Saturday 12 October 2013

மதம் மாறிய காதலுக்கு எதிர்ப்பு: துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற பாகிஸ்தான் ஜோடி pakistan lovers attempt suicide by shooting selves

- 0 comments

மதம் மாறிய காதலுக்கு எதிர்ப்பு: துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற பாகிஸ்தான் ஜோடி pakistan lovers attempt suicide by shooting selves

Tamil News

இஸ்லாமாபாத், அக். 13-

பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து 200 கி.மீட்டர் தூரத்தில் உள்ள சஹிவால் மாவட்டத்தை சேர்ந்த ஆபித்ஹீசேன் (20) அதே பகுதியில் வசிக்கும் ஷீபா மசி (19) என்ற கிருஸ்துவ பெண்ணை உயிருக்குயிராக காதலித்து வந்தார்.

இந்த மதம்மாறிய காதலுக்கு இருவரின் பெற்றோர்களும் கடும் எதிரிப்பு தெரிவித்தனர்.

சில தினங்களுக்கு முன்னர் ஷீபாவின் பெற்றோர் தங்கள் மதத்தை சேர்ந்த வேறொருவருக்கு ஷீபாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.  இதனையடுத்து, தங்களது காதல் நிறைவேறாத துக்கத்தில் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

கடந்த வியாழக்கிழமை தனிமையான ஓரிடத்திற்கு சென்ற அவர்கள் ஒருவரையொருவர் துப்பாக்கியால் மாறி,மாறி சுட்டுக்கொண்டனர்.

குண்டு பாய்ந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த காதல் ஜோடியை அவ்வழியாக சென்றவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

தங்களது மகளுக்கு திருமண ஏற்பாடு செய்து வருவதை அறிந்த ஆபித் ஆத்திரமடைந்து அவளை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தற்கொலை நாடகம் ஆடுவதாக ஷீபாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளர்.  இது தொடாபாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இருவரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
...
Show commentsOpen link

[Continue reading...]

பிரபல இயக்குனரின் படுக்கையறையில் தமிழ் முன்னணி நடிகை tamil actress hotel room sex news

- 0 comments

பிரபல இயக்குனரின் படுக்கையறையில் தமிழ் முன்னணி நடிகை

by abtamil
Tamil newsYesterday,

எதுகை மோனை இயக்குனரின் படத்தில் அறிமுகமாகி, தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய கொழு கொழு நடிகை ஆந்திராவில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஒருவருடன் படுக்கையில் இருந்த போது கையும் களவுமாக பிடிபட்டதால் டோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 தமிழில் வாய்ப்பு இல்லாமல் ஓரங்கட்டப்பட்ட அந்த நடிகை தனது கவர்ச்சியை முதலீடாக வைத்து டோலிவுட்டில் பிரபல நடிகர்கள் அனைவருடனுடம் ஜோடியாக நடித்து, பல வெற்றிப்படங்களில் நடித்தவர். சமீபத்தில் ஒரு த்ரில் படத்தில் பயங்கரமாகவும் கவர்ச்சியாக நடித்த தெலுங்கு படம் ஆந்திரா முழுவதும் சக்கைபோடு போட்டது. இவர் முதலில் ஒரு தமிழ் இயக்குனரை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் அவருக்கு திருமணம் ஆனவுடன், தெலுங்கில் உள்ள முன்னணி நடிகர்கள் சிலருடன் இணைத்து வைத்து செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.

 இந்நிலையில் நேற்று முன் தினம் ஆந்திராவின் பக்கத்து மாநிலம் ஒன்றில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் போலீஸார் திடீர் ரெய்டு நடத்தினர். அப்போது இந்த நடிகை ஒரு பிரபல இயக்குனருடன் ஆபாச நிலையில் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். முதலில் அவர்களுக்கு அந்த நடிகையை அடையாளம் தெரியவில்லை. பின்னர் அந்த இயக்குனரும், நடிகையும் போலீஸாரிடம் கெஞ்சி கேட்டுக்கொண்டதால், அவர்கள் இருவரையும் எச்சரித்து அனுப்பிவைத்ததாக கூறப்படுகிறது. இது எப்படியோ அந்த ஓட்டலின் ஊழியர்கள் மூலம் டோலிவுட்டில் தீயாய் பரவிவிட்டது. இப்பொழுது டோலிவுட்டின் ஹாட் டாக் இதுதான்.

 தனக்கு போட்டியாக இருக்கும் ஒல்லிக்குச்சி நடிகைதான் இந்த விஷயத்தை தெரிந்து கொண்டு ஊர் முழுவதும் பரப்பி வருதாக அந்த கொழு கொழு நடிகை செம அப்செட்டில் இருக்கிறார். அந்த விரக்தியில் உடனே அருகிலுள்ள தீவுப்பிரதேசத்திற்கு ஓய்வு எடுக்க சென்றுவிட்டாரம்.

Show commentsOpen link

[Continue reading...]

பாய்லின் என்றால் நீலக்கல் என்று அர்த்தம் phailin storm blue stone you mean that

- 0 comments

பாய்லின் என்றால் நீலக்கல் என்று அர்த்தம் phailin storm blue stone you mean that

Tamil News

வங்க கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டும் முறை கடந்த 2004–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. ஆசிய நாடுகள் சுழற்சி முறையில் இந்த பெயர்களை சூட்டி வருகின்றன. அதன்படி இன்று ஒடிசாவை தாக்கும் புயலுக்கு பாய்லின் என்ற பெயரை தாய்லாந்து நாடு கொடுத்துள்ளது.

தாய்லாந்து மொழியில் பாய்லின் என்றால் ''நீலக்கல்'' என்று அர்த்தம். நவராத்தினங்களில் ஒன்றான நீல மாணிக்கல் சற்று வித்தியாசமானது. நீலக்கல் அணிந்தால் செல்வமும் செல்வாக்கும் பெருகும். தெய்வீகத்தன்மை அதிகரிக்கும் என்பார்கள். சனி பகவானால் வரும் கெடுதல்களை நீலக்கல் தடுத்து நிறுத்தும் என்பார்கள்.

பொதுவாக மகர ராசிக்காரர்கள் நீலக்கல் அணிவார்கள். வங்க கடலில் அடுத்து உருவாகும் புயலுக்கு ''ஹெலன்'' என்று பெயர் சூட்டப்படும். வங்கதேசம் இந்த பெயரை கொடுத்துள்ளது. அதன் பிறகு வரும் புயலுக்கு இந்தியா கொடுத்துள்ள ''லெகர்'' என்ற பெயர் வைக்கப்படும். தாய்லாந்து நாடு எந்த நோக்கத்தில் பாய்லின் (நீலக்கல்) என்ற பெயரை சூட்டியதோ தெரியவில்லை. ஆந்திரா, ஒடிசாவில் உள்ள சுமார் 12 மாவட்ட மக்கள் தூக்கத்தை தொலைத்து விட்டு பதை, பதைப்புடன் உள்ளனர்.

மேலும் 4 மாநிலங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கை

பாய்லின் புயல் கோரத் தாண்டவம் ஆடலாம் என்ற எதிர்பார்ப்பில் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் முப்படைகள், அரசின் அனைத்துத் துறைகள் தயார் நிலையில் உள்ளன. இதற்கிடையே ஒடிசாவை தாக்கிய பிறகு இந்தியாவின் மத்திய நிலப்பகுதியில் புயல் பாய்ச்சல் நீடிக்கும் என்று தெரிகிறது. இதையடுத்து பீகார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய 4 மாநிலங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

அந்த மாநிலங்களிலும் பேரிடர் மீட்புக் குழுவினர் தேவைக்கு ஏற்ப விரைந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புயல் தாக்கும் அபாயம் உள்ள 6 மாநிலங்களில் இருக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வேறு எங்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் நேற்றே வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டனர்.

பயிர்கள் சேதமாகும் அபாயம்

ஒடிசா மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் அரிசி, கோதுமை பயிரிடப்பட்டுள்ளன. பெரும்பாலான பகுதிகளில் அவை அறுவடைக்கு தயாராக உள்ளன. இன்று மாலை பாய்லின் தாக்கும்போது மிக பலத்த மழை பெய்யும் என்பதால், பயிர்கள் அனைத்தும் சேதம் அடைய வாய்ப்புள்ளது.

இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதற்கிடையே ஒடிசாவில் 7 மாவட்டங்களிலும் புயல் பாதுகாப்பு மற்றும் நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 10 ஆயிரம் பள்ளிக் கூடங்கள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. 280 அரசு அலுவலகங்கள் மக்கள் தங்குவதற்கு புயல் பாதுகாப்பு மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

ஒடிசாவில் 40 கிராம மக்கள், ஆந்திராவில் 25 கிராம மக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளனர். பாய்லின் புயல் தாக்கத்தை கருத்தில் கொண்டு ஆந்திராவில் 30 ஆயிரம் மின் ஊழியர்கள் பணிக்கு திரும்பி முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
...
Show commentsOpen link

[Continue reading...]

தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்பே ரிலீசாகும் அஜீத்தின் ஆரம்பம் ajith aarambam movie release date

- 0 comments

தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்பே ரிலீசாகும் அஜீத்தின் ஆரம்பம்

by abtamil

சென்னை: அஜீத்தின் ஆரம்பம் படம் தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்பே அக்டோபர் 31-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் லிஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் 'ஆரம்பம்'.

அஜீத்துடன், ஆர்யா, நயன்தாரா,டாப்சி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம், தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது. ஆனால் தீபாவளி தினமான நவம்பர் 2 ந்தேதி வெளியிடாமல் அதற்கு முன்னதாக அக்டோபர் 31 ஆம் தேதியே (வியாழக்கிழமை) படத்தை வெளியிடுகின்றனர். இந்த படத்தில், தெலுங்கு நடிகர் ராணா முக்கிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார். அத்துடன் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார். மங்காத்தாவுக்குப் பிறகு வெற்றிப் படத்துக்காகக் காத்திருக்கும் அஜீத், ஆரம்பம் மூலம் அசத்துவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Show commentsOpen link

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger