Wednesday 11 September 2013

மாப்பிள்ளைக்கு தாலிகட்டிய மணப்பெண்! Very intresting story

- 0 comments

மாப்பிள்ளைக்கு தாலிகட்டிய மணப்பெண்! திருமணவிழாவில் ருசிகரம்!
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil
தமிழ்நாட்டில் முதன் முறையாக மாப்பிள்ளைக்கு தாலிகட்டி ஓர் புதிய சடங்கினை அறிமுகம் செய்துவைத்துள்ளார் மணப்பெண்.

பொதுவுடைமை எழுத்தாளரும் த.மு.எ.ச மா.செ.ச.தமிழ்செல்வன் அவர்களின் தம்பி பாலசுப்ரமணியம், ஜெயா பாலசுப்ரமணியம் மகன் பிரேம் ஆனந்துக்கும், பிரபல புத்தக நிறுவனர் கோவை பெ.தியாக ராஜன், கலைவாணி மகள் சிந்துவுக்கும் , சி.பி.ஐ நல்லகண்ணு தலைமையில் திருமணம் நடைபெற்றது.

பிரேம் ஆனந்தின் கொள்ளு தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ். தமிழ் சினிமாவில் முதன் முதலில் வெளிவந்த திரைப்பாடலை இயற்றியவர்.

மிக பிரபல எழுத்தாளர், பாடலாசிரியர் சுதந்திர போராட்ட தியாகி. பெரியப்பா எழுத்தாளர் ச.தமிழ்செல்வன். ஒரு சித்தப்பா எழுத்தாளர் கோணங்கி. கடைசி சித்தப்பா சங்கீத அகாடமியில் தேசிய விருது வாங்கிய ச.முருகபூபதி.

இவர்களின் பின்னணியில் வந்த பிரேம் ஆனந்த் கொள்கைக்கு ஏற்ப சாதிமறுப்பு காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ஒரு நூலக அலமாரி போல அலங்கரிக்கப்பட்ட அற்புத மேடையில் திருமண நிகழ்வை தொகுத்தார் ச.தமிழ்செல்வன்.

நல்லக்கண்ணு தாலி எடுத்து பிரேமிடம் தர, அவர் சிந்துவின் கழுத்தில் கட்டினார். அப்போது ச.தமிழ் செல்வன் தாலி என்பது பெண்ணடிமை சின்னம் ஆனால் ஒரேயடியாக சமூகத்தை மாற்றிவிடுவது சற்று சிரமம்.

எனவே அதேசமயம் ஆணுக்கு பெண் சமம் என்ற அடிப்படையில் மணமகனுக்கு தற்போது சிந்து தாலி சூட்டுவார் என கூற, பிரேம் ஆனந்த் கழுத்தில் சிந்து ஒரு செயினை கட்டினார்.

பின் மனமக்களை ஒருவருக்கு ஒருவர் தலையில் கொட்டிக்கொள்ள சொன்னார்.

பின் இருவரும் அதை ஒருவருக்கொருவர் மாறி மாறி தேய்த்து கொள்ள சொல்லி பின் சிரித்தபடி கைகுலுக்க சொல்ல அப்படியே செய்தனர் மணமக்கள்.

பின் பேசிய ச.தமிழ்செல்வன் 'ஒவ்வொரு திருமணத்தின் போதும் பழைய சடங்குகளை உடைத்து புதிய சடங்குகளை அறிமுகம் செய்து வருகிறோம் அப்படிப்பட்ட ஒரு சடங்குதான் இது.

தாம்பூல பையாக அனைவருக்கும் மூன்று நூல்கள் பரிசளிக்கப்பட்டது.

இந்த வித்தியாச திருமணம், வந்தவர்கள் நெஞ்சில் சமத்துவ விதையை விதைப்பதாக இருந்தது.

[Continue reading...]

“குத்துப்பாட்டு சான்ஸாவது குடுங்க…” : ரெடியா இருக்காராம் ஸ்ரேயா! Shreya kuthu paattu

- 0 comments

"குத்துப்பாட்டு சான்ஸாவது குடுங்க…" : ரெடியா இருக்காராம் ஸ்ரேயா!
by abtamil

ஆண் நண்பருடனான ...
நஸ்ரியா, லட்சுமி மேனன், அமலா பால், பிந்துமாதவி என நேற்று பீல்டுக்கு வந்த புது ஹீரோயின்கள் எல்லோரும் கையில் நான்கைந்து படங்களை வைத்துக் கொண்டு பிஸியாக இருக்கிறார்கள்.

இதனால் எல்லா டைரக்டர்களும், புரொட்யூசர்களும் தன்னைத் தேடி வந்து சான்ஸ் தருவார்கள் என்று பெருத்த நம்பிக்கையில் இருந்த ஸ்ரேயா டோட்டல் அப்செட்டில் இருக்கிறார்.

கடைசியாக சந்திரா என்ற தமிழ்ப்படத்தில் நடித்தார் ஸ்ரேயா. ஆனால் அந்தப்படம் இன்னும் ரிலீஸானபாடில்லை. இதனால் டல்லான தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்த இதுதான் சரியான வழி என்று " குத்துப்பாட்டுக்கு ஆடலாம்" என்கிற புது முடிவுக்கு வந்திருக்கிறாராம் ஸ்ரேயா.

நீங்க எவ்ளோ பேமஸான ஹீரோயின் நீங்க போய் குத்துப்பாட்டுக்கு ஆடினா..? நல்லாவா இருக்கும் என்று கேட்டால் :

"என்னோட உடல்வாகு அதுக்கு ரொம்பவே ஷூட்டாகும். அதுமட்டுமில்லாம இப்படி ஆடுறதுல எனக்கு எந்த வருத்தமும் இல்ல.
என்னோட மார்க்கெட் இப்பவும் ஸ்டெடியா இருக்குன்னு நான் நம்புறேன். நடிக்க வந்த பின்னாடி இதுதான் பண்ணுவேன், அத பண்ண மாட்டேன்னு சொல்லவே கூடாது. எதைக்குடுத்தாலும் அதை ஒரு கை பார்த்துடணும்.

நான் பீக்ல இருந்தப்போ கூட குத்துப்பாட்டுக்கு ஆடியிருக்கேன்.( வடிவேலு கூட ஆடுனதைச் சொல்றார்…) என்கிறார் ஸ்ரேயா.

[Continue reading...]

முதல் இரவில் ரத்தப்போக்கால் 8 வயது சிறுமி மரணம் first night tamil sex news

- 0 comments

40 வயது நபருடன் திருமணம்: முதல் இரவில் ரத்தப்போக்கால் 8 வயது சிறுமி மரணம்

ஏமனில் 40 வயது நபரை மணந்த 8 வயது சிறுமி முதல் இரவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக பலியானார்.

வடமேற்கு ஏமனில் உள்ள ஹஜ்ஜா மகாணத்தில் இருக்கும் மீடி நகரில் 40 வயது நபர் ஒருவர் 8 வயது சிறுமி ரவானை கடந்த வாரம் திருமணம் செய்தார். முதல் இரவில் அந்த நபர் சிறுமியுடன் உறவு கொண்டுள்ளார். அதன் பிறகு சிறுமிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் குடும்பத்தார் மற்றும் கணவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஏமனில் வசிக்கும் பல ஏழைக் குடும்பங்கள் தங்கள் பெண் பிள்ளைகளை வளர்க்கும் செலவை மிச்சப்பட்டுத்த அவர்களை சிறு வயதிலேயே திருமணம் செய்து கொடுத்துவிடுகின்றனர்.

ஏமனில் உள்ள 24 மில்லியன் மக்களில் 10.5 மில்லியன் பேர் போதிய உணவின்றி இருப்பதாகவும், 13 மில்லியன் பேர் பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி இருப்பதாகவும் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

[Continue reading...]

சூப்பர்ஸ்டார்களை ஓரங்கட்டிய நஸ்ரியா nasriya fans in facebook

- 0 comments

சூப்பர்ஸ்டார்களை ஓரங்கட்டிய நஸ்ரியா

சூப்பர்ஸ்டார்களுடன் மோதும் அளவுக்கு வளர்ந்துவிட்டார் நேரம் நாயகி நஸ்ரியா நசீம். நேரம் படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் நஸ்ரியா.முதல் படத்தின் மூலம் ரசிகர்களை மட்டுமல்லாது தனது நடிப்பால் இயக்குனர்களையும் கவர்ந்துள்ளார்.

தற்போது தமிழில் முன்னணி நாயகர்களுடன் நடித்துவருகிறார்.ஆனால் விடயம் இதுவல்ல. மலையாள சூப்பர்ஸ்டாரையும், மெகாஸ்டாரையும் ஓவர்டேக் செய்திருக்கிறார் நஸ்ரியா.இது சம்பள விடயத்தில் அல்ல. பேஸ்புக்கில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையில் தான் இந்த சாதனையை செய்திருக்கிறார் நஸ்ரியா.பேஸ்புக்கில் மோகன்லாலுக்கு 10லட்சமும், மம்முட்டிக்கு 8லட்சமும் என பின்தொடரும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.ஆனால் நஸ்ரியாவை 15லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பேஸ்புக்கில் பின் தொடர்கிறார்களாம்

[Continue reading...]

இத்தனை ரசிகர்கள் எனக்கு கிடைப்பார்கள் என நினைக்கவில்லை:நஸ்ரியா பூரிப்பு! Actress nasriya naasim

- 0 comments

இத்தனை ரசிகர்கள் எனக்கு கிடைப்பார்கள் என நினைக்கவில்லை:நஸ்ரியா பூரிப்பு!

ஆண் நண்பருடனான .நேரம் படத்தில் அறிமுகமான நஸ்ரியா நாசிம் கூறியது: தமிழில் நய்யாண்டி, ராஜா ராணி, ஜீவாவுடன் ஒரு படம், கார்த்தியுடன் ரஞ்சித் இயக்கும் படம், திருமணம் எனும் நிக்காஹ் உள்ளிட்ட படங்களில் நடிக்கிறேன். நேரம் படத்துக்குமுன்பாகவே பல படங்கள் ஒப்பந்தமாகிவிட்டது. மலையாளத்திலும் 3 படங்களில் நடிக்கிறேன். எடுத்த எடுப்பிலேயே இவ்வளவு பெரிய வரவேற்பு, இத்தனை ரசிகர்கள் எனக்கு கிடைப்பார்கள் என நினைக்கவில்லை. இது எனக்கு பயமாக இருக்கிறது. சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வும் அதிகரித்துள்ளது.தொடர்ந்து ரொமான்டிக் கதை படங்களிலேயே நடிப்பதாக சொல்கிறார்கள். கதைக்களம் ஒன்று போல் தெரிந்தாலும் படம் சொல்லும் விஷயம், எனது கேரக்டர் என எல்லாமே வித்தியாசமாகத்தான் இருக்கும். சினிமாவில் நடிக்க வந்ததால் படிப்பை தொடர முடியவில்லை. இருந்தாலும் அஞ்சல் வழியாக பிகாம் படிக்க ஆரம்பித்தேன். இப்போது அதுகூட முடியவில்லை. ஆனாலும் எனது டிகிரி படிப்பை முழுமையாக முடிப்பேன். அதற்கான நேரம் வரும். இவ்வாறு நஸ்ரியா நாசிம் கூறினார்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger