Monday 9 April 2012

தமிழ் செய்திகள்

- 0 comments
[Continue reading...]

மறுபடியும் ஷங்கருடன் விக்ரமா?

- 0 comments


படத்திற்கு பிறகு ஷங்கரும் விக்ரமும் இனைய போகிறார்கள் என்று கோடம்பாக்கத்தில்  பேச படுகிறது.

அனால் இது பற்றி ஷங்கர் தரப்பில் எந்த செய்தியும் வெளியாக வில்லை. நண்பனுக்கு பிறகு அவர் புதிய  கதையை ஆரம்பித்தத� �� வருகிறார் ஷங்கர்.
இந்தப்படம் கமர்சியல் படமா என்பது பற்றி இன்னும் எந்த தகவலும் இல்லை 


http://kathaludan.blogspot.com


[Continue reading...]

தமிழ் டர்ட்டி பிச்சரில் அனுஷ்கவா?

- 0 comments


ஹிந்தியில் வித்யா பாலன் நடித்து வெளியான டர்ட்டி பிச்சர் இப்போது தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளிலம் ரீமேக் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
அனுஷ்காவை இந்தபடத்தில் நடிக்கவைகவும் முடிவுசெ� �்துள்ளனர்.தெலுங்கு,தமிழ் என இரண்டிலும் மார்க்கெட் இருப்பதால் இந்த படத்தை அனுஷ்காவை நடிக்கவைக்க முடிவு செய்துள்ளனர்.
அனுஷ்காவும் இந்த படதில் நடிக்க தயாராக உள்ளாறாம்.சம்பளம் ஓகே ஆனால் படத்தை ஆரம்பித்து விடுவார்களாம்.
இந்தபடம் ஹிந்தியில் நெசனல் அவார்டு பெற்ற படம் என்பது குறீபிடத்தக்கது.   


http://kathaludan.blogspot.com


[Continue reading...]

கமலஹாசனும் அந்தாதியும்

- 0 comments


அந்தாதி என்பது யாப்பியலில் ஒரு தொடை வகையையும், ஒரு பிரபந்த வகையையும் குறிக்கும். அந்தாதி என்னும் சொல், முடிவு என்னும் பொருள்படும் அந்தம், தொடக்கம் என்னும் பொருள்படும் ஆதி, ஆகிய இரு சமஸ்கிருதச் சொற்களின் சேர்க்கையால் உருவானது. அந்தாதியிலும் அந்தாதி இருப்பதைப் பார்க்கலாம். அதாவது அந்தம் ஆரம்பத்திலும் ஆதி முடிவிலும் இருக்கிறது. இ� ��ற்கேற்ப, ஒரு பாடல் முடிவில் உள்ள எழுத்து, அசை, சீர், சொல், சொல் அல்லது அடி, அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமையும் பாடல்களால் ஆனது அந்தாதிச் செய்யுள் ஆகும். அடுத்தடுத்து வரும் அடிகள் அந்தாதியாக அமையும் போது அது அந்தாதித் தொடை எனப்படும். அந்தாதி அமைப்பு, பாடல்களை வரிசையாக மனப்பாடம் செய்வதற்கும், தொடர்பு மாறாமல் பாடுவதற்கும் வசதியாக உள்ளது. ஒரு பாடலின் ஈற்றடியின் க� �ைச்சொல் (அந்தம்), வரும் பாடலின் துவக்கச் சொல்லாக‌ (ஆதி) அமையும் இலக்கண முறை அந்தாதி ஆகும்




சில வகை அந்தாதிகள்

ஒலியந்தாதி
பதிற்றந்தாதி
நூற்றந்தாதி
கலியந்தாதி
கலித்துறை அந்தாதி
வெண்பா அந்தாதி
யமக அந்தாதி
சிலேடை அந்தாதி
திரிபு அந்தாதி
நீரோட்ட யமக அந்தாதி

அந்தாதித் தொடைக்கு எடுத்துக்காட்டாக, இளம்பூரணர் பின்வரும் பாடலைக் கொடுத்துள்ளார்.

உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி
மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை
அறிவுசேர் உள்ளம ோ டருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தர் அஃதென்ப
பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே[2]

மேலேயுள்ள பாடலில் பல வகையான அந்தாதித் தொடைகள் பின்வருமாறு வந்துள்ளன.

முதலாம் இரண்டாம் அடிகள் - அசையந்தாதி
இரண்டாம் மூன்றாம் அடிகள் - சீரந்தாதி
மூன்றாம் நான்காம் அடிகள் - சீரந்தாதி
நான்காம் ஐந்தாம் அடிகள் - அடியந்தாதி
ஐந்தாம் ஆறாம் அடிகள் - சீரந்தாதி
ஆறாம் ஏழாம் அடிகள் - எழுத்தந்தாதி
ஏழாம் எட்டாம் அடிகள் - எழுத்தந்தாதி
எட்டாம் முதலாம் அடிகள் - சீரந்தாதி

பக்திப் பாடல்களில் அபிராமி அந்தாதி பிரபலமானது. அபிராமி பட்டரால் இயற்றப்பட்டது. 

மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூரில் அபிராமி அம்மன் அமிர்தகண்டேசுவரர் கோயில் உள்ளது. அங்கு கோவிலில் (சுப்ரமணி அய்யர்) அபிராமியின ் பட்டராக இருந்தார். அக்காலத்தில் பஞ்சாங்கம் தெரிந்தவர்தான் பட்டராக இருக்க முடியும். இவருக்கு அபிராமியின் மீது தீராத பக்தி, அப்பக்தியினால் சிலசமயம் பித்தனாகக் காட்சி அளிப்பார். அதைப் பயன்படுத்தி அவரை ஒழித்துக் கட்ட நினைத்தனர் அவரது சக பட்டர்கள். அப்பகுதியை ஆண்ட மராட்டிய மன்னர் சரபோஜி ஒரு நாள் அக்கோவிலுக்கு சிவனை தரிசிக்க வந்தார். மன்னரிடம், இவர் ஒரு திமிர் பிட ித்தவர் வேண்டுமென்றால் சோதித்துப் பாருங்கள் என்றனர் சக பட்டர்கள். மன்னரும் அன்று அமாவாசை என்பதை அறிந்திருந்தும், அன்னையை மெய்யுருகி வணங்கிக் கொண்டிருக்கும் பட்டரிடம் இன்று என்ன திதி என்று கேட்க அவர் அன்னையின் முகத்தைப் பார்த்து கொண்டே பௌணர்மி என்று கூறினார். மன்னர் மீண்டும் கேட்டார். மீண்டும் அதே பதில். இதைக் கேட்ட மன்னர் கோபமுற்று இன்று இரவு முழு நிலவு வரவில ்லை என்றால் இவரை அக்னிக் குண்டத்தில் இறக்கி விடுங்கள் என்றார். மாலை அக்னிகுண்டம் ரெடியானது அவரைச் சங்கிலியால் கட்டி இறக்கத் தயாரானார்கள் . அப்பொழுதும் அன்னையை நினைத்து அந்தாதி வகையில் பாட ஆரம்பித்தார். அவர் 79 வது பாடல் பாடும் பொழுது அன்னை அபிராமி, தனது வைரக் காதணியை கழற்றி எறிய அது வானில் முழு நிலவு போல் ஜொலித்ததாம். அதன் பின் அபிராமி, பட்டருக்குக் காட்சியளித்து 1 00 பாடல்களையும் பாடச் சொன்னாராம். அதுதான் பின்னாளில் அபிராமி அந்தாதி எனப் புகழ் பெற்றது. மாதிரிக்கு இங்கு 23,24,25 பாடல்களை கொடுத்துள்ளேன் நீங்கள் கேட்டிருப்பீர்கள்.

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டந்தன்னை
உள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளதே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண் மணியே. 23

மணியேமணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அனுகாதவர்க்குப்
பிணியே பிணி� �்கு மருந்தே அமரர் பெரு விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே. 24

பின்னே  திரிந்துன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னு� ��் அருமருந்தே
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே. 25

சரி திரைப்படத் துறையில் பயன் படுத்திய விதம் பார்ப்போம்

பாலச்சந்தர் இயக்கிய மூண்று முடிச்சு என்ற படத்தில், கமலஹாசன், ஸ்ரீ தேவி,ரஜினிகாந்த் ஆகியோருக்காக ஒரு பாடல் காட்சி அமை த்திருப்பார். அதில் காட்சி அமைப்பும்,அதனுடன் பாடல் அமைந்த விதமும் என்னை மிகவும் கவர்ந்தது. பாடல் என்னவோ சோகத்தில் முடிந்தாலும், தமிழின் யாப்பிலக்கண விதிகளில் ஒன்றான அந்தாதி வகையில் அந்த பாடல் அமைந்துள்ளதுதான் அந்தப் பாடலின் விசேஷம். மேலும் அதை ஒரு போட்டிப் பாடல் வகையில் கண்ணதாசன் அமைத்திருப்பார். சீரந்தாதியின் விதிப்படி கமலஹாசன் ஆரம்பிக்க அவர் முடிக்கும் வா� �்த்தையில் ஸ்ரீதேவி ஆரம்பிக்க வேண்டும். அதுபோல் ஸ்ரீதேவி முடிக்கும் வார்த்தையின் ஆரம்பத்தில் மீண்டும் பாடல் ஆரம்பிக்க வேண்டும். இதுதான் போட்டியின் விதி பாலச்சந்தரைத் தவிர யாருக்கும் இந்த மாதிரி சிந்தனை வரவே வராது.

பாடல் நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கும். ஸ்ரீதேவி "மணவினைகள்" என்று முடித்துவிட்டு கமலஹாசனை ஊம், அடுத்துப் பாடுங்கள் என்ற பொழுது ஹீரோவுக்கு பாடல் வராது. சிரித்து மழுப்பி வார்த்தைகளை தேடும் பொழுது, தவறி ஆற்றில் விழுந்து விடுகிறார்.


இதை மாத்தி யோசிக்கும் பொழுது வேறுவிதமாகத் தோன்றுகிறது. இதே போன்ற ஒரு காட்சியில் வறுமையின் நிறம் சிவப்பு என்ற படத்தில் ஒருமுறைக்கு இருமுறை ராகத்தைக் கேட்டு பின்னர் சமாளித்து பாட்டைப் பாடி விடுவார்.


ஆனால் இங்கே பாடலை முடிக்க முடியாமல் சமாளித்தும், முடியாததால், "ஆஹா தமிழில் நாம் தவறி விட்டோமோ என்று தற்கொலை செய்து கொண்டாரோ எனக் கூட எண்ணத் தோன்றுகிறது. ஆனால் இத்துடன் கிளைமாக்ஸ் முடிந்து விடவில்லை.

காதலனைக் காப்பாற்றும் படி வில்லனைக் கேட்டால், அவன் எப்படி காப்பாற்றுவான்?. ஆனால் வில்லன் என்றாலும் சாதாரண வில்லனல்ல (யந்திரனை நினைவு படுத்துகிறார்) ஹீரோவால் முடிக்க முடியாத வரிகளை வில்லன் அதே போட்டிப் பாடல் விதியை பின் பற்றி பாடலை முடிப்பதுதான் கிளைமாக்ஸ்.

நீங ்கள் பாடலை (MP3 ல்) மட்டும் கேட்டால் வில்லனின் கடைசி வரிகள் இருக்காது என்று நினைக்கிறேன். படத்தோடு பார்த்தால்தான் வில்லனின் புலமையும் தெரியும். பாடலைப் படித்துப் பாருங்கள். இப்பாடல் இசை நயத்திற்காக ஒவ்வொரு வரிகள் இரண்டு தடவை பாடப் படுவதை பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆண்
வசந்த கால நதிகளிலே வை ரமணி நீரலைகள்
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
பெண்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்� �ாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்கணைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்
ஆண்
மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால் மடி இரண்டும் பஞ்சனைகள்
மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால் மடி இரண்டும் பஞ்சனைகள்
பஞ்சனையில் பள்ளிக் கொண்டால் மனம் இரண்டும் தலையணைகள்
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
பெண்
தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக் கலைகள்
தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக் கலைகள்
புதுக்கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள்
ஊம் ம்ம்ம் ஊம்ம்ம் ...........பூமாலை மணவினைகள்
ஆண் .............................
ஆண் (வில்லன்)
மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவகைகள்
மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவகைகள்
விதிவகையை முடிவு செய்யும் வசந்த கால நீரலைகள்

அதன் பின்னரும் படத்தைப் பார்த்ததால் சில எண்ணங்கள் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. கதையின் நாயகி அந்த வில்லனை மன்னித்து மகனாக ஏற்றுக் கொள்கிறாள். சிலர் சொல்வார்கள் அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக அவனின் தந்தையை மணந்து கொண்டாள் என்று. எனக்கென்னவோ அவள் இவ்வாறு நினைத்திருக்கலாம். காமத்தினால் நண்பனின் மரணத்தை வேடிக்கை பார்க்கும் வில்லனாக இருந்தாலும் க� �ிதையை முடிக்கும் புத்திசாலித் தனம் இருப்பதால் மகனாக ஏற்றுக் கொண்டாளோ எனத் தோன்றுகிறது. ஏனென்றால் கவிதை இருக்கும் இடத்தில் கண்டிப்பாக நல்ல குணங்கள் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் புத்திசாலித் தனத்துக்கு கேரண்டியாவது இருக்கும்.

ஆகவே மக்களே உங்கள் உணர்ச்சிகளின் பெருக்கை கவிதையாய் செய்யுங்கள். சிலருக்கு கவிதை தானாக வந்து விடும். ஆனால் கவிதை வரவில்லை என்று தெரிந்த பின்பும் எழுதி  மற்றவர் கழுத்தை அறுக்காதீர்கள். கவிதை மோசமானால் உங்களது கெட்ட குணங்களோடு, அறிவீனமும் தெரிந்து விடும்.

முடிந்தால் இதையும் படித்து விடுங்கள்  .
பழனி.




http://meena-tamilsexstory.blogspot.com

[Continue reading...]

சதுரங்க விளையாட்டின் வரலாறும், மூலமும் ( பாகம் 6)

- 0 comments


Previous
பாகம் 6
சென்ற பதிவில்
வினோத் குமார் என்பவரின் கேள்வி:
ஜோதிடத்தில் உள்ள உச்சம், நீசம், வக்கிரம் போன்றவை சதுரங்கத்தில் இருக்கிறதா ?

பதில்:
விளையாட்டு, ஆட்சி நிலையில் ஆரம்பிக்கப் படுகிறது. உச்சத்தில் (அதிகபட்ச இட மதிப்பு) வெற்றியும், நீசத்தில் (மிகக் குறைந்த பட்ச இடமதிப்பு) தோல்வியும், வக்கிரத்தில� �� தற்காப்பு ஆட்டமும் எனக் கொள்ள வேண்டும். பொதுவாக சதுரங்க ஆட்டத்தின் பிரச்னைகள் பாதி மூவைக் கொண்டு ஆராயப் படும் விதம் அறிவோம். அது போன்றுதான் ஜாதகப் பொருத்தமும். சதுரங்கத்தில் ஆரம்பம், இடை, முடிவு என்று ஆட்டங்கள் பலவிதமாக அலசப்படுகிறது. (Opening Game, Middle Game, End Game,)

http://en.wikipedia.org/wiki/User:Sentriclecub/Gothic_Chess_openings_middlegame_and_endgame

பொதுவாக ஜாதகம் என்பது பா தி விளையாடிய விளையாட்டின் நிலைமை எனக் கொள்ள வேண்டும். இந்த கேம்மில் யார் ஜெயிப்பார்கள் என்று அலசுவதே ஜாதகப் பொருத்தம் பார்ப்பதுதான். பொதுவாக நீங்கள் பார்த்திருக்கலாம், செஸ் பற்றிய புத்தகங்கள் எல்லாம் செஸ்ஸை எப்படி விளையாடுவது என்பதைப் பற்றி இருக்காது. ஏனென்றால் அதன் விதிகள் மிகவும் எளிமையானவை அதை இரண்டு பக்கங்களில் முடித்துவிடலாம்.

ஆனால் செஸ் புத்தகங்கள் முற்றிலும், 99 சதவீதம், பாதி விளையாடிய, பலவிதமான விளையாட்டின், திருப்பு முனைகளால் ஏற்படும் மாற்றங்கள், மற்றும் தீர்வுகள் (Chess problems and solutions) பற்றியவையாகத்தான் இருக்கும்.

கேள்வி:
உங்கள் கருத்தின் தேவைக்கு தகுந்த மாதிரி அறிவியலை மாற்றிக் கொள்வீர்களா? ஒரு நேரம் சூரிய மைய சித்தாந்தம் தான் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது என்கிறீர்கள் மற்றொரு நேரத்தில் பூம� �� மையச் சித்தாந்தத்தை கலந்து சொல்கிறீர்கள் எதை எடுத்துக் கொள்வது.?

பதில்:
இதில் என்னுடைய திணிப்பு, மறைப்பு என்று எதுவுமில்லை. உங்களுக்கு ஜாதகம் தெரியும் என்றால் இந்த விஷயம் எவ்வளவு உண்மை என்பது சொல்லப்பட்ட விஷயத்தில் தெளிவாகி இருக்க வேண்டும். ஜோதிட அறிவியலைத்தான் உள்ளது உள்ளபடி எடுத்தாண்டுள்ளேன். மேலும் அவற்றிலுள்ள அறிவியலை எடுத்து விளக்கியுள்ளேன்.

ந ாம் ஒன்றும் இந்த சூரிய மண்டலத்தின் மேலே இருந்து பார்வையிடும் பார்வையாளர்கள் அல்லவே? நாம் இந்த சூரிய மண்டலத்தின் உள்ளே, அதுவும் பூமியின் மேற்பரப்பில் தானே இருக்கிறோம். அதிலும் ஜோதிடம் என்பது அக்காலத்தின் தேவையை ஒட்டி, மனிதனை மையப் படுத்தி உருவாக்கப் பட்ட அறிவியல், ஆகவே நாம் கணக்கிட வேண்டியது மனிதனை மையமாக கொண்ட, பூமி மையச் சித்தாந்தம் தான். மனிதனுக்கு, மனிதன் சொல� �லி எளிதில் விளங்கிக் கொள்வதற்காகத் தான் பூமி மையச் சித்தாந்தம்.

"சூரியமண்டல பார்வையாளர்" களுக்கு கிழக்கு, மேற்கு என்று நாம் திசை சொல்லிக் கொள்வது படு கேலிக் கூத்தாகத் தெரியும். ஆனால் நமது அன்றாட வாழ்வில் கிழக்கு, மேற்கில் எந்த சிக்கலும் இல்லையே அது போன்றுதான் பூமி மையச் சித்தாந்தத்தினால் எந்தச் சிக்கலும் இல்லயே. எல்லாமே ஏதோ கற்பனையில் தோன்றியதை எழுதி வைத்த� �ை அல்ல. ஒவ்வொன்றும் பலநூறு வருடங்கள் தினசரி கவணிக்கப் பட்டு ஆவணப்படுத்தப் பட்டவைதானே. தவறு இல்லாத வரை எந்தச் சித்தாந்தமாக இருந்தால் என்ன? அது மட்டுமில்லாமல் நமது முன்னோர்கள் இரண்டு விதமான சித்தாந்தங்களையும் தெரிந்து வைத்திருந்தனர் என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளது. அதை தேவைப்பட்டால் இன்னொரு சந்தர்ப்பத்தில் விவாதிக்கலாம்.

கேள்வி: அது சரி, புதன் அஸ ்தங்கத்தில் சிக்கிவிடும் என்றால் என்ன?.

அஸ்தி என்றால் சாம்பல். அஸ்தமனம் என்றால் எரிந்து மறைவது. ஆகவே அஸ்தங்கம் என்றால் எரிதல் எனப் பொருள் கொள்ளலாம். எந்த கிரகமாவது சூரியனின் திசையில் சூரியனுக்கு முன்பாகவோ பின்புறமாகவோ குறிப்பிட்ட டிகிரிவரை நின்றால் அவர்கள் அல்லது அவர்களது சக்தி சூரியனால் எரிக்கப்பட்டு விடும். அதாவது சூரியனின் சக்திக்கு முன் அவர்கள் சக்தி எடுபடாது. இதைத்தான் சூரியனின் நட்சத்திர அந்தஸ்து என்பேன். இதில் முக்கியமான விஷயமே இந்த எரிக்கும் குணாதிசயம்தான். இது வேறு எந்த கிரகத்துக்கும் கிடையாது. "கிரகம்" என்பது ஜோதிடத்தைப் பொறுத்தவரை "வானியல் சார்ந்த பொருள்" என்பதுதான் சரியான விளக்கம். இது புரியாத அரை வேக்காட்டுப் பகுத்தறிவு வாதிகள் சூரியனை கிரகமாக வைத்திருக்கிறார்கள� �� என்று முட்டாள்தனமாக, கழுதையாய் கத்துகிறார்கள். இவர்களுக்கு யார் எடுத்துக் சொல்லி புரிய வைப்பது எனத் தெரியவில்லை.

அது மட்டுமல்ல ஜோதிடத்தை கண்டுபிடித்தவன், ஒவ்வொரு கிரகத்தின் அளவுக்குத் தகுந்தவாறு குறிப்பிட்ட டிகிரி வரை தான் சூரியனின் சக்தி மறைக்கும் என்பதையும் அளந்து சொல்லியுள்ளான். எத்தனை டிகிரி என்பது கிரகத்தின் அளவு, மற்றும் தூரம் ஆகிய வற்றைப் பொறுத்து கணக்கிட்டு கூறியுள்ள பாங்கை நோக்கும் போது இது தெய்வீக வாய் மொழியோ எனக் கூட எண்ணத் தோன்றுகிறது.

செவ்வாய் 17 டிகிரி,
புதன் 13 டிகிரி,
குரு 11 டிகிரி,
சுக்கிரன் 8 டிகிரி,
சனி 15 டிகிரி,
சந்திரன் 12 டிகிரி,

புதனுக்கு அஸ்தங்கம் மட்டுமல்ல அடிக்கடி வக்கிரத்திலும் சஞ்சரிப்பதால் அதை விளையாட்டில் எடுத்துக் கொள்ளவில்லை போலும்.

கேள்வி:
யுத்தகளத்திற்கு ராஜா சரி, ஆனால் இங்கு எப்படி ராணி வந்தார்.? சூரிய, சந்திரர்கள் ஆண்கள்தானே?.

பதில்:
ஆதியில் இந்தியரின் செஸ் விளையாட்டுப்படி அது ராணியாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதை ஒரு சிறிய ஆராய்ச்சியின் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்தியாவில் எந்த அரசனாவது யுத்தகளத்திற்கு ராணியை அழைத்துச் செல்வானா? அல்லது ராணி யுத்தத்தில் பங்கு பெறுவார்களா? அர� ��ன் போர்க்களத்தில் தோற்று விட்டான் என்று தெரிந்தாலே அரன்மனையில் தீக்குளிக்கும் வழக்கமுடையோர், இந்நாட்டவர், அவர்களை போர்க்களத்தில் போராடுவது போல் சித்தரிப்பது விளையாட்டை தத்து எடுத்தவன், இட்டுக் கட்டிய கதை என்பது தெளிவாகப் புரியவில்லையா?. "யுத்தக்களத்தில் பெண்கள்" என்பது பண்டைய மரபுக்கு ஒத்து வராத ஒன்று. (தவிர்க்க முடியாத விதி விலக்குகளை உதாரணம் காட்டி மொக்கைய� �� விவாதத்திற்கு இழுக்காதீர்கள்). அதிலும் ராஜாவை விட ராணிக்கு அதிகாரம் அதிகம் தரப்படுவது இந்திய மரபுக்கு முரணானது. ஆகவே அது ராணி அல்ல உண்மையில் அது தளபதி அல்லது மந்திரியாகத்தான் இருக்கமுடியும். அவருக்குத்தான் யுத்தகளத்தில் ராஜாவை விட அதிக அதிகாரம் உள்ளது. ராஜா ஒருவர்தான் இருக்கமுடியும் அது போல் மந்திரியும் ஒருவர்தான் இருக்கமுடியும்.


வெளி நாட்டினர் தங்களது சீட்டுக் கட்டில் ராணியை வைத்து இருப்பதால் செஸ் ஆட்டத்திலும் மந்திரிக்கு பதிலாக ராணி என மாற்றி விட்டனர் போலும். நல்லவேளை ஜோக்கர் என்று யாருக்கும் பெயர் மாற்றவில்லை. மதகுரு என்பவருக்கு எல்லா மனித இனங� �களிலும் முக்கியத்துவம் அளிக்கப் படுவதால் இங்கும் அவர் பிஷப் என பெயர் மாற்றம் பெற்றார். அது மட்டுமில்லாமல் ராஜாவின் தலையில் சிலுவையும் வைத்து விட்டனர். உண்மையில் ராஜாவின் தலையில் சூரியனும் மந்திரியின் தலையில் பிறைநிலவும் இருக்க வேண்டும்.

ஆராய்ந்து பார்த்தால் சீட்டுக் கட்டும் ஜோதிடத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கலாம். ஒரு வருடத்தின் நாட்களாகிய 364 ஐ சந்திர� ��ின் சுழற்சிக் காலமாகிய 28 நாட்களால் வகுத்தால் (13 மாதம் ) வருகிறது. 13 என்பது சீட்டுக்களின் எண்ணிக்கை. ஒருவருடத்தின் மொத்த வாரங்களை கணக்கிட்டால் 52, இது மொத்த சீட்டுக்களின் எண்ணிக்கையை குறிப்பதாகும். மற்றபடி ராஜா-சூரியன்,ராணி-சந்திரன், ஜாக்-சுக்கிரன்,ஜோக்கர்-சனி. இதனுடைய தோற்ற காலத்தின் வரலாற்றை நோக்குங்கால் இதுவும் சதுரங்கத்தை ஒட்டி வருகிறது.

தொடரும்................................ ........

இரா.சந்திரசேகர்,
பழனி.


http://meena-tamilsexstory.blogspot.com

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger