Friday 14 October 2011

எனக்கு ஒட்டுப் போடாவிட்டால் ஊரை கொளுத்துவேன் :மிரட்டும் வீரபாண்டியன்

- 0 comments
 
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகில் உள்ள அத்தனூர்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பாண்டியன் என்கிற திருமுருக வீரபாண்டியன் போட்டியிடுகிறார்.
 
 
இதே அத்தனூர்பட்டியை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சம்பத் என்பவரின் மகன் செந்தில், உலகநாதன், அ.தி.மு.க பிரமுகரான ராமசாமி, கோவிந்தன் உட்பட ஏழு நபர்களை, பல்வேறு காலகட்டங்களில் கொலை செய்த குற்றத்திற்காக வாழப்பாடி போலிசால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவர் வீரபாண்டியன்.
 
 
உள்ளூரிலேயே, இத்தனை கொலை செய்தவருக்கு எதிராக யார் சாட்சி சொல்வார்கள்...? சாட்சிகள் சரியாக அமையாததால், போலீசாரால் வழக்கை நிருபிக்க முடியாமல் போனதால் எல்லா வழக்குகளில் இருந்தும் விடுதலை பெற்றார் இந்த வீரபாண்டியன்.
 
 
 
 
இது தவிர சேலம், திருச்செங்கோடு, நாமக்கல் போன்ற ஊர்களில் மூன்று கொலை வழக்கில் தொடர்புள்ளதாக வழக்கு போட்டு கைது செய்ப்பட்டு அதிலிருருந்தும் வீரபாண்டியன் விடுதலையாகிவிட்டார்.
 
சமீபத்தில் ஒரு ஆசிரியரை பணம் கேட்டு மிரட்டியதாக ஒரு வழக்கும், பல பெண் வழக்கு கடத்தல் வழக்குகளும், இவர் மீது வாழப்பாடி காவல் நிலையத்தில் உள்ளது.
 
 
இப்படிப்பட்ட ஒருவர் போட்டியிடும் ஒரு தேர்தலில் இவரை எதிர்த்து யார் போட்டியிடுவார்கள்....?
 
வீரபாண்டியனால் பயந்து போயுள்ள அத்தனூர் பட்டி பஞ்சாயத்து தேர்தலில் இவரை எதிர்த்து போட்டியிட இந்த கிராமத்தில் யாரும் தயாராக இல்லை. இந்த நிலையில், வரதன் என்கிற ஒரு "மாதிரியான" பாட்டி ஒருவர் தானும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன் என்று போட்டியிடுகிறார்.
 
 
"டேய் உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை" என்று பலரும் வரதனை எச்சரித்துள்ளனர். "என்னை வீரபாண்டியன் கொன்றாலும் பரவாயில்லை"... என்று அசட்டு தைரியத்தில் போட்டியிடுகிறார் வரதன்.
 
 
எப்படியாவது வீரபாண்டியனை தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்த பொதுமக்கள் வரதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி வீரபாண்டியனுக்கு எதிராக வரதனுக்கு ஒட்டு போட நினைத்துள்ளார்கள்.
 
 
"இதை" புரிந்து கொண்ட வீரபாண்டியன், எனக்கு எதிராக யாராவது ஒட்டுப் போட்டால், எந்த வார்டில் எனக்கு ஒட்டு போடவில்லையோ அந்த வார்டில் உள்ள வீடுகளை எல்லாம் தீ வைத்து கொளுத்திவிடுவேன் என்று தனது குடும்பத்தினருடன் சென்று வீடு வீடாக மிரட்டி வந்துள்ளார்.
 
 
இது பற்றி பொதுமக்கள் யாரும் போலீசில் புகார் கொடுக்க பயப்பட்ட நிலையில் நேற்று அந்த பகுதிக்கு ரோந்து சென்ற வாழப்பாடி போலீசார் பொது மக்களை மிரட்டி வாக்கு சேகரித்த வீரபாண்டியனின் ஆதரவாளர்கள் அருள், முருகன் மற்றும் மனைவி ஆனந்தி அவரது உறவுக்கார பெண்கள் சரோஜா, தனலட்சுமி, முத்துமாரி, தேவி உள்ளிட்ட எட்டு நபர்களை கைது செய்துள்ளனர்.
 
 
தன் மீதும் 307, பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை தெரிந்து கொண்ட வீரபாண்டியன் இப்போது தலை மறைவாகி விட்டார்.
 
 
தெலுங்கு படத்தின் கதையை மிஞ்சும் இந்த சம்பவம் பற்றி பேசவே அத்தனூர் பட்டியில் இருக்கும் பொது மக்கள் பயப்படுகிறார்கள்.




[Continue reading...]

அதிமுக ஆட்சியில் சில பகுதிகளில் 24 மணி நேர மின்வெட்டு: ஈவிகேஎஸ்

- 0 comments
 
 
தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் மக்கள் 5 மாதங்களில் வேதனைதான் அடைந்துள்ளனர். கடந்த ஆட்சியில் 2 மணி நேரமாக இருந்த மின்வெட்டு, தற்போது 5 மணி நேரங்களாகவும், சில கிராமப் புறங்களில் 24 மணி நேரமாகவும் அதிகரித்துள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
 
நிருபர்களிடம் அவர் பேசுகையில், கடந்த 1967ம் ஆண்டில் இருந்து திராவிடக் கட்சிகள் தமிழகத்தை மாறி மாறி சுரண்டி வருகின்றன.
 
தமிழக உள்ளாட்சி தேர்தலில், மக்கள் காங்கிரசுக்கு நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிகப்படியான ஆதரவை காட்ட உள்ளார்கள். மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் என்று நூற்றுக்கணக்கில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்று பதவியில் அமரப் போகிறார்கள்.
 
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் உண்மையான போட்டி, காங்கிரஸூக்கும், அதிமுகவுக்கும் இடையே மட்டுமே உள்ளது. திமுக இந்தத் தேர்தல் போட்டியில் இருப்பதாக எங்கும் தெரியவில்லை.
 
காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதால் மக்களிடம் இருந்து நாங்களே எதிர்பார்க்காத அளவிற்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதால் கடந்த 40 வருடங்களாக இல்லாத மக்களின் ஆதரவு தற்போது கிடைத்துள்ளது.
 
காங்கிரஸுக்கு கிடைத்துள்ள மக்கள் ஆதரவைக் கண்டு பயந்து தான், தமிழகத்தில் உள்ள மாநகராட்சிப் பகுதிகளில், முதல்வர் ஜெயலலிதா 3 நாள்கள் திடீர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
 
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பண பலத்தை நம்பி திமுக எப்படி தோல்வி அடைந்ததோ, அதேபோல் உள்ளாட்சித் தேர்தலில் பணபலத்துடன் களம் இறங்கியுள்ள அதிமுகவும் தோல்வி அடையும்.
 
இந்த ஆட்சி மாற்றத்தால் தமிழக மக்கள் 5 மாதங்களில் வேதனைதான் அடைந்துள்ளனர். கடந்த ஆட்சியில் 2 மணி நேரங்களாக இருந்த மின்வெட்டு, தற்போது 4 மணி நேரங்களாகவும், சில கிராமப் புறங்களில் ஒரு நாள் முழுவதிலும் அதிகரித்துள்ளது.
 
தமிழகத்தில் நிலப்பறிப்பு குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 95 சதவீதம் உண்மையானவை. திமுக ஆட்சியாளர்கள் மக்கள் நலனை கவனிக்காமல், சொத்து சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதால், தற்போது அதற்கான தண்டனையை அனுபவிக்கின்றனர். ஜெயிலில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் தேசவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் என்றார்.
 
முன்னதாக நாகர்கோவிலில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு காங்கிரஸ் கட்சியினர் மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கின்றனர் என நல்லகண்ணு கூறுகிறார். அவர் ஒரு பக்கத்தை மட்டும் தான் கூறுகிறார். மறு பக்கத்தில் திமுகவினர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வருகின்றனர். மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக உள்ளது. ஆனால் தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இல்லை.
 
அதிமுக அரசின் செயல்பாடுகள் ஆரம்பத்தில் நன்றாக இருந்தது. போகபோக பழைய நிலை உருவாகிறதோ என அச்சம் ஏற்படுகிறது. மக்கள் பிரச்சனையில் முன்னேற்றம் இல்லை. கல்வியை முடக்கிவிட்டார்கள்.
 
முதல்வர் ஜெயலலிதா தீவிரவாதத்திற்குத் துணை போகிறார். ராஜிவ்காந்தி கொலையாளிகளுக்கு ஆதரவாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது தவறு. தீவிரவாதிகளின் பட்டியலில் அவரும் இருக்கிறார் என்பதை மறந்து விடக்கூடாது. அவருக்கு மத்திய அரசு பாதுகாப்பு கொடுத்து வருகிறது. அதனை மறந்து விட்டு யாரோ புகழ் பாடுகின்றனர் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுத்தது தவறானது.
 
அத்வானி ரதயாத்திரையை பல தடவை தொடங்கியுள்ளார். நடக்க முடியாத காரணத்தால் ரத யாத்திரை நடத்துகிறார் என்றார் இளங்கோவன்.



[Continue reading...]

கொக்கரிக்கும் விஜயகாந்த் - பிரேமலதாவுக்கு வாக்காளர்கள் சூடான கேள்வி

- 0 comments
 
 
 
தான் நடித்த ரமணா படத்தைப்போல நிஜத்திலும் லஞ்சத்தை ஒழிக்க பாடுபடுவேன் என்று தம்பட்டம் அடித்து வருகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
 
இவரின் மனைவி பிரேமலதாவோ, ஒரு படி மேலே போய், இல்லை...கொஞ்சம் ஓவராக போய், இல்லை...இல்லை.....ரொம்பவே ஓவராக போய்.... கேப்டன் விஜயகாந்த் லஞ்சம் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்த பிறகுதான் அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தார்; ஆர்ப்பாட்டம் செய்தார் என்று கொக்கரித்து வருகிறார்.
 
 
ஆனால் தேமுதிகவினரோ வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்து வருகிறார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு தேமுதிகவினர் பணம் கொடுப்பதாக புகார் வந்தது.
 
தற்போது உள்ளாட்சி தேர்தலிலும் இதே நிலை நீடிக்கிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் தேமுதிகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கூறிவருகின்றனர்.
 
 
திருவள்ளூர் மாவட்டம் தண்ணீர்குளம், திருவூர், செவ்வாப்பேட்டை,வேப்பம்பட்டு ஆகிய பகுதிகளில் 13.10.2011 அன்று, ஒரு ஓட்டுக்கு ரூபாய் 200 கொடுத்திருப்பதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
 
 
லஞ்சத்தை ஒழிப்பேன்..லஞ்சத்தை ஒழிப்பேன் என்கிறார் விஜயகாந்த். கேப்டனை பார்த்துதான் காந்தியவாதி அன்னாஹசாரேவே போராட்டம் செய்கிறார் என்கிறார் பிரேமலதா. ஆனால் இவர்கள் கட்சியினரோ இப்படி ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கிறார்களே. இவர்கள் செய்வதை பார்க்கும்போது விஜயகாந்த் மீதும் சந்தேகம் எழுகிறது என்று கூறுகிறார்கள் அப்பகுதியினர்.
 
 
லஞ்சத்தை ஒழிப்பேன்..ஒழிப்பேன் என்று கூவுவதற்கு முன்பு தொண்டர்களை கூப்பிட்டு வைத்து லஞ்சம் ஒழிப்பேன் என்பதற்கு என்ன அர்த்தம் என்று பயிலரங்கம் நடத்தலாம் விஜயகாந்த்.



[Continue reading...]

தீபாவளிப் படங்கள் - ஒரு பார்வை

- 0 comments
 
 
இந்த தீபாவளிக்கு எத்தனை படங்கள் வெளியாகும்? இந்தக் கேள்வியை கடந்த ஒரு மாத காலமாக கேட்டு வருகிறார்கள் சினிமாக்கார்களும் பத்திரிகையாளர்களும். ஆனால் சரியான பதில் நஹி!
 
காரணம் தியேட்டர்கள் பற்றாக்குறை (விரிவான தகவல்கள் இன்னொரு கட்டுரையில்!)
 
இந்த தீபாவளிக்கு தமிழில் இரண்டே இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின்றன. அவை விஜய் நடித்துள்ள வேலாயுதம், சூர்யா நடித்துள்ள ஏழாம் அறிவு. இவற்றுடன் மோதப் போவதாக அறிவித்த தனுஷின் மயக்கம் என்ன மற்றும் சிம்புவின் ஒஸ்தி படங்கள் பல்வேறு காரணங்களைக் கூறி விலகிக் கொண்டன (எனக்கு உடம்பு சரியில்லை - மயக்கம் என்ன இயக்குநர் செல்வராகவன்!).
 
வேலாயுதம்
 
விஜய் நடித்துள்ள இந்தப் படம், தெலுங்கில் வெளியான நாகார்ஜுனா படமொன்றின் தழுவல். ரீமேக் புகழ் ஜெயம் ராஜா முதல் முறையாக தன் வீட்டு ஹீரோ ரவியை விடுத்து, வெளி ஹீரோ ஒருவரை வைத்து எடுத்துள்ள படம். விஜய்க்கு இந்தப் படம் ஓடியே தீர வேண்டிய கட்டாயம். எனவே எதிர்ப்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது.
 
ஜெனிலியா - ஹன்ஸிகா என இரு நாயகிகள், விஜய் ஆன்டனி இசை. பாடல்கள் பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் ட்ரெயிலர் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


ஏழாம் அறிவு
சூர்யா நடித்துள்ள ஏழாம் அறிவு, ஏ ஆர் முருகதாஸின் படைப்பு. சூர்யாவை விட முருகதாஸ் மீதுள்ள நம்பிக்கை இந்தப் படக்கும் அபார எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படத்தின் இரண்டு பாடல்களும், ட்ரெயிலரும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது நிஜம். கமல் மகள் ஸ்ருதிக்கு தமிழில் இது முதல் படம்.
 
தமிழகத்தின் பெருமளவு நல்ல திரையரங்குகள் இந்தப் படத்துக்குக் கிடைத்திருப்பது இன்னொரு ப்ளஸ். அரசியலில் ஆயிரம் மாற்றங்கள் நடந்தாலும், எல்லாருக்கும் நல்ல பிள்ளையாக திகழ்வதால் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைத்துள்ளது. படம் குறித்து முதல்நாள் வரும் 'மவுத் டாக்'தான் ரொம்ப முக்கியம் என்று நம்புகிறார் முருகதாஸ்.


ரா ஒன்
 
வேலாயுதம், ஏழாம் அறிவை விட, பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் படம் ரா ஒன். காரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை... சூப்பர் ஸ்டார் ரஜினி இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். தன் கேரக்டருக்கு தானே டப்பிங் பேசியும் உள்ளார். எனவே தங்கள் தலைவரின் தரிசனம் காணவும் குரலைக் கேட்கவும் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் அவரது லட்சோப லட்சம் ரசிகர்கள். இவர்கள் அத்தனை பேரும் ஒரே ஒரு முறை இந்தப் படத்தைப் பார்த்தால் போதும், ரா ஒன் பாக்ஸ் ஆபீஸில் ஏ ஒன்னாகிவிடும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்!
 
சென்னையில் மட்டும் 30 அரங்குகளில் ரா ஒன் தமிழ் மற்றும் இந்தி வெளியாகிறது. எல்லாமே உயர்தரமான அரங்குகள். தவிர தமிழகத்தின் முக்கிய நகரங்களிலெல்லாம் இந்தப் படம் வெளியாகிறது. ஷாரூக்கான் போட்ட முதல் தமிழகத்தில் மட்டுமே வசூலாகிவிடும் வாய்ப்புள்ளது. இன்னும் ஆந்திராவில் கேட்கவே வேண்டாம். ஹைதராபாதில் மட்டும் 80 அரங்குகளில் இந்தப் படத்தை வெளியிடுகின்றனர்!
இந்த தீபாவளி ரேஸில் வழக்கம் போல ஓரிரு சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகும் வாயாப்புள்ளது. இவை வெற்றியை குறிவைத்து வெளியாவதில்லை. தீபாவளி வாரத்தின் கடைசி 5 நாள் வசூலை குறிவைத்து இறக்கப்படுபவை!



[Continue reading...]

செக்ஸ் கல்விக்கு பெற்றோர்தான் சரியான குரு!

- 0 comments
 
 
ஆஸ்திரேலியாவில் 2008-ம் ஆண்டில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான டீன்ஏஜ் பெண்கள் குழந்தை பெற்றுள்ளனர். நாடு முழுவதும் 16-25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் 5% பேருக்கு பால்வினை நோய் இருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதுதொடர்பாக 'ஆரோக்கியமான செக்ஸ் உறவு ஆய்வு குழு' என்ற அமைப்பு தீவிர ஆய்வு மேற்கொண்டது. ஆய்வு குழு தலைவர் பேராசிரியர் ஆலன் மெக்கீ கூறியதாவது:
 
புத்தகம், டிவி, இன்டர்நெட் மூலமாக சிறுவர்கள், இளைஞர்கள் செக்ஸ் பற்றி அரைகுறையாக தெரிந்துகொள்கின்றனர். இது ஆபத்தானது. போதிய பாதுகாப்பு இல்லாமல் ஏதோ ஒரு ஈர்ப்பின் காரணமாக செக்ஸில் ஈடுபட்டு நோய்களை வரவழைத்துக் கொள்கின்றனர்.பிள்ளைகளிடம் பெற்றோர் மனம் விட்டு, வெளிப்படையாக பேசக்கூடியவர்கள். குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வியை பெற்றோர்தான் சிறப்பாக கற்றுத்தர முடியும்.
 
உரிய வயதில் செக்ஸ் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதால், அவர்கள் வழி தவறவோ, நோய்களால் பாதிக்கப்படவோ வாய்ப்பு குறையும். இவ்வாறு ஆலன் கூறினார். செக்ஸ் தொடர்பாக இங்கிலாந்தில் ஒரு சர்வே எடுக்கப்பட்டது. ''பெற்றோர் மூலமாக 6% சதவீத பிள்ளைகள் மட்டுமே செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு பெறுகின்றனர். பள்ளியில் செக்ஸ் கல்வி மூலமாக 13% பேரும், இதர வழிகளில் 81% பேரும் தெரிந்துகொள்கின்றனர்'' என்கிறது அந்த சர்வே.



[Continue reading...]

திருநங்கைகளுக்கான உலக அழகிப் போட்டியில் சென்னை மலாய்க்கா!

- 0 comments

சென்னை: தாய்லாந்தில் நடைபெறவுள்ள திருநங்கைகளுக்கான உலக அழகிப் போட்டியில் (International Queen Competition) சென்னையைச் சேர்ந்த மலாய்க்கா பங்கேற்கிறார்.

கம்பீரமான அழகுடன் காணப்படும் மலாய்க்கா, நிச்சயம் உலக அழகி ஆவேன் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார். இதுகுறித்து மலாய்க்கா சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

எனது பெயர் மலாய்க்கா. நான் சென்னைதான். கேட்டரிங் டெக்னாலஜி படித்துள்ளேன். என்னை எனது வீட்டில் ஒதுக்கி வைக்காமல் ஆதரித்து படிக்க வைத்து ஆளாக்கினர். எனது குடும்பத்தினருடன்தான் நான் தங்கியுள்ளேன். இது எனக்குப் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.

நான் கடந்த 2007ல் நடந்த மிஸ் சகோதரன் அழகிப் போட்டியில் முதலிடம் பிடித்தேன். பிறகு மாடலிங்கில் நுழைந்தேன். ஆனால் சரியான வாய்ப்புகள் வரவில்லை. நான் தினசரி உடற்பயிற்சி செய்து எனது உடல் வனப்பையும், அழகையும் பராமரித்து வருகிறேன். டயட்டில் இருக்கிறேன். இதனால்தான் நான் அழகாக இருக்கிறேன்.

தாய்லாந்துக்குப் போகும் வாய்ப்பு எனக்கு வந்தபோது, அங்கு நடைபெறவுள்ள உலக அழகிப் போட்டியில் பங்கேற்குமாறு என்னிடம் பலரும் கூறினர். இதையடுத்தே நான் அதில் பங்கேற்க தனிப் பயிற்சி எடுத்தேன். தற்போது நவம்பர் 4ம் தேதி நடைபெறும் இப்போட்டியில் நான் இந்தியா சார்பில் கலந்து கொள்கிறேன்.

இந்தியா சார்பி்ல பங்கேற்க என்னைத் தேர்வு செய்துள்ள செய்தியைக் கேட்டதும் அப்படியே பீனிக்ஸ் பறவை சாம்பலிலிருந்து எழுந்ததைப் போல உணர்ந்தேன். எனது ஒட்டுமொத்த சமுதாயத்தின் சார்பில் நான் பங்கேற்கப் போவதை நினைத்தால் பெருமையாக உள்ளது. இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நிமிடம். எனது திறமைக்கும் மதிப்பு கிடைத்துள்ளதை நான் உணர்கிறேன். இப்போட்டியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றார் அவர்.

[Continue reading...]

அந்த செய்தி நிஜம்தானா? தயாரிப்பாளரை விசாரித்த அஜீத்

- 0 comments
 

போட்டி நிறைந்த சினிமாவுலகம் இது. இங்கு முன்னேறும் நடிகர்களை பார்த்து யாரும் வயிறு எரியா விட்டாலும், யார் முன்னேறினாலும் அந்த வேகத்தை சற்று கிலியோடு கவனித்துக் கொண்டிருப்பார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன் வெளிவந்த செய்தி துணுக்கு ஒன்று முன்னணி நடிகரான அஜீத்தையே துணுக்குற வைத்ததாக கிசுகிசுக்கிறார்கள் அவருக்கு வேண்டப்பட்டவர்கள். இதென்ன புதுக்கதை?

அந்த ஆங்கில பத்திரிகையில் வந்த துணுக்கு செய்தியில் இப்படி கூறப்பட்டிருந்தது. சூர்யாவின் சம்பளம் பதினைந்து கோடியும் ப்ளஸ் தெலுங்கு ரைட்சும். கார்த்தியின் சம்பளம் பத்து கோடியும் ப்ளஸ் தெலுங்கு ரைட்சும். ஆனால் அஜீத்தின் சம்பளம் பதினைந்து கோடி மட்டும்தான் என்று. இதில்தான் துணுக்குற்றாராம் தல.

தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கிறவர் அவர். மாலை நேர பார்ட்டிகளுக்கு போகிற பழக்கம் இருந்தால் இதுபற்றியெல்லாம் அங்கு கேள்விப்பட்டிருக்கலாம். அந்த பழக்கம்தான் அவருக்கு இல்லையே? இந்த செய்தியை படித்ததும், தனக்கு நெருக்கமான தயாரிப்பாளர் ஒருவரிடம், இப்படி செய்தி வந்திருக்கே, நிஜமா என்றாராம்.

அதற்கு தயாரிப்பாளர் என்ன பதில் சொன்னாரோ, அடுத்த வினாடியே தன் வேலைகளில் மூழ்கிவிட்டாராம் அஜீத்.

[Continue reading...]

Vannathirai 17-10-2011 (Download Tamil Magazine)

- 0 comments

Vannathirai 17-10-2011 (Download Tamil Magazine), Vannathirai October 15th, 2011

[Continue reading...]

Junior Vikatan 16-10-2011 (Download Tamil Magazine)

- 0 comments

Junior Vikatan 16-10-2011 (Download Tamil Magazine)….Junior Vikatan October 15th, 2011

[Continue reading...]

உனக்கு 47, எனக்கு 38 விஜய்-சூர்யா ரேக்ளா ரேஸ்….

- 0 comments
 

வருமா வராதா என்ற விஜய் ரசிகர்களின் ஏக்கத்தை இன்று காலையிலேயே துடைத்து துர எறிந்திருக்கிறது அந்த விளம்பரம். சென்னை மற்றும் புறநகரை சுற்றியுள்ள தியேட்டர்களில் எந்தெந்த தியேட்டர்களில் வேலாயுதம் ரிலீஸ் ஆகிறது என்ற தகவலுடன் வந்திருக்கும் இந்த விளம்பரம், அதி முக்கியமானது. ஏனென்றால் குழப்பம் தீர்த்த கோமேதக தகவலல்லவா அது?

இந்த தீபாவளியை இன்பமாக்கும் இந்த விளம்பரத்தை பார்த்தவர்கள் இன்னொரு விஷயத்தை கவனித்தார்களா தெரியாது. ஆனால் சூர்யா ரசிகர்கள் கவனித்ததால் இரு தரப்பினருக்கும் ஒரு சின்ன ஈகோ ஓடிக் கொண்டிருப்பதையும் அறிய முடிகிறது. இதே சென்னை மற்றும் புறநகர் தியேட்டர்கள் 7 ஆம் அறிவு படத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த தியேட்டர்களின் விபரங்களை இன்று இப்படத்தின் விளம்பரங்களிலும் அறிவித்திருக்கிறார்கள்.

அதன்படி பார்த்தால் 7 ஆம் அறிவு 47 தியேட்டர்களிலும், வேலாயுதம் 38 தியேட்டர்களிலும் வெளியாவதாக அறிவிப்பு வந்திருக்கிறது. இது சென்னை நிலவரம்தான். வெளியூர்களில் எப்படி என்பது இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்துவிடும்.

யார் யாரை முந்திக் கொள்வார்கள் என்பதை ஸ்கிரீனிங் தீர்மானிக்கிறதோ, இல்லையோ? கலெக்ஷன் தீர்மானிக்கும்!

[Continue reading...]

சோனா ‘எபக்ட்’: பார்ட்டினாலே தலைதெறிக்க ஓடும் வெங்கட் பிரபு

- 0 comments

நடிகை சோனா-எஸ்.பி.பி. சரண் விவகாரம் பூதாகரமாக வெடித்ததையடு்தது இயக்குனர் வெங்கட் பிரபு இப்போதெல்லாம் நைட் பார்ட்டி என்றாலே தலைதெரிக்க ஓடுகிறாராம்.

மங்காத்தா படம் ஹிட்டானதற்காக அதில் நடித்த நடிகர் வைபவ் மது விருந்து வைத்தார். அதில் கலந்து கொண்ட கவர்ச்சி நடிகை சோனா பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ். பி. பி. சரண் தன்னை கற்பழிக்க முயன்றதாக போலீசில் புகார் கொடுத்தார். வீடியோ ஆதாரங்களையும் கொடுத்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சரணை சும்மாவிட மாட்டேன் என்று வீர வசனம் பேசிய சோனா கடைசியில் சமாதானம் ஆகிவிட்டார். மன உளைச்சல் காரணமாக 1 ஆண்டுக்கு சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்தார்.

சம்பந்தப்பட்ட பார்ட்டியில் வெங்கட் பிரபுவும் இருந்தார். அவரது பெயரும் கூட லேசுபாசாக அடிபடத் தொடங்கியது. தற்போது இரவுப் பார்ட்டி, மது பார்ட்டி என்றாலே பிரபுவுக்கு அலர்ஜியாகி விட்டதாம். பார்ட்டிக்குப் போலாமா என்று கேட்டாலே ஓடி விடுகிறாராம்.

தன் மகள் ஷிவானியின் பிறந்தநாளை கடந்த ஆண்டு சென்னையில் கோலாகலமாகக் கொண்டிய அவர் இந்த ஆண்டு மலேசியாவுக்கு ஷிப்ட் பண்ணி விட்டாராம்.

வெங்கட் பிரபு மலேசியாவில் கொடுத்த பார்ட்டியில் சர்ச்சைக்குரிய சென்னை பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் ஆஜராகியிருந்திருக்கின்றனர். ஆனால் சோனாவை மட்டும் அழைக்கவேயில்லையாம்.

இவர்தான் இப்படி, இவரது தம்பி பிரேம்ஜி அமரனுக்கு இந்தப் பயமெல்லாம் இல்லையாம். தொடர்ந்து வழக்கம் போல கை விரல்களை நீட்டி மடக்கி வித்தை செய்தபடி பார்ட்டிகளுக்குப் போய் வருகிறாராம்.

[Continue reading...]

‘குளிப்பது’ எப்படி?-’டெமோ’ காட்டும் பூனம் பாண்டே! (காணொளி இணைப்பு)

- 0 comments

சிலருக்கு வாழ்க்கை இயல்பிலேயே எப்போதும் பரபரப்பாக இருக்கும். சிலரோ, கடுமையாக முயற்சித்து எப்போதும் பரபரப்பாக வைத்துக் கொள்ள முயல்வார்கள். இதில் பூனம் பாண்டே 2வது ரகம் போல.

இவரை சில மாதங்களுக்கு முன்பு வரை நிறையப் பேருக்குத் தெரியாது. ஆனால் இவர் விட்ட ஒரே ஒரு ஸ்டேட்மென்ட்டால் உலகம் பூராவும் பரவி பாப்புலராகி விட்டார். இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக காட்சி தருவேன் என்று இவர் விட்ட ஸ்டேட்மென்ட்டால் வலையுலகமே வாரிச் சுருட்டிக் கொண்டு பூனம் பாண்டே குறித்த செய்திகளை அள்ளிக் கொடுக்க ஆரம்பித்தது.

ஆனால் தான் சொன்னபடி பூனம் செய்யவில்லை என்பது வேறு கதை. அதற்கு பல காரணங்களை அடுக்கிக் கொண்டு அம்பேல் என எஸ்கேப் ஆகி விட்டார் பூனம். இருப்பினும் அத்துடன் நில்லாத அவர் தற்போது பார்ட் பார்ட்டாக தனது உடல் பாகங்களை உலகுக்குக் காட்ட ஆரம்பித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தனது முக்கால் கவர்ச்சிகரமான போஸ்களை தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டார். பின்னர் அவரது எடுப்பான முன்னழகுப் படங்களை உலவ விட்டார். தற்போது மேலும் ஒரு படி முன்னேறி, குளிக்கும் காட்சி ஒன்றை வீடியோவில் வெளியிட்டு மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளார்.

தனது ட்விட்டர் தளத்தில்தான் இந்த வீடியோவையும் இணைத்துள்ளார். 18 வயதுக்குட்பட்டவர்கள் தயவு செய்து பார்க்க வேண்டாம் என்ற குறிப்புடன் இணைக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில் குளியல் அறையில்.,பாத் டப்பில் நின்றபடியும், வளைந்து நெளிந்தபடியும், ஹேன்ட் ஷவர் மூலம் தனது உடலில் தண்ணீரை பீய்ச்சியடித்தபடியும் காட்சி தருகிறார் பூனம்.

வெள்ளை நிறத்தில் வெறும் உள்ளாடைகளுடன் மட்டும் காட்சி தரும் பூனம் பாண்டேவின் இந்த வீடியோ படு கவர்ச்சிகரமாக இருக்கிறது. விரைவில் பூனம் பாண்டேவின் புதிய இணையதளம் செயல்பாட்டுக்கு வருகிறது. அதில்தான் இந்த வீடியோ மற்றும் இதுபோன்ற வீடியோக்கள், புகைப்படங்கள் இடம் பெறவுள்ளன. இந்த குளியலறை வீடியோவின் இறுதியில், விரைவில் இதுபோன்ற பல வீடியோக்களை எதிர்பார்த்துக் காத்திருங்கள் என்ற அறிவிப்புடன், காட்சி முடிகிறது.

[Continue reading...]

ஐ.சி.சி.,யின் புதிய விதிகள் தந்திரமானது * சொல்கிறார் கேப்டன் தோனி

- 0 comments
 

ஐதராபாத்:"சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) புதிய விதிமுறைகள் தந்திரமானவை. இரண்டு புதிய பந்துகளை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதால், இனி "ரிவர்ஸ் சுவிங்' செய்வது சிக்கலாகி விடும்," என, இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில், ஐ.சி.சி., சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன.
இதுகுறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறியது:
ஐ.சி.சி., சார்பில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிகள் தந்திரமானவை. இந்த முறைப்படி இதுவரை விளையாடியது இல்லை. இதன் படி 16, 40 வது ஓவரில் இரண்டாவது, மூன்றாவது (பவுலிங், பேட்டிங்) "பவர்பிளேயை' எடுக்க வேண்டும் என்பதால், இனி வித்தியாசமான முறையில் திட்டமிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வித்தியாசமான முடிவு:
இதற்கு முன், இலக்கை துரத்தும் அணிகள், கடைசி ஐந்து ஓவர்களில் பேட்டிங் "பவர்பிளேயை' பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தன. இப்போது புதிய விதிகள் காரணமாக, வேறுசில தந்திரங்களை பயன்படுத்த வேண்டியதுள்ளது. இதனால் போட்டியில் வித்தியாசமான முடிவுகள் ஏற்படலாம்.
"சுவிங்' சிக்கல்:
பழைய பந்துகளை பயன்படுத்தும் போது, 35 ஓவர்களுக்குப் பின் "ரிவர்ஸ் சுவிங்' செய்ய ஏதுவாக இருக்கும். தற்போது, இரண்டு புதிய பந்துகளை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதால், இதற்கும் வழியில்லாமல் போயுள்ளது. வேறுவழியின்றி, மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப, பந்தின் வடிவத்தில் மாற்றம் ஏற்படுவதைப் பொறுத்து இனி "ரிவர்ஸ் சுவிங்கை' எதிர்பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
காம்பிர் சிறந்த துவக்க வீரராக இருந்துள்ளார். இவர் மூன்றாவதாக களமிறங்குவது என்பது, சச்சின், சேவக் அணிக்கு துவக்கம் தந்தால் மட்டுமே. அதேநேரம், இங்கிலாந்தில் பார்த்திவ் படேல், ரகானே சிறப்பாக செயல்பட்டதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதுள்ளது. எனவே சூழ்நிலைக்கு தகுந்து முடிவெடுப்போம்.

அணியில் புதியதாக இடம் பெற்றுள்ள ஸ்ரீநாத் அரவிந்த், சாம்பியன்ஸ் லீக் தொடரில் மோசமாக செயல்பட்டார் என்பதற்காக, அவரை ஒதுக்க முடியாது. ஒருசில தொடர்களை வைத்து, வீரரின் திறமை குறித்து முடிவுக்கு வந்துவிடக் கூடாது.
வெற்றி வாய்ப்பு:
தற்போதுள்ள இந்திய அணியில் இளம் வீரர்கள் அதிகம் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இருந்தாலும், இங்குள்ள ஆடுகளங்கள் முற்றிலும் வித்தியாசமானவை. மொத்தத்தில் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங்கில் எப்படி செயல்படுகிறோம் என்பதைப் பொறுத்து தான் அணியின் வெற்றி அமைந்துள்ளது.
இவ்வாறு தோனி கூறினார்.

மழை வருமா
இன்று முதலாவது ஒருநாள் போட்டி நடக்கும் ஐதராபாத்தில், வெப்பநிலை அதிகபட்சம் 31, குறைந்த பட்சம் 21 டிகிரி செல்சியசாக இருக்கும். இரவில் வானம் மேகமூட்டமாக காணப்படும். இடியுடன் கூடிய மழை வருவதற்கு 20 சதவீத வாய்ப்புள்ளது.

ஆடுகளம் எப்படி
இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஐதராபாத், ராஜிவ் மைதானத்தில் விளையாடுவது இது தான் முதன் முறை. இதற்கு முன் இந்திய அணி இங்கு விளையாடிய மூன்று போட்டிகளிலும் (தென் ஆப்ரிக்காவுடன் 1, ஆஸ்திரேலியாவுடன் 2) தோல்வியடைந்துள்ளது.
ஆடுகளம் பெரும்பாலும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு எதிராக 350/4 ரன்கள் (2009) குவித்துள்ளது. இதை விரட்டிய இந்திய அணி 347 (அதிகபட்சம்) ரன்கள் எடுத்தது.

[Continue reading...]

ஹர்பஜன் விரைவில் மீண்டு வருவார் * சேவக் ஆதரவு

- 0 comments

புதுடில்லி: "இந்திய அணியில் இருந்து நீக்கப்பட் ஹர்பஜன், விரைவில் அணியில் தனது இடத்தை பிடிப்பார். இது அவருக்கு ஒரு விஷயமே அல்ல," என, சேவக் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து "பார்ம்' சரியில்லை என்ற காரணத்துக்காக ஹர்பஜன் நீக்கப்பட்டார்.
இதுகுறித்து இந்தியாவின் சேவக் கூறியது:
ஹர்பஜன் சிங் ஒரு சாம்பியன் பவுலர். இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட இவர் சாம்பியன்ஸ் லீக் தொடருக்குப் பின், சாலஞ்சர் தொடரில் திறமை வெளிப்படுத்தினார். அவர் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. இப்படித்தான் கடந்த 2007ல் "பார்ம்' சரியில்லை என்று அணியில் இருந்து நான் நீக்கப்பட்டேன்.
பின், உள்ளூர் கிரிக்கெட்டில் மீண்டும் திறமை வெளிப்படுத்தி அணிக்கு திரும்பினேன். இழந்த "பார்மை' திரும்ப பெறுவதற்கு உள்ளூர் போட்டிகள் தான் கைகொடுக்கும். இது தான் அணிக்கு திரும்ப சரியான வழி. ஹர்பஜனை பொறுத்தவரையில் இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை.
கடின முயற்சி:
எனது தோள்பட்டை, காது கேளாமை சிக்கல்கள் கொஞ்சம், கொஞ்சமாக சரியாகி வருகிறது. இதற்காக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில், மறு வாழ்வுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். எப்போது குணமடைவேன் என்பதை, சரியாக கூறமுடியாது. இதை நான் விரும்பவும் இல்லை. இருப்பினும், விரைவில் அணிக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக, கடினமாக முயற்சித்து வருகிறேன். எப்படியும், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தயாராகிவிடலாம் என்ற நம்பிக்கை உள்ளது.
நிறைவேறிய கனவு:
தற்போது கிடைத்துள்ள ஓய்வு நேரத்தில், எனது தந்தையின் கனவை நிறைவேற்றியுள்ளேன். ஏனெனில் சிறுவர்களுக்காக, அகாடமி துவங்க வேண்டும் என்பது தான் அவரது பெரிய கனவு. இதன் மூலம் சிறுவர்களுக்கு அதிக பலன் கிடைக்கும். இதை நிறைவேற்றுவது குறித்து தான் கடந்த ஐந்து ஆண்டுகளாக முயற்சித்து வந்தேன். ஒருவழியாக நிறைவேறியது மகிழ்ச்சி தருகிறது.
முதல்வருக்கு நன்றி:
இந்த அகாடமிக்கு இடம் தந்த, அரியானா முதல்வருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்து இந்த அகாடமியில் தேவையான தரமான வசதிகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளேன். பின், டில்லியில் போட்டிகள் நடக்கும் போதெல்லாம், சக இந்திய வீரர்களை இந்த அகாடமிக்கு அழைத்து வந்து, சிறுவர்களிடம் பேச ஏற்பாடு செய்வேன். இது அவர்களுக்கு பெரிய அளவில் தூண்டுகோலாக இருக்கும். தவிர, ஆர்வத்தையும் அதிகரிக்கும்.
வெளிநாட்டு தொடர்:
எதிர்காலத்தில், எனது அகாடமி சார்பில் அணியை தேர்வு செய்து, வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்க செய்து, அவர்களது திறமையை வெளிக்கொணர உதவுவேன். அம்பயர் மறுபரிசீலனை முறையை (டி.ஆர்.எஸ்.,) தொடரில், நடைமுறைப் படுத்துவதை அந்தந்த நாடுகளின் விருப்பத்துக்கு விட்டுள்ளது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) முடிவு. இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை.
இவ்வாறு சேவக் கூறினார்.

[Continue reading...]

இந்திய - ரஷ்ய விஞ்ஞானிகளை வீட்டு சிறை வைத்த கூடங்குளம் மக்கள்

- 0 comments
 
 
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுஉலைகளை மூட வலியுறுத்தி, இடிந்தகரையில் செப்.11 முதல் 22 வரை 127 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். பிரதமருடன் தமிழக அமைச்சர்கள் மற்றும் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் குழு நடத்திய சந்திப்பில் சாதகமான முடிவு எட்டப்படவில்லை. இதைத்தொடர்ந்து 2ம்கட்டமாக கடந்த 9ம்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இன்று 6வது நாளாக போராட்டம் தொடர்கிறது. நேற்று இருகட்டங்களாக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
 
அதன்படி இடிந்தகரை லூர்துமாதா ஆலை 106 பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மற்றொரு கட்டமாக கன்னியாகுமரி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை எஸ்.எஸ்.புரம் விலக்கில், சுமார் 30 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், சாலையின் இருபுறமும் பந்தல் அமைத்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றிரவு அணுமின் நிலைய நுழைவு வாயில் முன்பு 25க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றபோது 'தள்ளுமுள்ளு' ஏற்பட்டது.
 
இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும், அவர்களை சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு அனுமதிக்க மறுத்ததாகவும் போராட்டக்குழுவினர் புகார் கூறி உள்ளனர். இதனால் இடிந்தகரை மற்றும் எஸ்எஸ்.புரம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால், நெல்லை டிஜிபி வரதராஜூ, எஸ்பி விஜயேந்திரபிதரி, வள்ளியூர் ஏஎஸ்பி விஜயகுமார் ஆகியோர் அங்கு விரைந்தனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன. ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
இன்று அதிகாலை 5 மணிக்கு கூடன்குளம் அணு மின்நிலையத்தில் பணியாற்றும் ரஷ்ய மற்றும் இந்திய அணுசக்தி விஞ்ஞானிகள், அணு மின்நிலைய பொறியாளர்கள் சுமார் 400 பேர் அங்கு பணிக்கு செல்வதற்காக அவர்களது குடியிருப்பான அணுவிஜய் டவுன்சிப் நுழைவு வாயிலில் கூடினர்.
குடியிருப்புகளுக்கு வெளியே போராட்டக்காரர்கள் ஏராளமான அளவில் குவிந்திருந்தனர். இதையடுத்து போலீசார் அந்த இடத்தில் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். பாதுகாப்பு பிரச்னை காரணமாக ஊழியர்கள் இன்று பணிக்கு செல்லவேண்டாம் என்று போலீசார் கூறினர். இதனால் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர்.
 
மேலும் ஒப்பந்த பணியாளர்களையும், போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். இதை கண்டித்த போலீசார், 'நிலைமை எல்லை மீறி சென்றால் எந்த நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம்' என்று தெரிவித்தனர். இதனால் கூடன்குளத்தில் பதற்றமான நிலை நிலவுகிறது.
 



[Continue reading...]

Dhanush on working with Aishwarya

- 0 comments
 

The third schedule of the Aishwarya Dhanush directed 3 has been completed. The film's lead star Dhanush has said that it is great to work with his wife and that he never thought that it would be so blissful.

The national award winning actor also has a special word of praise for Aishwarya and said that she is brilliant in her sphere of work. Dhanush also added that he is enjoying her company every bit on the sets of 3.

[Continue reading...]

'குளிப்பது' எப்படி?-'டெமோ' காட்டும் பூனம் பாண்டே!(வீடியோ)

- 0 comments
 


சிலருக்கு வாழ்க்கை இயல்பிலேயே எப்போதும் பரபரப்பாக இருக்கும். சிலரோ, கடுமையாக முயற்சித்து எப்போதும் பரபரப்பாக வைத்துக் கொள்ள முயல்வார்கள். இதில் பூனம் பாண்டே 2வது ரகம் போல.

இவரை சில மாதங்களுக்கு முன்பு வரை நிறையப் பேருக்குத் தெரியாது. ஆனால் இவர் விட்ட ஒரே ஒரு ஸ்டேட்மென்ட்டால் உலகம் பூராவும் பரவி பாப்புலராகி விட்டார். இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக காட்சி தருவேன் என்று இவர் விட்ட ஸ்டேட்மென்ட்டால் வலையுலகமே வாரிச் சுருட்டிக் கொண்டு பூனம் பாண்டே குறித்த செய்திகளை அள்ளிக் கொடுக்க ஆரம்பித்தது.

ஆனால் தான் சொன்னபடி பூனம் செய்யவில்லை என்பது வேறு கதை. அதற்கு பல காரணங்களை அடுக்கிக் கொண்டு அம்பேல் என எஸ்கேப் ஆகி விட்டார் பூனம். இருப்பினும் அத்துடன் நில்லாத அவர் தற்போது பார்ட் பார்ட்டாக தனது உடல் பாகங்களை உலகுக்குக் காட்ட ஆரம்பித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தனது முக்கால் கவர்ச்சிகரமான போஸ்களை தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டார். பின்னர் அவரது எடுப்பான முன்னழகுப் படங்களை உலவ விட்டார். தற்போது மேலும் ஒரு படி முன்னேறி, குளிக்கும் காட்சி ஒன்றை வீடியோவில் வெளியிட்டு மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளார்.

தனது ட்விட்டர் தளத்தில்தான் இந்த வீடியோவையும் இணைத்துள்ளார். 18 வயதுக்குட்பட்டவர்கள் தயவு செய்து பார்க்க வேண்டாம் என்ற குறிப்புடன் இணைக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில் குளியல் அறையில்.,பாத் டப்பில் நின்றபடியும், வளைந்து நெளிந்தபடியும், ஹேன்ட் ஷவர் மூலம் தனது உடலில் தண்ணீரை பீய்ச்சியடித்தபடியும் காட்சி தருகிறார் பூனம்.

வெள்ளை நிறத்தில் வெறும் உள்ளாடைகளுடன் மட்டும் காட்சி தரும் பூனம் பாண்டேவின் இந்த வீடியோ படு கவர்ச்சிகரமாக இருக்கிறது. விரைவில் பூனம் பாண்டேவின் புதிய இணையதளம் செயல்பாட்டுக்கு வருகிறது. அதில்தான் இந்த வீடியோ மற்றும் இதுபோன்ற வீடியோக்கள், புகைப்படங்கள் இடம் பெறவுள்ளன. இந்த குளியலறை வீடியோவின் இறுதியில், விரைவில் இதுபோன்ற பல வீடியோக்களை எதிர்பார்த்துக் காத்திருங்கள் என்ற அறிவிப்புடன், காட்சி முடிகிறது.

இன்னும் என்னென்ன பூதமெல்லாம் கிளம்பப் போகிறதோ பூனம் பாண்டேவிடமிருந்து...!





[Continue reading...]

காதலனை பிரிந்தார் கமல் மகள் சுருதி

- 0 comments
 
 
நடிகர் சித்தார்த்தும் ஸ்ருதியும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தெலுங்கு நடிகர் சித்தார்த்தும், ஸ்ருதி ஹாஸனும் ஒரு படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு, திருமணமாகாமலேயே இணைந்து வாழ்வதாக கடந்த சில மாதங்களாகக் கூறப்பட்டு வந்தது. கமல் ஹாஸனுக்கும் மகளின் இநத உறவு குறித்து தெரியும் என்றும் கூறினர்.
 
இதனை ஸ்ருதி மறுக்கவில்லை. அவரிடம் கேட்டபோதெல்லாம், அது எனது தனிப்பட்ட விவகாரம் என்றே கூறி வந்தார். சித்தார்த்தும் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்து வந்தார்.
 
இந்த நிலையில் இருவரும் இப்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக தெலுங்கு திரைப்பட உலகில் பரபரப்பாக செய்தி பரவி வருகிறது.
 
உறவு குறித்து மவுனம் காத்தது போலவே, இந்தப் பிரிவு குறித்தும் ஸ்ருதி - சித்தார்த் எதுவும் கூற மறுத்துவிட்டனர். ஆனால் சித்தார்த் தன்மேல் ஆதிக்கம் செலுத்துவது பிடிக்காததால் ஸ்ருதி விலகிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
 
சித்தார்த் ஏற்கெனவே திருமணமாகி, மனைவியை விவாகரத்து செய்தவர் என்பவது குறிப்பிடத்தக்கது.



[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger