Friday 2 March 2012

கூடங்குளம் போராட்டத்துக்கு பணம் அளிக்கவில்லை - மன்மோகனுக்கு அமெரிக்க மறுப்பு

- 0 comments
 
 
 
கூடங்குளம் அணுமின்திட்டத்தை எதிர்க்கும் தொண்டு நிறுவனங்களுக்கு அமெரிக்க தொண்டு நிறுவனங்கள் நிதி அளிக்கிறது என்ற பிரதமர் மன்மோகன் சிங் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது அமெரிக்கா.
 
பிரதமர் மன்மோகன் சிங், சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து வெளி வருகிற 'சயின்ஸ்' பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர், இந்தியா வளர்ச்சி குறித்த சவால்களை எதிர்கொண்டிருக்கிற நிலையில், அதற்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நிதி உதவிகளைப் பெறுகிற தொண்டு நிறுவனங்கள் செயல்படுவதாகவும், கூடங்குளம் அணுமின் திட்டத்தை நிறைவேற்றுவதில் இடைïறுகள் எழுந்து இருப்பதாகவும், இதற்கு பெரும்பாலும் அமெரிக்காவில் செயல்பட்டு வருகிற இத்தகைய தொண்டு நிறுவனங்கள்தான் காரணம் எனவும் கூறியிருந்தார்.
 
அமெரிக்க தொண்டு நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் இருந்து நிதி உதவி வருவதாக பிரதமர் அலுவலக இணை மந்திரி நாராயணசாமியும் உறுதி செய்தார். ஆனால் பிரதமரும் சரி, அமைச்சரும் சரி பணம் வந்ததற்கான எந்த ஆதாரத்தையும் வெளிப்படையாக தெரிவி்க்கவில்லை.
 
அதைத் தொடர்ந்து தேச நலனுக்கு எதிராக செயல்படுவதாக சந்தேகத்துக்கு ஆளாகியுள்ள 77 தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் பற்றி மத்திய அரசின் உள்துறை ஆராய்ந்து வருகிறது. மேலும் 4 தொண்டு நிறுவனங்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
அமெரிக்கா மறுப்பு
 
இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலாண்ட், வாஷிங்டனில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்து குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
 
அதற்கு அவர் கூறுகையில், "பிரதமர் மன்மோகன்சிங் சமீபத்தில் சயின்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் என்ன கூறினார் என்பது பற்றி எனக்கு தெரியாது. அதே நேரத்தில் அணு மின் சக்தித்துறையில் இந்தியாவின் முதலீட்டுக்கு நாங்கள் ஆதரவாக இருப்பதை நீங்கள் (நிருபர்கள்) அறிவீர்கள்.
 
இந்திய அரசு மேற்கொண்டு வருகிற சிவில் அணுசக்தி திட்டத்துக்கு நாங்கள் ஆதரவானவர்கள். நாங்கள் நிதி உதவி அளிக்கிற தொண்டு நிறுவனங்களும்கூட மக்களாட்சி சார்ந்த திட்டங்கள் உள்ளிட்டவற்றில்தான் ஈடுபடுகின்றன.
 
(கூடங்குளம் உள்ளிட்ட) இந்திய அணுமின்சக்தி திட்டத்துக்கு எதிரான தொண்டு நிறுவனங்களுக்கு நாங்கள் சாதகமாக செயல்படுவதில்லை (நிதி அளிப்பதில்லை). தொண்டு நிறுவனங்களுக்கான எங்கள் ஆதரவு எல்லாம் வளர்ச்சிக்கானது, ஜனநாயக ரீதியிலான திட்டங்களுக்கானதுதான்," என்றார்.



[Continue reading...]

ஸ்டாலின் பிறந்தநாளுக்கு பேனர் வைத்த விஜய் மக்கள் இயக்க தலைவர் பலி

- 0 comments
 
 
 
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளுக்கு பிளெக்ஸ் போர்டு வைத்தபோது மின்சாரம் தாக்கி விஜய் மக்கள் இயக்க தலைவர் பலியானார், இன்னொருவர் படுகாயமடைந்தார்.
 
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தனது 60வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவரது பிறந்த நாளையொட்டி பொள்ளாச்சி-கோவை சாலைபி.எஸ்.என்.எல். அலுவலகத்தையொட்டி உள்ள காலி இடத்தில் பொள்ளாச்சி நகர திமுக சார்பில் 30 அடி நீளம், 8 அடி அகலம் கொண்ட பிளெக்ஸ் போர்டு வைக்க முடிவு செய்யப்பட்டது.
 
அதன்படி தனியார் பிளெக்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சூளேஸ்வரன் பட்டியைச் சேர்ந்த திலக் குமார் (21),அலெக்ஸ் பாண்டியன், அழகப்பா காலனியைச் சேர்ந்த ஆபித் ரகுமான், குமரன் நகர் முருகேசன், சுல்தான் ஆகியோர் 5 பேர் பிளக்ஸ் போர்டு வைக்க அந்த இடத்திற்கு சென்றனர். அப்போது திலக்குமார், அபித் ரகுமான் ஆகியோர் அந்த போர்டை வைக்க நடப்பட்டிருந்த மரக்கம்பின் உச்சிக்கு சென்று போர்டை நேராக வைத்துக் கொண்டிருந்தனர்.
 
அப்போது பிளெக்ஸ் போர்டில் இருந்த இரும்புக் குழாய் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரின் மின் கம்பியில் பட்டது. இரும்புக் குழாயில் மின்சாரம் பாய்ந்ததில் திலக் குமாரும், ஆபித் ரகுமானும் தூக்கி வீசப்பட்டனர். இதில் திலக் குமார் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். படுகாயமடைந்த ஆபித் ரகுமான் சிகிச்சைக்காக பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இறந்த திலக் குமார் நடிகர் விஜயின் மகக்ள் இயக்கத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இது குறித்து தகவல் அறிந்த விஜய் ரசிகர் மன்றத்தினர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை முன்பு கூடினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்



[Continue reading...]

கோவை அ.தி.மு.க பிரமுகர் தயாரிப்பில் சிறுவாணி: முத்த காட்சியில் 30 டேக் வாங்கிய நடிகை

- 0 comments
 

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதி அ.தி.மு.க. இணை செயலாளர் ரகுநாத். இவர் தனது சொந்த தயாரிப்பில் இயக்கும் படம் `சிறுவாணி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிறுவாணி அணை மற்றும் காட்டுப்பகுதியில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ள ரேஸ்கோர்ஸ் ரகுநாத், மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது :-சிறுவாணி' கோவை மக்களின் தாகத்தை தீர்ப்பதை போல எனது சிறுவாணி படம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களுடன் பரபரப்பாக தயாராகி வருகிறது. 1980 களில் வெளிவந்த ஊமை விழிகள், சமீபத்தில் வெளி வந்த `மைனா' போன்ற அருமையான கதையம்சம் கொண்ட படம்.

பிரபல நாவலாசிரியர் ராஜேஸ்குமார் கதைக்கு திரைக்கதை அமைத்து படத்தை நானே இயக்குகிறேன். படத்தில் 5 பாடல்கள் மெல்லிய மெலடி, குத்துப்பாட்டு, ரம்மியமான பாடல் என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக காதிற்கு இனிமையான பாடல்களை இசையமைப்பாளர் தேவா தந்துள்ளார். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக அந்தமான் சென்று வந்தோம். அங்கு கடலில் கதாநாயன் சஞ்சயும், கதாநாயகி ஐஸ்வரியாவும் இணைந்து பாடல் காட்சியின் போது முதுலை வந்த போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கதாநாயகியை பத்திரமாக மீட்டோம்.

தொடர்ந்து ஏனடா…! ஏனடா…! கண்ணிலே மின்சாரம் என்ற பாடல்காட்சியை 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த சர்ஜ் பகுதியில் படமாக்கினோம். அப்போது கதாநாயகன் சஞ்சய் ஐஸ்வரியாவின் கையை பிடித்து மெதுவாக இழுத்து இதழில் முத்தமிடுவது போல் காட்சி அமைத்திருந்தேன். ஐஸ்வர்யா குறுப்புக்கார பெண் என்பதால் இந்த முத்த காட்சியில் நடிக்க 30 டேக் வரை திரும்ப திரும்ப வாங்கினார். நேரம் வேறு இருட்டிக் கொண்டிருந்தது. பின்னர் தனது தவறை உணர்ந்து முத்த காட்சியை சிறப்பாக நடித்துக் கொடுத்தார்.

ஒருவருக்கொருவர் -குடும்பமாய் இருந்து சிறப்பான முறையில் படப்பிடிப்பை முடித்து விட்டு திரும்பினோம். தற்போது சிறுவாணி அணைப் பகுதியில் இறுதிகட்ட படப்பிடிப்புக்கான லொக்கேசனை தேர்வு செய்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger