Friday 20 December 2013

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது Petrol and diesel prices increase

- 0 comments

Img பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது Petrol and diesel prices increase

புதுடெல்லி, டிச.21-

டீலர்களுக்கு கமிஷன் தொகை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தது. பெட்ரோல் விலை, லிட்டருக்கு 49 காசும், டீசல் விலை லிட்டருக்கு 9 காசும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல், டீசல் விற்பனை டீலர்களின் கமிஷன் தொகையை மத்திய அரசு கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உயர்த்தியது.

அதன்படி ஒரு கிலோ லிட்டருக்கு 912 ரூபாயாக இருந்த கமிஷன், ரூ.1089 ஆக உயர்ந்தது. கமிஷன் உயர்த்தப்பட்டு ஒரு ஆண்டு கடந்த நிலையில், மீண்டும் அவர்களின் கமிஷனை உயர்த்த வேண்டும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்து இருந்தன.

ஆனால் டெல்லி, சத்தீஷ்கார் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் டீலர்களின் கமிஷனை உயர்த்த முடியவில்லை. தற்போது தேர்தல் முடிவுற்றதை தொடர்ந்து டீலர்களின் கமிஷனை உயர்த்த மத்திய அரசு நேற்று முடிவு செய்தது.

அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசும், டீசல் விலை லிட்டருக்கு 10 காசும் (இதர வரிகள் சேர்க்கப்படவில்லை) உயர்த்தப்பட்டன. பெட்ரோல் விலையை பொறுத்தவரை, வழக்கமாக மாதந்தோறும் இரு முறை (1 மற்றும் 16-ந்தேதி) சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் அடிப்படையில் மாற்றி அமைக்க உரிமை வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி கடந்த நவம்பர் 1-ந்தேதி லிட்டருக்கு ரூ.1.15 குறைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 21 காசு கமிஷன் உயர்வுடன் சர்வதேச விலை நிலவரத்தின் அடிப்படையில் லிட்டருக்கு 28 காசும் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மொத்தம் 49 காசு உயர்த்தப்பட்டு உள்ளது.

அதன்படி, சென்னையில் ரூ.74.22 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, ரூ.74.71 ஆக உயர்ந்தது. டெல்லியில் ரூ.71.02 ஆக இருந்து வந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71.51 ஆக உயர்ந்தது. கொல்கத்தாவில், 53 காசுகளும், மும்பையில் 52 காசுகளும் விலை உயர்ந்துள்ளது.

டீலர் கமிஷன் தொகை உயர்வான லிட்டருக்கு 9 காசு மட்டுமே டீசல் விலையில் உயர்த்தப்பட்டு உள்ளது. புதிய விலைப்படி சென்னையில், ரூ.57.23 ஆக இருந்த ஒரு லிட்டர் டீசல் விலை, 57.32 ஆக உயர்ந்தது.

டெல்லியில், ரூ.53.67-ல் இருந்து ரூ.53.78 ஆக உயர்த்தப்பட்டது.
கொல்கத்தாவில், 10 காசுகளும், மும்பையில் 10 காசுகளும் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டது.
...

[Continue reading...]

காங்கிரஸ் இல்லாத இந்தியா - நரேந்திர மோடி பேச்சு Congress absence india to create must Narendra Modi speech

- 0 comments

Img காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்: நரேந்திர மோடி பேச்சு Congress absence india to create must Narendra Modi speech

வாரணாசி, டிச.21-

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பா.ஜனதா சார்பில் நேற்று 'விஜய் சங்நாத்' பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியதாவது:-

உத்தரபிரதேசத்தில் உங்கள் மூதாதையர்கள் ராம ராஜ்ஜியத்தை நிறுவினர். ஆனால் தற்போது அதை எங்குமே பார்க்க முடியவில்லை. இதனால் மக்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே மாநிலத்தில் மீண்டும் ராம ராஜ்ஜியத்தை கொண்டுவர வேண்டியது அவசியம்.

இது நீங்கள் நினைத்தால் நிச்சயமாக சாத்தியமாகும். இதற்காக நீங்கள் சரியான அரசை தேர்ந்தெடுத்தால் அதை (ராம ராஜ்ஜியம்) நீங்கள் அடைய முடியும். அதை செயல்படுத்த உங்களால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

சிறந்த களப்பணியாற்றும் அரசை தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் இது. வெறும் வாக்குறுதிகளை கேட்டு மக்களுக்கு போரடித்து விட்டது. மக்களுக்கு நாங்கள் வெற்று வாக்குறுதிகளை அளிக்கவில்லை. மாறாக பல்வேறு திட்டங்களைச் சொல்லியே அவர்களை சந்திக்கிறோம்.

உத்தரபிரதேசத்தில் கங்கை நதி தூய்மைப்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி வெற்று வாக்குறுதிகளை அளித்தது. இத்திட்டத்துக்காக பல்வேறு குழுக்களையும் அமைத்தது. ஆனால் இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்காக ராஜீவ்காந்தி ஆட்சிக்காலத்தில் இருந்து எத்தனை ஆயிரம் கோடிகள் செலவிடப்பட்டது? என்பதை நாட்டு மக்களுக்கு பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும். குஜராத்தில் பாயும் சபர்மதி நதியை பா.ஜனதா அரசு தூய்மைப்படுத்தியது. அதைப்போல கங்கை நதியை ஏன் தூய்மைப்படுத்த முடியவில்லை?

நெருங்கி வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சி மீண்டும் ஏழைகள் கோஷத்தை கையில் எடுத்துள்ளது. ஆனால் உண்மையிலேயே அக்கட்சிக்கு ஏழைகள் மீது அக்கறை எதுவும் இல்லை. நாட்டில் வறுமைக்கு காரணமே ஒரு குடும்பம் தான். எனவே காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்.

டீ விற்பவர் நாட்டின் பிரதமராக முடியாது என சமாஜ்வாடி கட்சியினர் கூறியிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. மக்களின் ஆசீர்வாதம் இருந்தால் டீ விற்பவர் மட்டுமல்ல நெசவாளி, விவசாயி ஏன் செருப்பு தைப்பவர் கூட பிரதமராக முடியும்.

இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.
...

[Continue reading...]

சண்டிகரில் பள்ளி மாணவியை கற்பழித்த போலீஸ்காரர்கள் 5 பேர் கைது 5 policemen arrested for alleged gang molestation of school girl in Chandigarh

- 0 comments

policemen arrested for alleged gang molestation of school girl in Chandigarh சண்டிகரில் பள்ளி மாணவியை கற்பழித்த போலீஸ்காரர்கள் 5 பேர் கைது 5 policemen arrested for alleged gang molestation of school girl in Chandigarh

சண்டிகர், டிச. 20-

சண்டிகர் நகரில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த சில தினங்களுக்கு முன் 17வயது பள்ளி மாணவி ஒருவர் தனது குடும்ப பிரச்சனை பற்றி புகார் அளித்துள்ளார். அவர் பேசிய செல்போன் நம்பரை வைத்து அவரது விலாசத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர் அந்த மாணவியை பின்தொடர்ந்து சென்று போலீஸ் வேனில் கடத்திச் சென்று துப்பாக்கி முனையில் வேனுக்குள் வைத்தே கற்பழித்துள்ளனர். இவ்வாறு பல வாரங்கள் தொடர்ந்து சித்ரவதை அனுபவித்த அந்த மாணவி தற்கொலைக்கு முயன்றபோதுதான், நடந்த சம்பவம் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவியிடம் நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கட்டுப்பாட்டு அறை போலீஸ்காரர்கள் 4 பேர், குற்றப்பிரிவு போலீஸ்காரர் ஒருவர் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்களை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். முன்னதாக 5 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 5 பேரையும் மருத்துவ சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பா.ஜனதா, காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனைக்கு வெளியில் போராட்டம் நடத்தினர். பின்னர் திடீரென அவர்கள் போலீஸ்காரர்களை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

...

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger