Friday 20 September 2013

சிரியா புரட்சி படை வீரர்களுடன் துனிசியா பெண்கள் செக்ஸ் உறவு Syrian soldiers to fight against the revolution Tunisia women torture

- 0 comments

சிரியா புரட்சி படை வீரர்களுடன் துனிசியா பெண்கள் செக்ஸ் உறவு Syrian soldiers to fight against the revolution Tunisia women torture

சிரியாவில் அதிபர் பஷர் அல்–ஆசாத் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக புரட்சிபடை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அதிபர் ஆசாத்தின் ராணுவத்துடன் போரிட்டு வருகின்றனர். இதை ஒரு புனித போராக கருதுகின்றனர். இவர்களுக்கு துனிசியாவை சேர்ந்த இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து புரட்சி படையில் சேருகின்றனர்.

இந்த நிலையில், துனிசியாவில் உள்ள சன்னி பிரிவை சேர்ந்த இளம்பெண்கள் புரட்சிபடை வீரர்களுடன் 'செக்ஸ்' உறவு கொள்ள சிரியா செல்கின்றனர். பின்னர் கர்ப்பிணிகளாக துனிசியா திரும்பும் அவர்கள் குழந்தைகளை பெறுகின்றனர்.

இதை புனிதமாக அவர்கள் கருதுகின்னர். 'ஜிகாத் அல் நிகாஹ்' என அழைக்கின்றனர். இந்த தகவலை துனிசியா உள்துறை மந்திரி லாட்பிபென் ஜெட்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், கடந்த மார்ச் மாதம் வரை புனித போரில் பங்கேற்க சிரியா சென்ற 6 ஆயிரம் இளைஞர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

[Continue reading...]

தனுஷ் பாடிய டெட்டி பியர்(நய்யாண்டி) பாடல் ஸ்க்ரிலெக்ஸ் பாடலின் காப்பியா? Danush nyandi songs

- 0 comments

தனுஷ் பாடிய டெட்டி பியர்(நய்யாண்டி) பாடல் ஸ்க்ரிலெக்ஸ் பாடலின் காப்பியா?

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsYesterday,

தனுஷ் நடிக்கும் நய்யாண்டி படத்தில் டெட்டி பியர் என்ற பாடலை அவரே பாடியிருக்கிறார்.  சில நாட்கள் முன்பு வெளியிடப்பட்டது.

அந்த பாடல் Skrillex Damian 'Jr Gong' Marley Make It Bun Dem என்ற மியூசிக் வீடியோ வின் காப்பி என சிலர் இசையமைப்பாளர் ஜிப்ரான் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

இதோ இந்த இரண்டு பாடல்களும் இணைக்கப்பட்டுள்ளன. கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.

Show commentsOpen link

[Continue reading...]

சித்தார்த்துடன் ஜோடியாக சோப்பு விற்க வரும் சமந்தா sitharth and samantha hot news

- 0 comments

சித்தார்த்துடன் ஜோடியாக சோப்பு விற்க வரும் சமந்தா

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,

அவ்வளவு எளிதில் உணர்ச்சிவசப்படுகிறவர் இல்லை. சமந்தா. ஆனால் லக்ஸ் விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தமானதை அவர் தெரிவித்த விதத்தில் நூறு சூரியன் டாலடித்தது. முக்கியமாக, உடன் பணிபுரிகிறவர்கள் யார் என்பது சர்ப்ரைஸ் என்றும் தெரிவித்திருந்தார்.அந்த உடன் பணிகிறவர்களில் ஒருவர் சித்தார்த். 

சித்தார்த்தும், சமந்தாவும் காதலிக்கிறார்கள் என்பது ஊருக்கே தெரியும். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் இருவருக்கும் மட்டும் அது தெரியவில்லை. காளஹஸ்தி கோயிலில் இருவரின் குடும்பமும் ஒன்றாக பூஜை நடத்தி தோஷம் கழித்த பிறகும் ஜஸ்ட் ப்ரெண்ட்ஸ் என்றுதான் சொல்லி வருகிறார்கள் இருவரும். சமீபத்தில் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் ஆந்திராவில் வதந்தி கிளம்பியது.

லக்ஸ் விளம்பரத்தில் சமந்தாவுடன் சித்தார்த்தும் நடிக்கிறாராம். இருவரும் ஜோடியாகதான் சோப்பு விற்க ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். சமந்தாவின் எக்ஸ்ட்ரா மகிழ்ச்சிக்கு இதுதான் காரணம் என்கிறார்கள்.

Show commentsOpen link

[Continue reading...]

பெங்களூர் அருகே கல்லூரி மாணவி கடத்தி கற்பழிப்பு: வாலிபர் கைது bangalore near young girl molested youth arrest

- 0 comments

பெங்களூர் அருகே கல்லூரி மாணவி கடத்தி கற்பழிப்பு: வாலிபர் கைது bangalore near young girl molested youth arrest
Tamil NewsYesterday,

பெங்களூர், செப். 21-

பெங்களூர் அருகே நெலமங்களா போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட உன்னிகெரே கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் சுவேதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நெலமங்களாவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.யூ.சி. படித்து வருகிறார். தும்கூர் மாவட்டம் மித்ரஹள்ளியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. நெலமங்களாவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.

இதற்கிடையில், சக்கரவர்த்திக்கும், சுவேதாவுக்கும் காதல் மலர்ந்தது. ஒரு ஆண்டுக்கும் மேலாக இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். கடந்த 15–ந்தேதி மாகடியில் வசிக்கும் தன்னுடைய பாட்டி வீட்டிற்கு சென்று வருவதாக கூறிய சுவேதா, அதன்பிறகு திரும்பி வரவில்லை.

சுவேதாவின் பெற்றோர், அவரை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், காணாமல் போனதாக தேடப்பட்ட சுவேதா திடீரென்று வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது சக்கரவர்த்தி தன்னை கடத்தி சென்று கற்பழித்து விட்டதாக தனது பெற்றோரிடம் சுவேதா கூறினார்.

இதுபற்றி மாதநாயக்கனஹள்ளி போலீசில் சுவேதாவின் பெற்றோர் புகார் செய்தனர். அதில், தன்னுடைய மகள் சுவேதாவை தும்கூர் மற்றும் கேரள மாநிலத்திற்கு சக்கரவர்த்தி கடத்தி சென்று ஆசை வார்த்தை கூறி சக்கரவர்த்தி கற்பழித்து விட்டதாக புகாரில் கூறி இருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சக்கரவர்த்தியை கைது செய்தார்கள். விசாரணைக்கு பின்பு, அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கல்லூரி மாணவி கடத்தி கற்பழிக்கப்பட்ட சம்பவம் நெலமங்களாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
...
Show commentsOpen link

[Continue reading...]

சிம்பு- ஹன்சிகா திருமணம் தள்ளிப்போகிறது? Simbu hansika marriage

- 0 comments

சிம்பு- ஹன்சிகா திருமணம் தள்ளிப்போகிறது?
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,

சிம்பு- ஹன்சிகா 'வாலு' என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகின்றன. அப்போது இருவரும் காதலிக்கிறார்கள் என்று செய்தி வந்தது. இதை இருவரும் முதலில் மறுத்து வந்தனர். பிறகு இருவரும் காதலிப்பதை ஒத்துக்கொண்டனர். இதனால் அவர்கள் திருமணம் விரைவில் நடைபெறலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் அவர்கள் திருணம் தள்ளிப்போகலாம் எனத் தெரிகிறது.

ஹன்சிகா மோத்வானி அம்மா ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

துபாயில் நடந்த 'சைமா' விருது வழங்கும் விழாவில் ஹன்சிகா, முன்னாள் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கையால் விருதை வாங்கும்போது நாங்கள் மெய்சிலிர்த்து போனோம். ஹன்சிகா தற்போது 9-க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

தற்போது 'மான் கராத்தே' படத்தில் நடித்து வருகிறார். அடுத்த மாதம் முதல் சுந்தர் சி. இயக்கும் 'அரண்மனை' படத்தில் நடிக்க இருக்கிறார். அதில் நடித்து முடித்த பிறகு மற்ற படங்களில் நடிக்க வேண்டும். இதனால் அவருக்கு சினிமாவில் நடிப்பதை விட திருமண எண்ணம் ஏதும் இல்லை என்றார்.

இதனால் அவர்கள் திருமணம் தள்ளிப்போகும் எனத் தெரிகிறது.

Show commentsOpen link

[Continue reading...]

பஸ் ஏற நின்ற பெண்ணை கடத்தி கற்பழித்த போலீஸ்காரர் andhra woman kidnapped torture police

- 0 comments

ஆந்திராவில் பஸ் ஏற நின்ற பெண்ணை கடத்தி கற்பழித்த போலீஸ்காரர் andhra woman kidnapped torture police
Tamil NewsToday, 05:30

ஐதராபாத், செப். 20–

ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் மகபூப் நகருக்கு சென்றிருந்தார். அங்கு உறவினர்கள் வீட்டுக்கு சென்று விட்டு ஐதராபாத் திரும்ப அவர் மகபூப் நகர் பஸ் நிலையத்துக்கு வந்தார்.

ஐதராபாத் பஸ்கள் அனைத்தும் சென்று விட்டதால் அந்த பெண் மகபூப் நகர் பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தார். நள்ளிரவு 1 மணிக்கு அங்கு ரோந்து பணிக்கு வந்த போலீஸ்காரர் சீனு (வயது26). அந்த பெண்ணிடம் விசாரித்தார்.

அவர் தனிமையில் இருப்பதை கண்ட போலீஸ்காரர் அவரை மிரட்டி பஸ் நிலையம் அருகில் உள்ள மறைவிடத்துக்கு அழைத்து சென்றார். அவருடன் மேலும் 2 பேர் வந்து சேர்ந்து கொண்டனர். அவர்கள் 3 பேரும் அந்த பெண்ணை கற்பழித்தனர்.

சுமார் 2 மணி நேரம் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அவர்கள் பிறகு பஸ் நிலையத்தில் விட்டு சென்றனர். உடனடியாக அந்த பெண் மகபூப் நகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார்.

உதவி போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசராவ் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு போலீஸ்காரர் சீனு உள்பட 3 பேரையும் கைது செய்தார். அந்த பெண்ணை போலீஸ்காரர் சீனு மிரட்டி அழைத்து சென்ற போது ஊர்க்காவல் படையை சேர்ந்த ஒருவர் பார்த்துள்ளார். ஆனால் அவர் அதை தடுக்க தவறிவிட்டார். இதற்காக அவரும் கைது செய்யப்பட்டார்.

...
Show commentsOpen link

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger