Sunday 11 August 2013

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: ஆந்திராவில் முழு அடைப்பு அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் Andhra complete blockage government employees on strike

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: ஆந்திராவில்
முழு அடைப்பு அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்
Andhra complete blockage government
employees on strike

ஆந்திராவை இரண்டாக
பிரித்து தெலுங்கானா மாநிலம்
உருவாக்கப்படும் என மத்திய
அரசு அறிவித்ததற்கு கடலோர ஆந்திரா,
ராயலசீமா பகுதி மக்கள் கடும்
எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாநில
பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருங்கிணைந்த
ஆந்திர மாநிலமே நீடிக்க வேண்டும்
என்று வலியுறுத்தியது.
கடந்த 12 நாட்களாக கடலோர ஆந்திரா,
ராயலசீமா பகுதியில் கடை அடைப்பு,
சாலை மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற
பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
இதனால் பள்ளி, கல்லூரிகள்
விடுமுறை விடப்பட்டது.
இன்று நள்ளிரவு முதல் போராட்டம்
தீவிரமாகிறது.
கடலோர ஆந்திரா, ராயலசீமா உள்ளடக்கிய
சீமாந்திரா பகுதியில் உள்ள 13 மாவட்டங்களில்
பணியாற்றும்
அனைத்து அரசு துறை ஊழியர்களும்
இன்று நள்ளிரவு முதல் காலவரையற்ற
வேலை நிறுத்தத்தில் குதிக்கிறார்கள். இந்த
மாட்டங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம்
அரசு ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். பஸ்
ஊழியர்கள், கூட்டுறவு, மின்சாரம்,
ஆசிரியர்கள், டாக்டர்கள், வக்கீல்கள் என
அனைத்து பிரிவு ஊழியர்களும்
வேலை நிறுத்தத்தில் குதிக்கிறார்கள். இதனால்
அத்தியாவசிய பணிகள் கூட பாதிக்கும்
அபாயம் ஏற்பட்டுள்ளது.
பஸ் ஊழியர்கள்
நேற்று நள்ளிரவு முதலே பஸ்களை டெப்போக்களில்
நிறுத்தி விட்டனர். இதனால் இன்று பஸ்கள்
எதுவும் ஓடவில்லை. 123 டெப்போக்களில்
பணியாற்றும் போக்குவரத்து கழக ஊழியர்கள்
70 ஆயிரம் பேர் வேலை நிறுத்தத்தில்
ஈடுபடுவதால் பஸ் போக்குவரத்து முற்றிலும்
முடங்கி போனது.
பந்த் போராட்டத்தின் போதும் திருப்பதியில்
இருந்து திருமலைக்கு பஸ்
போக்குவரத்து நடப்பது உண்டு. ஆனால்
அவர்களும் வேலை நிறுத்தத்தில்
குதிக்கிறார்கள். மேலும் ஏழுமலையான்
கோவில் ஊழியர்களும் போராட்டத்தில்
ஈடுபடுகிறார்கள். இதனால் திருப்பதி வந்துள்ள
பக்தர்கள் பாதிக்கப்படக்கூடும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவில் ரெயில்
போக்குவரத்து மட்டுமே நடப்பதால்
ரெயில்களில் கட்டுக்கடங்காத வகையில்
பயணிகள் நிரம்பி வழிகிறார்கள். ரெயிலில்
ஏறுவதற்கு நெரிசலும் தள்ளுமுள்ளும்
ஏற்படுகிறது. இடம் கிடைக்காதவர்கள் ரெயில்
ஜன்னல்களில் தொங்கியபடி பயணிக்கிறார்கள்.
பந்த் போராட்டம் காரணமாக காய்கறிகள்
விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.
வெங்காயம் கிலோ 80
ரூபாய்க்கு விற்கப்படுகிறது

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger