Thursday 18 August 2011

உள்ளாட்சி தேர்த��் 2011;கேப்டன் போடு���் ப்ளான்;ஆனந்த வ���கடன்

- 0 comments


ஜெயலலிதா முதல்வர் ஆவார்.எதிர்கட்சி தலைவர் வரிசையில் மாண்புமிகு கேப்டன் விஜயகாந்த் அமர்வார் என கோவை பொதுக்கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் சொன்னதுதன் பலித்தது.சட்டசபையில் முதல்வருக்கு இணையான அதிகாரங்கள் கொண்ட பதவி எதிர்கட்சி தலைவர் பதவி.சட்டசபை உறுப்பினர் பேசிக்கொண்டிருக்கும்போது,முதல்வர் கருத்து சொல்ல எழுந்தால்,அந்த உறுப்பினர் உடனே அமரவேண்டும்.
மேலும் படிக்க »

http://tamil-smsworld.blogspot.com




  • http://tamil-smsworld.blogspot.com


  • [Continue reading...]

    சர்வாதிகாரி

    - 0 comments


    அத்தியாயம் 15 ஆப்பிளின் (தற்காலிக) தலைவராக ஸ்டீவ் ஜாப்ஸ் பொறுப்பெற்றவுடன் செய்த முதல் காரியங்களில் ஒன்று ஆப்பிளின் இரசிக கண்மணிகளை கன்னாபின்னாவென்று கடுப்பேற்றியது. யாருமே எதிர்பார்க்காதது. பில்கேட்ஸுக்கு போனைப் போட்டார். நமக்குள் இருக்கும் பேடண்ட் பிரச்னைகள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ளலாம். என்ன சொல்கிறாய்? ஒரு கணம் பில் கேட்ஸ் இதை நிச்சயம் நம்பி இருந்திருக்க மாட்டார். இன்று என்ன தேதி? ஏப்ரல் முதல் தேதியா என்று பார்த்திருந்தாலும் ஆச்சரியம் இல்லை. ஸ்டீவ் ஜாப்ஸ் சீரியஸாகத்தான் பேசுகிறார் என [...]

    http://sirappupaarvai.blogspot.com




  • http://sirappupaarvai.blogspot.com


  • [Continue reading...]

    அதிரடி அம்மாவும���,அஞ்சாத அண்ணியும்;நக்கீரன்

    - 0 comments


    நக்கீரனில் வெளிவந்த அந்த கட்டுரையை படித்தபோது ,ஆச்சர்யப்பட்டேன்.மு.க.அழகிரி கைதுக்கு நாள் குறித்துவிட்டார்கள்.காந்தி அழகிரி கைதெல்லாம் வேண்டாம்..ஸ்ட்ரைட்டா தலைக்கே குறி என செய்தி கிடைத்தது.மேலும் படிக்க »http://actressmasaala.blogspot.com http://actressmasaala.blogspot.com




    http://tamil-photo.blogspot.com




  • http://tamil-photo.blogspot.com


  • [Continue reading...]

    பெண்கள் எதிர்பா��்ப்பது இதைத்தான���!

    - 0 comments


    மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன?. வெறும் உடல் ரீதியான உறவுடன் தொடர்பை முடித்துக் கொள்ள விரும்புவதில்லை பெண்கள். அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது. அது உண்மையில் அவர்களது மனங்களுக்கு ஆறுதலாக அமைகிறது என்பதை நிறையப் பேர் புரிந்து கொள்வதில்லை. புரிந்து கொண்டால் உறவுகள் வலுப்படும், இனிமை கூடும்.

    நிறையப் பெண்களுக்கு பேச்சு மிகப் பிடிக்கும். அன்பான, ஆறுதலான பேச்சை தங்களது பார்ட்னர்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறார்கள் பெண்கள். பேசிக் கொண்டே நடப்பது, பேச்சின் மூலம் அன்பை, நட்பை பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது.

    நீண்ட தூரம் நடந்தபடி பேசுவது என்பது இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும். இது ஒரு அருமையான அனுபவமும் கூட. நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்பதை இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த பேச்சு நடை உதவும்.

    சில பெண்களுக்கு தங்களது புறத்தோற்றம் குறித்த கவலை இருக்கும். இதை தங்களது காதலர் விரும்புவாரா மாட்டாரோ என்ற கவலையும் அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாக தங்களை கூடுதலாக அழகாக்கிக் கொள்ள விரும்புவார்கள், முயற்சிப்பார்கள்.

    இதை ஆண்கள்தான் புரிந்து கொண்டு அவர்களது கவலையைப் போக்க முயல வேண்டும். உன் அழகு உருவத்தில் இல்லை, மனதில்தான் இருக்கிறது, உனது பேச்சுதான் உனக்கு அழகு, உனது சிரிப்புதான் அழகு என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஆண்கள்தான் உண்மையில் பெண்களுக்கு பெரும் துணைவர்களாக முடியும்.

    செக்ஸ் என்பது வாழ்க்கையில் பிரிக்க முடியாதது – திருணம் செய்தவர்களுக்கு. அதேசமயம், அதை இனிய முறையில் அனுபவிக்க வேண்டும். மனத்தாங்கல், வருத்தம், வலி, வேதனையுடன் அதை அனுபவிக்கக் கூடாது. அது மனதில் நிரந்தர காயத்தையும், நீங்கா வலியையும் ஏற்படுத்தி விடலாம்.

    பெண்களைப் பொறுத்தவரை மன ரீதியான திருப்தியையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆண்கள் அவசரக்காரர்கள். காரியம் முடிந்தவுடன் மறந்து விடுவார்கள் சற்று முன் நடந்ததை. ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அந்த இனிய உணர்வின் நினைவுகளில் சில மணி நேரங்களாவது மூழ்கிக் கிடப்பார்கள்.

    தன்னிடம் தனது பார்ட்னர் எப்படி நடந்து கொண்டார் என்பதிலிருந்து பலவற்றையும் அவர்கள் மனதுக்குள் அசை போட்டுக் கொண்டிருப்பார்கள்.

    எனவே உறவுக்கு முன்பும் சரி, உறவின்போதும் சரி ஆண்கள் பெண்களிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். உறவுக்குப் பின்னரும் நம்மை நினைத்து காதலியோ அல்லது மனைவியோ சந்தோஷத்துடன் நினைத்துப் பார்க்கும்படியாக அவர்களை நடத்த வேண்டும்.

    செக்ஸ் உறவின்போது மட்டும்தான் பெண்கள் சந்தோஷமடைவார்கள் என்றில்லை. அன்பான, ஆறுதலான முத்தம், கைகளைப் பிடித்து நான் இருக்கிறேன் உனக்கு என்று கூறுவது, சின்னச் சின்ன ரொமான்ஸ்கள் என நிறைய விஷயங்கள் பெண்களுக்குப் பிடித்தமானவை. இவற்றை நிறைய பேர் நிறைய செய்வதில்லை. லைட்டாக இவற்றை செய்து விட்டு நேரடியாக போய் விடுகிறார்கள். முன்விளையாட்டுக்களைத் தவிர இதுபோல நிறைய விஷயங்கள் உள்ளன. காதலி அல்லது மனைவியின் கால்களை இதமாக அழுத்தி விடலாம், லேசான மசாஜ் செய்யலாம். விரல்களைப் பிடித்து சொடுக்கு எடுக்கலாம். தலையைக் கோதி விடலாம். அன்பு மொழி பேசலாம்… இப்படி நிறைய இருக்கிறது.

    எல்லாம் முடிந்து உறவை திருப்திகரமாக முடித்த பின்னர் அவ்வளவுதான் தூங்கப் போக வேண்டியதுதான் என்று கிளம்பிப் போவது கூடவே கூடாது. செக்ஸ் உறவின்போது ஆண்களுக்கு என்டார்பின் சுரப்பு அதிகமாக இருக்கும். இதனால் படு வேகமாக இயங்கி, எல்லாம் முடிந்த பின்னர் அப்படியே சோர்ந்து போய் விடுவார்கள். ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை. அது, நிதானமாகவும், விவேகமாகவும்தான் நடக்கிறது. எனவே உறவு முடிந்த பின்னரும் கூட பெண்கள் கிளர்ச்சியுடன்தான் இருப்பார்கள். எனவே உறவை முடித்த பின்னர் சிறிது நேரம் அவர்களுடன் ஆசுவாசமாக, அன்பாக இணைந்து இருப்பது நல்லது.

    இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்தவைதான். ஆனாலும் நிறைய பேர், அந்த சமயத்தில் 'அதை' மட்டும் சரியாக செய்து விட்டு மற்றவற்றில் கோட்டை விட்டு விடுவதால் பல கோணல்கள் ஏற்பட்டு விடுகின்றன. இதெல்லாம் சரியாக இருந்தால் கோர்ட் பக்கம் யாருமே போகத் தேவையில்லை-விவாகரத்து கோரி.




    http://tamil-photo.blogspot.com




  • http://tamil-photo.blogspot.com


  • [Continue reading...]

    மீனவர் பிரச்சின�� படமாகிறது... கதை- ���சனம் ஜெயமோகன்; இ���க்கம் மணிரத்னம்!

    - 0 comments


    சிங்கள கடற்படையினரிடம் சிக்கி தமிழக மீனவர்கள் படும் பாடுகளை திரைப்படமாக உருவாக்குகிறார் மணிரத்னம்.

    இந்தப் படத்துக்கான கதை வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுகிறார்.

    தமிழக மீனவர்களுக்கும் சிங்கள கடற்படையினருக்கும் பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. நடுக்கடலில் தமிழ் மீனவர்களை மடக்கி நிர்வாணப்படுத்தி துன்புறுத்தும் சிங்கள வெறியர்கள், பல நேரங்களில் சுட்டுக் கொன்றுவிடுவதும், கைது செய்து இலங்கைச் சிறைகளில் அடைப்பதும் தொடர்கிறது.

    இதனை இந்திய அரசு இதுவரை தட்டிக் கேட்கவில்லை. தமிழக அரசின் எதிர்ப்புக் குரலை பொருட்படுத்துவதும் இல்லை மத்திய அரசு.

    இந்த தொடர் அவலத்தை ஜெயமோகன் கதை வசனத்தில் ஒரு திரைப்படமாக உருவாக்குகிறார் மணிரத்னம்.

    இந்தப் படத்தில் ஹீரோ ஹீரோயின் என அனைவரும் புதியவர்களே. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கெனவே பம்பாய் படத்தில் மணிரத்னமும் ராஜீவ் மேனனும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தை முழுக்க முழுக்க கன்னியாகுமரி மற்றும் ராமேஸ்வர கடற்கரைகளில், கடல்பகுதிகளில் எடுக்கிறாராம் மணிரத்னம்.

    கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் விடுதலைப் புலிகளின் போராட்டம் குறித்து அரைகுறையாக கருத்து ('இது ஆயுத வியாபாரிகளின் போராட்டம்') சொல்லி தமிழ் உணர்வாளர்களின் கண்டனத்துக்கு ஆளானவர் மணிரத்னம். இந்த முறை மீண்டும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான விஷயத்தைக் கையிலெடுக்கிறார்.

    அதை எப்படி எடுக்கப் போகிறார் என்பதை தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறார்கள்!








    http://tamil-photo.blogspot.com




  • http://tamil-photo.blogspot.com


  • [Continue reading...]

    சிங்கப்பூரில் வ��லை : கடுமையான வித���கள் அமல்

    - 0 comments


    சிங்கப்பூரில் வெளிநாட்டவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான விதிகளை, அந்நாட்டு அரசு மேலும் கடுமையாக்கியுள்ளது. இதனால், நடுத்தர மற்றும் அடித்தள வேலைவாய்ப்புகள், இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டவருக்குக் கிடைப்பது இனி சிரமமாக இருக்கும்.

    சிங்கப்பூரில் தற்போது, 35 சதவீதம் வெளிநாட்டவர்கள் வசித்து வருகின்றனர். அந்நாட்டு சட்டப்படி, அங்குள்ள வெளிநாட்டவர் தற்போது, மாதம் குறைந்தபட்சம் 2,800 சிங்கப்பூர் டாலர் சம்பாதித்தால் தான், அங்கு பணிபுரிவதற்கான அனுமதியை (இ.பி.,) பெறலாம். இந்த விதி திருத்தப்பட்டு, மாதம் 3,000 சிங்கப்பூர் டாலர் சம்பாதிக்க வேண்டும் என்ற புதிய விதி, 2012ம் ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில், சமீப காலமாக அங்கு வேலைக்காக வரும் வெளிநாட்டவர்களின் வருகை அதிகரித்து வருவதால், குறைந்த சம்பளம் உள்ள வேலை கூட மண்ணின் மைந்தர்களுக்குக் கிடைக்கவில்லை என்ற புகார்கள் அதிகரித்து வந்தன.

    இதையடுத்து, அந்நாட்டின் மனிதவள அமைச்சகம், நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: நீண்ட கால அடிப்படையில், வெளிநாட்டுப் பணியாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க, நாட்டில் உள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே வெளிநாட்டுப் பணியாளர்களாக இருக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், சமீப காலமாக இ.பி., கோரி அதிகளவில் விண்ணப்பங்கள் வருகின்றன. அதனால் அடிமட்ட, நடுத்தர, நிர்வாக மற்றும் உயர் நிர்வாக வேலைகளில், வெளிநாட்டினர் சேர்வதற்கான விதிகள் மேலும் கடினமாக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளில், அதிக கல்வித்தகுதி அதற்கேற்ற நல்ல சம்பளம் ஆகியன அடங்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் 3,800 இந்திய நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை நிறுவியுள்ளன. அவற்றில் பணியாற்றுவதற்கு, இந்தியாவில் இருந்து ஆண்டு தோறும் அதிகமானோர் சிங்கப்பூருக்குச் செல்கின்றனர். தற்போதைய புதிய விதிகளால் அவர்களின் வருகை பாதிக்கப்படக்கூடும். ஆனால், சிங்கப்பூர் குடியுரிமை பெற்றுள்ள இந்தியர்களுக்கு புதிய விதிகளால் பாதிப்பு ஏற்படாது.




    http://tamil-photo.blogspot.com




  • http://tamil-photo.blogspot.com


  • [Continue reading...]

    இலங்கை அதிகாரிக��ை வெளியேற்ற வேண்டும்: வைகோ

    - 0 comments


    இலங்கையருக்கு இந்தியாவின் எந்த மூலையிலும் எவ்விதமான பயிற்சியையும் வழங்கக் கூடாது. இந்நிலையில் தற்போது மத்திய அரசின் ரயில்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில், பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் இலங்கை அதிகாரிகள் 12 பேரையும் இங்கிருந்து வெளியேற்றவேண்டும் என ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, வில்லிவாக்கத்தில் உள்ள மத்திய அரசின் பெரம்பூர் ரயில்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில், இலங்கையைச் சேர்ந்த 12 இலங்கை அதிகாரிகளுக்கு உயர் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதை எண்ணி மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடை ந்தேன். மத்திய காங்கிரஸ் அரசு தொடர்ந்து தமிழர்களுக்கு துரோகம் செய்வதையே தங்கள் அரசின் செயற்றிட்டமாக வைத்திருக்கிறது என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

    எனவே, மத்திய அரசின் ரயில் பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலையில் இலங்கையருக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தி ம.தி.மு.க.வினர் ஐ.சி.எப். தொழிற்சாலையை முற்றுகையிட்டு நேற்று முன்தினம் கண்டனப் போராட்டம் நடத்தினார்கள்.

    7 கோடி தமிழர்கள் குடிமக்களாக இருக்கும் இந்தியாவின் எந்த மூலையிலும் இலங்கையருக்கு எந்தவிதமான பயிற்சியும் அளிக்கக்கூடாது என்பதோடு, அவர்க ளை உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    http://youngsworld7.blogspot.com




  • http://youngsworld7.blogspot.com


  • [Continue reading...]

    மூன்று இளைஞர்கள�� தூக்கு கொட்டடிக்கு அனுப்புவது ஏ���்?: பெ. மணியரசன்

    - 0 comments


    பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் சார்பில் சென்னையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில், பேரறிவாளனின் தாயார் திருவாட்டி அற்புதம் அம்மையார், தமிழ்த் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான், தமிழுரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் புலவர் கி.த.பச்சையப்பனார், ஓவியர் வீரசந்தனம், எழுகதிர் ஆசிரியர் முனைவர் அருகோ, தமிழர் உலகம் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் புலவர் சி.பா.அருட்கண்ணனார், புலவர் இராமச்சந்திரன் உள்ளிட்டேர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்கிப் பேசினார்.

    அவர் பேசும் போது, "தமிழினத்தின் அடையாளமாக சிறையில் உள்ள இம்மூவரும் இன்றுள்ளனர். செய்யாத குற்றத்திற்காக அவர்கள் ஏற்கெனவே 21 ஆண்டுகள் அநியாயமாக சிறை வைக்கப்பட்டு விட்டனர்.

    http://youngsworld7.blogspot.com




  • http://youngsworld7.blogspot.com


  • [Continue reading...]

    துரோகம் தொடர்ந்��ால் வரைபடம் மாறும்: வைகோ

    - 0 comments


    மத்திய அரசின் துரோகம் தொடர்ந்தால், இந்தியாவின் வரைபடத்தில் சில பகுதிகள் மறைய வாய்ப்புள்ளது," என மதுரையில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேசினார். பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டும் கேரளாவின் முயற்சியை கண்டித்தும், துணை போகும் மத்திய அரசை கண்டித்தும் மதுரையில் நேற்று உண்ணாவிரதம் நடந்தது.

    உண்ணாவிரதத்தில் வைகோ பேசியதாவது: ஊழலை எதிர்த்த அன்னா ஹசாரேவை, ஊழல்வாதிகள் நிறைந்த திகார் சிறையில் அடைத்துள்ளனர். ராஜிவ் கொலையில் மரண தண்டனை விதித்தவர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா உதவ வேண்டும். தமிழர்களை வஞ்சிக்க, காங்., கம்யூ.,கள் கேரளாவில் இணைகின்றன. இங்கும் அது நடக்க வேண்டும். மதுரை உட்பட தென்மாவட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்பு, ஒட்டுமொத்த தமிழகத்தை பாதிக்கும். கேரளா உதவ மறுத்தால், அவர்களுக்கு பொருள் செல்லும் கம்பம் மெட்டு, போடி மெட்டு, களியக்காவிளை ரோடுகள் பெயர்க்கப்படும். தமிழகத்திற்கு மத்தியஅரசின் துரோகம் தொடர்ந்தால், நூற்றாண்டு சுதந்திரம் காணும் போது, இந்தியாவின் வரைபடத்தில் சில பகுதிகள் விடுபட நேரிடும், என்றார்.

    பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் அப்பாஸ், பெரியார் திராவிடக்கழக தலைவர் கொளத்தூர் மணி, ம.தி.மு.க., அவைத்தலைவர் துரைச்சாமி, பொருளாளர் மாசிலாமணி, துணை பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், கொள்கை பரப்புச்செயலாளர் நாஞ்சில் சம்பத், அரசியல் ஆய்வு மைய செயலாளர் செந்திலதிபன், நகர் செயலாளர்
    பூமிநாதன், புறநகர் மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன், நான்காம் பகுதி செயலாளர் ரஞ்சித்குமார், ஐந்தாம் பகுதி செயலாளர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். உலக தமிழர் பேரமைப்பு தலைவர் நெடுமாறன் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரத்தை நிறைவு
    செய்தார்.

    அய்யோ… பாவம் தி.மு.க.,! : கேரளா விவகாரத்தில் தி.மு.க., விளைத்த துரோகம் அதிகம். நொந்து, வெந்து போய்; அய்யோ… பாவம் என்ற கதியில் நிராயுதபாணியாக நிற்பவர்களை நாம் விமர்ச்சிக்க வேண்டாம். என் போராட்ட பின்னணியில் ஓட்டு வேட்கை இல்லை. தமிழக உரிமையை மீட்க தமிழக அரசு எடுக்கும் முயற்சிக்கு ம.தி.மு.க., துணை நிற்கும். இதை கூட்டணிக்கு தூதாக யாரும் நினைக்க வேண்டாம். பலன் எதிர்பாராமல் தமிழகத்தை நேசிக்கிறோம், ஆதரவு கொடுங்கள், என வைகோ உருக்கமாக பேசினார்.

    http://youngsworld7.blogspot.com




  • http://youngsworld7.blogspot.com


  • [Continue reading...]

    இன்னும் விடியாத ���ள்ளிரவுச்சுதந்���ிரம்: ச.ச.முத்து

    - 0 comments


    நாம் தவிர்க்கவோ விலத்தவோ நினைத்தாலும் நினைத்தாலும் தவிர்க்கமுடியாதபடி எமக்கு இடப்பட்ட ஒரு புவியியல்சாபம் போல அது எமக்கு அருகில் அசையாத ஒரு பெரு நிலமாக இருக்கின்றது.அதுதான் இந்தியா என்ற பெயரால் அழைக்கப்படும் நிலப்பரப்பு.இந்தவாரம் அதன் அறுபத்திநான்காவது சுதந்திரதினம் ஓகஸ்ட்15ம் நாள் வந்துள்ளது.

    பிரித்தானிய காலனிஆட்சியாளர்களின் வருகை இந்தியாவுக்கு செய்த மிகப்பெரிய நன்மை என்னவென்றால் நானூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களாகவும்இசிறியதேசங்களாகவும் சிதறிக்கிடந்த ஒரு நிலப்பரப்பை இந்தியா என்ற பெயரில் தமது நிர்வாகதேவைக்காக ஒன்றிணைத்தது ஆகும்.இந்தியா என்பது அதற்கு முன்னர் ஒருபோதுமே ஒரே தேசமாக இருந்தது கிடையாது.

    இந்தியா எங்கும் மண்ணுக்கு வெளியிலும் மண்ணுக்கு கீழேயும் விளைந்துகிடந்த பொருட்கள் காலகாலமாக அந்த நிலப்பரப்பை நோக்க சக்கரவர்த்திகளையும்இ மன்னர்களையும் கடற்பயணக்காரர்களையும் ஈர்த்துக் கொண்டே இருந்தது. வாசனைத்திரவியங்களும் இவைரங்களும் இபொன்னும் அயலில் இருந்த மொகலாய மன்னர்களை மட்டுமல்லாமல் கொஞ்சம்தூரத்தில் இருந்து பாரசீக சக்கரவர்த்திகளையும்இமிகஎட்டத்திலிருந்து மகாஅலெக்சாண்டர்களையும்கூட அந்த பாரதத்தை நோக்கி படையுடன் வரவைத்திருந்தது.

    நாடுகளைதேடும் கடற்பயணங்கள் எல்லாம் ஒருவகையில் காலனிகளை உருவாக்கும் முயற்சிகளாகவே ஐரோப்பியரால் நடாத்தப்பட்டன.அந்தவகையில் 1498 போத்துக்கேசிய கடற்பயணக்காரரான வாஸ் கொட காமா வின் கப்பல் இந்தியாவின் கோழிகோடு; துறைமுகத்துள் வந்தபோதே இந்தியாவுக்கான ஐரோப்பிய காலனிஆட்சி ஆரம்பித்தது எனலாம்.

    அதன்பின் ஒல்லாந்திய பிரென்சிய பிரித்தானிய என்று நீண்ட காலனிஆட்சிகள் நான்கு நூற்றாண்டுகளாக நீடித்து இறுதியில் உலகம்முழுதும் காலனிஆட்சிகள் பொல பொலவென உதிர்ந்து கொண்டிருந்த காரணத்தாலும் இரண்டாம் உலக யுத்தத்தின் சுமையும் பாதிப்புகளும் ஐரோப்பியகாலனி ஆட்சியாளர்களை மிகவும் பாதித்தபடியாலும் போனால்போகிறது என்று பல ஆசியநாடுகளை விட்டு அவர்கள் வெளியேறினார்கள்.

    அப்படி ஒரு பொழுதுதான் இந்தியாவின் சுதந்திரதினமாக 1947ஓகஸ்ட் 15ல் வழங்கப்பட்டது. ஆனால் மிகவும் தந்திரமாகவே இந்த இந்தியசுதந்திரம் என்பது சாத்வீகபோராட்டம் ஓன்றினாலே கிடைத்தது என்றும் தனிமனித உண்ணாவிரதமும் இகடற்கரையில் உப்பு அள்ளியதாலும்தான் சூரியனே அஸ்தமிக்காத பிரித்தானியசாம்ராஜ்யம் வெளியேறியதாக ஒரு கருத்துருவாக்கம் காங்கிரஸ்பெருந்தலைகளால் காலகாலமாக செய்யப்பட்டுவருகின்றது.

    காந்திகள் இந்தியாவை தொடர்ந்து ஆளுவதற்கு மோகன்தாஸ் கரம்சந்த்காந்தியின் மீதான இந்த பிம்பங்கள் மிகஅவசியமாக அவர்களுக்கு இருக்கின்றது.ஆனால் வரலாற்றின் மிகவும் மறைக்கப்பட்ட பக்கங்களாக இந்தியவிடுதலைக்கான எண்ணற்றவர்களின் வீரமிகு போராட்டமும் அவர்களின் உயிர்த்தியாகங்களும் இருக்கின்றன.

    இந்தியாவின் விடுதலைப்போராட்டத்தினுள் எந்தவிதமான தீவிரமும் கவனிப்பும் காட்டாத காந்தி தென்னாபிரிக்காவில் புகையிரவண்டியில் இருந்து நிறவெறியனால் வெளியே தள்ளி விழுத்தப்பட்;ட பின்னரே இந்தியாவின் விடுதலைஅரங்கினுள் 1915ல் வருகிறார்.ஆனால் அதற்கு பலபத்து வருடங்களுக்கு முன்னரே ஐம்பத்திஏழு வருடங்களுக்கு முன்னரே பிரித்தானியருக்கு எதிராக உருவான சிப்பாய்க்கலவரத்தின் வீரமிகுபுதல்வர்களை பற்றிய விபரங்கள் ஏறத்தாள முழுமையாக மறைக்கப்பட்டேஇருக்கின்றன.

    அதில் ஒரு உருக்கமான கட்டம் என்னவென்றால் 1857ம்ஆண்டு பாரக்புரிஎன்ற இடத்தில் பிரித்தானிய ராணுவ அதிகாரியை தாக்கினான் என்பதற்காக மங்கள்பாண்டே என்ற இந்தியவீரனை கைது செய்யும்படி பிரித்தானிய படையில் இருந்த ஒரு இந்திய ஜமேதாருக்கு பிரித்தானிய தளபதி ஜெணரல் கார்சே உத்தரவிட்டான்.தனது தேசத்தவன் ஒருவனை கைதுசெய்ய மறுத்த ஜமேதாரும்இமங்கள்பாண்டேயும் 1857ஏப்ரல் 7ம்திகதி ஒன்றாக தூக்கிலிடப்பட்டார்கள்.

    இதன் தொடர்ச்சியாக எழுந்த கலவரத்தை அடக்குவதற்கு பிரத்தியேக படைகளை சீனாவை நோக்கிசென்று கொண்டிருந்த தமது ஐரோப்பியபடைப்பிரிவில் இருந்தும் பெற்றுக்கொண்டு போராவேண்டிய அளவுக்கு இந்தியர்களின் எழுச்சி எழுந்திருந்தது.இறுதியில் 1858 யூலை 20ம்திகதி குவாலியரில் நடந்த மோதலில் ராணி லட்சுமிபாய் கொல்லப்பட்டு குவாலியர்கோட்டை பிரித்தானியரால் மீட்கப்பட்டதுடன் தற்காலிகமாக ஓய்ந்தது. வெறும் வர்த்தக கம்பனியான கிழக்கிந்திய கம்பெனியை வைத்து இனியும் இந்தியாவை ஆளமுடியாது என்று பிரித்தானியர் முடிவெடுத்த தருணம் இதுதான்.

    இந்தியவிடுதலைக்கான முதற்புரட்சி முதல்எதிர்வினையின் மூலவர்களை பற்றிய பக்கங்கள் ஏனோதானோ என்று விரிவாக இல்லாமலும்இமறைத்தும் வைத்துக்கொண்டு இந்தியாவின் சுதந்திரதினம் தனது அறுபத்திநான்கு வருடத்தை கடந்து வந்திருக்கிறது.

    இதோ இந்தியாவின் விடுதலையை மானுடவிடுதலையை மானுடவிடுதலையாகவும் சமதர்மவிடுதலையாகவும் கனவுகண்டு அதற்காகவே போராடி தூக்குக்கயிற்றை முத்தமிட்ட பகத்சிங்கின் வரலாற்றை பாருங்களேன்.எத்தனை உன்னதமானது அவனது வாழ்வு. இருபத்துமூன்று வயதுக்குள் முடிந்துபொன அவனின் வாழ்வுஎங்கும் காணப்படும் இலட்சிய உறுதியும் இசுதந்திரத்தின் மீதான வாஞ்சையும்தான் இன்றைய இந்தியாவின் விடுதலை.

    இன்றைக்கும் அவனின் நினைவு தினத்தன்றைக்கு (மார்ச்23) அரசியல்வாதிகள் வந்து மலர்மாலை வைப்பதுடன் அவனின் நினைவுகள் மறைக்கப்பட்டு மறக்கப்பட்டுள்ளது. இன்றைக்கும் சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் சாலெட்ஜ் நதியின் கரையில் இருக்கும் அவனின் நினைவிடம் விடுதலைக்கு போராடும்அனைத்து மக்களுக்கும் ஆயிரம் செய்திகளை சொல்லியபடிக்கு அமைதியாகநின்றுகொண்டிருக்கிறது.

    இந்தியா விடுதலை அடையவேண்டும் என்பதற்கும் மேலாக அது அனைவரையும் சமனாக நடாத்தும் ஒரு சமதர்மதேசமாக மலரவேண்டும் என்பதற்பகாக இந்துஸ்தான் சோசலிச குடியரசு ஒன்றை அமைக்கும் அமைப்பு ஒன்றை கட்டியெழுப்பி புரட்சியை விதைதவன் அவன்.லாஜாலஜபதி ராய் என்ற மிதவாத தலைவருடன் ஆயிரம் முரண்பாடுகளும் கருத்துவேறுபாடுகளும் பகத்சிங்குக்கு இருந்தபோதிலும் லாலாலஜபதிராய் பிரித்தானிய காவல்துறையால் கொல்லப்பட்போது அதற்கு பதில்சொல்ல பகத்சிங் முடிவெடுத்தார்.அதற்கு காரணமான அதிகாரி சாண்டிரஸை அழித்த வழக்கில் பகத்சிங்கிற்கும் நண்பர்களுக்கும் மரணதண்டனை கிடைத்தது.

    பகத்சிங்கிற்கும் நண்பர்களுக்கும் தூக்குத்தண்டனை கொடுக்கக்கூடாது என்று நாடு முழுவதிலும் மக்கள் கூட்;டமாக தெருக்களில் எழுச்சிகொண்டிருந்தபோது இன்று இந்தியாவின் தேசத்தந்தையாக உருவகப்படுத்தப்படும் காந்தி இந்தியாவின் வைசிராய்க்கு ஒரு கடிதம் எழுதினார்.(வைசிராய் என்பவர் இங்கிலாந்துராணியின் பிரதிநிதியாக இந்தியாவை ஆளுபவர்).பகத்சிங்கின் தூக்குதண்டனைக்காக பிரித்தானியர் நிர்ணயித்த திகதிக்கு மூன்றுநாட்கள் முன்னதாகவே அந்த தண்டனையை வழங்குங்கள் என்று கேட்டிருந்தார். ஏனென்றால் தூக்குத்தண்டனை நிறைவேற்ற நிர்ணயிக்கப்பட்ட நாளில் அவருக்கு வேறுமுக்கிய அலுவல் இருந்ததாம்.பகத்சிங் காந்தியையோ அவரின் போராட்டமுறைகளையோ அவரின் இந்துமத சனாதன முறைகளையோ ஏற்றுக்கொண்வராக இருந்தது கிடையாது.அதனால் அந்த அற்புதமானவீரனின் அறமும்இவிடுதலைக்கான பிரகடனமும் பெரிய அளவில் இன்றளவும் இந்தியாவில் வெளிப்படுத்தப்படவில்லை.

    ஆனால் பகத்சிங் இத்தகைய அங்கீகாரங்களையோ அடிபணிவுகளையோ ஒருபோதும் பொருட்டாக நினைக்காமல் போரடிய வீரன்.அவன் மிகவும் தெளிவாக தன்னை யார் என்றும் தான் யாருக்காக போராடுகிறேன் என்றும் தெளிவாக இருந்தவன்.

    "நான் ஒரு மனிதன்.மனித சமூகத்தை பாதிக்கும் அனைத்தும் என்னோடும் சம்பந்தப்பட்டவையே" என்று தனது இருபத்திஇரண்டு வயத்துக்குள் பிரகடனப்படுத்தியவன் அவன்.

    பகத்சிங்கின் முயற்சிகள் இருபத்துமூன்றுவயத்துக்குள் முடிந்திருக்கலாம்.ஒரு தூக்குகயிற்றின் இறுக்கத்துடன் அவனின் வாழ்வு முடிந்திருக்கலாம்.பகத்சிங் தனது இறுதிக்கணம்வரைக்கும் தனது தாயகத்தின்மீதான பற்றுதலைஇதனது மண்ணின் மீதான சமரசம் செய்யமுடியாத தாகத்துடனும் இருந்தவன்.அவனுக்கு தூக்குதண்டனை கொடுத்தபோதும் அவர் அதனை ஏற்காமல் தன்னை துப்பாக்கியால் சுட்டோஇபீரங்கியால் சுட்டோ கொல்லும்படி கேட்டவர்.ஏன் அப்படி கேட்கிறாய் என்று அதிகாரிகள் கேட்டபோது தூக்கிலே போட்டால் உயிர்பிரியும்போது தனது கால்கள் தனது தாய்மண்ணில்படாமல் அந்தரத்தில் இருக்கும் என்றும் துப்பாக்கியால்சுட்டால் தனது உயிர்போகும்போது தனது கால்கள் தனது மண்ணை தீண்டிபடியே போகும் என்றும் எந்தவிதமானசலனமும் இல்லாமல் வீரமுடன் கூறியவன் அவன்.

    இந்தியசுதந்திரம் என்பது அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் காந்தியின் முயற்சியாக இருக்கலாம்.ஆனால் அடிமைப்பட்ட ஒரு இனத்தின் மக்கள் என்ற முறையிலும் விடுதலைக்காக போராடவேண்டி கட்டாயத்துக்குள் வாழும் ஒரு மக்கள் என்ற முறையிலும் எமக்கு பகத்சிங்கின் வாழ்வுதான் இந்தியசுதந்திரமாக தெரிகிறது.

    பகத்சிங் போன்ற பல்லாயிரம் வீரர்களினதும் இந்தியதேசிய ராணுவத்தை உருவாக்கிய சுபாஸ்சந்திரபோசின் படையில் போராடிய பல ஆயிரம் இந்தியவீரர்களின் கனவாகவேஎமக்கு இந்தியசுதந்திரம் தெரிகிறது.

    பகத்சிங் தனது சிறையின் சுவரில் எப்போதும் எழுதிவைத்திருந்த சார்ல்ஸ் மகாய் அவர்களின் கவிதை பகத்சிங்கின் ஆன்மத்தை அழகாகவே காட்டுகிறது.

    "பகைவர்களே இல்லை என்கிறாயா..?

    அந்தோ என் நண்பனே

    இப்பெருமிதம் மிக அற்பமானது

    உனக்கு எதிரிகளே இல்லாது போனால்

    நீ செய்திருப்பது அற்ப சொற்பமானது

    துரோகி யாரையும் வீழ்த்தியிருக்கமாட்டாய்

    போராட்டத்தில் கோழையாக இருந்திருப்பாய்.."

    என்று நீளும் இந்த கவிதையை போலவே பகத்சிங்கிற்கு அவர் வாழும் போது எதிரிகளாக பிரித்தானியபேரரசு இருந்தது. அவர் மரணித்த பிறகு அவரின் நினைவையும் அவரின் கருத்துகளையும் மறைக்கும் இந்தியாவை ஆளும் காந்திகள் இருக்கிறார்கள்.

    http://youngsworld7.blogspot.com




  • http://youngsworld7.blogspot.com


  • [Continue reading...]

    காதலிக்க மறுத்த ���ளம்பெண் கழுத்தறுபட்டார்

    - 0 comments



    வாலாஜாபாத் அடுத்த அவலூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் (25). இருங்காட்டு கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.

    தினமும் அவர் வேலைக்கு செல்லும் போது அதே பகுதியில் உள்ள மற்றொரு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் சுங்குவார்சத்திரம் சோகண்டி கிராமத்தை சேர்ந்த சுமதி (22) என்பவரை அடிக்கடி சந்தித்தார்.



    இதையடுத்து சுமதியை, லோகநாதன் ஒருதலையாக காதலிக்க ஆரம்பித்தார். பலமுறை அவரிடம் காதலை கூறியும் ஏற்கவில்லை என்று தெரிகிறது. இதனால் சுமதி மீது லோகநாதன் கோபத்தில் இருந்தார்.

    இந்த நிலையில் வேலை முடிந்து தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்த சுமதியை வழிமறித்த லோக நாதன் மீண்டும் தனது காதலை கூறி ஏற்குமாறு தெரிவித்தார்.அப்போது சுமதி அவரை கண்டித்தார்.

    ஆத்திரம் அடைந்த லோகநாதன் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுமதியின் கழுத்தை அறுத்தார்.பின்னர் தலை மார்பில் குத்தி விட்டு தப்பி ஓடவிட்டார்.

    ரத்த வெள்ளத்தில் சுமதி அங்கேயே மயங்கி விழுந்தார்.உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது போலீசார் வழக்குப்பதிபு செய்து லோக நாதனை கைது செய்தனர்.







    http://dinasarinews.blogspot.com




  • http://dinasarinews.blogspot.com


  • [Continue reading...]

    அன்னா ஹசாரே யார்? ராமதாஸ்

    - 0 comments



    செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,

    அன்னா ஹசாரே யார்? அவர் இவ்வளவு நாட்களாக எங்கு இருந்தார். ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் மாற்றுகருத்து இல்லை. பிரதமரையும் லோக்பால் சட்டத்தில் கொண்டுவர வேண்டும் என்பது பற்றி பாராளுமன்றத்தில்தான் சட்டம் நிறைவேற்ற வேண்டும். வெளியில் இருந்து அன்னா ஹசாரே போராட்டம் நடத்துவது ஏதோ உள்நோக்கம் உள்ளதாக தெரிகிறது. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.






    http://dinasarinews.blogspot.com




  • http://dinasarinews.blogspot.com


  • [Continue reading...]

    எம்.ஜி.ஆரை ரோல் ம��டலாக வைத்து நடிகர் விஜய்...: எஸ்.ஏ.ச���்திரசேகர் பேட்டி

    - 0 comments



    நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் வருகிற 28 ந் தேதி மதுரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்க உள்ளது. இது குறித்து விஜய்யின் தந்தையும், பொருளாளருமான எஸ்..சந்திரசேகரன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

    விஜய் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாவட்ட தலைநகரில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். கடந்த மாதம் சேலத்தில் பெரிய விழா நடந்தது. இந்த மாதம் 28 ந் தேதி மதுரையில் தெண்டரணி தலைவர் மகேஸ்வரன் முயற்சியில், மாநகர தலைவர் தங்கப்பாண்டியன், புறநகர் தலைவர் இன்பராஜ் ஆகியோர் பெரிய விழாவிற்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள். இந்த விழாவிற்கான இடத்தேர்வு முடிந்து, புதூர் மூன்றுமாவடியில் உள்ள சி.எஸ்.. மைதானத்தில் விழா நடக்க உள்ளது.


    நடிகர் விஜய் 92 ல் நடிக்க வந்தார். அப்போது ரசிகர் மன்றமாக ஆரம்பித்து, நற்பணி இயக்கமாக உருவாகி, தற்போது மக்கள் இயக்கமாக மாறி ஒரு சமூக இயக்கமாக செயல்படுகிறது. இந்த இயக்கம் ஏழை மக்களுக்கும், தமிழர்களுக்கும் குரல் கொடுத்து, பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறோம். மக்கள் இயக்கத்தின் மூலம் பல நல்ல விஷயங்களை நாங்கள் செய்து வருகிறோம்.


    விஜய்க்கு நடிகர் எம்.ஜி.ஆரை ரொம்ப பிடிக்கும். நடிகனாக வாழ்க்கையை தொடங்கி, முதல்வராகி இன்றும் அவரை வாழ்க்கை முடியாமல் உள்ளது. அவர் மறைந்தும், மறையாமல் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். அவர் செய்த நல்ல விஷயங்கள் விஜய்க்கு ரொம்ப பிடிக்கும்.


    எனவே அவரை ஒரு ரோல் மாடலாக வைத்து தான் இது போன்ற நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.




    http://dinasarinews.blogspot.com




  • http://dinasarinews.blogspot.com


  • [Continue reading...]

    ரஜினிகாந்த் பேச��சை கேட்க்க கண்ணீர் மல்க மன்றாடின���ன்: குமரிஅனந்தன�� பேச்சு

    - 0 comments



    சென்னை வண்ணாரப்பேட்டையில் சுதந்திர தினவிழா, காமராஜர் பிறந்தநாள் விழா, பாப்பாரப்பட்டியில் சிவாவுக்கு மணிமண்டபம் அமைய உழைத்த குமரி அனந்தனுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில், தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் பேசும்போது கூறியதாவது:

    1996ல் ரஜினிகாந்த் காங்கிரஸ் தலைமையில் அமைந்த கூட்டணியை ஆதரிக்க முன் வந்தார். பல சந்திப்புகளை பல கட்சி தலைவர்களோடு நடத்தி தமிழ்நாடு காங்கிரசுக்கு 14 கட்சிகளின் ஆதரவைப் பெற்றிருந்தோம். ரஜினியின் செல்வாக்கைப் பற்றி மக்கள் கருத்தைக் கேட்டறிந்த ஓர் அமைப்பு அவருக்கு மக்களிடையே 56 சதவீதம் ஆதரவு இருப்பதாக அறிவித்தது.


    தமிழ்நாடு காங்கிரசின் நிர்வாகக்குழு என் தலைமையில் கூடி ஒருமனதாக வரவேற்றது. பல பணிகளுக்கிடையேயும் 3 முறை டெல்லி சென்று அன்றைய அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும், பிரதமராகவும் இருந்த நரசிம்மராவைச் சந்தித்தார் ரஜினிகாந்த். அரசியல் ரீதியான சில வேண்டுகோள்களை வைத்து; தனது முழுமனதான ஆதரவையும், உழைப்பையும் தர முன்வந்தார். அதை நரசிம்மராவ் ஏற்கவில்லை.


    நான் காலைப்பிடிக்காத குறையாக கண்ணீர் மல்க மன்றாடினேன். எனக்குப் பதவி வேண்டாம், ஆனால் காமராஜ் தொண்டன் குமரி அனந்தன் தலைவராக இருந்தபோது இழந்த காங்கிரஸ் ஆட்சி மீண்டும் வந்தது என்று வரலாறு பதிக்கும் ஒரு வரி எனக்குப்போதும் என்று கெஞ்சினேன். ரஜினிகாந்த் சொன்னதைக் கேட்டிருந்தால் அன்றே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருக்கும். என் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரிய ஏமாற்றம் அது. இவ்வாறு குமரி அனந்தன் பேசினார்.




    http://dinasarinews.blogspot.com




  • http://dinasarinews.blogspot.com


  • [Continue reading...]

    அந்தப் பலகைகளை அ���ற்றி விடலாம்!

    - 0 comments


    பெட்டிக் கடைகளில் காணப்படும் ஒரு அறிவிப்புப் பலகை--"இது புகை பிடிக்கத்தடை செய்யப்பட்ட பகுதி.இங்கே புகைபிடித்தல் தண்டனைக்குரிய குற்றம்"

    சிகரெட்டை முற்றாக ஒழிக்க முடியாத நிலையில், பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதைத் தடுப்பது நல்ல யோசனைதான்.ஆனால்,அமல்படுத்த முடியாத இடத்தில் தடை உத்தரவு போடுவது ஒரு கேலிக்கூத்துதான்.

    புகை பிடிப்பதைத் தடுக்க வேண்டும் என அரசு நினைத்தால்-அது தேவையா இல்லையா என்பதல்ல இங்கு விவாதம்-சிகரெட் உற்பத்தியை,விற்பனையைத் தடை செய்ய வேண்டும்.

    பெட்டிக்கடையில் சிகரெட் வாங்குபவர்கள் அதை எங்கே சென்று பிடிப்பார்கள்?ஒவ்வொரு தெருவிலும் சிகரெட் பிடிப்பதற்கென்று தனி இடம் ஒதுக்கப் பட்டிருக்கிறதா?பெட்டிக் கடைகளில் வாங்கும்பொருள்களில் சிலவற்றை அங்கேயே பயன் படுத்த முடியும்.சிலவற்றை அப்படிப் பயன் படுத்த முடியாது.சிகரெட் என்பது பிஸ்கட்,சாக்லெட்டைப் போலக் கடை வாசலிலேயே நுகரக்கூடிய ஒன்று.அப்படி நுகர்வது பொதுச் சூழலுக்கும் சிகரெட் பிடிக்காத வர்களுக்கும் எதிரான செயல் என்பதில் ஐயமில்லை.இதைத்தடுக்க வேண்டும் என்ற அக்கறையோடு அரசு இந்தத் தடையைக் கொண்டு வந்திருக்கிறது என்றால் அது செய்ய வேண்டிய காரியங்கள்,தடையைக் கறாராக அமல் படுத்துதல்,ஒவ்வொரு தெருவிலும் புகை பிடிக்க இடம் ஒதுக்குதல் ஆகியவைதான்.

    சாலைகளில் செல்பவர்கள் அவசரத்துக்குச் சிறுநீர் கழிக்கக்கூட ஏற்பாடு செய்ய இயலாத நிர்வாகத்திடம் புதிதாக எந்த வசதியையும் எதிர்பார்க்க முடியாது.தன் மக்கள் புகை பிடிப்பது குறித்து அவர்கள் உடல் நலம் சார்ந்த அக்கறை அரசுக்கு இருக்கும் என்றால்,சிகரெட் மூலம் வரும் கோடிக் கணக்கான வருமானத்தை இழக்க அது தயாராக இருக்க வேண்டும்.கள்ளச் சந்தையில் சிகரெட் விற்பனை நடப்பதைத் தடுக்கும் திறமை வேண்டும்.

    இவற்றில் எதுவுமே சாத்தியமில்லை என்பதால்,சாத்தியமான ஒரே விஷயத்தைச் செய்யலாம்--

    அந்த அறிவிப்புப் பலகைகளை எடுத்துவிடலாம்!

    நன்றி:நம்ம chennai

    http://tamilfashionshow.blogspot.com




  • http://tamilfashionshow.blogspot.com


  • [Continue reading...]

    அரசியல் மங்காத்��ாவில் உயிர்த்தெ���ுகிறதா திமுக? - அ��ால்ட்டு ஆறுமுகத���தின் அதிரடி அலச��்.

    - 0 comments




    கட்சி ஆரம்பித்த பிறகு இப்படியொரு தோல்வியை சந்தித்ததில்லை என்ற அளவு சென்ற சட்டமன்ற தேர்தலில் மரணஅடி வாங்கிய திமுக இப்போது கொஞ்சம் ஐ.சி.யூ.விலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படும் வகையில்; சமச்சீர் கல்வி பற்றிய உச்ச நீதிமன்ற தீர்ப்பால் தெம்பாகியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் பரபரக்கின்றன.

    "இது யாருக்கும் வெற்றி தோல்வி அல்ல" என்று கலைஞர் சொல்லிக்கொண்டாலும், உச்சநீதிமன்ற தீர்ப்பு திமுகவின் வெற்றி என்று நிரூபிக்கும் முயற்சியில், திமுக தொண்டர்கள் இறங்கியதை மறுக்க முடியாது. பட்டாசு வெடித்து, லட்டு கொடுத்து, சமச்சீர் கல்வி தீர்ப்புக்கு "கறுப்பு வெள்ளை சாயம்" பூசும் முயற்சி தமிழகமெங்கும் நடந்தது.

    கலைஞர் டிவியும் பொதுமக்கள் உற்சாகம், தமிழகமெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் என்று செய்திகளில் "கொண்டாடி" உற்சாகமானது.

    பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்த திமுகவுக்கு, செயற்கை சுவாசமளித்த புண்ணியம் ஜெயலலிதாவுக்கே.

    சமச்சீர் கல்வி விவகாரத்தை தவிர்த்து விட்டு, திமுக எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஸ்டாலினின் நடவடிக்கைகளை வைத்தே அளந்து விடலாம்.

    தேர்தலின் போது ஊர் ஊராக சென்று, சென்று பிரச்சாரம் செய்த ஸ்டாலினுக்கு அந்த களைப்பு தீரும் முன் அடுத்த தொடர்பயணம் செல்ல வேண்டிய சூழல்.

    கோவை சென்று வீரபாண்டி ஆறுமுகம், ப.ரங்கநாதன் மற்றும் ஜெ.அன்பழகன் ஆகியோரை பார்த்து விட்டு, பாளையங்கோட்டை வழியாக, தற்போது திருச்சியில் அவரின் முதல் கட்ட "ஊர் சுற்றலாம் வாங்க" நிகழ்ச்சி முடிவடைந்திருக்கிறது.

    அடுத்தாக திஹார் செல்லக்கூடும். அவரின் இரண்டாம் கட்ட பயணத்தை ஜெயலலிதா தான் முடிவு செய்ய வேண்டும். (அடுத்த கைது யார் என்பதை அவர் தானே முடிவு செய்ய வேண்டும்)
    அண்மைச்செய்திகளின் படி, அடுத்ததாக தூத்துக்குடி செல்ல நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்டாலினின் இந்த தொடர் ஓட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது அண்ணன் அழகிரி தான். அவர் வீரபாண்டி ஆறுமுகத்தை பார்த்து, சிறையில் பார்த்து விட்டு வந்த பின்னர் தான், ஸ்டாலினும் கியர் மாற்றி கிளம்ப தயாரானார் என்பது ஊரறிந்த பெரிய குடும்பத்து ரகசியம்.

    இக்கட்டான இந்த சூழ்நிலையில், திமுகவுக்கு கொஞ்சம் உதவிய சமச்சீர் ஆயுதமும் உச்சநீதி மன்ற தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்து விட்டது.

    திமுக-வின் ஒரே பிரம்மாஸ்திரமாக இருந்த சமச்சீர் கல்வி என்னும் ஆயுதம் இப்போது காலாவதியாகி விட்டது என்பது தான் உண்மை.

    திமுக-வின் அடுத்த போராட்டம் என்பது சிறை நிரப்பும் போராட்டம் தான். அதனை கிட்டத்தட்ட ஜெயலலிதாவே தற்போது நடத்திக்கொண்டிருக்கிறார்.

    கட்சியினர் மீதான அடக்குமுறைக்கு எதிராக போராடுகிறோம் என்று கிளம்பினால், நிச்சயம் அதற்கு மக்கள் ஆதரவு கிடைக்காது என்பது தான் எதார்த்தம்.

     "ஆட்சியில் இருக்கும் போது பதவி சுகத்தை அனுபவித்தார்கள், இப்போது சிறைச்சாலை சோகத்தை அனுபவிக்கட்டுமே.... வினை விதைத்தவர்கள்; வினையை அறுக்கிறார்கள்... இதில் பரிதாபப்பட இருக்கிறது" என்ற மனநிலையில் தான் மக்கள் இருக்கிறார்கள்.

    மக்கள் பிரச்சனைக்காக போராடலாம் என்றால், தற்போது மக்களுடைய பிரச்சனைகளாக இருக்கும் விலைவாசி உயர்வு, ஊழல், இலங்கை பிரச்சனை, மீனவர் பிரச்சனை என்ற எதற்கும் திமுக முன் நிற்க முடியாது. இந்த பிரச்சனைகளின் காரணமாகத்தான் திமுகவுக்கு ஓய்வு கொடுத்து, முக்காடு போட்டனர் மக்கள்.

    ஆட்சியில் இல்லாதபோது கட்சியை நடத்தி செல்வது என்பது தான், ஒரு தலைவனுக்கு சவாலான விஷயம். ஆட்சியில் இருந்தால் கூட அதிருப்தி ஆட்களுக்கு, வாரியத்தலைவர் பதவியாவது கொடுத்து, வாரியணைத்து போகலாம். இப்போது என்ன செய்ய முடியும்?

    மொத்ததில் அரசியல் மங்காத்தாவில், இனி திமுகவின் அடுத்த கட்டம் என்பது ஜெயலலிதா செய்யப்போகும், தவறான ஆட்டத்தை மட்டுமே நம்பியிருக்கிறது.

    அரசியல் வித்தகர், நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கையை, பல்வேறு விதமான பிரச்சனைகளை தாண்டி வந்தவர் என்ற பின்புலங்களை கொண்ட கலைஞர், தற்போது ஜெயலிலிதாவின் அடுத்த தவறுக்காக காத்திருந்து தான் அரசியல நடத்த வேண்டும் என்ற நிலையில் இருப்பது அந்த மூத்த அரசியல்வாதிக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டமே.

    அம்மா, சும்மா இருப்பாரா இல்லை அய்யாவுக்கு வாய்ப்பு கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    அன்புடன்
    அசால்ட்டு ஆறுமுகம் (அரசியல் பிரிவு)
    படங்கள் :விகடன் 



    http://snipgallery.blogspot.com




  • http://snipgallery.blogspot.com


  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger