக
தொண்டுகளை செய்து வந்த
டயானா பாகிஸ்தானை சேர்ந்த டாக்டரான
ஹஸ்னத் கான் என்பவரை உயிருக்குயிராக
காதலித்தார்.

டாக்டர் ஹஸ்னத் கான் பாகிஸ்தான் முன்னாள்
கேப்டனும் தற்போதைய தெஹ்ரிக் இ இஸ்லாம்
கட்சியின் தலைவருமான இம்ரான்கானின்
உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்
கொள்வதற்காக இம்ரான் கானின்
மனைவி ஜெமிமா கானுடன்
டயானா நட்பை ஏற்படுத்திக் கொண்டார்.
டயானா விபத்தில் இறந்து 16 ஆண்டுகள்
கழித்து அவரது மகன் இளவரசர்
வில்லியமிற்கு கேட் மிடில்டன் மூலம் ஆண்
குழந்தை பிறந்துள்ளது. அந்த
குழந்தைக்கு ஜார்ஜ் என பெயரிடப்பட்டுள்ளது.
இதனையொட்டி, உலகப்புகழ் பெற்ற
வேனிட்டி ஃபேர் பத்திரிகையில் தனக்கும்
டயானாவுக்கும் இருந்த நட்பு பற்றி இம்ரான்
கானின் மனைவி ஜெமிமா கான் ஓர்
கட்டுரையை எழுதியுள்ளார்.

குட்டி இளவரசன் ஜார்ஜ்
எப்போதுமே அறிந்திராத பாட்டி (த
கிராண்ட்மதர் பிரின்ஸ் ஜார்ஜ் நெவர் நியூ) என
அந்த கட்டுரைக்கு அவர் தலைப்பிட்டுள்ளார்.

காதலர் ஹஸ்னத் கானை சந்திக்க
பாகிஸ்தானுக்கு டயானா 2
முறை வந்ததையும், பாகிஸ்தானில் உள்ள
அவரது ஆஸ்பத்திரிக்கு நிதி திரட்ட அவர்
உதவியதையும் ஜெமிமா கான் அந்த
கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மீதிருந்த வெறித்தனமான காதலின்
வெளிப்பாடாக டாக்டர் ஹஸ்னத்
கானையே திருமணம்
செய்து கொண்டு பாகிஸ்தானில் குடியேற
டயானா திட்டமிட்டிருந்ததையும்
ஜெமிமா சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த காதலும் கசந்து போனதால் பிரான்ஸ்
நாட்டை சேர்ந்த டோடி ஃபயீத் என்பவருடன்
டயானா ரகசியமாக ஊர் சுற்ற ஆரம்பித்தார்.

இருவரும் இணைந்து காட்சியளிக்கும்
புகைப்படங்களை படம் பிடிக்க கேமராக்களும்,
பிரசுரிக்க பத்திரிகைகளும் போட்டி போட்டுக்
கொண்டு இந்த ஜோடியை விரட்ட தொடங்கின.
பத்திரிகை பரபரப்பு (பாப்பராசி) எனப்படும்
இந்த விரட்டலில் இருந்து தப்பிக்க காதலர்
டோடி ஃபயீத்துடன் பாரிசில் உள்ள
சுரங்கப்பாதையில் தலைதெறிக்கும் வேகத்தில்
காரில் சென்ற டயானா பயங்கர விபத்தில்
சிக்கி பரிதாபமாக பலியானார்
என்பது குறிப்பிடத்தக்கது.

[Continue reading...]

Monday, 22 July 2013

கங்கா தேவி சொகுசு ஓட்டலில் கள்ளக்காதலுடன் கைது

- 0 comments
திருவான்மியூர் லட்சுமி புரத்தை சேர்ந்தவர்
சரவணன். தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில்
வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி கங்கா தேவி.
இவர்களுக்கு திருமணமாகி 10
ஆண்டு ஆகிறது. குழந்தை இல்லை.
கங்கா தேவி சரவணனுக்கு முறைப் பெண்
ஆவார்.
சரவணன் பார்த்து வந்த வேலை பறிபோனதால்
கங்கா தேவி திருநின்றவூரில் உள்ள தாய்
வீட்டிற்கு சென்று அடிக்கடி பணம்
வாங்கி குடும்ப செலவை கவனித்தார்.
[Continue reading...]

Wednesday, 26 June 2013

கவிதாவின் கள்ளகாதல் - Tritchi kavitha

- 0 comments
 கவிதாவின் கள்ளகாதல்

கள்ளக்காதலனை திருமணம் செய்து வைக்க வலியுறுத்தி, அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முன் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த சித்திரைப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கவிதா, 30. இவர்களுக்கு, 12 வயதில் பெண் குழந்தையும், எட்டு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். கவிதாவின் நடத்தை சரியில்லாத காரணத்தால், கணவர் சரவணன் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
அதே காரணத்துக்காக, கவிதாவின், இரு குழந்தைகளையும், அவரது தாயார் அழைத்துச் சென்று வளர்த்து வருகிறார். குழந்தைகளைப் பற்றி கவலைப்படாத கவிதாவுக்கு, திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியைச் சேர்ந்த யோகநாதன், 25, என்ற வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் தாலிகட்டாமல் குடும்பம் நடத்த துவங்கினர். கடந்த, இரண்டு ஆண்டாக துறையூர், கரூர் ஆகிய இடங்களில் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.
[Continue reading...]

Monday, 17 June 2013

கள்ளக்காதல் விவகாரம் ரயில் முன் பாய்ந்து 3 பேர் தற்கொலை

- 0 comments
நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள இருக்கன்துறை வேப்பம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் தனபால், தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 30). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

சரஸ்வதிக்கும் அந்த பகுதியை சேர்ந்த கார் டிரைவர் முத்துகுமார்(24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.

இதையறிந்த தனபால் மனைவியை கண்டித்தார். ஆனாலும் அவர் முத்துக்குமாருடனான பழக்கத்தை கைவிடவில்லை. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சரஸ்வதி கைக்குழந்தையுடன் கள்ளக்காதலன் முத்து குமாரோடு ஊரைவிட்டு ஓடினார்.

தனபால் பல இடங்களில் அவர்களை தேடினார். எனினும் அவர்கள் எங்கு சென்றனர் என்று தெரியவில்லை. இந்நிலையில் இன்று காலை நாங்குநேரி வாகைக்குளம் ரெயில்வே கேட் அருகே குழந்தையுடன் 2 பேர் இறந்து கிடப்பதாக நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அங்கு இறந்து கிடந்தது வேப்பம்பாடை சேர்ந்த முத்துகுமார், சரஸ்வதி அவரது குழந்தை என்பது தெரியவந்தது. 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் குழந்தையுடன் முத்துகுமாரும், சரஸ்வதியும் இன்று காலை நாகர்கோவிலில் இருந்து மும்பை நோக்கி சென்ற ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர்.
[Continue reading...]

Monday, 20 May 2013

பெரம்பலூர் அருகே டாக்டருடன் கள்ளத்தொடர்பு

- 0 comments


பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 40), கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (34).

இவருக்கும் சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த ஓமியோபதி டாக்டர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றி சின்னச்சாமிக்கு தெரியவந்தது. உடனே அவர் மனைவியை கண்டித்து வந்தார். ஆனாலும் ஜெயலட்சுமி டாக்டருடனான கள்ளத் தொடர்பு கைவிடவில்லை.

இந்தநிலையில் ஜெயலட்சுமிக்கு குழந்தை பிறந்தது. இந்த குழந்தை கள்ளத்தொடர்பால் பிறந்தது என்று சின்னச்சாமி நினைத்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.


வழக்கம்போல் சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய சின்னச்சாமி மனைவி ஜெயலட்சுமியை ஆசைக்கு இணங்குமாறு அழைத்துள்ளார். அதற்கு ஜெயலட்சுமி மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சின்னச்சாமி ஜெயலட்சுமி தலையில் அரிவாளால் வெட்டினார். படுகாயம் அடைந்த ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். மனைவி இறந்ததை உறுதி செய்த சின்னச்சாமி தற்கொலை செய்யும் எண்ணத்தில் தன்னைத்தானே வெட்டிக்கொண்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அரும்பாவூர் போலீசார் அங்கு வந்து ஜெயலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இதுபற்றி விசாரணை நடத்தியதில் சின்னச்சாமி மனைவியை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
[Continue reading...]

Friday, 10 May 2013

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனின் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி

- 0 comments


ஸ்ரீபெரும்புதூரை அடுத்த போந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமு (வயது 32). தொழிலாளி. கடந்த 5-ந்தேதி இரவு வீட்டு முன்பு திண்ணையில் தூங்கியபோது கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். ராமுவின் இறுதிச் சடங்கு நடந்த போது அவரது மனைவி ரதியின் நடவடிக்கையில் போலீசார் சந்தேகம் அடைந்தனர். அவரிடம் நடத்திய விசாரனையில் அதே பகுதியை சேர்ந்த கள்ளக்காதலன் ராஜசேகரனுடன் சேர்ந்து கணவரை தீர்த்து கட்டியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து 2 பேரையும் கைது செய்தனர்.

ரதி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

கணவர் ராமுவுக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் மது அருந்தி வந்து என்னிடம் தகராறில் ஈடுபட்டு இரவில் தூங்கி விடுவார். இதனால் செக்ஸ் ஆசை நிறைவேறாமல் தவித்து வந்தேன். இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ராஜசேகரன், என்னிடம் அன்பாக பேசி பழகினார். இதனால் கணவரை வெறுத்தேன்.

நாங்கள் 2 பேரும் வெளியிடங்களுக்கு சென்று உல்லாசமாக இருப்போம். கணவர் வெளியில் சென்ற நேரத்தில் வீட்டிலும் ஜாலியாக இந்தோம். சில நாட்களுக்கு முன்பு நாங்கள் படுக்கையில் ஒன்றாக இருந்ததை கணவர் ராமு பார்த்துவிட்டார். எங்கள் இருவரையும் கண்டித்து எச்சரித்தார். இதனால் ஒன்று சேர முடியாமல் தவித்தோம்.

கணவரை தீர்த்து கட்டி விட்டால் ஒன்றாக வாழலாம் என்று நினைத்தோம். ராஜசேகரனும் எனது 3 குழந்தைகளையும் காப்பாற்றுவதாக உறுதி அளித்தார். இதையடுத்து தினமும் வீட்டின் வெளியே திண்ணையில் தூங்கும் ராமுவை மின்தடை ஏற்படும் நேரத்தில் கொலை செய்ய திட்டமிட்டோம்.

சம்பவத்தன்று இரவு திட்டப்படி கத்தியுடன் வந்த ராஜசேகரன் கணவர் ராமுவை கொலை செய்ய முயன்றபோது 2 பேருக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. கணவர் வீட்டு கதவை தட்டி என்னை உதவிக்கு அழைத்தார். நான் கதவை திறக்காமல் வீட்டின் ஜன்னல் வழியே சண்டையை பார்த்தேன்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். அப்போது கணவர் ராமுவின் கழுத்தை அறுத்து விட்டு ராஜசேகரன் தப்பி ஓடி விட்டார். இதில் அவர் இறந்து விட்டார். மர்ம நபர்கள் கணவரின் கழுத்தை அறுத்து கொன்று விட்டதாக நாடகமாடி அழுதேன். ஆனால் என்னை விசாரித்து கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கொலை நடந்த நாளில் இருந்து ராஜசேகரன் தலைமறைவாக இருந்தார். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் ராஜசேகரனும், கொலையுண்ட ராமுவின் மனைவி ரதியும் அடிக்கடி சந்தித்து பேசுவதும் தெரிய வந்தது. கணவனின் இறுதிச் சடங்கிலும் ரதியின் நடவடிக்கையில் மாற்றம் இருந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக் கட்டியதை ஒப்புக் கொண்டுள்ளார்.

ராஜசேகரன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். ரதிக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். தந்தையை இழந்து, தாயும் சிறையில் உள்ளதால் அவர்களது எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.
[Continue reading...]

Tuesday, 9 April 2013

நண்பனின் மனைவி ஆசை நாயகி - கள்ள உறவு செய்திகள்

- 0 comments
 ஆசை நாயகி  கள்ள உறவு செய்திகள்

நண்பனின் மனைவியுடன் கள்ள உறவு  கள்ளக் காதலி தற்கொலை! காதலனுக்கு 5 ஆண்டு சிறை
கள்ளக்காதலி தற்கொலை வழக்கில் கள்ளக்காதலனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகை கோர்ட் தீர்ப்பளித்தது.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்தவர் பஷீர் அகமது (30). இவரது மனைவி ஷாகிரா பேகம் (25). வடபாதிமங்கலம் அடுத்த கோம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (40). பஷீர் அகமதுவும், ஆரோக்கியசாமியும் நண்பர்கள்.
பஷீர் அகமது கடந்த 2005ல் வெளிநாடு சென்று விட்டார். இந்நிலையில் ஆரோக்கியசாமிக்கும், ஷாகிராவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் கூத்தாநல்லூரில் தனியாக வசித்தனர்.
ஆரோக்கியசாமியின் உறவினர்கள் கண்டித்ததால், ஷாகிராவை நாகை மாவட்டம் திருப்பூண்டியில் உள்ள அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார்.
இதனால் மனமுடைந்த ஷாகிரா கடந்த 2005 ஜூன் 11ம் தேதி அன்று தீக்குளித்து இறந்தார். Ôஆரோக்கியசாமியால்தான் தற்கொலை செய்ய முடிவு செய்ததாக மரண வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்த வழக்கு நாகை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வநாதன், ஷாகிரா பேகத்தை தற்கொலைக்கு தூண்டிய ஆரோக்கியசாமிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
[Continue reading...]

Tuesday, 2 April 2013

கள்ள உறவு ( கள்ளக் காதல் ) செய்த மனைவின் கழுத்தை கருவருத்த கணவன்

- 0 comments
 கள்ள உறவு ( கள்ள காதல் ) செய்த மனைவின் கழுத்தை கருவருத்த  கணவன்

செங்கல்பட்டு டவுனில் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 3 மகன்களும், 1 மகளும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.
 
மதுரையும், கவுரியும் தனி வீட்டில் வசித்து வந்தனர். கவுரிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் சில ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இந்த விஷயம் மதுரைக்கு ஏற்கனவே தெரிய வந்தது. இதையடுத்து அவர் மனைவியை கண்டித்து வந்தார். ஆனால் கவுரி அதை கண்டு கொள்ளவில்லை.
 
இந்த நிலையில் கவுரியின் கள்ளத் தொடர்பு நீடித்து வந்தது. இதனால் மனைவியை மதுரை மீண்டும் கண்டித்தார். நமது குடும்பம் கவுரவமான குடும்பம். மகன்கள் மற்றும் மகளுக்கும் நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்துள்ளோம். உன் நடத்தை மற்றவர்களுக்கு தெரிந்தால் குடும்ப மானம் போய் விடும் என்று அறிவுரை கூறினார்.
 
ஆனால் கணவர் கூறிய அறிவுரைகளை கவுரி கேட்க வில்லை. தொடர்ந்து கள்ளக்காதலனை சந்தித்து வந்தார். கள்ளக் காதல் விவகாரம் தொடர்பாக நேற்று இரவு கணவன்-மனைவி இருவருக்கும் நீண்ட நேரம் தகராறு நடந்தது. பின்னர் இருவரும் தூங்கச் சென்று விட்டனர். இன்று அதிகாலை மதுரை தூக்கத்தில் இருந்து எழுந்தார்.
 
வீட்டில் இருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்தார். இதில் கவுரி துடிக்க துடிக்க சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் மதுரை கத்தியுடன் செங்கல்பட்டு டவுன் போலீசில் சரண் அடைந்தார்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger