Friday 13 September 2013

அஜித் தவறவிட்ட ஹிட் படம் actor ajith hit movie

- 0 comments

அஜித் தவறவிட்ட ஹிட் படம்

சினிமாவில் மேலும் ஒரு ஹிட் படத்தை தவறவிட்டுள்ளாராம் நடிகர் அஜித்.
சினிமா பின்னணி இல்லாமல் முன்னணி நடிகராக உயர்ந்தவர் அஜித்.

காதல் படங்களில் நடித்த வந்தவருக்கு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த தீனா படம் திருப்பு முனையாக அமைந்தது.

தற்போது ரசிகர்களின் மத்தியில் தல என்ற பெயரோடு தலைகணம் இல்லாமல் வலம் வருகிறார்.

கஜினி காக்க காக்க மற்றும் ந ந்தா போன்ற படங்களில் இவர் நடிப்பதாக இருந்தது ஆனால் சில காரணங்களால் சூர்யா நடித்தார்.

அதே போல் நான் கடவுள் படத்திலும் அஜித்துக்குப் பதிலாக ஆர்யா நடித்தார்.

இப்படி அஜித் நடிக்க இருந்து மாற்று நடிகர்கள் நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று அப்படத்தின் நாயகர்களை உச்சத்திற்கும் கொண்டு சென்றது.

இதேபோல் தற்போது அஜித் நடிக்க இருந்த படம் வேறு நடிகர் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

அந்தப்படம்தான் கோ. ஒளிப்பதிவாளராக இருந்த கே.வி. ஆனந்த் இயக்கிய படம்.

அவர் இந்த கதையை அஜீத்துக்காக உருவாக்கினாராம். அதன்பின் சூர்யாவிடம் சென்றதாம். அதன்பின் சிம்புவிடம் கைமாறி கடைசியாக ஜீவா நடித்தாராம்.

[Continue reading...]

மனைவியிடம் எப்போதும் சொல்லக்கூடாத 10 விஷயங்கள்!!! Top ten news dont tell to your wife

- 0 comments

மனைவியிடம் எப்போதும் சொல்லக்கூடாத 10 விஷயங்கள்!!!

திருமண பந்தம் என்பது ஆயிரங்காலத்து பயிர். கடைசி வரை நம்முடன் வரப் போவது வாழ்க்கைத்துணை மட்டும் தான். அதனால் ஆண்கள் குடும்ப சக்கரங்கள் சீராக ஓட மனைவியிடம் அன்பாக அனுசரணையாக நடந்து கொள்வீர்கள். அனைத்தையும் அவர்களிடம் சொல்ல வேண்டும் என்று எண்ணுவீர்கள். ஆனால் அனைத்தையும் சொல்லக் கூடாது என்று யாரவது உங்களுக்கு சொல்லி இருக்கிறார்களா?

பொதுவாக மனைவியிடம் எதை சொல்ல கூடாது என்று யாருமே சொல்வதில்லை. என்ன செய்வது! நாம் திருமணத்தின் போது திருமண மந்திரங்களை ஓதுவதற்கு பதிலாக, ஐயருக்கு லஞ்சம் கொடுத்து மனைவியிடம் சொல்லக்கூடாத முதன்மையான 10 விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஆனால் அப்படி கேட்டால் அது என்னவாக இருக்கும் என்று தெரியுமா? அதைத் தான் தமிழ் போல்ட் ஸ்கை பட்டியலிட்டுள்ளது.

"நீ டயட்டில் இருப்பது நல்லது"

வீட்டையும் பராமரித்து, உங்களையும் பார்த்துக் கொள்ளும் போது, உங்கள் மனைவியின் தோற்றத்தில் மாறுதல்கள் ஏற்படலாம். அவர்களை பாராட்டவில்லை என்றாலும் கூட, டயட்டை பற்றி எல்லாம் கூறிவிடாதீர்கள். முக்கியமாக நீங்கள் கட்டுக்கோப்பான உடல் அமைப்புடன் இருக்கும் போது!

"என்னை போல் நீயும் ஏன் நீண்ட நேரம் வேலை செய்யக் கூடாது?"

உங்கள் கஷ்டம் புரிகிறது. உங்கள் வேலை பளு காரணமாக மனைவியிடம் உரையாடலில் ஈடுபட்டு, மனதை சாந்திப்படுத்த நினைப்பீர்கள். அப்படி பேசும் போது, நீங்கள் இப்படி வேலை பார்ப்பது குடும்பத்துக்காக நீங்கள் செய்யும் பெரிய தியாகம் என்றெல்லாம் சொல்லாதீர்கள். சொல்லியும் அது ஒன்றும் உதவ போவதில்லை. அவர்கள் வீட்டையும், குழந்தையும் பார்த்துக் கொள்ளும் வேலையை விட்டால் என்ன ஆகும்? சற்று யோசித்து பாருங்கள்.

கண்டிப்பாக உங்கள் மனைவிக்கு உங்கள் அலுவலக கதையை கேட்பதில் நாட்டம் இருக்காது. நீங்கள் வீட்டிற்கு வந்ததும், அவர்கள் சொல்வதை நீங்கள் கேட்கவே அவர்கள் விரும்புவார்களே தவிர, உங்கள் அலுவலக பிரச்சனைகளை அல்ல. வேண்டுமெனில் தினமும் பேசாமல், எப்போதாவது பேசினால் கூட சரி தான்.

"அவள் அழகாக இருக்கிறாள் அல்லவா!"

இதனை எப்போதாவது உங்கள் மனைவியிடம் கூறி, மற்ற பெண்களை நீங்கள் கவனிப்பதை பற்றி உங்கள் மனைவிக்கு தெளிவாக கோடு போட்டு கொடுக்கிறீர்களா? உங்களை சுற்றி கன்னி வெடிகள் புதைக்கப்பட்டு விட்டன!

"எனக்கு பேச தோன்றவில்லை"

இத்னை எப்போதாவது சொன்னால் பிரச்சனை இல்லை. ஆனால் இது அடிக்கடி கூறப்பட்டால், உங்களுக்கு இடையில் கண்டிப்பாக பிரச்சனை ஏற்படும். அதனால் மனைவியிடம் மனம் விட்டு பேச பழகி கொள்ளுங்கள்.
"எப்போ பார்த்தாலும் குறை கூறி கொண்டே இருப்பியா?"

இப்படி சொல்வதை தவிர்க்கவும். அதிலும் ஏற்கனவே கோபத்தில் இருக்கும் உங்கள் மனைவியிடம், இப்படி நீங்கள் கூறும் போது பத்திரகாளியாக மாறலாம்.

"திரும்ப திரும்ப ஏன் ஷாப்பிங் செல்கிறாய்?"

உங்களுக்கு அவர்கள் அடிக்கடி ஷாப்பிங் செல்வது பிடிக்காது என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால் அவர்களையும் நீங்கள் குஷிப்படுத்த வேண்டும் அல்லவா? அந்த குஷி ஷாப்பிங்கில் தான் கிடைக்கும் என்றால், அது உங்கள் விதி. குறை சொல்வதற்கு பதில் அதனை கையாளுங்கள்.

"நீ ஏன் இந்த ஆடையை அணிவதில்லை?"

நீங்கள் ஒரு பேஷன் டிசைனராக இல்லாத பட்சத்தில், அவர்களின் ஆடைகளை பற்றி தொடர்ந்து உங்கள் கருத்தை திணிப்பது பெரிய சண்டையில் தான் முடியும். வேண்டுமெனில் உங்களுக்கு பிடித்த ஆடைகளை அவர்களுக்கு அன்பாக பரிந்துரை செய்யுங்கள்.

"இந்த நேரம் வரமால் முன்னாடியே வந்திருக்கலாம்"

இதனை ஒரு தற்காப்பு ஆயுதமாக பயன்படுத்தலாம் என்று நினைத்தால், உங்களுக்கு இன்னொரு அடி காத்துக் கொண்டிருக்கிறது. மாதவிடாய் பற்றி நீங்கள் இப்படி கூறுவது அவர்களை அவமானப்படுத்துவதை போல் ஆகிவிடும். ஆகவே அதனை என்றுமே உங்கள் மனைவியிடம் கூறக் கூடாது.

"நீ உன் அம்மா போலவே நடக்கிறாய்"

முக்கியமாக சொல்லக்கூடாத ஒன்று இருக்கிறது என்றால், அது இது தான். எந்த ஒரு பெண்ணுக்கும் மற்ற பெண்களிடம் ஒப்பிடுவது பிடிப்பதில்லை. முக்கியமாக அவர்களின் தாயாருடன். அவர்களின் தாயின் மீதான உங்கள் கருத்தை சொல்கிறீர்கள் என்பதையும் மறந்துவிடாதீர்கள். வருடம் முழுவதும் மனைவியிடம் மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்ய வேண்டாம் தானே? அப்படியானால் எப்போதும் இதனை சொல்லாதீர்கள்.

திருமணம் என்பது இருவரின் சங்கமம். இருவரும் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு, விட்டு கொடுத்து நடந்தால் தான், அந்த வாழ்க்கை அமைதியாக சந்தோஷமாக பயணிக்கும் என்பதை புரிந்து சரியாக நடந்து சந்தோஷமான வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள்.
Share |

Show commentsOpen link

[Continue reading...]

குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை delhi girl rape case result

- 0 comments

புதுடெல்லி, செப். 13- டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி இரவு மருத்துவ மாணவி ஒருவர், ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்து, வீசி எறியப்பட்டார். பின்னர் சிங்கப்பூர் மருத்துவமனையில் டிசம்பர் 29-ம் தேதி அந்த மாணவியின் உயிர் பிரிந்தது. இந்த சம்பவம் நாட்டையே பதற வைத்ததுடன், வெட்கி தலைகுனியவும் வைத்தது. இது தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் ராம்சிங், முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்க்ஷய் தாகூர் மற்றும் இளங்குற்றவாளி ஒருவர் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். ராம்சிங், டெல்லி திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு தண்டனை விதித்து டெல்லி சிறுவர் கோர்ட்டு கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது. முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்க்ஷய் தாகூர் ஆகிய 4 பேர் மீதான வழக்கை விசாரித்த டெல்லி விரைவு நீதிமன்றம், அவர்கள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக்கூறி, அவர்கள் குற்றவாளிகள் என கடந்த 10 -ந்தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து 11-ந்தேதி வாதம் நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. அவர்கள் செய்த மிகக்கொடிய குற்றத்துக்கு கருணை காட்ட வழியே இல்லை என்பது போலீஸ் தரப்பு வாதம். இருப்பினும் குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வக்கீல், குற்றவாளிகள் மனம் திருந்தி வாழ ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். தேசப்பிதா மகாத்மா காந்தி, ''இறைவன் தான் உயிரைக் கொடுக்க முடியும். அந்த இறைவனுக்குத்தான் உயிரை எடுக்கும் உரிமையும் உண்டு'' என கூறி இருப்பதை சுட்டிக்காட்டினார். வாழ வேண்டிய வயதில் தனது உயிரை அநியாயமாகப் பறிகொடுத்த அந்த இளம் மாணவியின் குடும்பமும், குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என கூறுகிறது. இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில், ''குற்றவாளிகளை தூக்கில் போடப்பட்டால்தான் இந்த வழக்கில் நீதி கிடைக்கும். எங்கள் ஒரே மகளுக்கு கொடுமை இழைத்தபோது இது சரியா என அவர்கள் சிந்திக்கவில்லையே. அப்படி இருக்கிறபோது அவர்களுக்கு கோர்ட்டு ஏன் கருணை காட்டவேண்டும்?'' என கேள்வி எழுப்புகின்றனர். போலீஸ், குற்றவாளிகள் தரப்பு வாதங்களை கேட்ட டெல்லி விரைவு நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கன்னா, இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தண்டனை 13-ந்தேதி (இன்று) தெரிவிக்கப்படும் என அறிவித்தார். அதன்படி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அவர் தனது தண்டனை தீர்ப்பை வெளியிட்டார். அப்போது குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார். இது அரிதினும் அரிதான குற்றம் என்பதால் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இதன்மூலம், இந்தியாவில் கற்பழிப்பு வழக்கில் முதல் முறையாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக குற்றவாளிகளின் வழக்கறிஞர் தெரிவித்தார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதையொட்டி விரைவு நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குற்றவாளிகள் 4 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டனர். 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதைக் கேட்டு வெளியில் திரண்டிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர். சமூக நல அமைப்புகள் இந்த தீர்ப்பினை வரவேற்றுள்ளன. ...

[Continue reading...]

ப்ரியாமணிக்கு திருமணமாம்! Priyamani marriage news

- 0 comments

ப்ரியாமணிக்கு திருமணமாம்!

ஆ.Tamil news

பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக நடிகை ப்ரியாமணி தெரிவித்துள்ளார். 

பருத்தி வீரன் மூலம் தமிழ் ரசிர்களின் மத்தியில் பிரபலமானார் நம்ம முத்தழகு.

அடுத்து ஓரிரு படங்களில் நடித்த அவர் படிப்படியாக தமிழ் சினிமாவில் காணாமல் போனார்.

சமீபத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் இந்திப் படத்தில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடினார்.

தற்போது கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் வரும் வாய்ப்புகள் திருப்தியாக அமையவில்லை என்று தெரிவித்த ப்ரியா மணி, இப்போது தனது திருமணம் குறித்து சீரியஸாக சிந்திக்க ஆரம்பித்துள்ளாராம்.

இதுகுறித்து அவரிடம் கேட்டால், இன்னும் இரண்டு ஆண்டுகளில் எனக்குத் திருமணம் நடக்கலாம்.

ஆனால் நிச்சயம் பெற்றோர்களின் சம்மதத்துடன் கூடிய காதல் திருமணமாக இருக்கும்.

மேலும் முன்பின் தெரியாத ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டு பின்னர் வருத்தப்படுவதை விட அவரைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு திருமணத்தைப் பற்றி முடிவு செய்வதே பொருத்தமாக இருக்கும் என்கிறார்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger