Showing posts with label கள்ள உறவு. Show all posts
Showing posts with label கள்ள உறவு. Show all posts

Tuesday, 6 August 2013

கள்ளக் காதலியின் 2 மாத குழந்தையை ஆன்லைனில் 100 டாலருக்கு விற்க முயன்றவன் கைது

- 0 comments
அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த பால் மார்குவெஸ்(23) என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் ஆன் லைன் மூலம் ஓர் இளம் பெண்ணுக்கு அறிமுகம் ஆனார்.

கணவரை இழந்து தனிமையில் வாழ்ந்த அந்த பெண்ணுடன் பால் மார்குவெஸ் கள்ளத் தொடர்பு வைத்துக்கொண்டு ஒரே வீட்டில் சந்தோஷமாக வசித்து வந்தார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் கள்ளக் காதலிக்கு பழைய கணவன் மூலம் கருத்தரித்த குழந்தை பிறந்தது.
[Continue reading...]

Saturday, 3 August 2013

டயானா வின் காதலர்கள்

- 0 comments

இங்கிலாந்து இளவரசர் சார்லசை திருமணம்
செய்து கொண்ட டயானா, 31-8-1997ம் ஆண்ட
காதலர் டோடி ஃபயீத்துடன் பாரீஸ் நகர கார்
விபத்தில் பலியானார்.

சார்லசுடன் வாழ்ந்த
போதே இன்னொரு நபரை காதலிப்பதாக
டயானா அளித்த பேட்டி இங்கிலாந்து ராஜ
குடும்பத்தை பெரும் அதிர்ச்சியில்
ஆழ்த்தியது. இதனையடுத்து,
டயானாவை விவாகரத்து செய்து விடும்படி சார்லசை ராணி எலிசபத்
வற்புறுத்தினார்.

வில்லியம், ஹாரி என்ற
இரு மகன்களை சார்லசுடன் பெற்ற
டயானா விவாகரத்து பெற்று தனித்து வாழ்ந்தார்.
அப்போது பல்வேறு சமூக
தொண்டுகளை செய்து வந்த
டயானா பாகிஸ்தானை சேர்ந்த டாக்டரான
ஹஸ்னத் கான் என்பவரை உயிருக்குயிராக
காதலித்தார்.

டாக்டர் ஹஸ்னத் கான் பாகிஸ்தான் முன்னாள்
கேப்டனும் தற்போதைய தெஹ்ரிக் இ இஸ்லாம்
கட்சியின் தலைவருமான இம்ரான்கானின்
உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்
கொள்வதற்காக இம்ரான் கானின்
மனைவி ஜெமிமா கானுடன்
டயானா நட்பை ஏற்படுத்திக் கொண்டார்.
டயானா விபத்தில் இறந்து 16 ஆண்டுகள்
கழித்து அவரது மகன் இளவரசர்
வில்லியமிற்கு கேட் மிடில்டன் மூலம் ஆண்
குழந்தை பிறந்துள்ளது. அந்த
குழந்தைக்கு ஜார்ஜ் என பெயரிடப்பட்டுள்ளது.
இதனையொட்டி, உலகப்புகழ் பெற்ற
வேனிட்டி ஃபேர் பத்திரிகையில் தனக்கும்
டயானாவுக்கும் இருந்த நட்பு பற்றி இம்ரான்
கானின் மனைவி ஜெமிமா கான் ஓர்
கட்டுரையை எழுதியுள்ளார்.

குட்டி இளவரசன் ஜார்ஜ்
எப்போதுமே அறிந்திராத பாட்டி (த
கிராண்ட்மதர் பிரின்ஸ் ஜார்ஜ் நெவர் நியூ) என
அந்த கட்டுரைக்கு அவர் தலைப்பிட்டுள்ளார்.

காதலர் ஹஸ்னத் கானை சந்திக்க
பாகிஸ்தானுக்கு டயானா 2
முறை வந்ததையும், பாகிஸ்தானில் உள்ள
அவரது ஆஸ்பத்திரிக்கு நிதி திரட்ட அவர்
உதவியதையும் ஜெமிமா கான் அந்த
கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மீதிருந்த வெறித்தனமான காதலின்
வெளிப்பாடாக டாக்டர் ஹஸ்னத்
கானையே திருமணம்
செய்து கொண்டு பாகிஸ்தானில் குடியேற
டயானா திட்டமிட்டிருந்ததையும்
ஜெமிமா சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த காதலும் கசந்து போனதால் பிரான்ஸ்
நாட்டை சேர்ந்த டோடி ஃபயீத் என்பவருடன்
டயானா ரகசியமாக ஊர் சுற்ற ஆரம்பித்தார்.

இருவரும் இணைந்து காட்சியளிக்கும்
புகைப்படங்களை படம் பிடிக்க கேமராக்களும்,
பிரசுரிக்க பத்திரிகைகளும் போட்டி போட்டுக்
கொண்டு இந்த ஜோடியை விரட்ட தொடங்கின.
பத்திரிகை பரபரப்பு (பாப்பராசி) எனப்படும்
இந்த விரட்டலில் இருந்து தப்பிக்க காதலர்
டோடி ஃபயீத்துடன் பாரிசில் உள்ள
சுரங்கப்பாதையில் தலைதெறிக்கும் வேகத்தில்
காரில் சென்ற டயானா பயங்கர விபத்தில்
சிக்கி பரிதாபமாக பலியானார்
என்பது குறிப்பிடத்தக்கது.

[Continue reading...]

Monday, 22 July 2013

கங்கா தேவி சொகுசு ஓட்டலில் கள்ளக்காதலுடன் கைது

- 0 comments
திருவான்மியூர் லட்சுமி புரத்தை சேர்ந்தவர்
சரவணன். தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில்
வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி கங்கா தேவி.
இவர்களுக்கு திருமணமாகி 10
ஆண்டு ஆகிறது. குழந்தை இல்லை.
கங்கா தேவி சரவணனுக்கு முறைப் பெண்
ஆவார்.
சரவணன் பார்த்து வந்த வேலை பறிபோனதால்
கங்கா தேவி திருநின்றவூரில் உள்ள தாய்
வீட்டிற்கு சென்று அடிக்கடி பணம்
வாங்கி குடும்ப செலவை கவனித்தார்.
[Continue reading...]

Wednesday, 26 June 2013

கவிதாவின் கள்ளகாதல் - Tritchi kavitha

- 0 comments
 கவிதாவின் கள்ளகாதல்

கள்ளக்காதலனை திருமணம் செய்து வைக்க வலியுறுத்தி, அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முன் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த சித்திரைப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கவிதா, 30. இவர்களுக்கு, 12 வயதில் பெண் குழந்தையும், எட்டு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். கவிதாவின் நடத்தை சரியில்லாத காரணத்தால், கணவர் சரவணன் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
அதே காரணத்துக்காக, கவிதாவின், இரு குழந்தைகளையும், அவரது தாயார் அழைத்துச் சென்று வளர்த்து வருகிறார். குழந்தைகளைப் பற்றி கவலைப்படாத கவிதாவுக்கு, திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியைச் சேர்ந்த யோகநாதன், 25, என்ற வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் தாலிகட்டாமல் குடும்பம் நடத்த துவங்கினர். கடந்த, இரண்டு ஆண்டாக துறையூர், கரூர் ஆகிய இடங்களில் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.
[Continue reading...]

Tuesday, 9 April 2013

நண்பனின் மனைவி ஆசை நாயகி - கள்ள உறவு செய்திகள்

- 0 comments
 ஆசை நாயகி  கள்ள உறவு செய்திகள்

நண்பனின் மனைவியுடன் கள்ள உறவு  கள்ளக் காதலி தற்கொலை! காதலனுக்கு 5 ஆண்டு சிறை
கள்ளக்காதலி தற்கொலை வழக்கில் கள்ளக்காதலனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகை கோர்ட் தீர்ப்பளித்தது.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்தவர் பஷீர் அகமது (30). இவரது மனைவி ஷாகிரா பேகம் (25). வடபாதிமங்கலம் அடுத்த கோம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (40). பஷீர் அகமதுவும், ஆரோக்கியசாமியும் நண்பர்கள்.
பஷீர் அகமது கடந்த 2005ல் வெளிநாடு சென்று விட்டார். இந்நிலையில் ஆரோக்கியசாமிக்கும், ஷாகிராவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் கூத்தாநல்லூரில் தனியாக வசித்தனர்.
ஆரோக்கியசாமியின் உறவினர்கள் கண்டித்ததால், ஷாகிராவை நாகை மாவட்டம் திருப்பூண்டியில் உள்ள அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார்.
இதனால் மனமுடைந்த ஷாகிரா கடந்த 2005 ஜூன் 11ம் தேதி அன்று தீக்குளித்து இறந்தார். Ôஆரோக்கியசாமியால்தான் தற்கொலை செய்ய முடிவு செய்ததாக மரண வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்த வழக்கு நாகை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வநாதன், ஷாகிரா பேகத்தை தற்கொலைக்கு தூண்டிய ஆரோக்கியசாமிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger