Tuesday 22 April 2014

பரோட்டா சூரியை ஹீரோவாக்கும் முயற்சியில் இயக்குனர்கள்!

- 0 comments


சந்தானம் முழுநேர காமெடியனாக இருந்தது வரை முன்னணி இடத்தை பிடிக்க முடியாமல் முட்டி மோதிக்கொண்டிருந்தார் பரோட்டா சூரி. ஆனால், தற்போது சந்தானம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாகியிருப்பதோடு, இனிமேல் குறிப்பிட்ட சிலருடன் மட்டுமே காமெடி செய்வேன். மற்றபடி நானும் தொடர்ந்து ஹீரோவாக நடிக்கப்போகிறேன் என்று அறிவித்து விட்டார்.

இதனால் தற்போது சிங்கிள் காமெடியனாக களத்தில் நின்று கொண்டிருக்கிறார் சூரி. அதனால் காமெடியனுடன் சீன் பை சீன் என்ட்ரி கொடுக்க நினைக்கும் ஹீரோக்கள் அவரை விடாமல் பிடித்து வைத்துக்கொண்டுள்ளனர். அதனால் ஒரு டஜன் படங்களை கைவசம் வைத்திருக்கும் சூரி, படத்துக்குப்படம் சத்தமில்லாமல் தனது சம்பளத்தையும் உயர்த்திக்கொண்டே வருகிறார்.

ஆனால், இந்த நேரத்தில் கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், கருணாஸ், கஞ்சா கருப்பு என எல்லோரும் ஹீரோவாகிட்டாங்க. இது காமெடியன்களின் காலம். அதனால் இந்த சந்தர்ப்பதில் நீங்களும் ஹீரோ வேசத்துக்கு பிள்ளையார் சுழி போட்டு வச்சிடுறது நல்லது என்று சில டைரக்டர்கள் கதைகளுடன் அவரை துரத்திக்கொண்டு வருகின்றனர்.

ஆனால் ஹீரோ என்றதும் சூரி மனதளவில் சபலப்பட்டு நின்று கொண்டிருக்க, அவரது அபிமானிகளோ, காமெடியனா நடிச்சா பெரிய எதிர்காலம் இருக்கு, ஹீரோவா நடிச்சா ஒருவேளை படம் அவுட்டான்னா அது அப்புறம் மதுரைக்கு வண்டியேறிட வேண்டியதான் என்று சொல்லி சூரியை யோசிக்க வைத்துவிட்டனர். இதனால் தன்னை ஹீரோவாக்க முயற்சித்தவர்களை, கொஞ்சம் அசந்தா என் பொழப்பையே கெடுத்து விட்டுறுவீங்க போலிருக்கே என்று துரத்தியடித்து விட்டார் சூரி.
[Continue reading...]

சிவகார்த்திகேயனுக்கு சிக்கல்...! கமிஷனர் அலுவலகத்தில் அவர் மீது புகார்!

- 0 comments


சர்ச்சையில் சிக்குவதே சிவகார்த்திகேயனுக்கு வாடிக்கையாகப் போய்விட்டது. கடந்த சில நாட்களாகத்தான் சிவகார்த்திகேயன் பற்றி சர்ச்சை செய்திகள் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் அவர் மீது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்த படம் மான் கராத்தே. புதுமுக இயக்குநர் திருக்குமரன் இயக்கிய இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் மதன் இருவரும் இணைந்து தயாரித்திருந்தார்கள். அனிருத் இசையமைத்து இருந்தார். ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியான மான் கராத்தே வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். "சமீபத்தில் திரைக்கு வந்துள்ள 'மான் கராத்தே' படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தில் குத்துச்சண்டையை இழிவுப்படுத்தும் வகையில் நிறைய காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்தக் காட்சிகள் நீக்கப்பட வேண்டும். தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்திடம் உரிய அனுமதியும், ஆலோசனையும் பெற்று, குத்துச்சண்டை தொடர்பான காட்சிகளை எடுத்திருக்கலாம். ஆலோசனை எதுவும் பெறவில்லை. உரிய அனுமதியும் பெற வில்லை. இது சட்டத்திற்கு புறம்பான செயல். எனவே 'மான் கராத்தே' படத்தின் தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குநர் திருக்குமரன், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். 'மான் கராத்தே' படத்தை தடை செய்யவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று அம்மனுவில் கூறியிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

இம்மனு தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
[Continue reading...]

சாராவுக்கு பிடித்த 10...!

- 0 comments


சைவம் படத்தின் ஹீரோயின் சிறுமி சாரா. தெய்வதிருமகள் படத்தில் சுட்டிக் குழந்தையாக நடித்தவர், சைவத்தில் துறுதுறு சிறுமி, சைவம் புரமோசனுக்கு வந்திருந்தவரிடம் நைசாக பேசி அவருக்கு பிடித்த 10 விஷங்களை தெரிந்து கொண்டோம்.

1. பிடித்த நடிகர் யார்?

பிரகாஷ்ராஜ் அங்கிள். அவரோட நடிக்க ஆசை

2. பிடித்த நடிகை யார்?

கரீனா கபுர். அவுங்க எவ்ளோ அழகு தெரியுமா?

3. பிடித்த கிப்ட் எது?

டெடி பியர். ஷாருக்கான் அங்கிள் வாங்கிக் கொடுத்தது.

4. பிடித்த வீடியோ கேம்?

ஐஸ் ஏஜ் கேம்

5. பெஸ்ட் பிரண்ட்?

அனுஷ்கா ஆன்ட்டி. அவுங்கள மாதிரி நான் உயரமா வளரணும்.

6. பிடித்த ஸ்போர்ட்ஸ்?

நீச்சல். கிரிக்கெட், புட்பால் பிடிக்காது.

7. பிடிச்ச பெட் அனிமல்?

நான் வளர்க்குற பப்பி (நாய்குட்டி)

8. ரொம்ப பிடிச்சது தெய்வதிருமகள் நிலாவா, சைவம் தமிழ் செல்வியா?

நிலாதான். அவளுக்குத்தான் யாருமே இல்ல

9. என்ன மாதிரி படங்கள் பிடிக்கும்?

இங்கிலீஷ் அனிமேஷன் படங்கள்.

10. சினிமால பிடிச்ச துறை எது?

டைரக்ஷன். நான் வளர்ந்து பெரியவள் ஆனதும் டைரக்ட் பண்ணுவேன்.
[Continue reading...]

அஞ்சான் படப்பிடிப்பு முடிந்தது! பூசணிக்காய் உடைத்தார் லிங்குசாமி!!

- 0 comments


சூர்யா- சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கி வந்த அஞ்சான் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்த நிலையில், இறுதிகட்டமாக கோவாவில் நடந்து வந்தது. அங்கு பாடல் காட்சியை படமாக்கிய பிறகு க்ளைமாக்ஸ் சண்டை காட்சியும் படமானது. அப்போது எதிர்பாராதவிதமாக சூர்யாவுக்கு விபத்து ஏற்பட்டது. ஆனால், அது பெரிய அளவில் இல்லை. சிறிய காயங்களோடு தப்பினார். அதனால் படப்பிடிப்புக்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை. அதன்காரணமாக திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்திய லிங்குசாமி, நேற்றோடு மொத்த படக்காட்சிகளையும் முடித்து விட்ட நிலையில் பூசணிக்காய் உடைத்து விட்டாராம்.

இன்னும் ஒரேயொரு பாடல் காட்சி மட்டுமே பேலன்ஸ் உள்ளதாம். அந்த பாடலில் மரியம் சகாரியா, சித்ரங்கதா சிங் போன்ற கவர்ச்சி புயல்கள் இடம்பெறுகிறார்களாம். அந்த பாடல் காட்சி ஜூன் மாதம் படமாக்கப்படுகிறது. இந்த பாடலுக்குத்தான் இந்தி நடிகை கரீனா கபூரை கேட்டு, அவர் நடனமாட மறுத்து விட்டதாக கூறுகிறார்கள்.
[Continue reading...]

நரேந்திர மோடிக்கு கோச்சடையான் படம் போட்டுக்காட்டுகிறார் ரஜினி!

- 0 comments
மோடி-ரஜினிக்கு இடையே பரஸ்பர நட்பு உண்டு என்றாலும், அதை அவர்கள் இருவரும் இதுவரை வெளிச்சம் போட்டுக்காட்டியதில்லை. ஆனால், சமீபத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில், அவர்கள் சந்தித்துக்கொண்டது பரபரப்புக்குள்ளானது. அதுவும் தேர்தல் நேரம் என்பதால், தமிழகத்திலுள்ள பிரதான கட்சிகளை அது அதிர்ச்சியடையச் செய்தது.

இந்தநிலையில், மோடிக்கும், தனக்குமிடையிலான நட்பு தொடர நினைக்கும் ரஜினி, மகள் செளந்தர்யா இயக்கத்தில் தான் நடித்துள்ள கோச்சடையான் படம் மே 9-ந்தேதி உலகமெங்கும் ரிலீசாக இருப்பதால், முன்னதாக, அதை சில முக்கியஸ்தர்களுக்கு பிரிமியர் ஷோ போட்டு காட்ட திட்டமிட்டுள்ளார். அதில் முதல் நபராக மோடிதான் இடம்பெற்றுள்ளாராம். அவருக்காக மே 8-ந்தேதி அன்று மும்பையிலுள்ள ஒரு தியேட்டரில் ஸ்பெஷல் ஷோ காண்பிக்கயிருக்கிறார்கள்.

இதையடுத்து, தனது படத்தை பார்த்து ரசிக்க வரவேண்டும் என்று மோடிக்கு ரஜினி அழைப்பு விடுத்ததும், உங்களது படத்தை காண ஆவலுடன் இருக்கிறேன் என்று உடனடியாக செய்தி அனுப்பி விட்டாராம் மோடி. இருப்பினும் அவரை முறையாக அழைக்க வேண்டும் என்பதற்காக விரைவில் குஜராத் செல்லவிருக்கிறாராம் கோச்சடையான் டைரக்டர் செளந்தர்யா.
[Continue reading...]

நடிகைகளுடன் என் மகன் அடித்துள்ள லூட்டிக்கு முன்பு நான் தோற்று விட்டேன்! - கார்த்திக்

- 0 comments



கடல் படத்தை அடுத்து கெளதமின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் என்னமோ ஏதோ. தெலுங்கில் வெளியான ஆலா மொதலாயிந்தி என்ற படத்தின் ரீமேக்தான் இப்படம். இதில் கெளதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங், நிகிஷா பட்டேல் என்ற இரண்டு கொளுகொளு கவர்ச்சி பொம்மைகள் நடித்திருக்கிறார்கள். கதைப்படி, இவர்கள் இருவரையும் மாறி மாறி காதலிப்பதுதான் கெளதமிற்கு வேலையாம். ஆனால், எதற்காக அவர்களை அப்படி காதலித்தார் என்பதில் ஒரு சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்களாம். ஆக, அப்பா நவரசநாயகன் கார்த்திக் ரொமான்டிக் காட்சிகளில் பின்னி பெடலெடுத்ததை விட பலமடங்கு எகிறி அடித்து சிக்சர் போட்டிருக்கிறாராம் கெளதம்.

படத்தைப்பார்த்த நவரசநாயகன், இதுவரை தமிழ் சினிமாவில் ரொமான்டிக் காட்சிகளில் என் இடத்தை பிடிக்க ஆளில்லை என்றுதான் இறுமாப்புடன் இருந்தேன். ஆனால், அதை இப்போது என் மகன் கெளதம் பிடித்து விட்டான் என்று சொல்லி புழகாங்கிதமடைந்தாராம் கார்த்திக். அதோடு, நான் நடிகைகளுடன் அடித்தெல்லாம் ஒரு லூட்டியா... என் மகன் கெளதம் அடித்த லூட்டிக்கு முன்பு நான் தோற்று விட்டேன் என்றாராம் நவரசம்.
[Continue reading...]

இஸ்லாம் மதத்துக்கு மாறவில்லை! ஜெய்

- 0 comments


இளையராஜாவின் மகனான யுவன் ஷங்கர் ராஜா, முஸ்லீம் மதத்துக்கு மாறியதை அடுத்து, கோடம்பாக்கத்தில் மேலும் சில நடிகர்களும் அந்த மதத்தில் மாறயிருப்பதாக செய்திகள் பரவின. ஆனால், பின்னர் அதுபற்றிய தகவல் ஏதும் இல்லை. அதனால் அவை அனைத்தும் வதந்திகளாகி விட்டன. இந்தநிலையில், திருமணம் என்னும் நிக்கா படத்தில் நடித்ததில் இருந்து அப்படத்தில் அறிமுகமான முஸ்லீம் நடிகை நஸ்ரியாவுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கியிருநத நடிகர் ஜெய்யும் இப்போது முஸ்லீம் மதத்தில் தன்னை இணைத்துக்கொண்டிருப்பதாக கடந்த ஒரு வாரமாக செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன.

அதையடுத்து, ஜெய்யை தொடர்பு கொண்டு கேட்டபோது, நான் இசையமைப்பளர் தேவாவின் சகோதரர் சம்பத்தின் மகன். பிறப்பால் இந்துதான். ஆனால், முஸ்லீம் மதத்தின் கொள்கைகள் எனக்கு பிடித்திருந்தது. அதனால் அதை பின்பற்றினேன். அவ்வளவுதான். மற்றபடி நான் முஸ்லீமாகி விட்டதாக வெளியான செய்திகள் உண்மையில்லை என்று மறுக்கிறார் ஜெய்.

ஆனால், இஸ்லாம் மதத்தில மாறுவதற்கு அதிக ஆர்வமாக இருக்கும் ஜெய்க்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்களாம். அதனால்தான் மனசுக்குள் அந்த மார்க்கம் பிடித்திருந்தும், அதை நடைமுறைப்படுத்த முடியாமல் அவர் திணறிக்கொண்டிருப்பதாக, அவருக்கு நெருங்கிய வட்டாரம் தகவல் தருகிறது.
[Continue reading...]

ரஜினியின் பாட்ஷா கதையை தழுவி உருவாகும் அஞ்சான்!

- 0 comments


ரஜினி நடித்த படங்களில் அதிக வசூல் சாதனை புரிந்த படங்களில் பாட்ஷா குறிப்பிடத்தக்கது. வசூலில் மட்டுமல்லாது அவரது கேரியரிலும் முக்கியமான படமும் கூட. சுரேஷ்கிருஷ்ணா இயக்கிய அந்த படத்தைதான் தான் நடித்ததில் பிடித்த பட வரிசையில் முதலிடம் கொடுத்து வருகிறார் ரஜினி. மேலும், அதையடுத்து ஆக்சன் கதைக்களம் என்று யோசிக்கும் அத்தனை டைரக்டர்களுக்குமே ரஜினியின் பாட்ஷாதான் முன்னுதாரணமாக கருத்தில் கொண்டு ஸ்கிரிப்ட் பண்ணி வருகிறார்கள்.

அந்த வகையில், சூர்யாவைக்கொணடு அஞ்சான் படத்தை இயக்கி வரும் லிங்குசாமியும் பாட்ஷா படத்தை தழுவிதான் அஞ்சான் படத்தை இயக்கி வருவதாக கூறப்படுகிறது. அதன்காரணமாகவே பாட்ஷாவைப்போன்று மும்பையில் கதைக்களத்தை வைத்திருக்கிறாராம். அப்படத்தில் நண்பனுக்காக ரஜினி பழி வாங்குவது போன்று இப்படத்திலும் தனது நண்பனுக்காக சூர்யா பழி வாங்குவதுதான் கதையாம்.

அதோடு, பாட்ஷாவில் மறைந்த ரகுவரன் வில்லனாக நடித்த வேடத்தில் இப்போது இந்தி நடிகர் மனோஜ் பஜ்பாய் நடிக்க, சூர்யாவின் உயிர் நண்பராக வித்யு ஜம்வால் நடிக்கிறார். இவர்தான் ப்பாக்கியில் விஜய்யுடன மோதிய வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது.
[Continue reading...]

கேமராமேனுடன் சண்டை போட்ட கேரளத்து நடிகை வீணா நாயர்!

- 0 comments


ஜெயம்ரவி நடித்துள்ள பூலோகம் படத்தையடுத்து வட சென்னையில உள்ள பாக்சர்களைப்பற்றிய கதையில் உருவாகியுள்ள இன்னொரு படம் நாங்கெல்லாம் ஏடாகூடம். புதுமுகங்கள் மனோஜ்- வீணா நாயர் நடித்துள்ள இந்த படத்தை விஜயகுமார் என்ற புதியவர் இயக்கியுள்ளார். குருந்துடையார் புரொடக்சன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தில் புதுமுக நடிகை வீணா நாயர் அறிமுகமாகியுள்ளார். கேரளத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்த இவரை, இந்த மாதிரியான ஒரு நடிகைதான் இந்த படத்துக்கு வேண்டும் என்று அழைத்து வந்திருக்கிறார்கள். படத்திலும் அவருக்கு சாப்ட்வேட் இன்ஜினியர் வேடம்தானாம். அதனால் தான் அலுவலகத்தில் வேலை செய்வது போன்ற நடிப்பையே யதார்த்தமாக கொடுத்துள்ளாராம் வீணா நாயர்.

இதுபற்றி அவர் கூறுகையில், எனது நிஜ பெயர் பார்வதி. ஏற்கனவே கேரளாவில் இருந்து வந்த பார்வதி மேனன் என்ற நடிகை தமிழில் நடித்துக்கொண்டிருப்பதால், என்னை வீணா நாயராக்கி விட்டனர். கேரளாவில் இருந்து அசின், நயன்தாரா, அமலாபால், லட்சுமிமேனன் என ஏராளமான நடிகைகள் தமிழ் சினிமாவில் சைன் பண்ணியிருப்பதால், எனக்கும் ஒரு பெரிய இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த படத்தின் மூலம் என்ட்ரியாகியுள்ளேன்.

மேலும், இந்த படத்தில் நடித்தபோது கேமராமேன் என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணி விட்டார். அப்படி திரும்பி நில், இப்படி லுக் கொடு என்று ஒரு வழி பண்ணி விட்டார். அதனால் படப்பிடிப்பு முடியுற நேரத்தில் எனக்கும், அவருக்குமிடையே ஒரு நாள் சண்டையாகி விட்டது. அந்த அளவுக்கு என்னை கோபப்படுத்தி விட்டார் என்று கூறும் வீணா நாயர், ஆனால் இப்போது அவருடன் நான் சமரசமாகி விட்டேன். அதோடு, அவர் மூலமாக நடிப்பில் இருக்கிற நெழிவு சுழிவுகளையும் கற்று விட்டேன் என்கிறார் வீணா நாயர்.
[Continue reading...]

தேர்தல் பிரசாரத்தில் குதித்த ஸ்ரீதேவி-போனி கபூர் தம்பதி

- 0 comments

பாலிவுட்டின் பிரபல காதல் தம்பதி ஸ்ரீதேவி-போனி கபூர் ஜோடி. பல்வேறு நட்சத்திரங்களைத் தொடர்ந்து இவர்களும் லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் குதித்து உள்ளனர். உத்திர பிரதேசத்தின் பதேக்பூர் சிக்ரி தொகுதியில் போட்டியிடும் ராஷ்டிரிய லோக்தள கட்சி வேட்பாளர் அமர் சிங்கிற்கு ஆதரவாக நடிகை ஸ்ரீதேவியும், அவரது கணவர் போனி கபூரும் பிரசாரம் செய்து வருகின்றனர். முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் இறங்கி உள்ள ஸ்ரீதேவியை பார்ப்பதற்காக அவரது ரசிகர் கூட்டம் பெருமளவில் திரண்டு வருகிறது. இதனால் ஸ்ரீதேவி பிரசாரத்திற்கு செல்லும் சாலைகள் எல்லாவற்றிலும் டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீதேவி ஆதரவு அளித்து வரும் அமர் சிங், காங்கிரஸ் கூட்டணியில் இருப்பவர் ஆவார்.
[Continue reading...]

சென்னை நீச்சல்குளத்தில் பிகினியில் குளித்த ஷெர்லின் சோப்ரா

- 0 comments



தோஷ்தி படத்தின் மூலம் இந்தி சினிமாவுக்கு அறிமுகமானவர் ஷெர்லின் சோப்ரா. டைம்பாஸ், ஜவானி திவானி, உள்பட பல படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்துள்ளார். கடைசியாக காமசூத்ரா 3டி இந்திப் படத்தில் நடித்து பரபரப்பை கிளப்பி உள்ளார். ஷெர்லின் தற்போது பேட் கேர்ள் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் சமீபத்தில் உலக புகழ் பெற்ற செலீனா என்ற படத்தின் தழுவல் ஆகும். விரைவில் படம் ரிலீசாக இருக்கிறது. இந்தப் படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்திருந்த ஷெர்லின் சோப்ரா நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கினார். பின்னர் அவர் மீடியாக்களை சந்தித்தார்.

பத்திரிகையாளர்கள் அவரை சந்திக்க சென்றபோது அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அந்த நேரத்தில் அவர் நீச்சல்குளத்தில் பிகினி டிரஸ்சில் குளியல் போட்டுக் கொண்டிருந்தார். அதை படம் எடுத்துக் கொள்ளலாமா என்று மீடியாக்கள் கேட்டபோது கொஞ்சமும் தயக்கம் இன்றி போஸ் கொடுத்தார். பின்னர் உடை மாற்றி வந்து மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்ததோடு ஒவ்வொருவரையும் அழைத்து அவர்களோடு நின்று போட்டா எடுத்து மற்றுமொரு அதிர்ச்சியையும் கொடுத்தார்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger