Saturday 27 July 2013

16 வயது இளம்பெண் விபச்சாரத்தில்

- 0 comments

16 வயது இளம்பெண்ணை விபசாரத்தில்
தள்ளிய 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார்
கைது செய்தனர்.

உத்தரபிரதேசம் மாநிலம், வாரனாசியை சேர்ந்த
16 வயது இளம்பெண் உடல்நலக்
குறைவுக்காக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள
ஆஸ்பத்திரியில்
தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது பிக்கானரில் வசிக்கும் டோலி என்ற
பெண்ணுடன்
நட்பு ஏற்பட்டு அவளது வீட்டுக்கு சென்றார்.

அப்பகுதியை சேர்ந்த விபசார தரகர் ராம்ரத்தன்
என்பவனுக்கு அந்த இளம்பெண்ணை ரூ.20
ஆயிரத்துக்கு பேரம்
பேசி டோலி விற்று விட்டார்.

விலைக்கு வாங்கிய அந்த
பெண்ணை ராம்ரத்தன் அவரது மனைவி மற்றும்
மும்பையை சேர்ந்த இன்னொரு பெண்
ஆகியோர் வற்புறுத்தி விபசாரத்தில்
ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து வந்தனர்.

அவர்களது பிடியில் இருந்து தப்பியோடி வந்த
அந்த பெண் போலீசில் புகார்
அளித்ததை தொடர்ந்து ராம்ரத்தன்,
அவரது மனைவி, மும்பை பெண் ஆகிய 3
பேரை போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவாக இருக்கும்
டோலியை கைது செய்ய தேடுதல்
வேட்டை நடத்தி வருகின்றனர்.

[Continue reading...]

ஓடும் ரெயிலில் இளம்பெண்ணை மானபங்கம் செய்த வாலிபர்

- 0 comments

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த
ஞாயிற்றுக்கிழமை, ரெயிலில் சென்ற
இளம்பெண்ணை ஒரு ஆசாமி மானபங்கம்
செய்துள்ளான். செல்போனை பிடுங்கியதுடன்,
அவரை கற்பழிக்க முயன்றதாகவும் தெரிகிறது.
உதவிக்கு ஆள் இல்லாததால் மானத்தைக்
காப்பாற்றிக் கொள்ள அந்த பெண், பேலூர் என்ற
இடத்தில் ரெயில் சென்றபோது கீழே குதித்தார்.
இதில் பலத்த காயம் அடைந்து மயங்கி கிடந்த
அந்த பெண்ணை உள்ளூர் மக்கள்
காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறிய
முதல்வர் மம்தா பானர்ஜி, தேவையான
மருத்துவ செலவை ஏற்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், ஓடும் ரெயிலில்
இளம்பெண்ணை மானபங்கம் செய்த வழக்கில்,
உத்தர்பாராவைச் சேர்ந்த தேப்சங்கர் சாவ் (36)
என்பவரை கொல்கத்தா போலீசார்
நேற்று கைது செய்துள்ளனர்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger