Friday 9 September 2011

விகடன் பாணியில் ���து சிறப்பு வலைப��பாயுதே - கலக்கல் ���லாய்ப்பு ட்விட்டுகளின் தொகுப்ப��.

- 0 comments


முஸ்கி:

இந்த வார வேட்டையில் சிக்கிய சிறந்த ட்விட்டுகளின் தொகுப்பு இது.
இதனில் சிறந்த ஒன்றினை தெரிவு செய்து, பின்னூட்டத்தில் தர முடியுமா உங்களால்...




 
தமிழகத்தில் 50 டுவீலர் வரிசையா ரோடு ஓரமா நின்னா அங்க ஒரு TASMAC இருக்குன்னு அர்த்தம்!! 

 
மனைவியின் ஐந்து மிஸ்டு கால்களை மொபைலில் பார்க்கும் தருணத்தை விட கலவரமான தருணம் வாழ்க்கையில் வர வாய்ப்பில்லை.!



அப்படியே சரவண பவன்ஹோட்டலையும் ரெய்டு பண்ணுங்க சாமி # தோசை 90 ரூபா


 
பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா? #லோக்பால் vs ஜன்லோக்பால்..,


 
முதலாளியை குறை கூறாத ஒரே தொழிலாளி பாரத பிரதமர் மட்டும்தான்.!
 
சுட்டால் பொன் சிவக்கும் என்பதற்கு துப்பாக்கியால் சுடுவதைப் போன்று ஆக்‌ஷன் செய்யும் எஸ்ஜே சூர்யாவை என்ன செய்யலாம் :-)


 
எமதர்மனுக்கு கருப்பு எருமையும், காமதேனுவுக்கு வெள்ளை பசுவும் கொடுத்திலிருந்தே ஆரம்பித்துவிட்டது நமது வெள்ளை மோகம்.




நடிப்புதான் என்று தெரிந்து விடாமல் எல்லோரிடமும் நடிக்கிறேன்... ஆனால் என்னிடம் மட்டும் என்னால் நடிக்க முடியவில்லை ...

கூட்டுக்குடித்தனம்னா மனைவியுடன் வாழ்வது , தனிக்குடித்தனம்னா மனைவியைப்பிரிஞ்சு வாழ்வது # 2011

ஊழலை ஒழிக்க லோக்பாலோ அமலா பாலோ தேவையில்லை. நேர்மையான மனசாட்சி இருந்தால் போதும்.
arasu1691 
பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளில் கொடுமையானது ''ஆப்-பாயில்'' சாப்பிட வாய்ப்பு வழங்காதது #முனியாண்டிவிலாஸ்சிந்தனைகள்



http://ahotstills.blogspot.com



  • http://ahotstills.blogspot.com

  • [Continue reading...]

    விஜயகாந்துக்கு ���து தான் சத்திய ச���தனைக்காலம்..

    - 0 comments




    ஜெயலலிதா, கருணாநிதிக்கு மாற்றாக விளங்ககூடியவர் என்று அடையாளம் காட்டக்கூடிய வகையில் தமிழகத் தலைவர்களில் மீதமிருப்பவர் என பெரும்பாலானவர்களின் ஈர்ப்பை பெற்றிருந்தார் விஜயகாந்த்.

    கறுப்பு எம்.ஜி.ஆர்., என்று அடையாளம் காட்டிக்கொள்ளும் விஜயகாந்த், "நானே முதல்வர்" என்ற அறைக்கூவலுடன் அரசியலுக்கு வந்தார் என்றாலும் கூட, "நாற்பது சட்டமன்ற தொகுதிக்கான சீட்" என்ற தொகுதி உடன்பாட்டுக்குள் வந்தவுடன், "அட போங்கப்பா... மீண்டும் ஜெயலலிதா, கருணாநிதி தானா?" என்று நடுநிலை வாக்காளர்கள் சலிப்பு தட்டினார்கள்.

    ஆளுங்கட்சிக்கு எதிராக செய்யும் அரசியல் நடத்தி, சீக்கிரம் கால் ஊன்றுதல், ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை தன் பக்கம் இழுத்தல் என்ற அரசியல் ஆரம்ப பாடத்தில் தேர்ச்சி பெற்று, தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் அளவுக்கு உயர்ந்திருக்கும் விஜயகாந்துக்கு இனி வரும் தேர்தல்கள் நிச்சயம் சத்திய சோதனை தான்.

    திமுக கூட்டணியில் இருந்து கொண்டே, கலைஞர் அரசுக்கு எதிராக அறிக்கை அரசியல் நடத்திய பாமகவின் மருத்துவர் பாணியில், அம்மாவிடம் கேப்டன் "உள்ளிருந்து எதிர்த்தல்" அரசியல் பண்ண முடியாது. 

    சட்டமன்றத்தில் இவ்வளவு அசுர பலம் கிடைக்கும் என்பது ஜெயலலிதாவுக்கு முன்பே தெரிந்திருந்தால், விஜயகாந்துக்கு நாற்பது சீட்டுக்களை ஜெயலலிதா ஒதுக்கி இருக்கமாட்டார், ஏன் கூட்டணியில் கூட சேர்த்திருக்கமாட்டார். விஜயகாந்த் இத்தனை தொகுதியில் ஜெயித்ததை அம்மா, அவ்வளவாக ரசித்திருக்க மாட்டார் என்பது தான் உண்மை.

    தேர்தலுக்கு முன்பே இப்படி என்றால், தேர்தலுக்கு பின்பு ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்வது விஜயகாந்துக்கு இப்போதைய சூழ்நிலையில் கஷ்டம் தான்.

    இன்னும் ஆட்சிக்கு எதிராக அதிக அளவில் போராட்டங்களோ, முணுமுணுப்புகளோ, பெரிய அளவில் கிளம்பாத நிலையில்,
    ஜெயலலிதாவை எதிர்த்தால், தேமுதிகாவுக்கு உள்ளாட்சி தேர்தலில் இதே அளவு அடையாளம் கிடைக்குமா என்பது கேள்விக்குறி.

    சமச்சீர் கல்வி விஷயத்தில் கம்யூனிஸ்டுகள் அரசுக்கு, எதிர்ப்பு காட்டிய போது, விஜயகாந்த் எதிர்க்க துணியவில்லை என்பது தான் உண்மை. குதிரை கிடைக்கும் வரை கழுதை என்று சப்பைக்கட்டு தான் கட்ட முடிந்தது.(இப்போது கழுதை தான் என்று முடிவாகிவிட்டபின், குதிரை தேடுகிறார்களா என்றால் அதுவும் இல்லை, அம்மா சொன்னால் கழுதை தான் இந்த கள்ளழகரின் குதிரை போல)

    அதிமுக போலவே தேமுதிகவும் கிராமப்புறங்களில் அதிக வாக்கு வங்கியைக்கொண்டிருக்கிறது என்பது உண்மைதான். இது முக்கியமாக "கவர்ச்சியை அடிப்படியாகக் கொண்ட வாக்கு வங்கி". எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் என்ற பிம்பங்களுக்காக மட்டும் வாக்களிப்பவர்கள் இன்றும் அதிக அளவில் இருக்கிறார்கள்.

    தமிழக அரசியலைப் பொறுத்தவரை, நடிகர்கள் மீதான கவர்ச்சியை அப்படியே, ஓட்டுக்களாக மாற்றும் வித்தை எம்.ஜி.ஆர், தவிர வேறு யார்க்கும் வாய்க்கவில்லை. விஜயகாந்துக்கு கட்சியை நடத்தும் அளவுக்கு அந்த கவர்ச்சி உதவியிருக்கிறது அவ்வளவே.

    இலவசங்களை காட்டி இந்த ஓட்டு வங்கியை தன் பக்கம் திருப்ப திமுக போட்ட திட்டங்கள் அரசியல் சுனாமியால் அடித்துச் செல்லப்பட்டு விட்டதால்.., சினிமாவை அடிப்படையாக கொண்ட, வெள்ளந்தி மனிதர்களின் வாக்கு வங்கியை தக்க வைத்து கொள்வதில் உண்மையில், ஜெயலலிதாவுக்கும், விஜயகாந்துக்கும் இடையே தான் போட்டி.

    கிராமப்புறங்களில் தேமுதிக வேர் ஊன்றி விட்டால், தமிழக அரசியலில் விஜயகாந்த், தவிர்க்க இயலாத சக்தியாக மாறிவிடுவார் என்பது ஜெயலலிதா தெரியாமல் இல்லை.

    ஆட்சியில் இருப்பதால், சலுகைகளை வழங்கி, கிராமபுற ஓட்டு வங்கியை தக்க வைத்துக்கொள்ளவே ஜெயலலிதா விரும்புவார் என்பதால், இந்த விஷயத்தில் விஜயகாந்துக்கு அவர் வழிவிடப்போவதில்லை.

    டிஸ்கி:    
    ஆட்சியாளர்களை ஆதரித்து அரசியல் நடத்தலாம் என்றால் அதற்கும் வழியில்லை. சரத்குமார், கிருஷ்ணசாமி, ஜாவஹிருல்லா என பெரும் கூட்டமே காத்துகொண்டிருக்கிறது. (உங்களுக்கு சந்தேகம் இருந்தால், ஏதேனும் ஒரு நாளின் சட்டமன்ற நிகழ்வை ஜெயா டிவியில் பாருங்களேன்)


    http://ahotstills.blogspot.com



  • http://ahotstills.blogspot.com

  • [Continue reading...]

    மச்சீ... ஒரு குவாட்டர் சொல்லு.... நட்பு கற்பிழக்கட்ட��ம்..

    - 0 comments




    இது கூத்தாடும் நேரம்...
    வா கூத்தடிப்போம் என்று
    கூவி அழைக்கும் நண்பா...

    உன்னை பிடித்திருக்கும் அளவுக்கு
    உன் அழைப்பு எனக்கு பிடித்திருக்கவில்லை
    என்பதை ஏன் உணர மறுக்கிறாய்?

    நான் ஒன்றும் புத்தன் இல்லை என்றாலும்,

    ஒரே மணித்துளியில்
    சித்தார்த்தனின் மரணமும்,
    புத்தனின் பிறப்பும் நிகழ்ந்ததை
    போல..,

    ஒரே கணத்தில் மரணித்து,
    அதே கணத்தில் புதிதாய் பிறந்தவன் நான்..
    அதுவும் அதிக முறை.

    ஒரு பக்கம் அன்பென்ற சிவத்தையும், 
    மறு பக்கம் அது இல்லா சவத்தையும் 
    தாய் தந்தையென
    ஒரே வீட்டில்
    பார்த்து பார்த்து வளர்ந்த
    துயர சுகங்கள் 
    போல
    ஏராளம்
    என்னுள் இருக்கிறது.

    சின்னதொரு சந்தோஷம்
    மூளைக்கு
    சென்று சேரும் முன்
    இதயம் கிழிபடும் 
    கள்ளிக்காட்டு சருகு நான்..

    பீட்ஸா, பர்கர், பீர் , ரம் என்று
    "பார் இது தான் என் உலகம்" என
    நீ காட்டும் உலகிற்கும்
    எனக்கும் வெகுதூரம்..

    எதுவும் தப்பில்லை என்ற
    இன்றைய யுகத்தில்,

    குடித்தால் மட்டுமே ஆண்பிள்ளை
    என்றால்
    நான் "அப்படியே" இருந்து விட்டு போகிறேன்...

    ஆனால் நட்பென்பது
    தன் "தீயப்பழக்கத்தின் 
    நிழல்" கூட நண்பன் மீது விழாமல்
    பார்த்து கொள்வதில் தான்
    பூர்ணமடைகிறது
    என்பதை உணர்ந்து கொள்...

    டிஸ்கி:

    தன்னை குடிக்க அழைத்த நண்பனை பற்றிய ஒரு பதிவினை படிக்க நேர்ந்தது. அதன் தாக்கமே இந்த பதிவு...

     Pokkiris என்னும் பதிவரின்...,  அந்த பதிவிலிருந்த வரிகள் உங்களுக்காக...

    "ஆம்பளைனா குடிக்கனும்ல?" என்றான். அது அவனின் லாஜிக். அவனுக்கு தெரியுமா, நான் என் தாயை இழந்தது, இக்குடியினால், எனது இளமை பருவம் பெரும்பாலும் குடிக்கு எதிரான போராட்டத்தால் கழிந்தது என்றும், வாந்தியின் நாற்றத்தை வைத்து ஹாட்டா, ரம்மா, ஸ்காட்சா, பீரா என்று என்னால் சொல்லமுடியும் என்று (இதுவரை வைராக்கியத்தால் முகர்ந்துகூட பார்த்திராதவன்).


    ஆம். எனது தந்தை ஒரு குடிகாரன். அவர் படித்த காலத்தில், எல்லையில் வெற்றி பெற்றுவிட்டு, நான் கணக்கில் 91/100 வாங்கியதால், தண்ணி அடித்துவிட்டு மப்பில் அடித்ததை என்னால் இன்றும் ஜீரணம் செய்யமுடியவில்லை. சாதாரண நிலையில் அடித்திருந்தால் ஒப்பு கொண்டிருப்பேன்.


    வாழ்க்கையை வாழத்தெரியாமல், துணையை தொலைத்து இன்றளவில் அவர் படும் வேதனை, சொல்லில் அடங்காது. பளீரென ஒளிர்ந்த கண்ணாடி பாத்திரத்தை உடைத்த பெருமைக்கு சொந்தக்காரர். தன் மனைவியின் பிறந்தநாள் சத்தியத்தை மீறியவர். சத்தியத்தை மீறிய வேகத்தில் மனைவி உடலில் ஊற்றிய மண்ணென்னையை சட்டை செய்யவில்லை போதையில். கணவனை மிரட்ட நினைத்த பேதைக்கு தெரியவில்லை, கட்டுக்கடங்கா தீ விழுங்கிவிடும் என்று. ஒரு நொடி தாமதத்தில் அக்னி ஜுவாலை இரண்டு ஆள் மட்டத்திற்கு. பூனை வாயில் மாட்டிய எலி போல அவள், மெல்ல தீக்கிரையாகிறாள்.


    நான் அவளை சந்தித்தது ஆஸ்பத்திரியில் 100% தீக்காயங்களுடன். எனது தாயை கண்டுபிடிக்க என்னால் இயலவில்லை. இதனை எழுதும்போது கண்களில் நீர் கோர்க்கிறது நண்பர்களே.
    இரண்டு நாள் இருந்த உயிர், ஒரு நாள் அதிகாலையில் பிரிந்தது. அவள் இறப்பதற்கு முன் கூறியனவற்றில் முக்கியமானவை தந்தையை மன்னிக்க வேண்டும், இளவலை அடிக்கக்கூடாது. மிகவும் முக்கியமானது நான் பட்ட இத்துயரத்தை உனது மனைவிக்கு கொடுத்துவிடாதே, தயவுசெய்து குடித்துவிடாதே. குடி குடியை, மகிழ்ச்சியை, குடித்தனத்தை கெடுத்தது நண்பர்களே.


    இப்போது கூறுங்கள் நான் குடித்து ஆண்மகனென்று நிரூபிக்க வேண்டுமா?



    விடுமுறையானால் குடிப்பதைப் பற்றி பெருமையடிக்கும் கீச்சர்களுக்கு, சக கீச்சரின் வாழ்வில் நிகழ்ந்த துயரம் என்ற வரிகளோடு.., இந்த பதிவினை பற்றிய இணைப்பினை நல்கிய
    @  அவர்களுக்கு நன்றிகள்..



    http://ahotstills.blogspot.com



  • http://ahotstills.blogspot.com

  • [Continue reading...]

    இனி ஹசராமல் உண்ண���ங்கள் பேரறிவாளர்களே...

    - 0 comments



    கிட்டத்தட்ட நாடெங்கும் ஏதேனும் ஒரு போராட்டம் தீவிரமாய் பற்றி எரியும் சூழ்நிலைதான் இப்போது இருக்கிறது.


    அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்தும், மரண தண்டனைக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த சூழ்நிலையில், நேற்று நாடாளுமன்றத்தில் "வலிமையான லோக்பால்" கோரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் அன்னாவின் உண்ணாவிரதம் இன்று காலை பத்து மணியளவில் முடிவுக்கு வந்துள்ளது. (ஏம்பா காங்கிரஸ் கனவான்களே... ஊழலுக்கு எதிரான போராடும் அன்னாவிடம் ,பிரதமரின் தூதராக அனுப்ப உங்களுக்கு ஆதர்ஷ் ஊழலில் சிக்கிய விலாஸ்ராவ் தேஷ்முக் தான் கிடைத்தாரா?)

    இந்த இரண்டு பிரச்சனைகளிலும், வேறுபட்ட மனநிலையை தமிழக மக்கள் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வடநாடு முழுமைக்கும் பெரும்பான்மையான ஆதரவு கிடைத்திருக்க, தமிழகத்தைப் பொறுத்த வரை, அன்னா ஹசாரேக்கு பின் "காவி" வண்ணம் இருக்குமோ? என்ற எண்ணம் பெரும்பானவர்களை முழுமனதுடன் அதரவு தருவதை பின்னுக்கு தள்ளுவதாகவே இருந்தது.

    இந்த தேசத்தில், ஊழல் என்பது வேரடி மண்ணாக மாறிவிட்ட நிலையில்,  அண்ணா ஹசாரே செய்திருப்பது ஒரு நல்ல முன் முயற்சி. பாராட்டிற்குரியது.  அதிகம் ஈர்ப்பு இல்லாத 74 வயது முதியவர், தேசத்தின் இளைஞர்கள் தெருவில் வந்து போராட வைத்திருப்பது இந்த தேசத்திற்க்கு நல்ல செய்தி தான்.

    ஆனால் இந்த முயற்சிகள்,  எந்த அளவுக்கு அரசியல் தலைவர்களின் சித்து விளையாட்டினை தாண்டி, எந்த அளவுக்கு "இறுதி வெற்றி" பெறும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளதை மறுக்கமுடியாது.

    அன்னாவின் கோரிக்கை வெற்றிக்களிப்பை நோக்கி சென்றுக்கொண்டிருக்க.., தமிழர்கள் என்னும் வகையில், நமக்கு இன்னும் பேரறிவாளன் பிரச்சனை மிச்சமிருக்கிறது.

    பெரும்பாலான பதிவர்கள் இந்த இரண்டு விஷயங்களை பற்றி, உறுதியான நிலைப்பாட்டுடன், கருத்து தெரிவிக்காமல் மௌனம் காப்பதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.

    பொதுவாக சாமானிய தமிழர்களிடம், மரண தண்டனை பற்றி குழப்பமான மனநிலையே இன்னும் இருக்கிறது.

    பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் மரண தண்டனை தடுக்கப்பட வேண்டும் என்று என்னும் "தமிழன்" என்னும் மனநிலை.., நாடு விட்டு நாடு வந்து, ஒரு பாவமும் அறியாத நம் கொன்று குவித்து,  மும்பை தாக்குதலில் ஈடுபட்ட கசாப்பை மன்னித்து விட்டு விட தயங்குகிறது. (இங்கே இந்தியன் என்னும் மனநிலை தடுக்கிறது)

    நான் இந்தியனா, தமிழனா என்று கேள்வியோடு, அடையாளக்குழப்பம்  எழும்போதெல்லாம் , நான் தமிழன் என்று சொல்லவே உள்மனதிலிருந்து தீர்ப்பாகிறது. இது சரியா என்று தெரியவில்லை.

    அப்சல் குரு மற்றும் கசாப் ஆகியோரை இணைத்து குழம்பிக்கொண்டிருந்த நானும் கூட, மரண தண்டனைக்கு எதிரான மனநிலைக்கு வந்து விட்டேன்.

    மனிதம் என்ற கணக்கில் இனி தூக்கு தண்டனை என்பதே இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற நிலைப்பாடு தான் சரி  எனத்தோன்றுகிறது. (என்னது ராஜபக்சே-வா? அது எந்த வகை ஜீவராசி என்று தெரியவில்லையே?)

    தமிழகம் முழுவதும் சட்டக்கல்லூரி மாணவர்கள்,  சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை நிறைவேற்றக்கூடாது என்று போராட்ட களத்தில் குதித்துள்ளனர். கல்லூரி மாணவர்கள் போராட்டம் அடுத்தடுத்த நாள்களும் கட்டாயம் தொடரும் என்றே தெரிகிறது.

    தமிழக முதல்வர் நினைத்தால், சட்டமன்றத்தில் இந்த மூவரின் மரண  தண்டனையை நிறுத்தி வைக்க முடியும் என்று வரலாற்று ஆதாரங்களையும், சட்ட விதிகளையும் சுட்டிக்காட்டி சன் டிவி.., ஜெயலலிதாவுக்கு "செக்" வைத்திருக்கிறது. இன்னும் எந்த விதமான சமிக்கையும் தமிழக அரசிடமிருந்து இதுவரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஈழத்தமிழர்கள் பிரச்சனை, தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை மீனவர்களால் தாக்கப்படுதல் அகிய தமிழர்நலன் சார்ந்த விஷயங்களில் உறுதியான நிலைப்பாடுகளை எடுத்த தமிழக முதல்வருக்கு, பேரறிவாளன் விஷயத்தில் ஏன் முடிவெடுக்க, அதிக தேவைப்படுகிறது என்று தெரியவில்லை.

    உண்ணா ஹசாரேவின் போராட்டம் முடிவுற்ற நிலையில்,  பேரறிவாளன் மற்றும் மூவரை மரண தண்டனையிலிருந்து மீட்க, தமிழர்கள் தங்கள் முழுகவனத்தை செலுத்த வேண்டும் என்பதே எம் எதிர்பார்ப்பு.



    http://ahotstills.blogspot.com



  • http://ahotstills.blogspot.com

  • [Continue reading...]

    காஞ்சியில் தீக்��ுளித்த செங்கொடி - கூடுதல் தகவல்களுடன் ஒரு அலசல்.

    - 0 comments





    "நிரபரதித் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்வோம்" என்ற போராட்ட வாசகத்தை ஏந்தி நிற்கும் இளம்பெண் தான் செங்கொடி.

    பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, காஞ்சிபுரம் வட்டாச்சியர் அலுவலகம் முன் இன்று மாலை, தீக்குளித்த செங்கொடி, தனது தீக்குளிப்பதற்கு முன்னதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

    "தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்- இப்படிக்கு தோழர் செங்கொடி" என்று அந்த கடிதத்தில் அவர் எழுதியுள்ளார்.

    முத்துக்குமாரைப் போலவே, தாய் இல்லாமல் வளர்ந்த செங்கொடி வறுமையான சூழ்நிலையிலும், கொள்கை உணர்வோடு வாழ்ந்து வந்தவர். இருபத்தி எழு வயது நிறைந்த இந்த பெண்ணை கல்லூரி படிப்பை படிக்க வைத்தது காஞ்சிபுரத்தில் உள்ள மக்கள் மன்றம் என்ற அமைப்பு தான்.

    மக்கள் மன்றம் இப்போது ராஜீவ் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டு, வரும் ஒன்பதாம் தேதி தூக்குத்தண்டனையை எதிர் நோக்கி காத்திருக்கும் பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரை, மரணத்திலிருந்து மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட செங்கொடியின் மரணம் இப்போது,  பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரது மரண தண்டனையை தகர்க்க போராடும் தமிழ் உணர்வாளர்களை மட்டுமில்லாது, அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    மூன்று தமிழர்களின் உயிரை காப்பாற்ற நடந்து வரும் போராட்டத்தில், இப்போது ஒரு இளம்பெண் உயிர் பலியாகி இருப்பது வருத்ததை ஏற்படுத்தும் விஷயமாகி விட்டது.

    இலங்கை தமிழர்களின் பிரச்சனையின் போது, முத்துக்குமார் தீக்குளித்தபோதே, இது தவிர்த்திருக்கபட வேண்டும் என்று கருதப்பட்ட நிலையில், இப்போது செங்கொடியின் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

    தமிழர்களுக்காக களத்தில் நின்று போராடுவதற்கு தான் இப்போது இளைஞர்கள் தேவைப்படுகிறார்களே அன்றி உயிரை மாய்த்துக்கொள்ள அல்ல என்பதை தான் தமிழ் இயக்கங்களை சார்ந்தவர்கள் கருத்து.

    செங்கொடியின் போராட்டம், மரண தண்டனைக்கு எதிரான போராட்டத்தின், அனைத்து தரப்பு மக்களின் கவனத்தை ஈர்த்து, போராட்டத்தை தீவிரமாக்கும் என்றாலும் கூட,
    ஒரு மரணத்துக்கு, மற்றொரு மரணம் தீர்வாகி விடாது என்னும் சூழ்நிலையில், இது போன்ற தற்கொலைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது தான் எம் கருத்து.

    தீக்குளித்த செங்கொடியின் ஆத்மா, மூவரின் உயிர் மீட்பால் சாந்தியடையட்டும்.


    http://ahotstills.blogspot.com



  • http://ahotstills.blogspot.com

  • [Continue reading...]

    ஜெயலலிதாவிடமிருந்து ஒரு கெட்ட செய்தியும், ஒரு நல்ல செய்தியும்..

    - 0 comments




    சட்டப்பேரவை விதி எண் 110 என்றாலே தமிழக முதல்வருக்கு ரொம்ப பிடிக்கும் போல. அதற்கும் காரணம் இல்லாமல், அவையில் அது குறித்து விவாதம் நடத்தி சலசலப்பு வர வாய்ப்பில்லை, துறை அமைச்சர் அறிவிப்பு செய்து, விளம்பரம் செய்து கொள்வதை தவிர்த்து,  தானே திட்டங்களையும், அறிவிப்புக்களையும் செய்தால் மக்களிடம் சென்று சேர்ந்தது போலவும் இருக்கும்.

    இப்படி நேற்று விதி எண் 110 கீழ் முதலமைச்சர் அறிவித்தது தான், மரண தண்டனையை நீக்க, மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு அதிகாரமில்லை என்பதும்.

    ஜெயலலிதா முதல்வராக வரவேண்டும் என்று யாரெல்லாம் துடித்தார்களோ அவர்களையும், ஜெயலலிதா முதல்வராக வரகூடாது என்று யாரெல்லாம் தடுத்தார்களோ அவர்களையும் ஒரே புள்ளியில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

    முன்பு சமச்சீர் கல்வி பற்றிய சர்ச்சையின் போது கூட, இப்படிப்பட்டப் நிலையைத்தான் ஜெயலலிதா தமிழகத்தில் உருவாக்கினார். எல்லோரும் விரும்புவதற்கு எதிராக முடிவெடுப்பதில் தான் தன் திறமை இருக்கிறது என்று நினைக்கிறாரோ என்னவோ?(அம்மா என்றால் அதிரடி...)

    சமச்சீர் கல்வி விஷயத்தில் மௌனம் காத்த விஜயகாந்த் கூட, பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் மரண தண்டனை நீக்க அரசு முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளார். மற்ற அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களின் நிலைப்பாடும் இதே போன்று தான் இருக்கிறது.

    கடந்த தேர்தலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்ணைக் கவ்வியதால், திருமாவளவனின் இடத்தை, தான் பிடித்து விடலாம் என்று அரசியல் வலிமை பெற தீவிரமாய் இயங்கி வரும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கூட, சட்டமன்றத்தில் பேச இயலாது, சட்டமன்றத்தின் வெளியே.. "அபிராமி,அபிராமி" ரேஞ்சுக்கு புலம்பிக்கொண்டிருந்தார்.

    எந்த ஒரு குற்றவாளிக்கும் தண்டனையைக் குறைக்கிற அல்லது ரத்து செய்கிற அதிகாரம், இந்திய அரசியல் நிர்ணயச் சட்டப்பிரிவு 72ன் படி குடியரசுத்தலைவருக்கும், சட்டப்பிரிவு 161-ன் படி மாநில ஆளுநருக்கும் மட்டும் தான் இருக்கிறது என்பது உண்மைதான் என்றாலும் கூட,

    மரண தண்டனையை நீக்க குடியரசுத்தலைவருக்கும், ஆளுநருக்கும் பரிந்துரை செய்யும் தீர்மானத்தையாவது, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்புவதற்கு என்ன தடை இருக்கிறது. வெளிநாட்டு ராஜபக்ஷேவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றும் சட்டமன்றத்திற்கு உள்நாட்டு பிரச்சனையை பற்றி தீர்மானம் போட எதுக்கு தனியே ஒரு அதிகாரம்? குறைந்த பட்சம் விவாதமாவது செய்யலாமே?

    இது அதிகாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகத் தெரியவில்லை, தமிழக முதல்வருக்கு வழங்கப்பட்ட ஆலோசனையின் பிரச்சனையாகத் தெரிகிறது. தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனையை பேசுவதற்காக அமைக்கப்பட்ட சட்டமன்றத்தில், பெரும்பாலான தமிழக மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப இருக்கும் ஒரு பிரச்சனையில், இதுவரையில்  விவாததிற்கு கூட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது தான் உச்சகட்ட சோகம்.(அம்மா என்றால் அன்பு என்று சொந்தக்குரலில் பாடிய அம்மாவிடம் தான், கருணையை எதிர்பார்க்கிறோம்)  

    இதே சட்டப்பேரவை விதி எண் 110-படி ஜெயலலிதா தெரிவித்த அறிவிப்புக்கள் அனைவரின் நெஞ்சிலும் பால் வார்த்தது என்பதை மறுப்பதற்கு இல்லை.பள்ளிக்கல்வித் துறை சார்ந்த அத்தனை அறிவிப்புக்களும் சிறப்பு வாய்ந்தவை.

    முக்கியமாக தமிழகத்தில் இனி மாணவர்களுக்கு முப்பருவத்தேர்வு முறை  Trimester pattern இருக்கும் என்ற தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு மாணவர்களின் சுமையை வெகுவாக குறைக்கும் என்று நிம்மதி பெருமூச்சு விட வைத்திருக்கிறது. ஒரு வருடம் முழுவதும் படிக்கும் பாடத்தை, மூன்று பாகங்களாக பிரித்து கொடுத்து தேர்வுகள் நடத்தப்போகிறார்கள். மாணவர்கள் படித்து நியாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய பாடப்பகுதிகளும், புத்தகங்களின் சுமையும் மூன்றில் ஒரு பகுதியாக குறைய போவதால், அரசு பொதுத்தேர்வுக்கு தயாராகும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் இனி "மந்திரிச்சு விட்டது போல திரிய வேண்டிய அவசியம்" இருக்காது.

    ஆனால் ஆண்டு முழுவதும் "பிஸியாக" இருக்கும் தேர்வுத்துறை இதனை எப்படி எதிர்கொள்ளப்போகிறது, எப்படி நடைமுறைப்படுத்தப்போகிறது என்பது தான் இதன் வெற்றி இருக்கிறது.


    http://ahotstills.blogspot.com



  • http://ahotstills.blogspot.com

  • [Continue reading...]

    தில் இருந்தால் ப���ில் சொல்லுங்க..இ���ு எதிர்பதிவுக்கான அழைப்பு

    - 0 comments


    உன்னால் முடியும்..உன்னால் முடியும்...முன்னால்.., முன்னால்...



    முஸ்கி:
    ஒரு காலத்தில் மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் மூன்றாவதாக வைத்து, தொழுதல் செய்யப்பட்டவர்கள், இன்று "தொழில் செய்பவர்கள்" என்ற அளவில் மட்டுமே பார்க்கப்படுவதன் காரணத்தையும், அதனை சரி செய்வதற்காக காரியங்களையும் ஆராயும் வகையில்இந்த பதிவில் இருக்கும் கேள்விகள்/ கருத்துக்கள் தொகுக்கப்பட்டது.

    இதற்கான பதில்களை "எதிர் பதிவாக" எதிர்பார்க்கிறோம். (எம்பூட்டு நாளைக்குத் தான் தொடர் பதிவு எழுத சகபதிவர்களை அழைப்பது...., இது எதிர்பதிவுக்கான அழைப்பு.. தில் இருந்தால் ஒரு சில ஆ"சிறியர்கள்" பற்றிய இந்த விமர்சனங்களுக்கு, பதில்... இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை, செயலில் காட்டுங்கள்)
    கலகம் நன்மையில் முடியட்டும்.

     "மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள்" என்று உங்களின் பெருமையை ஊரெங்கும் பேசுகிறார்களே - உங்களில் எத்தனைப் பேர் சிற்பம் செதுக்கும் உளியை சரியாக வைத்திருக்கிறீர்கள்.., வகுப்புக்கு வரும் முன்னர் எத்தனை பேர், பாடத்தைப் பற்றிய சரியான தயாரிப்புடன் வருகிறீர்கள்?

    அது என்ன அப்படி ஒரு கொடூர சந்தோஷம்... கேம்ஸ் பீரியடை கடன் வாங்கி பாடம் நடத்துவதாக "படம்" காட்டுவதில்..

    கரும்பலகைக்கு முன் நின்று கொண்டு, ஏன் உளறிக்கொட்டுகிறீர்கள். எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கிறீர்கள்...ஹா..ஹா.. நாங்கள் எந்திரன் யுகத்து மாணவர்கள். (இலவச லேப்டாப் தரட்டும், இணையத்திலிருந்து, புதியதகவல்களை சேகரித்து, உங்களை "பெண்டு நிமித்தும் படலம்" நடத்தப்போகிறோம்.. அப்போது இருக்கிறது வேடிக்கை.

    ஆ..ஊ.. என்றால் "நாங்கெல்லாம் அந்த காலத்துல.." என்று கதையளக்கிறீர்கள்.. ஆசிரியர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தகுதியை சோதிக்கும் வண்ணம் தேர்வு வைக்கச் சொல்லலாமா? அதுவும் இப்போது மாணவர்களுக்கு நடத்திக்கொண்டிருக்கும் பாடப்பகுதியில்?(டீலா நோ டீலா?)

    எப்போது சமச்சீர் வகுப்பறை கிடைக்கும் எங்களுக்கு? எப்ப பாத்தாலும், நல்லா படிக்கிறங்களுக்கே "காவடி" தூக்கிட்டு, எங்களை "காவு" கொடுக்க பாக்குறீங்க... எங்களுக்கும் மனசுனு ஒண்ணு இருக்கு..

    பட்டாம்பூச்சியை புடிச்சு, இறக்கைகளில் ஆணியடித்து, மனசுக்குள் ஈயத்தைக் காய்ச்சி ஊத்துறீங்களே நியாயமா? புத்தகத்தில் இருப்பதை வெறுமனே படித்து காட்டுவதற்கு எதுக்கு ஆசிரியர்? (அப்படியெனில், டீவியில் செய்தி வாசிப்பவர்கள் கூடத்தான் நல்லாசிரியர்கள்)

    ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க... லட்சியதுக்காக ஓடுபவர்களை, வெறும் சம்பளத்திற்காக ஓடுபவர்கள் ஜெயித்துவிட முடியாது. லட்சியத்திற்காக பாடம் சொல்லித்தரும் சக ஆசிரியர்களை கிண்டலடிக்கிறீங்களே நியாயமா? (எப்படியாவது அவர்களை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிடுவதில் காட்டும் புத்திசாலித்தனத்தை, எப்படி அவர்களை விட அதிகம் சாதிப்பது என்பதில் காட்டலாமே?)
    காலங்காலமா இந்த சுள்ளான்னுக தொல்லை தாங்க முடியலையே

    ஒரு இயந்திரத்தின், இதயத்தின் குறுக்கு வெட்டுத்தோற்றம் வரைந்து, பாகம் குறிக்கும் பக்குவம் கூட எங்கள் இதய உணர்வுகளை புரிந்து கொள்வதில் காட்டவில்லையே ஏன்? (படிப்பு என்பது வெறும் உடல் சம்பந்தப்பட்டது அல்லவே)

    காலையில, முதல் பாட வகுப்பில் கூட.. மனசுல முதலமைச்சர் மாதிரி-னு நெனைச்சுக்கிட்டு, உட்கார்ந்தே பாடம் நடத்துறீங்களே அடுக்குமா? (முதலமைச்சர் கூட நின்னூட்டு தான் பேசுறாங்க... ஆட்சி மாறியிடுச்சு.. தெரியுமில்ல)

    புரியவைப்பதை விட்டுவிட்டு, "மக்கப்" செய்வதை தூண்டுகிறீர்களே நியாயமா?(அது சரி... தனக்கு புரிஞ்சா தானே, அடுத்தவங்களுக்கு புரிய வைக்க...)

    நாகரீகத்தைப் பற்றி வாய் கிழிய பேசுறீங்க... ஆனா ஸ்கூல் முடிஞ்ச உடனே புள்ளைங்களுக்கு முன்னாடி நீங்க தான் ஓடுறீங்க...(மனசுல ஸ்கூல் பர்ஸ்ட்-னு நினைப்பு...)

    கடைசியா ஒரு கேள்வி....வீட்டிலாவது சிரிப்பீங்களா? இல்ல இதே மாதிரி டெரர்தானா?

    டிஸ்கி:
    இந்த பதிவிலுள்ள கேள்விகள் அர்த்தமற்றவைகள் என்று நீங்கள் நினைத்தால், உலகில் மிகச்சிறந்த கல்வியை அளிக்கும் ஆசிரியர்களை நாம் பெற்றிருக்கிறோம் என்று அர்த்தம். குருதேவோ பவ... 

    பஸ்கி:
    "தில்" என்றால் ஹிந்தியில் அன்பு என்றார்கள். அன்பு இருந்தால் பதில் சொல்லுங்கள் என்பது தான் தலைப்புக்கான கோனார் உரை....எப்பூடி...



    http://ahotstills.blogspot.com



  • http://ahotstills.blogspot.com

  • [Continue reading...]

    தண்டனைக் குறைப்��ு - கடந்த ஆட்சி செய்த தவறை திருத்த வேண்டும்: பழ.நெடுமாறன்

    - 0 comments


    அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி நீண்டகாலத் தண்டனைப்பெற்ற சிறைவாசிகளுக்குத் தண்டனைக் குறைப்பும், விடுதலையும் வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவு மாநில அரசுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியுள்ளது.

    கடந்த தி.மு.க. ஆட்சியின் போது அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி 7 ஆண்டுகள் சிறை தண்டனை கழித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் 1450 பேர் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். அதிலும் மதுரை மாநகராட்சி உறுப்பினராக இருந்த லீலாவதி அம்மையார் பட்டப்பகலில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கு தண்டனை சிறைவாசிகளும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் ஆயுள் தண்டனைப் பெற்ற முஸ்லீம் சிறைவாசிகளும், இராசீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்றவர்களும் விடுவிக்கப்படவில்லை.

    கடந்த தி.மு.க. ஆட்சி செய்த தவறு, அ.தி.மு.க. ஆட்சியில் திருத்தப்படும் என நம்புகிறேன். எத்தகையப் பாகுபாடும் இல்லாமல் நீண்ட காலத் தண்டனைப் பெற்ற கைதிகள் யாராக இருந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கும் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலையை வழங்குமாறு மனித நேய அடிப்படையிலும், இந்திய அரசியல் சட்டம் அளித்திருக்கிற உரிமையின் அடிப்படையிலும் வேண்டிக்கொள்கிறேன்.

    இப்படிக்கு
    பழ.நெடுமாறன்

    http://tamil-actress-photo.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger