Tuesday 19 March 2013

சாமியாரிடம் பிள்ளை வரம் வேண்டி வந்த பெண் கற்பழிப்பு

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூர் மாவட்டத்தில் உள்ள பஹாரி கிராமத்தை சேர்ந்த 25 வயது பெண், திருமணமாகி ஆறேழு ஆண்டுகளாகியும் குழந்தை பாக்கியம் இன்றி மனவேதனையால் அவதிப்பட்டு வந்தார்.அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அடுத்த கிராமத்தில் உள்ள மந்திரவாதியிடம் வைத்தியம் செய்துகொண்டால் உடனடியாக குழந்தை பாக்கியம் கிடைத்துவிடும் என்று கூறி அவளது நெஞ்சில் நம்பிக்கையை விதைத்தனர்.நாமும் தான் போய் பார்ப்போமே என்ற எண்ணத்தில் நேற்று முன்தினம் அந்த பெண், மந்திரவாதி மாம்ராஜ் குமாரின் ஆசிரமத்தை தேடிச் சென்றாள். அவளை தனியறைக்கு அழைத்துச்சென்ற மந்திரவாதி, மயக்க மருந்து தந்து அவளை கற்பழித்துவிட்டான்.மயக்கம் தெளிந்து வீட்டுக்கு சென்ற அந்த பெண் நடந்த சம்பவத்தை குடும்பத்தாரிடம் கூறி கதறி அழுதாள். இரவு முழுவதும் மனஉளைச்சலால் தூக்கமின்றி அழுதபடியே இருந்த அவள், வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டாள்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger