Friday 30 May 2014

மிக எளிமையான கேள்வி

- 0 comments

உங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...?

 

மிக எளிமையான கேள்வி தான்

IAS தேர்வில் கேட்கப்பட்டது...!

 

ஒருவர் ஒரு கடைக்கு வருகிறார், கடை காரரிடம் 200 ரூபாய் மதிப்புள்ள பொருளை வாங்கி கொண்டு 1000 ரூபாய் நோட்டை தருகிறார்.

கடை காரர் 1000 ரூபாய் நோட்டை வாங்கி கொண்டு சில்லறை இல்லாத காரணத்தினால் பக்கத்து கடைக்கு சென்று 1000 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை வாங்குகிறார் கடைகாரர்.

 

திரும்ப கடைக்கு வந்து 200 ரூபாயை கல்லாவில் வைத்து கொண்டு மீதி 800 ரூபாயை பொருள் வாங்கியவரிடம் கொடுத்துவிட்டார்.

 

சிறிது நேரம் கழித்து பக்கத்து கடை காரர் வந்து இந்த 1000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டு என்று சொல்லி குடுத்து விட்டு 1000 ரூபாய் வாங்கி செல்கிறார்.

இப்போ இந்த கடை காரருக்கு எவ்வளவு நஷ்டம் ?

 

[Continue reading...]

சேவாக்கின் அதிரடி சதத்தால் பஞ்சாப் அணி 226 ரன் குவிப்பு Punjap scoring 226 run with Sehwag century

- 0 comments

சேவாக்கின் அதிரடி சதத்தால் பஞ்சாப் அணி 226 ரன் குவிப்பு Punjap scoring 226 run with Sehwag century

மும்பை, மே 30-

மும்பையில் நடைபெற்று வரும் இரண்டாவது தகுதி வெளியேற்ற சுற்றில் பஞ்சாப்-சென்னை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு துவக்க வீரர் வீரேந்தர் சேவாக் அதிரடியாக ஆடினார். மறுமுனையில் வோராவும் சென்னை பந்துவீச்சை அடித்து நொறுக்க, அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்த ஜோடி 110 ரன் எடுத்தபோது, வோரா 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வெல் 13 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

அதேசமயம் அதிரடியை தொடர்ந்த சேவாக், ஐ.பி.எல். போட்டியில் தனது இரண்டாவது சதத்தை நிறைவு செய்தார். 50 பந்துகளில் 10 பவுண்டரி, 6 சிக்சருடன் இந்த இலக்கை அவர் எட்டினார். இதேபோல் இந்திய வீரர்களில் முரளி விஜயும் இரண்டு சதம் அடித்துள்ளார்.

3-வது விக்கெட்டுக்கு சேவாக்குடன் இணைந்த மில்லரும் சென்னை பந்துவீச்சாளர்களை திணறடித்தார். அணியின் ஸ்கோர் 211 ஆக இருந்தபோது சேவாக், நெஹ்ரா ஓவரில் விக்கெட்டை இழந்தார். அவர் 58 பந்துகளில் 12 பவுண்டரி, 8 சிக்சருடன் 122 ரன்கள் விளாசினார். அடுத்து களமிறங்கிய பெய்லியை ஒரு ரன்னில் வெளியேற்றினார் நெஹ்ரா. 38 ரன்கள் குவித்த மில்லர், துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். கடைசி பந்தில் விர்திமான் சகா (6) ஆட்டமிழந்தார்.

இதனால், 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. இதையடுத்து 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்குகிறது.
...

[Continue reading...]

Thursday 29 May 2014

ஆந்திர சிறுமி பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு Andhra girl molested case judgement today

- 0 comments

ஆந்திர சிறுமி பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு Andhra girl molested case judgement today

 

திருச்சி, மே.29–

ஆந்திர மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் மலர்(வயது 15 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை கூறி கடந்த ஆண்டு மே மாதம் சேலத்துக்கு ஒரு கும்பல் அழைத்து வந்தது. பின்னர் திருச்சியில் உள்ள ஒரு வீட்டிற்கு மலரை கடத்தி வந்து அடைத்து வைத்த போது அந்த கும்பலிடம் இருந்து தப்பிய மலர் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமி மலரை கடத்தியது விபசாரக்கும்பல் தலைவி ஆஷா (25), சக்திவேல் (38), பிரபு (31), வங்கதேசத்தை சேர்ந்த முகமது சபியுல்லா (30) மற்றும் துறையூர் அ.தி.மு.க. ஒன்றிய குழு முன்னாள் தலைவர் பொன்.காமராஜ் (42), தர்மா (30), காவியா (45), டிரைவர் சிவா ஆகியோர் என்று தெரிய வந்தது. இதை தொடர்ந்து 8 பேர் மீதும் சிறுமியை கடத்தி வந்து பலாத்காரம் செய்ததாகவும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றதாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை திருச்சி 2–வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இது வரை இந்த வழக்கில் 38 பேரிடம் சாட்சிகள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணைகள் முடிந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரிடம் நீதிபதி ரகுமான் சாட்சிகளின் அடிப்படையில் கடந்த 19–ந் தேதி விசாரணை நடத்தினார்.

அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில் இன்று மாலை இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரும் இன்று திருச்சி கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். இதையொட்டி கோர்ட் வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோர்ட் வளாகத்தில் இன்று காலை முதலே பரபரப்பு நிலவியது.

...

http://oruwebs.blogspot.com

 

[Continue reading...]

மெட்ராசுக்குப் பிறகு கொம்பனாக வரும் கார்த்தி madras next karthi act komban movie

- 0 comments

மெட்ராசுக்குப் பிறகு கொம்பனாக வரும் கார்த்தி madras next karthi act komban movie

 

மெட்ராசுக்குப் பிறகு கொம்பனாக வரும் கார்த்தி madras next karthi act komban movie

Error! Filename not specified.

பிரியாணி படத்திற்குப் பிறகு 'மெட்ராஸ்' படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. 'அட்டகத்தி' ரஞ்சித் இயக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கேத்ரீன் தெரேசா நடிக்கிறார்.

வட சென்னையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. தற்போது இப்படம் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளது. இதற்கிடையில் அடுத்தப் படத்திற்கான வேலையை விறுவிறுப்பாக தொடங்க உள்ளார் கார்த்தி.

குட்டிப்புலி படத்தை இயக்கிய எம்.முத்தையா இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கிறார். இப்படத்திற்கு 'கொம்பன்' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குட்டிப்புலி படத்தில் ஹீரோயினாக நடித்த லட்சுமி மேனன், இப்படத்திலும் ஹீரோயினாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. விரைவில் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

...

 

[Continue reading...]

பிரதமர் மோடியின் மனைவிக்கு 7 நாட்கள், 24 மணி நேர பாதுகாப்பு Prime Minister Narendra Modis wife Jashoda Modi gets 24x7 security cover

- 0 comments

பிரதமர் மோடியின் மனைவிக்கு 7 நாட்கள், 24 மணி நேர பாதுகாப்பு Prime Minister Narendra Modis wife Jashoda Modi gets 24x7 security cover

 

பிரதமர் மோடியின் மனைவிக்கு 7 நாட்கள், 24 மணி நேர பாதுகாப்பு Prime Minister Narendra Modis wife Jashoda Modi gets 24x7 security cover

 

அகமதாபாத், மே 30-

நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது மனைவி பெயர் ஜசோதா பென் என தெரிவித்திருந்தார். முதன்முறையாக தனது மனைவி பெயரை மோடி வெளிப்படையாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவு வெளியானவுடன் மோடியின் மனைவிக்கு 7 நாட்கள், 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவருக்கு சாதாரண உடையில் துப்பாக்கி ஏந்திய நான்கு போலீசார் பாதுகாப்பு அளிப்பார்கள் என்றும், அவரது வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் ஏதாவது உள்ளதா என எந்நேரமும் வாகனம் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை துணை கண்காணிப்பாளரான திரிவேதி தெரிவித்துள்ளார். அவருடன் எப்போதும் ஒரு காவலர் உடன் இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ஆசிரியரான ஜசோதா தனது மூத்த சகோதரரான அசோக் மோடியுடன் உஞ்ஜாவில் சேர்ந்த ராம்ஜி மந்திருக்கு எதிரில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார்.

...


View article...

[Continue reading...]

சர்வதேச விண்வெளி மையத்தை நோக்கி ராக்கெட்டில் பறந்து சென்ற மூவர் Three of the men who flew a rocket to the International Space Station

- 0 comments

சர்வதேச விண்வெளி மையத்தை நோக்கி ராக்கெட்டில் பறந்து சென்ற மூவர் Three of the men who flew a rocket to the International Space Station

 

சர்வதேச விண்வெளி மையத்தை நோக்கி ராக்கெட்டில் பறந்து சென்ற மூவர் Three of the men who flew a rocket to the International Space Station

 

மாஸ்கோ, மே 29-

ரஷ்யாவில் உள்ள கசகஸ்தானிலிருந்து சர்வதேச விண்வெளி மையத்தை நோக்கி ரஷ்யா ஏவிய ராக்கெட் பறந்து சென்றது. இந்த ராக்கெட்டில் பயணம் செய்யும் மூவர் சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு நடத்த உள்ளனர்.

சோயஸ் பூஸ்டர் என்ற அந்த ராக்கெட் வியாழன் அதிகாலை 1:57 மணிக்கு தனது பயணத்தை துவக்கியது. கும்மிருட்டாக காணப்பட்ட மத்திய ஆசிய பகுதியின் மேல் அந்த ராக்கெட் பறந்து சென்றது. நாசாவை சேர்ந்த ரீட் ஒய்ஸ்மென், ரஷியாவை சேர்ந்த மேக்ஸ் சுராயேவ் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் க்ரெஸ்ட் ஆகியோர் இந்த ராக்கெட்டில் பயணம் செய்தவர்கள் ஆவார்கள்.

இன்னும் ஆறு மணி நேரத்தில் இந்த ராக்கெட் தனது சுற்றுப்பாதை மையத்தை அடைந்து அங்கேயே ஆறு மாதங்கள் தங்கியிருந்து ஆய்வு செய்யும். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் முதல் அங்கு ஆய்வில் ஈடுபட்டு வரும் இரு ரஷ்யர்கள் மற்றும் ஒரு அமெரிக்கருடன் இந்த ராக்கெட்டில் செல்லும் மூவரும் இணைந்துகொள்வார்கள்.

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டாலும் இரு நாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்து செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

...


View article...

[Continue reading...]

Monday 26 May 2014

மோடியின் அமைச்சரவையில் 25 சதவிகித இடம் பெண்களுக்கு ஒதுக்கீடு Modi cabinet, the location of the 25 percent quota for women

- 0 comments

http://oruwebs.blogspot.in

 

Feed: Tamil News
Posted on: Tuesday, May 27, 2014 11:41 AM
Author: Tamil News
Subject:
மோடியின் அமைச்சரவையில் 25 சதவிகித இடம் பெண்களுக்கு ஒதுக்கீடு Modi cabinet, the location of the 25 percent quota for women

 

மோடியின் அமைச்சரவையில் 25 சதவிகித இடம் பெண்களுக்கு ஒதுக்கீடு Modi cabinet, the location of the 25 percent quota for women

 

புதுடெல்லி, மே 27-

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் 11 சதவிகிதம் மட்டுமே பெண்கள் இடம்பிடித்துள்ள போதிலும் தனது அமைச்சரவையில் அவர்களுக்கு 25 சதவிகித இடத்தை அள்ளி வழங்கியிருக்கிறார் நரேந்திர மோடி.

மோடியின் அமைச்சரவையில் சுஷ்மா ஸ்வராஜ், மேனகா காந்தி, நஜ்மா ஹெப்துல்லா, ஹர்சிம்ரத் கவுர் பாதல், உமா பாரதி மற்றும் ஸ்மிரிதி இரானி ஆகிய பெண் கேபினட் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு மிகவும் வலுவான துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் தனிப்பொறுப்புள்ள இணை அமைச்சர் பட்டியலில் நிர்மலா சீதாராமனுக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது.

அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடு தொடர்பாக இது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத போதும் சுஷ்மாவுக்கு வெளியுறவுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்திராகாந்திக்கு பிறகு பாதுகாப்பு சம்பந்தமான இந்த முக்கியமான துறை சுஷ்மாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உமா பாரதி தன்னுடைய டுவிட்டரில் நீர்வளத்துறை தனக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

...

 

[Continue reading...]

Tuesday 20 May 2014

நெல்லை அருகே பழ வியாபாரி வெட்டிக்கொலை Tirunelveli near one man murder

- 0 comments

 

 

Feed: Tamil News
Posted on: Tuesday, May 20, 2014 8:55 PM
Author: Tamil News
Subject:
நெல்லை அருகே பழ வியாபாரி வெட்டிக்கொலை Tirunelveli near one man murder

 

Img நெல்லை அருகே பழ வியாபாரி வெட்டிக்கொலை Tirunelveli near one man murder

நெல்லை, மே. 20–

நெல்லையை அடுத்த கங்கைகொண்டானை சேர்ந்தவர் பூல்பாண்டியன் (வயது35). பழ வியாபாரியான இவர் இன்று மதியம் தனது தாய் பத்மாவுடன் வீட்டின் அருகே நின்று பேசி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு ஒரு கார் மின்னல் வேகத்தில் வந்து நின்றது. திடீரென அந்த காரில் இருந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல் பூல்பாண்டியனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அதிர்ச்சியடைந்த பத்மா, மகன் மர்மக்கும்பலால் வெட்டப்படுவதை தடுக்க முயன்றார். ஆனால் அந்த கும்பல் பத்மாவையும் சரமாரியாக வெட்டி விட்டு காரில் தப்பி விட்டனர்.

கை, கால், தலையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தாய்மகன் இருவரையும் அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் பூல்பாண்டியன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

பத்மாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் கங்கைகொண்டான் பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கடந்த வருடம் நெல்லை சந்திப்பில் மாரிசெல்வம் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பூல்பாண்டியன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூல்பாண்டியன் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

எனவே மாரிசெல்வம் கொலைக்கு பழிக்குப்பழியாக பூல்பாண்டியன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

...

 

[Continue reading...]

Saturday 3 May 2014

சிவாஜி குடும்பத்திற்காக பணம் வாங்காமல் இசை நிகழ்ச்சி நடத்தினேன்: ஏ.ஆர்.ரகுமான் வாக்குமூலம்

- 0 comments



தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா மீது பெங்களூர் கோர்ட்டில் சொத்து குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கின் ஒரு பகுதி பிரமாண்டமாக நடத்தப்பட்ட ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணம் சேர்க்கப்பட்டுள்ளது. திருமணத்தின் செலவு கணக்குகள் சொத்து குவிப்பு வழக்கின் கீழ் வருகிறது. இந்த திருமண நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தினார். அந்த நிகழ்ச்சிக்கு அவர் எவ்வளவு சன்மானம் பெற்றார் என்பது நீதிமன்றத்தின் கேள்வி.

இதுபற்றி ஏ.ஆர்.ரகுமான் அளித்த எழுத்துபூர்வமான வாக்குமூலத்தை வழக்கறிஞர் பவானி சிங் வாசித்தார் "சுதாகரனின் மனைவி நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்தைச் சேர்ந்தவர். தமிழ் திரையுலகின் மிக மூத்த கலைஞரின் குடும்ப விழா என்பதால் பணம் வாங்காமல் இசை நிகழ்ச்சி நடத்திக் கொடுத்தேன். இதற்காக ஜெயலலிதா வீட்டிலிருந்து வெள்ளி தாம்பூலம், வெள்ளிக் கிண்ணம், குங்கும சிமிழ் உள்ளிட்ட சில வெள்ளிப் பொருட்களை எனக்கு பரிசாக வழங்கினர்"
இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் வாக்குமூலம் அளித்திருப்பதாக நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது.
[Continue reading...]

அப்பா மாதிரி வேண்டாம், சூர்யா மாதிரி நடிகராக வேண்டும்!! -அதர்வா

- 0 comments


தனுஷ், 'ராஞ்சனா' படம் மூலம் இந்திக்கு சென்று விட்டார். அதனால் தமிழில் அவர் இடத்தை நான் பிடிப்பேன் என்று ஒரு மேடையில் தனுஷை வைத்துக்கொண்டே சொன்னார் சிவகார்த்திகேயன். ஆனால் அதற்கு பதில் கொடுத்த தனுஷ், தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை எனது இடத்தை நான் யாருக்கும் விட்டுத்தர மாட்டேன். இன்னும் 12 வருடங்கள் நான் தமிழ் படங்களில்தான் நடிப்பேன். அதன்பிறகுதான் மற்ற மொழிகளுக்கு செல்வேன். அதன்பிறகு வேண்டுமானால் யார் வேண்டுமானாலும் என் இடத்தை பிடித்துக்கொள்ளட்டும் என்றார்.

இந்த விசயத்தில் அதர்வாவும் சிவகார்த்திகேயனை ஒத்துப்போகிறார். பரதேசிக்குப்பிறகு ஒரு முக்கிய நடிகராக களத்தில் நிற்கும் அவரது கையில் தற்போது இரும்புக்குதிரை, ஈட்டி, கணிதன் போன்ற படங்கள் உள்ளன. இந்த படங்களுக்குப்பிறகு கோலிவுட்டில் தனக்கென ஒரு வியாபார வட்டம உருவாகும் என்று எதிர்பார்க்கும் அதர்வா, இப்படங்களில் கடினமான உழைப்பைக் கொடுத்துள்ளாராம்.

அவரது மெனக்கெடலைப்பார்த்து சிலர், சினிமாவில் உங்கள் அப்பா முரளி விட்டுச்சென்ற இடத்தை பிடிக்க முயற்சிக்கிறீர்களா? என்று அவரிடம் கேட்டதற்கு, என் அப்பா பாணி எனக்கு வேண்டாம். நான் சூர்யா மாதிரி ஒரு நடிகராக வளரவே ஆசைப்படுகிறேன். அதனால்தான் படத்துக்குப்படம் எனது உழைப்பை அதிகப்படுத்திக்கொண்டே வருகிறேன். அதற்கான பலன் தற்போது நடித்து வரும படங்கள் திரைக்கு வரும்போது எனக்கு கிடைத்து விடும் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறாராம் அதர்வா.
[Continue reading...]

தனுஷின் அனேகனை காப்பியடித்த அஞ்சான் லிங்குசாமி!

- 0 comments



ங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் அஞ்சான். இப்படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். பெரும்பகுதி படப்பிடிப்பு மும்பையில் நடத்தப்பட்டு சமீபத்தில் பாடல்களுக்காக வெளிநாடுகளுக்கும் சென்று திரும்பி விட்டனர். படத்தை ஆகஸ்ட் 15-ல் வெளியிடும் முயற்சிகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், மே 1-ந்தேதி உழைப்பாளர் தினத்தன்று அஞ்சான் படத்தின் பர்ஸ்ட் லுக், டைட்டில் லோகா ஆகியவற்றை வெளியிடுவதாக முன்பே அறிவித்திருந்த லிங்குசாமி, ஒருநாள் முன்னதாகவே அவற்றை வெளியிட்டார். இதை சூர்யாவின் ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அதேசமயம், அப்படி அவர் வெளியிட்ட அஞ்சான் என்ற டைட்டில் லோகோ பெருவாரியான ரசிகர்களை குழப்பியது.

காரணம், சில மாதங்களுக்கு முன்பே கே.வி.ஆனந்த் வெளியிட்ட அனேகன் படத்தின் டைட்டில் லோகோவை போன்றே அஞ்சான் டைட்டிலும் இருந்ததுதான். இதையடுத்து, சூர்யாவின் அபிமானத்திற்குரிய ரசிகர்கள் இதை அவரது கவனத்துககு கொண்டு சென்றிருக்கிறார்களாம். அதனால், அஞ்சான் லோகோ விரைவில் மாற்றியமைக்கப்பட்டு வெளியாகும் என்று தெரிகிறது.

ஆக, இது தற்செயலாக நிகழ்ந்ததா? இல்லை அதே பாணியில் வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டு வெளியிடப்பட்டதா? என்பது லிங்குசாமி வாய்திறக்கும் போதுதான் தெரியவரும்.
[Continue reading...]

ஜாலி பையன் சிம்புவை காலி பண்ணிய காதல் தோல்விகள்!

- 0 comments
வல்லவன் படத்தில் நடித்தபோது பொசுக்கென்று நயன்தாராவிடம் காதல் வயப்பட்டார் சிம்பு. ஆனால், அதை சாதகமாக்கிக்கொண்டு உதட்டு முத்தம் கொடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு நயன்தாராவின் உதட்டை கடித்து புண்ணாக்கினார். அதனால், பயந்து போன நயன்தாரா, இது சரிப்பட்டு வராது வாழ்க்கை முழுவதும் புண்ணான உடம்போடு வாழ முடியாது என்று நினைத்தாரோ என்னவோ, சில மாதங்களிலேயே சிம்புவுடனான காதலை ப்ரேக் அப் செய்து கொண்டார்.

அதேபோல்தான், வாலு படத்தில் நடித்தபோதும் சிம்பு-ஹன்சிகாவுக்கிடையே மலர்ந்த காதலும் சில மாதங்களிலேயே ப்ரேக்அப் ஆனது. ஆக, இப்போது தேவதாஸ் போன்று தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான காதல் அனுபவங்களை நண்பர்களிடம் சொல்லி புலம்பிக்கொண்டு திரிகிறார் சிம்பு. அதோடு, தனது மனதை ஆன்மீகத்திலும் திருப்பி விட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, யோகா, தியானம் என்றெல்லாம் தினமும் இறங்கி விடுகிறாராம். அதனால், ஜாலி பையனாக இருந்த சிம்புவை இப்படி காலி பண்ணி விட்டார்களே இந்த நடிகைகள் என்று அவரது நெருக்கமான நண்பர்கள் மேற்படி நடிகைகளை வசைபாடுகின்றனர். அதோடு சிம்புவை கல்யாணம் செய்து கொள்ளுமாறும் அட்வைஸ் செய்கிறார்கள்.

அதற்கு, இரண்டு முறை காதலில் விழுந்த மனசு கலங்கிப்போயிருக்கிறது. அதை தெளிவுபடுத்தத்தான் ஆன்மீகத்தில் இறங்கியிருக்கிறேன். எனது மனது சுத்தமானதும் ஒரு நல்ல பெண்ணை பார்த்து திருமணம செய்து கொள்வேன். ஆனால் அதற்கு கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் என்று சொல்லும் சிம்பு, காதல் என்னோட வாழ்க்கையில் தோல்வியாக இருந்தாலும், என்னை நிறைய யோசிக்க வைத்திருக்கிறது. அதனால்தான் இதுவரைக்கும விளையாட்டு பிள்ளையாக இருந்த நான் இப்போது கொஞ்சம் விவரமான பையனா மாறிக்கிட்டே வர்றேன் என்கிறாராம்.

Tags »
[Continue reading...]

மீடியாக்களைக்கண்டு ஓட்டம் பிடிக்கும் நயன்தாரா!

- 0 comments


ஐயா படத்தில் தமிழுக்கு வந்த நயன்தாரா, அந்த சமயங்களில் மீடியாக்களை தேடித்தேடிச்சென்று பேட்டி கொடுப்பார். தான் படித்த காலங்களில் நடந்த சுவையான விசயங்களைகூட சொல்வார். அப்போது தனக்கு காதல் கடிதம் கொடுத்தவர்களை தான் கன்னத்தில் அறைந்ததையும் கதைகதையாய் சொல்லி வியக்க வைத்தார்.

ஆனால், அப்படிப்பட்ட நயன்தாரா இப்போதெல்லாம் மீடியாக்களைக்கண்டாலே ஜென்ம எதிரிகளைப்போல் பார்க்கிறார். காரணம், சிம்புவின் காதல் விவகாரத்தை விட பிரபுதேவாவை இவர் காதலித்தபோது அவரது இமேஜை கெடுக்கும் வகையில் மீடியாக்கள் செய்தி வெளியிட்டு விட்டார்களாம. குறிப்பாக, திருமணத்துக்கு முன்பே பிரபுதேவாவை சந்திக்க மும்பைக்கு செல்லும் நயன்தாரா, அங்கு அவருடன் ஹோட்டல்களில் பல நாட்கள் ஒன்றாக தங்கி விட்டு திரும்புகிறார் என்று வெளியான செய்தி அவரை ரொம்பவே புண்படுத்தி விட்டதாம்.

அதிலிருந்துதான் இனிமேல் மீடியாக்களை தான் சந்திக்கப்போவதில்லை என்று உறுதிமொழி எடுத்துக்கெண்ட நயன்தாரா, இப்போதுகூட தான் நடிக்கும் படங்களின் ஆடியோ நிகழ்ச்சிகளுக்கு போனால் மீடியாக்களை சந்திக்க வேண்டியதிருக்கும். அப்போது ஏடாகூடமாக எதையாவது கேட்பார்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டியதிருக்கும் என்றுதான் ஓடி ஒழிக்கிறாராம்.

இதுபற்றி தனது நட்பு நடிகர்களிடம் சொல்லும் நயன்தாரா, அஜீத் பாணியில் எந்த சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை என்று இருப்பது எவ்வளவோ மேல். நிம்மதியாக இருக்கலாம் என்கிறாராம்.
[Continue reading...]

Friday 2 May 2014

திருமணத்தை மறைத்ததால் தெலுங்கு படத்திலிருந்து அமலாபால் நீக்கம்!

- 0 comments

நடிகை அமலாபால் விரைவில் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இதனால் தான் நடிக்க ஒப்புக் கொண்டிருந்த சமுத்திரக்கனியின் படத்திலிருந்து விலகி விட்டார். அதோடு புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளப்போவதில்லை என்றும் அறிவித்துவிட்டார். இந்த நிலையில் திருமணத்தை மறைத்து தங்கள் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்று குற்றம் சாட்டி வாஸ்தா நீ வேணுகா என்ற தெலுங்குப் படத்திலிருந்தும் அமலா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளர்.

இதுகுறித்து படத் தயாரிப்பு நிறுவனம் கூறியிருப்பதாவது: இந்தப் படம் காதலை மையமாக கொண்டது. அமலா திருமணம் செய்து கொண்டு நடித்தால் அது படத்தை பாதிக்கும், படம் வியாபாரமாகது. திருமணத்தை இப்போது வெளிப்படையாக அறிவித்திருந்தாலும் முன்னரே முடிவு செய்துதான் வைத்திருந்துள்ளார். அதனை மறைத்து நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இதனால் படத்தின் இயக்குனர் ரமேஷ் வர்மா மிகுந்து கவலை கொண்டுள்ளார். முதல் கட்டமாக வெளிநாட்டில் பாடல் காட்சி எடுக்க திட்டமிட்டிருந்தோம். இப்போது அதனை கேன்சல் செய்து விட்டோம். படத்துக்காக வாங்கிய அட்வான்சை திருப்பி கேட்டிருக்கிறோம் என்கிறார்கள்.

இதுகுறித்து அமலா பால் கூறியிருப்பதாவது: இந்த நிறுவனம் என்னை முதலில் தொடர்புக் கொண்ட போது மார்ச் முதல் மே மாதம் வரை உள்ள கால கட்டத்தில் 45 நாட்கள் ஒதுக்க வேண்டும் என்று கூற, நானும் அதற்கு உட்பட்டு அதற்கு அத்தாட்சியாக ஒரு பத்திரத்திலும் நாங்கள் பரஸ்பரம் கை எழுத்திட்டுக் கொண்டோம் .படப்பிடிப்புக்கான நாட்கள் நெருங்கி வரும் சூழ்நிலையில் அவர்களை தொடர்பு கொள்ள பல்வேறு முறைகளில் முயற்சி செய்தேன் .தொடர்பில் வந்தாலும் திருப்திகரமான பதில் வரவில்லை .வெளி நாட்டில் படமாக்க போகிறோம் என்று கூறிக் கொள்ளும் அந்த பட நிறுவனத்தினர் அந்த முயற்சியை மேற்கொள்ளவில்லை .
இந்த நிலையில் என்னுடைய திருமணத்தை பற்றி முன்னரே அவர்களுக்கு தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு என்னை காயப்படுத்துகிறது.

நான் அவர்களுக்கு கொடுத்தது மார்ச் முதல் மே வரை குறிப்பிட்ட கால கட்டத்துக்குள் 45 நாட்கள் மட்டுமே . இதில் ஜூன் மாதம் நடைபெற வேண்டிய திருமணத்தை பற்றி அவர்களுக்கு கூற வேண்டிய அவசியம் என்ன ? கூறப்பட்ட காலத்துக்குள் படப்பிடிப்பு நடத்த முடியாமல் இருப்பதற்கு பல்வேறு உண்மையான காரணங்கள் இருக்க, என் திருமணத்தை சுட்டி காட்டி அவர்கள் புழுதி இறைப்பது அநாகரீகமானது .திருமண பந்தம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் நடக்க வேண்டிய ஒரு அரிய நிகழ்ச்சி ஆகும், எனக்கும் அப்படி தான் . தங்களது தவறுகளை மறைக்க என் மீதும் என் திருமண சடங்கின் மீதும் குற்றஞ்சாட்டுவது மிகவும் வருத்தத்துக்குரியது . நான் இதுவரை எந்த தயாரிப்பாளருக்கோ , இயக்குனருக்கோ இடையூறாக இருந்ததே இல்லை, இருக்கவும் மாட்டேன் , இந்த விளக்க உரை கூட யாரையும் குற்றம் சாட்டவோ, குறை கூறவோ இல்லை . என்னை அறிந்தவர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் உண்மை நிலை கூறுவதுதான் .

இவ்வாறு அமலாபால் கூறியுள்ளார்.
[Continue reading...]

மும்பை இளைஞருடன் காதல்? இல்லை என்கிறார் தமன்னா!

- 0 comments

தன்னை அடிக்கடி சந்திக்கவரும், மும்பை இளைஞர்ஒருவருடன், தமன்னா, காதல் வயப்பட்டிருப்பதாகவும்,அதன் காரணமாக, இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு, ஜாலி டூர் சென்று வருவதாகவும், பரபரப்பு செய்திகள்பரவியுள்ளன. ஆனால் இந்த செய்தியை மறுத்துள்ளார் தமன்னா. எனக்கு, நண்பர்கள் இருப்பது உண்மை தான். ஆனால், யார் மீதும் எனக்கு காதல் இல்லை. அதற்குபோதிய நேரம் இல்லை என்றுகூட சொல்லாம் என்கிறார். மேலும், திருமணத்திற்கான நேரம் இன்னும் வரவில்லை. வரும்போது, நீங்கள் முடிவுசெய்யும்
மாப்பிள்ளையை, திருமணம் செய்து கொள்கிறேன் என, பெற்றோரிடம் கூறி விட்டேன் என்கிறார்.
[Continue reading...]

நயன்தாரா நடிக்க தடைதெலுங்கு திரையுலகம் அதிரடி

- 0 comments


மரத்தை சுற்றி, டூயட் பாடிக் கொண்டிருந்த நயன்தாராவை, ஆக் ஷன் ஹீரோயினாகவும்,
ஆன்மிக ஹீரோயினாகவும் மாற்றிய பெருமை, தெலுங்கு பட உலகிற்கு சேரும். ஆனால், அனாமிகா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வரும் நயன்தாரா, அந்த படத்தின் விளம்பர
நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் புறக்கணிப்பதாக புகார் எழுந்துள்ளது.இதனால், ஆத்திரம்
அடைந்துள்ள அந்த படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளர்களும், நயன்தாராவை, புதிதாக எந்த தெலுங்கு படத்துக்கும் ஒப்பந்தம் செய்யக் கூடாது என, போர்க்கொடி துாக்கினர். இதையடுத்து, நயன்தாரா, ஓர் ஆண்டுக்கு தெலுங்கு படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
[Continue reading...]

அஜீத்தை வைத்து படம் தயாரிக்க ஆசைப்படும் ஜீவா!

- 0 comments


சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான், திருப்பாச்சி ஆகிய படங்களில் நடித்த விஜய் கடைசியாக ஜில்லா படத்திலும் நடித்திருந்தார். அந்த வகையில் ஆர்.பி.செளத்ரியின் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் போன்று அவர்கள் எப்போது கால்சீட் கேட்டாலும் உடனே கொடுத்து விடுவார் விஜய்.

ஆனால் அதே சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த நீ வருவாய் என, உன்னைக்கொடு என்னைத்தருவேன் ஆகிய படங்களில் நடித்துள்ள அஜீத், சமீபகாலமாக அவர்கள் பேனரில் எந்த படத்திலும நடிக்கவில்லை. அதனால் விரைவில் தல அஜீத்தை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை எங்களது சூப்பர் குட் பிலிம்சுக்கு உள்ளது என்று நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், எங்கள் நிறுவனத்தில் படம் பண்ணுவதற்காக டைரக்டர்கள் கதை சொன்னதும், அந்த கதையில் யாரை நடிக்க வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று பரிசீலனை செய்த பிறகே சம்பந்தப்பட்ட நடிகர்களை அணுகுவோம். அந்த வகையில், எங்களிடம்வரும் கதையில் அஜீத்துக்கு பொருத்தமான கதை வருகிறபோது கண்டிப்பாக அவரை வைத்து மீண்டும் எங்கள் நிறுவனம் படம் தயாரிக்கும் அந்த படம் பிரமாண்டமானதாகவும் இருக்கும் என்கிறார்.
[Continue reading...]

24 கோடியில் தயாரான ஜெயம் ரவியின் பூலோகம்!

- 0 comments
நிமிர்ந்து நில் படத்தை அடுத்து ஜெயம்ரவியின நடிப்பில் வெளியாக தயாராகி வரும் படம் பூலோகம். ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்திருக்கிறார். வடசென்னையைச்சேர்ந்த பாக்சராக ஜெயம் ரவி நடிக்கும் இப்படத்தில் ஹாலிவுட் வில்லன் நாதன்ஜோன்சும் ஒரு பாக்சராக நடித்திருக்கிறார்.

கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக வளர்ந்து வரும் இந்த படத்துக்காக முறைப்படி பாக்சிங் பயிற்சி எடுத்ததோடு, உடல்கட்டையும் மாற்றி நடித்துள்ளார் ஜெயம்ரவி. ஏற்கனவே எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்திலும் பாக்சராக அவர் நடித்திருந்தபோதும், இந்த படத்துக்காக இன்னும் கூடுதல் பயிற்சி பெற்று நடித்துள்ளார்.

மேலும், இப்படத்தில் நடித்திருக்கும் நாதன்ஜோன்ஸ்க்கு சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மட்டுமே ஒன்றரை கோடி சம்பளம் கொடுத்துள்ளார்களாம். ஆக, 15 கோடிக்குள் முடிக்க போடப்பட்ட பட்ஜெட் இப்போது 24 கோடியில் போய் நிற்கிறதாம். ஜெயம்ரவியின் வியாபார வட்டத்தைப்பார்க்கையில் இது பெரிய தொகை என்கிறார்கள். தற்போது படம் சென்சாருக்கு சென்று வந்துவிட்ட நிலையில், வியாபாரம் பேசப்பட்டு வருகிறது. கோச்சடையான் ரிலீசைத் தொடர்ந்து மே மாதத்தில் பூலோகம் திரைக்கு வருகிறதாம்.
[Continue reading...]

Thursday 1 May 2014

கத்தி படப்பிடிப்பில் 27வது பிறந்த நாளை கொண்டாடினார் சமந்தா!

- 0 comments


தென்னிந்தியாவில் மிகவும் பிசியான, காஸ்ட்லியான நடிகைகளில் ஒருவர் சமந்தா. தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக அஞ்சான் படத்திலும், விஜய்க்கு ஜோடியாக கத்தி படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கில் 4 படங்களில் நான்கு பெரிய ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.

சென்னையில் நடந்து வரும் கத்தி படப்பிடிப்பில் நேற்று (ஏப்ரல் 28) தனது 27வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். ஹீரோ விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் கருணாமூர்த்தி ஆகியோர் சமந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். யூனிட்டில் உள்ள அனைவருக்கும் சமந்தா கேக் வழங்கினார்.

மாஸ்கோவின் காவிரி என்ற சிறிய படத்தில் அறிமுகமானவர் சமந்தா. அந்த படம் வந்ததும் தெரியாது போனதும் தெரியாது, அதன் பிறகு முரளி மகன் அதர்வா அறிமுகமான பாணா காத்தாடி படத்தில் நடித்தார், அந்தப்படமும் சரியாக போகவில்லை. விண்ணைத்தாண்டி வருவாயாவின் தெலுங்கு ரீமேக்கில் நடித்த பிறகு சமந்தாவின் வாழ்க்கையே திசை மாறியது. கடந்த 4 ஆண்டுகளில் மளமளவென வளர்ந்து உயரத்தில் நிற்கிறார். சித்தார்த்துடன் காதல் என்ற விவகாரம் தவிர்த்து சமந்தா சமத்தான பிள்ளையாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.
[Continue reading...]

சிம்புவைத் தொடர்ந்து சித்துவுடன் காதலா? ஹன்சிகாவை டென்சன் செய்த கேள்வி!!

- 0 comments


இப்போதுதான் சிம்புடனான காதல் பிரச்னையில் இருந்து விடுபட்டு, தமிழ், தெலுங்கில் அதிகப்படியான படங்களை கைப்பற்றி மீணடும் விட்டஇடத்தை பிடித்திருக்கிறார் ஹன்சிகா. அதனால், சில காலம் சரியான திட்டமிடல் என்பது இல்லாமல் கால்சீட் சொதப்பல் நடிகை என்ற பெயரையும எடுத்தார். ஆனால் இப்போது, தன் மீது யாரும் குற்றம் குறை சொல்லக்கூடாது என்று ரொம்ப கவனமாக கால்சீட் கொடுத்து நடித்துக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா.

இந்த நேரத்தில், உயிரின் உயிரே படத்தின் நாயகனான நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்துவுடன் ஹன்சிகாவுக்கு காதல் மலர்ந்திருப்பதாக கடந்த சில தினங்களாக மீடியாக்களில் புதிய செய்தி பத்திக்கொண்டது. அதையடுத்து சில மீடியாவினர், இது விசயமாக ஹன்சிகாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, எரியுற நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல், கோபத்தில் குபீரென்று கொளுந்து விட்டு எரிந்தாராம்.

இப்பதான் காதலே வேண்டாம், நமக்கெல்லாம் அது சரிப்பட்டு வராதுன்னு கட் பண்ணிவிட்டுட்டு நிற்கிறேன். அதற்குள்ள அடுத்த காதலா? சான்சே இல்லை. தயவு செய்து என்னை விட்டுருங்க. இது விசயமாக மேலும் என்கிட்ட ஏதாச்சும் பேசி டென்சன் பண்ணாதீங்க. இன்னும் இரண்டு வருசத்துக்கு நான் சினிமாவுல ரொம்ப பிஸி என்று கடகடவென்று சொல்லி தனது பேச்சையும் முடித்துக்கொண்டாராம் ஹன்சிகா.
[Continue reading...]

விஜய்யுடனும் விரைவில் நடிப்பேன்!- நயன்தாரா நம்பிக்கை

- 0 comments


அனாமிகாவைத் தொடர்ந்து சிம்புவுக்கு ஜோடியாக இது நம்ம ஆளு, ஜெயம் ரவிக்கு ஜோடியாக தனி ஒருவன் படங்களில் நடித்து வரும் நயன்தாரா, அடுத்தபடியாக வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் நடிப்பது தற்போது உறுதியாகியிருக்கிறது. ஏற்கனவே சூர்யாவுடன் கஜினி, ஆதவன் படங்களில் நடித்த நயன்தாரா இந்த வாய்ப்பினால் உற்சாகத்தில் இருக்கிறார்.

காரணம், ரீ-என்ட்ரியில் முதல் படத்திலேயே அஜீத்துடன் ஆரம்பம் படத்தில் நடித்த நயன்தாரா, அதையடுத்து ஆர்யாவுடன் ராஜாராணியில் நடித்தார். ஆனால் அதையடுத்து கஹானி ரீமேக்கான அனாமிகாவில் டைட்டீல் ரோலில் நடித்தார். ஆக, அவரது ரீ-என்ட்ரி நல்ல அமோகமாகவே இருக்கிறது. இதற்கிடையே தற்போது சிம்பு, ஜெயம்ரவி படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போதே சூர்யாவுடன் நடிக்க கமிட்டாகி விட்டார்.

இதனால், செகண்ட் இன்னிங்சில் நான் நினைத்து பார்க்காத நல்ல விசயங்களாக நடக்கிறது என்று உற்சாகத்துடன் கூறிவரும் நயன்தாரா, இப்போது சூர்யாவுடனும் மீண்டும் ஜோடி சேர்ந்து விட்ட நான், முதல் ரவுண்டில் நடித்த விஜய்யுடன்தான் இன்னும் ஜோடி சேரவில்லை. ஆனால் அதற்கான காலமும் விரைவில் கனியும் என்று எதிர்பார்க்கிறேன். அது விஜய் நடிக்கும் அடுத்த படமோ இல்லை அதற்கடுத்த படமாகக்கூட இருக்கலாம் என்று தனக்குத்தானே ஆரூடம் சொல்லிக்கொண்டு திரிகிறார் நயன்தாரா.
[Continue reading...]

இப்போது பீல் பண்ணுகிறார் வடிவேலு!

- 0 comments
[vadivelu+girl.jpg]

அரசியல் சுனாமியில் சிக்கி சிதைந்து போன வடிவேலு, சினிமாவில் மறுபிரவேசத்திற்கு தயாரானபோது, அவரை வைத்து ஏற்கனவே இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தை இயக்கிய சிம்புதேவனும் அப்படத்தின் 2ஆம் பாகத்தை இயக்குவதற்காக முந்தைய கதையின் தொடர்ச்சியாக இன்னொரு கதையை சொன்னார்.

ஆனால், அவர் சொன்ன கதை பிடித்தபோதும், மீண்டும் சிம்புதேவனின் இயக்கத்தில் நடித்தால் பழைய சாயல் வந்து விடும் என்று கருதிய வடிவேலு, யுவராஜ் சொன்ன தெனாலிராமன் கதையில் நடிக்க முடிவெடுத்தார். ஆனால், ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு வெளியான அப்படம் இப்போது பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.

விளைவு, சிம்புதேவன் கதை நன்றாக இருந்தது. நான்தான் கடைசி நேரத்தில் யுவராஜ் பக்கம் சாய்ந்து விட்டேன் என்று பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார் வடிவேலு. இந்நிலையில், மறுபடியும் சிம்புதேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆசைப்படுகிறாராம். ஆனால், சிம்புதேவனோ, விஜய் எப்போது கத்தி படத்தை முடித்து விட்டு வருவார், அவரை வைத்து படம் இயக்கலாம் என்று காத்துக்கொண்டிருக்கிறார்.

இதனால், தன் மனதில் உள்ள எண்ணத்தை சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்.
[Continue reading...]

சிம்புவை வம்புக்கு இழுக்கும் மோனா மோத்வானி!

- 0 comments

வாலு படத்தில் நடிக்க போன இடத்தில் சிம்புவின் காதல் வலையில் விழுந்து கிடந்தார் ஹன்சிகா. ஆனால், அது நீண்டகாலம் நீடிக்கவில்லை. எண்ணி மூன்றே மாதத்தில் காதலுக்கு முழுக்கும் போட்டு விட்டார்கள். இந்த காதல் முறிவுக்கு நடுவே சிக்கியவர் வாலு பட தயாரிப்பாளரான நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திதான்.

சிம்பு-ஹன்சிகா நடிக்க வேண்டிய ஒரு பாடல் காட்சி பேலன்ஸ் இருந்ததால், அவர்களை மீண்டும் ஒன்று சேர்ப்பதற்குள் படாதபாடு பட்டு விட்டார். எப்படியோ ஒருவழியாக எதிரும் புதிருமாக இருந்தவர்களை வைத்து சமீபத்தில் யு ஆர் மை டார்லிங் என்ற ரொமான்டிக்கான அந்த பாடலை படமாக்கி விட்டார்கள். (இரண்டு கோபக்கார பறவைகளும் கொஞ்சி கொஞ்சி எப்படித்தான் ரொமான்ஸ் செய்தார்களோ தெரியவில்லை)

ஆனால் இப்போது அது பிரச்னை இல்லை. சில நாட்களாக, ஜெய்பிரதாவின் மகன் சித்துவுடன் ஹன்சிகாவை இணைத்து காதல் செய்திகள் பரவி கிடக்கிறது. ஆனால் இதற்கு காரணம், சிம்புதான். அவர்தான் என் மகளை அசிங்கப்படுத்த வேண்டுமென்று இப்படி கண்ட செய்திகளை மீடியாக்களிடம் பரப்பி விடுகிறார் என்று அவரைப்பார்த்து சீறிக்கொண்டு நிற்கிறார் ஹன்சிகாவின் தாய்குலம் மோனா மோத்வானி.

குறிப்பாக, ஜெயப்பிரதாவிடம் ஏராளமான சொத்துக்கள் இருப்பதால் அவர் மகன் சித்துவுக்கு ஹன்சிகா ப்ராக்கட் போட்டு விட்டதாகவும் அந்த செய்தியோடு சேர்த்து பரவியது, அவரை இன்னும் டென்சனாக்கி விட்டுள்ளது. யாருக்கு வேணும் சொத்து. மும்பையில் எங்ககிட்ட இல்லாத சொத்தா. நாங்களும் பெரிய ஜமீன் குடும்பம்தான் என்றும் முந்தானையை இழுத்து இடுப்பில் சொறுக்கிக்கொண்டு மார்தட்டிப் பேசுகிறார் மோனா மோத்வானி.

[Continue reading...]

அஜீத்துக்கு இன்று 43வது பிறந்தநாள்...!!

- 0 comments


மே 1 உழைப்பாளர் தினமான இன்று, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜீத்குமாரின் பிறந்தநாளும் கூட. உழைப்பாளர் தினத்தில் பிறந்த அஜீத், இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மற்ற நடிகர்களை போன்று ஆடம்பரமாய் விழா எல்லாம் எடுத்து கொண்டாடுவது கிடையாது. பிறந்தநாள் கொண்டாட்டம், ரசிகர்கள் சந்திப்பு என்று எதையும் செய்ய மாட்டார் அஜீத். ஏன் தனது பிறந்தநாளுக்கு ஒரு புத்தாடை கூட உடுத்துவாரா என்றால்... இல்லை என்று தான் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்தளவுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறார். இந்தாண்டும் பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் கிடையாது. தனது மனைவி மற்றும் குழந்தையோடு புனே சென்றுள்ளார். அங்கு ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று பாபாவை தரிசனம் செய்துவிட்டு இருதினங்களில் சென்னை திரும்பி, கெளதம் மேனன் பட ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளார்.

43வது பிறந்தநாளை கொண்டாடும் அஜீத் பற்றிய சில தகவல்கள்...

1971 மே 1-ம் தேதி, செளகந்திராபாத்தில் பிறந்து, சென்னையில் வளர்ந்தவர் அஜீத்.

* பைக்ரேஸ் பிரியரான அஜீத், 1992-ம் ஆண்டு தெலுங்கு படமான பிரேம புஸ்தகாம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் அவர் நடித்த முதல்படம் அமராவதி. பின்னர் ஆசை படம்மூலம் பிரபலமான அஜீத், காதல் கோட்டை படம் மூலம் பேசப்படும் நடிகரானார்.

* தொடர்ந்து காதல் நாயகனாக வலம் வந்தவர் அமர்க்களம் படம் மூலம் ஆக்ஷ்ன் ஹீரோவாகவும் உருவெடுத்தார். தீனா, அட்டகாசம், என அதிரடி ஆக்ஷ்ன் படங்களையும் கொடுத்தார்.

* எம்.ஜி.ஆர்., - சிவாஜிக்கு அடுத்தப்படியாக ரஜினி - கமல் உருவானதை போன்று இவர்களுக்கு அடுத்தபடியாக அஜீத் - விஜய் இடையே தொழில் ரீதியான போட்டி உருவானது. ஆனால் இவர்கள் நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் நடித்தனர்.

* ஏ.ஆர்.முருகதாஸின் தீனா படத்தில் நடித்தபோது அவரது பெயருக்கு முன்னால் 'தல' எனும் அடைமொழி ஒட்டிக்கொண்டது. அது இப்போதும் தொடர்கிறது.

* அமர்க்களம் படத்தில் நடித்தபோது, அப்படத்தில் தன்னுடன் நடித்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

* ஆக்ஷ்ன், லவ் என்று இல்லாமல், வாலி, வில்லன், வரலாறு போன்ற படங்களில் வித்தியாசமாக நடித்தார். குறிப்பாக சிட்டிசன் படத்தில் பல்வேறு கெட்டப்புகளில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

* பைக் ரேஸ் மட்டுமல்லாது அஜீத், கார் ரேஸ் பிரியரும் கூட. சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துவிட்ட பின்னர் சில காலம் கார் ரேஸ்களில் கவனம் செலுத்தினார். இதனால் அந்த சமயம் அஜீத் மார்க்கெட் டல்லடித்தது.

* பில்லா தந்த பிரேக்... ரஜினி நடித்த பில்லா படத்தை மீண்டும் ரீ-மேக் செய்தனர். விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜீத் நடித்த இப்படம் சூப்பர்-டூப்பர் ஹிட்டானது. குறிப்பாக இப்படத்தின் பின்னணி இசையும், அஜீத்துக்கு அமைந்த தீமும் பெரிதாக பேசப்பட்டது. டல் அடித்த தனது மார்க்கெட்டை பில்லா படம் மூலம் மீட்டார் அஜீத்.

* மங்காத்தா 50... அதன்பின்னர் வெங்கட்பிரபு இயக்கத்தில், அஜீத் நடித்த படம் மங்காத்தா. இது அவரது 50வது படம். இப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானதோடு, வசூல் ரீதியாகவும் அவருக்கு பெரும் சாதனை கொடுத்த படமாகவும் அமைந்தது.

* சால்ட் அண்ட் பெப்பர் லுக்... பொதுவாக நரைமுடி வந்தாலே அதை டை அடித்து மறைத்து இளமையாக காட்டும் நடிகர்கள் ஏராளம். ஆனால் அஜீத் அதையே ஒரு ஸ்டைலாக்கி சால்ட் அண்ட் பெப்பர் லுக் என மங்காத்தா படத்தில் நடித்தார். ரசிகர்களை அது வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து ஆரம்பம், வீரம், இப்போது நடித்து வரும் கெளதம் மேனன் படம் வரை இந்த ஸ்டைல் தொடர்கிறது.

* ரசிகர் மன்றத்தை கலைத்த அஜீத்... பொதுவாக தமிழ் சினிமாவில் அஜீத் படத்திற்கு இருக்கும் ஓப்பனிங் வேறு எந்த படத்திற்கும் இருக்காது. அந்தளவுக்கு அவரது ரசிகர்கள் முதல்நாள் முதல்ஷோவை அமர்க்களப்படுத்தி வரவேற்பர். ஆனால் இந்த விஷயம் எல்லாம் அஜீத்திற்கு சுத்தமாக பிடிக்காது. ஒவ்வொரு முறை தனது ரசிகர்களை பற்றி பேசும்போது, எனக்காக இதுபோன்று எதுவும் செய்யாதீர்கள், அவரவர் வேலையை கவனமாக செய்யுங்கள் என்று அன்பு கட்டளை போடுவார். ஆனபோதும் ஒருகட்டத்தில் அவரது ரசிகர்கள் சிலர் அரசியல், அது, இது என்று இறங்கியதால் கோபமான அஜீத், தனது ரசிகர் மன்றத்தை கலைத்தார். அஜீத்தின் இந்த செயலை பலரும் பாராட்டினர். ரசிகர் மன்றத்தை கலைத்தாலும், அவரது ரசிகர்கள் அஜீத்தின் படத்திற்கு எப்பவும் போல தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி தான் வருகின்றனர். அதேப்போல் பிறந்தநாளையும் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

சினிமாவில் எந்த பின்னணியும் இன்றி கடுமையாக உழைத்து, இன்று இந்தளவுக்கு முன்னேறி இருக்கும் அஜீத்துக்கு வாசகர்களாகிய நீங்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லுங்கள்...!!
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger