Friday 29 March 2013

இளம்பெண் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்து வீடியோ

- 0 comments

மகாராஷ்டிரா மாநிலம், கட்கோபர் பகுதியில் வசிக்கும் 20 வயது பெண், நலசோபராவில் வசிக்கும் அமே சக்பால் என்பவருக்கு பேஸ் புக் மூலம் அறிமுகமானார்.நாளடைவில் அறிமுகம், காதலாக உருவெடுத்தது. தனது பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வரும்படி காதலிக்கு அமே சக்பால் அழைப்பு விடுத்தார்.அவரது பேச்சை நம்பி நலசோபராவுக்கு வந்த அந்த பெண்ணிற்கு மயக்க மருந்து கலந்த குளிர்பாணத்தை தந்த காதலன், அவரை வீட்டுக்கு அருகே உள்ள லாட்ஜிற்கு அழைத்துச் சென்றார்.லாட்ஜில் மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண், தான் கற்பழிக்கப்பட்டதை உணர்ந்தார்.நிர்வாண நிலையில் தான் படுத்திருப்பதை கற்பழித்த நபர்வீடியோ எடுப்பதை பார்த்த அவர் திடுக்கிட்டார்.தன்னை உடனடியாக திருமணம் செய்துக் கொள்ள வேண்டும். மறுத்தால், ஆபாச வீடியோவை இண்டர்நெட்டில் வெளியிட்டு விடுவேன் என அமே சக்பால் மிரட்டியுள்ளார்.அவரது பிடியில் இருந்து சாதுர்யமாக பேசி தப்பிவந்த பெண், போலீசில் புகார் அளித்தார்.இந்த புகாரின் அடிப்படையில் அமே சக்பால் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்து குளிர்பாணத்தில் மயக்க மருந்துகலந்து தந்த அவரது தாயார் அபர்ணா ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

[Continue reading...]

Thursday 28 March 2013

வீட்டுக்கு வந்து என் பெட்ரூம்ல படுத்துட்டு போங்களேன் - நயன்தாராவுக்கு காதல் காய்ச்சல்

- 0 comments
மன்மதன் பட ஷ§ட்டிங்லதான்! அப்பல்லாம் நயன்தாராவுக்கு காதல் காய்ச்சல் அடிச்சிட்டு இருந்த நேரம். (இப்ப மட்டும் என்னவாம்? ஆளுதான் வேற. காதல் ஒண்ணுதான்!) சீமெண்ணை விளக்கு மேல ட்யூப்லைட்டை வச்ச மாதிரி, சிம்பு மேல காதலா திரிஞ்சாரு நயன்தாரா. உதிரிப்பூவை உதறி தள்ளுனா மாதிரி எப்ப பார்த்தாலும் சிரிப்பு. எங்க விழுந்தாலும் இனிப்புங்கிற மாதிரியே போச்சு ஒவ்வொரு நாளும். ‘வானத்துல பறக்கிறேன், வவ்வால புடிக்கிறேன்’னு சிம்பு ஒருபக்கம் பேட்டியா கொடுத்து தள்ளுறாரு. ‘மேட் ஃபார் ஈச். மேல் முழுக்க இச்’ ன்னு திரியுது ஜோடி. 

இந்த நேரத்துலதான் ஈரத்துணிய இடுப்புல கட்டிக்கிட்டு, மாரு தெரிய வந்து நின்னாரு அந்த ஜோசியரு. ‘இங்கே நோட்டீஸ் ஒட்டாதே’ன்னு எவனாவது எழுதிட்டு போற அளவுக்கு நெத்தி முழுக்க வெள்ளையா விபூதி. அது மத்தியில சிக்னல் மாதிரி சிவப்பு குங்குமம். கழுத்தில கிடக்கிற உத்திராட்சம் ஒவ்வொண்ணும் செங்கல்லு சைசு. பார்த்தாலே படக்குன்னு எழுந்து படீர்னு கால்ல விழுற அளவுக்கு ஒரு நடமாடும் திருக்கோயிலா இருந்தாரு மனுசன்.
‘நடக்கறத சொல்லுவாரு. சொல்றதுதான் நடக்கும். இவரு வாய தொறந்தா சத்தியம். வயிறு வலிச்சா பத்தியம்’னு என்னென்னவோ சொல்லி நயன்தாரா ரூமுக்குள்ளே கொண்டு போயிட்டாங்க. “சில பர்சனல் கேள்விங்க இருக்கும். நாங்க எதுக்கு இங்க?” வெளியே நிக்குறோம் என்றபடி விடை பெற்றுக் கொண்டார்கள் ஜோசியரை கொண்டு வந்து விட்ட புண்ணியவான்கள்.
ரூமிற்குள் இவரை கையெடுத்து கும்பிட்ட நயன்தாரா, கால்ல விழுறத பிறகு வச்சுப்போம்னு நினைச்சுது போலிருக்கு. “ஐயா, உட்காருங்க. சாப்பிடுறதுக்கு…”ன்னு இழுக்க, ‘கோக்’ இருந்தா கொடுங்களேன்னாரு ஜோசியரு. கொண்டு வந்த கோக்கை திருவோட்ல ஊற்றி அவரு குடிக்கிற அழகை ரசிச்ச நயன்தாரா, “சாமி கோக்கு குடிக்கறதே தப்பு. அதை திருவோட்ல ஊத்தி குடிக்கறது அதவிட தப்பில்லையா”ன்னுச்சு. சாதாரண நடிகைன்னு நினைச்சா பொண்ணு விவரமான பார்ட்டியா இருக்குதேன்னு நினைச்ச ஜோசியரு, நான் ரெண்டு மூணு கேள்வி கேட்பேன். சரியா சொல்லணும்னு சொல்லிட்டு, “உங்களுக்கு என்னா பூ பிடிக்கும்?”னாரு முதல் கேள்வியாக.
என்னவோ சொல்லப் போறாருன்னு நினைச்ச நயன்தாரா, ‘ரோஸ்’னு ஆங்கிலத்தில் பதில் சொல்லிட்டு அவரு வாயையே பாத்திட்டு இருந்திச்சு ஆர்வமா! கண்ணை மூடி, கதவிடுக்கில விரல விட்ட மாதிரி வாய்க்குள்ளேயே குய்முய்னு முணுமுணுத்த ஜோதிடர், வாயை திறந்த போது அப்படி ஒரு அபஸ்வரம் கேட்கும்னு நயன்தாரா நினைச்சுக்கூட பார்க்கல. “என்னங்கம்மா இது? தப்பான ரூட்ல போறிங்களே? உங்க காதல் கரையேறாதே”ன்னாரு முதல் ரீலிலேயே க்ளைமாக்சை போட்ட மாதிரி.

பொசுக்குன்னு வந்த கோவத்தை அடக்கிக்கிட்ட நயன்தாரா, மெல்ல சிரிச்சுகிட்டே எப்படி சொல்றீங்கன்னாரு. “உங்க வீடு எந்த திசையில இருக்குங்கம்மா?” ஜோசியரு தான் சொல்ல வந்ததை இன்னும் ருசு படுத்த நினைச்சாரு போல. அடுத்த கேள்வியை ராக்கெட் வேகத்தில வீசுனாரு.
முதலில் அவர் ஜோசிய பலன் கேட்டே எரிச்சலில் இருந்த நயன், இந்த கேள்விக்கு பதில் சொல்லணுமான்னு நினைச்சு, கொஞ்சம் ஏடா கூடமாவே பேச ஆரம்பிச்சுச்சு. “நார்த் கேட், சவுட் என்ட்ரன்ஸ்!”
இப்படி ஒருத்தன் வீடு கட்டுவானான்னு கூட யோசிக்காத ஜோஸ், நெத்தியில இருக்கிற வெள்ளை சுவத்தை சுரண்டிக் கொண்டே, கண்களை மூடி மூணு காத து£ர யோசனைக்கு போனார். “சந்தேகமே இல்ல. அவன் மூலம் நீங்க இப்போ சுமந்துகிட்டு இருக்கீங்க” என்று அடுத்த ராக்கெட்டை வீச, நயன்தாரா கண்களுக்குள்ளே இப்போ காளியாத்தா என்ட்ரி. இருந்தாலும் இவர கூப்பிட்டு வந்த நபருக்காகவும், பெரிசோட தோற்றத்துக்கும் மதிப்பு கொடுத்து உதட்டுக்கு ‘லாக்’ போட்டார். அப்படியெல்லாம் இல்லீயே என்று சிம்ப்ளாக ஒரு பதிலை சொன்னார். இருந்தாலும் அடுத்த கேள்விய இந்தாளு கேட்கும்போது நாம சொல்ற பதிலில் இந்தாளு இந்த ரூமுக்குள்ளேயே இருக்கக் கூடாது என்று மட்டும் தீர்மானமா ஒரு முடிவுக்கு வந்திருந்தார்.
ஆட்டுக்கு வாலு அரையடி. அனகோண்டாவுக்கு அத்தனையுமே வாலுதான்ங்கிற மாதிரி பொருத்தமா வாயக்கொடுத்தாரு ஜோசியரு. இந்த ஒரு கேள்விதான். அப்புறம் நம்ம ‘பிரசன்னம்’ போட்டு பார்த்திரலாம். எல்லாம் நல்லபடியா நடக்கணும் தாயேன்னு மேலே தொங்குற சீலிங் பேனுக்கு வணக்கம் சொல்லிட்டு அடுத்த கேள்விய கேட்டாரு. “ஏம்மா, உங்க பெட்ரூம்ல என்ன கலர் பல்ப் எரியுது?”
“ஏன் சாமி, இதெல்லாம் ஒரு கேள்வியா? இத வச்செல்லாம் ஜோசியம் சொல்லிட முடியுமா? ஏதோ பிரசன்னமோ என்னமோ சொன்னீங்களே, அத பார்த்து சொல்லிடுங்க சாமி”ன்னு சொல்லியும் கேட்காத ஜோசியரு, “இல்லங்கம்மா நல்லா யோசிச்சு சொல்லுங்க. அதுல ஒரு விஷயம் இருக்கு”ன்னாரு விடாப்பிடியாக!

இன்னும் கொஞ்ச நேரம் இந்தாளு இங்க இருந்தா, பெட்டிகோட்ல இருந்து, பெட்ஷீட் வரைக்கும் என்ன கலர்னு கேட்பானோங்கிற பயமும், காதலுக்கு கல்லறை கட்டிருவானேங்கிற அச்சமும் மாறி மாறி தாக்க, வேணாம் விடுங்க சாமின்னாரு உறுதியா! “இல்லங்கம்மா, நீங்க சொன்னா ஒங்க எதிர்காலத்துக்கு நல்லது. எனக்கு பணமெல்லாம் கூட வேணாம். வந்ததுக்கு சரியா சொல்லணுமில்லயா?”ன்னாரு ஜோசியரு. கோவத்துக்கு அதுவரைக்கும் போட்டு வச்சிருந்த தாழ்ப்பாளை நைசாக திறந்துவிட்ட நயன்தாரா, பெட்ரூம்ல என்ன பல்பு எரியுதுன்னு கேட்டாரே, அந்த கேள்விக்கு படார்னு ஒரு பதில சொல்ல, ஜோசியரு எடுத்தாரே ஓட்டம்….! வெளியே நின்ன ஆளுங்களுக்கு ஒண்ணுமே புரியல. அவரை விரட்டிகிட்டே போயி “நயன்தாரா என்ன சொன்னாங்க?”ன்னு கேட்க, அவரு சொன்னதை அப்படியே சொல்லிட்டு ஓடிப்போனாரு ஜோசியரு. அதுல ஒருத்தரு சொன்னதுதான் காத்து வழியா கசிஞ்சு நம்ம காது வரைக்கும் வந்திச்சு.

அப்படி என்ன பொல்லாத பதில சொன்னாரு நயன்தாரா?
“வேணும்னா வீட்டுக்கு வந்து என் பெட்ரூம்ல படுத்துட்டு போங்களேன். தெரியும்!
[Continue reading...]

Wednesday 27 March 2013

சில்க்ஸ்மிதா வின் கதை நடிகையின் டைரி Silk Smitha Story

- 0 comments
 vin kathai  
மிழ்த்திரையுலகில் தன் சுண்டியிழுக்கும் காந்தக் கண்களாலும், கட்டழகாலும் கவர்ச்சிக் கொடியை பறக்க விட்டு ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டிருந்த நடிகை சில்க்ஸ்மிதாவின் நிஜவாழ்க்கை பல சோகங்களையும், சுவாரஸ்யங்களையும் உள்ளடக்கியது. இளம் வயதிலேயே அவருக்கு ஏற்பட்ட ‘தற்கொலை’ என்ற மிக மோசமான முடிவு இன்னும் ரசிகர்களால் ஜீரணிக்க முடியாத விஷயமாகவே இருக்கிறது.
சில்க்ஸ்மிதாவை முதல் முறையாக மலையாளத் திரையுலகில் அறிமுகப்படுத்திய டைரக்டர் ஈஸ்ட்மென் ஆண்டனி தான் இந்த படத்திற்கு ஸ்டோரி எழுதியிருக்கிறார். மலையாளத் திரையுலகின் பிரபலமான டைரக்டரும், கதாசிரியருமான ஆண்டனி பல படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றியதுடன், சில்க்ஸ்மிதாவின் வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர்.
அவர் கதை எழுதியிருப்பதாலேயே இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கல்லூர் டென்னிஸின் பரபரப்பான திரைக்கதையில் உருவான இந்த படத்தை பல வெற்றிப் படங்களைக் கொடுத்த பிரபல டைரக்டர் அனில் உணர்ச்சிப்பூர்வமாக இயக்கியிருக்கிறார். இது அவருக்கு 38-வது படம்.
இதில் சில்க்ஸ்மிதாவாகவே வருகிறார் ஷனாகான். சிம்புவின் ‘‘சிலம்பாட்டம்’’ படத்தில் தமிழில் ஹீரோயினாக அறிமுகமான இவர் ‘‘வேர் இஸ் த பார்ட்டி... எங்க வூட்ல பார்ட்டி’’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டதன் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானார்.
தற்போது சல்மான்கானுடன் ‘‘மென்டல்’’ என்ற ஹிந்திப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஷனாகான் ‘‘நடிகையின் டைரி’’யில் நடிப்பில் மட்டுமல்ல கவர்ச்சியிலும் வெளுத்துக் காட்டியிருக்கிறாராம்.
அரவிந்த், சுரேஷ்கிருஷ்ணா,சுபின் உட்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு பென்ரி இன்னேஷியஸ் மற்றும் எஸ்.பி.வெங்கடேஷ் ஆகியோர் இசையமைக்க, சஜித்மேனன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
ஹிந்தியில் வெளியாகி வசூலில் சைக்கை போடு போட்ட தி டர்ட்டி பிக்சர் படத்தின் மலையாள வெர்ஷனின் தமிழ் டப்பிங் தான் இந்த நடிகையின் டைரி.
[Continue reading...]

Tuesday 26 March 2013

7 வயது சிறுமியிடம் டாக்டர் பாலியல் தொந்தரவு

- 0 comments

மத்திய பிரதேச மாநிலம், ரெய்சன்மாவட்டத்தில் உள்ள புது மார்க்கெட் பகுதியில் கிளினிக்நடத்தி வருபவர் டாக்டர் வீரேந்திர ஜெயின்.தனது 7 வயது மகளுக்கு உடல் நிலை சரியில்லாததால் நோயாளியுடன் அவரது தாயார் இந்த கிளினிக்கிற்கு வந்து டாக்டரை சந்தித்தார். அந்த சிறுமியை தனியறைக்கு அழைத்துச் சென்ற டாக்டர் பாலியல் ரீதியாக சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார்.பயந்துபோன அந்த சிறுமி, வெளியே காத்திருந்த தாயாரிடம் ஓடி வந்து நடந்த சம்பவத்தை கூறி அழுதாள். இதனையடுத்து, அவர் தனது கணவரை வரவழைத்து கொத்வாலி போலீஸ் நிலையத்தில் டாக்டர் வீரேந்திர ஜெயின் மீது புகார் அளித்தார்.இந்த புகாரை ஏற்றுக்கொள்ள போலீசார் மறுத்து விட்டனர். எனினும், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் தலையீட்டின் பேரில் டாக்டரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

[Continue reading...]

Sunday 24 March 2013

மயக்க மருந்து கொடுத்து மாணவி புதரில் வைத்து கற்பழிப்பு

- 0 comments

திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதியின் 12 வயது மகள் ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறாள். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு லக்காபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சிறுமி சென்றாள். பின்னர் அங்கு நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றாள். அப்போது அங்கு வந்த கல்லூரி மாணவர் அந்த சிறுமியிடம் பேச்சு கொடுத்தார். பின்னர் குளிர்பானத்தில் மயக்க மருந்துகொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் சிறுமி மயங்கி சரிந்தார். இதையடுத்து அந்த வாலிபர் அவரை குண்டு கட்டாக தூக்கி சென்று அங்குள்ள புதரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறப்படுகிறது. மயக்கம் தெளிந்த சிறுமி வலியால் துடித்தார். பின்னர் நடந்த சம்பவங்களை தனது உறவினர்களிடம்தெரிவித்தாள். உறவினர்கள் இன்று ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்து புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள்.

[Continue reading...]

பெண் துறவி கற்பழிப்பு

- 0 comments

மகாவீர் ஜெயினின் அகிம்சை கொள்கையை நாடு முழுவதும் பரப்பிடும் நோக்கத்தில் வசதியான ஜைனர்களில் சிலர், குடும்பத்தை விட்டு பிரிந்து துறவிகளாக சமயப்பணி ஆற்றி வருகின்றனர். செல்வம், இளமை, அழகு இவற்றையெல்லாம் கருத்தில்கொள்ளாமல் ஜைன பெண்களில் சிலரும் குடும்பத்தை பிரிந்து துறவு வாழ்க்கையை மேற்கொள்கின்றனர்.இவ்வகையில் துறவறம் மேற்கொள்ளும் பெண்கள், நாடெங்கிலும் உள்ள ஜைன கோயில்களுக்கு சென்று சேவை மற்றும் உபதேசங்களை செய்து வருகின்றனர்.இதைப் போல், மத்திய பிரதேச மாநிலம், பிந்த் மாவட்டத்தில் சேவை செய்து வந்த இளம்வயது பெண்தறவியை கடந்த வாரம் சில நபர்கள்கடத்திச் சென்று அசோக் தோபி என்பவர் வீட்டில் வைத்து கற்பழித்துள்ளனர்.அந்த காமுகர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அந்த பெண் துறவி நடத்திய போராட்டத்தில் அவருடைய உடலின் 3 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.அவர் கூறிய அடையாளம்களின்படி அசோக் தோபியை கைது செய்த போலீசார், அவர்மீது ஆள் கடத்தல், கற்பழிப்பு, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் மற்ற குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

[Continue reading...]

Saturday 23 March 2013

கருணா & கருணாநிதி ஒற்றுமை வேற்றூமை என்ன ?

- 0 comments

1. இருவருமே தமிழ் துரோகிகள்

2. நன்பனாக இருந்து கழுத்தை அறுக்கும் கயவாளிகள்

3. இருவருவே எட்டப்பன்கள்

4. பெயர் ஒற்றுமை

5. நிதிக்காக எதையும் விட்டுக்கொடுப்பார்ள்

6. இருவருக்கும் மூன்று மனைவிகள்

வேறுபாடு வயது மட்டுமே

[Continue reading...]

Friday 22 March 2013

மார்பகங்களின் அளவு மற்றும் செயல்பாடு உணவுப் பழக்கம் பொறுத்து மாறுபடும்

- 0 comments

உயிர் வாழத் தேவையான வெப்பத்தை தன் உடலில் உற்பத்தி செய்து கொள்ளும் உயிரினங்கள் வெப்ப இரத்தப் பிராணிகள் எனப்படுகின்றன. இந்த
வகையில் 29 தொகுதிகளில் மொத்தம் 5400 உயிரினங்களை நவீன அறிவியல் பட்டியலிட்டிருக்கிறது.   

இந்த பட்டியலில் மனிதனும் ஒருவன். இந்த உயிரினங்களுக்கு இருக்கும் மற்றொரு பொது அம்சம், இவை யாவும் பாலூட்டிகள் என்பதே.
பாலூட்டுதல் அல்லது முலையூட்டுதல் எனப்படும் இந்த செயலே ஒரு உயிரினம் வாழையடி வாழையாய் பிழைத்துக் கிடப்பதில் பெரும்பங்கு
வகிக்கிறது.

இந்த செயலுக்கான மனித உறுப்பான மார்பகம் பற்றிய சில புரிதல்களோடு, சித்தர் பெருமக்கள் அருளிய தீர்வொன்றினையும் பகிர்வதே இந்த பதிவின்
நோக்கம்.

பிறந்த குழந்தைக்கு பாலூட்டுவதே மார்பகங்களின் செயல்பாடு. இவற்றின் அளவு பரம்பரை உடல் வாகு மற்றும் உணவுப் பழக்கம் பொறுத்து
மாறுபடும். எனினும் எல்லோருக்கும் வலது பக்க மார்பகத்தை விடவும் இடது பக்க மார்பகத்தின் அளவு சற்று பெரியதாக இருக்கும்.

இடது புற மார்பகத்தின் கீழே இதயம் அமைந்திருப்பதால் இடது மார்பகம் வலப்பக்கத்தை விட பெரியதாக தெரியும். கீழே உள்ள படம் மார்பகத்தின்
குறுக்கு வெட்டுத் தோற்றம்.

ஒருவரின் மார்பக அளவு பெரிதாகவும், சிறியதாகவும் தெரிய அங்கே சேர்ந்திருக்கும் கொழுப்புதான் காரணம் என்பதை மேலே உள்ள படத்தில்
இருந்து எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
மருத்துவ மொழியில் சொல்வதானால் பாலை உற்பத்தி செய்துதரும் நொதியங்களையும், திசுக்களையும் உள்ளடக்கிய தசைக் கோளமே மார்பகம்.
தாய்மையின் அம்சமான இந்த உறுப்பினை மற்றெந்த உடல் உறுப்புகளைப் போல கருதிடாமல் அழகியல் சார்ந்த ஒன்றாக அணுகுவது வாழ்வியல்
முரண்பாடுகளில் ஒன்று.

அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரையிலும் கூட இறுக்கமான மார்க்கச்சை அணியும் பழக்கம் தமிழரிடம் இல்லை. குளிர் பிரதேசத்தில் வாழ்ந்த
வெள்ளையர்கள் குளிரிலிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டி உடலின் மீது பல அடுக்கு ஆடைகளை அணிந்தனர்.
அவர்களின் ஆதிக்கத்தில் வந்த பின்னர் நாமும் நாகரீகம் என்ற பெயரில் இறுக்கமான உள்ளாடைகள், அதன் மேல் ரவிக்கைகள் என அணிய
ஆரம்பித்தோம்.

இப்படி இறுக்கமான உள்ளாடைகளை பயன்படுத்துவதினால் உண்டாகும் மேலதிக வியர்வை காரணமாக நோய்த் தொற்று, தோல் பாதிப்புகள், அழுக்கு
சேர்தல், மார்பகத்தில் இரத்த ஓட்டம் தடைப் படுதல் போன்ற பாதிப்புகளை நமது பெண்கள் எதிர்கொள்ள ஆரம்பித்தனர்.

இது ஒரு புறம் என்றால், அழகியல் தேவை என்ற பெயரில் மார்பகங்களை பெரிதாக்குகிறேன், சிறியதாக்குகிறேன் என நவீன மருத்துவ
செய்முறைகள், அறுவை சிகிச்சைகளுக்கு தங்களை உட்படுத்தி பாதிப்புக்குள்ளாவதும் தொடர்கிறது.

இயற்கையை மீறிய இம் மாதிரி செயல்பாடுகளினால் பெண்கள் படும் வேதனைகள் சொல்லி மாளாது. இன்றைய நவ நாகரீக யுகத்தில் பெண்ணாக
பிறந்த ஒவ்வொருவருக்கும் மார்பக புற்றுநோய் தாக்கும் ஆபத்து இருக்கிறது என்கிறார்கள்.

இதன் தீவிரம் இப்போதுதான் உணரப் பட்டு சீரான இடைவெளியில் ஒவ்வொரு பெண்ணும் மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனைகளை செய்து கொள்ள
நவீன மருத்துவம் வலியுறுத்துகிறது.

மார்பக திசுக்களில் ஆபத்தான செல்கள் உண்டாவதைத் தான் மார்பக புற்றுநோய் என்று சொல்கிறோம். இது பெரும்பாலும் பால் சுரப்பி நாளங்களின்
அல்லது அந்த குழாய்களுக்கு பாலைக் கொண்டு சேர்க்கும் நுண்ணறைகளின் உள் அடுக்குகளில் தோன்றும்.

இந்த மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது. இல்லையேல் உயிராபத்தை உண்டாக்கும்.
புற்று நோய் தொடர்பாகவும், அதற்கு சித்தர் பெருமக்கள் முன் வைத்திருக்கும் தீர்வுகள் பற்றியும் தனியொரு பதிவில் விரிவாய் பகிர்ந்து
கொள்கிறேன். இன்றைய பதிவில் தேரையர் பெண்களின் மார்பக வளர்ச்சிக்கென அருளிய வைத்திய முறை ஒன்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆம்!, பெண்களின் மார்பகங்களை பெரிதாக்கக் கூடிய ஒரு வைத்திய முறையினை தேரையர் அருளியிருக்கிறார். கூறியிருக்கிறார்.
ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா!
தேரையர் வைத்திய சாரம் என்கிற நூலில் வரும் அந்தப் பாடல் பின்வருமாறு…
தப்பாது நிலக்கடம்பு ரசத்தை வாங்கி
தையலர்கள் கொங்கைமுலைத் தவிரப் பூசி
யப்பாது சார்பிழிந்து தோணியில் விட்டாட்டி
யறிவாயிந் தப்படியே முறைநாள் மூன்று
வேப்பாது யிருதனமு யிருமல்
விரியுமடா தெள்ளுவனென் றரியா ளைக்கி
மப்பாது வணங்கி அடிவேர்தான் மூன்று
மாதித்த நாளிலெடுக் குளிச்சங் கட்டே
மார்பக வளர்ச்சி இல்லாத பெண்கள் நிலக்கடம்பு சாற்றை தங்கள் மார்பகங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் பூசிவர மார்பகம் பூரண வளர்ச்சியடையும்
என்கிறார்.

மேலும், ஒரு நிலக் கடம்புச் செடியை தேர்ந்தெடுத்து அதனை ஓர் ஞாயிற்றுக் கிழமையன்று வணங்கிக் கொள்ள வேண்டுமாம். அந்த ஞாயிற்றுக்
கிழமையில் இருந்து மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை அன்று அந்த செடியின் வேரை எடுத்துக் கொண்டு வந்து தாயத்துக் குடுவையில் அடைத்து, அந்த
தாயத்தைக் கட்டிக் கொள்வதாலும் வளர்ச்சி அடையாத பாகங்கள் வளர்ச்சி அடைந்து உடல் மிக அழகாக ஆகும் என்கிறார்.
இந்த தகவலின் பின்னாலிருக்கும் அறிவியல் ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உட்பட்டது.
[Continue reading...]

நான் தான் அடுத்த பிரதமர் - ராகுல் காந்தி

- 0 comments

பாராளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது. பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் ஏற்கனவே தயாராகி விட்டது. இதற்காக ராகுல்காந்தி காங்கிரசின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரசை வழிநடத்திச் செல்ல திட்ட மிடப்பட்டுள்ளது.தேர்தலில் வெற்றி பெற்றால் மன்மோகன் சிங்குக்கு மீண்டும் பிரதமர் பதவி இல்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறிவிட்டனர். எனவே அடுத்த பிரதமராகும் வாய்ப்பு ராகுல்காந்திக்கு இருப்பதாக காங்கிரசார் கூறி வருகிறார்கள்.இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் பிரதமர் பதவி மீது தனக்கு ஆசை இல்லை என்றும், திருமணம் பற்றி யோசிக்கவில்லை என்றும் ராகுல்காந்தி கூறியதாக செய்தி பரவியது.இந்த தகவலை உடனடியாக மறுத்த ராகுல்காந்தி தற்போது தான் அப்படி கூறவே இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்துக்கு வந்த ராகுல்காந்தி மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பாராளுமன்ற தேர்தல் பற்றியும், பிரதமர் பதவி பற்றியும் பேச்சு எழுந்தது.பிரதமர் பதவி மீது ஆசையில்லை என்று கூறியது பற்றி ராகுல்காந்தியிடம் கேட்டபோது, தான் அந்த கருத்தில் சொல்லவில்லை. நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டு விட்டார்கள் என்று சொன்னதாக காங்கிரஸ் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.காங்கிரசின் பிரதமர் வேட்பாளர்ராகுல்காந்தி தான். அவர் தலைமையில் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் என்றும் காங்கிரஸ்வட்டாரங்கள் தெரிவித்தன. பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிக்க திட்டமிட்டுள்ளது. எனவே காங்கிரசும், பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

[Continue reading...]

Wednesday 20 March 2013

அய்யய்யோ கலைஞர் ராஜினாமா பண்ணிட்டாரு ! ... !!!!

- 1 comments
அய்யய்யோ கலைஞர் ராஜினாமா பண்ணிட்டாரு ! ... 

நான் என்ன பண்ண ? ... போச்சு   எல்லாம் போச்சு ...

 ... நாடு என்னாகுமோ ?

... பயமாயிருக்கு  ! .... ...

காங்கிரஸ் என்ன பண்ண போகுது ... தெரியலையே ? ...

தமழர்கள்  நிலைமை என்னாகுமோ  ? ... தெரியலேயே  ... ?


தாத்தா   ஏன்   .. கோப பட்டுட்டாரு   .... .... ?

எதுக்கு எப்படி பண்ணினாரு ?  கனிமொழி அக்காதான் தப்பிட்சிட்டான்களே ...

பிறகு என்னாச்சு ...?

பதவி வேண்டாமா ?  இப்படி பண்ணி போட்டாரே ? ..

பெட்ரோல் விலை   குறஞ்சதால எப்படி பண்ணிட்டாரா ?

யாரவது  தெரிஞ்சா எனக்கு பதில் சொல்லுங்க ... ?


[Continue reading...]

18 வயதில் செக்ஸ் நடிகை குஷ்பூ கருத்து

- 0 comments

டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி ஆறு பேரால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின. இதனை கண்டித்து மாணவர்கள் பெண்கள் அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினார்கள்.இதையடுத்து கற்பழிப்பு குற்றவாளிக்கு எதிராக கடுமையானசட்டம் கொண்டு வந்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. புதிதாக பாலியல் குற்றத் தடுப்பு திருத்த மசோதா தயார் செய்யப்பட்டது.இந்த மசோதாவின் சம்மத பாலுறவுக்ககான வயதை 18-ல் இருந்து 16 ஆக குறைப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்த்ததால் நிறைவேற்றவில்லை.முன்பு போல் 18 வயதையே நீடிக்க செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.இந்த வயது சர்ச்சை குறித்து நடிகை குஷ்பு கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-செக்ஸ் க்கான வயதை 18-ல் இருந்து 16 ஆக குறைப்பதன் மூலம்கற்பழிப்பு குற்றங்கள் குறையும் என்று எப்படி கருத முடியும். அது தவறான வழி. கற்பழிப்பு குற்றங்களை குறைக்கசெய்யாது. இந்தியாவில் கற்பழிப்பு சம்பவங்கள் வயது வித்தியாசமின்றி நடக்கின்றன. நாட்டின் எங்கோ ஒரு மூலையில் 45வயது பெண்கூட கற்பழிக்கப்படுகிறாள்.வயதை குறைப்பதாலேயோ அல்லது கூட்டுவதாலேயோ எந்த வித்தியாசமும் ஏற்படப்போவது இல்லை. ஒருவருக்கு ஒட்டு போடும்வயது 18 என உள்ளது. எனவே அந்த வயதில் இருந்துதான் எல்லாம் துவங்க வேண்டும்.இவ்வாறு குஷ்பு கூறினார்.நடிகை பிரியாமணி கூறும்போது, திருமணத்துக்கான சட்டப்பூர்வ வயது 18 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதை இரண்டு ஆண்டுகள் குறைப்பதால் எந்த பெரிய வித்தியாசமும் வரப்போவதில்லை என்றார்.

[Continue reading...]

Tuesday 19 March 2013

சாமியாரிடம் பிள்ளை வரம் வேண்டி வந்த பெண் கற்பழிப்பு

- 0 comments

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூர் மாவட்டத்தில் உள்ள பஹாரி கிராமத்தை சேர்ந்த 25 வயது பெண், திருமணமாகி ஆறேழு ஆண்டுகளாகியும் குழந்தை பாக்கியம் இன்றி மனவேதனையால் அவதிப்பட்டு வந்தார்.அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அடுத்த கிராமத்தில் உள்ள மந்திரவாதியிடம் வைத்தியம் செய்துகொண்டால் உடனடியாக குழந்தை பாக்கியம் கிடைத்துவிடும் என்று கூறி அவளது நெஞ்சில் நம்பிக்கையை விதைத்தனர்.நாமும் தான் போய் பார்ப்போமே என்ற எண்ணத்தில் நேற்று முன்தினம் அந்த பெண், மந்திரவாதி மாம்ராஜ் குமாரின் ஆசிரமத்தை தேடிச் சென்றாள். அவளை தனியறைக்கு அழைத்துச்சென்ற மந்திரவாதி, மயக்க மருந்து தந்து அவளை கற்பழித்துவிட்டான்.மயக்கம் தெளிந்து வீட்டுக்கு சென்ற அந்த பெண் நடந்த சம்பவத்தை குடும்பத்தாரிடம் கூறி கதறி அழுதாள். இரவு முழுவதும் மனஉளைச்சலால் தூக்கமின்றி அழுதபடியே இருந்த அவள், வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டாள்.

[Continue reading...]

வௌிநாட்டு பெண் மானபங்கம்

- 0 comments

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுவிட்சர்லாந்து நாட்டுப் பெண்ணை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. அவரது கணவரையும் கடுமையாகத் தாக்கியது. இதுதொடர்பான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த அதிர்ச்சி அலை ஓய்வதற்குள் மற்றொரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் ஆக்ராவில் நடந்துள்ளது.இங்கிலாந்தில் இருந்து சுற்றுலா வந்த ஒரு பெண், ஆக்ராவில் உள்ள ஒரு ஓட்டலின் முதல் மாடியில் தங்கியிருந்தார். அப்போது அவரது அறையில் ஒரு நபர் அத்துமீறி நுழைந்து, அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அந்தப்பெண் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள மாடியில் இருந்து குதித்துள்ளார்.இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனையில்சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் உரிமையாளரை கைது செய்தனர்.

[Continue reading...]

Monday 18 March 2013

இந்தியாவில் ஆண்மை குறைவால் அதிகரிக்கும் விவாகரத்து

- 1 comments

இந்தியாவில் ஆண்மை குறைவால் அதிகரிக்கும் விவாகரத்து India low masculinity increase in divorce

இந்தியாவில் தம்பதிகளின் மண முறிவுக்கு ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாதது, ஆண் ஆதிக்கம், வரதட்சணை கொடுமை, கூட்டுக்குடும்ப தகராறு போன்றவைகள் தான் காரணமாக இருந்தது. இந்த வரிசையில் தற்போது ஆண்களின் ஆண்மை குறைவும் ஒரு காரணமாக சேர்ந்துள்ளது.
தாம்பத்திய உறவில் சுகம் கிடைக்காமல் விவாகரத்து நடப்பது 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரித்துள்ளதாக டெல்லியில் உள்ள செக்சாலஜி சங்கம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த சங்கத்தினர் திருமணமாகி விவகாரத்து பெற்ற 2500 பேரை, தங்களது ஆய்வுக்குப்படுத்தினர். இதில் 5-ல் ஒருவர் ஆண்மைக் குறைவு காரணமாக மண முறிவுக்கு ஆளானது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆரோக்கியமான திருமண வாழ்க்கைக்கு ஆண்டுக்கு 58 முறை அல்லது வாரத்துக்கு ஒரு முறை உடல் உறவு கொள்வது அவசியம்.
ஆனால், சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் காரணமாக பலருக்கு தாம்பத்திய உறவில் ஆர்வம் குறைகிறது. 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் 50 சதவீதம் பேருக்கு இந்த பிரச்சினை உள்ளது. 40 வயதுக்கு உட்பட்டவர்களில் 10 சதவீதம் பேருக்கு இந்த குறை உள்ளது.
இந்த சங்கத்தினர் நடத்திய ஆய்வில் 40 வயதை கடந்த ஆண்களில் 48 சதவீதம் பேருக்கு சர்க்கரை வியாதி உள்ளது. அதே போல் ரத்த அழுத்தம் 40 வயதை கடந்தவர்களில் 45 பேருக்கு உள்ளது.
இதற்காக இவர்கள் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளினாலும் செக்ஸ் ஆர்வம் குறைவுக்கு காரணமாகி விடுகிறது. இது தவிர புகைப்பிடிக்கும் பழக்கம், மது பழக்கம், அதிக உடல் பருமன், சிறிய உடற்பயிற்சி கூட இல்லாது பணி செய்தல் போன்றவைகளும் ஆண்மைக்குறைவுக்கு காரணமாகிறது.
நகரங்களில் கார்ப்பரேட் கம்பெனிகளில் வேலை செய்யும் கனவன்-மனைவிகள் “செக்ஸ்” பற்றி யோசிக்க முடியாமல் பணி செய்கிறார்கள். இதுவே விவாகரத்து வரை செல்கிறது.
ஆண்மைக்குறைவு என்பது தீர்க்க முடியாத பிரச்சினை அல்ல. ஆனால் இதனை வெளியே சொல்வதற்கு ஆண்கள் தயங்குகிறார்கள். ஆண் ஆதிக்கம் அவர்களை தடுக்கிறது. இதற்காக டாக்டரை அணுகுவதையே அவர்கள் கேவலமாக நினைக்கிறார்கள் என டாக்டர் அனுபீர் தெரிவித்தார்.

[Continue reading...]

Saturday 16 March 2013

மயக்க மருந்து கொடுத்து நடிகை கவிதா வின் மகள் காரில் கடத்தி .....

- 0 comments

காற்றினிலே வரும் கீதம், பிஸ்தா, சும்மா இருங்க மச்சான், கும்பகோணம் கோபால் உள்பட ஏராளமான தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்தவர், கவிதா. இவர், இப்போது ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் வசித்து வருகிறார். 5 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த இவர், அந்த கட்சியின் மகளிர் அணியில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார்.
கவிதாவுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மூத்த மகள் பெயர், மாதுரி (வயது 21) எம்.பி.ஏ. படித்து வருகிறார். இவரும், ஆந்திர மாநிலம் கரீம் நகர் மாவட்டம் சங்கரப்பட்டணத்தை சேர்ந்த கார் டிரைவர் ராஜ்குமாரும், ஐதராபாத் பெத்தபள்ளியில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.
மகள் திருமணம் பற்றி நடிகை கவிதா, சில பரபரப்பான தகவல்களை கூறினார். அவர் கூறியதாவது:-
என் மகளுக்கும், கார் டிரைவர் ராஜ்குமாருக்கும் திருமணம் நடக்கவில்லை. கடைசி நிமிடத்தில் அந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது. ராஜ்குமார் என்னுடைய கார் டிரைவர் கிடையாது. செகந்திராபாத்தில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் நாங்கள் மூன்றாவது மாடியில் வசிக்கிறோம். ராஜ்குமார், முதல் மாடியில் உள்ள ஒரு அலுவலகத்தில் கார் டிரைவராக இருந்தான். அந்த வகையில்தான் எங்களுக்கு அவன் அறிமுகம் ஆனான். கார் பார்க்கிங்கில் பார்க்கும்போது, ஹலோ சொல்வதுடன் சரி. மற்றபடி, அவனுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவனுடன் என் மகளுக்கு காதலும் இல்லை.
சம்பவத்தன்று என் மகள் மாதுரி, பக்கத்தில் உள்ள கடைக்கு சென்றிருந்தாள். அப்போது அவளுக்கு ராஜ்குமார் குளிர்பானம் வாங்கி கொடுத்து இருக்கிறான். அதில் மயக்க மருந்து கலந்திருந்தது தெரியாமல் மாதுரி குடித்து விட்டாள். மயங்கி சரிந்த அவளை, ராஜ்குமார் ஒரு ஆட்டோவில் கடத்தி சென்று இருக்கிறான். கோவிலில் என் மகள் கழுத்தில் அவன் மாலை அணிவித்தபோது, போலீசார் அவனை மடக்கிப் பிடித்து விட்டார்கள். கடைசி நிமிடத்தில் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டது.
இதுதொடர்பாக என் கணவர் தசரதராஜ் போலீசில் புகார் கொடுத்து இருக்கிறார். ராஜ்குமாரை போலீசார் கைது செய்து காவலில் வைத்து இருக்கிறார்கள். அவனிடம் இருந்து போலீசார் என் மகளை மீட்டு, எங்களிடம் ஒப்படைத்து விட்டார்கள்.
என் மகளை கடத்தி சென்ற கார் டிரைவர் ராஜ்குமார், ஏற்கனவே 3 திருமணங்கள் செய்தவன் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவன் பெண்களை கடத்தி விற்பவன் என்பது தெரியவந்து இருக்கிறது. அவனிடம் இருந்து குஜராத் செல்வதற்கான ரெயில் டிக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள்.

[Continue reading...]

Friday 15 March 2013

ஸ்பெஷல் கிளாஸ் எனக்கூறி 7-ஆம் வகுப்பு மாணவியை 6 மாதமாக கற்பழித்த ஆசிரியர்

- 1 comments

கர்நாடக மாநிலம் பெல்லாரி அருகே உள்ள கொர்லா கண்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி இருக்கிறது. இந்த பள்ளிக்கூடத்தில் கணக்கு ஆசிரியராக
வேலை பார்த்தவர் அனுமந்தப்பா (38). இவர் 7-வது வகுப்பு மாணவிகளுக்கு கணக்கு பாடம் எடுத்து வந்தார்.
இந்த வகுப்பில் பாடம் படித்த 13 வயது மாணவியிடம் ஆசிரியர் அனுமந்தப்பா, “நீ இப்படி படித்தால் ‘பாஸ்’ ஆக முடியாது. எனவே வகுப்பு
முடிந்த பிறகு உனக்கு தனியாக பாடம் எடுக்கிறேன் வா” என்றார்.
ஆசிரியரின் வார்த்தையை நம்பி அந்த மாணவி பாடம் படிக்கச் சென்றார்.ஆரம்பத்தில் பாடம் சொல்லிக் கொடுத்த அவர், பின்னர் மாணவியின்
ஆசையை தூண்டும் வகையில் நடந்து கொண்டார்.
மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற ஆசிரியரின் விருப்பத்துக்கு மாணவி உடன்படவில்லை. எனவே, “நான் சொல்வது போல் நீ நடக்காவிட்டால்
உன்னை 7-வது வகுப்பில் ‘பெயில்’ ஆக்கி விடுவேன்” என்று மிரட்டினார்.
இதனால் பயந்துபோன மாணவியை ஆசிரியர் அனுமந்தப்பா கட்டாயப்படுத்தி கற்பழித்துள்ளார். இதுபோல் 6 மாதம் அந்த மாணவியை தன் ஆசைக்கு
அவர் பயன்படுத்தி இருக்கிறார்.
குடியரசு தினவிழா அன்று பள்ளிக்கு சென்ற மாணவியை, தனியாக வரும்படி ஆசிரியர் அழைத்துள்ளார். ஆனால் மாணவி அவரது பிடியில் சிக்காமல்
வீட்டுக்கு சென்று விட்டாள். இதனால் ஆசிரியரின் தொந்தரவு அதிகமானது.
தனது மன உளைச்சல் குறித்து மாணவி தனது தோழிகளிடம் தெரிவித்தார். தகவல் தலைமை ஆசிரியருக்கு சென்றது. தாய் இல்லாத அந்த மாணவி
தனது பாட்டியுடனும், விவசாயியான தந்தையுடனும் வசித்து வந்தார்.
அவளுக்கு நடந்த இந்த கொடுமை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் ஆசிரியர் 6 மாதமாக மாணவியை மிரட்டி கற்பழித்த உண்மை தெரிய
வந்தது. இதையடுத்து, பள்ளி வளர்ச்சி கண்காணிப்புக் குழு மூலம் ஆசிரியர் அனுமந்தப்பா குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆசிரியர் வேலையில் இருந்தும் அனுமந்தப்பா ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டார்.
Tags: தனிவகுப்பு நடத்துவதாக கூறி 7-ஆம் வகுப்பு மாணவியை 6 மாதமாக கற்பழித்த ஆசிரியர்

[Continue reading...]

Wednesday 13 March 2013

இலஞ்சியை சேர்ந்த இளம் பெண் கற்பழிப்பு

- 0 comments
மதுரை ரெயில் நிலையத்தில் தாய்க்கு காபியில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து இளம் பெண்ணை கற்பழித்ததாக வாலிபர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள இலஞ்சியை சேர்ந்தவர் ரேவதி (வயது30) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக தாயுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

அங்கு சிகிச்சை பெற்றபிறகு நேற்று இரவு ஊருக்கு செல்வதற்காக மதுரை ரெயில் நிலையம் வந்தனர். அங்கு அவர்கள் அமர்ந்து இருந்தபோது ஒரு வாலிபர் ரேவதி தாயாருடன் பேசி உள்ளார். அப்போது அவர் வாங்கி கொடுத்த காபியை தாய் குடித்ததும் மயங்கி விட்டார்.

நீண்ட நேரத்திற்கு பிறகு கண் விழித்த அவர் மகளுடன் ரெயில் ஏறி தென்காசி புறப்பட்டார். திருமங்கலம் அருகே ரெயில் சென்றபோது ரேவதிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அப்போது மகளிடம் விசாரித்தபோதுதான் அவளை ஒரு வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்த வாலிபர் அதன் பிறகு ரேவதியை தனியாக அழைத்து சென்று கற்பழித்து விட்டதாக தாய் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
[Continue reading...]

Tuesday 12 March 2013

மனைவிக்கு போதை மாத்திரை கொடுத்து ஆபாசபடம்

- 0 comments

கோவையை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் கோவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில்,
’’எனக்கும் பெங்களூர் ஆர்.கே.நகரை சேர்ந்த தொபயாஸ் ( 25 ) என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் நாங்கள் பெங்களூரில் தனிக்குடித்தனம் நடத்தினோம்.
அங்கு சென்றதும் கணவர் வேலைக்கு செல்லாமலும், வீட்டுக்கு ஒழுங்காக வராமலும் இருந்தார். என்னை வீட்டில் அடைத்து வைத்து, என்னுடைய செல்போனையும் பறித்து வைத்துக் கொண்டார்.
ஒரு நாள் தலைவலிக்கு மாத்திரை கேட்டேன். அதற்கு கணவர் கொடுத்த மாத்திரையை சாப்பிட்டதும் மயங்கி விட்டேன். பின்னர் அவரது நண்பரை, என்னோடு சேர்த்து ஆபாச படம் எடுத்துள்ளார்.மயக்கம் தெளிந்ததும், அதை என்னிடம் காட்டி எனது பெற்றோரிடமிருந்து 10 பவுன் நகை மற்றும் ரூ. 10 ஆயிரம் வாங்கி வா.
இல்லையென்றால் ஆபாச படத்தை இன்டர்நெட்டில் வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டி கொடுமைப்படுத்தினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து முகமது பயாஸ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி பெங்களூர் விரைந்துள்ளனர்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger