Monday 20 May 2013

பெரம்பலூர் அருகே டாக்டருடன் கள்ளத்தொடர்பு



பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 40), கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (34).

இவருக்கும் சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த ஓமியோபதி டாக்டர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றி சின்னச்சாமிக்கு தெரியவந்தது. உடனே அவர் மனைவியை கண்டித்து வந்தார். ஆனாலும் ஜெயலட்சுமி டாக்டருடனான கள்ளத் தொடர்பு கைவிடவில்லை.

இந்தநிலையில் ஜெயலட்சுமிக்கு குழந்தை பிறந்தது. இந்த குழந்தை கள்ளத்தொடர்பால் பிறந்தது என்று சின்னச்சாமி நினைத்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.


வழக்கம்போல் சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய சின்னச்சாமி மனைவி ஜெயலட்சுமியை ஆசைக்கு இணங்குமாறு அழைத்துள்ளார். அதற்கு ஜெயலட்சுமி மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சின்னச்சாமி ஜெயலட்சுமி தலையில் அரிவாளால் வெட்டினார். படுகாயம் அடைந்த ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். மனைவி இறந்ததை உறுதி செய்த சின்னச்சாமி தற்கொலை செய்யும் எண்ணத்தில் தன்னைத்தானே வெட்டிக்கொண்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அரும்பாவூர் போலீசார் அங்கு வந்து ஜெயலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இதுபற்றி விசாரணை நடத்தியதில் சின்னச்சாமி மனைவியை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger