Monday 2 June 2014

கறுப்பு பண மீட்புக்கான செயல்திட்டம் பற்றி முதல் கூட்டத்தில் முடிவு first meeting project results in recovery of black money

- 0 comments

கறுப்பு பண மீட்புக்கான செயல்திட்டம் பற்றி முதல் கூட்டத்தில் முடிவு first meeting project results in recovery of black money

 

புதுடெல்லி, ஜூன்.3-

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்டு கொண்டுவர மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கறுப்பு பண மீட்பு பற்றி விசாரணை நடத்துவதற்காகவும், இதுதொடர்பான வழக்கு விசாரணைகளை கண்காணிக்கவும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உத்தரவிட்டது.

அதற்கு 3 வார கால அவகாசம் அளித்தபோதிலும், முந்தைய மன்மோகன்சிங் அரசு அமைக்கவில்லை. மேலும் ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டபோது, தற்போதைய நரேந்திர மோடி அரசு, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. மத்திய மந்திரிசபையின் முதலாவது கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. குழுவின் தலைவரான சுப்ரீம் கோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி.ஷா தலைமை தாங்கினார். ரிசர்வ் வங்கி துணை கவர்னர், உளப்பிரிவு டைரக்டர், அமலாக்கப்பிரிவு இயக்குனர், சி.பி.ஐ. இயக்குனர், மத்திய நேரடி வரிகள் வாரிய இயக்குனர், வருவாய் புலனாய்வு இயக்குனர், 'ரா' இயக்குனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, கறுப்பு பண மீட்பு விவகாரத்தில், மேற்கொண்டு முன்னோக்கி செல்வது குறித்த வழிமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. பின்னர், இதுபற்றிய செயல்திட்டம் முடிவு செய்யப்பட்டது. சிறப்பு புலனாய்வு குழுவின் அடுத்த கூட்டம் விரைவில் நடைபெறுகிறது.

அதில், இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படுகிறது. இத்தகவல்களை மத்திய அரசு செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

...

 

[Continue reading...]

தனது வாழ்க்கையை படமாக எடுக்க நயன்தாரா எதிர்ப்பு nayandhara oppose for taking a film about her

- 0 comments

தனது வாழ்க்கையை படமாக எடுக்க நயன்தாரா எதிர்ப்பு nayandhara oppose for taking a film about her

Error! Filename not specified.

நயன்தாரா வாழ்க்கை கதையை படமாக எடுக்க முயற்சிகள் நடக்கிறது. திரையுலகில் நிகழ்த்திய சாதனைகள், காதல் சர்ச்சைகள் அனைத்தையும் உள்ளடக்கிய படமாக இது இருக்கும் என்கின்றனர்.

நயன்தாரா 2005–ல் ஐயா படம் மூலம் தமிழில் அறிமுகமானார். சந்திரமுகி படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தார். ஸ்ரீராமராஜ்ஜியம் தெலுங்கு படத்தில் சீதை வேடத்தில் நடித்தார். இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். நிறைய ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

வல்லவன் படத்தில் நடித்த போது சிம்புவுடன் காதல் வயப்பட்டார். சில மாதங்களிலேயே அது முறிந்தது. அதன்பிறகு டைரக்டர் பிரபுதேவாவை காதலித்தார். இருவரும் திருமணம்வரை வந்தனர். இதற்காக மதம் மாறவும் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் இதுவும் முறிந்து போனது. தற்போது சினிமாவில் மீண்டும் பிசியாக நடிக்க துவங்கியுள்ளார்.

நயன்தாரா வாழ்க்கையை படமாக்கினால் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என கருதி புது டைரக்டர் ஒருவர் அதற்காக திரைக்கதையை உருவாக்கியுள்ளார். நயன்தாராவிடம் இதற்கான அனுமதி கேட்டு அணுகினார். நயன்தாரா இதற்கு சம்மதிக்கவில்லை. தன் வாழ்க்கையை படமாக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

...

 

[Continue reading...]

திருடிய பெண்ணிடமே பேஸ்புக்கில் அழைப்பு விடுத்து மாட்டிக்கொண்ட திருடன் Thief Sends Facebook Friend Request to Victim Lands in Jail

- 0 comments

திருடிய பெண்ணிடமே பேஸ்புக்கில் அழைப்பு விடுத்து மாட்டிக்கொண்ட திருடன் Thief Sends Facebook Friend Request to Victim Lands in Jail

 

வாஷிங்டன், ஜூன் 2-

அமெரிக்காவில் திருடிய பெண்ணிடமே பேஸ்புக்கில் நட்பு அழைப்பு விடுத்ததால் வசமாக சிக்கிக்கொண்ட திருடன் இப்போது சிறைக் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறான்.

ரிலே முல்லின்ஸ்(28) என்ற அந்த வாலிபர், கடந்த சில தினங்களுக்கு முன் படகு முனையத்தில் தனியாக நின்ற ஒரு பெண்ணைத் தாக்கி அவரிடம் இருந்த கைப்பையை பறித்துச் சென்றுள்ளான். பின்னர் தற்செயலாக அந்த பெண்ணின் பேஸ்புக் முகவரியை தொடர்பு கொண்ட அந்த ஆசாமி நட்பு வைத்துக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளான்.

பேஸ்புக்கில் முல்லின்ஸ் படத்தைப் பார்த்ததும் அந்த பெண்ணுக்கு சந்தேகம் எழுந்தது. அவன் கையில் முக்கோண வடிவில் பச்சை குத்தியிருந்ததை வைத்து, தன்னிடம் கைப்பையை பறித்த திருடன்தான் இவன் என்று அடையாளம் கண்டுகொண்ட அந்த பெண், உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

...

 

[Continue reading...]

அபுதாபி: ரூ. 80 ஆயிரம் வீட்டு வாடகை தந்தும் கார்களில் தூங்கும் இந்தியர்கள் Tenants in Abu Dhabi sleep in cars as landlord refuses to repair central ac

- 0 comments

 

அபுதாபி: ரூ. 80 ஆயிரம் வீட்டு வாடகை தந்தும் கார்களில் தூங்கும் இந்தியர்கள் Tenants in Abu Dhabi sleep in cars as landlord refuses to repair central ac

 

அபுதாபி, ஜுன் 2-

இந்தியாவை சேர்ந்த பலர் அபுதாபி நாட்டில் பல்வேறு விதமான வேலைகளை செய்து காலத்தை ஓட்டி வருகின்றனர்.

இவர்களில் பலர் தங்களது குடும்பத்துடன் இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.

இங்கு கூடம், சமையலறை மற்றும் ஒரேயொரு படுக்கையறை வசதி கொண்ட வீடுகளுக்கு ஆண்டொன்றுக்கு சராசரியாக 60 ஆயிரம் திர்ஹம் வரை (ஒரு திர்ஹம் என்பது இந்திய மதிப்புக்கு சுமார் 16 ரூபாய். அதன்படி, இந்திய மதிப்புக்கு ஒரு மாதம் வாடகை சுமார் 80 ஆயிரம் ரூபாய் ஆகிறது.) வாடகையாக கொட்டிக் கொடுக்கும் இவர்களை வீட்டின் உரிமையாளர்கள் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அபுதாபி விமான நிலையம் அருகே இஸ்லாமிய வங்கி அமைந்துள்ள பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட 'ஜர்னி டாய்ஸ் பில்டிங்' என்ற பெயரில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இந்த வளாகத்தில் 18 இந்தியர்கள் தங்கள் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.

அரபு நாடுகளில் எல்லாம் அறைக்கு அறை தனியாக 'ஏ.சி.' இயந்திரங்கள் கிடையாது. சினிமா தியேட்டர்களில் உள்ளது போல் 'சென்ட்ரல் ஏர் கண்டிஷனிங் சிஸ்ட்டம்' மட்டுமே உண்டு. இந்த குடியிருப்பில் அந்த சிஸ்டம் பழுதாகி 10 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது.

இது தொடர்பாக அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் தனித்தனியாகவும், ஒன்றாக சேர்ந்தும் வீட்டின் உரிமையாளரிடம் பல தடவை முறையிட்டும், அவர் 'இதோ.., அதோ..,' என்று கடந்த 10 நாட்களாக கெடு சொல்லியே காலம் கடத்தி வருகிறார்.

இவரை நம்பி புண்ணியமில்லை என்று முடிவெடுத்த சிலர், பணம் செலவாவதைப் பற்றி கவலைப்படாமல் ஆயிரம் திர்ஹம் முதல் 3 ஆயிரம் திர்ஹம் வரை விலை கொடுத்து, தனியாக ஏ.சி. இயந்திரத்தை வாங்கி வீட்டில் பொருத்திக் கொண்டனர்.

திடீரென்று ஏ.சி.க்கு மட்டும் அவ்வளவு பணத்தை செலவழித்து விட்டால், சொந்த ஊரில் இருக்கும் தங்கைகளின் திருமண செலவுக்கு மாதாமாதம் அனுப்பும் பணம் தடைபட்டு விடுமே.. என்று எண்ணியவர்கள், உச்சகட்ட கோடைக்காலமான இந்த வேளையில், தங்களது குழந்தை, குட்டிகளுடன் காற்றோட்டம் இல்லாத அறைகளில் புழுங்கித் தவிக்கின்றனர்.

இரவு முழுவதும் குழந்தைகள் தூங்க முடியாமல் அவதிப்படுவதால், அவர்களை சமாதானப்படுத்துவதிலேயே விடியற்காலை வரை விழித்திருக்கும் பெற்றோர், மறுநாள் காலை பணியின் போது சுறுசுறுப்பாக செயல்பட முடியாமல் சோர்வடைந்து காணப்படுகின்றனர். அவர்கள் வீட்டு குழந்தைகளின் சருமம் முழுவதும் வியர்க்குரு மற்றும் நகக் கீறல்களால் கன்றிப்போய் காணப்படுகிறது.

இவர்களில் சிலர் காரில் உள்ள ஏ.சி.யை ஓடவிட்டபடி, சாலைகளில் படுத்து உறங்கும் காட்சியை அபுதாபியில் இருந்து வெளியாகும் சிற்றிதழ்கள் படம் பிடித்து, செய்தியாக வெளியிட்டுள்ளன.

...

 

[Continue reading...]

அரசு பள்ளிகளில் நோட்டுப்புத்தகம்–சீருடை இன்று விநியோகம் government schools note book uniform distribution today

- 0 comments

 

அரசு பள்ளிகளில் நோட்டுப்புத்தகம்சீருடை இன்று விநியோகம் government schools note book uniform distribution today

 

சென்னை, ஜூன் 2–

கோடை வெயில் இந்த ஆண்டு கடுமையாக வாட்டி வதைத்தது. அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் கூட வெயிலின் தாக்கம் குறையவில்லை.

சென்னை உள்ளிட்ட அநேக மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி தாண்டி, கொளுத்தியது. இதனால் பள்ளிக்கூடங்கள் திறப்பது தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 2–ந் தேதி பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக இருந்தது.

பள்ளிக்கூடம் திறக்க கூடிய நாளில் மாணவமாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், சீருடை ஆகியவற்றை வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

திட்டமிட்டப்படி அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலை மற்றும் உயர் நிலைப் பள்ளிகள், மேல் நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் தமிழகம் முழுவதும் இன்று கோடை விடுமுறைக்கு பிறகு திறக்கப்பட்டன.

மாணவமாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்றார்கள். முதல் வகுப்பு மற்றும் எல்.கே.ஜி. வகுப்பு குழந்தைகள் புதிதாக பள்ளிக்கு சென்றதால் அழுது கொண்டே இருந்தன.

ஒரு சில குழந்தைகள் பெற்றோர்களை விட்டு பிரியாமல் முரண்டு பிடித்தன. அவர்களை ஆசிரியைகள் சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். தங்கள் குழந்தைகள் முதன் முதலில் பள்ளிக்கு செல்வதை ஒவ்வொரு பெற்றோரும் கண்டு மகிழ்ந்தனர்.

அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவமாணவிகளுக்கு மட்டும் இலவசமாக பாடப் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், மற்றும் சீருடை வழங்கப்படுகிறது.

1 முதல் பிளஸ்–2 வரை படிக்கும் ஒரு கோடி மாணவமாணவிகளுக்கு அரசு சார்பில் பாடப்புத்தகங்கள் இலவசமாக இன்று வழங்கப்பட்டன.

81 லட்சம் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்படுகிறது. பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே மாணவமாணவிகளுக்கு பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், சீருடை ஆகியவை விநியோகம் செய்யப்பட்டன.

பள்ளி திறக்கப்படும் நாளில் பாடப்புத்தகங்கள் நோட்டு புத்தகங்கள் சீருடை வழங்கும் வகையில் ஏற்கனவே அந்தந்த பள்ளிகளுக்கு கல்வித்துறை மூலம் அனுப்பப்பட்டு இருந்தன. தலைமை ஆசிரியர்கள் மூலமாக மாணவமாணவிகளுக்கு அரசின் பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

சென்னையில் விருகம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, செயலாளர் சபீதா ஆகியோர் மாணவமாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. அரசின் இலவச பாடப் புத்தகங்கள், சீருடைகளை மாணவமாணவிகள் மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர்.

...


View article...

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger