Sunday 9 February 2014

மதயானைக் கூட்டம் Movie Review

- 0 comments
மதயானைக் கூட்டம் படம் 3 முறை பார்த்தேன்...

தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஒரே படத்தில் தேவரினப் பெருமையைப் பாடும் மூன்று பாடல்கள்...

குறிப்பிடத்தக்க வசனங்கள்:

-வட நாட்டு சிங்கம் நேதாஜியும் தென்னாட்டு சிங்கம் முத்துராமலிங்கத் தேவர் பத்தி பல பேரு பல மாரி பேசுறாக, ஆனா அவக சாதியே பாத்ததில்ல. அதே மாரி நம்ம ஜெயக்கொடித் தேவரய்யாவும் சாதி மதம் பாக்காம பழகுவாக...
-அய்யாவோட முதல் தாரம் சிவனம்மா, வீரத்துல வேலுநாச்சியாரு...
-என் பொண்ணு ராஜகுமாரிடா. அவளுக்கு நடக்கப் போற கல்யாணம் மாரி எந்தக் கள்ளப் பயலும் நடத்திருக்க மாட்டயான்...
-குத்திச் சரிச்சுக் குழி தோண்டிப் பொதச்சுக் கமுக்கமா ஒக்காந்து கரியும் சோரும் திங்குறவன் தான் கள்ளன்...
-கள்ளப் பய எவனும் அனுபவிக்காம திருந்த மாட்டிங்க...
-எங்க அண்ணன எவனும் அசைக்க முடியாது, அங்கயும் கள்ளன் ரத்தம் தான ஓடுது...
-அப்பா, அவன அடிக்க முடியல அவனும் கள்ளப் பய தான்னு காட்டிட்டியான் பா...

இந்த வசனங்கள் கேட்கும் போது உடம்பு சத்தியமா புல்லரிக்குது...

மற்றொரு முக்கியக் காட்சி:
ஒரு காட்சியில் கதாநாயகனின் அண்ணன் "உங்கள வச்சு பல பேரு சாப்புட்றாய்ங்கயா, ஆனா உங்கள எவனாச்சும் சாப்டிங்களானு கேட்டாய்ங்களாயா? இந்தாங்கயா, சாப்டுங்கயா..."னு புரோட்டாவ கைல வச்சுக்குட்டு ஸ்ரீ தேவரய்யா சிலை முன்னாடி நின்னு பேசுவாரு...

உங்கள வச்சு பல பேரு சாப்புட்றாய்ங்கயா, இது உண்ம தான...

படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமார் அவர்களின் திறமையையும் தைரியத்தையும் பாராட்டியே ஆக வேண்டும்...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger