Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Saturday, 17 August 2013

இளவரசன் மரணம் தற்கொலை தான் Illavarasan death was suicide Dharmapuri SP report to HC

- 0 comments
தர்மபுரியில் திவ்யாவை காதல் கலப்பு திருமணம் செய்த இளவரசன் மர்மமாக இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக அவரது தந்தை இளங்கோ மற்றும் உறவினர்களும் கூறினார்கள். ஆனால் அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதற்காக இளவரசன் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி அதற்கான அறிக்கையை சென்னை ஐகோர்ட்டில் தர்மபுரி எஸ்.பி. அஸ்ராகார்க் தாக்கல் செய்தார். தடயவியல் சோதனை முடிவு, ரெயில்வே ஊழியர்களின் வாக்குமூலம் உள்ளிட்ட விவரங்களை அந்த அறிக்கையில் கூறி இருந்தார்.
அந்த அறிக்கை விவரம் வருமாறு:–
இளவரசன் இறந்தது குறித்த புலன் விசாரணையின் போது, இறந்து போனவர் ஒரு தற்கொலை குறிப்பை விட்டுச் சென்றது புழக்கத்தில் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. விசாரித்ததில், அந்த தற்கொலை குறிப்பை எங்களால் கொணற முடிந்தது.
இறந்து போனவரின் பேன்ட் பாக்கெட்டிலிருந்து தற்கொலை குறிப்பை சம்பவ இடத்தில் அப்போதிருந்த ஒருவர் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. நாங்கள் சம்பவ இடம் செல்வதற்கு முன்பே அவர் அதை எடுத்து சென்று விட்டார். அவரை விசாரணை செய்ததில், அவர் அதை ஒப்புக் கொண்டார்.
தனது இறப்பிற்கு ஒருவரும் பொறுப்பு இல்லை என, திவ்யாவிற்கும் அவருடைய சொந்த குடும்பத்திற்கும் இளவரசன் தமிழில் எழுதிய நான்கு பக்க குறிப்பு சொன்னது. அந்த கடிதத்தின் நம்பகத் தன்மையை உறுதி செய்வதற்காக, அந்தக் கடிதத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்ட கையெழுத்துக்களையும் சரிபார்ப்பதற்காக அனுப்புகிறோம்.
அந்த தேதியில் நான் பத்திரிக்கையாளர்களுடன் பேசும் பத்திரிக்கை குறிப்பை சரி பார்த்துக் கொள்ளலாம் (நகல் இணைக்கப்பட்டுள்ளது).
அதன்படி 8–7–2013 அன்று, அந்த தற்கொலை குறிப்பு இறந்து போன இளவரசனின் ஒப்புக் கொள்ளப்பட்ட கையெழுத்துகளுடன் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் மூலமாக சென்னை, தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. 13–7–2013 அன்று கையெழுத்து நிபுணரின் பதில் கிடைக்கப்பெற்றது. கேட்கப்பட்டு உள்ளதும் ஒப்புக் கொள்ளப்பட்ட கையெழுத்துக்களும் ஒரே நபருடையதுதான் என சென்னை, தமிழக அரசு, தடய அறிவியல் துறையின் கையெழுத்து நிபுணர்கள் மூவர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று, 8–7–2013 அன்று வட்டார தடய அறிவியல் ஆய்வகம், சேலத்திற்கு உடல் உள்ளுருப்புகள் அனுப்பப்பட்டு, 12–7–2013 அன்று அதன் அறிக்கை பெறப்பட்டது. உடல் உள்ளுருப்புகளில் வயிறு, குடல், கல்லீரல், சிறு நீரகம், மூளை மற்றும் இரத்தத்தில் சாராயம் உள்ளதாக தடய அறிவியல் நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார். உடல் உள்ளுருப்பில் விஷம் இல்லை என நிபுணர் மேலும் கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, உபயோகப்படும்படியான தகவல்களை கொணருவதற்காக இறந்து போனவரின் உடலிருந்து கைப்பற்றப்பட்ட கைபேசியை சென்னை, தமிழக அரசு, தடய அறிவியல் துறைக்கு 10–7–2013 அன்று அனுப்பப்பட்டு, 13–7–2013 அன்று அறிக்கை பெறப்பட்டது.
இறந்து போன இளவரசன் மற்றும் திவ்யா ஆகியோருக்கிடையேயான உரையாடலின் ஒலிப்பதிவு அந்த கைபேசியில் இருந்தது. தனது இறப்பிற்கு சற்று நேரம் முன்பு தனது உறவினர் அறிவழகனுடனான தனது இரண்டு உரையாடல்களின் ஒலிப்பதிவும் அதில் உள்ளது. இதற்கிடையே, 11–7–2013 அன்று, அவர் இறப்பதற்கு சற்று முன்னர் பேசிய தனது நண்பர்களில் இரண்டு பேர் அதாவது சென்னையைச் சேர்ந்த மனோஜ்குமார் மற்றும் சித்தூரைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோரிடம் 164 குவிசன் கீழ் அரூர் நீதிமன்ற நடுவரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
தடய அறிவியல் ஆய்வகத்தால் கொடுக்கப்பட்ட ஒலிப்பதிவின்படியும் தனது இரண்டு நண்பர்கள் கார்த்திக் மற்றும் மனோஜ் குமார் ஆகியோரின் வாக்கு மூலத்தின்படியும் கீழ் கண்ட உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
1. தன்னுடன் திவ்யா திரும்பி வர மறுத்ததால் தான் மிகவும் கலங்கியிருப்பதாக தனது நண்பர்கள் கார்த்திக் மற்றும் மனோஜ்குமாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
2. தருமபுரி அரசு கலைக் கல்லூரி பின்புறமுள்ள இருப்புப்பாதையில் ஒரு வாழை மரத்தின் அருகில் அவர் மது அருந்தியுள்ளார்.
3. தற்கொலை செய்து கொள்ள அவர் விரும்பியுள்ளார்.
4. தனது இறப்பிற்குப் பிறகு தாஜ்மகாலைப் போன்று ஒரு நினைவாலயத்தை கட்டுமாறு தனது நண்பரிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
5. அந்தச் சமயத்தில் அவர் தனியாக இருந்துள்ளார்.
அதேபோன்று, இறந்து போன இளவரசனுடன் போனில் அவர் இறப்பதற்கு சற்று நேரம் முன்னதாக பேசிய அறிவழகன் (வயது 22), த/பெ சுப்பிரமணி, பாரதிபுரம், தருமபுரியை புலன் விசாரணை அதிகாரி விசாரித்துள்ளார். சித்தூருக்கு தன்னுடன் வர 4-7-2013 அன்று 12.00 மணிக்கு இறந்து போன இளவரசன் தன்னை அழைத்ததாக, காவல் துறை விசாரணையின்போது அறிவழகன் சொல்லியுள்ளார்.
தனது வீட்டிற்கு இறந்து போன இளவரசன் வராததால், 12–30 மணிக்கு அறிவழகன் அவரை அழைத்து அவரது இருப்பிடத்தை பற்றி கேட்டதற்கு, அருகில் இருப்பதாகவும், வருவதாகவும் இறந்து போன இளவரசன் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அவர் இணைப்பை துண்டித்துள்ளார். இருப்பினும், மேற்சொன்ன அழைப்புகள் உள்ள இறந்து போன இளவரசனின் கைபேசியின் ஒலிப்பதிவு எதிராக உள்ளது. தருமபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறமுள்ள இருப்புப்பாதையில் ஒரு வாழை மரத்தின் (உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவ இடம்) அருகில் மது அருந்தி கொண்டிருப்பதாக இறந்து போனவர் அறிவழகனுக்கு தெரிவித்துள்ளதாக ஒலிப்பதிவு காண்பிக்கிறது.
4–6–2013 அன்று திவ்யா இறந்துபோன இளவரசனின் வீட்டிலிருந்து வெளியேறி உள்ளார். தனது தாயாருடன் தற்சமயம் தங்க வேண்டுமென்று திவ்யா உயர்நீதி மன்றத்தில் 6–6–2013 அன்று தெரிவித்துள்ளார். இதனால் வெறுப்படைந்து இறந்துபோன இளவரசன் 7–6–2013 அன்று, சென்னை, தி.நகர், கன்னையா தெரு, ஜெமினி ரெசிடன்சி ஓட்லில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தனது இடது மணிக்கட்டில் ஒரு கூர் மையான பொருளால் அவர் காயமேற் கொண்டுள்ளார். அந்த ஓட்டலில் சந்தோஷ் மெஹ்ரா அறை பையனாக வேலை செய்து வருகிறார். 16–7–2013 அன்று, அரூர் நீதிமன்ற நடுவர் முன்பாக பதிவு செய்யப்பட்ட அவரது 164 குவிச வாக்குமூலம் இதனுடன் ஒத்துபோகிறது.
மேலும், திவ்யா தன்னை விட்டுப் போனதால் ஏற்பட்ட வெறுப்பினால் தனது கையை காயப்படுத்தி தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக இறந்து போன இளவரசனே திவ்யாவிடம் தொலை பேசியில் சொல்லியுள்ளார். திவ்யாவின் வாக்குமூலமும் புலன் விசாரணை அதிகாரியால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்மேலும், இளவரசனின் கைப்பேசியில் இருக்கும் திவ்யா மற்றும் இளவரசனிடையேயான உரையாடலின் ஒலிப்பதிவும், அவர் தற்கொலை எண்ணத்தில் இருந்தார் என தெரிவிக்கிறது.
4–7–2013 அன்று, முருகன் என்பவர் இளவரசனின் இறந்த உடலை எடுப்பதற்காக தருமபுரி இருப்புப் பாதை காவல் துறைக்கு உதவியுள்ளார். இருப்புப் பாதை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, இளவரசனின் இறந்த உடலை சம்பவ இடத்திலிருந்து அகற்றுவதற்காக மேற்சொன்ன முருகன் இருந்தார். அதைப் பார்த்த இறந்து போனவரின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் கொண்ட உணர்வுபூர்வ மிக்க கூட்டத்தினரால் முருகன் தாக்கப்பட்டதில், அவர் காயமடைந்துள்ளார். அந்தச் சமயத்தில், முருகனின் கையுரைகள் அவரது பாக்கெட்டிலிருந்து விழுந்து விட்டது.
இறுதியாக, 13–7–2013 அன்று, புதுதில்லி, அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கல்லூரியின் தடய அறிவியல் மருத்துவம் மற்றும் விஷமுறிவு பிரிவு துறைத் தலைவர் மற்றும் பேராசியர் தலைமையிலான நிபுணர் குழு, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மறு பிரேத பரிசோதனை நடத்தியது. இளவரசனின் உடல் கிடைத்த இடத்திற்கு அந்தச் குழு சென்று பார்வையிட்டு, குறிப்பு எடுத்துக் கொண்டது. ஓடும் தொடர்வண்டியின் பாதிப்பினால் உயிரழப்பு ஏற்படுத்தக்கூடிய காயங்கள் உட்பட குறிப்பிடப்பட்ட காயங்கள் ஏற்பட முடியும் என்று அவர்களின் மறு பிரேத பரிசோதனை மற்றும் சம்பவ இடத்தை பார்வையிட்ட பின்னர், அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இறந்து போனவரின் உடலின் எந்தப் பகுதியிலும், கொடுமை/உடல் ரீதியான வன்மை இருந்ததற்கான தடயம் ஏதும் இல்லை.
மூளை பாதிக்கப்பட்டும், இருப்புப் பாதையின் சுற்றிலும் சிதறிக் கிடந்ததும் தெரிவிக்கப்படுகிறது. புகைப் படங்களில் இதை காண முடியும்.
இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரி, கேள்வித் தொகுப்பை, தருமபுரி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்திய குழுவிற்கு அனுப்பினார். இதுவரை நடந்த புலன் விசாரணையுடன் ஒத்துப்போகும் அந்த கேள்வித் தொகுப்பும், அந்தக் குழுவினர் கொடுத்த விளக்கங்களும் உயர்நீதிமன்ற பரிசீலனைக்காக இணைக்கப்பட்டுள்ளன.
எனவே, இளவரசனின் மரணம் ஒரு கொலை என்பதற்கான ஐயப்பாட்டை உருவாக்கும் சந்தர்ப்ப/ உடல் ரீதியான/ஆவணபூர்வமான எந்த ஒரு தடயமோ, இது வரையில் நடைபெற்ற புலன் விசாரணையில் வெளி வரவில்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.
[Continue reading...]

Thursday, 15 August 2013

Dawood Ibrahim aide Iqbal Mirchi dies in london

- 0 comments

தாவூத் இப்ராகிமின் கூட்டாளியும் பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னனுமான இக்பால் மிர்ச்சி லண்டனில் மரணம் Dawood Ibrahim aide Iqbal Mirchi dies in london

 

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவன், தாவூத் இப்ராகிம்.

இவனுடன் மும்பையில் நிழல்உலக தாதாவாக வலம் வந்தவன் இக்பால் மிர்ச்சி. 1990களில் மும்பையில் இருந்து வெளிநாட்டிற்கு தப்பியோடிய இவனை தேடப்படும் குற்றவாளியாக மகாராஷ்டிரா போலீசார் அறிவித்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய 50 போதைப் பொருள் கடத்தல் மன்னர்களின் பெயர் பட்டியலில் இவனது பெயரும் இடம் பெற்றிருந்தது.

1993ல் நடந்த மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்திலும், 1994ம் ஆண்டு தனது கூட்டாளியான அமர் சுவர்னாவை கொன்ற வழக்கிலும் இவனை கைது செய்து தரும்படி இந்திய உளவுத்துறை சர்வதேச போலீசான ‘இன்டர்போல்’ அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.

1995-ம் ஆண்டு கிழக்கு லண்டனில் ஸ்காட்லாந்து யார்ட் போலீசார் இக்பால் மிர்ச்சியை கைது செய்து 1999-ம் ஆண்டு லண்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் 2001-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் இவன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என கூறி லண்டன் கோர்ட் விடுதலை செய்தது.

2001 முதல் இங்கிலாந்து பிரஜையாகி லண்டனில் வசித்து வந்த இக்பால் மிர்ச்சியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், லண்டனில் உள்ள வீட்டின் அருகே நடைபயிற்சிக்கு சென்ற இக்பால் மிர்ச்சி மாரடைப்பால் மரணமடைந்ததாக அவனது அண்ணன் காதிர் மேமன் அறிவித்துள்ளார்.

மும்பையில் சாதாரண டாக்சி டிரைவராக வாழ்க்கையை தொடங்கிய இவன், தாவூத் இப்ராகிமின் தொடர்பு ஏற்பட்ட பின்னர் போதைப் பொருள் கடத்தல் காரனாக மாறி கடத்தல் மன்னனாக உயர்ந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

[Continue reading...]

Tuesday, 13 August 2013

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்ற நரேந்திர மோடிக்கு அழைப்பு Narendra Modi gets invite to visit Britain

- 0 comments

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்ற
நரேந்திர மோடிக்கு அழைப்பு Narendra Modi
gets invite to visit Britain

பா.ஜனதா கட்சியின் தேர்தல்
பிரச்சாரக்குழு தலைவரும் குஜராத்
முதல்வருமான நரேந்திர மோடி,
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்ற
அழைக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து எதிர்க்கட்சியின் இந்திய
தொழிலாளர் நண்பர்கள் குழு தலைவர்
பேரி கார்டினர் எம்.பி. கடந்த வாரம் ஒரு கடிதம்
அனுப்பியிருந்தார். அதில், நவீன இந்தியாவின்
எதிர்காலம் என்ற தலைப்பில்
பாராளுமன்றத்தில் உரையாற்ற
வரும்படி அழைப்பு விடுத்திருந்தார்.
இதேபோல் கன்சர்வேட்டிவ் கட்சியின் இந்திய
நண்பர்கள் குழு தலைவர் சைலேஷ்
வாரா எம்.பி.யும் தனியாக ஒரு கடிதம்
அனுப்பியுள்ளார்.
2002-ல் நடந்த குஜராத்
கலவரங்களுக்கு பிறகு அமெரிக்காவைப்
போன்று இங்கிலாந்து அரசும்
மோடியை புறக்கணித்து வந்த நிலையில்,
இப்போது இரண்டு முக்கிய அரசியல் கட்சிகள்
ஒன்றுபட்டு மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

[Continue reading...]

Sunday, 11 August 2013

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: ஆந்திராவில் முழு அடைப்பு அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் Andhra complete blockage government employees on strike

- 0 comments

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: ஆந்திராவில்
முழு அடைப்பு அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்
Andhra complete blockage government
employees on strike

ஆந்திராவை இரண்டாக
பிரித்து தெலுங்கானா மாநிலம்
உருவாக்கப்படும் என மத்திய
அரசு அறிவித்ததற்கு கடலோர ஆந்திரா,
ராயலசீமா பகுதி மக்கள் கடும்
எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாநில
பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருங்கிணைந்த
ஆந்திர மாநிலமே நீடிக்க வேண்டும்
என்று வலியுறுத்தியது.
கடந்த 12 நாட்களாக கடலோர ஆந்திரா,
ராயலசீமா பகுதியில் கடை அடைப்பு,
சாலை மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற
பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
இதனால் பள்ளி, கல்லூரிகள்
விடுமுறை விடப்பட்டது.
இன்று நள்ளிரவு முதல் போராட்டம்
தீவிரமாகிறது.
கடலோர ஆந்திரா, ராயலசீமா உள்ளடக்கிய
சீமாந்திரா பகுதியில் உள்ள 13 மாவட்டங்களில்
பணியாற்றும்
அனைத்து அரசு துறை ஊழியர்களும்
இன்று நள்ளிரவு முதல் காலவரையற்ற
வேலை நிறுத்தத்தில் குதிக்கிறார்கள். இந்த
மாட்டங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம்
அரசு ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். பஸ்
ஊழியர்கள், கூட்டுறவு, மின்சாரம்,
ஆசிரியர்கள், டாக்டர்கள், வக்கீல்கள் என
அனைத்து பிரிவு ஊழியர்களும்
வேலை நிறுத்தத்தில் குதிக்கிறார்கள். இதனால்
அத்தியாவசிய பணிகள் கூட பாதிக்கும்
அபாயம் ஏற்பட்டுள்ளது.
பஸ் ஊழியர்கள்
நேற்று நள்ளிரவு முதலே பஸ்களை டெப்போக்களில்
நிறுத்தி விட்டனர். இதனால் இன்று பஸ்கள்
எதுவும் ஓடவில்லை. 123 டெப்போக்களில்
பணியாற்றும் போக்குவரத்து கழக ஊழியர்கள்
70 ஆயிரம் பேர் வேலை நிறுத்தத்தில்
ஈடுபடுவதால் பஸ் போக்குவரத்து முற்றிலும்
முடங்கி போனது.
பந்த் போராட்டத்தின் போதும் திருப்பதியில்
இருந்து திருமலைக்கு பஸ்
போக்குவரத்து நடப்பது உண்டு. ஆனால்
அவர்களும் வேலை நிறுத்தத்தில்
குதிக்கிறார்கள். மேலும் ஏழுமலையான்
கோவில் ஊழியர்களும் போராட்டத்தில்
ஈடுபடுகிறார்கள். இதனால் திருப்பதி வந்துள்ள
பக்தர்கள் பாதிக்கப்படக்கூடும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவில் ரெயில்
போக்குவரத்து மட்டுமே நடப்பதால்
ரெயில்களில் கட்டுக்கடங்காத வகையில்
பயணிகள் நிரம்பி வழிகிறார்கள். ரெயிலில்
ஏறுவதற்கு நெரிசலும் தள்ளுமுள்ளும்
ஏற்படுகிறது. இடம் கிடைக்காதவர்கள் ரெயில்
ஜன்னல்களில் தொங்கியபடி பயணிக்கிறார்கள்.
பந்த் போராட்டம் காரணமாக காய்கறிகள்
விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.
வெங்காயம் கிலோ 80
ரூபாய்க்கு விற்கப்படுகிறது

[Continue reading...]

Wednesday, 7 August 2013

பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுங்கள் - உயிரிழந்த வீரரின் மனைவி ஆவேசம்

- 0 comments

நஷ்ட ஈடாக பணம் வேண்டாம் பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுங்கள்: உயிரிழந்த வீரரின் மனைவி ஆவேசம்

காஷ்மீர் மாநில எல்லை அருகே பூஞ்ச் பகுதியில் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். இதில் 4 பேர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று பீகார் மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து உயிரிழந்த வீரர்களில் ஒருவரான விஜய் ராயின் மனைவி புஷ்பா ராய் கூறும்போது, ‘எல்லையில் நமது வீரர்கள் கொல்லப்படுகிறார்கள், தலை துண்டிக்கப்படுகிறார்கள். இவற்றுக்கு எதிராக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எவ்வளவு காலம் தான் பாகிஸ்தானின் இதுபோன்ற தாக்குதல்களை பொறுக்க முடியும். 10 லட்ச ரூபாய் கொண்டு எனது கணவரின் உயிரை திரும்ப பெற முடியுமா? எங்களுக்கு எந்த வித நஷ்ட ஈடும் வேண்டாம். பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுங்கள், அது போதும்’ என்றார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, உயிரிழந்த மற்றொரு வீரரான நாயக் பிரேம்நாத் சிங்கின் உறவினர்கள் பீகார் மாநிலம் சாப்ரா பகுதியில் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
[Continue reading...]

இந்தியாவின் முதல் தாய்ப்பால் வங்கி

- 0 comments

குழந்தைகளுக்கு தாய்ப்பாலைப் போன்ற
சத்தான ஆகாரம் எதுவும் இல்லை. ஆனால்
தாய்ப்பால் கொடுத்தால் தங்கள்
அழகு போய்விடுமோ என தவறாக கருதி பல
தாய்மார்கள் பால் தருவதில்லை.
வேலைக்கு செல்லும் தாய்மார் தங்கள்
குழந்தைகளுக்கு பால் தர இயல்வதில்லை.
பிரசவத்தின்போது தாய் இறந்துவிட்டாலும்
சேய்க்கு தாய்ப்பால் கிடைக்காமல் போகிறது.
இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்டும்
வகையில் மேற்கு வங்காள மாநிலத்தின்
தலைநகர் கொல்கத்தாவில், நாட்டின்
முதலாவது பொதுத்துறை தாய்ப்பால்
வங்கி நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
மாநில முதல்-
மந்திரி மம்தா பானர்ஜி இதை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், பிறந்த
ஒரு குழந்தையின் அடிப்படைத்
தேவையை இந்த புதுமையான திட்டம்
நிறைவேற்றி வைக்கும். மிகுந்த கவனத்துடன்
அதிநவீன வசதிகளுடன் இந்த தாய்ப்பால்
வங்கி தொடங்கப்பட்டுள்ளது. எனவே இதில்
தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு இல்லை.
தாய்ப்பால் பெற முடியாத
குழந்தைகளுக்கு இங்கு தாய்ப்பால் கிடைக்கும்
என குறிப்பிட்டார்.

[Continue reading...]

Tuesday, 6 August 2013

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில், நாளை கருணாநிதி உண்ணாவிரதம்

- 0 comments
 ஏன்  ?  இந்த கொலைவெறி ....!
யாருக்காவது சீட்  வேணுமா ? 


இல்லை தாயாளு அம்மாளை  காபாத்தவா ?
நல்லதொரு குடும்பத்தலைவன் நீ !



இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தின் 13–வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும், இலங்கையில் நடைபெற உள்ள   ‘‘காமன்வெல்த்’’ மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தியும், தமிழக மீனவர்களை பாது காத்திடவும், இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றத்தை தடுத்திடவும், டெசோ அமைப்பு சார்பில் நாளை தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சென்னை வள்ளூவர் கோட்டம் அருகில் நாளை காலை 9.30 மணிக்கு நடை பெறும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பங்கேற்று கண்டன உரை நிகழ்த்துகிறார். தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் முன்னிலை வகிக்கின்றனர். இதில் பேராசிரியர் சுபவீர பாண்டியன் உள்பட பலர் பங்கேற்று பேசுகின்றனர்.
தென் சென்னை மாவட்ட சென்னை மாவட்டம் சார்பில் நடைபெறும் இந்த போராட்டத்தில் ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்க உள்ளனர்.
இதேபோல் காஞ்சீபுரத்தில் கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அன்பரசன் தலைமை தாங்குகிறார். முன்னாள் அமைச்சர் துரைமுருகன் சிறப்புரையாற்றுகிறார். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
[Continue reading...]

கள்ளக் காதலியின் 2 மாத குழந்தையை ஆன்லைனில் 100 டாலருக்கு விற்க முயன்றவன் கைது

- 0 comments
அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த பால் மார்குவெஸ்(23) என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் ஆன் லைன் மூலம் ஓர் இளம் பெண்ணுக்கு அறிமுகம் ஆனார்.

கணவரை இழந்து தனிமையில் வாழ்ந்த அந்த பெண்ணுடன் பால் மார்குவெஸ் கள்ளத் தொடர்பு வைத்துக்கொண்டு ஒரே வீட்டில் சந்தோஷமாக வசித்து வந்தார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் கள்ளக் காதலிக்கு பழைய கணவன் மூலம் கருத்தரித்த குழந்தை பிறந்தது.
[Continue reading...]

Friday, 2 August 2013

நடிகர் பரத்தும், நடிகை ஷம்முவும்

- 0 comments
நடிகர் பரத்தும், நடிகை ஷம்முவும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரகாஷ்ராஜ் தயாரித்து, நடித்த ‘காஞ்சிவரம்’ என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷ்மமு. அதன்பிறகு தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
பரத்துடன் இணைந்து இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

பரத்துடன் நடித்தபோது இவர்களிடைய காதல் தொற்றிக் கொண்டதாம். பின்னர், ஷம்முவுக்கு படவாய்ப்பு இல்லாமல் போகவே, அமெரிக்காவுக்கு பறந்து போனார். இருந்தாலும் இவர்களிடையே இருந்த காதல் குறையவில்லையாம்.

 இருவரும் தொடர்பிலேயே இருந்து வந்துள்ளார்கள்.
இந்நிலையில், பரத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றதும், மணப்பெண் ஷம்முவாகத்தான் இருக்கும் என்று கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு ஒரு காரணமும் கூறப்படுகிறது.

அதாவது, பரத்தின் நண்பர்கள் ஷம்முவை அண்ணி, என்றுதான் அழைப்பார்களாம். ஆனால் பரத் தரப்பு இந்த செய்தியை மறுத்துள்ளதுடன், ஒரு நடிகையை எந்தக் காலத்திலும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் கூறுகிறார்.
[Continue reading...]

Monday, 29 July 2013

தெலுங்கானா அறிவிப்பு இன்று மாலை துணை ராணுவம் ஆந்திரா விரைந்தது

- 0 comments
ஆந்திரா மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு டெல்லியில் கூடுகிறது. அதில் தெலுங்கானாவுக்கு ஒப்புதல் பெறப்படும்.
இதைத்தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள் மட்டுமின்றி ஆந்திர முதல்– மந்திரி கிரண்குமார் ரெட்டி, துணை முதல்– மந்திரி தாமோதர் ராஜா நரசிம்மா, மாநில காங்கிரஸ் தலைவர் போட்சா சத்திய நாராயணா ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். இதற்காக அவர்கள் இன்று காலை ஐதராபாத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றனர்.
இந்த கூட்டத்தில் தெலுங்கானா பற்றிய அனைத்து அம்சங்களும் விவாக்கப்பட உள்ளது. பிறகு தெலுங்கானா மாநிலம் அமைக்க தீர்மானம் கொண்டு வரப்படும். இதை யடுத்து தெலுங்கானா மாநிலம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றே வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கானா மாநிலம் உருவாவது 100 சதவீதம் உறுதியாகிவிட்டதால் ஆந்திராவில் இதுவரை இல்லாத அளவுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடலோ ஆந்திரா மற்றும் ராயலசீமா மாவட்டங்களில் நேற்றே பல இடங்களில் போராட்டங்கள் தொடங்கிவிட்டது. மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வீடு முன்பு பொதுமக்களும், மாணவர்களும் திரண்டு நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விசாகப்பட்டினத்தில் மத்திய மந்திரி புரந்தேஸ்வரி வீடு முன்பும், எலுருவில் மத்திய மந்திரி கே.எஸ்.ராவ் வீடு முன்பும், விஜயவாடாவில் மத்திய மந்திரி ராஜகோபால் வீடு முன்பும் மாணவர்கள் இன்று ஆயிரக்கணக்கில் திரண்டு ஒன்றுபட்ட ஆந்திரா நீடிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் போராட் டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
தலைநகர் ஐதராபாத்திலும் இன்று ஆந்திரா பிரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் வெடித்தது. இதனால் ஆந்திராவில் குறிப்பாக கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் அறிவிப்பு வெளியான பிறகு ஆந்திராவில் போராட்டங்கள் பெரிய அளவில் நடைபெறலாம். இதனால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட கூடும் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை நேரடியாக தலையிட்டு ஆந்திராவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி வருகிறது.
மத்திய உள்துறை மந்திரி சுசீல்குமார் ஷிண்டே ஆந்திரா தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பி.யை இன்று காலை தொடர்பு கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து ஆந்திராவுக்கு கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்பி வைக்க ஏற்பாடுள் நடந்து வருகிறது.
ஆந்திராவில் மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் பணியில் சுமார் 4 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இவர்கள் தவிர ஆந்திராவின் பல பகுதிகளிலும் சுமார் 1200 துணை நிலை ராணுவ வீரர்களை மத்திய அரசு நிறுத்தி இருந்தது. நேற்று கூடுதலாக 1000 ராணுவ வீரர்கள் ஆந்திரா விரைந்தனர்.
கடலோர ஆந்திரா மாவட்டங்களில் போராட்டம் வலுப்பதால் மேலும் 20 கம்பெனி ராணுவப்படை வீரர்கள் ஆந்திராவுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். அந்த 20 கம்பெனி படையில் திபெத் எல்லைப் படை வீரர்கள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள், எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் உள்ளனர். இவர்கள் அனைவரும் கடலோர ஆந்திரா, ராயல சீமா பகுதிகளில் முக்கிய நகரங்களில் நிறுத்தப்படுவார்கள்.
ஐதராபாத் நகரில் கர்நாடகா ஆயுதப்படை போலீசார் 200 பேரும், தமிழக ஆயுதப்படை போலீசார் 100 பேரும் குவிக்கப்பட்டுள்ளனர். ஐதராபாத்தில் உள்ள முக்கிய நிலை களை பாதுகாக்கும் பொறுப்பு இவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர அதிரடிப்படையும் ஆந்திராவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகாகுளம், விஜி நகரம், விசாகப்பட்டினம், கிருஷ்ணா மாவட்டங்களில் அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். சீமந்திரா மண்டலத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
[Continue reading...]

சென்னை யில் வேலை செய்யும் பெண்களின் நிலமை ? - கற்பழித்த கொல்லப்பட்ட பெண்

- 0 comments
தயவுசெய்து இதனை பகிருங்கள்
உண்மை சம்பவம் ... முழுவதும்
படித்துவிட்டு அனைவரும் பகிரவும்! ! ! !
....குழி தோண்டி புதைக்கப்படும் உண்மைகள்...
சென்னை தி.நகரில் உள்ள சரவணா மற்றும்
ஜெயசந்திரன் குழுமங்களில்
வெளியூர்களை சேர்ந்த பெண்கள் பெருமளவில்
தங்கி வேலை செய்து வருகின்றனர்.
இது போன்ற நிறுவனங்களில் பணிபுரியும்
பெண்கள் மிக மோசமாகவும், கீழ்த்தரமாகவும்
நடத்தபடுகின்றனர
பெரும்பாலான பெண்கள்
[Continue reading...]

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 96 உயர்வு ரூ.21 ஆயிரத்தை தாண்டியது gold rate again increased 21 thousands

- 0 comments
சில மாதங்களாக ஜெட் வேகத்தில் விர்ரென உயர்ந்த தங்கம் விலை ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்தை தொட்டது. பின்னர் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை வீழ்ச்சியின் காரணமாக கடந்த ஜூன் மாதம் 28–ந்தேதி ஒரு பவுன் ரூ. 19 ஆயிரத்து 168 ஆக குறைந்தது.


பிறகு படிப்படியாக அதிகரித்து கடந்த 26–ந்தேதி ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 984 ஆனது. இந்த நிலையில் இன்று பவுனுக்கு மேலும் ரூ.96 உயர்ந்தது.
அதன் மூலம் பவுன் மீண்டும் ரூ.21 ஆயிரத்தை தாண்டியது. இன்று ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 80 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.12 அதிகரித்து ரூ.2635–க்கு விற்கிறது.


தங்கம் விலை உயர்வுக்கு அமெரிக்க டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதே முக்கிய காரணமாக கருதப் படுகிறது.
வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.650 அதிகரித் துள்ளது. ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்து 710 ஆகவும், ஒரு கிராம் ரூ.43.60 ஆகவும் உள்ளது.

[Continue reading...]

Saturday, 27 July 2013

ஓடும் ரெயிலில் இளம்பெண்ணை மானபங்கம் செய்த வாலிபர்

- 0 comments

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த
ஞாயிற்றுக்கிழமை, ரெயிலில் சென்ற
இளம்பெண்ணை ஒரு ஆசாமி மானபங்கம்
செய்துள்ளான். செல்போனை பிடுங்கியதுடன்,
அவரை கற்பழிக்க முயன்றதாகவும் தெரிகிறது.
உதவிக்கு ஆள் இல்லாததால் மானத்தைக்
காப்பாற்றிக் கொள்ள அந்த பெண், பேலூர் என்ற
இடத்தில் ரெயில் சென்றபோது கீழே குதித்தார்.
இதில் பலத்த காயம் அடைந்து மயங்கி கிடந்த
அந்த பெண்ணை உள்ளூர் மக்கள்
காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறிய
முதல்வர் மம்தா பானர்ஜி, தேவையான
மருத்துவ செலவை ஏற்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், ஓடும் ரெயிலில்
இளம்பெண்ணை மானபங்கம் செய்த வழக்கில்,
உத்தர்பாராவைச் சேர்ந்த தேப்சங்கர் சாவ் (36)
என்பவரை கொல்கத்தா போலீசார்
நேற்று கைது செய்துள்ளனர்.

[Continue reading...]

Friday, 26 July 2013

டாக்டரின் மர்ம உறுப்பை மனைவிக்கு பார்சல் அனுப்பிய பெண்

- 0 comments

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள
ரணியா பகுதியில் கடந்த 21-ம் தேதி டாக்டர்
சத்தீஷ் சந்திரா (42), என்பவர் மர்மமான
முறையில் கொல்லப்பட்டார்.

ரணியா பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில்
கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமான
முறையில் அவர் இறந்து கிடந்தார்.
அவரது மர்ம உறுப்பையும்
கொலயாளி துண்டித்திருந்ததால் இந்த
கொலையின் பின்னணி பற்றி போலீசார்
பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், இறந்து கிடந்த டாக்டரின்
மனைவிக்கு ஒரு பார்சல் ‘கொரியர்’ மூலம்
அனுப்பட்டது.

அந்த பார்சலில் இருந்து ரத்தம் வடிந்ததால்
சந்தேகப்பட்ட கொரியர் நிறுவன ஊழியர்கள்
போலீசில் புகார் அளித்தனர்.
பார்சலை பிரித்து பார்த்த போலீசார்
திகைப்படைந்தனர்.
கொரியர் நிறுவன ஊழியர்கள் கூறிய
அடையாளங்களை அடிப்படையாக
வைத்து போலீசார்
ஒரு பெண்ணை கைது செய்தனர்.
டாக்டரை கொன்றது ஏன் ? என்பது தொடர்பாக
போலீசாரிடம் வாக்குமூலம்
அளித்த அந்த

பெண் கூறியதாவது:-
சுமார் 13 வருடங்களாக
எனக்கு போதை ஊசி போட்டு டாக்டர்
என்னை தொடர்ந்து கற்பழித்து வந்தார்.

இதேபோல் கடந்த 16-ம் தேதி எனக்கு போன்
செய்து ரணியாவில் உள்ள
லாட்ஜுக்கு வரவழைத்தார்.
சம்பவத்தன்று நாங்கள் இருவரும் லாட்ஜ்
அறையில் ஒன்றாக மது குடித்தோம்.

போதையில் இருந்த டாக்டரின்
கழுத்தை அறுத்துக் கொன்றேன். மர்ம
உறுப்பையும்
வெட்டி எடுத்து அவரது மனைவிக்கு கொரியர்
மூலம் பார்சலாக அனுப்பி வைத்தேன்.
இவ்வாறு அந்த பெண் வாக்குமூலம்
அளித்துள்ளார்.
அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல்
இருப்பதாகவும், இதற்காக
அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும்
போலீசார் தெரிவித்தனர்.

[Continue reading...]

என்ன கொடுமை சார் இது ? எய்ட்ஸ் நோயால் பெற்றோர் மரணம்: அனாதையான 4 சிறுவர்களை சுடுகாட்டில் குடிவைத்த கிராம மக்கள்

- 0 comments

எய்ட்ஸ் நோயால் பெற்றோர் மரணம்: அனாதையான 4 சிறுவர்களை சுடுகாட்டில் குடிவைத்த கிராம மக்கள்


உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தம்பதியர் இறந்துவிட்டனர். இதனால் அவர்களின் பிள்ளைகளுக்கும் அந்த நோய் இருக்கும் என்று அவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அஞ்சினர். இதுபற்றி ஊர் பெரியவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.

அப்போது எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களின் மகன்கள் 4 பேரையும், ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள சுடுகாட்டில் தங்க வைக்க முடிவு செய்தனர். அதன்படி சிறுவர்கள் 4 பேரும் அவர்களின் பெற்றோரின் கல்லறை அருகில் கூடாரம் அமைத்து 2 மாதமாக வசித்து வருகின்றனர். ஊரில் இருந்து யாராவது உணவு கொடுத்தால் அதை வாங்கி சாப்பிட்டு வேதனையுடன் தங்கள் பொழுதைக் கழிக்கின்றனர்.

இது தொடர்பாக அந்த சிறுவர்களில், 17 வயதான மூத்த சிறுவன் நிருபர்களிடம் கூறுகையில், "என் தந்தை எய்ட்ஸ் நோயால் இறந்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து தாயும் எய்ட்ஸ் நோயால் இறந்துவிட்டார். அதன்பின்னர் நான், எனது உறவினர்களுடன் கிராமத்திலேயே வசிக்க விரும்பினேன். ஆனால், எங்களுக்கும் எய்ட்ஸ் இருக்கும் என பயந்து வெளியேற்றிவிட்டனர்" என்றான்.

இதுபற்றி தகவல் அறிந்த மாநில சுகாதாரக் குழுவினர் அங்கு சென்று சிறுவர்களுக்கு எய்ட்ஸ் பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளது. எய்ட்ஸ் பரிசோதனையில் அவர்களுக்கு நோய் பாதிப்பு இல்லை என்று தெரிந்தால் மட்டுமே அவர்களை மீண்டும் ஊருக்குள் அழைத்து வருவோம் என்று அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே பசி பட்டினியால் சுடுகாட்டிற்கு விரட்டியடிக்கப்பட்ட அந்த சிறுவர்களுக்கு, அரசு இப்போது இலவச வீடு ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் அவர்களுக்கு வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்போருக்கான ரேஷன் கார்டு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் உணவுப் பொருட்கள் மட்டுமின்றி மற்ற நலத்திட்ட பயன்களையும் பெற முடியும். ஆனால் உறவினர்கள், கிராம மக்களின் ஆதரவு இல்லாமல், அரசின் இத்தகைய உதவிகள் மட்டுமே அந்த சிறுவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உதவுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த முதல்வர் அகிலேஷ் யாதவ், "பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். மேலும் அவர்களை சுடுகாட்டில் இருந்து அரசு விருந்தினர் மாளிகைக்கு உடனடியாக மாற்றும்படி உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.
[Continue reading...]

Thursday, 25 July 2013

பீகாரில் 2 நாட்களில் 3 பெண்கள் கற்பழிப்பு 2 days 3 women torture in bihar

- 0 comments
டெல்லி, உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் கற்பழிப்பு சம்பவங்கள் பெருகி விட்டன. பீகாரில் இந்த வாரம் 2 நாட்களில் 2 பெண்களும், ஒரு சிறுமியும் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
முதலாவது சம்பவம் திங்கட்கிழமை இரவு நடந்தது. அர்வால் மாவட்டம் கிண்டார் ரோடு பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண் கணவர் மீது புகார் கொடுப்பதற்காக கோர்ட்டுக்கு வந்து இருந்தார்.

இரவு 7 மணி ஆகி விட்டதால் வீடு திரும்புவதற்காக காத்து இருந்தார். அப்போது ஒரு மினி பஸ் வந்தது. அதில் 2 டிரைவர்கள் இருந்தனர். அவர்கள் அந்த பெண்ணை வீட்டில் விடுவதாக ஏமாற்றி ஏற்றிச் சென்று ஓடும் பஸ்சில் ஒருவர் மாறி ஒருவர் கற்பழித்தனர்.
[Continue reading...]

கம்ப்யூட்டர் விற்பனை 8 சதவீதம் வளர்ச்சி காணும்

- 0 comments
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நாட்டின் கம்ப்யூட்டர் விற்பனை, 121.10 லட்சமாக அதிகரிக்கும். இது, கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 8சதவீதம் அதிகம் என, தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பு (எம்.ஏ.ஐ.டி.,) தெரிவித்துள்ளது.

கம்ப்யூட்டர்சந்தையில், "டேப்லெட்' வகை கம்ப்யூட்டர் விற்பனை வளர்ச்சி சிறப்பான அளவில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், இவ்வகை கம்ப்யூட்டர் விற்பனை, 424சதவீதம் அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது.சென்ற 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவில், 113.10 லட்சம் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, இதற்கு முந்தைய நிதியாண்டு விற்பனையுடன் (108.20 லட்சம்) ஒப்பிடுகையில், 5சதவீதம் அதிகமாகும்.

சென்ற நிதியாண்டில், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் விற்பனை, 1சதவீதம் வளர்ச்சி கண்டு, 67.69 லட்சமாக உயர்ந்துள் ளது. இதன் மூலம் கிடைத்த வருவாய் 13,468 கோடி ரூபாயாக இருந்தது. இவை, இதற்கு முந்தைய நிதியாண்டில், முறையே, 67.12 லட்சம் மற்றும் 13,527 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தன.
மேலும், நோட்புக் கம்ப்யூட்டர் விற்பனை, 16சதவீதம் வளர்ச்சி கண்டு, 37.24 லட்சத்திலிருந்து (ரூ. 10,318 கோடி வருவாய்), 43.08 லட்சமாக (ரூ.11,804 கோடி வருவாய்) உயர்ந்துள்ளது.அதேசமயம், சென்ற நிதியாண்டில், செர்வர் விற்பனை, 2சதவீதம்சரிவடைந்து, 90,699 என்ற எண்ணிக்கையிலிருந்து (ரூ.1,637 கோடி வருவாய்), 89,075 ஆக (ரூ.1,610 கோடி வருவாய்) குறைந்து உள்ளது என, எம்.ஏ.ஐ.டி., மேலும் தெரிவித்து உள்ளது.

ஜூலை 25,2013 தினமலர்
[Continue reading...]

Wednesday, 24 July 2013

டி.வி. பெண் தொகுப்பாளர் மானபங்கம்

- 0 comments
மும்பையைச் சேர்ந்த தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் தனது தந்தை மற்றும் இரண்டு நண்பர்களுடன் கொல்கத்தா வந்திருந்தார். நேற்று முன்தினம் அவர்கள் உணவு வாங்குவதற்காக ஹவுரா ரெயில் நிலையம் அருகே காரை நிறுத்தினர். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி, காருக்குள் இருந்த பெண் தொகுப்பாளரின் கையைப் பிடித்து இழுத்து மானபங்கம் செய்துள்ளான்.
[Continue reading...]

நடிகை மஞ்சுளா உடல் தகனம்: நடிகர் நடிகைகள் அஞ்சலி Actress Manjula body cremated

- 0 comments
நடிகை மஞ்சுளா சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். நடிகர்கள் சிவகுமார், சத்யராஜ், சூர்யா, ராதாரவி, சந்திரசேகர், அதர்வா, மன்சூர் அலிகான், சிங்கமுத்து, ராஜா, நடிகைகள் ஜோதிகா, ஸ்ரேயா ரெட்டி, டைரக்டர்கள் சேரன், ஆர்.வி.உதயகுமார் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

மஞ்சுளா உடல் பிற்பகல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் ஏற்றப்பட்டு இறுதி சடங்கு நடந்தது. அப்போது அவரது கணவரும், நடிகருமான விஜயகுமார், மகள்கள் ப்ரீத்தா, ஸ்ரீதேவி, வனிதா ஆகியோர் கதறி அழுதனர்.
பின்னர் மஞ்சுளா உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு போரூரில் உள்ள மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு கணவரும் நடிகருமான விஜயகுமார் தீ மூட்டினார்.
மஞ்சுளா மறைவுக்கு நடிகர், நடிகைள் டுவிட்டரில் அனுதாபம் தெரிவித்து உள்ளனர்.

நடிகை குஷ்பு கூறியிருப்பதாவது:–
மஞ்சுளா இல்லாமல் வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியவில்லை. அவர் அழகான பெண் ரொம்ப நேசிக்கிறேன். எனது குழந்தைகள் அன்பான பாட்டியை இழந்துள்ளனர். எனக்கும் சுந்தர்சிக்கும் திருமணம் நடக்க காரணமாக இருந்தவர், என் சந்தோஷத்துக்கு காரணம் அவர்தான்.

நடிகை ராதிகா கூறி இருப்பதாவது:–
மஞ்சுளா அக்கா அன்பானவர். அவருடன் இருந்த இனிய நாட்களை நினைத்து பார்க்கிறேன். என் மேல் நிறைய அன்பு காட்டினார்.
தனுஷ் மனைவி ஐஸ்வர்யா சொல்கிறார், மஞ்சுளா எல்லோரிடமும் பாசமாக இருப்பார். நல்ல அம்மா சிறந்த தோழி.

நடிகை திரிஷா கூறியிருப்பதாவது:–
மஞ்சுளா எப்போதுமே என் நலன் விசாரிப்பார். என்னை வாழ்த்தவும் செய்வார். அவரை இழந்தது பெரிய வலி ஏற்பட்டுள்ளது. மஞ்சுளா குடும்பத்தினர் இந்த இழப்பில் இருந்து மீண்டு சகஜ நிலைக்கு வர இறைவனை வேண்டுகிறேன். என் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
[Continue reading...]

Tuesday, 23 July 2013

9 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்த தோழியின் தந்தை

- 0 comments
அரியானா மாநிலம், குர்கான் 31வது செக்டர் பகுதியில் வசிக்கும் 9 வயது மாணவி தனது பள்ளித் தோழியை சந்திக்க கடந்த திங்கட்கிழமை அவளது வீடு தேடி சென்றாள்.

வீட்டில் அந்த மாணவியின் தந்தை மட்டும் தனியே இருந்தார்.

உன் தோழி கடைக்கு போய் இருக்கிறாள். அவள் வரும் வரை உள்ளே வந்து உட்கார் என்று கூறிய அவர் சிறுமி உள்ளே நுழைந்ததும் கதவு, ஜன்னல்களை மூடிவிட்டு அவளை பலவந்தப்படுத்தி கற்பழித்தார்.

அவரது பிடியில் இருந்து விடுபட்டு தனது வீட்டிற்கு ஓடிச்சென்ற சிறுமி, நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறி அழுதாள்.

அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

பரிசோதனை முடிவில் அவள் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானதால் குற்றம் சாட்டப்பட்ட செடிலால் (60) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger